Jump to content

பீற்றூட் கறி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை ஜேர்மனியிலை உங்களுக்கு டாக்குத்தரிட்டை 10 € கட்டினால் மூன்று மாதத்துக்கு குளிசை குறைஞ்ச விலையிலை கிடைக்குது.... மற்ற நாட்டுக்காரர் என்ன செய்வது. :unsure:

சிறித்தம்பி! நான் அந்த பத்தும் கட்டத்தேவையில்லை.அவ்வளவுத்துக்கு செல்வாக்கான வருத்தங்களை வைச்சிருக்கிறன் :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! நான் அந்த பத்தும் கட்டத்தேவையில்லை.அவ்வளவுத்துக்கு செல்வாக்கான வருத்தங்களை வைச்சிருக்கிறன் :icon_idea:

குமராசாமி அண்ணை இப்படி செல்வாக்கான வருத்தங்களை வைச்சுக் கொண்டு, குசும்பாய் இருப்பதை நினைக்க..... ஒரு மாதிரி இருக்குது.

உங்களின் மனோதிடத்தை பாராட்டுகின்றேன். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீற்ரூட் நல்ல சாப்பாடு மடடுமல்ல

எழுபதுகளுக்குப் பின் தமிழீழ நிலப்பரப்பில் பலர் பயிரிட்டு வந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த காய் கறியும் அவித்தால் வைட்டமின் எல்லாம் அழிந்திடும் என்று எங்கேயோ வாசித்த ஞாபகம்.

சபேஷ், Pressure Cookerல் சமைத்தால் கூடியளவு விற்றமின்களை பாதுகாக்க முடியும்.

cooker2.JPG

உண்மை தான் சபேஸ் அண்ணா!

மரக்கறிகளை வெட்டிய பின்பு கழுவக் கூடாது என்று சொல்வார்கள் காரணம் அதில் உள்ள சத்துக்கள் கழுவும் நீருடன் போய்விடும் என்று பொதுவாக கழுவிய பின்பே மரக்கறிகளை வெட்டுவார்கள்.

பீற்றூட்டை அரை அவியல், அல்லது அவிக்காமலும் தோலை நீக்கிய பின்னும் சாப்பிடலாம் (கரட்டையும் பச்சையாக பலர் சாப்பிடுவார்கள். ஆனால் பீட்ரூட்டின் இலையை அவித்த பின்பே சாப்பிடவேண்டும் என்று சொல்லுவார்கள்.

குட்டி, நீங்கள் சொல்வது சரி. மரக்கறியை கழுவிய பின்பே.... வெட்ட வேண்டும்.

ஆனால் மீனை, வெட்டிய பின்பே... கழுவ வேண்டும்.

காரணம் மீன் நீரில் வாழ்வதால்..... அதன் வெளிப்பக்கம் கழுவியே இருக்கும். :)

fish-animation.gifani-fish-02.gifFISHAN.GIF

மீனின் வயிற்றுப் பகுதியில் நீர் பட்டிருக்க சந்தர்ப்பம் இல்லையாததலால்... :)

மீனை... வெட்டிய பின்பு... குளிர் நீரில் நன்கு அலசி கழுவ வேண்டும். :D

.

Link to comment
Share on other sites

எங்கட வீட்டில பீற்றூட் சம்பல் தான் செய்வோம். சம்பல் செய்வது போல், பீற்றூட்டை அவித்து தோலை நீக்கி விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுதூள், கறிவேப்பிலை, தேசிக்காய் புளி, உப்பும் சேர்த்து செய்வது வழக்கம்.

பீட்ரூட்டை அவிக்காமல் கரட் ஸ்க்ரேப் பண்ணுவது போல் மெல்லியதாக சீவி சம்பல் போட்டால் சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

kohlrabi.jpgkohlrabi.jpg

தப்பிலி, நான் வெள்ளை முள்ளங்கி (Kohlrabi) இலையில் மாசிக்கருவாடு போட்டு வறை செய்துள்ளேன். ஆனால், பீற்றூட் இலையில் வறை செய்து பார்க்கவில்லை.

இப்போ..... குளிர்காலம் என்ற படியால்... பீற்றூட் இலை கிடைக்காது. வரும் கோடை காலத்தில் நிச்சயம் செய்வேன்.

Kohlrabi ஜேர்மன் பெயர் என நினைக்கின்றேன். ஆங்கிலப் பெயரும் Kohlrabiஆ தப்பிலி.

சிறி இந்த முறை வரும் கோடைக்கு வித்தியாசமாய் ஏதும் பயிரிடலாமென இணையத்தில் தேடிப்பார்த்தேன். Kohlrabi தான் வந்தது. சுண்டலுக்கு இலையும், கறிக்கு கிழங்கும் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். இங்கும் Kohlrabi என்றுதான் உள்ளது. ஊரில் முள்ளங்கி அதிகம் சாப்பிட்டதில்லை. இந்த முறை பயிரிட்டுப் பார்ப்போம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி இந்த முறை வரும் கோடைக்கு வித்தியாசமாய் ஏதும் பயிரிடலாமென இணையத்தில் தேடிப்பார்த்தேன். Kohlrabi தான் வந்தது. சுண்டலுக்கு இலையும், கறிக்கு கிழங்கும் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். இங்கும் Kohlrabi என்றுதான் உள்ளது. ஊரில் முள்ளங்கி அதிகம் சாப்பிட்டதில்லை. இந்த முறை பயிரிட்டுப் பார்ப்போம். :D

தப்பிலி, முள்ளங்கி கிழங்கில் பால் கறி சமைத்தால்.... அந்தமாதிரி இருக்கும். :)

Kohlrabi மூன்று மாதத்திற்குள் விளையும் கிழங்கு என நினைக்கின்றேன்.

மாசிக் கடைசியில் வெப்பமான இடத்தில் வைத்து நாற்று நடலாம்.smileys-free-download-2111.gif

ஒரேயடியாக விதைகளைப் போடாமல் ஒவ்வொரு மாத இடைவெளிவிட்டு விதைகளை முளைக்கப் போட்டால்... நவம்பர் மாதம் மட்டும் விளையக்கூடிய கிழங்கு தான் இது. விளைந்தவுடன் சொல்லுங்கள் அருமையான, கொலராபி பால் கறி செய்யும் முறையை பதிகின்றேன். :D

Link to comment
Share on other sites

தப்பிலி, முள்ளங்கி கிழங்கில் பால் கறி சமைத்தால்.... அந்தமாதிரி இருக்கும். :)

Kohlrabi மூன்று மாதத்திற்குள் விளையும் கிழங்கு என நினைக்கின்றேன்.

மாசிக் கடைசியில் வெப்பமான இடத்தில் வைத்து நாற்று நடலாம்.smileys-free-download-2111.gif

ஒரேயடியாக விதைகளைப் போடாமல் ஒவ்வொரு மாத இடைவெளிவிட்டு விதைகளை முளைக்கப் போட்டால்... நவம்பர் மாதம் மட்டும் விளையக்கூடிய கிழங்கு தான் இது. விளைந்தவுடன் சொல்லுங்கள் அருமையான, கொலராபி பால் கறி செய்யும் முறையை பதிகின்றேன். :D

நன்றி சிறி. நீங்களும் மரக்கறித் தோட்டம் செய்யபவராக இருந்தால் ஒரு தனித் திரி தொடங்கி விடயங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது. பார்ப்போம். யாழில் தோட்டம் செய்பவர்கள் யாராவது இருந்தால் உதவியாக இருக்கும். நாங்களும் புதியவற்றை அறிந்து கொள்ளலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி. நீங்களும் மரக்கறித் தோட்டம் செய்யபவராக இருந்தால் ஒரு தனித் திரி தொடங்கி விடயங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது. பார்ப்போம். யாழில் தோட்டம் செய்பவர்கள் யாராவது இருந்தால் உதவியாக இருக்கும். நாங்களும் புதியவற்றை அறிந்து கொள்ளலாம். :D

முன்பு நான் மரக்கறித் தோட்டம் செய்தனான் தப்பிலி. ஆனால் அங்கு வரும் நத்தைகளால்.... எனது பயிரை பாதுகாக்க முடியவில்லை.

ஒரு இரவில் எல்லா இலைகளையும் கடித்து, பயிரை நாசம் பண்ணிவிடும்.

நத்தைக்கு போடும் மருந்து சரியான விலை,என்ற படியால்.... மரக்கறி செய்யும் எண்ணத்தை கைவிட்டு.... ரோஜாத் தோட்டமாக்கி விட்டேன். :)

எனக்குத் தெரிந்து, ஈழப்பிரியன் தோட்டம் செய்பவர்.

உங்கள் தோட்டத்தில் மஞ்சள் (செடி) போஞ்சி, பச்சை போஞ்சி நடுங்கள். ஆறு கிழமையில் பலன் தரும்.

கொடி போஞ்சியும் உள்ளது. அதற்கு தடி கட்டி கனக்க மினக்கெடவேணும்.

schnecken-24446.gifschnecke_0053.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தோட்டத்தில் மஞ்சள் (செடி) போஞ்சி, பச்சை போஞ்சி நடுங்கள். ஆறு கிழமையில் பலன் தரும்.

கொடி போஞ்சியும் உள்ளது. அதற்கு தடி கட்டி கனக்க மினக்கெடவேணும்.

உண்மை தான் சிறி அண்ணா.... கோடி போஞ்சிக்கு தடி கட்டி மினக்கெடுரதிலும் பார்க்க செடி நல்லது. நான் போன முறை கவனிக்காமல் வாங்கி, எதிர்பார்த்த பலன் கிடைக்க இல்லை. பதி போட்டு நடுகிறதை விட, நேரடியாவே நிலத்தை பதப்படுத்தி நாடும் போது எனக்கு செழிப்பாக வளர்கிறது.

Link to comment
Share on other sites

முன்பு நான் மரக்கறித் தோட்டம் செய்தனான் தப்பிலி. ஆனால் அங்கு வரும் நத்தைகளால்.... எனது பயிரை பாதுகாக்க முடியவில்லை.

ஒரு இரவில் எல்லா இலைகளையும் கடித்து, பயிரை நாசம் பண்ணிவிடும்.

நத்தைக்கு போடும் மருந்து சரியான விலை,என்ற படியால்.... மரக்கறி செய்யும் எண்ணத்தை கைவிட்டு.... ரோஜாத் தோட்டமாக்கி விட்டேன். :)

schnecken-24446.gifschnecke_0053.gif

நத்தைகளுக்கு பியர் என்றால் நல்ல விருப்பம். ஒரு பாத்திரத்தை நிலமட்டம் வரை பதித்து விட்டு அதற்குள் பியரை ஊற்றினால் அதை குடிக்க வரும் நத்தைகள் பாத்திரத்திற்குள் விழுந்து இறந்துவிடும். :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் சிறி அண்ணா.... கோடி போஞ்சிக்கு தடி கட்டி மினக்கெடுரதிலும் பார்க்க செடி நல்லது. நான் போன முறை கவனிக்காமல் வாங்கி, எதிர்பார்த்த பலன் கிடைக்க இல்லை. பதி போட்டு நடுகிறதை விட, நேரடியாவே நிலத்தை பதப்படுத்தி நாடும் போது எனக்கு செழிப்பாக வளர்கிறது.

சபேஷ், போஞ்சி செடியை நேரடியாகவே நிலத்தில் நடுவது நல்லது. காரணம் அதன் விதையை நிலத்தில் போட்டவுடன் முளைவிட ஆரம்பித்து விடும்.

ஆனால் தக்காளி, கத்தரி, மிளாகாய் போன்றவற்றை முதலில் வேறு ஒரு வெப்பமான இடத்தில் முளைக்கப் போட்டு.... 2, 3 அங்குலம் வளர்ந்த பின் நிலத்தில் நடலாம். வேளைக்கே நிலத்தில் விதை போட்டால் தக்காளியை தவிர மற்றவைக்கு தேவையான சூரிய வெப்பம் கிடைக்காது என நினைக்கின்றேன்.

4458796651_f31284ba0c_o.jpg95__640x360_P1080040_thai_auberginen_jungpflanzen.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நத்தைகளுக்கு பியர் என்றால் நல்ல விருப்பம். ஒரு பாத்திரத்தை நிலமட்டம் வரை பதித்து விட்டு அதற்குள் பியரை ஊற்றினால் அதை குடிக்க வரும் நத்தைகள் பாத்திரத்திற்குள் விழுந்து இறந்துவிடும். :)

தப்பிலி, நீங்கள் சொன்ன முறையையும் செய்து பார்த்தேன்....

ஒவ்வொரு நாள் காலையிலும் இறந்த கன நத்தைகளை தூக்கி எறிந்தது தான் மிச்சம்.

அடுத்த நாள் எங்கிருந்தோ... வேறு நத்தைகள் பியர் குடிக்க வருகின்றது.

வீட்டிற்கு அருகில், பெரிய புல் வெளி இருப்பதால் இது சாத்தியப் படவில்லை.

66071.jpgbierfalle_menue.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி, நீங்கள் சொன்ன முறையையும் செய்து பார்த்தேன்....

ஒவ்வொரு நாள் காலையிலும் இறந்த கன நத்தைகளை தூக்கி எறிந்தது தான் மிச்சம்.

அடுத்த நாள் எங்கிருந்தோ... வேறு நத்தைகள் பியர் குடிக்க வருகின்றது.

வீட்டிற்கு அருகில், பெரிய புல் வெளி இருப்பதால் இது சாத்தியப் படவில்லை.

66071.jpgbierfalle_menue.gif

சிறி இங்கு நத்தைக்கு நல்ல கிராக்கி.இனி நத்தைகளை எறியாமல் இங்கை அனுப்புங்கோ.இரன்டு பேரும் விரைவில் தொழில் அதிபலாகி விடலாம். :lol:

Link to comment
Share on other sites

தப்பிலி, நீங்கள் சொன்ன முறையையும் செய்து பார்த்தேன்....

ஒவ்வொரு நாள் காலையிலும் இறந்த கன நத்தைகளை தூக்கி எறிந்தது தான் மிச்சம்.

அடுத்த நாள் எங்கிருந்தோ... வேறு நத்தைகள் பியர் குடிக்க வருகின்றது.

வீட்டிற்கு அருகில், பெரிய புல் வெளி இருப்பதால் இது சாத்தியப் படவில்லை.

[

பெரிய புல்வெளி இருந்தால் கொஞ்சம் கஷ்டம். எனது தோட்டத்தில் தவளைகளும் உண்டு. அதுவும் நத்தைகளை சாப்பிடும். உள்ளி நாட்டினாலும் நத்தை வராது. வெள்ளைப்பூண்டை எந்த காலநிலையிலும் நடலாம். மிகவும் இலகுவான பயிர். நத்தை விரும்பிச் சாப்பிடும் தாவரத்திற்குப் பக்கத்தில் உள்ளி நாட்டிவிடுவேன்.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3104302.stm

'Nematodes ' எனும் நுண்ணுயிரையும் பாவிக்கிறார்கள். விலை அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி இங்கு நத்தைக்கு நல்ல கிராக்கி.இனி நத்தைகளை எறியாமல் இங்கை அனுப்புங்கோ.இரன்டு பேரும் விரைவில் தொழில் அதிபலாகி விடலாம். :lol:

சஜீவன், இங்கு தோட்டத்திற்கு கோது இல்லாத நத்தை தான் அதிகமாக வரும்.

அதுக்கு, நல்ல கிராக்கி என்றால்.... சொல்லுங்கோ இப்ப செய்யிற வேலையை ராஜினாமாப் பண்ணிப் போட்டு..... smilie_be_069.gif

ஒரு கிழமைக்கு ஒரு லொறி நத்தை ஏற்றுமதி செய்யிறன். கெதியிலை தொழிலதிபராகிவிடலாம். :lol:

பெரிய புல்வெளி இருந்தால் கொஞ்சம் கஷ்டம். எனது தோட்டத்தில் தவளைகளும் உண்டு. அதுவும் நத்தைகளை சாப்பிடும். உள்ளி நாட்டினாலும் நத்தை வராது. வெள்ளைப்பூண்டை எந்த காலநிலையிலும் நடலாம். மிகவும் இலகுவான பயிர். நத்தை விரும்பிச் சாப்பிடும் தாவரத்திற்குப் பக்கத்தில் உள்ளி நாட்டிவிடுவேன்.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3104302.stm

'Nematodes ' எனும் நுண்ணுயிரையும் பாவிக்கிறார்கள். விலை அதிகம்.

தப்பிலி உங்கள் தோட்டத்தில் தவளை நிற்பது நல்லது. frosch.gif

இங்கு சின்ன தவளை 3 ஐரோ frosch2.gif கொடுத்துத் தான் வாங்கிவிட வேணும்.

வாங்கி விட்டாலும்.... frosch-smilies-0004.gif அது வேறை தோட்டத்துக்கு மேயப் போய் விடும்.

அதை விட அந்த தவளையை விட நத்தை பத்து மடங்கு பெரிசாய் இருக்கும்.smiley_emoticons_frosch01.gif

உள்ளிக்கு நத்தை வராது என்ற மேலதிக தகவலுக்கு நன்றி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தோட்டத்தில் எலிகள் இல்லையா? இங்கு தோட்டத்தில் பூனையளவு எலிகள் உண்டு. அதப் பிடிக்க பாம்புகளும் வரும். கோழிக் குஞ்சுகளை, முட்டைகளை இரண்டும் ஒற்றுமையாக பிடித்து விழுங்கும்.

எலிக்கு மருந்து வைத்தாலும் முடிவில் அதுகள்தான் வென்று விடுகின்றன! :)

Link to comment
Share on other sites

அதப் பிடிக்க பாம்புகளும் வரும்.

பிரான்சில பாம்பு இருக்கிறதா? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தப்பிலி! மஞ்சள், கருப்பு நிறங்களில் நிறைய உண்டு. சில காட்டுப் பகுதிகளில் போர்டில் எழுதி இருப்பார்கள் பாம்புகள் நிறைந்த பகுதி கவனம் என்று! :D

Link to comment
Share on other sites

  • 4 months later...

சிறியின் தகவலின்படி சித்திரை மாதத்திலிருந்து 'கோல்ரபி' விதைகளை நட்டு வந்தேன். இரு மாதங்களில் சாகுபடிக்கு தயாராகி விடுகின்றது. விரைவில் வளர்வதால் பூச்சிகளின் தாக்கம் குறைவு. பராமரிப்பும் குறைவு. தண்ணீர் மாத்திரம் ஊற்றினால் போதுமானது. இப்பொழுது ஒவ்வொரு கிழமையும் 3 , 4 செடிகள் சமையலுக்குத் தயாராகி விடுகிறது. காயை கறி சமைத்தும், இலையை சுண்டல் செய்தும் உண்ணலாம்.

நன்றி சிறி.

dscn8541t.jpg

dscn8555.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

dscn8555.jpg

கொலராபி வறைக்கு மாசிக்கருவாடு எல்லாம் போட்டுள்ளீர்கள்.

பார்க்க.... வாயில் நீர் ஊறுகின்றது, தப்பிலி. :D

Link to comment
Share on other sites

மிக நன்றாக உள்ளது தப்பிலி

நன்றி குட்டி.

இறாலையும் பருப்பையும் விட மற்றதெல்லாம் சொந்தமாகப் பயிரிட்டவைதான். நீங்களும் செய்து பாருங்கள். மிகச் சிறிய துண்டு நிலம் இருந்தாலும் மாறுபட்ட மரக்கறிகளை நட்டு வீட்டுத் தேவைக்குப் பாவிக்கலாம். நிலம் அற்றவர்கள் அடுக்களை யன்னல் கட்டில் சிறு பெட்டியில் மல்லி, புதினா, dill, basil, oragano.... போன்றவைகளை நட்டு உபயோகிக்கலாம்.

இரசாயன மருந்துகள் அற்ற சுத்தமான உணவு, உடலுக்கும் கொஞ்சம் தேகப் பயிற்சி, மனதுக்கும் சந்தோசமான விடயம்

Link to comment
Share on other sites

நன்றி குட்டி.

இறாலையும் பருப்பையும் விட மற்றதெல்லாம் சொந்தமாகப் பயிரிட்டவைதான். நீங்களும் செய்து பாருங்கள். மிகச் சிறிய துண்டு நிலம் இருந்தாலும் மாறுபட்ட மரக்கறிகளை நட்டு வீட்டுத் தேவைக்குப் பாவிக்கலாம். நிலம் அற்றவர்கள் அடுக்களை யன்னல் கட்டில் சிறு பெட்டியில் மல்லி, புதினா, dill, basil, oragano.... போன்றவைகளை நட்டு உபயோகிக்கலாம்.

இரசாயன மருந்துகள் அற்ற சுத்தமான உணவு, உடலுக்கும் கொஞ்சம் தேகப் பயிற்சி, மனதுக்கும் சந்தோசமான விடயம்

வெட்டுறேன், புடுங்குறேன் என்று ஒரு உசாரில் கீரை, தக்காளி, பீற்றூட், கரட், Marrow, Basil, Dill, Rosemary, கொத்தமல்லி, கருவேப்பிலை கூட வீட்டில் இருந்தது... பச்சைத் தக்காளி உட்பட பல கறிகள் சமைத்து நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வேன், நண்பர்கள் தமது தோட்டத்தில் இலைக்கோவா, lettuce பயிரிட்டார்கள், அது ஒரு கனாக் காலாம்... :rolleyes::wub: உண்மையில் மனதில் ஒரு விதமான சந்தோசம் வரும் அதை உணர்ந்து இருக்கிறேன்...

கொஞ்ச காலம் தோட்டத்தைக் கவனிக்காமல் விட்டதால நத்தைகளின் ஆக்கிரமிப்பு வேறு... அதன் பின்பு மரக்கறிகள் பயிரிடும் எண்ணம் அறவே இல்லாமல் போய்விட்டது. இப்ப செய்ய மனம் இருந்தாலும், நேரம் ஒதுக்குவது கொஞ்சம் சிரமமாக உள்ளது, அதோடு பழைய நண்பர்களும் இடம் மாறி போய்விட்டார்கள்..

நீங்கள் இணைத்த படத்தைப் பார்த்த போது மலரும் நினைவுகள் நெஞ்சில் அசைபோடுகின்றன... :wub::(:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த வீடு வளவோடை இருக்கிறவங்கள் தோட்டம் தொழில் எண்டு அனுபவிக்கிறாங்கள்.

டேய் குமாரசாமி நீயும் இருக்கிறியே...........?சொந்த வீடுமில்லை...ஒருபரப்பு காணியுமில்லை........... ஆனால் பழைய காயெண்டு சொல்லி மட்டும் தம்பட்டமடி.

இவ்வளவுகாலமும் இஞ்சையிருந்து என்னத்தை சேர்த்து வைச்சிருக்கிறாய் எண்டு உன்ரை மனுசி கேக்கிறதிலையும் நியாயமிருக்கடா பன்னாடை. :D:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.