Jump to content

50வது சதம் அடித்தார் சச்சின்


Recommended Posts

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐம்பது சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தனது 175 ஆவது போட்டியிலேயே டெண்டூல்கர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையும் ஏற்படுத்தி விட்டார்.

சச்சின் டெண்டூல்கர் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கராச்சியின் தேசிய மைதானத்தில் இடம்பெற்ற அப்போட்டியில் அவர் 15 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தனது முதல் சதத்தை டெண்டூல்கர் அடித்தார். அப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகப்படியான சதங்களை அடித்தவர்களின் வரிசையில் டெண்டூல்கருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். அவர் இதுவரை 39 சதங்களை அடித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101219_sachinfifty.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் தொடர்ந்து ஏதாவதொரு சாதனைக்கு மேல் சாதனையாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். வாழ்த்துக்கள்!! :wub:

இணைப்புக்கு நன்றி அகூதா!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் சாதனையாளன் சச்சினுக்கு வாழ்த்துக்கள். ஒரு நாள் போட்டிகளிலும் 50 சதம் அடிக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடிக்காத வீரர் என்டால் சச்சின் ஆகவே அவருக்கு என்ட வாழ்த்து இல்லை :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடிக்காத வீரர் என்டால் சச்சின் ஆகவே அவருக்கு என்ட வாழ்த்து இல்லை :D

நேர்மையான விளையாட்டுக்காரரைப் பிடிக்காதோ? :wub:

Link to comment
Share on other sites

கிரிக்கெட் சாதனையாளன் சச்சினுக்கு வாழ்த்துக்கள். ஒரு நாள் போட்டிகளிலும் 50 சதம் அடிக்க வேண்டும்!

இது எல்லாம் ஒரு பிழைப்பா? சச்சினுக்கு இது ஒரு வேலை அடிக்கூர ஒவரு சதத்துக்கு அவன் காசு கண்டு கொள்ளுவான்.

நேர்மையான விளையாட்டுக்காரரைப் பிடிக்காதோ? :wub:

என்ன நக்கலோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையான விளையாட்டுக்காரரைப் பிடிக்காதோ? :wub:

சச்சின் ஒரு நாளும் தன்ட டீம் வெல்ல வேண்டும் என்ட எண்ணத்தில் விளையாடுவது இல்லை.அவரது நோக்கம் அவர் சதமடித்தால் சரி :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் ஒரு நாளும் தன்ட டீம் வெல்ல வேண்டும் என்ட எண்ணத்தில் விளையாடுவது இல்லை.அவரது நோக்கம் அவர் சதமடித்தால் சரி :wub:

அடடா. நீங்கள் கிரிக்கெட்டை அண்மையில்தான் ரசிக்கத் தொடங்கினீர்கள் போலுள்ளது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் ஒரு நாளும் தன்ட டீம் வெல்ல வேண்டும் என்ட எண்ணத்தில் விளையாடுவது இல்லை.அவரது நோக்கம் அவர் சதமடித்தால் சரி :wub:

உங்கட இந்த கருத்தை வாசிக்க எனக்கு கினத்துக்கை விழுந்து தர்கொலை செய்யனும் போல இருக்கு, ஆனால் நான் வசிக்கும் நாட்டில் கினறு இல்லை அதாலை தான் உயிர் வாழுறேன் இப்பவும் :wub::wub:

Link to comment
Share on other sites

ரதி சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை..! :wub: இந்த 50 ஆவது சதம் அடிச்சதிலயும் பிரச்சினைப் படுகினம்..! :D

கடைசி ஆட்டக்காரர்களையும் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க விடாமல் செய்வதுதான் முன்னணி ஆட்டக்காரர்களின் வழக்கம்..! இதற்காக சில ஓட்டங்களை எடுக்காமல் கூட விடுவார்கள்..! :wub:

ஆனால் சச்சின் தான் 100 அடித்தவுடன் கடைசி ஆட்டக்காரர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்..! ஐந்தாவது நாளில் இன்னும் சில மணிநேரங்கள் போக்குக் காட்டியிருந்தால் போட்டியை சமமாக்கியிருக்கலாம் எண்டு நான் சொல்லவில்லை..! ஆய்வாளர்கள் சொல்லுகினம்..! :D

சச்சினுக்கு நூறு அடித்தமா வீட்டுக்குப் போனமா எண்டு இருக்கவேணுமாம்..! :wub:

பி.கு.: ராகுல் டிராவிட் அணித்தலைவராக இருந்தபோது நடந்தது இது. சச்சின் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆட்டத்தை டிக்ளேர் செய்துவிட்டார். இதில் சச்சினின் நூறோ அல்லது இருநூற்ரி ஐம்பதோ பாதிக்கப்பட்டு விட்டது..! அதனால அவர் டிராவிட் மேல சினம் கொண்டதா படிச்ச ஞாபகம்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் சச்சின்

th_65809_172553042784596_100000897050151_369367_2266587_n.jpg

Link to comment
Share on other sites

சச்சின் சரியான இனத்துவேசி. சிறீகாந் தலைவராக இருந்தபோதுதான் இவர் அறிமுகமானார். அந்த நேரத்தில் கூட இவர் சிறீகாந் தமிழன் என்று அவருக்கு மரியாதை கொடுப்பதில்லை. சிறீகாந் ஒரு பேட்டி ஒன்றில் கூறினார். அனைத்து வீர்ர்களும் ஆங்கிலத்தில் உரையாடுவார்களாம். தான் அங்கு சென்றால் உடன் வேண்டுமென்று இந்தியில் கதைப்பார்கள் என . அதில் இவன் சச்சினும் அடக்கம். அதலிருந்து இவனை எனக்கு பிடிக்காது.

Link to comment
Share on other sites

எனக்குப் பிடிக்காத வீரர் என்டால் சச்சின் ஆகவே அவருக்கு என்ட வாழ்த்து இல்லை :wub:

எனக்கும் தான்

ஆனால் என்னவென்றால், எனக்கு எந்த ஒரு இந்திய கிரிகட் பேர்வழியையும் பிடிக்கவே பிடிக்காது... இந்திய அணி தோற்கும் போதெல்லாம் மனசு நிறைந்து போகும்..அது இந்திய கிரிகட் அணிதான் என்று இல்லை, எந்த இந்திய தேசிய விளையாட்டு அணியாக இருந்தாலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் சரியான இனத்துவேசி. சிறீகாந் தலைவராக இருந்தபோதுதான் இவர் அறிமுகமானார். அந்த நேரத்தில் கூட இவர் சிறீகாந் தமிழன் என்று அவருக்கு மரியாதை கொடுப்பதில்லை. சிறீகாந் ஒரு பேட்டி ஒன்றில் கூறினார். அனைத்து வீர்ர்களும் ஆங்கிலத்தில் உரையாடுவார்களாம். தான் அங்கு சென்றால் உடன் வேண்டுமென்று இந்தியில் கதைப்பார்கள் என . அதில் இவன் சச்சினும் அடக்கம். அதலிருந்து இவனை எனக்கு பிடிக்காது.

94645.jpg

சச்சின் அப்படி பட்டவர் என்று நான் நிவைக்க வில்லை இந்தியன் கிரிக்கெட் ரீம்மில் ரொம்ப நாகரிகம்மான வீரர்கள் யார் என்று என்னிட்டை கேட்டா நான் முதல் சுரஸ் ரெயினாவை தான் சொல்லுவன் அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் ராகுல்டாவிட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் சரியான இனத்துவேசி. சிறீகாந் தலைவராக இருந்தபோதுதான் இவர் அறிமுகமானார். அந்த நேரத்தில் கூட இவர் சிறீகாந் தமிழன் என்று அவருக்கு மரியாதை கொடுப்பதில்லை. சிறீகாந் ஒரு பேட்டி ஒன்றில் கூறினார். அனைத்து வீர்ர்களும் ஆங்கிலத்தில் உரையாடுவார்களாம். தான் அங்கு சென்றால் உடன் வேண்டுமென்று இந்தியில் கதைப்பார்கள் என . அதில் இவன் சச்சினும் அடக்கம். அதலிருந்து இவனை எனக்கு பிடிக்காது.

சச்சின் கர்நாடகக்காரன் என்று நினைக்கின்றேன்.....

இவர்கள் தமிழரை மதிக்க விரும்பாதவர்கள்.

அவர்களுக்கு இந்தியா... என்னும் சினிமா மாயை தேசத்தில் தான் பல கிரிக்கெட் ரசிகர்கள்.

இதுவே... உலகளாவிய உதை பந்தாட்டத்தில் ஊறிப்போன பெரிச்சாளி நாடுகள் எல்லாம் இப்படிப் பட்டவர்களை காலத்திற்க்கு ஏற்ப பாவிக்கும்.

இங்கிலாந்து அறிமுகப் படுத்திய கிரிக்கெட்டை, இந்தியா இன்னும் வைத்து ஆடுது என்றால்......

அதுக்குப் பெயர் அடிமைத்தனம். மகாத்மாகாந்தி கேள்விப் பட்டால் சரியாய் கவலைப் படுவார். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் கர்நாடகக்காரன் என்று நினைக்கின்றேன்.....

இவர்கள் தமிழரை மதிக்க விரும்பாதவர்கள்.

அவர்களுக்கு இந்தியா... என்னும் சினிமா மாயை தேசத்தில் தான் பல கிரிக்கெட் ரசிகர்கள்.

இதுவே... உலகளாவிய உதை பந்தாட்டத்தில் ஊறிப்போன பெரிச்சாளி நாடுகள் எல்லாம் இப்படிப் பட்டவர்களை காலத்திற்க்கு ஏற்ப பாவிக்கும்.

இங்கிலாந்து அறிமுகப் படுத்திய கிரிக்கெட்டை, இந்தியா இன்னும் வைத்து ஆடுது என்றால்......

அதுக்குப் பெயர் அடிமைத்தனம். மகாத்மாகாந்தி கேள்விப் பட்டால் சரியாய் கவலைப் படுவார். :wub:

சச்சின் மும்பாய் சிறி அண்ணா , அனில் கும்பிளே ராகுல்டாவிட் சிறிநாத் அவங்கள் தான் கர்நாடக்கா காரங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் மும்பாய் சிறி அண்ணா , அனில் கும்பிளே ராகுல்டாவிட் சிறிநாத் அவங்கள் தான் கர்நாடக்கா காரங்கள்...

உங்கள் தகவலுக்கு நன்றி பையா.....

எல்லாம் ஒரே, குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.... (நான் கிரிக்கெட் மட்டையை சொன்னேன்)

சின்ன ஒரு கிரிக்கெட் விளையாட்டு.... உங்கள் ரசனைக்காக...

DSCN1053%20559x419.jpg

படத்தில் பொல்லுடன் நிற்பவர் யார்?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தகவலுக்கு நன்றி பையா.....

எல்லாம் ஒரே, குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.... (நான் கிரிக்கெட் மட்டையை சொன்னேன்)

சின்ன ஒரு கிரிக்கெட் விளையாட்டு.... உங்கள் ரசனைக்காக...

DSCN1053%20559x419.jpg

படத்தில் பொல்லுடன் நிற்பவர் யார்?

.

மாகாத்மா காந்தி போல இருக்கு :wub::wub::wub:

Link to comment
Share on other sites

94645.jpg

சச்சின் அப்படி பட்டவர் என்று நான் நிவைக்க வில்லை இந்தியன் கிரிக்கெட் ரீம்மில் ரொம்ப நாகரிகம்மான வீரர்கள் யார் என்று என்னிட்டை கேட்டா நான் முதல் சுரஸ் ரெயினாவை தான் சொல்லுவன் அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் ராகுல்டாவிட்

நாகரீகமானவர்கள் இனத்துவேசமாக இருக்கமாட்டார்களா?

சிறீகாந்த்தும் சச்சினும் ஒன்றாக விளையாடிய போட்டிகளின் காணொளிகளிருந்தால் பாருங்கள் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் இந்தியாவிற்காக சச்சின் விளையாடிய போட்டிகளை வைத்துப் பார்த்தால் தெரியும்.பல போட்டிகளில் சச்சின் சதமடித்திருப்பார்[அல்லது அரைச் சதம்] ஆனால் இந்தியா தோத்திருக்கும்...மாறாக சச்சின் குறைந்த ஓட்டத்தில் ஆட்டம் இழந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்...ஆட்டம் இழக்கவும் மாட்டார் ஆனால் அதிரடியாக விளையாடும் பின் வருசை துடுப்பாட்டக்காரரை துடுப்பாடவும் விட மாட்டார்...துடுப்பை வைத்து சும்மா தட்டிக் கொண்டு இருப்பார்...சரியான கர்வம் பிடித்தவர் அவருக்கு நினைப்பு அவர் இந்தியா அணியில் இல்லா விட்டால் இந்தியா நன்றாக விளையாடாது என...இவரது முக்கியமான குறிக்கோளே இவர் சதமடிக்க வேண்டும்[சாதனை புரிய வேண்டும்]ஆனால் போட்டிகளில் வெற்றிகளைப் பற்றி இவர் என்டுமே கவலைப்பட்டதில்லை.

பி.கு எனக்குப் பிடிக்காத அணி என்டால் இந்தியா,இந்தியா,இந்தியா...விளையாட்டில் மட்டும் இல்லை எதிலுமே இந்தியா வெல்லக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாகாத்மா காந்தி போல இருக்கு :wub::wub::wub:

ஓம்... சரியான பதில் பையா....

மகாத்மாகாந்தி..... தொடக்கம் ராஜீவ்காந்தி, சீனியா காந்தி, நாகுல் காந்தி எல்லாம்....

ஈழத்தமிழனை பொல்லாலை அடிக்க வெளிக்கிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்.

இன்னும் எத்தினை காந்தீஸ் வரப் போகுதோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் இந்தியாவிற்காக சச்சின் விளையாடிய போட்டிகளை வைத்துப் பார்த்தால் தெரியும்.பல போட்டிகளில் சச்சின் சதமடித்திருப்பார்[அல்லது அரைச் சதம்] ஆனால் இந்தியா தோத்திருக்கும்...மாறாக சச்சின் குறைந்த ஓட்டத்தில் ஆட்டம் இழந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்...ஆட்டம் இழக்கவும் மாட்டார் ஆனால் அதிரடியாக விளையாடும் பின் வருசை துடுப்பாட்டக்காரரை துடுப்பாடவும் விட மாட்டார்...துடுப்பை வைத்து சும்மா தட்டிக் கொண்டு இருப்பார்...சரியான கர்வம் பிடித்தவர் அவருக்கு நினைப்பு அவர் இந்தியா அணியில் இல்லா விட்டால் இந்தியா நன்றாக விளையாடாது என...இவரது முக்கியமான குறிக்கோளே இவர் சதமடிக்க வேண்டும்[சாதனை புரிய வேண்டும்]ஆனால் போட்டிகளில் வெற்றிகளைப் பற்றி இவர் என்டுமே கவலைப்பட்டதில்லை.

பி.கு எனக்குப் பிடிக்காத அணி என்டால் இந்தியா,இந்தியா,இந்தியா...விளையாட்டில் மட்டும் இல்லை எதிலுமே இந்தியா வெல்லக் கூடாது.

சாதனைக்காக ஆடவில்லை: உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை; தெண்டுல்கர் சொல்கிறார்

50-வது சதம் குறித்து தெண்டுல்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது சதம் எண்ணிக்கையில் மேலும் ஒன்று உயர்ந்துள்ளது. 50 சதம் என்பது வெறும் எண்ணிக்கைதான். நான் சாதனைக்காக ஒருபோதும் ஆடியது இல்லை. அணிக்காக தொடர்ந்து விளையாடுவதுதான் எனது லட்சியமாக இருக்கிறது.

50-வது சதம் அடித்தது மகிழ்ச்சிதான். மகிழ்ச்சி அடையவில்லை என்று என்னால் கூற இயலாது. ஆனால் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை. எனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.

50-வது சதத்தோடு நான் நின்று விடமாட்டேன். எதிர்காலத்திலும் தொடர்ந்து சதம் அடிப்பேன். நேற்று முன்தினம் எனது தந்தையின் பிறந்தநாள் 50-வது சதத்தை எனது தந்தைக்கு அர்பணிக்கிறேன்.

50-வது சதம் அடிப்பதற்காகவே நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடரில் நான் விலகவில்லை.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/2010/12/20145229/sachin-50-century-sachin-inte.html

Link to comment
Share on other sites

நான் ஒரு கிரிக்கெட் டைகாட் விசிறி.சச்சினிலும் குறை கூறுபவர்களை இன்றுதான் பார்க்கின்றேன்.சச்சின் ஒரு நாளும் சுயநலத்திற்காக விளையாடியதில்லை.போன ஆஸி சீரிஸ் பார்த்தால் தெரியும்.மிகவும் கட்டுக்கோப்பான அனைவரையும் மதிக்கும்,எந்த கொன்ரவேசிக்கும் போகாத ஒரு ஜென்டில்மன்.ஒரே ஒரு குறை 90 களில் கொஞ்சம் தடுமாறுவது.ஆரம்பத்தில் அதுவும் இல்லை பின்னர் வந்து, இப்போ அதுவும் இல்லை.

போனமுறை ஜ்.பீ.எல் பார்த்தவர்களுக்கு தெரியும் சச்சினின் அருமை.சும்மா தமிழங்களுக்கு சான்ஸ் கொடுப்பத்தில்லை என சப்பு கொட்டாதையுங்கோ.இப்போ எத்தனை சான்ஸ் தினேஷ் கார்த்திக்கு கொடுத்தார்கள் பயன் படுத்தவில்லை.முதல் இரண்டு உலககோப்பையும் கப்டின் பண்ணியது வெங்கட்ராகவன் தான்.முதல் உலககோப்பை கடைசிக்கு முதல்,இரண்டாவது உலககோப்பை கடைசி.மூன்றாவது உலக கோப்பை கபில் கப்டன் பண்ணி சாம்பியனும் ஆனார் அதுவும் சொதப்பல் ரீமுடன்.பைனலில் அதிக ரன் அடித்தது சிறிகாந்த் தான்.

தமிழ் சிறி எந்த காந்தி வந்தாலும் எங்களுக்கு அடிதான்.நாங்கள் ஒழுங்காக இருந்தால் அவங்கள் ஏன் அடிக்கின்றாங்கள்.காந்தியில்லை கார்ப்பர் தொட்டு ஒபாவரை அடித்துப்போட்டாங்கள்.இப்பவும் நாங்கள் அவங்களிலதான் பிழை சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா இதுக்கு என்ன சொல்ல போறிங்கள்

sascin.jpg

Link to comment
Share on other sites

ரதி அக்கா இதுக்கு என்ன சொல்ல போறிங்கள்

sascin.jpg

இந்த போட்டியில் சச்சினுக்கு நூறு அடிக்க வாய்ப்பு வழங்காமையால் ஏற்பட்ட பிரச்சனைகள் எவ்வளவு தெரியுமா. இது ஒன்றும் சச்சின் விட்டுக்கொடுத்ததல்ல.

நான் ஒரு கிரிக்கெட் டைகாட் விசிறி.சச்சினிலும் குறை கூறுபவர்களை இன்றுதான் பார்க்கின்றேன்.சச்சின் ஒரு நாளும் சுயநலத்திற்காக விளையாடியதில்லை.போன ஆஸி சீரிஸ் பார்த்தால் தெரியும்.மிகவும் கட்டுக்கோப்பான அனைவரையும் மதிக்கும்,எந்த கொன்ரவேசிக்கும் போகாத ஒரு ஜென்டில்மன்.ஒரே ஒரு குறை 90 களில் கொஞ்சம் தடுமாறுவது.ஆரம்பத்தில் அதுவும் இல்லை பின்னர் வந்து, இப்போ அதுவும் இல்லை.

போனமுறை ஜ்.பீ.எல் பார்த்தவர்களுக்கு தெரியும் சச்சினின் அருமை.சும்மா தமிழங்களுக்கு சான்ஸ் கொடுப்பத்தில்லை என சப்பு கொட்டாதையுங்கோ.இப்போ எத்தனை சான்ஸ் தினேஷ் கார்த்திக்கு கொடுத்தார்கள் பயன் படுத்தவில்லை.முதல் இரண்டு உலககோப்பையும் கப்டின் பண்ணியது வெங்கட்ராகவன் தான்.முதல் உலககோப்பை கடைசிக்கு முதல்,இரண்டாவது உலககோப்பை கடைசி.மூன்றாவது உலக கோப்பை கபில் கப்டன் பண்ணி சாம்பியனும் ஆனார் அதுவும் சொதப்பல் ரீமுடன்.பைனலில் அதிக ரன் அடித்தது சிறிகாந்த் தான்.

தமிழ் சிறி எந்த காந்தி வந்தாலும் எங்களுக்கு அடிதான்.நாங்கள் ஒழுங்காக இருந்தால் அவங்கள் ஏன் அடிக்கின்றாங்கள்.காந்தியில்லை கார்ப்பர் தொட்டு ஒபாவரை அடித்துப்போட்டாங்கள்.இப்பவும் நாங்கள் அவங்களிலதான் பிழை சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

சிறீகாந் தலைவராக சிறப்பாக செயற்பட்டும் அவரை ஏன் தலைமைப்பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் தூக்கினர்? சடகோபன் ரமேசினை ஏன் அணியிலிருந்து தூக்கினர்? எதற்கெடுத்தாலும் தமிழர்களை மட்டும் குறைசொல்லாதீர்கள். முதலில் இனவுணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். சிறீகாந் தேர்வுக்குழுத்தலைவரராக வந்தமையால்தான் தினேஸ் கார்த்திக் முரளி விஜய் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.