Jump to content

லண்டனில் தமிழ் வாலிபர் கொலை


Recommended Posts

எல்லாவற்றையும் மறைக்கிறதாலதான்

உண்மைகள் பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது.

அதுவே தவறுகள் தொடர வழி செய்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

எல்லாவற்றையும் மறைக்கிறதாலதான்

உண்மைகள் பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது.

அதுவே தவறுகள் தொடர வழி செய்கிறது.

எப்படியானவற்றை அறிந்து கொள்ளச்சொல்லுறீங்க அஜீவன்?? அந்த வேடர்கள் செய்த செய்கின்ற திருவிளையாடல்களையா? இப்பொழுதுதான் இந்த இனையத்தளத்தினை அறிந்தேன்,, அதன் மூலம், அந்த வேடர்களின் பிறப்புகளை அறிந்தேன்,, ஏதோ தாய் நாட்டுக்கு செய்யும் தொண்டாக நினைத்து செய்கின்றார்களோ என்னமோ??

அந்த இனையத்தள முகவரியை பார்த்திருக்காவிட்டால் நான் என்பாட்டில் இருந்திப்பேனே? இதை அறிந்து வைத்திருத்தால் தான் என்ன நன்மை வரப்போகிறது? :roll: :?

Link to comment
Share on other sites

டண்

அம்பலப்படுத்துவதே கடினமானது.

பார்த்தாவது மகாஜனங்கள் முடிவெடுக்கட்டுமே?

Link to comment
Share on other sites

இந்த கோஸ்டிச்சண்டையில் இறந்த "டக்லஸ்" தொடர்பாக இன்றொரு செய்தி கேள்விப்பட்டேன். ......

...... மாவீரர் நாள் லண்டனில் நடந்துகொண்டிருந்த ஒரு மண்டபத்திலிருந்து இதே டக்லஸ்ஸும் அவனது கும்பலும், இன்னுமோர் கோஸ்டிக்கும்பலுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்திருந்தார்களாம்! .."நாங்கள் இந்த குறிப்பிட்ட மண்டபத்தில் நிற்கின்றோம்!!!!! இயலுமாயின் வாருங்கள் பார்க்கலாம்" என்று!!!!!!! .......

....... அதுவும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!!! அம்மண்டபத்தில் கோஸ்டிச்சண்டை?????? .....

ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள்!! இந்த நாய் கோஸ்டிச்சண்டைக்கா?? மற்றைய எதிர்க் குறூப்பை அழைத்ததென்று???? அதுவும் மாவீரர் நாள் நிகழ்வு நடக்கும் மண்டபத்துக்கு!!!!!!!!!!!!!! ........ அங்கு கோஸ்டிச்சண்டை மூள்வதன் மூலம் நிகழ்வைக் குழப்பலாம்!!!!!!! அல்லது அம்மண்டபத்திலேயே ஒரு இரத்தக்களறியை ஏற்படுத்துவதன் மூலம் லண்டனிலில் இனி தேசியத்திற்கான நிகழ்வுகளை தடுக்கலாம்!!!!!!! ....

..... நிச்சயமாக இது ஒரு பாரிய பின்புலத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியே!!!!!!!!!!!!!!!!!!!!! ஒரு காலத்தில் பெண்களுக்காக/போட்டிகளுக்காக/... வளர்ந்த இந்தக் கோஸ்டிகள், இன்று புலத்தில் எம் எதிரிகள்/கூலிகளுக்கான மிகப்பெரிய ஆயுதமாக மாறுயுள்ளது!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்குள்ள குழுக்களுக்கு இலங்கை தூதரகத்தால் பணம் வழங்கப்பட்டு நினைவெழுச்சி நாளை குழப்புவதற்கான திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்த குழுக்களுக்கும் இ...கை தூதரகத்திற்குமான தொடர்பு சம்பத்தப்பட்டவர்களிடம் நிருபிக்கப்பட்டது.......

அது தான் மிகப் பெரிய பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்கள்.....

Link to comment
Share on other sites

லண்டனோ அல்லது வேறேந்த நாடுகளில் குடியேறுபவர்கள் வன்முறையில் குழு மேதல்கள் ஈடுபடுவது உள்ளூர்வாசிகளை பெரும் சினத்தை உண்டு பண்ணுவது.

இது வரைகாலமும் லண்டனில் நடந்த சச்சரவுகளை விவரிக்கும் போது ஊடகங்கள் வஞ்சகம் இன்றி புலிச்சாயம் பூசுவதில் பின்னிப்பதில்லை. இதற்கு BBC கூட விதிவிலக்கில்லை. ஒளிவீச்சில வரும் சண்டைகாட்சியையும் போட்டு ஆயுதக்கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள் இங்குவந்து தொடர்கிறார்கள் என்று கூறி திருப்திப்பட்டுக் கொண்டனர். இது சிங்கள இனவாத அரசுக்கு பழம்நழுவி பாலில் விழுந்தமாதிரி ஓசியிலை கிடைச்ச பிரச்சாரம்.

ஆனால் இன்று நிலமை மாறி இலங்கை தூதரகங்களின் புலநாய்வுப்பிரிவினர் புலம்பெயர் தமிழ்ச்சமூகங்களில் குழப்பங்களை உருவாக்க குழுமோதல்களை தூண்டும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இதை உள்ளூர் ஊடகங்களின் துணையுடன் அம்பலப்படுத்த வேண்டி தேவையும் கடமையும் புலம் பெயர் தமிழ்ச்சமூகங்களிற்கு உண்டு. இதுவரை காலமும் நீங்கள் சுமந்த களங்கத்தை நீக்கிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம். ஒரு நாட்டில் இன்னொரு நாட்டின் தூதரகத்தின் துணையுடன் நடக்கும் வன்முறை என்பது பாரிய பின்விளைவுகள் ஏற்படுத்தக் கூடியது. Investigative Journalists இன் துணையுடன் இதை வெளிக்கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த டக்லஸ்ஸைப்போல் புலத்திலுள்ள பல இளைஜர் குழுக்களின் பின்னனியில் இ*ங்கை அரசாங்க தூதரகங்களே இருப்பதாக நான் முன்பொருமுறை கருத்தெழுதியதற்கு, களத்திலுள்ள சில அதிபுத்திசாலிகள் ஏழனம் செய்து எழுதினார்கள்!!!!! ஆனால் இன்றோ இந்த டக்லஸின் பின்னனி பலரால் அறியப்பட்டுள்ளது. இவனைப்போல் பல குழுத்தலைவர்களுக்கு பணம், ஆலோசனகள் குறிப்பிட்ட தூதர புலான்வாவு அதிகாரிகள் மூலம் வழங்கப்படுகிறதாம். இவ்வதிகாரிகளில் பலர் மு*லீங்களாம்!!!!!!! இவர்கள் இக்குழுக்களின் தலைவர்களை லண்டனின் "Hendon" பகுதியிலுள்ள "சிலோனின் இளவரசன்" பெயர் கொண்ட உணவகத்தில் சந்திப்பார்களாம்!!!!

இந்தக் குழுக்களில் கீழிருக்கும் பலர் மண்டைக்குள் இல்லாததுகள். எதோ புரட்சி செய்கிறோம்?? என்று பின்னுக்குத் திரியுதுகள்!!! ஓசித்தண்ணி, ஓசிச்சாப்பாடு, குளிர்காயப் பெண்கள், சுற்றுவதற்கு சொகுசு வாகனங்கள், போதைப்பொருருட்கள் எனத் திரியும் அதுகளுக்கு வேறென்ன வேன்டும் என நினைக்குதுகள்!!! அளவிற்கு அதிகமான பெற்றோரின் கட்டுப்பாடுகளிலிருந்து ஓடியதுகளும், பெற்றோரின் கட்டுப்பாடேயற்று றோட்டிலேயே நிற்பதுகளுமே இக்குழுக்களில்!!!!! இவர்களை போட்டி போட்டு இக்குழுத் தலைவர்கள் இணைக்கிறார்களாம்!!!!!! இறுதியில் அக்குழுக்களே உலகமென திரிகிறார்கள்!!!!

இக்குழுக்களின் ஆடம்பர வாழ்க்கை, ஆயுதங்கள் வாங்குதல், கைது செய்யப்பட்டால் ஏற்படும் சட்டப்பிரட்சனகளுக்கு ஏற்படும் செலவீனங்கள், ... போன்ற இன்னாரன்னவற்றிற்கு பணத்தேவை கணக்கிலடங்காதவை!!!!!!!! இதை ஈடுசெய்வதற்கு களவுகள், கிரடிட்காட் மோசடிகலில் ஈடுபட்ட இவர்களுக்கு ஒரு மாற்று பணம் தேடும் வழியை இந்த தூதரகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தத் தூதரகத்திற்கு "இறாலை எறிந்து சுறப்பிடிப்பது" போல, கொஞ்சப்பணத்திற்காக அவர்களின் தேவைகளை இவர்கள் பூர்த்தி செய்கிறார்கள்.

ஆனால், விரைவில் இக்கோஸ்டிகளின் அட்டகாஸங்கள் இங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்டுமென மக்கள் நம்புகிறார்கள்???????!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இணைய தொடர் நீக்கப்பட்டுள்ளது

நல்ல காரியம் செய்தீர்கள் நன்பரே... ஆம் அவ்விணைப்பு கட்டாயம் யாழ் இணையம் போன்ற தரமான இணையங்களில் இணைப்பு கொடுப்பதற்கு தகுதியற்ற இணையம் என்பது என்னுடைய கருத்து.

புலத்தில் இருக்கும் சில குடும்பங்கள் அப்படியான இணையங்களை கட்டாயம் பார்வையிடவேண்டும் என்பதும் என்னுடைய கருத்து ஏன் என்றால் புலத்தில் இருக்கும் பல குடும்ப பெரியவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை வளர்க்கத்தெரியாத முறையில் வளர்க்கிறார்கள்... அதை நான் நேரில் பர்த்தும் இருக்கிறேன் .......

Link to comment
Share on other sites

நண்பர்களே நான் ஏன் இந்த குப்பைக்குழிக்குச் செல்லும் இணைப்பை இங்கு பிரசுரித்தேன் என்றால் தற்போதய தாய் தந்தையர்களும் எதிகால தாய் தந்தையரும் இது போன்ற இணையங்களை கருத்திலெடுக்கவேண்டும். அண்மையில் எமது நகரத்தில் சில குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு தேவைக்கென இணைய நுளைவு வசதியை புதிகாக தங்களுக்கு பெற்றுக்கொண்டனர். ஓரிடத்தில் ஒரு சிறிய பெண்பிள்ளை இணைய தொடர்பு கிடைத்தவுடன் அண்ணா சற்று பொறுங்கள் என்று எனக்கு கூறிவிட்டு இந்த இணைய குப்பைக்குள் சடுதியாகச் சென்றார். அதனை அவருடடைய தாய் தந்தையர்களும் வேடிக்கை பார்த்தனர். தமது பிள்ளைக்கும் குறிப்பிடத்தக்க கணனி அறிவு இருக்கிறது என்று பிள்ளையை புகழ்ந்தாரே தவிர அது எந்த பக்கத்தை பார்த்தது என கவனிக்க தவறி விட்டனர். இதேபோல் இன்னொரு குடும்பத்தில் இவ்வாறு செயும் போது தந்தையார் சொன்னார் தம்பி மகளுக்கு படிப்பு தேவைக்கு MSN Mseesger தேவைப்படுகுதாம் அதனைவும் போட்டுவிடும் என்று எனக்குச் சொன்னார். நானும் வியப்புடன் போட்டு விட்டேன். பின்னர் 3 மாதம் கழித்து கணனியில் ஏற்பட்ட தவறை சரிசெய்ய சென்ற போது சொன்னால் நம்பமாட்டீர்கள் 185 சினேகிதருடைய பெயர்களை அந்த சிறுமி தனது நண்பர்கள் பட்டியலில் இணைத்துள்ளார். இதில் குறிப்பிடக்கூடியது என்னவென்றால் அந்த 185 பெயரில் யாரும் பெண்பிள்ளைகள் கிடையாது.இது ஒருபுறமிருக்க தன்னை அரை / முழு நிர்வாணமாக ஜேர்மன்-தமிழ் தோழியருடன் சேர்ந்து ஒளிப்படம் பிடித்து அதனை மின்னஞ்சல் மூலமாக தனது நண்பர்கள் சிலருக்கு அனுப்பியுள்ளார். இதனை நான் குறித்த பிள்ளையின் தந்தைக்கு காண்பித்தேன். அவர் தான் பிழை விட்டுவிட்டேன் என தனது தலையில் அடித்து அழுதார்.

அதைவிட MSN தூதுவரில் தனது நண்பர்கள் சிலருடன் காம வார்த்தைகள் ததும்ப அரட்டையடித்துள்ளார். அவர்களில் வயதுக்கு வந்த தமிழ் இளைஞர்களே அதிகம் அவர்கள் தங்கள் படங்களையும் MSN மூலம் இவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருடைய MSN தூதுவரில் நோர்வேயில் வசிக்கும் பிரபல ஊடகவிலயாளர் (யார் என்று தெரியும் தானே) ஒருவரது மின்னஞ்சல் முகவரியும் இருக்கிறது. அவரும் மிக கேவலமாக அரட்டையடித்துள்ளார். தனக்கு 20 வயது எனவும் தான் பிரித்தானியாவில் இருக்கிறேன் என்றும் தனது வழமையான படத்தையும் அனுப்பியிருக்கிறார்.

இவற்றைப்பறி தாய் தந்தையருக்கு விளங்கப்படித்தினேன். அவர்கள் உடனடியாக தங்கள் இணைய இணைப்பை துண்டித்துவிடுமாறு கூறிவிட்டனர். ஆனால் இணைய வழங்குனர் 2 வருட உடன்பாட்டில் இணைய நுளைவு வழங்கப்பட்டபடியால் இரண்டு வருடம் கழித்து தான் அவர்கள் நிற்பாட்டுவார்கள் என கூறிவிட்டனர். ஒருவர் பிள்ளைக்குப் பயந்து Modem மில் இணைப்பை ஏற்படுத்தும் இடத்தில் பொலுத்தீன் பையை சிறிதாக நுளைத்து தொடர்பு இலாதபடி செய்துள்ளார். ஏனெனில் நேரடியாக நிறுத்தினால் பிள்ளை தம்முடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுப் போய்விடும் என்ற பயத்தினால் இப்படி பயந்து வாழ்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் இப்படித்தான் ஐரோப்பாவில் பல பெற்றோர் கனணி அறிவில்லாமல் பணம் சேர்ப்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள் அத்துடன் வீட்டில் கனணி 1 இருந்தால் தான் கவுரவம் எனவும் அதில் முக்கியமாக இணைய இணைப்பு இருக்கவேண்டும் என நினைத்து தொடர்பு எடுத்துக்கொடுக்கிறார்கள் ஆனால் அதை தன்னுடைய பிள்ளை எதற்கு பயன்படுத்துகிறது என பார்க்கமாட்டார்கள். எங்காவது விசேடங்கள் நடக்கும் இடங்களில் கூடி இருந்து கதைக்கும் போது தன்னுடையவீட்டிலும் கணனி ூ இணையத்தொடர்பு இருக்கிறது என பெருமையாக சில பெற்றோர் இப்போது கூட கதைக்கிறார்கள் என்பது தான் வேதனையான விடயம்

Link to comment
Share on other sites

முதலில் நான் இந்த செய்தியை இங்கு இணைத்ததற்குக் காரணம் இங்கு(லண்டனில்) பல மர்ம செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக வதந்திகள் உலாவுகின்றன? இவற்றின் உண்மை தன்மைகளை, இங்குள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாக பிரித்தறியமுடியாதுள்ளது! இச்செய்தி இவ்விணையத்தில் வருவதற்கு முன்னமே இதே போன்ற செய்திகள் பலர் வாய்வழி வரக் கேட்டுள்ளேன்!! .....

...... * இங்குள்ள இரு தமிழ் ஊத்தைகளின் கும்பல் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதாம், ஒரிரு மர்ம மனிதர்கள் ஒரு கும்பலை அணுகி அவர்களுக்கு பயங்கர ஆயுதங்களை வாங்கித்தருவதாக கூறியதாம்!!! அக்கும்பலோ, அவர்கள் லண்டன் பொலிசாராக இருப்பார்களென்று மறுத்து விட்டதாம்!!!!!!! யார் இந்த கும்பலை அணுகிய மர்ம மனிதர்கள்????? ஏன் இவர்களுக்கு ஆயுதம் வாங்கி கொடுக்க முற்பட்டார்கள்???? ....*

..... *கரோ பகுதியிலுள்ள ஒரு சுப்பமாக்கற், ஒரு பெற்றோல் நிலையத்தில் சில முஸ்லீம் இளையர்கள் வேலைக்கு வந்துள்ளார்களாம்??? அவர்கள் அங்கு செல்லும் எம்மவர்களை அனுகி நீங்கள் இலங்கையா? இங்கு எங்கிருக்கிறீர்கள்? ... இப்படி பலவகையான கேள்விகளை கேட்டு நட்பு கொண்டாட முற்படுகிறார்களாம்??? .... எனது நண்பரொருவர் அக்குறிப்பிட்ட பெற்றோல் நிலையத்துக்கு சென்றிருந்தாராம்! அக்கேள்விகளைக் கேட்ட அம்முஸ்லீம் இளையனிடம் தம்பி நீங்கள் இலங்கையில் எவ்விடமென்று கேடிருக்கிறார்!! நான் கிழக்கைச் சேர்ந்தவன் என்று பதில் வந்ததாம்!! என் நண்பரோ கிழக்கில் எவ்விடமென்று கேட்டிருக்கிறார்!! அம்முஸ்லீம் இளையனோ மட்டக்களப்பு என்றிருக்கிறான்!! என் நண்பரும் நானும் மட்டக்களப்புத்தான்! நீர் மட்டக்களப்பில் எவ்விடமென்று மேலும் கேட்டிருக்கிறார்!! அம்முஸ்லீம் இளையன் முளித்துக் கொண்டு பதில் கூறாமல் தடுமாறிக்கொண்டிருந்தானாம்!!! ஒன்றில் அம்முஸ்லீம் இளையன் இங்கு யாரோ கிழக்கு மட்டக்களப்பைச் சேர்ந்தவன் எனும் பெயரில் இங்கிருக்கவேணும்? இல்லையேல் ஒரு இங்குலாவும் மர்மத்தலைகளில் ஒருவனாக இருக்க வேண்டும்???

இப்படி பல கதைகள்...... ஒன்று மட்டும் உண்மை! லண்டனில் முடக்கிப் போயிருக்கும் தேசியத்திற்கான செயற்பாடுகளை முற்றாக முடக்குவதற்கு சிலரல்ல! பலர்!! எம்மிடையேயுள்ள எச்சிலிலைகளின் உதவியுடன் களமிறங்கியிருக்கிறார்கள்!!!

_________________

"வலிமையே வாழ்வு"

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6284&start=0

Link to comment
Share on other sites

இப்படி பல கதைகள்...... ஒன்று மட்டும் உண்மை! லண்டனில் முடக்கிப் போயிருக்கும் தேசியத்திற்கான செயற்பாடுகளை முற்றாக முடக்குவதற்கு சிலரல்ல! பலர்!! எம்மிடையேயுள்ள எச்சிலிலைகளின் உதவியுடன் களமிறங்கியிருக்கிறார்கள்!!!

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6284&start=0

போராட்டத்தின் பால் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை திசை திருப்ப குழுமோதல்கள் தவிர வேறு எதையும் இலகுவில் கையாள்வது கடினம்.. ஒரே ஊர்மக்களைக்கூட இலகுவில் பிரித்துவைக்க முடியும்...

இது காலம் காலமாய் இந்தியாவில் கைகொள்ளும் தந்திரம்தான். மக்கள் ஒரே இனமக்கள் எப்போதும் ஒற்றுமையாய் இருக்க விடமாட்டார்கள்.. சாதி எண்டும் சமயம் எண்டும், அரசியல் கட்ச்சி எண்டும், போதாதுக்கு குண்டர்கள் எண்டும் பிரித்து வைப்பார்கள், அதுக்கு உதவியும் செய்வார்கள்..... இல்லாவிடால் அம்மக்கள் ஓண்றாகச் சேர்ந்து எதாவது செய்யப் புறப்பட்டு மாநில வாரியக அடித்துக் கொள்ள ஆரம்பித்திவிடுவார்கள்.......! பிறகு எப்படி பலநாடு சேர்ந்த இந்தியா..? எப்படி ஒண்றாய் இருக்கும்....????

இது சாணக்கியர் சொல்லிக் குடுத்த பிரித்தாளும் தத்துவமுங்கோ.....!

Link to comment
Share on other sites

இந்த கொல்லப்பட்ட கும்பலின் தலைவன் பற்றிய கேள்விப்பட்ட செய்தியொன்றை ....

... லண்டன் கிங்ஸ்பரி பகுதியில் இரவு 10 மணியளவில் தனது வேலையை முடித்து விட்டு வந்த எம்மவர் ஒருவர், தனது வாகனத்தை கடைத்தெருவில் நிறுத்தி வைத்தி விட்டு ஏதோ பொருட்களை வாங்க கடையொன்றுக்கு சென்று, வாங்கிய பின் தனது வாகனத்துக்கு திரும்பி, வாகனக் கதைவை திறந்தவுடன், இந்த டக்லஸ்ஸுடன் இன்னும் ஓரிருவராம் அந்த வாகன பின் கதவு வழியே உடன் காரினுள் ஏறி, துப்பாக்கியை வைத்து, மிரட்டி, அவரிடம் உள்ள வங்கி அட்டைகள் மூலம் எடுக்கக்கூடிய அதிகூடிய பணத்தை எடுத்துவரக் கூறி மிரட்டி, எடுத்தது மட்டுமல்லாமல் அவரிடமிருந்த வங்கி அட்டைகள்/கிரடிட் காட்டுகளைப் பறித்து, அவரை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பொலீஸுக்கு அறிக்க கூடாதென மிரட்டி, அப்படி பொலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டால் குடும்பத்தையும் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்களாம்!! பாவம் அந்த சிறு உழைப்புத் தொழிலாளி, மிகப்பெரிய பணத்தை இழந்ததுமல்லாமல் தேவையற்ற சட்டப் பிரட்சனைகளையும் எதிர் கொண்டுள்ளார்!!!!!!

இப்படியானவர்கள் திருந்தியும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை???????????? இவர்கள் தங்களுக்குள் அடிபட்டு இறப்பதே மேல்!!!!!!!!!

Link to comment
Share on other sites

சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை பற்றிய எல்லா விபரங்களும் அக்குவேற ஆணிவேறயா சொல்லுறீங்க சரி.அது ஏன் அவர்களை போட்டு தள்ளினா போல இதெல்லாம்?

அதனால் என்ன பிரயோசனம்? இப்பிடியான சமூகவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு வழங்கி எம்மவர்களின் இயல்பு வாழ்க்கையயும் கெளரவத்தயும் காப்பத்தலாம் தானே?

கனடாவில் அப்பிடி நடந்து இருக்கிறது.

ஒரு சிலர் இன்னமும் வாலாட்டிகொண்டு திரிஞ்சாலும்

நிறையபேர் அடங்கிட்டினம் என்பது உண்மை! 8)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

07.01.06

கரவெட்டி வாசி லண்டனில் கத்தியால் குத்திக்கொலை!

யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் லண்டனில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். லண்டன் விம்பிள்டன் பகுதியில் நீண்ட காலமாக வசித்துவந்த சுப்பிரமணியம் சிவ குமார்(வயது 38 ) என்பவரே கொலையுண்ட வராவார். கடந்த வியாழனன்று இனந்தெரியாத நபர்களால் இவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று இங்குள்ள அவரது உறவினருக்கு அறிவிக்கப்பட்டிருக் கிறது.கரணவாய் கிழக்கு, செம்பாடு தூதாவளை யைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந் தையே கொலையுண்டவராவார்.

இவர் விம்பிள்டன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவந்தார் என்று கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக லண்டன் பொலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

உதயன்

Link to comment
Share on other sites

சனி 07-01-2006 06:27 மணி தமிழீழம் [நிருபர் மாறன்]

லண்டனில் விம்பில்டனில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக அறிவிப்பு.

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கரணவாய

Link to comment
Share on other sites

அடுத்த கொலையா...என்ன மாதம் ஒரு கொலையா..! வாழ்க வளர்க்க லண்டன் தமிழர் கொலைக் கலாசாரம்..! :shock: :roll: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் லண்டன் தமிழர்களுக்குள் தான் அடங்குகிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் தமிழர்களுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு.....?

Link to comment
Share on other sites

லண்டன் தமிழர்களுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு.....?

கொலை செய்யப்பட்டது..படுவது லண்டன் தமிழர்..!:roll: :shock: :idea:

Link to comment
Share on other sites

நீங்களும் லண்டன் தமிழர்களுக்குள் தான் அடங்குகிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா....?

இது எங்களைக் குறித்தால்.. பதில். எமக்கும் லண்டன் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..! :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலும் கொலை செய்வதும் செய்யப்படுவதும் தமிழர்களே........

Link to comment
Share on other sites

இதைப்பற்றி யாரையும் குறை கூறி பிரயோசனம் இல்லை. இதில் முழுத்தவறும் பிரித்தானிய சட்ட இயற்றுனரையும் காவல்துறையினரையும் தான் சாரும். ஏனெனில் அங்கு குண்டர்களுக்கும் தெருச்சண்டியர்களுக்கும் எதிரான சட்டங்கள் அவர்களை சரியாக தண்டித்து சீர்திருத்தவில்லை என்பதையே இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக காட்டுகின்றன. மற்றது பிரித்தானியாவில் காவல்துறையினரை உதவி கோரி அழைத்தால் அவர்கள் ஏறக்குறைய 01 மணித்தியாலத்தின் பின்னரே சம்பவ இடத்துக்குச் செல்கின்றனர். இது அவர்களின் அசண்டையீனமோ அல்லது இயல்போ என்பது புரியவில்லை. இங்கு ஜேர்மனியில் கத்திக்குத்தில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் (டுஇஸ்பேர்க் Duisburg - Moers மோஎர்ஸ்) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை என்று நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் உடனே நான் சிறீலங்கன் எனவே என்னை சிறையில் இடாது சிறீலங்காவுக்கு அனுப்பும் படி நீதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார். அதற்கு நீதிபதி புன்முறுவல் பூத்தபடி சரி உங்கள் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் ஜேர்மனியில் கொலைமுயற்சியில் ஏடுபட்டமைக்காக எமது நாட்டின் தண்டனையை அனுபவித்த பின்னரே நீங்கள் உங்கள் நாடு சென்று அங்கு மகிழ்ச்சியாக வாழலாம் என தீர்ப்பளித்தார். எனவே அவருக்கு தண்டனை முடிவடைந்தபின்னர் இலங்கை நோக்கி செல்லும் விமானம் ஒன்று அவரையும் அவரது சோகச்சுமையையும் தாங்கிச்செல்லும் என்பது உண்மை :P :P

Link to comment
Share on other sites

தாயகத்திலும் கொலை செய்வதும் செய்யப்படுவதும் தமிழர்களே........

அதையே உலகம் பூராவும் செய்து தமிழர்களை அழிக்கப் போறேளா...பல விதத்திலும்..! லண்டன் சிங்களவன் கொலை செய்யுறானா..இல்ல செய்யப்படுறானா..??! தமிழர்கள் மட்டும் ஏன் இப்படி..???! :roll: :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.