Jump to content

ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்


Recommended Posts

சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும்

அவள் அணிந்த ஆடைகளையும்

அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள்

படம்காட்டி செய்தியாய் செவ்வியாய்

செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்…..

இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி

76பேருடன் உடலுறவு கொண்டாளாம்…..

அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி…..

ஆளாளுக்கு விளக்கங்கள்

அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான்.

மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம்

அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும்

பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட

விட்டு வைக்காத இனம் நாங்கள்.

நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான்.

விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க

சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி

ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்

கொடுமைக்கு யாரிங்கு குரல் கொடுப்பர்……?

கெளரவம் கவரிமான் சாதியாய்

தன்னையே பெருமைகொள் தமிழினம்

உயர்ந்த பண்பிலும் வரலாற்றிலும்

வனையப்பட்ட சித்திரமென்ற கதைகளை

இனியாவது நிறுத்திக் கொள்வோம் தமிழர்களே…!

எங்கள் வீட்டின் மகளை இப்படியா ஏலம் விடுவோம்…?

மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்…..!

இதுவா மனிதப் பண்பு…?

இதுவா சீர்திருத்தம்…..?

இதுவா தமிழினப் பெருமை….?

ஒன்று முடிய ஒன்றாய் தமிழச்சிகள்

தமிழர்களால் விற்கப்படும் வியாபாரம்

இன்றோடு நிறுத்துவோமா…..?

31.12.10

(28.12.10 அன்று இணையங்களில் வெளிவந்த செய்தியின் தலைப்பிது:-17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்! இச்செய்தியின் நாயகி ஒரு 17வயதுச் சிறுமி. அவளை ஆளுக்காள் அவரவர் திறமைக்கேற்ப விமர்சனங்களால் வியாபாரம் செய்கின்றனர். இசைப்பிரியாவின் நிர்வாண உடலைக் காட்டி ஊடகவிபச்சாரம் செய்த ஊடகர்களும் ஊடகங்களும் இன்று இந்தப் 17வயதுச் சிறுமியைத் தண்டிப்பதாய் நினைத்து ஒவ்வொரு தமிழ்ச்சிறுமியையும் தண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் பரபரக்க பலியிடப்படும் உயிர்கள் வரிசையில் இன்று பேசப்படும் சிறுமிக்கு அவள் போல ஆயிரமாயிரமாய் காயங்களுடன் வாழும் பெண்களை அவமதிக்கும் ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்)

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி.

எங்களில் இருக்கும் மனவக்கிரகங்களே இவற்றை முதன்மைபடுத்தி வியாபாரமாக்குவது.

முதலிலும் ஒரு பதிவு இட்டேன் சிங்களவன் உடலை நிர்வாணமாக்கி கொண்டான் ஆனால் தமிழன் அந்த நிர்வாணத்தை வியாபாரமாக்கினான் என்று.அதற்கு ஒருவர் பின்னோட்டமும் விட்டிருந்தார் போர்க்குற்றத்திற்கு முக்கியமான ஆதாரம் அதைவிடக்கூடாது என்று.

அடுத்ததற்கும் யாழ்களத்தை சாடியே எனது கருத்தை வைத்தேன்.அறிவுக்கொழுந்துகளின் கருத்துகள் புல்லரிக்குதென. அதற்கும் ஒருத்தர் பின்னோட்டம் விட்டார் உங்களுக்கு பிடிக்காவிடில் எழுதாமல் விடுங்கோவன் அண்ணை என்று.

அனேகமான எம்.ஜீ.ஆர் படங்களில் பாலியல் வல்லுறவு காட்சியிருக்கும்.அவருக்கு தெரியும் தனது ரசிகர்கள் எப்படிபட்டவர்களென்று.அதை தான் தடுப்பது போல் நடித்தாலும் உண்மை நோக்கம் அந்தக் காட்சியை படத்தில் கொண்டுவந்து உணர்சியை தூண்டும் மூன்றாம் தர வக்கிரமே நோக்கமே.

இவைகளும் அவைகளேதான்.நாம் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம்.

Link to comment
Share on other sites

.

மற்றவர் துன்பத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதற்கு ஆங்கிலத்தில் ஓர் பதம் உண்டு

put yourself in my shoes.

Link to comment
Share on other sites

உடனுக்குடன் பதில் கருத்து எழுத விருப்பமில்லாவிடினும் தமிழனின் துன்பத்தை உணராதவன் யார்?

புரிந்துகொள்வதில் தான் வேறுபாடு?.

இதை அறிய, பொய் சொல்லும் இயந்திரத்தை நாடுவதுபோல் உண்மையாக எழுதுபவனையும் கண்டுபிடித்தால் நல்லது.

உணர்சிவசப்பட்டு அள்ளுப்படுவதில்,இன்னமும் ஒன்றிற்குமே லாயக்கில்லாதவர்களை நம்பிக்கொண்டிருப்பதில் காலம் கழித்து ஆகப்போவது ஒன்றுமில்லை.

சகலதிலும் இருந்து வெளிவந்து புதிதாய் உலகம் படைத்தால் ஒழிய எமக்கு விடிவு இல்லை.

Link to comment
Share on other sites

அந்த topic log பண்ணபட்டு விட்டது அக்கா

நன்றி உங்கள் கவிதைக்கு ....

மோகன் அண்ணாவிற்கும்... nanri log panninathukku.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையா? இது நடக்ககூடியவிடயமா?ஒரு பாடசாலை மாணவியிடம் காதலை வெளிப்படுத்த சகமாணவுக்கு பல வருடங்கள் எடுக்கும் இந்த இலட்சணத்தில் 3 வருடத்தில் 76 பேருடன் உடலுறவு என்பது எப்படி சாத்தியம் .....அவள் விளம்பரம் செய்து வியாபாரம் செய்திருந்தால் சாத்தியம் அப்படி செய்பவர்களை மாணவி என்று அழைப்பது இல்லை.இவர்களுக்காக கருத்து போர் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை.அவளுக்கு எப்படியான விளைவுகள் நடக்கும் என்று தெரிந்தும் அவள் இதை செய்திருக்கிறாள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா இந்த விடயங்களில் எவருடனாவது வீண் விவாதங்களில் ஈடுபட்டு தனது நேரத்தை வீணடிப்பதை என்னால் ஆதரிக்கமுடியவில்லை. மன்னிக்கவும். :)

Link to comment
Share on other sites

இசைப்பிரியாவுக்காக கவிதை எழுதும்போது கவிதைக்குத் தான் பெருமை. தமிழின மானத்தினையே காவு கொள்ளும் இந்த கேவலமான பிறப்புக்களுக்காக கவிதை எழுதி கவிதையையே தலைகுனிய வைத்துவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

நாம் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம்.

நாங்கள் கன தூரத்தில நிக்கிறம் நீங்கள் போக இன்னும் கன தூரமெண்றியள்.

பல இடங்களில் உங்கள் கருத்துக்களுக்கு பதில் எழுத முடியாதபடி பதிவிடுறீங்கள். அதுபோலத்தான் இப்பக்கத்தில் உங்கள் கருத்தும். பதில் எழுத முடியவில்லை.

Link to comment
Share on other sites

சாந்தியக்கா இந்த விடயங்களில் எவருடனாவது வீண் விவாதங்களில் ஈடுபட்டு தனது நேரத்தை வீணடிப்பதை என்னால் ஆதரிக்கமுடியவில்லை. மன்னிக்கவும். :)

மன்னிக்கவும் விசுகு.

ஒருத்தியை படம்போட்டுக் காட்டி அவள் சார்ந்த உறவுகள் ஒவ்வொருவரையும் தினம் தினம் சாக வைத்தது நமது ஊடகங்கள். அவளோடு அவளது சந்ததியும் அழியவில்லை அவளைச் சூழ்ந்த உறவுகளும் அழியவில்லை. அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

அதுபோல இன்னொருத்தியை பாலியல் தொழிலாளியெனக் கொல்கிறோம். உண்மையில் சரியாக இச்செய்தியை கையாண்டதாய் செய்தியை வெளியிட்டோர்களை சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம் ? இவ்விடயத்தில் உடன்பட முடியவில்லை விசுகு. ஆனாலும் விவாதிக்கவும் விருப்பமில்லை.

இசைப்பிரியாவுக்காக கவிதை எழுதும்போது கவிதைக்குத் தான் பெருமை. தமிழின மானத்தினையே காவு கொள்ளும் இந்த கேவலமான பிறப்புக்களுக்காக கவிதை எழுதி கவிதையையே தலைகுனிய வைத்துவிடாதீர்கள்.

மிக மிகக் கொடுமையான வரலாறுகளையும் கொடுமையானவர்களையும் கவிதைகளும் கதைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்குத்தான் கவிதை இவருக்குத்தான் இதனால் பெருமையென்று எங்கேயும் இலக்கிய உலகம் வகைபிரித்து வைக்கவில்லை.

Link to comment
Share on other sites

உண்மையாக சொல்வதானால் இசைப்பிரியாவைவிட மற்ற அந்தபெண்ணில் தான் நான் கூட அனுதாபம் கொண்டேன்.

கமலின் "மகாநதி" படத்தை முடிந்தால் ஒருமுறை பாருங்கள் உங்களுக்கு பதில் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.