Jump to content

கிழக்கு வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளது பாடசாலைகள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தம்


Recommended Posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளும் நாளை முதல் 5 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலன்னறுவை பாடசாலைகள் நாளை மூடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களே மூட இருந்த நிலையில் முகாம்கள் பாடசாலைகளில் இயங்குவதனால் 5 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லிவிப் பணிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 7927 குடும்பங்களைச் சேரந்த 31,112 பேர் 103 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுளிலும் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் வீடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளில் கிராம சேவையாளர்களும் பொது அமைப்புகளும் செய்து வருகின்றன.

Flooding%20in%20Batti.jpg

Flooding%20in%20Batti002.jpg

ஈழ நாதம்

Link to comment
Share on other sites

.... தற்போது அம்மன் ஆலயம் ஒன்றுக்கு சென்று வந்தேன், அங்கு கிழக்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரிக்கிறார்கள், லண்டனிலுள்ள சில ஆலயங்கள் மூலம் ஏறக்குறைய 40000 பவுன்ஸுகள், அங்கு அனுப்பப்பட்டுள்ளதாம், இன்னும் சேகரிக்கிறார்கள், தொடர்ந்து அனுப்பவென ...

... ஆனால் அங்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்களுக்கு, சிங்களம் போதிய உதவிகள் ஏதுவும் செய்யவில்லையாம், மாறாக சிறிய மழைக்கே ஒதுங்கிய பொலநறுவையை அண்டிய சிங்கள பிரதேசங்களுக்கு உதவிகள் திருப்பி விடப்பட்டுள்ளனவாம்!

... இங்கு இப்போது அனுப்பப்படுபவைகளும், அங்கு போய் முழுவதுமாக சேருமா???????

Link to comment
Share on other sites

தனிப்பட்ட ரீதியாக செய்யப்படும் உதவி தான் மக்களை சென்றடையும்.அரசிற்கூடாக செய்தால் அமைச்சர்களின் பொக்கட்டுகளுக்குள் தான் போகும்.சுனாமியில் கண்ட உண்மை.

Link to comment
Share on other sites

அடாத மழை; விடாத அனர்த்தம்

98 வருடங்களின் பின் பிரளயம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-14 09:14:24| யாழ்ப்பாணம்]

மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் கடும் மழையினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. வெள்ளத்தினால் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக 2 இலட்சத்து 87 ஆயிரத்து 871 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 36 பேர் காயமடைந்துள்ளனர். மழை வெள்ளம் காரணமாக 2 ஆயிரத்து 680 வீடுகள் முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளதாகவும் 15 ஆயிரத்து 274 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகச் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெள்ளம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 5 இலட்சம் ஏக்கர் நெல் வயல்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கையின் வானிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. "லா நினா" என்னும் காலநிலை அனர்த்தம் உலகம் முழுவதையும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் தரைப் பகுதியை பெரிதும் பாதிக்கும் நிலைமையே "லா நினா" அனர்த்தம் என அழைக்கப்படுகிறது.

இதனால் இலங்கையின் வானிலையில் பாரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மழைவீழ்ச்சி 100 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1912ஆம் ஆண்டின் பின்னர் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு தினங்களில் குறித்த பிரதேசங்களில் 295 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. நாட்டின் நிலவி வரும் மோசமான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும். இதேவேளை இலங்கையின் பல பாகங்களிலும் அசாதாரணமான குளிர்காலநிலை நிலவி வருகிறது. நேற்றைய தினம் மாலை வேளையில் நுவரெலியாப் பிரதேசத்தில் 8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=15028

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நண்பர்களுக்கு

மீண்டும் வடகிழக்கில் மழை யாவருக்கும் தெரிந்ததே மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்வு பாடசாலைகளில் தஞ்சம்

அங்கு வட கிழக்கு மக்களுக்கு அறவிடும் பணத்தை தெரிந்த உறவுகளூக்கும் மட்டும் அனுப்புங்கள் நான் நேரில் பார்த்த காட்சிகளை உங்களூக்கு சொல்ல இயலாது யாராவது உங்களுக்கு தெரிந்த அல்லது சொந்தகாரர்களிடம் அனுப்பி உரியவர்களுக்கு சேரும் படி செய்யவும் நாங்களும் சமைத்த உணவுகளை கொண்டு அதாவது வெள்ளம் இல்லாத பகுதிகளில் உள்ள மக்களீடம் வீட்டுக்கு ஒவ்வொரு பொதிகளாக வாங்கி கொடுத்தோம் ஆனால் இப்போது அதுவும் முடியாமல் உள்ளது ஆகையால் கிடைக்கும் சகல உதவிகளையும் நன்றாக முடிவெடுத்து செய்யவும்

நாங்கள் கொண்டு போன உணவைக்கூட அரசியல் லாபம் ஈட்டுவதற்க்காக[சிலர்] அதை அவர்கள் பெற்று அவர்கள் வழங்குவது போல் போட்டோவும் பிடித்துக்கொண்டார்கள்

மட்டு அம்பாறையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நண்பர்களுக்கு

மீண்டும் வடகிழக்கில் மழை யாவருக்கும் தெரிந்ததே மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்வு பாடசாலைகளில் தஞ்சம்

அங்கு வட கிழக்கு மக்களுக்கு அறவிடும் பணத்தை தெரிந்த உறவுகளூக்கும் மட்டும் அனுப்புங்கள் நான் நேரில் பார்த்த காட்சிகளை உங்களூக்கு சொல்ல இயலாது யாராவது உங்களுக்கு தெரிந்த அல்லது சொந்தகாரர்களிடம் அனுப்பி உரியவர்களுக்கு சேரும் படி செய்யவும் நாங்களும் சமைத்த உணவுகளை கொண்டு அதாவது வெள்ளம் இல்லாத பகுதிகளில் உள்ள மக்களீடம் வீட்டுக்கு ஒவ்வொரு பொதிகளாக வாங்கி கொடுத்தோம் ஆனால் இப்போது அதுவும் முடியாமல் உள்ளது ஆகையால் கிடைக்கும் சகல உதவிகளையும் நன்றாக முடிவெடுத்து செய்யவும்

நாங்கள் கொண்டு போன உணவைக்கூட அரசியல் லாபம் ஈட்டுவதற்க்காக[சிலர்] அதை அவர்கள் பெற்று அவர்கள் வழங்குவது போல் போட்டோவும் பிடித்துக்கொண்டார்கள்

மட்டு அம்பாறையில்

தகவலுக்கு நன்றி முனிவர்!

தமிழனுக்கு துன்பம் வருவதுகூட சிங்களவரின் துன்பத்தைப் போக்கத்தான் போலிருக்கின்றது!! :mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.