Jump to content

பீற்றூட் கறி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

beetroot.jpgbeet-stir-fry.JPG

பீற்றூட் கறி.

பீற்றூட் என்னும் சிவப்புக் கிழங்கை நாம் எல்லோரும் கண்டிருப்போம்.

ஆனால்... பலர் அதைச் சமைத்திருப்பார்களா என்பது சந்தேகமே...

உண்மையில் இது மக்னீசியம், கல்சியம், விற்ரமின் சி என்று நமது உடலுப்புகளுக்குத் தேவையான அளவு தாதுப் பொருட்கள் நிறைந்த கிழங்கு.

இது... ஐரோப்பிய நாடுகளில் கோடை காலத்தில் சந்தையில் வாங்கலாம். குளிர் காலத்தில் இதனை காற்றுப் புகாத முறையில் பைகளில் அடைத்து விற்பார்கள்.

ஃ இதனை வருடம் முழுக்க கிடைக்கும் மரக்கறி என்று சொல்லலாம்.

பீற்றூட் கறி செய்ய தேவையான பொருட்கள்.

இரண்டு பீற்றூட் (400 - 500கிராம்)

வெங்காயம் - 2

கடுகு இரண்டு தேக்கரண்டி

பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி

செத்தல் மிளகாய் - 4

கருவேப்பிலை

தாழிக்க சிறிதளவு எண்ணை

சுவைக்கேற்ப உப்பு.

அலங்கரிக்க பச்சை மிளகாய் - 1

செய்முறை;tocook.gif

பீற்றூட்டை வெட்ட முதல் அதன் தோலுடன் கழுவவும்,

இனி.... அதன் தோலை சீவிய பின்.... சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

அடுப்பில் தாச்சியை வைத்து, சிறிது எண்ணை விட்டு.... அரிந்த வெங்காயம் போட்டு சிறிது வதங்கிய பின்.....

கடுகு, பெருஞ்சீரகம், சிறிதாக வெட்டிய செத்தல் போன்றவற்றை போட்டு கடுகு வெடித்து, வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

இப்போ.... வெட்டிய பீற்றூட்டையும், உப்பையும் போட்டு கிளறவும்.cooksmiley.gif

பீற்றூட் இலையுடன் கிடைத்தால்....

கொஞ்ச இலை, தண்டை சிறிதாக வெட்டிப் போடவும்.

தாச்சியில் மிகச்சிறிதளவு (3 மேசைக்கரண்டி) நீர் மட்டுமே விட்டு, கருவேப்பிலையை போட்டு மூடி கொதிக்க விடவும்.

நன்கு கொதித்த பின் சிறிது பசுப்பால் விட்டு.... மூடாமல் கிளறவும்.chef.gif

இது நன்கு அவிய வேண்டும் என்று பார்க்காமல், அரை அவியலிலேயே இறக்கலாம்.

முக்கியமானது இதில் அதிக நீர் விடாமல் பிரட்டல் கறி போல் இருந்தால் நல்லது.

இதனை சோற்றுடன் சாப்பிட சுவையாகவும், சிறிய பிள்ளைகள் அதன் நிறத்திற்காகவும் விரும்பி உண்பார்கள்.

இது சமைக்கும் நாளில் மீன் கறி, போஞ்சி பால் கறி, பருப்புக் கறி, கீரைக்கறி போன்றவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்......

சாப்பாட்டை இரண்டாம் முறையும் போட்டுச் சாப்பிடுவீர்கள் என்பது நிச்சயம்.hungry_girl.gifhungry_boy.gif

.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பீற்றூட் கறி பார்க்க கலர்வுல்லா இருக்கும். எனக்கும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு அதிகம் பீற்ரூத் சாப்பிடுவதில்லை, சாதத்தை சிவப்பாக்கிவிடும். இப்போதெல்லாம் சாப்பிடுவதுண்டு. சுப்பர் மார்கட்டில் அளவாக அவித்து இறுக்கமாக கவர் பண்ணி விற்கிறார்கள் . சுவையாய் இருக்கும். இதன் இலைகளையும் கோவா இலையுடன் கலந்து வறையாக்கிச் சாப்பிடலாம் . :):)

நன்றி சிறி ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்தமான மரக்கறியில் இதுவும் ஒன்று.

நன்றி தகவலுக்கு சிறி அண்ணா.

கிளியவன், இது தகவல் அல்ல....cookie.gif

சொந்த, குசினியியில், செய்த பரிசோதனையில் கிடைத்த.... பெறுபேறு.

உங்கள் பாராட்டுக்கு நன்றி கிளியவன்.

Link to comment
Share on other sites

மிகவும் எளிமையானதும் சுவையானதுமான மரக்கறி. பீட்ருட் இலை சுண்டகும் நன்றாக இருக்கும்.

கோடை காலங்களில் வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்வேன். புதிதாக பிடுங்கி சமைக்க நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றூட் கறி பார்க்க கலர்வுல்லா இருக்கும். எனக்கும் பிடிக்கும்.

கறுப்பி, பீற்றுட் கறியை கலராக சாப்பிட்டு..... சிவப்பி ஆகவேணும். :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றூட்டில் சீனி அதிகமாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு அதிகம் பீற்ரூத் சாப்பிடுவதில்லை, சாதத்தை சிவப்பாக்கிவிடும். இப்போதெல்லாம் சாப்பிடுவதுண்டு. சுப்பர் மார்கட்டில் அளவாக அவித்து இறுக்கமாக கவர் பண்ணி விற்கிறார்கள் . சுவையாய் இருக்கும். இதன் இலைகளையும் கோவா இலையுடன் கலந்து வறையாக்கிச் சாப்பிடலாம் . :):lol:

நன்றி சிறி ! :lol:

வடிவாகச் சொன்னீர்கள் சொன்னீர்கள் சுவி,

பீற்றூட்டின், இலைகளின் இடையில் சின்ன மாசிக்கருவாடு போட்டால்....

சுவையோ.... சுவை..........

Genelia-Yellow-Half-Saree.jpg

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, பீற்றுட் கறியை கலராக சாப்பிட்டு..... சிவப்பி ஆகவேணும். :lol::)

நல்ல டிப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவாகச் சொன்னீர்கள் சொன்னீர்கள் சுவி,

பீற்றூட்டின், இலைகளின் இடையில் சின்ன மாசிக்கருவாடு போட்டால்....

சுவையோ.... சுவை..........

Genelia-Yellow-Half-Saree.jpg

.

காய் சிறி! ஜெனி இஸ் வெறி பிஜூட்டிபுள் யா!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாய்யம் சாப்பிட வேன்டியது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக்கரைவியாதி உள்ளவர்கள் இதனை தவிர்க்கவேண்டும்

அதுக்குத்தானே குளிசை குடுக்குறாங்கள்.

குளிசையை போட்டுட்டு.........கொட்டுறதுதானே :lol:

Link to comment
Share on other sites

அதுக்குத்தானே குளிசை குடுக்குறாங்கள்.

குளிசையை போட்டுட்டு.........கொட்டுறதுதானே :lol:

அப்புறம் ஊசியும் கையுமா திரியிற நிலமைய கொண்டுவந்திரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் ஊசியும் கையுமா திரியிற நிலமைய கொண்டுவந்திரும்

:lol::):lol:

Link to comment
Share on other sites

பீற்றூட் கறி நல்லாத் தான் இருக்கு. green-plus.jpg

எங்கட வீட்டில பீற்றூட் சம்பல் தான் செய்வோம். சம்பல் செய்வது போல், பீற்றூட்டை அவித்து தோலை நீக்கி விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுதூள், கறிவேப்பிலை, தேசிக்காய் புளி, உப்பும் சேர்த்து செய்வது வழக்கம்.

வைற்றமின் (விற்றமின்) A அதிகம் உள்ள மரக்கறி வகைகளில் இதுவும் ஒன்று என நினைக்கிறன், பீற்றூட் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்வார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றூட் கறி நல்லாத் தான் இருக்கு. green-plus.jpg

எங்கட வீட்டில பீற்றூட் சம்பல் தான் செய்வோம். சம்பல் செய்வது போல், பீற்றூட்டை அவித்து தோலை நீக்கி விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுதூள், கறிவேப்பிலை, தேசிக்காய் புளி, உப்பும் சேர்த்து செய்வது வழக்கம்.

வைற்றமின் (விற்றமின்) A அதிகம் உள்ள மரக்கறி வகைகளில் இதுவும் ஒன்று என நினைக்கிறன், பீற்றூட் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்வார்கள்...

எந்த காய் கறியும் அவித்தால் வைட்டமின் எல்லாம் அழிந்திடும் என்று எங்கேயோ வாசித்த ஞாபகம்.

Link to comment
Share on other sites

எந்த காய் கறியும் அவித்தால் வைட்டமின் எல்லாம் அழிந்திடும் என்று எங்கேயோ வாசித்த ஞாபகம்.

உண்மை தான் சபேஸ் அண்ணா!

மரக்கறிகளை வெட்டிய பின்பு கழுவக் கூடாது என்று சொல்வார்கள் காரணம் அதில் உள்ள சத்துக்கள் கழுவும் நீருடன் போய்விடும் என்று பொதுவாக கழுவிய பின்பே மரக்கறிகளை வெட்டுவார்கள்.

பீற்றூட்டை அரை அவியல், அல்லது அவிக்காமலும் தோலை நீக்கிய பின்னும் சாப்பிடலாம் (கரட்டையும் பச்சையாக பலர் சாப்பிடுவார்கள். ஆனால் பீட்ரூட்டின் இலையை அவித்த பின்பே சாப்பிடவேண்டும் என்று சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றூட்டில் சீனி அதிகமாமே?

100 கிராம் பீற்றூட்டில் 8 கிராம் சீனி உள்ளது, ரதி.

சக்கரைவியாதி உள்ளவர்கள் இதனை தவிர்க்கவேண்டும்

காரணிகன் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் துப்பரவாக சீனியை தவிர்த்தாலும் ஆபத்து என்று சொல்கிறார்கள்.

ஆனால் சீனி எவ்வளவு வீதம் உடம்பில் இருக்கலாம் என்பது தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் எளிமையானதும் சுவையானதுமான மரக்கறி. பீட்ருட் இலை சுண்டகும் நன்றாக இருக்கும்.

கோடை காலங்களில் வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்வேன். புதிதாக பிடுங்கி சமைக்க நன்றாக இருக்கும்.

kohlrabi.jpgkohlrabi.jpg

தப்பிலி, நான் வெள்ளை முள்ளங்கி (Kohlrabi) இலையில் மாசிக்கருவாடு போட்டு வறை செய்துள்ளேன். ஆனால், பீற்றூட் இலையில் வறை செய்து பார்க்கவில்லை.

இப்போ..... குளிர்காலம் என்ற படியால்... பீற்றூட் இலை கிடைக்காது. வரும் கோடை காலத்தில் நிச்சயம் செய்வேன்.

Kohlrabi ஜேர்மன் பெயர் என நினைக்கின்றேன். ஆங்கிலப் பெயரும் Kohlrabiஆ தப்பிலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய் சிறி! ஜெனி இஸ் வெறி பிஜூட்டிபுள் யா!! :unsure:

கட்டாய்யம் சாப்பிட வேன்டியது. :lol:

ஓமோம்.... சஜீவன், நாங்களும் ஜெனிக்காகத்தான்... பீற்றூட் கறி சாப்பிடுகின்றோம். :icon_idea::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குத்தானே குளிசை குடுக்குறாங்கள்.

குளிசையை போட்டுட்டு.........கொட்டுறதுதானே :icon_idea:

குமாரசாமி அண்ணை ஜேர்மனியிலை உங்களுக்கு டாக்குத்தரிட்டை 10 € கட்டினால் மூன்று மாதத்துக்கு குளிசை குறைஞ்ச விலையிலை கிடைக்குது.... மற்ற நாட்டுக்காரர் என்ன செய்வது. :unsure:

krankenkassen_gross.jpgkassen_HA_Bayern_Ber_84764c.jpg

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.