Jump to content

உருத்திரபுரம் கோகிலாம்பாள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி – உருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலை வழக்கு

- சட்டத்தரணி கே.ஜீ. ஜோன்

இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1962 ஆம் ஆண்டுக்கும் 70 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் உலகில் கிளிநொச்சி – உருத்திரபுரம் என்னும் கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. காரணம் அங்கு நடந்த ஒரு கொலையாகும். வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள குக்கிராமமே உருத்திரபுரமாகும். இங்கு அபிவிருத்திக்காக குடியேறியவர்களே அதிகம். யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் மக்களுக்கும் இங்கு குடியேறியவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. இங்கிருந்த பிள்ளையார் கோவிலில் பூசகராக காசிலிங்க சர்மா விளங்கினார். இவரது தகப்பனாரும் ஒரு பூசகராவார். இவர் காரைநகரில் உள்ளவர். காசிலிங்க சர்மா இந்தியாவைச் சேர்ந்த அழகிய பிராமணப் பெண்ணான கோகிலாம்பாளை மணந்தார். காசிலிங்க சர்மாவுக்கும் கோகிலாம்பாளுக்குமிடையில் வயதில் மிகப் பாரிய வித்தியாசம் இருந்தது. இருபது வயது வித்தியாசம் இருந்தது. ஆரம்பத்தில் இது பிரச்சினையாக இருக்கவில்லை. பதினைந்து வருட கால வாழ்க்கையில் கோகிலாம்பாள் இரண்டு ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். தமிழ் குடும்ப மாது ஒருவர் செய்ய வேண்டிய அவ்வளவு கடமைகளையும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் செய்து வந்தாள். காலம் செல்ல செல்ல காசிலிங்க சர்மாவின் வயோதிபத்தன்மை கூடியது. ஆனால் கோகிலாம்பாளின் ஜவ்வனம் அவளிடம் அப்படியே இருந்தது. இதனால் அவர்களிடையே பாலியல் தகராறு அரும்பத் தொடங்கியது. இதனை உணர்ந்த காசிலிங்க சர்மா மதுவை அருந்தி மன ஆறுதலைப் பெற்றார். தனது மனைவியை சந்தோஷப்படுத்த முடியாததையிட்டு கவலையடைந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இவர்களில் தோட்டத்தில் வேலுப்பிள்ளை என்னும் ஒருவன் வேலை செய்தான். இவன் மேலுக்கு துணி அணிவதில்லை. பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடம்பு பளிச்சென்று எல்லோருக்கும் தெரியக் கூடியதாயிருப்பான். கறுப்பு நிறமானாலும் இளமை அவனில் தளும்பியது. ஆகவே கோகிலாம்பாளின் பார்வை வேலுப்பிள்ளையின் பால் திரும்பியது. தனது பாலியல் தேவையை அவன் பூர்த்தி செய்வான் என அவள் நம்பி வேலுப்பிள்ளைக்கு தேவையான உணவுகள், இனிப்புப் பண்டங்கள், தேநீர் என்பவற்றை பக்குவமாக அளிக்கத் தொடங்கினாள். வேலுப்பிள்ளையும் இதை உணர்ந்து அவளுடன் நேசம் காட்டத் தொடங்கினான். இறுதியில் இது காதலாக மலர்ந்தது. பூசகர் இல்லாத நேரத்தில் வேலுப்பிள்ளை பூசகரின் வீட்டிற்கு வந்து தனியாக அறைக்குள் கோகிலாம்பாளுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம். அவளது மகளான இராஜலட்சுமிக்கு இது தெரியவந்தது. கோகிலாம்பாள் மிக கண்டிப்பாக தனது மகளுக்கு இச்சம்பவத்தை தனது தகப்பனுக்கோ வேறு யாருக்குமோ தெரிவிக்கக் கூடாது என்று கட்டளை இட்டாள். பல வருடம் இப்படி நடந்தது. உருத்திரபுரம் கிராமப்புறம் என்பதால் கோகிலாம்பாளின் நடத்தை பூசகருக்கும் தெரியவந்தது. எனவே பூசகர் வேலுப்பிள்ளையை தனது சேவையில் இருந்து நீக்கினார். இதனை கோகிலாம்பாள் எதிர்த்தாள். ஆயினும் இறுதியில் வேலுப்பிள்ளை பூசகரின் வீட்டிலிருந்து அனுப்பப்பட்டான். வேலுப்பிள்ளை அனுப்பப்பட்ட நேரத்தில் இருந்து கோகிலாம்பாள் வீட்டில் அடுப்பு பற்றவைப்பதை நிறுத்தினாள். பூசகருக்கோ குழந்தைகளுக்கோ உணவு சமைக்க மறுத்தாள். மூன்று நாட்கள் உண்ண உணவு இல்லாமல் பிள்ளைகள் பசியால் வாடினர். ஆகவே பூசகருக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இறுதியில் வேலுப்பிள்ளையை மீண்டும் தனது தோட்டத்திற்கு வரச்செய்து வேலைக்கு அமர்த்தினார். கோகிலாம்பாள் இதில் வெற்றி பெற்றதால் கோகிலாம்பாளுக்கும் வேலுப்பிள்ளைக்கும் வெளியரங்கமாக திரிய வாய்ப்புக் கிடைத்தது.

அவர்கள் மாட்டு வண்டியில் தோட்டத்தில் திரிவதும் கிணற்றடியில் உடுப்பு துவைக்கும்போது சல்லாபமாக கதைப்பதும் நடைபெறத் தொடங்கியது. இந்த விபரம் காசிலிங்க சர்மாவின் தகப்பனார் காரைநகரில் இருப்பவருக்கும் தெரியவந்தது. வேலுப்பிள்ளை சந்தேகத்தை போக்க வேண்டுமென்ற வஞ்சக எண்ணத்தால் பொன்னம்மா என்னும் பெண் ஒருத்தியை மணந்து உருத்திரபுரத்திற்கு கொண்டு வந்தான். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல் ஒரு பெண்ணின் மனம், நடத்தை என்பவற்றை வேறொரு பெண் உடன் அறிவாள். பொன்னம்மா சில நாட்களுக்குள் வேலுப்பிள்ளையினதும் கோகிலாம்பாளினதும் தகாத உறவை அறிந்து கொண்டு வேலுப்பிள்ளையிடம் கேட்டபோது வேலுப்பிள்ளை பொன்னம்மாவை தாக்கி இனிமேல் இது பற்றி கேட்கக் கூடாது என அடித்து உதைத்தான். இதனால் வேதனையடைந்த பொன்னம்மா தனது ஊரான வவுனிக் குளத்திற்கு சென்று விட்டாள். வேலுப்பிள்ளை கோகிலாம்பாள் பாலியல் உறவு வேகமாக நடந்தது.

வேலுப்பிள்ளை கோகிலாம்பாளிடம் தான் கோகிலாம்பாளை மணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தான். கோகிலாம்பாள் தனது கணவன் இருக்கும் வரையுமே தனக்குப் பாதுகாப்பு என்றும் இல்லையேல் ஊரார் கதை கட்டுவார்கள் என்றும் கூறி விவாகத்தை மறுத்தாள். அப்படியானால் நாம் காசிலிங்க சர்மாவை கொலை செய்து அவர் இறந்த பின்னர் மணந்து கொள்வோம் என்று ஆலோசனையை வேலுப்பிள்ளை கூறினான். இதற்கு கோகிலாம்பாள் உடன்பட்டாள். ஆகவே காசிலிங்க சர்மாவை கொலை செய்ய திட்டம் போடப்பட்டது. இதற்கிடையில் காசிலிங்க சர்மாவின் தகப்பன் காரைநகரில் இருந்து ஒரு கடிதத்தை அனுப்பி தனது மகனையும் கோகிலாம்பாளையும் குழந்தைகளையும் வருமாறு கேட்டார். இக்கடிதம் கோகிலாம்பாளுக்கு கிடைத்தது. இதன்படி நடந்து கொண்டால் தாங்கள் காரைநகர் சென்று திரும்புவது நிச்சயமில்லை என உணர்ந்த கோகிலாம்பாள் வேலுப்பிள்ளையுடன் கலந்து ஆலோசித்து 1962ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இரவு காசிலிங்க சர்மாவை கொல்ல திட்டம் தீட்டினர்.

14 ஆம் திகதி காசிலிங்க சர்மா வழக்கம்போல் தனது படுக்கை அறையில் படுத்திருந்தார். கோகிலாம்பாளும் படுத்திருந்தாள். வேலுப்பிள்ளை ஏற்கனவே காசிலிங்க சர்மாவுக்கு மதுவை ஊட்டி வெறியாக்கியிருந்தான். வெறியில் சர்மா உறங்கும்போது வேலுப்பிள்ளை சர்மாவின் வீட்டிற்கு வந்து கதவை தட்ட கோகிலாம்பாள் திட்டப்படி கதவை திறந்தாள். வேலுப்பிள்ளை தனது கையில் இருந்த கொடுவாக் கத்தியால் சர்மாவை ஒரே வெட்டாக வெட்டினான். ‘ஐயோ’ என்ற சத்தம் மட்டுமே கேட்டது. சர்மாவின் தொண்டைக் குழியிலிருந்து இரத்தம் பீய்ச்சி அடித்து நிலத்தையும் மற்றும் பொருட்களையும் அசுத்தப்படுத்தியது. சர்மா கொலையுண்டார். கொலையாளிகள் திட்டமிட்டபடி சர்மாவின் உடலை சாக்குக்குள் போட்டுக் கட்டியதுடன் இரத்தம் தோய்ந்த உடுப்புக்களையும் ஒரு சாக்குக்குள் போட்டு கட்டிக் கொண்டு இன்னுமொரு கூலியாளான பசுபதியின் உதவியுடன் சர்மாவின் தோட்டத்தில் புதைத்தனர். மறுநாள் காலையில் எல்லாம் வழமைபோல் நடந்தது. சர்மாவை காணவில்லை. குழந்தைகளுக்கு தகப்பனார் காரைநகர் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. கிரிமினல் குற்றவாளிகள் எப்போதும் தாம் போடும் திட்டத்தை மற்றவர்கள் அறியக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு சில முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். மற்றவர்களது அவதானத்தை திசை திருப்ப முயற்சிப்பது வழக்கம். இங்கும் கோகிலாம்பாள் இதனையே செய்தாள். கோகிலாம்பாள் ஒரு கடிதத்தை எழுதி தனது மாமனாருக்கு தபாலில் போட்டாள். தனது கணவன் காரைநகருக்கு போவதாக கூறி இரவு 10 மணி பஸ்ஸில் சென்றதாகவும் அவர் திரும்பும் வரை தானும் குழந்தைகளும் காத்திருப்பதாகவும் எழுதியிருந்தாள். இக்கடிதம் கிடைத்ததும் காசிலிங்க சர்மாவின் தந்தை சந்தேகப்பட்டதுடன் உடனடியாக தனது மருமகனை உருத்திரபுரம் அனுப்பி காசிலிங்க சர்மாவை தேடும்படி கேட்டுக் கொண்டார். அவர் தேடியபோதும் சர்மா அகப்படவில்லை. அத்துடன் கோகிலாம்பாளும் காரைநகருக்கு வந்து தனது கணவன் எங்கே என்று விசாரித்தாள். இதனால் காசிலிங்க சர்மாவின் தகப்பன் சந்தேகப்பட்டார். அத்துடன் இன்னும் சில தினங்களில் வேலுப்பிள்ளையும் அங்கு வந்து தான் சர்மா ஐயா அவர்களை பார்க்க வந்ததாக கூறினான்.

இவற்றில் சந்தேகம் கொண்ட காசிலிங்க சர்மாவின் தகப்பன் பொலிஸாருக்கு அறிவித்து வேலுப்பிள்ளையை கைது செய்யச் செய்தார். கோகிலாம்பாளை உருத்திரபுரம் அனுப்பினர். தனது மகனுக்கு ஏதோ நடந்து விட்டது என உணர்ந்த காசிலிங்க சர்மாவின் தகப்பன் தான் வணங்கும் தெய்வ ஆலயத்தில் பழிகிடந்தார். தனது மகனை காட்டித் தர வேண்டுமென்பதே அவரது கோரிக்கையாக இருந்தது. அப்போது கனவில் ஒருவர் வந்து அவரது கையை பிடித்து உருத்திரபுரம் செல்லுமாறு கேட்டதாகவும் தான் அதனை தொடர்ந்து உருத்திரபுரம் வந்து தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது இன்னுமொரு நாள் கனவில் தனது தோளை ஒருவர் தொட்டு காசிலிங்க சர்மாவின் தோட்டத்தில் ஒரு இடத்தைக் காட்டி அதனை தொட்டதாகவும் தகப்பன் வழக்கில் கூறினார். அவர் கண்டது உண்மையோ இல்லையோ நாம் அறிய மாட்டோம். ஆனால் அவரின் வேண்டுகோளின்படி சர்மாவின் தோட்டத்தை தோண்டியபோது அங்கே அவரது மகனின் உடல் புதைக்கப்பட்டு அதற்கு மேல் மண்போடப்பட்டு அதற்கு மேல் மாட்டுச் சாணி கும்பல் இருந்ததை எல்லோரும் கண்டனர். ஆகவே அவரது கனவு நனவாகவே இருந்தது. சர்மா கொலை செய்யப்பட்டு விட்டார். இதற்கு காரணம் கோகிலாம்பாளும் வேலுப்பிள்ளையுமே என்று கண்ட பொலிஸார் தமது புலன் விசாரணையை ஆரம்பித்தனர். வேலுப்பிள்ளை பொலிஸாரின் புலன் விசாரணைக்கு முன்னர் ஈடுகொடுக்க முடியவில்லை. சர்மாவை கொலை செய்த கத்தியை புதைத்து வைத்த இடத்தை காட்டினான். இது சாட்சியமாக சமர்ப்பிக்கப்பட்டது. கோகிலாம்பாளும் கைது செய்யப்பட்டாள். தனக்கும் கணவனுக்குமிடையில் பகமை இருந்ததாகவும் தான் கொலைக்கு உடந்தையாக இருந்ததை ஒப்புக் கொண்டாள். பசுபதி என்பவனும் இதில் சம்பந்தப்பட்டிருந்ததால் அவனும் கைது செய்யப்பட்டான். பின்னர் மூவருக்கும் எதிராக விசாரணை நடந்தது. வேலுப்பிள்ளைக்கும் கோகிலாம்பாளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பசுபதி விடுதலை செய்யப்பட்டார்.

இக்கொலையில் இருந்து நாம் படிக்க வேண்டிய படிப்பினையானது, என்னவெனில் பாலியல் பதுமையானது, புனிதமானது, உச்ச இன்பத்தை தருவது. அதனால் எமது முன்னோர் அதனை ஒருவனும் ஒருத்தியுமே அனுபவிக்க வேண்டும் என்ற கலாசாரத்தை உண்டாக்கினர். ஆனால் காலம் செல்ல செல்ல இந்த கலாசாரம் பல்வேறு காரணங்களால் மாற்றமடைந்து உடல் இன்பத்தை எப்படியும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. இதனால் பல கொலைகள், திருமணக் குலைவு, தற்கொலைகள் என்பன நிகழ்கின்ற நிலைக்கு பாலியல் மாறி விட்டது. இன்றைய நிலையில் இதனை தவிர்க்க முடியுமா என்பது சந்தேகமே.

http://teavadai.wordpress.com/

Link to comment
Share on other sites

கோகிலாம்பாள் கொலை வழக்கு என்று முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். நான் நினைத்தேன் கோகிலாம்பாலைத்தான் யாரோ போட்டுத்தள்ளிவிட்டாங்கள் என்று.ஆனால் இப்பொழுதுதான் முழு விபரமும் அறிந்தேன். நன்றி.

ஆமா கடையிசில் கொலையாளிகளை தூக்கிலேற்றினார்களா இல்லையா?

Link to comment
Share on other sites

ஆமா கடையிசில் கொலையாளிகளை தூக்கிலேற்றினார்களா இல்லையா?

கோகிலாம்பாள் பல வருடங்களின் பின்னர் விடுதலையாகி இருக்கவேண்டும்

ஏனெனில் சிலவரடங்களுக்குமுன்னர் கோகிலாம்பாளின் முதிர்ந்த தோற்றத்துடனான

போட்டோ ஒன்றை ஒரு பத்திரிகையில் பார்த்த ஞாபகம்

Link to comment
Share on other sites

யோவ் கு.சா கோகிலாம்பாளை இன்னமும் மறக்கேல்லையா?? நாசமாபோக :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் உந்தப் பெரிசுகள் ஜி ஜி பொன்னம்பலத்தின் திறமையை அளிக்கிறம் என்று அளக்க நானும் உந்தம்மாவை யாரோ போட்டு தள்ளிட்டாங்க போல.. என்று தான் நினைச்சுக் கொண்டிருந்தன்.

இது என்னடான்னா.. ரெம்ப கொடுமையா இருக்குது. அந்தக் காலத்திலையும் அதுவும் ஊர் வழிய பெண்கள் சொந்தக் கணவன்மாரை ஏமாத்தி கேடு கெட்ட குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க.. என்று நினைக்கும் போது என்ன சீரழிஞ்ச சமுதாயமா உது இருந்திருக்கு என்றதை எண்ணிப் பார்க்க முடியுது.

இதையெல்லாம் விடுதலைப்புலிகள் மாத்திப் போட்டினம் என்று தான் ஆனந்த சங்கரி போன்ற உந்தப் பெரிசுகள்.. தங்கட பின்னைய வாரிசுகளான டக்கிளஸ் கருணா என்ற குத்தியன்களோட இணைஞ்சு புலம்பித் திரிஞ்சிருக்குதுகள்.

மீண்டும் இந்தச் சீரழிவுகள் ஊரை நோக்கி வரத்தொடங்கிட்டுப் போல.

பிஸ்ரலுக்கு உள்ள மதிப்பு மரியாதையை வார்த்தைகளுக்கு கொடுக்க மாட்டுது போல எங்கட சனம்..!

இந்த கோகிலாக்களை ஆமிக்காரனும் ஒன்றும் செய்யமாட்டான். ஆனால் இந்தக் கோகிலாக்களை எல்லாம் அங்கையற்கன்னிகளாக ஆக்கியவர் தேசிய தலைவர் என்றேக்க.. அவர் உண்மையில் சிறந்த தலைவர் தான்..!

மீண்டும் கோகிலாம்பாக்கள்.. உருவாகலாம் என்று நினைச்சீங்க.. பிஸ்ரல்களும்.. மின்கம்பங்களும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்தக் கோகிலாக்களை எல்லாம் அங்கையற்கன்னிகளாக ஆக்கியவர் தேசிய தலைவர் என்றேக்க.. அவர் உண்மையில் சிறந்த தலைவர் தான்..!

:):(

மீண்டும் கோகிலாம்பாக்கள்.. உருவாகலாம் என்று நினைச்சீங்க.. பிஸ்ரல்களும்.. மின்கம்பங்களும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை..!

கன காலம் ஊர்ப்பக்கம் தலை காட்டவில்லைப் போலிருக்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:):(

கன காலம் ஊர்ப்பக்கம் தலை காட்டவில்லைப் போலிருக்கே!

என்ன முழிக்கிறீங்க.. கோகிலாம்பாக்கள் வாழ்ந்த ஊர்களில் இருந்து பெண்களை அங்கையற்கன்னிகள் போன்ற ஒழுக்கமும் கட்டுக்கோப்பும் இலட்சியப் பற்றுமுள்ள கரும்புலிகளாக உருவாக்கியவர் தலைவர் என்று சொல்ல வந்தம்.

சிங்களப் படைகளால் சொந்த தேசம் ஆக்கிரமிக்கப்பட்டதில் இருந்து அங்கு போவதில்லை. சிங்களப் படைகள் வெளியேறினால் தான் போறது. அதுவரை சிங்கள தேசத்தை நாம் ஆக்கிரமிச்சு நிக்கனும்..! :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் படைகளால் சொந்த தேசம் ஆக்கிரமிக்கப்பட்டதில் இருந்து அங்கு போவதில்லை. சிங்களப் படைகள் வெளியேறினால் தான் போறது. அதுவரை சிங்கள தேசத்தை நாம் ஆக்கிரமிச்சு நிக்கனும்..! :D :D

:(:D:) சொன்னாலும் சொன்னீர்கள் இலட்சத்தில் ஒரு வார்த்தை! நீங்கள் சிங்கள தேசத்தை ஆக்கிரமித்து நில்லுங்கள், நாங்கள் புலம்பெயர் தேசங்களை ஆக்கிரமித்து நிற்போம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோகிலாம்பாள் சிறையிலிருந்து வந்ததும் போக இடம் இல்லாமல் அலைந்ததாகவும் பின் அவரது மாமனாரே[கணவனின் தந்தையே]பரிதாபப்பட்டு அவவை கூட்டிக் கொண்டு போய் பராமரித்ததாக பெரியவர் ஓராள் சொன்னார் ஆனால் உண்மை பொய் தெரியாது.

நான் இவ்வளவு நாளும் உந்தப் பெரிசுகள் ஜி ஜி பொன்னம்பலத்தின் திறமையை அளிக்கிறம் என்று அளக்க நானும் உந்தம்மாவை யாரோ போட்டு தள்ளிட்டாங்க போல.. என்று தான் நினைச்சுக் கொண்டிருந்தன்.

இது என்னடான்னா.. ரெம்ப கொடுமையா இருக்குது. அந்தக் காலத்திலையும் அதுவும் ஊர் வழிய பெண்கள் சொந்தக் கணவன்மாரை ஏமாத்தி கேடு கெட்ட குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க.. என்று நினைக்கும் போது என்ன சீரழிஞ்ச சமுதாயமா உது இருந்திருக்கு என்றதை எண்ணிப் பார்க்க முடியுது.

இதையெல்லாம் விடுதலைப்புலிகள் மாத்திப் போட்டினம் என்று தான் ஆனந்த சங்கரி போன்ற உந்தப் பெரிசுகள்.. தங்கட பின்னைய வாரிசுகளான டக்கிளஸ் கருணா என்ற குத்தியன்களோட இணைஞ்சு புலம்பித் திரிஞ்சிருக்குதுகள்.

மீண்டும் இந்தச் சீரழிவுகள் ஊரை நோக்கி வரத்தொடங்கிட்டுப் போல.

பிஸ்ரலுக்கு உள்ள மதிப்பு மரியாதையை வார்த்தைகளுக்கு கொடுக்க மாட்டுது போல எங்கட சனம்..!

இந்த கோகிலாக்களை ஆமிக்காரனும் ஒன்றும் செய்யமாட்டான். ஆனால் இந்தக் கோகிலாக்களை எல்லாம் அங்கையற்கன்னிகளாக ஆக்கியவர் தேசிய தலைவர் என்றேக்க.. அவர் உண்மையில் சிறந்த தலைவர் தான்..!

மீண்டும் கோகிலாம்பாக்கள்.. உருவாகலாம் என்று நினைச்சீங்க.. பிஸ்ரல்களும்.. மின்கம்பங்களும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை..!

கோகிலாம்பாள் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொள்ளவில்லை[தமிழ்நாட்டு நண்பர்கள் மன்னிக்கவும்]அதற்காக ஈழப் பெண்கள் தப்பு செய்யவில்லை என சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:(:D:) சொன்னாலும் சொன்னீர்கள் இலட்சத்தில் ஒரு வார்த்தை! நீங்கள் சிங்கள தேசத்தை ஆக்கிரமித்து நில்லுங்கள், நாங்கள் புலம்பெயர் தேசங்களை ஆக்கிரமித்து நிற்போம் :)

எமது தேசத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களத்தின் தேசத்தை நாம் ஆக்கிரமித்து நிற்பதில் தவறில்லை. எமக்கு எந்த தொடர்பும் அற்ற வெளிநாடுகளை நாம் ஆக்கிரமித்து நிற்பது அர்த்தமற்றது. எமது சுயநலத்திற்காக மற்றவர்களின் தேசத்தை ஆக்கிரமித்து அவர்களின் நலன்களை சுதந்திர வாழ்வை பறிப்பதையே வெளிநாடுகளில் நம்மவர்களும் பிற ஆசியர்களும் செய்து வருகின்றனர்.

லண்டனில் சில இடங்களில் இருந்து பிரித்தானிய வெள்ளையர்கள் முற்றாக விரட்டி அடிக்கப்பட்டிருக்கும் அவல நிலையை காண முடிகிறது. குறிப்பாக வயதானவர்கள் எம்மவர்களின் இளைஞர் குழுக்களின் தொந்தரவுகள் காரணமாக பலத்த வெறுப்படைந்து வெளியேறி வருகின்றனர். அதுமட்டுமன்றி எம்மவர்கள் நாடுகளின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக இன்னும் வாழக் கற்றுக் கொள்ளவில்லை. வெள்ளையர்கள் எம்மை காலணித்துவ காலத்தில் ஆக்கிரமித்து நின்ற போதும்.. அவர்கள்.. திட்டமிட்ட வெள்ளைக் குடியேற்றங்களை செய்யவில்லை. மொழி திணிப்பை செய்திருந்தாலும்.. சுதேசிய கொள்கைகளை முற்றாக மறுதளிக்கவில்லை.

சுதேசியம் பற்றி பேசி வெள்ளையர்களை வெளியேற்றியவர்கள் இன்று எமது தமிழீழ சுதேசியத்தை சிதைக்க நிற்பது தான் இன்றைய வேடிக்கை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் கு.சா கோகிலாம்பாளை இன்னமும் மறக்கேல்லையா?? நாசமாபோக :):(

என்னெண்டு அண்ணை மறக்கேலும்? :D

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் எண்டு சொல்லிச்சொல்லி இஞ்சையிருக்கிறவங்கள் வேறை கழுத்தறுக்கிறாங்கள் :):D

Link to comment
Share on other sites

கோகிலாம்பாள் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொள்ளவில்லை[தமிழ்நாட்டு நண்பர்கள் மன்னிக்கவும்]அதற்காக ஈழப் பெண்கள் தப்பு செய்யவில்லை என சொல்லவில்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79614

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள் கு.சா.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அந்தக் காலம்தான் ஈழநாடு பத்திரிகையின் பொற்காலம்! அதிகாலை 5 மணிக்கே தேத்தண்ணீர்க் கடைகளில் கூட்டம் கூட்டமாக இருந்து வாசித்துக்கொண்டிருப்பார்கள். எங்கும், எந்நேரமும் இதே பேச்சுத்தான்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழாளன் நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை வடிவாய் வாசித்துப் போட்டு இணைக்கவும்...நான் சொன்னேனா ஈழத்துப் பெண்கள் தப்பே செய்யவில்லை என?...இது கோகிலாம்பாள் பற்றிய விவாதம் அதில் நெடுக்ஸ் எழுதிய கருத்துக்கு நான் பதில் கருத்து எழுதி இருக்கிறேனே தவிர ஈழப் பெண்கள் எல்லோரும் கற்பானவர்கள் இந்தியப் பெண்கள் எல்லோரும் கெட்டவர்கள் என நான் சொல்ல வரவில்லை.

Link to comment
Share on other sites

செந்தமிழாளன் நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை வடிவாய் வாசித்துப் போட்டு இணைக்கவும்...நான் சொன்னேனா ஈழத்துப் பெண்கள் தப்பே செய்யவில்லை என?...இது கோகிலாம்பாள் பற்றிய விவாதம் அதில் நெடுக்ஸ் எழுதிய கருத்துக்கு நான் பதில் கருத்து எழுதி இருக்கிறேனே தவிர ஈழப் பெண்கள் எல்லோரும் கற்பானவர்கள் இந்தியப் பெண்கள் எல்லோரும் கெட்டவர்கள் என நான் சொல்ல வரவில்லை.

தங்களது பதிலின் அர்த்தம் அவ்வாறாகத்தான் பலரால் நோக்கப்படும். மற்றும் தங்களது பதிலினை வாசித்த தமிழக நண்பர்களும் அவ்வாறே நோக்கி மனம் வருந்துவர் என நினைக்கின்றேன். எவ்வாறாயினும் தாங்கள் அவ்வாறான அர்த்தத்தில் எழுதாவிடின் மகிழ்ச்சியேஃ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.