Jump to content

எது சரி? எது பிழை? நல்லவனா கெட்டவனா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த நோக்கத்தில் இதை எழுதியிருந்தாலும்

நாங்கள் ஒன்றையும் பார்க்கவில்லை கேட்கவில்லை என்று நானும் மூடிக்கொண்டு இருக்கமுடியும். ஆனால் இதேநிலையை நாமும் சந்திக்கக்கூடும். எனக்கும் வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இதே சூழ்நிலைகள் வரக்கூடும். அந்த வேளைகளில் இந்த வரலாறுகள் இந்த படிப்பினைகள் என்னையும் தங்களையும் ஒரு சிறு முன் யோசனையைத்தரலாம். அதுவே எனது நோக்கம்.

அண்ணா இந்த விடயத்தில் நானும் உங்கள் பக்கம் தான்.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா எழுதும் இந்தத் திரியில் எந்தத் தனிமனித சுதந்திரமும் பறிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கே அவர் எழுதும் நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்கள் யாழில் உறுப்பினராக இல்லாமல் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது என நினைக்கிறேன். அப்படி யாராவது இருந்தால் மனம் புண்பட வாய்ப்பு உள்ளதுதானே..!? :unsure:

Link to comment
Share on other sites

"நானும் சிலவற்றுக்கு பொறுப்பெடுத்தேன்"

அண்ணா நீங்கள் உளவியல் படித்து பட்டம் பெற்றவரா? அல்லது மனநல மருத்துவம் ஏதும் படித்தனீங்களா?

அல்லது தமிழ்பட பண்ணையார் பாணியில் தீர்ப்பு கூறுபவரா? அல்லது எமது இயக்கங்கள் செய்தது போல் கோழி களவெடுத்ததற்கு போஸ்டில கட்டி பொட்டு வைக்க சொல்லி தீர்ப்பு கொடுப்பவரா?

பிரான்சில இன்னமும் இப்படியா சனம் இருக்கு?

அல்லது புலியில் இருந்தபடியால் "மீற் தெ பேறென்ட்ஸ்" இல் ரொபேட் டீ நீரோ விளையாட்டோ?

Link to comment
Share on other sites

"நானும் சிலவற்றுக்கு பொறுப்பெடுத்தேன்"

அண்ணா நீங்கள் உளவியல் படித்து பட்டம் பெற்றவரா? அல்லது மனநல மருத்துவம் ஏதும் படித்தனீங்களா?

அல்லது தமிழ்பட பண்ணையார் பாணியில் தீர்ப்பு கூறுபவரா? அல்லது எமது இயக்கங்கள் செய்தது போல் கோழி களவெடுத்ததற்கு போஸ்டில கட்டி பொட்டு வைக்க சொல்லி தீர்ப்பு கொடுப்பவரா?

பழைய காயம் இன்னும் ஆறவில்லையா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நானும் சிலவற்றுக்கு பொறுப்பெடுத்தேன்"

அண்ணா நீங்கள் உளவியல் படித்து பட்டம் பெற்றவரா? அல்லது மனநல மருத்துவம் ஏதும் படித்தனீங்களா?

அல்லது தமிழ்பட பண்ணையார் பாணியில் தீர்ப்பு கூறுபவரா? அல்லது எமது இயக்கங்கள் செய்தது போல் கோழி களவெடுத்ததற்கு போஸ்டில கட்டி பொட்டு வைக்க சொல்லி தீர்ப்பு கொடுப்பவரா?

பிரான்சில இன்னமும் இப்படியா சனம் இருக்கு?

அல்லது புலியில் இருந்தபடியால் "மீற் தெ பேறென்ட்ஸ்" இல் ரொபேட் டீ நீரோ விளையாட்டோ?

எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை

இதற்கு படித்திருக்கணும் என்ற தங்கள் வாதம் வெறும் ஏட்டுச்சுரக்காய் வாதம்தான்.

எனது வயது காரணமாகவும் இங்கு வந்தவர்களில் பழையவன் என்கின்ற ரீதியிலும் குடும்பத்தில் மூத்தவன் என்ற ரீதியிலும் இது போன்ற சிலவற்றிற்கு நான் முன் நிறுத்தப்பட்டேன்.

உதாரணமாக பல்வைத்தியம் படித்த அந்த பெண் பிள்ளையின் பிரச்சினைக்கு போயிருந்தேன். அந்த பிள்ளையிடம் நான் சொன்னது.

சுய மரியாதையை எப்போ நாம் விட்டுக்கொடுக்க தொடங்குகின்றோமோ அப்போது மற்றவர் குட்டுவது ஆரம்பிக்கிறது. அவரது தாய்க்கு என்ன அதிகாரம்இருக்கோ இந்த பிள்ளைகளைக்கொஞ்ச அதே அளவு உமது பெற்றோருக்கும் உண்டு. எனது அம்மாவை இப்படி எனது மனைவியோ வேறு யாரோ என் பிள்ளையை கொஞ்சுவதை தடுத்தால் நீ தூக்கி கொஞ்சம்மா வருவதை நான் பார்க்கின்றேன் என்றுதான் நான் சொல்வேன். எனவே இதற்காக உனது கணவர் உம்மை அடிப்பார் என்றால் ஒரு அடியை வாங்கு 2வது அடிக்கு என்ன தப்பு செய்தேன் என்று கேள் 3வது அடியை தடு. நிறுத்துங்கள் என்று சொல். இனி அடித்தால் சடடப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சொல். சொல்வதோடு நிறுத்தக்கூடாது 3வது முறையும் அடித்தால் சட்டப்படி என்ன செய்யணுமே செய். அதற்கு பின் ஏதாவது உதவி தேவையென்றால் தொடர்பு கொள். என்ன செய்யப்போகின்றாய் என்பதை நீயே தீர்மானி என்று. இதில் கம்ப தண்டனை எங்கே...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வகுப்பில் பல மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களில் ஒரு சராசரி மாணவன் சிறிது கஞ்சா அடித்து அதனால் வரும் புத்திக்கூர்மையால் ( அப்படித்தான் இங்கு சிலர் சொல்கிறார்கள்) வேறு ஒரு மாணவனுக்கு கிடைக்கவேண்டிய இடத்தையோ வேலையையோ பெற்றுக்கொண்டால்.....?

இது சரியா தப்பா?

இதில் யார்நல்லவன்...?

ஒருவர் 3 கடைகளுக்கு முதலாளி. அவருக்கு ஒரு ஆண் பிள்ளை. பெற்றோருக்கு கட்டுப்பட்டவன். அவனுக்கு வேறு ஒரு நாட்டிலிருந்து வந்த பெண்ணைக்கண்டதும் விருப்பம் ஏற்பட்டது. பின்னர் ஈ மெயில் மூலமாக ஓகேயானது. தகப்பனுடைய ஒன்றுவிட்ட சகோதரியின் மகள் என்பதால் பிரச்சினை வராது என்று கணக்குப்போட்டான்இவன். சொந்தக்காறர் தானே என்று ஓம் பட்டாள்அவள். ஆனால் இது பற்றி தாயுடன் பேசியபோது விதி வேறுவிதமாக விளையாடியது. தாய் எமது சொந்தக்காறிதான் ஆனால் அவாவினுடைய புருசன் வேறு சாதி என்றார் தாய். இதற்கு அப்பா சம்மதிக்கமாட்டார் மறந்துவிடு என்றார். மகன் ஈ மெயில் போட்டான்அப்பா அம்மாவினுடைய விருப்பம் நமக்கு கிடைக்காது எனவே மறந்துவிடு என்னை என்று.

இது யார் தப்பு?

அப்பனா?

மகனா?

அல்லது சாதிமாறி திருமணம்முடித்த அந்த பெண்ணின் அம்மாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமுதாயத்தின் குற்றம்...........சாதி மாறி போனவளை ஆதரிக்காது தள்ளி வைத்தது..........ஆண்டாண்டு காலம் போனாலும் அதை தூக்கி பிடித்து வன்மம் சாதிப்பது, வாழ விடாது இளம் தலைமுறையை தடுப்பது .....முடிவாக் சாதி வேற்றுமை களையப்படவேண்டும் அது நடவாது ரத்தத்தில் ஊறியது. புரட்சி நடைபெற்றால்மட்டும் சாத்தியம். .

.

Link to comment
Share on other sites

இதைப்போய் பொலிசில சொன்னால் உம்மை தூக்கி உள்ளுகபோட்டு விடுவார்கள்.எந்த புண்ணாக்கு உமக்கு சொல்லித்தந்தது முதாலவது அடியை வாங்கு என்று சொல்ல சொல்லி.இன்னொருவர் மீது கை வைப்பதற்கான உரிமையை கொடுத்தது யார்?

இதற்குத்தான் கேட்டேன் உளவியல் படித்தனீரா என்று? பிரான்ஸ் வந்தால் மட்டும் பத்தாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='arjun' timestamp='1295013917' post='633526']

இதைப்போய் பொலிசில சொன்னால் உம்மை தூக்கி உள்ளுகபோட்டு விடுவார்கள்.எந்த புண்ணாக்கு உமக்கு சொல்லித்தந்தது முதாலவது அடியை வாங்கு என்று சொல்ல சொல்லி.இன்னொருவர் மீது கை வைப்பதற்கான உரிமையை கொடுத்தது யார்?

இதற்குத்தான் கேட்டேன் உளவியல் படித்தனீரா என்று? பிரான்ஸ் வந்தால் மட்டும் பத்தாது.

Link to comment
Share on other sites

யாழில் எழுதாமல் விடுவமோ எனபல முறை சிந்திததுண்டு.பின்னர் வாக்குவாதம் வளர்ப்பதல்ல நோக்கம் ஓரளவேனும் நாகரீகமடைந்த இனமாக வரவேண்டுமென்ற எண்ணம் தான் திரும்ப எழுத வைக்கின்றது..நாம் இன்னமும் பிற்போக்கான பல சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் இருந்தால் எதுவித முன்னேற்றமும் கிடைக்காது.அப்பாடியான பலரையே இங்கு பல பொறுப்புக்களிலும் வைத்து விட்டு அவர்கள் முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோனார்கள்.இவர்களை வெல்வதே இப்போது பெரும்பாடாக இருக்கின்றது.அடுத்த தலை முறை ஓரளாவது இந்த மாற்றத்தைகொண்டுவரும் என நம்பலாம்.

இப்போதும் கனேடிய வானொலி ஒன்றை கேட்டுக்கொண்டுதானிருக்கின்றேன் இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.தமிழ்நாட்டிலும் பார்க்க புலம் பெயர்ந்ததமிழர்கள் மிக பிற்போக்கு சிந்தனையுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எழுதாமல் விடுவமோ எனபல முறை சிந்திததுண்டு.பின்னர் வாக்குவாதம் வளர்ப்பதல்ல நோக்கம் ஓரளவேனும் நாகரீகமடைந்த இனமாக வரவேண்டுமென்ற எண்ணம் தான் திரும்ப எழுத வைக்கின்றது..நாம் இன்னமும் பிற்போக்கான பல சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் இருந்தால் எதுவித முன்னேற்றமும் கிடைக்காது.அப்பாடியான பலரையே இங்கு பல பொறுப்புக்களிலும் வைத்து விட்டு அவர்கள் முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோனார்கள்.இவர்களை வெல்வதே இப்போது பெரும்பாடாக இருக்கின்றது.அடுத்த தலை முறை ஓரளாவது இந்த மாற்றத்தைகொண்டுவரும் என நம்பலாம்.

இப்போதும் கனேடிய வானொலி ஒன்றை கேட்டுக்கொண்டுதானிருக்கின்றேன் இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.தமிழ்நாட்டிலும் பார்க்க புலம் பெயர்ந்ததமிழர்கள் மிக பிற்போக்கு சிந்தனையுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்.

அர்ஜுன்.... உங்களை மற்றவர்கள் உரிமையுடைனேயே பேசுகின்றார்கள்.

நீங்கள் யாழுக்கு கிடைத்த தாத்தா மாதிரி.

உங்கள் கருத்துக்கள் சிலது நியாயமாக படும், பலது சிந்திக்க வைக்கும்.

அதற்காக... யாழில் எழுதாமல் விடாதீர்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எழுதாமல் விடுவமோ எனபல முறை சிந்திததுண்டு.பின்னர் வாக்குவாதம் வளர்ப்பதல்ல நோக்கம் ஓரளவேனும் நாகரீகமடைந்த இனமாக வரவேண்டுமென்ற எண்ணம் தான் திரும்ப எழுத வைக்கின்றது..நாம் இன்னமும் பிற்போக்கான பல சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் இருந்தால் எதுவித முன்னேற்றமும் கிடைக்காது.அப்பாடியான பலரையே இங்கு பல பொறுப்புக்களிலும் வைத்து விட்டு அவர்கள் முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோனார்கள்.இவர்களை வெல்வதே இப்போது பெரும்பாடாக இருக்கின்றது.அடுத்த தலை முறை ஓரளாவது இந்த மாற்றத்தைகொண்டுவரும் என நம்பலாம்.

இப்போதும் கனேடிய வானொலி ஒன்றை கேட்டுக்கொண்டுதானிருக்கின்றேன் இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.தமிழ்நாட்டிலும் பார்க்க புலம் பெயர்ந்ததமிழர்கள் மிக பிற்போக்கு சிந்தனையுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்.

எனக்கு புரியவில்லை அர்ஜீன்

நான் இங்கு எம்மவருக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்களைத்தான் பதிகின்றேன்

நீங்கள்ஏன்இதற்குள்ளும் புலிகளைத்தேடுகின்றீர்கள். உண்மையில் எனக்கு கவலையாக இருக்கிறது. அவர்கள் இருக்கும் போதும் இப்படித்தான் கயிறுகட்டி பின்னால் இழுத்தீர்கள். இல்லாதபோதும் சொன்னோம்தானே என்று தொடர்ந்து இழுக்கின்றீர்கள். நீங்கள் இவ்வளவு அழிவின் பின்பும் இது போன்ற தூற்றுதல்களை நிறுத்தவில்லையென்பதால் உங்களிடம் முடிவை நான் இனி எதிர்பார்க்கவில்லை. நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

யாழில் எழுதாமல் விடுவமோ எனபல முறை சிந்திததுண்டு.பின்னர் வாக்குவாதம் வளர்ப்பதல்ல நோக்கம் ஓரளவேனும் நாகரீகமடைந்த இனமாக வரவேண்டுமென்ற எண்ணம் தான் திரும்ப எழுத வைக்கின்றது..நாம் இன்னமும் பிற்போக்கான பல சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் இருந்தால் எதுவித முன்னேற்றமும் கிடைக்காது.

அர்ஜுன் அண்ணை..... சிறி கூறியதை ஆமோதிக்கிறேன்.

குறை நினைக்க வேண்டாம். நீங்கள் நல்ல சிந்திக்க வைக்கும் விடயங்கள் சொல்கிறீர்கள் , சொல்ல வருவீர்கள். ஆனால் உங்கள் ஆழ்மனதில் தேங்கியுள்ள புலி எதிர்ப்பு உங்களை தடுக்கிறது. உதாரணத்திற்கு இந்த தலைப்பிலும் புலிகளை கொண்டு சொருகியுள்ளீர்கள். தன் இனத்தின் நன்மைக்காய் 71 இல் தன்னை அழித்த கட்சியுடன்தான் ஜேவிபி இன்று கூட்டு சேர்ந்துள்ளது. அதனையும் கருத்தில் எடுங்கள்.

மற்றும்படி யாழில் தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

வெள்ளையள்.. இப்படியான விடயங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளூடாக சம்பந்தப்பட்டவர்களையும் நேரடியாக அழைத்து பேசி.. தீர்வுகளை ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். நாமோ.. இன்னும் குடும்ப விவகாரம் என்று மூடிமறைக்க நினைக்கிறம்.

குடும்பம் சமூகத்தின் அலகு. அந்த வகையில் இப்படியான குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகளின் பொதுவடிவம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன என்ற வகையில் இவை சமுகத்தோடு பகிரப்பட்டு தீர்வுகளும் ஆலோசனைகளும் முன் வைக்கப்படும் போது தவறு செய்பவர்கள் திருந்தவும்.. செய்ய இருப்பவர்கள்.. பாடம் பயிலவும் உதவும். அப்பாவிகள் காக்கப்படவும் அறிவூட்டும்.

ஐயா இந்த TV விசயம் தெரியும் பணம் கொடுத்து கூட்டிவருபவர்கள், நேருக்கு நேரா,ஆகா.அள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

இந்த சமுதாயத்தின் குற்றம்...........சாதி மாறி போனவளை ஆதரிக்காது தள்ளி வைத்தது..........ஆண்டாண்டு காலம் போனாலும் அதை தூக்கி பிடித்து வன்மம் சாதிப்பது, வாழ விடாது இளம் தலைமுறையை தடுப்பது .....முடிவாக் சாதி வேற்றுமை களையப்படவேண்டும் அது நடவாது ரத்தத்தில் ஊறியது. புரட்சி நடைபெற்றால்மட்டும் சாத்தியம். .

.

உங்கள் அனுபவமோ ? இந்தப்பிரச்சனை தமிழன் இவ்வுலகில் அழிந்துபோகும்போது முடிந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பி ஐயா ........அனுபவம் தான் எழுத வேண்டுமென்று இல்லையே ..

..உலக வழக்கிலும், நடை முறையிலும் பாடம் கற் கலாம். ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை எழுதியதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து எழுதத்தான் போகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் 3 ஆணுக்கு ஒரு பெண் பிள்ளை. செல்லமாக வளர்த்தார்கள். அவரது அறைக்கு எவரும்போகக்கூடாது. வெளியில் போகும் போதும் நித்தரை கொள்ளும்போதும்கூட பூட்டிவிட்டுத்தான் வைத்திருப்பார்தனது அறையை. ஒருநாள் பொலிஸ் வந்து அவரது அறையை சோதனை செய்யவேண்டும் என்றது. சோதனையின் போது அகப்பட்டவை தமிழரது நகைகள் (பல தாலிக்கொடிகள் உட்பட) பல துண்டுகளாக வெட்டப்பட்டு அங்கங்கே பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த பிள்ளை சிறையில் பல கொள்ளைகளில் கொள்ளையர்களுக்கு உதவினார் என்பதற்காக.

இது யார் குற்றம்

பெற்றோரா?

பிள்ளையா?

தகப்பன் கொழும்பில் வங்கியில் நல்லநிலையில் வேலை செய்தார். பிள்ளைகள் நல்ல பாடசாலைகளில் நல்ல மதிப்பெண்களுடன் படித்துக்கொண்டிருந்தனர். பல வீடுகள் சொந்தம் கொழும்பில். மனைவியின் ஆட்கள் வெளிநாட்டில். அவரை குடும்பத்துடன் வாவா என்று அழைத்தபடி இருந்தனர். பலரது அறிவுரைகளையும் மீறி வெளிநாட்டுக்கு பிள்ளைகளுடன் மனைவி மட்டும் முதலில் வந்தார். பாடசாலைகள் கிடைக்கும் முன்பே எல்லோரும் சிறுசிறு வேலைகளுக்கு போகத்தொடங்கினார்கள். அதில் ஆண் பிள்ளைக்கு லைசென்ஸ் எடுத்துக்கொடுத்ததோடு காரும் வாங்கிக்கொடுத்தார். வந்தது வினை. முதலில் வீட்டுக்காக காரைப்பாவித்தவர் பின் நண்பர்களுடன் சுத்த ஆரம்பித்தார். வந்து சில காலம் என்பதால் நண்பர் சொற்படி எல்லாத்தையும் மாத்தியமைத்தார். ஒரு பெண்ணையும் பிடித்துக்கொண்டார். குடி புகை முத்தம் படம் எடுத்து எல்லாத்தையும் முகநூலில் போட்டார். தாய் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டால் தனக்கும் எல்லாம் தெரியும் எல்லாம் செய்கின்றேன் என்று எல்லோருக்கும்தெரியவேண்டுமாம். பாடசாலைக்கு போகாமல் படிப்பை இழந்து வீட்டையும் இழந்து எங்கோ தங்கியுள்ளார்.

இது யார் பிழை...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றாரின் தப்பு .......... குற்றம், பிழை இருந்தபடியால் தான் அவ பூட்டும் துறப்புமாய் இருந்து இருக்கிறார்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு அண்ணா, இதெல்லாம் நாங்களா தேடிக்கொண்டது தான்.

எந்த பெற்றோரும் தன் பிள்ளை நல்லா இருக்கவேணும் என்று தான் நினைப்பினம் ஆனால் எங்கேயும் ஒரு சில சம்பவங்களுக்கு பெற்றோரும் உடந்தையாக இருக்கிறார்கள் ஆனால் யதார்த்தத்தில் நாங்களே தேடிக்கொள்ளுவது தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.