Jump to content

லண்டனில் தமிழ் வாலிபர் கொலை


Recommended Posts

லண்டன் கில்ஸ்பரி பகுதியில் வாழ்ந்த டக்ளஸ் யோகராஜா (24) எனும் வாலிபர் கடந்த ஞாயிறு இரவு 9.00 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 வருடங்களாக லண்டனில் வசித்து வரும் இவர் வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இவரது கொலை தொடர்பாக புலன் விசாரணை செய்து வரும் போலீசார் இவரை கொலையாளிகள் நான்கு முறை சுட்டதில் இவரது உடலில் 4 குண்டுகள் துளைத்திருப்பதாகவும்

மேலதிக விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவர் இரவு தான் தங்கியிருந்த வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே

காத்திருந்த கொலையாளிகள் இவரை சுட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

அட கடவுளே :cry:

இந்த செய்தியை எப்படி அறிந்தீர்கள் அஜீவன் அண்ணா?

Link to comment
Share on other sites

இன்னுமொரு சம்பவம்.

கடந்த வெள்ளிக்கிழமை (09-12-05) London Streatham Odeon சினிமாவிற்கு ஆறு படம் பார்க்க போயிருந்தேன். படம் இரவு 11.30 அளவில் ஆரம்பித்தது. படம் ஆரம்பித்து ஒரு 15 நிமிடமளவில் உள்ளே வந்த பொலிசார் பின் வரிசையில் இருந்த சிலரை கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்த்து சென்றார்கள். ஏறத்தாள அரைமணி நேரம் நீடித்த இந்த கைது நடவடிக்கையின் போது பின் வரிசையில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் பொலீசாருக்கு எதிராக மிக கடுமையான எழுத்தில் தரமுடியாத வார்த்தைகளை உபயோகித்தார்கள்.

இவர்களை என்ன காரணதுக்காக கைது செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இவர்கள் இளைஞர் குழு (Gang) ஒன்றை சேர்ந்தவர்கள் என்றும் ஆட்களை தாக்க கூடிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்றும் பின்னால் இருந்த ஒருவர் சொன்னார் .... சரிவர தெரியவில்லை. வழக்கமாக விஜய் படம் போன்ற பெருமளவில் மக்கள் வரக்கூடிய படங்களிற்களிற்கு அனைவரையும் Odeon Cinema Security Officers செக் பண்ணிய பின்பே உள்ளே அனுமதிப்பார்கள். அன்றைய தினம் சோதனை ஏதும் நடக்கவில்லை என்பதால் அதனை பயன்படுத்தி ஆயுதங்களை உள்ளே கொண்டு வந்திருக்க வாய்ப்பு உண்டு.

Link to comment
Share on other sites

அட கடவுளே :cry:

இந்த செய்தியை எப்படி அறிந்தீர்கள் அஜீவன் அண்ணா?

இதுபற்றிய மேலதிக தகவல்களை பின்னர் தருகிறேன்.

இப்போதைக்கு ...................

இவர் முன்னர் ஒரு (Gang) குழுவாக இருந்து சண்டைகளில் ஈடுபட்டு வந்ததாகவும்

பின்னர் இதிலிருந்து விடுபட்டு கடந்த காலங்களில் அமைதியாக வாழ்ந்து வந்ததாகவும் நண்பர்கள் வழி விபரங்கள் கிடைத்தன.

பெற்றோர்கள் உடலை வவுனியாவுக்கு அனுப்புமாறு வேண்டிய போதிலும்

போலீசார் கொலையாளிகளை பிடிக்கும் வரையும் பூதவுடலை கொடுக்க மாட்டார்கள்.

பெற்றோர் மிகவும் மன வேதனையோடு வவுனியாவில் இருக்கிறார்கள்.

பூதவுடல் ஆகக் குறைந்தது ஒரு மாதமாவது போலீசார் வசமே இருக்கும்.

லண்டனில் வாழும் அவரது நெருங்கிய உறவினர்களை விசாரித்த போலீசார் பூதவுடலை அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பார்ப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அனுமதியளித்தனர்.

வேறு எவரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

அக் கொலை நடைபெற்ற சுற்று வட்டார ஒளிப்பதிவுக் கருவிகளின் பதிவுகளை எடுத்துக் கொண்ட போலீசார்

கூடிய விரைவில் கொலையாளிகளை பிடித்துவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சனத்துக்குள்ளே இப்படியும் வீரம் பேசி மரியாதையைக் கெடுக்கும் ஆட்களும் இருப்பது வேதனை.

Link to comment
Share on other sites

அப்பு ஏதோ இஞ்சை இருக்கத்தான் பயமெண்டு லண்டனுக்கு ஓடின ஆட்கள் இனி அங்கை இருக்கேலாது எண்டு ஊருக்கு வருகிற நிலை கிட்டடிலை வரும் போல கிடக்கு...........

Link to comment
Share on other sites

எந்த நாட்டில்தான் நிம்மதியாக வாழ்வது எங்குதான் பிரச்சனன இல்னல அதுவும் எங்கட பசங்க. பேசாமல் ஊருக்கு போகலாம்

Link to comment
Share on other sites

ஐரோப்பாவுக்கு வரும் இளைஞர்கள்

எதோ ஒரு சில காரணங்களால் குழுவாக இயங்கத் தொடங்குகிறார்கள்.

லண்டனில் பல குழுக்கள் இயங்குகின்றன.

இவர்கள் ஒன்று சேரும் இடங்களில் குழுச் சண்டைகள் மூளுகின்றன.

இது பற்றி ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன்.

இந்த இளைஞர்கள் ஆரம்பத்தில் தவறானவர்களே இல்லை.

சந்தர்ப்ப சூழ்நிலைகளே இவர்களை இந்நிலைக்கு தள்ளியிருக்கின்றன.

அதை தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இவர்களுக்கு எப்போது ஆபத்து வருகிறது?

இவர்கள் குழுவாக இருக்கும் போது

பாதுகாப்பாகவே இருக்கிறது..

ஒரு நாள் இவர்கள்

மனம் மாறியோ

மனம் திருந்தியோ

வெறுத்தோ வெளியேறிய பின்னர்

இவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இந்த தனிமையை பயன்படுத்துகிறது இன்னுமொரு குழு.

இது இளைஞர்களிடம் பேசும் போது தெரிகிறது.

ஆரம்ப காலத்தில் பழி வாங்க முடியாததை

தனியான போது செய்து முடிக்கிறார்கள்.

எனவே

பெற்றோர்களே

இளைஞர்களே

நாளை

உங்களுக்கும் மேலே உள்ள நிலை

ஏற்படலாம்.

முடிவு செய்ய வேண்டியது உங்கள் கைகளில்

கொலை செய்யப்பட்ட டக்ளஸ்

கடந்த காலங்களில் இருந்து மீண்டு

சம்பாதிக்க வேண்டும்

பெற்றோரைப் பார்க்க வேண்டும்.

திருமணம் செய்து அமைதியாக வாழ வேண்டும் என்று கூறி வந்தாராம்.

இருந்தாலும் மனதில் பயம் கலந்த மிரட்சியை அவரது

கண்களில் காணக் கூடியதாக இருந்தது என நெருங்கிய உறவினர்கள் கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே இளைஞர்கள் தவறு செய்ய வில்லை. எங்கள் சமூகம் இளைஞர்களை தூண்டி விட்டு அதில தாமும் குளிர் காய்ந்து பின்னர் அவர்களே இளைஞர்களை குற்றம் சொல்கிறார்கள். இந்த நிலையை மாற்றி திருந்தும் இளைஞர்களுக்கும் திருந்த நினைக்கும் இளைஞர்களுக்கும் சமூகம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அப்போது தான் வன்முறையை கட்டுப்படுத்த முடியும் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியும். சும்மா இளைஞர்களை குற்றம் சொல்வதிலும், அவர்களை திருந்த சொல்வதிலும் எந்த பிரயோசனமும் இல்லை

Link to comment
Share on other sites

இந்நிலை இப்போ ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் பரவி வருகின்றது. இங்கு சுவிசிலும் பல குழுக்கள் இயங்கி வருகின்றது. இதில் தற்போது முன்னனியில் பாசலில் இயங்கும் ஒரு குழுவும் அடுத்ததாக சொலத்து}ணில் இயங்கும் ஒரு குழுவும் வருகின்றன. சமீபத்தில் இந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் செயற்பாட்டினால் ஒரு குடும்பமே சீரளிந்துள்ளது.

நிதர்சன் சொல்வது போல் இவர்களைச் சமுதாயம் சீரளிக்கவில்லை. இவர்கள் இங்கு கிடைக்கும் சுதந்திரமும் சட்டமும் துணை போவதால் இப்படிச் சீரளிகின்றார்கள். இவர்களைத் திருத்த முயன்றவர்களைத் தம்மைக் கொல்ல முயல்பவர்களாக பொலிசில் முறைப்பாடு செய்கின்றார்கள். இதனால் பெற்றோரும் வேதனையுடனேயே வாழ்கின்றனர். தம்மோடு சேராத சக இளைஞனை தொலைபேசியில் அழைத்து மிகவும் கெட்ட வார்த்தையில் திட்டுவதுடன் மிரட்டவும் செய்கின்றார்கள். இந்த இளைஞர்களுடன் இளம் பெண்களும் சேர்ந்து கூத்தடிப்பதுதான் வேதனையின் உச்சக் கட்டம். அத்துடன் இப்பெண்கள் பகிரங்கமாகவே பணப்பசையுள்ள வேற்று நாட்டு இளைஞர்களோடு பாலியல் விடயங்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

புலிகளின் சர்வதேச நிதிப் பிரிவுத் தலைவர் லண்டனில் புலிகளால் சுட்டுக் கொலை எனும் தலைப்பில் சிறீலங்காவிலிருந்து வெளிவரும் லங்காதீப பத்திரிகையின் செய்தி தினக்குரல் பகுதியல் காணக் கிடைத்தது.

இதுபோன்ற பொய்யான செய்திகளை இலங்கை தமிழ் பத்திரிகைகளிலும் வந்துள்ளதாக குடும்பத்தினர் கூறினர்.

கொலை தொடர்பான விசாரணைகள் தற்போது இன்டர்போல் வசம் கையளிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸின் உடலை இலங்கை வவுனியாவுக்கு கொண்டு செல்ல இன்னும் லண்டன் போலீசார் அனுமதியளிக்கவில்லை.

இருப்பினும் நெருங்கிய சிலருக்கு உடலை பார்வையிட அனுமதியளித்த போது அதைவிட கூடுதலானவர்கள் வைத்தியசாலைக்கு போய் அசெளரியங்களை அங்கு உண்டாக்கியதால் யாரையும் அனுமதிப்பதில்லை எனும் முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.

தவிர

இலங்கையின் பத்திரிகைகளில் வந்த செய்திகள் காரணமாக உடலை வவுனியாவுக்கு கொண்டு செல்வதை விட லண்டனிலேயே ஈமக்கிரிகைகளை செய்யலாம் எனும் நிலைக்கு குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.

பெற்றோர்களுக்கு லண்டன் வர போலீசார் அனுமதிக்கலாம் எனத் தெரிகிறது.

இதோ அந்த தவறான செய்தி:

புலிகளின் சர்வதேச நிதிப் பிரிவுத் தலைவர் லண்டனில் புலிகளால் சுட்டுக் கொலை

விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப் பிரிவின் தலைவர் எனத் தெரிவிக்கப்படும் யோகராஜா டக்ளஸ் எனப்படும் நபர் லண்டன் நகரில் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சூட்டுக் கொலைச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி நிகழ்ந்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட யோகராஜா டக்ளஸ் 28 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஷ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செய்தி வட்டாரம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி யோகராஜா புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதிப் பிரிவின் தலைவராக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கிடைத்து வந்த உதவி நிதிகளை நிர்வகிக்கும் நிதித் தலைவர் பொறுப்பிலிருந்து வந்தார் எனவும், மேலும் இவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் மற்றும் புலிகள் இயக்க பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் ஆகியோருடன் மிக நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இவர் புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதி நிர்வாக விடயத்தில் செய்துள்ள மோசடி காரணமாகவே புலிகள் இயக்க உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.

மேற்படி யோகராஜா டக்ளஸ் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் இவரது உடலை ஈமக்கிரியைகளுக்காக ஷ்ரீலங்காவுக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை அவருடைய உறவினர்கள் செய்திருந்தார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கொலை சம்பந்தப்பட்ட மேலதிக விசாரணைகளை புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-லங்காதீப:17.12.2005-

http://www.thinakural.com/New%20web%20site...20/Shinhala.htm

Link to comment
Share on other sites

ஆயிரத்தில ஒன்று இப்படி நடக்குது.. இங்க புலத்தில எல்லாத்துக்கும் உழைப்பாளிகளின் பணத்தை வரியாக உறிஞ்சி பெனிபிட் என்று காசு கொடுக்கினம்..! அதை எப்படி செலவு செய்யுறது என்று தெரியாம இளசுகள்..போதைப் பொருள் மதுபானம் என்று சமூக விரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தினம்...! உழைக்க படிக்கத் தேவையில்லை என்று பலர் சிந்திக்கினம்..! அதால அவைக்கு பொழுதுபோக்க சண்டித்தனம்..பெண்கள் ஆண்களோடும் ஆண்கள் பெண்களோடும் சுத்துறது என்று இருக்கினம்..! லண்டனில் இது ஓவர்...! புறநகரங்களில் இப்படி பெரிய அளவில இல்லை..! அதால அங்க பொலீசுக்கு இப்படியான குழுக்களைக் கட்டுப்படுத்திறதில சிரமமில்லை..! லண்டன் சனத்தொகை அடர்த்தியான இடம் ஆகையால்... குற்றவாளிகள் பதுங்கவும் ஒழித்து வேறு நாடுகளுக்கு ஓடவும் வசதியா இருக்கு..! அடிப்படையில் மேற்கத்தைய அரசின் நிதி வழங்கல் முறைமைதான் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பாகி விடுகிறது..! பாவம் உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது..! அதுவும் படிச்சு வேலை எடுத்தா 30% ரக்ஸ்...படிக்காம குந்திட்டு இருந்தா சும்மா காசு...! :wink: :) :idea:

Link to comment
Share on other sites

குருவிகள் சொல்வது உண்மை.

வேலை செய்து வரிப் பணம் (Tex) கட்டி வாழ்வதை விட

அரசு கொடுக்கும் இலவச மானியப் பணத்தில் வாழும் போது தவறான வழிகளில் செல்ல காலமிருப்பதும் உண்மையே.............

இவர்கள் மத்தியில்

எதிர்காலத்தை நினைத்து கல்வி கற்போரும்

நல்ல முறையில் வாழ்வில் முன்னேறியவர்களும் இருக்கிறார்கள்.

ஆனாலும் ஒரு சிலரால்

முழு சமூகத்துக்கே கெட்ட பெயர் உண்டாவது என்னவோ வேதனைக்குரியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோகரா! அரோகரா!!

உந்த போடப்பட்டவரைப்பற்றி நல்ல செய்திகள்தான் வந்து கொண்டிருக்கிறது! மாண்ட மச்சானுக்கும் டக்கிலஸ்தானம் பெயராம்! அதைவிட அத்தியடிக்குத்தி டக்கிலஸின் அதே குணாம்ஸங்களும் கொண்டவராம்!

*கொலைகள்! *வாள்/கத்தி/கோடாரி/துப்பாக்கி வீச்சுக்கள்! *வழிப்பறிப்புக்கள்! *.. போன்ற அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கும்பலின் தலைவனாம்!! எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மிருகத்தினால் பாலியல் வதைக்கு உட்பட்ட பல இளம் தமிழ்ப்பெண்களின் பெற்றார்கள் வெளியே சொல்ல முடியாமல் இரத்தக் கண்ணீர் வடித்திரிக்கிறார்களாம்!!!

ஓ... ஈழ்பதீஸ்வரா! இந்த அரக்கனை அழித்து அற்புதத்தைச் செய்தவன் நிச்சயமாக ஒரு சமூக விரோதியாக இருக்கமாட்டான்!!!!

ரோகரா!!! .... கனக்கக் கதைக்கிறன்போல .... ரோகரா! அரோகரா!!!

http://www.nitharsanam.com/?art=13870

Link to comment
Share on other sites

ஐயோ ஐயோ,, நம்மட கூட்டாளியை போட்டாச்சோ?? அதெப்படியப்பா, டக்கிளஸ் எண்டு பெயர் வந்தாலே, செய்யகூடாத நல்ல காரியங்களை எல்லாம் செய்ய தூண்டுது? :lol: :? :shock:

Link to comment
Share on other sites

ரோகரா! அரோகரா!!

உந்த போடப்பட்டவரைப்பற்றி நல்ல செய்திகள்தான் வந்து கொண்டிருக்கிறது! மாண்ட மச்சானுக்கும் டக்கிலஸ்தானம் பெயராம்! அதைவிட அத்தியடிக்குத்தி டக்கிலஸின் அதே குணாம்ஸங்களும் கொண்டவராம்!

*கொலைகள்! *வாள்/கத்தி/கோடாரி/துப்பாக்கி வீச்சுக்கள்! *வழிப்பறிப்புக்கள்! *.. போன்ற அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கும்பலின் தலைவனாம்!! எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மிருகத்தினால் பாலியல் வதைக்கு உட்பட்ட பல இளம் தமிழ்ப்பெண்களின் பெற்றார்கள் வெளியே சொல்ல முடியாமல் இரத்தக் கண்ணீர் வடித்திரிக்கிறார்களாம்!!!

ஓ... ஈழ்பதீஸ்வரா! இந்த அரக்கனை அழித்து அற்புதத்தைச் செய்தவன் நிச்சயமாக ஒரு சமூக விரோதியாக இருக்கமாட்டான்!!!!

ரோகரா!!! .... கனக்கக் கதைக்கிறன்போல .... ரோகரா! அரோகரா!!!

http://www.nitharsanam.com/?art=13870

vavuniyab.JPG

மேலதிக தகவல்கள் ஏதாவது இருந்தால் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ,, நம்மட கூட்டாளியை போட்டாச்சோ?? அதெப்படியப்பா, டக்கிளஸ் எண்டு பெயர் வந்தாலே, செய்யகூடாத நல்ல காரியங்களை எல்லாம் செய்ய தூண்டுது? :lol: :? :shock:

அது பிறப்பில் ஏற்படுகின்ற பிரச்சனை :wink:

Link to comment
Share on other sites

குழுக்களிலிருந்து விலகி வாழ நினைப்பவர்கள் பற்றியும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் ரொறன்டோ இளைஞர்களால் நடாத்தப்படும் 'ToTamil' என்ற சஞ்சகையில் "சிறையிலிருந்து" என்று அகில் என்பவர் எழுதுகிறார்.

www.totamil.com

Link to comment
Share on other sites

நானும் தேடி பார்த்தேன் அதில் அந்த பத்திரிகையின் அனைத்து பக்கமும் pdf வடிவில் இருக்கிறது. கனக்க பக்கங்கள் இருப்பதால் எது என்று தேடி கண்டு பிடிக்கணும். சினேகிதி நேரடி லிங் இருந்தால் தாங்களன்

Link to comment
Share on other sites

பட்டயம் எடுத்தவன் பட்டயத்தினால் தான் சாவான் என எங்கேயோ படித்த ஞாபகமாயிருக்கிறது. எல்லை தாண்டி எதிரி எமது நிலத்தை ஆக்கிரமிக்கும் போது அங்கு வாலை சுருட்டிக்கொண்டு பூனைமாதிரி ஓடி ஒழிந்தவர்கள் இங்கு புலம் பெயர்ந்த தேசத்தில் சமூக உதவிப்பணத்தில் கஞ்சாவை புகைத்ததும் காற்றில் பறக்க ஆரம்பிக்கிறார்கள். இதில் நகைப்புக்கு உரியது என்னவென்றால் பலர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவதாகும் அது ஒரு வீரமா? :P :P இதைதான் கூறுவது செத்த பாம்பு அடிப்பது என...... கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு குழு இங்கு எஸன் நகரத்திலும் இருக்கிறது. இவர்களில் பல கட்டாக்காலிகள் விசா இலாத காரணத்தால் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸிக்கும் குடி பெயர்ந்து விட்டனர். ஒரு குழு எமது அடுத்த நகரத்தில் இருக்கிறது விரும்பியவர்கள் இந்த இணைப்பில் சென்று படங்களை மாத்திரம் பாருங்கள். தயவு செய்து அவர்களின் பாடல்களை கேளாதீர்கள் அது மிகவும் ஆபாசம் நிறைந்தது. இதில் வேதனைக்குரியது என்னவென்றால் இவர்களுடன் சேர்ந்து சிறிய தமிழ்ப்பெண்கள் கூத்தடிப்பது தான். 12 - 13 வயது மத்திக்கத்தக்க சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இவர்களுடன் நட்புகொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

நானும் தேடி பார்த்தேன் அதில் அந்த பத்திரிகையின் அனைத்து பக்கமும் pdf வடிவில் இருக்கிறது. கனக்க பக்கங்கள் இருப்பதால் எது என்று தேடி கண்டு பிடிக்கணும். சினேகிதி நேரடி லிங் இருந்தால் தாங்களன்

அது அப்பத்திரிகையில் தொடராக வருகிறது..

முதற்பகுதி 7வது பதிப்பின் 3ம்4ம்பக்கத்தில்.

இறுதிப்பகுதி கீழே உள்ள இணைப்பில்

http://www.totamil.com/current%20issue/04%20copy.pdf

Link to comment
Share on other sites

ஊமை,, நீங்கள் கொண்டுவந்து போட்ட இனையத்தளத்தின் முகவரியை நீக்கிவிடுங்கள்,,தேவையில்லாத குப்பைகளை இங்க கொண்டு வந்து போட்டிருக்கிறீங்க? மனிசர்களா அதுங்க,,, :evil: :evil: :evil:

அட தங்கட வீரவசனங்களை ஊர் உலகம் அறியட்டுமெண்டு ஒரு இனையத்தளம் வேறையா? மட்டுறுத்தினர்களே, அந்த இனையத்தளமுகவரியை உடனடியாக நிக்கிவிடுங்க,, :idea:

ஆப்பிரிக்கன் கூட ஐரோப்பியன் ஸ்ரலைக்கு மாறிக்கொண்டு வாரான்,, இலங்கையில இருந்து வந்த சில வலசுகள் ஆப்பிரிக்கன் காட்டுக்க இருக்கிற வேடர்கள்மாதிரி மாறிக்கொண்டு வருகுதுகள்.... :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.