Jump to content

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம்.


Recommended Posts

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம்.

அழகிய கனவுகளாலும்

ஆயிரமாயிரம் கற்பனைகாளாலும்

செதுக்கப்பட்டு சிற்பமானது அவனது வாழ்வு.

பாலன் பிறக்க முன்னொரு பொழுதிருந்த

24.12.10 அதிகாலை 5மணியோடு

அவனது வாழ்வு முடிந்து போயிற்று.

காரணம் அறியப்படாது

அவனது கனவுகளை அழித்துக் கொண்டு

காற்றாய் ஓடிய புகையிரதப் பாதையில்

தலைசிதறிக் கதை முடிந்து

30வயதோடு தன்னை முடித்துக் கொண்டான்.

உறைபனிக்குளிரில் அந்த விடிகாலையில் அவனது

கதை முற்றுப் பெற்றது.

தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துத்

தன்னையழித்தானாம்….!

விறுவிறென்று செய்தி வீச்சாய் பரவி…..

கதைகள் பலவாய் அவன் கூடக் கடைசிவரையும்

பியரடித்து நத்தார் தினம் கொண்டாடிய

நண்பர்கள் மூலமாய் அவன் செத்துப்போன கதை

செவிகளில் எட்டியது.

ஏன்…? எதற்கு….? எப்படி….?

கேள்விகளால் அவன் மரணம் துளையிடப்பட்டுக்

காரணம் அறியப்படாமல் வினாக்குறிகள் நீண்டு

அவனது விதிபற்றிய இரங்கல்களும்

நினைவு மீட்டல்களும்

புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது……

கோளையென்கின்றனர் சிலர் அவனைக்

குடிகாரனென்கின்றனர் சிலர்,

நல்ல வேலையில்லையென்றும் சிலர்

காதல் தோல்வியென்கின்றனர் இன்னும் சிலர்

அர்த்தம் புரியாமல் நிகழ்ந்த அவனது சாவுபற்றி

அந்தரிக்கும் அவன் உறவுகளின் துயர் நடுவில்

நின்று சிலர் இப்படியும் ஈனமாய் சொல்கின்றனர்…..

‘‘எனக்கு எண்ணாயிரம் யூரோ எனக்குப் பதினைந்தாயிரம் யூரோ‘‘

கடன்கொடுத்தோமென்று கதைவிடுவோர்

எதுவுமில்லா ஒருவனிடம் ஆயிரமாய் கொடுத்தோமென்றது

கதையல்ல நிசம்.

அவனது இறுதிப் பயணம் கூட

இயல்பாயில்லாமல் அங்கும் காசுதான் நின்றது.

நண்பனேயென்று கூடி பியரடித்தவரும்

கும்மாளமடித்தவரும் எங்கென்று தெரியாமல்

எங்கே போயினர்…..?

வாழ்ந்தவரை வந்தோரெல்லாம் சாவின் பின்

தள்ளிப்போய்….. இதுவாம் நட்பு…..!!!

பிறந்தவனை இறுதிப் பயணம் அனுப்பி வைக்க

கூடப்பிறந்தவர்களுக்குக் கூடக் கைகொடுக்க ஆளின்றிக்

அட்டைகளாய்க் கழன்றது நட்பெல்லாம்…..

ஆட்களிருந்தும் அனாதையாய் போனவன் பற்றி

அவனது அக்காக்களின் கண்ணீரில்

கடைசி வரை நட்பும் கடைசியிலும் உதவாத நட்பும்

வெளிறிக் கொண்டிருக்க – அவன்

என்றென்றும் போலக் கள்ளமற்ற சிரிப்போடு

படமாய்த் தொங்குகிறான்.

குழந்தையாய் அவன் உலவியது முதல்

அவனும் நாங்களும் எங்கள் வைரவர் ஆல்விழுதில்

ஊஞ்சலாடி அடிபட்டுக் கோபம் போட்டு

மண்வீடு கட்டி மண்சோறு காய்ச்சிய பிள்ளைப்பருவம்

நினைவுகளாய் மறக்க முடியாது

மனசோடு அவன் ஞாபகங்கள்

மழையாய்ப் பெய்கிறது.

போய்வா என்றவன் சாவைப் போக்காட்ட முடியாமல்

வாழ்கிறான் எங்கள் ஞாபகத்தில்……

இனிவருவாயென்றும் எம்முடன் வாழ்வாயென்றும்

எழுத முடியவில்லையடா……!

இனியொரு பிறவி உண்டாயின் பிறப்போம்

நாங்கள் பிறந்து நாங்கள் வாழ்ந்த

சமாதிகோவிலடிச் செம்பாட்டுப் புழுதியில்….

சண்டையிடாமல் கோவம் போடாமல்

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும்

ஞாபகம் கொள்வோம்.

05.01.2010

(24.12.10 அன்று யேர்மனியில் ரயிலில் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு அகாலமரணமடைந்த அயலவன் , ஊரவன் , உறவினன் , எம்மோடு வாழ்ந்து காரணம் அறியாமல் நிகழ்ந்த மரணத்தால் எம்மை விட்டுப்பிரிந்த உறவுக்கு இது சமர்பணம்)

(யாழ்மாவட்டம் வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள செம்பாட்டுமண் கிராமம் குப்பிளான். குப்பிளானின் வடக்கேயமைந்த குறிச்சியின் பெயர் சமாதிகோவிலடி. சரவணைச்சாமியார் என்றொரு சாமியார் சமாதியடைந்தமையால் சமாதிகோவிலடியெனப் பெயர்மாறியதாக அப்பு ஆச்சியின் கதைகள் சொல்கிறது. அந்தச் சரவணைச்சாமியார் சமாதியான பூமியில் பிறந்து அகாலமாய் இறந்து போனவனை இக்கவிதையால் நினைவு கொள்கிறேன்)

Link to comment
Share on other sites

//

அவனது இறுதிப் பயணம் கூட

இயல்பாயில்லாமல் அங்கும் காசுதான் நின்றது.

நண்பனேயென்று கூடி பியரடித்தவரும்

கும்மாளமடித்தவரும் எங்கென்று தெரியாமல்

எங்கே போயினர்…..?

வாழ்ந்தவரை வந்தோரெல்லாம் சாவின் பின்

தள்ளிப்போய்….. இதுவாம் நட்பு…..!!!

//

அருமையான கவிதை அக்கா! ஆமா எனக்கு நெடுநாளா ஒரு சந்தேகம்....முகப்புத்தகத்தில் இருக்கிற சாந்தி அக்கா நீங்கதானே.....?

Link to comment
Share on other sites

அருமையான கவிதை அக்கா! ஆமா எனக்கு நெடுநாளா ஒரு சந்தேகம்....முகப்புத்தகத்தில் இருக்கிற சாந்தி அக்கா நீங்கதானே.....?

கனநாள் சந்தேகமா :lol:மூஞ்சிப்புத்தகத்தில் நானும் இருக்கிறேன். இங்கு பதிவிடும் விடயங்களை மூஞ்சிப்புத்தகத்திலும் பதிவிடுவேன். அந்தப்பதிவுகளை இடும் சாந்தியென்றால் அது நான்தான் நெருப்பு நீலமேகம்:

Link to comment
Share on other sites

அக்கா உங்கள் முல்லைமண் என்ட வலைபூவின் கனநாள் ரசிகன் .. ஆனால் இப்போது தான் தெரியும் அது தாங்கள் வலைபூ என்டு..அக்கா எனது வாழ்த்துக்கள் , உங்கள் பணி மேன் மேலும் தொடர வேண்டும் ,

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

வாழ்க தமிழ்

நன்றி

என்றும் அன்புடன்

விஜயகுமார்

Link to comment
Share on other sites

  • 11 months later...

24.12.10 அன்று யேர்மனியில் ரயிலில் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு அகாலமரணமடைந்த அயலவன் , ஊரவன் , உறவினன் , எம்மோடு வாழ்ந்து காரணம் அறியாமல் நிகழ்ந்த மரணத்தால் எம்மை விட்டுப்பிரிந்தவனின் ஓராண்டு நினைவுநாள் இன்று.

deathnotice01012010.jpg

30வயதில் வாழ்வை முடித்துக் கொண்டு போன உறவே உன்னை ஞாபகம் கொள்கிறோம். உன்னையிழந்து தவிக்கிற உனது குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் வாழ்வு, சாந்தி!

உங்களைப் போலவே, கவிஞர் கண்ணதாசனும் சொல்லி வைத்தார்!

'வீடு வரை உறவு,

வீதி வரை மனைவி,

காடு வரை பிள்ளை,

கடைசி வரை யாரோ?

இதே வெளி நாட்டில்,

மூடி வரை உறவு,

கோடு வரை மனைவி,

காசு வரை பிள்ளை,

காஸ் அடுப்பு வரை யாரோ?

உறவுகளும் மெருகேருகின்றன, போலும் சாந்தி.

சொல்லிக்கொண்டு பச்சை போடுவது மிகவும் குறைவு!!!

Link to comment
Share on other sites

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம்.

அழகிய கனவுகளாலும்

ஆயிரமாயிரம் கற்பனைகாளாலும்

செதுக்கப்பட்டு சிற்பமானது அவனது வாழ்வு.

பாலன் பிறக்க முன்னொரு பொழுதிருந்த

24.12.10 அதிகாலை 5மணியோடு

அவனது வாழ்வு முடிந்து போயிற்று.

காரணம் அறியப்படாது

அவனது கனவுகளை அழித்துக் கொண்டு

காற்றாய் ஓடிய புகையிரதப் பாதையில்

தலைசிதறிக் கதை முடிந்து

30வயதோடு தன்னை முடித்துக் கொண்டான்.

உறைபனிக்குளிரில் அந்த விடிகாலையில் அவனது

கதை முற்றுப் பெற்றது.

தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துத்

தன்னையழித்தானாம்….!

விறுவிறென்று செய்தி வீச்சாய் பரவி…..

கதைகள் பலவாய் அவன் கூடக் கடைசிவரையும்

பியரடித்து நத்தார் தினம் கொண்டாடிய

நண்பர்கள் மூலமாய் அவன் செத்துப்போன கதை

செவிகளில் எட்டியது.

ஏன்…? எதற்கு….? எப்படி….?

கேள்விகளால் அவன் மரணம் துளையிடப்பட்டுக்

காரணம் அறியப்படாமல் வினாக்குறிகள் நீண்டு

அவனது விதிபற்றிய இரங்கல்களும்

நினைவு மீட்டல்களும்

புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது……

கோளையென்கின்றனர் சிலர் அவனைக்

குடிகாரனென்கின்றனர் சிலர்,

நல்ல வேலையில்லையென்றும் சிலர்

காதல் தோல்வியென்கின்றனர் இன்னும் சிலர்

அர்த்தம் புரியாமல் நிகழ்ந்த அவனது சாவுபற்றி

அந்தரிக்கும் அவன் உறவுகளின் துயர் நடுவில்

நின்று சிலர் இப்படியும் ஈனமாய் சொல்கின்றனர்…..

‘‘எனக்கு எண்ணாயிரம் யூரோ எனக்குப் பதினைந்தாயிரம் யூரோ‘‘

கடன்கொடுத்தோமென்று கதைவிடுவோர்

எதுவுமில்லா ஒருவனிடம் ஆயிரமாய் கொடுத்தோமென்றது

கதையல்ல நிசம்.

அவனது இறுதிப் பயணம் கூட

இயல்பாயில்லாமல் அங்கும் காசுதான் நின்றது.

நண்பனேயென்று கூடி பியரடித்தவரும்

கும்மாளமடித்தவரும் எங்கென்று தெரியாமல்

எங்கே போயினர்…..?

வாழ்ந்தவரை வந்தோரெல்லாம் சாவின் பின்

தள்ளிப்போய்….. இதுவாம் நட்பு…..!!!

பிறந்தவனை இறுதிப் பயணம் அனுப்பி வைக்க

கூடப்பிறந்தவர்களுக்குக் கூடக் கைகொடுக்க ஆளின்றிக்

அட்டைகளாய்க் கழன்றது நட்பெல்லாம்…..

ஆட்களிருந்தும் அனாதையாய் போனவன் பற்றி

அவனது அக்காக்களின் கண்ணீரில்

கடைசி வரை நட்பும் கடைசியிலும் உதவாத நட்பும்

வெளிறிக் கொண்டிருக்க – அவன்

என்றென்றும் போலக் கள்ளமற்ற சிரிப்போடு

படமாய்த் தொங்குகிறான்.

குழந்தையாய் அவன் உலவியது முதல்

அவனும் நாங்களும் எங்கள் வைரவர் ஆல்விழுதில்

ஊஞ்சலாடி அடிபட்டுக் கோபம் போட்டு

மண்வீடு கட்டி மண்சோறு காய்ச்சிய பிள்ளைப்பருவம்

நினைவுகளாய் மறக்க முடியாது

மனசோடு அவன் ஞாபகங்கள்

மழையாய்ப் பெய்கிறது.

போய்வா என்றவன் சாவைப் போக்காட்ட முடியாமல்

வாழ்கிறான் எங்கள் ஞாபகத்தில்……

இனிவருவாயென்றும் எம்முடன் வாழ்வாயென்றும்

எழுத முடியவில்லையடா……!

இனியொரு பிறவி உண்டாயின் பிறப்போம்

நாங்கள் பிறந்து நாங்கள் வாழ்ந்த

சமாதிகோவிலடிச் செம்பாட்டுப் புழுதியில்….

சண்டையிடாமல் கோவம் போடாமல்

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும்

ஞாபகம் கொள்வோம்.

05.01.2010

(24.12.10 அன்று யேர்மனியில் ரயிலில் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு அகாலமரணமடைந்த அயலவன் , ஊரவன் , உறவினன் , எம்மோடு வாழ்ந்து காரணம் அறியாமல் நிகழ்ந்த மரணத்தால் எம்மை விட்டுப்பிரிந்த உறவுக்கு இது சமர்பணம்)

(யாழ்மாவட்டம் வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள செம்பாட்டுமண் கிராமம் குப்பிளான். குப்பிளானின் வடக்கேயமைந்த குறிச்சியின் பெயர் சமாதிகோவிலடி. சரவணைச்சாமியார் என்றொரு சாமியார் சமாதியடைந்தமையால் சமாதிகோவிலடியெனப் பெயர்மாறியதாக அப்பு ஆச்சியின் கதைகள் சொல்கிறது. அந்தச் சரவணைச்சாமியார் சமாதியான பூமியில் பிறந்து அகாலமாய் இறந்து போனவனை இக்கவிதையால் நினைவு கொள்கிறேன்)

தூக்கியது உங்கள் கவி

கோடு வரைந்தது என் விழி

நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை

எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே

பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றோர்

பாலகனின் வருகையை

வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!!

எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக

ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!! :( :( :( :( 2 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கியது உங்கள் கவி

கோடு வரைந்தது என் விழி

நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை

எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே

பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றோர்

பாலகனின் வருகையை

வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!!

எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக

ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!! :(

கோமகனா? இல்லைக் கொக்கா?

வாழ்த்துக்கள், கோமகன்!!!>

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.