Jump to content

சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!


Recommended Posts

இது ஒரு வேறு பட்ட நேர்காணல். கனவுகள் கலைந்துபோன நிலைமையில் ஒரு போராளி -

சரணடைந்தவராகி, கைதியாகி, மன்னிப்பு வழங்கப்பட்டவராகி, புனர்வாழ்வுக்குட்பட்டவராகி (?), மறுவாழ்வு நிலைக்குள்ளானவராகி (?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு நிலைக்குள்ளான சந்தர்ப்பத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்படுகிறது.

அதிகம் பேச விரும்பாத - ஏன் பேசவே விரும்பாத - பேசி என்னதான் பயன் என்ற நிலையில் - இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

குறிப்பாக, 'விருப்பமில்லாத நிலையிலும் நான் இங்கே பேசுவதன் மூலமாக சில விசயங்களை வெளியே தெளிவு படுத்த முடியும். உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக பேசுகிறேன்' என்று சொல்லும் ஒரு போராளியோடு உரையாடுகிறோம்.

இந்தப் பதிவு மிகவும் உணர்ச்சி பூர்வமான நிலையில் பதிவு செய்யப்பட்டது.

எதிலிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. என்றாலும் நாம் பேச வேணும். நீங்கள் இப்போது எப்படி எல்லாவற்றையும் உணர்கிறீங்கள். அதாவது, கடந்த காலம் நிகழ்காலம் குறித்து....

ம். என்னத்தைச் சொல்ல. எல்லாம் முடிஞ்சுது எண்டுதான் சொல்ல வேணும் போல இருக்கு. ஆனால் அடுத்த கணமே ஒண்டும் முடியேல்லப் போலவும் இருக்கு. எல்லாமே குழப்பந்தான்.

இப்ப பிரச்சினைகள் கூடியிருக்கு. நாங்கள் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலைமை உருவாகியிருக்கு. ஆனால் இப்படியே காலம் உறைஞ்சு போயிருக்காது. நாளைக்கு இப்ப இருக்கிற நிலைமை இருக்காது. இன்னொரு மாதிரியான நிலைமை வரும். அது முந்தியைப் போலத்தான் இருக்கும் எண்டில்லை.

இப்ப இருக்கிற இந்த நிலைமையை யாராவது நினைச்சிருப்பமா? அப்பிடித்தான் நாளைக்கு இன்னொரு நிலைமை வரும் எண்டு நம்பிறன் வரலாறு எப்பவும் தேங்குவதில்லை. அது பின்னோக்கியும் பாய்வதில்லை எண்டு சொல்லுவார்கள்.

இது எனக்கு மட்டும் தெரியிற ஒரு பிரச்சினையெண்டு நான் நினைக்கேல்ல. அல்லது எங்களைப் போல ஒரு நிலைமையில இருக்கிற ஆக்களின்ர பிச்சினை எண்டும் நான் பாக்கேல்ல.

பொதுவாகச் சொல்லிறதெண்டால் என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல எண்டுதான் எங்களின்ரை நிலைமையைச் சொல்ல வேணும். கண்ணைக் கட்டிக் காட்டில விட்டது எண்டு சொல்லுவினம். நாங்கள் காட்டில கைவிடப்படேல்லை. முள்ளுக்கு மேல நெருப்பைப் பரவி விட்டு, அதுக்கு மேல நிக்கச் சொன்னதைப் போல இப்ப இருக்கிறம்.

இதில கடந்த காலம் - நிகழ்காலம் எண்டு என்ன இருக்கு? ஆனா ஒண்டு மட்டும் உண்மை, நாங்கள் எங்களால முடிஞ்ச அளவுக்கு விசுவாசமாகச் செயற்பட்டிருக்கிறம். அதாவது போராட்டத்தில தவறுகள் பிழைகள் இருக்கலாம். போராளிகளிலயும் அந்தப் பலவீனங்கள் இருக்கலாம். அப்பிடி ஏதோ இருந்துதானே நாங்கள் தோற்றுப் போயிருக்கிறம்.

இல்லையெண்டால் எப்பிடித் தோற்க முடியும். அதுவும் உயிரையே ஆயுதமாக்கிய ஒரு அமைப்புத் தோற்கிறது எண்டால் என்ன சாதாரண சங்கதியா? ஆகவே எங்கோ குறைபாடு இருக்கு.

நான் இப்ப அதைப் பற்றியெல்லாம் கதைக்க விரும்பேல்ல. அதைக் கதைக்கிறதால எனக்குத்தான் இப்ப பிரச்சினை. ஆனால், இப்ப எங்கட போராட்டத்தின்ர சரி பிழைகளைக் காணக்கூடியதாக இருக்கு. இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேணும்.

என்னைப் பொறுத்தவரை எல்லாம் ஒரு படிப்பினைதான். ஆனால், மனிசன் எவ்வளவைப் படிச்சாலும் திருந்தவே மாட்டான்.

நாங்கள் பட்ட கஸ்ரங்களுக்கான பயன் கிடைக்கயில்லை எண்டதும் சனங்களின்ரை சாவு அநியாயமாகப் போயிட்டுது எண்டுந்தான் எனக்குக் கவலை. மற்றப்படி நான் என்னைப் பற்றிக் கவலைப்படேல்ல. எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலயும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலயும் வளர்த்தெடுத்த அமைப்பின்ர தோல்வியைத் தாங்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில இருந்த வேறுபாட்டைச் சரியாகக் கணக்கெடுக்கத் தவறியிட்டம் எண்டுதான் சொல்லுவன்.

அப்படியென்றால், அதை விளக்க முடியுமா? வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை எப்படிப் புரிந்திருக்க வேணும்?

தோல்வியில் கிடைக்கிற அனுபவங்கள் வேற. வெற்றியில கிடைக்கிற அனுபவங்கள் வேற. போராட்டத்தில ஒரு போதும் தோல்வி எண்ட சொல்லையே பாவிக்கக்கூடாது. அதைப் பின்னடைவு எண்டுதான் சொல்ல வேணும். அப்ப, பின்னடைவில நாங்கள் ஒரு நெருக்கடியைச் சந்திப்பம். அந்த நெருக்கடியில இருந்து மீளுறதுக்காக எல்லாரும் ஒண்டாக நிற்பினம்.

ஆனால வெற்றியில ஆளாளுக்குப் போட்டி வந்திடும். பங்கைப் பகிர்வதில், சுகங்களையும் வசதிகளையும் அனுபவிக்கிறதில போட்டிகள் வரும். இந்தப் போட்டியில இடைவெளிகளும் பகைமையும் தானாகவே வரும்.

இதை என்ரை கண்ணால பார்த்திருக்கிறன்.

இது உள்ளுக்குள்ளை எண்டால், வெளியில வெற்றியின் போது வாற வாய்ப்புகளையும் தொடர்புகளையும் சந்தர்ப்பங்களையும் நாங்கள் சரிவரப்பயன்படுத்தியிருக்கலாம். இதுக்கு ஒரு நிதானம் இருந்திருக்க வேணும். ஆனால், இதெல்லாம் ஏன் இடையில பிழைச்சு கெட்டுப் போனதெண்டு தெரியேல்ல.

இறுப்போர் நடந்த போது என்ன செய்தீர்கள்? நீங்கள் இறுதி வரையிலும் முள்ளிவாய்க்காலில் இருந்தவர் என்ற வகையில் அந்த நாட்களை அந்தக் கணங்களை எப்படி உணர்ந்தீர்கள்?

இதைப் பற்றி நான் கதைக்க விரும்பேல்ல. ஏனெண்டால் இதைப் பற்றி நாங்கள் சரணடைந்த பிறகு எங்களை விசாரித்த படைத்தரப்பிடம் சொல்லியாச்சு. இனி நான் வேற இடங்களில கதைச்சு வேற பிரச்சினைகளை உருவாக்க விரும்பேல்ல. பொதுவாகச் சொல்லிறதெண்டால் இதைப் பற்றிக் கதைக்காமல் விடுறதுதான் நல்லது.

ஆனால் எங்கட தலைவிதியைப் பாத்தீங்களா? நாங்கள் ஆரிட்டை எதையெல்லாம் சொல்லக் கூடாது எண்டு நினைத்தமோ அதையெல்லாம் அவங்களிட்ட சொல்ல வேண்டிய நிலையொண்டு வந்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆனால் அதை ஏற்றுக் கொண்டுதான் வாழுறன்.

கடைசி நாட்களில் சாவதா சரணடைவதா எண்ட போராட்டம் எனக்கு வந்தது. என்னை மாதிரித்தான் பல ஆயிரக்கணக்கான போராளிகள் அந்த வெட்டையில கொதிக்கிற மணற் குவியல்களுக்கு மேல நிண்டார்கள்.

ஒருவராலயும் ஒரு முடிவையும் எடுக்கேலாமல் இருந்திது. பிறகு நடக்கிறது நடக்கட்டும் எண்டு சனங்களோட ஆமியிட்ட போனதுதான். ஆனால், அப்பிடிப் போகேக்க இருந்த மன நிலையைச் சொல்லேலாது. அது பெரிய கொடுமை.

பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு, என்ன செய்யிறது, என்ன நடக்கப் போகுது எண்டு தெரியாமல் வெறுங்கையோட எதிர்த்தரப்பிட்டப் போறதை எப்பிடிச் சொல்ல முடியும்?

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எதிரியை அழிப்பது அல்லது எதிரியிடம் சிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்வது என்ற மரபைக் கொண்டவர்கள். சயனைட் என்ற ஒரு விசயமே புலிகளினால்தான் தமிழ்ச் சூழலில் பிரபலமாக்கப்பட்டது. புலிகளின் சிறப்பு அடையாளங்களில் சயனைட் ஒன்று. இந்த நிலையில் நீங்கள் இறுதிக் கட்டத்தில் எதிர்த்தரப்பின் கைகளில் சிக்காமல் சரணடையும் முடிவை எப்படி எடுத்தீர்கள்?

இது தனியே நான் எடுத்த முடிவோ, எனக்கு மட்டும் ஏற்பட்ட ஒரு பிரச்சினையோ இல்லை. அப்படி எண்டால்தான் நீங்கள் என்னை இப்பிடிக் கேட்க முடியும். இது பல ஆயிரக்கணக்கானவர்கள் சந்திக்க வேண்டியிருந்த பிரச்சினை. அதிலும் முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை.

என்னைப் பொறுத்தவரை இந்த நிலைமை யாரும் எதிர்பார்த்திருக்காத ஒரு பிரச்சினை எண்டுதான் சொல்லுவன். எதிரிகள் கூட இப்படியொரு நிலையில் புலிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

அதைப்போலவே இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கதைப்பதும் ஒரு எதிர்பாராத நிலைமைதான்.

நாங்கள் எதிர்பாராமல் சரணடைய வேண்டி வந்ததைப் போலவே சயனைற் கடிக்காமல் விட்டதும் ஒரு எதிர்பாராத விசயந்தான்.

ஆனால் இதே இடத்தில நான் ஒரு விசயத்தையும் சொல்ல வேணும். நாங்கள் ஏன் சயனைட் குடித்திருக்க வேணும் எண்டு எதிர்பார்க்கிறியள்? அல்லது அங்கே சயனைற் கடிக்காமல் விட்டதைத் தவறாகப் பாக்கிறீங்களா?

இயக்கத்தையும் தலைமைப்பீடத்தையும் இயக்கத்தின்ர ஆயுதங்களையும் பாதுகாக்க வேணும் எதிரியிடம் இரகசியங்கள் எதுவும் போய்ச் சேரக்கூடாது. ஆயுதங்களை எதிரி எடுக்கக் கூடாது எண்டதுக்காகத்தானே சயனைட் குடிக்க வேணும்? அப்படித்தானே இயக்கத்தின்ர விதியும் எதிர்பார்ப்பும் இருந்தன.

ஆனால், அந்த இயக்கமும் ஆயுதங்களும் தலைமையும் எதிரியிடம் சிக்கிய பிறகு எல்லாமே முடிஞ்சிட்டுது எண்ட பிறகு நாங்கள் சயனைட் கடிக்கிறதால என்ன பிரயோசனம்?

ஒருக்கா நீங்கள் அந்தக் காட்சியை நினைச்சுப் பாருங்கள். இறுதிப் போரில சரணடைந்த 13000 ஆயிரம் பேரும் சயனைற்றைக் கடித்துச் செத்திருந்தால் அந்தப் பிரதேசம் முழுக்கவும் பிணக்காடாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அதால ஆருக்குத்தான் என்ன லாபம். அப்பவும் எதிர்த்தரப்புத்தான் சந்தோசப்பட்டிருக்கும்.

ஆனால், பிறகு நான் பல தடவை அங்க அப்ப சயனைட்டைக் கடிக்காமல் விட்டதுக்காகக் கவலைப்பட்டிருக்கிறன்.

இருக்கும் வரையும் சரியாகவும் விசுவாசமாகவும் இயங்கினம். எல்லாம் கையை மீறிப் போனாப் பிறகு வீம்புக்கு செத்து மடியிறதால என்ன பலன்? நீங்கள் சொல்கிறபடி பார்த்தால், போர் முடியும் போது மிஞ்சியிருந்த அத்தனை போராளிகளும் செத்திருந்தாலும் என்ன நடந்திருக்கும்? சாவுதான். பிணக்குவியலாக அப்பிடியே செத்துத்தானிருப்பம்.

ஒரு சாவின் மூலம் மக்களுக்கும் தாய் மண்ணுக்கும் ஏதாவது கிடைக்கும் என்றால், நானோ அல்லது மற்றப் போராளிகளுமோ செத்திருக்கலாம். அது வீரச்சாவாகவும் கருதப்பட்டிருக்கும்.

ஆனால், அதுக்கெல்லாம் சந்தர்ப்பம் இல்லாமலே நாங்கள் சரணடைய வேண்டி வந்தது. பிறகென்ன, கைதியாக்கினார்கள். கைதி எண்டால் அவர்களுடைய கட்டுப்பாட்டில், அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைச் செய்யும் நிலைதான் இருந்தது. இப்பவும் ஏறக்குறைய அதே நிலைமைதான்.

இப்ப வெளியாலே விடப்பட்டிருக்கிறம். இது பேரளவிலதான். ஆனால் சுயாதீனமாக நாங்கள் வாழ முடியேல்ல. நாங்கள் முயன்றாலும் சூழல் அதுக்கு முழுக்க இடந்தராது. சிலவேளை சிலபேருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினை மாதிரித் தெரியாமலிருக்கலாம். அவையள் எந்தச் சூழலுக்கையும் வாழக்கூடியமாதிரி தங்களை மாத்தியும் கொள்ளலாம்.

ஆனால் என்னால அங்காலயும் போக முடியவில்லை. இங்காலையும் போக முடியேல்ல. ஏதோ மனதுக்குள்ள கிடந்து உருட்டிக் கொண்டிருக்கு. நாங்கள் எங்கேயோ பிழைவிட்டிருக்கிறம். கனக்கப் பிழையள். அதுதான் இப்ப எனக்குப் பிரச்சினை.

நாங்கள் பிடிபட்டுக் காம்பில இருக்கேக்க இதை உணர்ந்திருக்கிறன். பலரிட்டயும் இந்த மாதிரியான ஒரு, ஒரு நிலைமையைப் பாத்திருக்கிறன். பொதுவாகக் கனபேர் கவலைப்பட்டார்கள்.

நாங்கள் கன இடத்தில பிழை விட்டிட்டம் எண்டதை வாய்விட்டே சொன்னார்கள். ஆனால் இனிப் பழைய இடத்துக்குத் திரும்பிப் போக முடியாது. ஆனால் நாங்கள் இப்பிடியே இருக்கவும் ஏலாது. இதைத்தான் நான் திரும்ப திரும்பச் சொல்லுவன்.

சரணடைந்தபோதே எங்களுக்குத் தெரியும், நாங்கள் விரும்பாத ஒரு இடத்துக்குத்தான் கொண்டு போகப் போறாங்கள் எண்டு நினைச்சம். அப்பிடியே நடந்தது, போராட்டத்தின்ர தோல்வியே நாங்கள் விரும்பாத ஒரு இடந்தானே. அதாவது, அப்படியான நிலைமை எண்டது நாங்கள் விரும்பாத நாங்கள் எதிர்பார்க்காத, நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைதானே.

பிறகு இடைக்கிடை விசாரணைகள். தேவையில்லாத சந்தேகங்கள். எப்பவும் என்னை யாரோ கண்காணிக்கிற மாதிரி ஒரு உணர்வு. இதுதான் அடுத்த பெரிய பிரச்சினை.

இப்பிடியே எல்லாப் பக்கத்தாலையும் வதைபடுகிறதை விட சாகலாம். அல்லது இந்த நாட்டை விட்டே எங்காவது தொலைஞ்சு போகலாம்.

பழைய இடங்களையும் தெரிஞ்ச சனங்களையும் பாக்க எப்பிடியிருக்கும் எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்.

சரி, என்ன மாதிரியான பிழைகள் நடந்திருக்கு? அதை எப்படிச் சீர்ப்படுத்தியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இதைப் பற்றி இஞ்ச இப்ப கதைக்க விரும்பேல்ல. அதுக்கு காலம் இருக்கு. அல்லது அதை நான் கதைக்க விரும்பேல்ல. அதில கன பக்கங்களிருக்கு. பல காரணங்களும் அந்தக் காரணங்களோட தொடர்பான கன தரப்பும் இருக்கு. எல்லாத்தையும் சரியாக அறியாமல் கதைக்கவும் முடியாது.

ஆனால், ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை. இல்லையெண்டால், இந்த பெரிய அமைப்பும் போராட்டமும் இப்பிடிச் சட்டெண்டு முடிஞ்சு போகுமா?

இதையெல்லாம் ஆரோ ஒரு நாளைக்கு வெளியில சொல்லத்தான் போகினம். சிலர் – பல விசயங்களையும் அறிஞ்ச ஆட்கள் - இதையெல்லாம் எழுதக் கூடும்.

என்னைப் பொறுத்தவரையும் நான் விசுவாசமாக வேலை செய்திருக்கிறன். சனத்துக்காகப் பாடு பட்டிருக்கிறன். இயக்கத்துக்காகவும் பாடுபட்டிருக்கிறன். போராட்டத்துக்காக உழைச்சிருக்கிறன். சில சந்தர்ப்பங்களில என்ரை அறிவைக் கடந்தும் வேலை செய்திருக்கிறன். ஒரு அமைப்பில இருந்தால் அதின்ரை தலைமைக்குக் கட்டுப்படவேண்டி வரும். அது எங்க இருந்தாலும் அப்பிடித்தான்.

தமிழகத்தில கருணாநிதியின்ரை ஆட்சியையும் கதைகளையும் பாக்க எங்களுக்கு விசர்தான் வரும். ஆனால், அவற்றை கட்சிக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கட கட்சியின் வெற்றிக்காகவே உழைக்கிறார்கள். இது அமரிக்காவுக்கும் பொருந்தும். சீனாவுக்கும் பொருந்தும் எண்டுதான் நினைக்கிறன்.

நாங்கள் எல்லாத்தையும் பட்டுக் கழிச்சிட்டம். இறுதிவரையும் நிண்டு பாத்தாச்சு. என்னைப் போல ஆயிரக்கணக்கானவையள் இப்பிடிக் கடுமையாகக் கஸ்ரப்பட்டிருக்கிறார்கள். இதுக்கு மேல நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆனால் எங்களுக்குத்தான் இப்பவும் கஸ்ரம். எங்களால கண்டபடி அங்க இங்க திரிஞ்சு நிலைமைக்குத் தக்கமாதிரிப் பாடவும் முடியாது. காரியம் பாக்கவும் முடியாது.

இயக்கம் எண்டது பெரிய மரத்தைப் போல. அது சரிந்தால் சும்மா கயிற்றைப் போட்டுக் கட்டி நிற்பாட்டேலாது. அதைப் போல அந்த மரம் இல்லாட்டித்தான் அதின்ரை அருமையும் அது இருந்த இடமும் தெரியும். வெட்ட வெளியாக இருக்கிற இடத்தைப் பாத்தால் இனம் புரியாத ஒரு சோகம் மனசில வருகிது.

இந்த நிலைமை அதாவது, புலிகளின் வீழ்ச்சியும் நீங்கள் சரணடைந்ததும், பிறகு இப்போது விடுதலையாகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதைப் பற்றியும் என்ன நினைக்கிறீங்கள்?

இதைத் தானே நான் முன்னரே சொல்லிவிட்டன். நாங்கள் விரும்பாத ஒரு கட்டத்துக்கு வந்திருக்கிறம் எண்டு. இப்பிடியான நிலைமைக்குப் பிறகு ஒரு காலகட்டம் வரையில நீரோட்டத்தில போக வேண்டியதுதான்.

நீந்தேக்க களைச்சுப் போனால், கொஞ்சநேரம் நீரோட்டத்தின்ர போக்கில போய்ப் பிறகு திரும்பிற விளையாட்டுத்தான்.

ஆனால், இது நிலைப்பாட்டின் வீழ்ச்சியாக மாறாதா?

அப்ப என்ன செய்யிறது? எதையும் சொல்லலாம். செய்து பாத்தாத்தான் தெரியும் எண்டு சொல்லுவார்கள். அதைமாதிரி, நாங்கள் இருக்கிற சூழ்நிலையில இப்ப பேசாமல் இருக்கிறதே மேல். தொழில், வருமானம், வீடு, பிள்ளைகளின்ர எதிர்காலம் எண்டு எங்களுக்கு முன்னாலே ஏராளம் பிரச்சினைகளிருக்கு.

இதையெல்லாம் இந்த வயதில எப்பிடிச் செய்து முடிக்கிறது எண்டு தெரியேல்ல. எல்லாத்தையும் தொடக்கத்தில இருந்து செய்ய வேணும் எண்டால் எவ்வளவு கஸ்ரம்?

22 வருசமாக பொது வாழ்வில இருந்திட்டு இப்ப இப்படித் திடீரெண்டு தனியாகக் குடும்ப வாழ்க்கைக்கு வாறதே சிரமம். உழைக்க வேண்டிய உற்சாகமான காலத்தை இளமைக்காலத்தை இழந்திட்டு இப்ப புதிசா என்ன செய்யலாம் எண்டால் என்ன செய்யிறது?

நானாவது பரவாயில்ல. கால் இல்லாதவங்கள், கையில்லாதவங்களின்ரை நிலைமையைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.

இந்த நிலைமையில நாங்கள் என்ன செய்யிறது?

எங்க இருந்தாலும் இதயம் நல்லா இருந்தாச் சரி எண்டதுதான் என்ர நிலைப்பாடு.

அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் எல்லாம் எப்படி இருக்கு? விடுதலையாகிய போராளிகளின் பொதுவான நிலைமையைப் பற்றிச் சொல்லுங்கள்.

அரசாங்கம் கடன் தாறதாகச் சொல்லியிருக்கு. ஐ.ஓ.எம் எண்ட ஒரு தொண்டு நிறுவனம் தொழில் உபகரணங்களைத் தருகிது. அதுக்கு மேல நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. அப்படி எதிர்பார்க்கிறதில பிரயோசனமும் இல்ல.

புனர்வாழ்வில சிலபேருக்கு நல்ல வாய்ப்புக் கிடைச்சிருக்கு. சிலருக்கு தொழில் வாய்ப்பும் கிடைச்சிருக்கு. குறிப்பாக இளைய பெடியள். அல்லது பெண் போராளிகளுக்கு வேலை வாய்ப்புகளில் இடம் குடுக்கிறார்கள். அவர்களின்ர வயது அதுக்குத் தோதாக இருக்கு.

எங்களுக்கு வயதும் கூடீட்டுது. படிப்பும் போதாது. படிக்கிற ஆக்களுக்கும் பரவாயில்ல. ஆகப் பாதிக்கபபட்டது எங்களைப் போல இருக்கிற ஆக்கள்தான்.

இப்போதுள்ள உங்களின் மன நிலை என்ன?

இப்பிடியொரு கேள்வியை விசாரணையின்போதும் கேட்டார்கள். இப்ப நீங்களும் கேக்கிறியள். இதுக்கு நான் என்ன பதிலைச் சொல்ல முடியும்?

பொதுவாகவே போராளிகளின் இன்றைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்.

வசதி வாய்புள்ள ஆக்களுக்கு ஒரளவு பிரச்சினை இல்ல. சிலர் வெளியில போயிட்டினம். மற்ற ஆக்கள் சிலர் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். சிலருக்கு சொந்தக்காரர் நண்பர்களின் உதவி இருக்கு.

ஆனால், பலருக்கும் வசதிகள் இல்லை. உதவிகள் இல்லை. சிலருக்கு சில இடங்களில் இருந்து உதவிகள் கிடைச்சிருக்கு. அவர்கள் அந்த உதவிகளைப் பெற்றுக் கொண்டு ஏதாவது செய்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான போராளிகள் வேதனையோட இருக்கிறார்கள். அரசாங்கத்தின்ர கடனைப் பெற்றாலும் அதை வைச்சுத் தொழில் செய்யக்கூடிய நிலைமை எல்லாருக்கும் இல்லை.

பொதுவாகச் சொன்னால் இதுக்கு ஒரு ஒழுங்கான திட்டம் இருந்தால்தான் எதுவும் செய்யலாம்.

பெண்போராளிகளின் நிலைமை எப்பிடி இருக்கிறது. குறிப்பாக திருமணம் முடித்திருக்கும் பெண் போராளிகளின் நிலைமை?

அவர்களின் நிலைமை இன்னும் மோசமானது. பெரும்பாலும் இந்த மாதிரிப் பெண் போராளிகள் ஆண் போராளிகளையே திருமணம் செய்திருந்தினம். இப்ப அவர்களில் பலரும் இல்லை. பலர் ஏற்கனவே வீரச்சாவடைந்து விட்டார்கள். சிலரைப் பற்றிய தகவலே இல்லை. இந்த நிலையில இந்தப் பெண் போராளிகள் பிள்ளைகளோடு பெரிய கஸ்ரங்களைப் படுகுதுகள்.

அதுதான் சொன்னேனே, ஒரு நல்ல திட்டம் இல்லை எண்டால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

முடிவாக என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?

இவ்வளவு காலம் எங்களை ஒரு கொள்கையில அர்ப்பணிச்சு வாழ்ந்த நாங்கள் இப்ப இப்பிடி ஒண்டுஞ் செய்ய முடியாத ஒரு நிலையில இருக்கிறம். இதை எப்பிடி மாத்திறதெண்டு தெரியேல்ல. அதைப் பற்றித்தான் யோசிக்கிறன்.

இப்பிடி யோசிக்கேக்க இனி ஒரு சோலியும் வேண்டாம் எண்டுதான் முடிவெடுக்க முடியுது.

நல்லாக் களைச்சுப் போனா தண்ணியாவது தரவேணும். அதுக்கும் ஆளிருக்க வேணும். ஆனா, இப்ப அதுக்கெல்லாம் ஆருமே இல்ல.

ஒரு முன்னாள் போராளி என்ற வகையில உங்களின் இன்றைய மனநிலை?

முன்னாள் போராளி - இப்படிச் சொல்வது தவறு. போராளி என்றால் முன்னாள் பின்னாள் என்றெல்லாம் கிடையாது. போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. அது வெவ்வேறு விடிவங்களை எடுக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் அது வேறான தொழில்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆகவே போராட்டத்துடன் என்றைக்கும் இணைந்திருக்கும் ஒரு போராளியை முன்னாள் போராளி பின்னாள் போராளி என்று சொல்ல முடியாது.

போராளி ஒரு அரச உத்தியோகத்தரைப்போல ஓய்வு பெறவும் முடியாது. ஓய்வாளராக அவரைக் கருதவும் முடியாது - இது அவர்களைக் கொச்சைப் படுத்தும் வார்த்தை அல்லது போராளி என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாதவர்களின் கதை எண்டுதான் அர்த்தம்.

மற்றும் படி வேறு என்ன சொல்ல முடியும். இதைத்தானே ஏற்கனவே சொல்லியிருக்கிறன்.

----------------------------------

நேர்காணல்: ஆதித்தன்

http://www.ponguthamil.com/mugangal-nirangal/mugangalnirangalcontent.asp?sectionid=3&contentid={D7503D94-3D98-4D54-8F64-DD9A380E68E1}

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply

//இதைப் பற்றி இஞ்ச இப்ப கதைக்க விரும்பேல்ல. அதுக்கு காலம் இருக்கு. அல்லது அதை நான் கதைக்க விரும்பேல்ல. அதில கன பக்கங்களிருக்கு. பல காரணங்களும் அந்தக் காரணங்களோட தொடர்பான கன தரப்பும் இருக்கு. எல்லாத்தையும் சரியாக அறியாமல் கதைக்கவும் முடியாது.

ஆனால், ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை. இல்லையெண்டால், இந்த பெரிய அமைப்பும் போராட்டமும் இப்பிடிச் சட்டெண்டு முடிஞ்சு போகுமா?

இதையெல்லாம் ஆரோ ஒரு நாளைக்கு வெளியில சொல்லத்தான் போகினம். சிலர் – பல விசயங்களையும் அறிஞ்ச ஆட்கள் - இதையெல்லாம் எழுதக் கூடும்//

உங்களைப் போன்றவர்கள் தான் என்ன பிழை எங்கு நடந்தது என்று கதைக்க வேண்டும்.இல்லாது விட்டால் குழப்பமே மின்ச்சும்.அடுத்த பேட்டியிலாவது இது பற்றி விரிவாக எழுத வேன்டும்.இனியும் பலர் உங்களின் நிலமைக்கு வராதிருக்க விட்ட பிழைகள் என்ன என்னும் அனுபவம் முக்கியமானது.

Link to comment
Share on other sites

ஏன் இதை படிச்சன் எண்டு இருக்கு... இண்டைக்கு நித்திரை வருமோ தெரியவில்லை...

Link to comment
Share on other sites

இது ஒரு வேறு பட்ட நேர்காணல். கனவுகள் கலைந்துபோன நிலைமையில் ஒரு போராளி -

.....

முடிவாக என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?

இவ்வளவு காலம் எங்களை ஒரு கொள்கையில அர்ப்பணிச்சு வாழ்ந்த நாங்கள் இப்ப இப்பிடி ஒண்டுஞ் செய்ய முடியாத ஒரு நிலையில இருக்கிறம். இதை எப்பிடி மாத்திறதெண்டு தெரியேல்ல. அதைப் பற்றித்தான் யோசிக்கிறன்.

இப்பிடி யோசிக்கேக்க இனி ஒரு சோலியும் வேண்டாம் எண்டுதான் முடிவெடுக்க முடியுது.

நல்லாக் களைச்சுப் போனா தண்ணியாவது தரவேணும். அதுக்கும் ஆளிருக்க வேணும். ஆனா, இப்ப அதுக்கெல்லாம் ஆருமே இல்ல.

ஒரு முன்னாள் போராளி என்ற வகையில உங்களின் இன்றைய மனநிலை?

முன்னாள் போராளி - இப்படிச் சொல்வது தவறு. போராளி என்றால் முன்னாள் பின்னாள் என்றெல்லாம் கிடையாது. போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. அது வெவ்வேறு விடிவங்களை எடுக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் அது வேறான தொழில்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆகவே போராட்டத்துடன் என்றைக்கும் இணைந்திருக்கும் ஒரு போராளியை முன்னாள் போராளி பின்னாள் போராளி என்று சொல்ல முடியாது.

போராளி ஒரு அரச உத்தியோகத்தரைப்போல ஓய்வு பெறவும் முடியாது. ஓய்வாளராக அவரைக் கருதவும் முடியாது - இது அவர்களைக் கொச்சைப் படுத்தும் வார்த்தை அல்லது போராளி என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாதவர்களின் கதை எண்டுதான் அர்த்தம்.

மற்றும் படி வேறு என்ன சொல்ல முடியும். இதைத்தானே ஏற்கனவே சொல்லியிருக்கிறன்.

----------------------------------

நேர்காணல்: ஆதித்தன்

http://www.ponguthamil.com/mugangal-nirangal/mugangalnirangalcontent.asp?sectionid=3&contentid={D7503D94-3D98-4D54-8F64-DD9A380E68E1}

:(:( வாசிக்கவே கஸ்டமாக இருக்கு, அதிலும் முடிவாகச் அவர் சொல்வது, சொல்லெணாத் துயரத்தை, அவஸ்தையை அனுபவித்து செத்துப் பிழைத்து வந்தவர்களை அவர்கள் கட்டி இருக்கும் கடைசித் துண்டையும் அவர்களிடமிருந்து பறித்து, இன்னும் நடைபிணமாக்காமல் இருக்கும் படி எம்மிடம் கேட்பது நியாயமானவை! :(

Link to comment
Share on other sites

"இயக்கம் எண்டது பெரிய மரத்தைப் போல. அது சரிந்தால் சும்மா கயிற்றைப் போட்டுக் கட்டி நிற்பாட்டேலாது. அதைப் போல அந்த மரம் இல்லாட்டித்தான் அதின்ரை அருமையும் அது இருந்த இடமும் தெரியும். வெட்ட வெளியாக இருக்கிற இடத்தைப் பாத்தால் இனம் புரியாத ஒரு சோகம் மனசில வருகிது."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இதை படிச்சன் எண்டு இருக்கு... இண்டைக்கு நித்திரை வருமோ தெரியவில்லை...

உண்மைதான் தயா

நான் ராத்திரி நித்திரை கொள்ளவில்லை.

ஏதோ உறுத்துது மனதை. பாரமாக இருக்கு. ஏதோ பிழை நடந்திருக்கு இல்லையென்றால் இப்படி கட்டிய இயக்கம் விழுந்துபோகுமா...?

நாங்கள் இப்படி யாரிடம் போகக்கூடாதோ அவர்களிடம் போனது நடந்திருச்சே.....??

ஏக்கம், தோல்வி, விரக்தி, கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் வாழ்க்கை........ :(

Link to comment
Share on other sites

உண்மைதான் தயா

நான் ராத்திரி நித்திரை கொள்ளவில்லை.

ஏதோ உறுத்துது மனதை. பாரமாக இருக்கு. ஏதோ பிழை நடந்திருக்கு இல்லையென்றால் இப்படி கட்டிய இயக்கம் விழுந்துபோகுமா...?

நாங்கள் இப்படி யாரிடம் போகக்கூடாதோ அவர்களிடம் போனது நடந்திருச்சே.....??

ஏக்கம், தோல்வி, விரக்தி, கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் வாழ்க்கை........ :(

எங்களுக்கு தோல்வி எண்ட கவலை எனக்கு வாறதை விட அவர்களின் நிலை தான் கவலையாய் இருக்கண்ணை... !

அடுத்த நிலை என்ன எண்டு தெரியாத நிலை எண்டு தான் சொல்ல வேணும்... எங்களை தாங்கிற தூணாக இருந்தவர்கள் மன நிலை குழம்பிய நிலையில் அவர்களுக்கு ஆதரவு குடுத்து ஆறுதலாக இருக்க முடியாத நிலையில் இருக்கிறம் எண்ட குற்ற உணர்வு தான் எல்லாத்துக்கும் மேலை இருக்கு... !

Link to comment
Share on other sites

இயக்கத்தையும் தலைமைப்பீடத்தையும் இயக்கத்தின்ர ஆயுதங்களையும் பாதுகாக்க வேணும் எதிரியிடம் இரகசியங்கள் எதுவும் போய்ச் சேரக்கூடாது. ஆயுதங்களை எதிரி எடுக்கக் கூடாது எண்டதுக்காகத்தானே சயனைட் குடிக்க வேணும்? அப்படித்தானே இயக்கத்தின்ர விதியும் எதிர்பார்ப்பும் இருந்தன.

ஆனால், அந்த இயக்கமும் ஆயுதங்களும் தலைமையும் எதிரியிடம் சிக்கிய பிறகு எல்லாமே முடிஞ்சிட்டுது எண்ட பிறகு நாங்கள் சயனைட் கடிக்கிறதால என்ன பிரயோசனம்?

நான் கூட நினைத்தேன் ஏன் இவர்கள் தற்கொலை செய்யவில்லை அல்லது அனைவரும் கரும்புலியாக போகவில்லை என்று ஆனால் அதுக்கு அவரின் பதிலில் பலகேள்விகளுக்கு விடை இருக்கு.

அதை விட நாம் இங்க யாராவது ஒருவரின் கருத்தில் முரண்பட்டாலே அவரின் பெயரைக் கண்டாலே கடுப்பாகிவிடுகிறோம் ஆனால் பரமஎதிரியிடமே போய் சேரர்ந்து உயிர்பிச்சை வேண்டுவது என்பது கொடுமையாக இருந்துஇருக்கும்.

Link to comment
Share on other sites

ஒரு அமைப்பில இருந்தால் அதின்ரை தலைமைக்குக் கட்டுப்படவேண்டி வரும். அது எங்க இருந்தாலும் அப்பிடித்தான்.

தமிழகத்தில கருணாநிதியின்ரை ஆட்சியையும் கதைகளையும் பாக்க எங்களுக்கு விசர்தான் வரும். ஆனால், அவற்றை கட்சிக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கட கட்சியின் வெற்றிக்காகவே உழைக்கிறார்கள். இது அமரிக்காவுக்கும் பொருந்தும். சீனாவுக்கும் பொருந்தும் எண்டுதான் நினைக்கிறன்

இந்த தெளிவு இன்னமும் எங்கள் பலருக்கு இல்லாத்தது ஆச்சரியமே?

கடைசி அவர் இப்போ வெளியில் வந்ததையிட்டாவது சந்தோசப்படுவம்.முடிவே இல்லாமல் எமது போராட்டம் இன்னமும் ஒரு 10,15 வருடம் நீடித்திருந்தால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

ஒரு அமைப்பில இருந்தால் அதின்ரை தலைமைக்குக் கட்டுப்படவேண்டி வரும். அது எங்க இருந்தாலும் அப்பிடித்தான்.

தமிழகத்தில கருணாநிதியின்ரை ஆட்சியையும் கதைகளையும் பாக்க எங்களுக்கு விசர்தான் வரும். ஆனால், அவற்றை கட்சிக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கட கட்சியின் வெற்றிக்காகவே உழைக்கிறார்கள். இது அமரிக்காவுக்கும் பொருந்தும். சீனாவுக்கும் பொருந்தும் எண்டுதான் நினைக்கிறன்

இந்த தெளிவு இன்னமும் எங்கள் பலருக்கு இல்லாத்தது ஆச்சரியமே?

கடைசி அவர் இப்போ வெளியில் வந்ததையிட்டாவது சந்தோசப்படுவம்.முடிவே இல்லாமல் எமது போராட்டம் இன்னமும் ஒரு 10,15 வருடம் நீடித்திருந்தால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை.

நீங்கள் ஒரு அமைப்பிலை இருந்தனீங்கள் அதன் தலைமைக்கு கட்டுப்பட்டனீங்களோ....?? இல்லைத்தானே...?? நீங்கள் அப்ப தோத்து ஓடும் போது அது தான் காரணம் எண்டுங்கோ... ஆளாளுக்கு குழி பறிப்பும் குத்து வெட்டும் தானே நீங்கள்....??

இப்ப வந்து புலிக்கு பல்லு தீட்டுறீங்கள்...

இதுக்கையும் வந்து கிரந்தம் கதைக்காமல் வேலையை போய் பாருங்கோ... எல்லா மயிரும் உங்களுக்கு மட்டும் தான் தெரியும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தெளிவு இன்னமும் எங்கள் பலருக்கு இல்லாத்தது ஆச்சரியமே? கடைசி அவர் இப்போ வெளியில் வந்ததையிட்டாவது சந்தோசப்படுவம்.முடிவே இல்லாமல் எமது போராட்டம் இன்னமும் ஒரு 10,15 வருடம் நீடித்திருந்தால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை.

அண்ணா தயவுசெய்து என்னுடைய இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கோ

நான் உங்களை நம்பி பின்னால வாறன்உங்களது இயக்க வாழ்க்கை என்றாலும் சரி

சொந்த வாழ்க்கை என்றாலும் சரி 100 வீதம் நீங்கள் நினைத்தபடி அல்லது திட்டம் போட்டபடி சரியாக நடந்ததோ...?

Link to comment
Share on other sites

மனதை நெருடவைத்து விட்டார்.............இப்படி இன்னும் பலது இருக்கு என் தம்பி ஒரு போராளி சாள்ஸ் அன்ரனியின் படைப்பிரிவு (தலைவரின் மகனின்) அவனின் பகிர்வுகள் தாங்க முடியாது...... என்னால் பல நாட்கள் உறக்கம் கொள்ளமுடியவில்லை....... எமது போராட்டம் ஏன் இப்படியான முடிவு வந்தது..... தலமை என்ன செய்தது பல கேள்விகள் பல குழப்பங்கள்..... முடிவு எடுத்து ஒருநிலைப்படுத்தி செயற்பட முடியவில்லை தொடர்புகள் வந்தாலும் ஏற்படுத்த முடியவில்லை......!!!! போராளிகளுக்கான நலவாழ்வு திட்டம் புலத்தில் உள்ள அமைப்புகளால் மேற்கொள்ள வேண்டும் எமக்காக இறுதிவரை களமாடியவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் அவர்கள் அனைவரும் என் உறவுகள் என்ற மனநிலைக்கு நாம் வந்தாக வேண்டும் நாடுகடந்த அரசினால் அவர்களுக்கான திட்டங்கள் முன்னேடுக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா தயவுசெய்து என்னுடைய இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கோ

நான் உங்களை நம்பி பின்னால வாறன்உங்களது இயக்க வாழ்க்கை என்றாலும் சரி

சொந்த வாழ்க்கை என்றாலும் சரி 100 வீதம் நீங்கள் நினைத்தபடி அல்லது திட்டம் போட்டபடி சரியாக நடந்ததோ...?

"உந்தக்கேள்விக்கு நான் முந்தியொருக்கால் ஒரு இடத்திலை மறைமுகமாக பதில் சொன்னனான் நீங்கள்தான் இன்னும் விளங்காமல் இருக்கிறியள்" எண்டு அர்ச்சுன் அண்ணை சொன்னாலும் சொல்லுவார் :lol:

Link to comment
Share on other sites

நேற்று இரவு வாசித்த பின் மிகவும் வேதனையாக இருந்தது. வாசித்ததை மீண்டும் மீண்டும் அசை போட்டு பார்க்கும் போது மிக மிக ஆழமான கருத்துகளை தாங்கி இந்த பேட்டி காணப்படுவதை கிரகிக்க முடிந்தது

எவ்வளவு பாடுபட்ட இந்த போராளிகளின் இன்றைய வாழ்வின் நிலையை ஓரளவுக்கேனும் மாத்த நாங்கள் ஏதாவது செய்து ஆகவேண்டும். எந்த ஒரு வழியும் இல்லாமல் இருக்கு என்று நினைப்பது கூட எம்மிடம் இருக்கும் ஒருவிதமான இயலாமை குணம்தான் என்று நினைக்கின்றன். கண்டிப்பாக ஏதாவது ஒரு ஒழுங்கை / உதவும் சீரான முறைமை பற்றி சிந்திக்க வேண்டும். எந்த வித உதவியும் இன்று சிங்களத்தை தாண்டித் தான் போகப் போவது என்பதும் யதார்த்தமானது.

இந்தப் போராளிகளிடம் இருந்து இறுதியாக என்ன நடந்தது என்று அறிய துடிப்பதை விட, யார் யார் குழி பறித்தவர்கள் என்று அவர்கள் மூலம் கண்டு பிடிக்க முயற்சி செய்வதை விட, இந்தப் போராளிகளின் இன்றைய வாழ்வை செழுமைப் படுத்த முயல வேண்டும்.

இன்று என் Email க்கு பலர் இந்த திரியின் மூலத்தை (பொங்குதமிழ்) அனுப்பி இருந்தனர். அதில் அனேகமானவர் சொன்னது "தாங்கள் இவர்கள் ஏன் (சயனைட் அடிச்சு சாகாமல்) சரணடைந்தவர்கள் என்று நினைச்சுக் கொண்டு இருந்தம் என்றும் இவரின் பேட்டியை பார்த்தப் பின்தான் தாங்கள் காரணத்தை உணர்ந்தோம்" என்றும் சொல்லி இருந்தனர். எமது (தமிழ் மக்களின்) சிந்தனை எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கு என்பதுக்கும் இந்த போராளிகளை வேள்விக்கு வளர்த்த ஆடுகளாகத்தான் பார்கிறம் என்றதுக்கும் இது ஒன்றே போதுமானது (எல்லாரையும் சொல்லவில்லை...ஆனால் Majority feeling அப்படித்தான் இருக்கு போல). போராட்டம் முடிந்து போயிட்டு என்று நினைக்க ஆரபித்தவுடனே இந்தப் போராளிகளின் வாழ்வை பற்றி எந்தவிதமான சிந்தனையோ அல்லது அவர்களின் மறுவாழ்வுக்கான காத்திரமான செயற்பாடோ நாம் செய்யாமல் இருப்பதுக்கும் இந்த சிந்தனைதான் அடிப்படை காரணம் என்று நினைகின்றன்

Link to comment
Share on other sites

quote]இருக்கு என் தம்பி ஒரு போராளி சாள்ஸ் அன்ரனியின் படைப்பிரிவு (தலைவரின் மகனின்)

Link to comment
Share on other sites

சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதிக்கொண்டிருக்க முடியாது.

இங்கு எழுதப்படும்ம் கருத்துக்கள் தான் முக்கியமே தவிர,அவர் பின்னணி என்ன,பூர்வீகம் என்ன என்பது முக்கியமல்ல.

"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசும்'என்பார்கள்.

புலிவாலாக இருந்தால் செய்வது எழுதுவது எல்லாம் சரி,மாற்றுக்கருத்தாளன் எனில் அவன் எவ்வளவு நல்லது செய்தாலும் பிழை.இதைத்தான் உந்தவாலுகள் காலம் காலமாக வெளிநாடுகளில் கடைபிடித்தார்கள்.தாங்கள் செய்யும் சுத்துமாத்துக்களையெல்லாம் புலி என்றபோர்வையில் மூடிமறைத்தார்கள்.இதனால் சமூகவிரோதிகளெல்லாம் தாங்களும் நாலு காசைகொடுத்துவிட்டு அதே போர்வைக்குள் புகுந்துகொண்டார்கள்.இவைகள் எல்லாம் தெரிந்தும் தங்களுக்கு காசு வந்தால்காணும் என்று புலிகளும் அவர்களை அரவணைத்துக்கொண்டார்கள்.

அதன் பலாபலன் தான் முள்ளிவாய்கால் இரத்தம் காயமுன் இவர்களில் பலர் போய் ராஜபக்சாவின் கையை பிடித்தது.

அதைவிட யாரும் எந்த அதிகாரமும் கொடுக்காமல் வெளிநாடுகளிலும் தமது அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.பல பிரச்சனைகளுக்கு கட்டைபஞ்சாயத்து நடாத்தினார்கள்.இவைகளெல்லாம் மேற்குலகு அவதானித்துக்கொண்டே இருந்தது.இவங்களுக்கு ஒன்றும் தெரியாது சுத்திப்போட்டு போகலாம் என இருந்த பலர்தான் இப்போ ஓடுப்பட்டுத்திரிகின்றார்கள்.இதன் முதல் படிதான் சுவிஸ் கைதுகள்.இன்னமும் சில வருடங்களில் இந்த இனத்துரோகிகள் துடைதெடுத்துபட்டுவிடுவார்கள்.இவர்களுக்கு ஓடிஒழியக்கூட ஒரு நாடு இல்லை.அடுத்த தலைமுறைகூட இவர்களால் பிழையாக வழிநடத்தபாட்டுவிட்டார்கள்.வன்முறைகலாச்சாரத்தை இங்கு பரப்பியதில் இவர்களின் பங்கு அளப்பரியது.விடுதலைபோராட்டம் என்ற போர்வையில் இவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.எப்படியோ எல்லாவற்றிற்றும் ஓரளவு முடிவு வந்து விட்டது எஞ்சியவர்களும் இன்றோ நாளையோ என்ற நிலைதான்.

இதன் பின் தான் ஒரு ஆரோக்கியமான புலம் பெயர் சமூகம் உருவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க கண்ணீர் தான் வருகிறது இப்பவாவது இங்கு உள்ளவருக்கு அங்கு உள்ளவர்கள் ஏன் தற்கொலை செய்யவில்லை எனப் புரியும்.

Link to comment
Share on other sites

எவ்வளவு பாடுபட்ட இந்த போராளிகளின் இன்றைய வாழ்வின் நிலையை ஓரளவுக்கேனும் மாத்த நாங்கள் ஏதாவது செய்து ஆகவேண்டும். எந்த ஒரு வழியும் இல்லாமல் இருக்கு என்று நினைப்பது கூட எம்மிடம் இருக்கும் ஒருவிதமான இயலாமை குணம்தான் என்று நினைக்கின்றன். கண்டிப்பாக ஏதாவது ஒரு ஒழுங்கை / உதவும் சீரான முறைமை பற்றி சிந்திக்க வேண்டும். எந்த வித உதவியும் இன்று சிங்களத்தை தாண்டித் தான் போகப் போவது என்பதும் யதார்த்தமானது.

இந்தப் போராளிகளிடம் இருந்து இறுதியாக என்ன நடந்தது என்று அறிய துடிப்பதை விட, யார் யார் குழி பறித்தவர்கள் என்று அவர்கள் மூலம் கண்டு பிடிக்க முயற்சி செய்வதை விட, இந்தப் போராளிகளின் இன்றைய வாழ்வை செழுமைப் படுத்த முயல வேண்டும்.

எமது (தமிழ் மக்களின்) சிந்தனை எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கு என்பதுக்கும் இந்த போராளிகளை வேள்விக்கு வளர்த்த ஆடுகளாகத்தான் பார்கிறம் என்றதுக்கும் இது ஒன்றே போதுமானது (எல்லாரையும் சொல்லவில்லை...ஆனால் Majority feeling அப்படித்தான் இருக்கு போல). போராட்டம் முடிந்து போயிட்டு என்று நினைக்க ஆரபித்தவுடனே இந்தப் போராளிகளின் வாழ்வை பற்றி எந்தவிதமான சிந்தனையோ அல்லது அவர்களின் மறுவாழ்வுக்கான காத்திரமான செயற்பாடோ நாம் செய்யாமல் இருப்பதுக்கும் இந்த சிந்தனைதான் அடிப்படை காரணம் என்று நினைகின்றன்

நிழலிக்கு ஒரு பச்சை.

இப்போது அவர்களது மறுவாழ்வுக்கு ஒரு உதவி அதைச் செய்வதே பயனுள்ளதாகும். சில நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து இப்போது உதவிகளை அவர்களுக்குக் கொடுத்து அவர்களை வாழ வைத்தலே இப்போதைய தேவை.

Link to comment
Share on other sites

எதற்காக இந்த போராட்டம் ? எத்தனை தியாகங்கள், இழப்புக்கள் துயரங்கள்

இருந்ததும் இல்லாதது போன்ற நிலைமை

நினைக்கையில் தலைமை மீது தான் ஆத்திரம் வருகின்றது.

என்னதான் கடவுளாக மதித்தாலும் அவரும் சாதாரண மனிதன் தானே என்னதான் தனிமனித ஆளுமை மிக்க ஒருவராக இருந்தாலும் காட்டிலேயே மறைந்து வாழ்ந்த ஒருவரிடமிருந்து இதற்கு மேல் எதனை எதிர்பார்க்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதிக்கொண்டிருக்க முடியாது.

இங்கு எழுதப்படும்ம் கருத்துக்கள் தான் முக்கியமே தவிர,அவர் பின்னணி என்ன,பூர்வீகம் என்ன என்பது முக்கியமல்ல.

"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசும்'என்பார்கள்.

புலிவாலாக இருந்தால் செய்வது எழுதுவது எல்லாம் சரி,மாற்றுக்கருத்தாளன் எனில் அவன் எவ்வளவு நல்லது செய்தாலும் பிழை.இதைத்தான் உந்தவாலுகள் காலம் காலமாக வெளிநாடுகளில் கடைபிடித்தார்கள்.தாங்கள் செய்யும் சுத்துமாத்துக்களையெல்லாம் புலி என்றபோர்வையில் மூடிமறைத்தார்கள்.இதனால் சமூகவிரோதிகளெல்லாம் தாங்களும் நாலு காசைகொடுத்துவிட்டு அதே போர்வைக்குள் புகுந்துகொண்டார்கள்.இவைகள் எல்லாம் தெரிந்தும் தங்களுக்கு காசு வந்தால்காணும் என்று புலிகளும் அவர்களை அரவணைத்துக்கொண்டார்கள்.

அதன் பலாபலன் தான் முள்ளிவாய்கால் இரத்தம் காயமுன் இவர்களில் பலர் போய் ராஜபக்சாவின் கையை பிடித்தது.

அதைவிட யாரும் எந்த அதிகாரமும் கொடுக்காமல் வெளிநாடுகளிலும் தமது அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.பல பிரச்சனைகளுக்கு கட்டைபஞ்சாயத்து நடாத்தினார்கள்.இவைகளெல்லாம் மேற்குலகு அவதானித்துக்கொண்டே இருந்தது.இவங்களுக்கு ஒன்றும் தெரியாது சுத்திப்போட்டு போகலாம் என இருந்த பலர்தான் இப்போ ஓடுப்பட்டுத்திரிகின்றார்கள்.இதன் முதல் படிதான் சுவிஸ் கைதுகள்.இன்னமும் சில வருடங்களில் இந்த இனத்துரோகிகள் துடைதெடுத்துபட்டுவிடுவார்கள்.இவர்களுக்கு ஓடிஒழியக்கூட ஒரு நாடு இல்லை.அடுத்த தலைமுறைகூட இவர்களால் பிழையாக வழிநடத்தபாட்டுவிட்டார்கள்.வன்முறைகலாச்சாரத்தை இங்கு பரப்பியதில் இவர்களின் பங்கு அளப்பரியது.விடுதலைபோராட்டம் என்ற போர்வையில் இவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.எப்படியோ எல்லாவற்றிற்றும் ஓரளவு முடிவு வந்து விட்டது எஞ்சியவர்களும் இன்றோ நாளையோ என்ற நிலைதான்.

இதன் பின் தான் ஒரு ஆரோக்கியமான புலம் பெயர் சமூகம் உருவாகும்.

உங்களைப்பற்றியும் உங்களது இயக்க நடவடிக்கை பற்றியும் நீங்களே எழுதியுள்ளீர்கள்

வாழ்த்துக்கள்

இதைத்தவிர வேறு என்ன எழுதத்தெரியும் தங்களுக்கு...

முட்டாள்கள் திருடர்கள் படிக்காதவர்கள் தாதாக்கள் என்று சொல்லி ஒதுக்கிவைத்துவிட்டு தனயே நின்று எவருடன் எவருக்காக போராடப்போகின்றீர்கள்...?

Link to comment
Share on other sites

தலைமையையும், போராளிகளையும் குறை சொல்லமுடியாது; வல்லாதிக்க போட்டியில் சீனா , இந்தியா , பயங்கரவாதத்தை ஒழிக்க மற்றைய நாடுகள், துரோகிகள் எல்லாம் சேர்ந்து நடத்திய யுத்தம் இது

வரலாறு

கி.பி.1450ல் யாழ்ப்பாணம் தென்னிலங்கையிலிருந்து படையெடுத்துவந்த, செண்பகப் பெருமாள் (சிங்களம்: சப்புமல் குமாரயா), என்பவனிடம் தோல்வியடைந்தது. எனினும் 17 வருடங்களின் பின், தோற்றோடிய கனகசூரிய சிங்கையாரியன் இந்தியாவிலிருந்து படைதிரட்டிவந்து இழந்த நாட்டை மீட்டான்.

Link to comment
Share on other sites

தலைமையையும், போராளிகளையும் குறை சொல்லமுடியாது; வல்லாதிக்க போட்டியில் சீனா , இந்தியா , பயங்கரவாதத்தை ஒழிக்க மற்றைய நாடுகள், துரோகிகள் எல்லாம் சேர்ந்து நடத்திய யுத்தம் இது

தமிழீழ விடுதலைக்கு சீனாவும், இந்தியாவும், அமெரிக்காவும் ஆதரவில்லை என்பதையும், இந்தியா முழுமையாக எதிர்ப்புடன் சிறிலங்காவுக்கு உதவுகிறது என்பதையும் அறிந்து, அவற்றையெல்லாம் வெற்றி கொள்ளும் திட்டம் தலைமையிடம் இருந்ததா?

நீங்கள் சொல்வதை பார்த்தால் அப்படி ஒரு திட்டம் இருந்தாகவே தெரியவில்லையே? வெற்றிபெற முடியாத ஒரு போராட்டத்துக்கா இவ்வளவு ஆயிரம் அழிவுகள்?

அப்படி வெற்றி பெற முடியாத போராட்டத்தின் அழிவுப்பாதையில் தான் எமது மக்கள் வழிநடத்தப் பட்டிருந்தார்கள் என்றால் யார் அதற்கு பொறுப்பு, வழிகாட்டியல்லவா?

வாக்களிப்பு மூலம், அல்லது திறமை காரணமாக வேறு ஒரு தலைமையை கொண்டுவரும் சந்தர்ப்பம் இருந்தால் அது இனிமேலாவது வித்தியாசமான முறையில் தவறுகளுக்கு காரணமான கொள்கைகளை விட்டு வெற்றி பெறும் பாதையில் போக பயன்படும். கடந்து வந்த பாதையில் தொடருவது அழிவுகளின் தொடர்ச்சியாக அமையாதா?

வரலாறு

கி.பி.1450ல் யாழ்ப்பாணம் தென்னிலங்கையிலிருந்து படையெடுத்துவந்த, செண்பகப் பெருமாள் (சிங்களம்: சப்புமல் குமாரயா), என்பவனிடம் தோல்வியடைந்தது. எனினும் 17 வருடங்களின் பின், தோற்றோடிய கனகசூரிய சிங்கையாரியன் இந்தியாவிலிருந்து படைதிரட்டிவந்து இழந்த நாட்டை மீட்டான்.

இந்தியாவின் ஆதரவுடன் மறுபடியுமா? என்று இந்த கனவு முடிவுக்கு வரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராளிகளிடம் இருந்து இறுதியாக என்ன நடந்தது என்று அறிய துடிப்பதை விட, யார் யார் குழி பறித்தவர்கள் என்று அவர்கள் மூலம் கண்டு பிடிக்க முயற்சி செய்வதை விட, இந்தப் போராளிகளின் இன்றைய வாழ்வை செழுமைப் படுத்த முயல வேண்டும்.

//இந்த போராளிகளின் இன்றைய வாழ்வை செழுமைப் படுத்த முயல வேண்டும்.//

இந்த கருத்து நூற்றுக்கு நூறு வீதம் உண்மை இதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அதே நேரத்தில் எம்மை அழித்த எதிரிகள் யார் என தெரிந்த மாதிரி கூட நின்று குழி பறித்த துரோகிகள் யார் என தெரிந்து கொள்ளா விட்டால் எதிர் காலத்திற்கு ஆபத்து அல்லவா :unsure:

Link to comment
Share on other sites

சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதிக்கொண்டிருக்க முடியாது.

இங்கு எழுதப்படும்ம் கருத்துக்கள் தான் முக்கியமே தவிர,அவர் பின்னணி என்ன,பூர்வீகம் என்ன என்பது முக்கியமல்ல.

"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசும்'என்பார்கள்.

புலிவாலாக இருந்தால் செய்வது எழுதுவது எல்லாம் சரி,மாற்றுக்கருத்தாளன் எனில் அவன் எவ்வளவு நல்லது செய்தாலும் பிழை.இதைத்தான் உந்தவாலுகள் காலம் காலமாக வெளிநாடுகளில் கடைபிடித்தார்கள்.தாங்கள் செய்யும் சுத்துமாத்துக்களையெல்லாம் புலி என்றபோர்வையில் மூடிமறைத்தார்கள்.இதனால் சமூகவிரோதிகளெல்லாம் தாங்களும் நாலு காசைகொடுத்துவிட்டு அதே போர்வைக்குள் புகுந்துகொண்டார்கள்.இவைகள் எல்லாம் தெரிந்தும் தங்களுக்கு காசு வந்தால்காணும் என்று புலிகளும் அவர்களை அரவணைத்துக்கொண்டார்கள்.

அதன் பலாபலன் தான் முள்ளிவாய்கால் இரத்தம் காயமுன் இவர்களில் பலர் போய் ராஜபக்சாவின் கையை பிடித்தது.

அதைவிட யாரும் எந்த அதிகாரமும் கொடுக்காமல் வெளிநாடுகளிலும் தமது அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.பல பிரச்சனைகளுக்கு கட்டைபஞ்சாயத்து நடாத்தினார்கள்.இவைகளெல்லாம் மேற்குலகு அவதானித்துக்கொண்டே இருந்தது.இவங்களுக்கு ஒன்றும் தெரியாது சுத்திப்போட்டு போகலாம் என இருந்த பலர்தான் இப்போ ஓடுப்பட்டுத்திரிகின்றார்கள்.இதன் முதல் படிதான் சுவிஸ் கைதுகள்.இன்னமும் சில வருடங்களில் இந்த இனத்துரோகிகள் துடைதெடுத்துபட்டுவிடுவார்கள்.இவர்களுக்கு ஓடிஒழியக்கூட ஒரு நாடு இல்லை.அடுத்த தலைமுறைகூட இவர்களால் பிழையாக வழிநடத்தபாட்டுவிட்டார்கள்.வன்முறைகலாச்சாரத்தை இங்கு பரப்பியதில் இவர்களின் பங்கு அளப்பரியது.விடுதலைபோராட்டம் என்ற போர்வையில் இவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.எப்படியோ எல்லாவற்றிற்றும் ஓரளவு முடிவு வந்து விட்டது எஞ்சியவர்களும் இன்றோ நாளையோ என்ற நிலைதான்.

இதன் பின் தான் ஒரு ஆரோக்கியமான புலம் பெயர் சமூகம் உருவாகும்.

அப்பட்டமான புலிக்காச்சல் மட்டும் தெளிவாக தெரியுது... ஓடிப்போய் நல்ல வைத்தியராய் பாத்து மருந்து எடும் சன்னியாக்க முன்னம்..

மற்றும் படி பதில் சொல்ல கூட முடியாத அளவுக்கு அறிவு பஞ்சம்... !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.