Jump to content

சிறீலங்காவில் இராணுவப்பயிற்சி � இஸ்ரேலிடம் ஆயுதக்கொள்வனவு: நோக்கம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் இராணுவப்பயிற்சி � இஸ்ரேலிடம் ஆயுதக்கொள்வனவு: நோக்கம் என்ன?

[Thursday, 2011-01-06 06:00:21]

சிறீலங்காவை இராணுவமயப்படுத்தி தென்னிலங்கை சிங்களவர்களுக்கு கட்டாய இராணுவப்பயிற்சி அளிப்பதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவில் உள்ள பல்கலைக்கழங்களுக்கு செல்லும் தென்னிலங்கை மாணவர்களுக்கு மூன்று வாரம் இராணுவப்பயிற்சி அளிக்கப்படும் என சிறீலங்கா கல்வி அமைச்சர் எஸ்.பி திஸ்ஸாநாயக்கா நேற்று (05) தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் முகமாக இது மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளபோதும், தென்னிலங்கை சிங்களவர்களை முற்றுமுழுதாக இராணுவமயப்படுத்தும் நடவடிக்கை இது என தமிழ் இராணுவ பத்தி எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு � கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும் சிங்கள மாணவர்களை பயிற்சி அளித்து அனுப்பவே அரசு விம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான பயிற்சிகள் அந்த பிராந்தியங்களில் உள்ள இராணுவத்தளங்களில் வழங்கப்படும் என திஸ்ஸாநாயக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சா ஒருவார கால பயணமாக இன்று (06) இஸ்ரேல் செல்வதாக பாதுகாப்பு அமைச்சின் உட்த்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்திற்கு தேவையான அதிநவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகவே பாதுகாப்புச் செயலாளர் இஸ்ரேல் செல்வதாக அந்த தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

போர் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கழிந்து, சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், வடக்கு கிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக தொடர்ந்தும் ஆயுதங்களையும் போர் தளப்பாடங்களையும் கொள்வனவு செய்யும் தேவையை புரிந்துக்கொள்ள முடியாதிருப்பதாக இதுகுறித்து கருத்து வெளியிட்ட அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ஆயுதங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை எனவும் ஆயுதங்களை கொள்வனவு செய்யும் உண்மையான நோக்கம் என்ன என்பதை புரிந்துக்கொள்வது சிரமமில்லை எனவும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரு எதிரிகளுடனும் அனுசரித்துப்போகும் முன்னைய நிலைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்த சிறீலங்கா அரசு முயன்று வருவதையே இந்த சம்பவம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

seithy.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.