Jump to content

லண்டனில் தமிழ் வாலிபர் கொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற இனத்தினருக்கு சட்டம், பொலிஸ் என்ற பயம் உள்ளன. லண்டன் தமிழரில் பலர் சட்டம், பொலிஸ் என்றெல்லாம் சிந்திப்பதேயில்லை. எனவே கொலைகள் நடக்கின்றன. மேலும் கொலையாளிகளை எம்மவர்கள் தெரிந்தாலும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் (வெகுமதி கொடுத்தால் செய்வார்கள்). எனவே சண்டியர்களுக்குத் தைரியம் இருக்கின்றது (தைரியம் இல்லாமல் எப்படி சண்டியராவது?)

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

" லண்டன் தமிழரில் பலர் சட்டம்இ பொலிஸ் என்றெல்லாம் சிந்திப்பதேயில்லை." அது அப்படி இல்லை நாட்டுல இருந்து இங்க வந்தா Rules and Laws குரங்குட கயில பூமாலை கொடுத மாதிரி இருக்குது அப்புறம் வேற என்ன நடக்கும்.... :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள் நீங்கள் லண்டன் வாழ் தமிழர்கள் எல்லோரையும் குற்றம் சாட்டுவது தவறு.....

Link to comment
Share on other sites

07.01.06

கரவெட்டி வாசி லண்டனில் கத்தியால் குத்திக்கொலை!

யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் லண்டனில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். லண்டன் விம்பிள்டன் பகுதியில் நீண்ட காலமாக வசித்துவந்த சுப்பிரமணியம் சிவ குமார்(வயது 38 ) என்பவரே கொலையுண்ட வராவார். கடந்த வியாழனன்று இனந்தெரியாத நபர்களால் இவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று இங்குள்ள அவரது உறவினருக்கு அறிவிக்கப்பட்டிருக் கிறது.கரணவாய் கிழக்கு, செம்பாடு தூதாவளை யைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந் தையே கொலையுண்டவராவார்.

இவர் விம்பிள்டன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவந்தார் என்று கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக லண்டன் பொலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

உதயன்

தமிழ் குடும்பஸ்தர் லண்டனில் படுகொலை

வடமராட்சி,

கரவெட்டி, கரணவாய் வாசியான குடும்பஸ்தர் ஒருவர் லண்டன் விம்பிள்டனில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வியாழனன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விம்பிள்டனில் சுப்பர் மார்க்கெட் ஒன்றினை நடத்தி வரும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 45) என்பவரே இவ்வாறு படுகெலை செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை சுப்பர் மார்க்கெட்டினை திறப்பதற்காக சென்ற அவரை இனந்தெரியாத நபர்கள் கொலை செய்துள்ளதாகவும் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையென தெரிவிக்கப்படுகிறது.

-வீரகேசரி

Link to comment
Share on other sites

எல்லா ஊடகங்களில் லணடன் விம்பிள்டன்பகுதியிலை கொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளது.. விம்பிளியில் வசிப்பிடமாககொண்டவர் லண்டன் வீல்ட்சன் பகுதியிலையே கொலை செய்யபட்டுள்ளார்

Link to comment
Share on other sites

எல்லா ஊடகங்களில் லணடன் விம்பிள்டன்பகுதியிலை கொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளது.. விம்பிளியில் வசிப்பிடமாககொண்டவர் லண்டன் வீல்ட்சன் பகுதியிலையே கொலை செய்யபட்டுள்ளார்

ஆமாம், சுப்பிரமணியம் சிவகுமார் என்ற 45 வயது மதிக்கத்தக்க கரணவாய் செப்பாட்டைச் சேர்ந்த இவ்வாலிபர் கொலையுண்டது "வீல்ஸ்டன்" பகுதியில்தானாம்!

அதிகாலை தனது கடையை திறக்கும்போது கொலை நடைபெற்றிருக்கிறதாம். இக்கொலைக்கும் தமிழ்க் கும்பல்களுக்கும் தொடர்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை!!! இக்கொலையை கறுப்பினத்தைச் சேர்ந்த சிலரே, கடையை கொள்ளையிட முயற்சித்த வேளையில் நடைபெற்றதாக நம்பப்படுகிறது.

* "வீல்ஸ்டன்" - இங்கு கறுப்பர்கள் செறிந்து வாழுமொரு லண்டன் பகுதியாகும். அதிலும் இப்பகுதியை சூழவுள்ள இடங்களான "கால்ஸ்டன், ஸ்ரோன்பிறிஜ்பாக்,.." போன்றன போதைப்பொருள் விற்பனை/பாவனை, கொலை, கொள்ளை, வாகனக்கடத்தல்கள், பயங்கர ஆயுதங்களின் பாவனை என்பவற்றிற்கு பஞ்சமே இல்லாத இடங்கள். அண்மையில் இன்னுமொரு கடை உரிமையாளரான பாகிஸ்தானியர் ஒருவரும் இப்பகுதியில் கொல்லப்பட்டிருக்கிறாராம்!!!

மு.கு: லண்டனிலுள்ள தமிழ்க்காடையர்களின் அட்டகாசங்கள் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமென மக்கள் கதைக்கிறார்கள்!!! :shock: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளுக்கு இப்போது புரிந்திருக்கும்.... இந்த கொலையின் பின்ணனி பற்றி......

அடுத்த கொலையா...என்ன மாதம் ஒரு கொலையா..! வாழ்க வளர்க்க லண்டன் தமிழர் கொலைக் கலாசாரம்..! :shock: :roll: :idea:
Link to comment
Share on other sites

அதிகாலை தனது கடையை திறக்கும்போது கொலை நடைபெற்றிருக்கிறதாம். இக்கொலைக்கும் தமிழ்க் கும்பல்களுக்கும் தொடர்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை!!! இக்கொலையை கறுப்பினத்தைச் சேர்ந்த சிலரே, கடையை கொள்ளையிட முயற்சித்த வேளையில் நடைபெற்றதாக நம்பப்படுகிறது.

இந்த தகவல் உங்கள் கண்ணுக்கு / காதுக்கு எப்படி எட்டியது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி வாய்மொழியாகவே லண்டனில் திரிகின்றது.... எழுத்தில மிகவிரைவில் வெளியாகும்......

Link to comment
Share on other sites

அண்ணா இதுக்கு முன்னம் நடந்த கொலையும் மர்மமாயிருக்கு.. ஆளாளுக்கு விதவிதமா செல்லுறானுக.. யாரை நம்பிறதெண்டே தெரியல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலை நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்ற மாதிரி சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

கொலை நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்ற மாதிரி சொல்லுவார்கள்.

ஆகா நம்மட 8ம் வகுப்புக்குத் தானே சொல்லுறீர்

உதவிட அவரே மேல போய் கேட்டா வலுவளக்கமா சொல்லுவினமே

:?: :idea: :idea: :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

குருவிகளுக்கு இப்போது புரிந்திருக்கும்.... இந்த கொலையின் பின்ணனி பற்றி......

எவர் செய்தாலும் ஏன் அவர்கள் தமிழர்களை அதிகம் செய்கிறார்கள்..! அவ்வளவுக்கு தமிழர்கள் மோசமாக நடக்கினமா..மற்றவையோட...! :?: :?:

மிகக் குறுகிய காலத்துள்...கொலை.. கொள்ளை.. கப்பம்.. கார் உடைப்பு.. பெண்களுக்காக தெருச் சண்டை.. இவற்றை லண்டன் அல்லாத பிற இடங்களைக் காட்டிலும் லண்டனில் மிக அதிகமாக அதுவும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கேட்கக் கூடியதாக இருக்கிறது. அநேக தமிழ் பத்திரிகைகளே தமிழர்களின் நடவடிக்கைகளை நல்ல மாதிரியா எழுதுவதாகத் தெரியவில்லை..! முன்னொரு காலத்தில் லண்டனில் தமிழர்கள் எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்டதாக பல பெரியவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டதையும் கேட்டிருக்கின்றோம்... அப்படியான பலர் லண்டனை விட்டு பிற நகரங்களுக்கு செல்வதில் நாட்டம் காட்டுவதையும் அவதானித்திருக்கிறோம்..! அவர்கள் சொல்வதெல்லாம் தமிழர்களோடு வாழ முடியாது என்று...ஏன் இந்த நிலை..தமிழர்களுக்குள்ளேயே..! இத்தனை துன்பங்களை அனுபவங்களைப் பெற்ற பின்னும் தமிழர்கள் தரம் தாழ்வது அவசியமா...???! குறிப்பா இளையவர்கள் புலம்பெயர்ந்து வந்தோர் அனைவரும் இது பற்றி சிந்திக்க வேண்டும்..! :idea: :idea:

Link to comment
Share on other sites

இதைப்பற்றி யாரையும் குறை கூறி பிரயோசனம் இல்லை. இதில் முழுத்தவறும் பிரித்தானிய சட்ட இயற்றுனரையும் காவல்துறையினரையும் தான் சாரும். ஏனெனில் அங்கு குண்டர்களுக்கும் தெருச்சண்டியர்களுக்கும் எதிரான சட்டங்கள் அவர்களை சரியாக தண்டித்து சீர்திருத்தவில்லை என்பதையே இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக காட்டுகின்றன. மற்றது பிரித்தானியாவில் காவல்துறையினரை உதவி கோரி அழைத்தால் அவர்கள் ஏறக்குறைய 01 மணித்தியாலத்தின் பின்னரே சம்பவ இடத்துக்குச் செல்கின்றனர். இது அவர்களின் அசண்டையீனமோ அல்லது இயல்போ என்பது புரியவில்லை. இங்கு ஜேர்மனியில் கத்திக்குத்தில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் (டுஇஸ்பேர்க் Duisburg - Moers மோஎர்ஸ்) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை என்று நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் உடனே நான் சிறீலங்கன் எனவே என்னை சிறையில் இடாது சிறீலங்காவுக்கு அனுப்பும் படி நீதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார். அதற்கு நீதிபதி புன்முறுவல் பூத்தபடி சரி உங்கள் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் ஜேர்மனியில் கொலைமுயற்சியில் ஏடுபட்டமைக்காக எமது நாட்டின் தண்டனையை அனுபவித்த பின்னரே நீங்கள் உங்கள் நாடு சென்று அங்கு மகிழ்ச்சியாக வாழலாம் என தீர்ப்பளித்தார். எனவே அவருக்கு தண்டனை முடிவடைந்தபின்னர் இலங்கை நோக்கி செல்லும் விமானம் ஒன்று அவரையும் அவரது சோகச்சுமையையும் தாங்கிச்செல்லும் என்பது உண்மை :P :P

100% உண்மையான கருத்து ஊமை அவர்களே..

ஐரோப்பாவில் வாழ்ந்தவன் என்ற வகையில்.. ஐக்கியராச்சிய காவல் துறை மட்டும் அல்ல .. போக்குவரத்து.. ஒழுங்கு நலவடிக்கை எல்லாமே மிக தாமதம் மற்றைய ஐரோப்பிய நாடுகளூடன் ஒப்பிடுகையில்!

உலகத்திலேயே கிரிமினல்களுக்கு எதிராய் விரைவாகவும்.. எந்தவித விட்டு கொடுப்புக்களும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் நாடுகள் ..நான் அறிந்தவரை சுவிஸும் சிங்கப்பூரும் மட்டுமே! 8)

Link to comment
Share on other sites

உலகத்திலேயே கிரிமினல்களுக்கு எதிராய் விரைவாகவும்.. எந்தவித விட்டு கொடுப்புக்களும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் நாடுகள் ..நான் அறிந்தவரை சுவிஸும் சிங்கப்பூரும் மட்டுமே!

ஓமப்பு பின்னி எடுத்துடுவாங்கள் இங்கையும் பல குறூப் இருந்தது இப்ப அடியும் இல்லை நுனியும் இல்லை

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

ஓமப்பு பின்னி எடுத்துடுவாங்கள் இங்கையும் பல குறூப் இருந்தது இப்ப அடியும் இல்லை நுனியும் இல்லை

:P :P :P :P :P

- சிங்கப்பூரில வாலாட்டினா சூரியனையே பார்க்க முடியாது.

லீ குவான் யூ அவர்கள் நாட்டை ஆளத் தொடங்கியதும் துவங்கிய பணி அது.

- சுவிஸில் போண் பண்ணி 5 நிமிடத்துக்குள் போலீஸ் நிற்கும்.

ஒன்று உள்ள இல்ல நாட்டுக்கு வெளிய..........

சூரிச் நகரின் போதைக் கும்பலை ஒரு இரவுக்குள் துப்பரவாக்கினார்கள்.

இங்கு நாட்டை நெறிப்படுத்துவது போலீஸ்.

அரசியல் தலையீடு எல்லாம் இல்லை.

நம்மவர்கள் சில அச்சங்கள் - சுய கெளரவம் ஆகியவை காரணமாக ஆரம்ப காலத்தில் போலீஸுக்கு எதையும் அறிவிப்பதில்லை.

இன்று இங்கு படித்த குழந்தைகளே அவற்றை செவ்வனே செய்கின்றனர்.

எனவே இப்போ எல்லாம் அந்த ஜம்பங்கள் பலிப்பதில்லை.

Link to comment
Share on other sites

அஜீவன் வயதுக்க மூத்தவர்களிற்கு மரியாதை கொடுக்காமல் தொலைபேசியில் காவல்துறையை கூப்பிடுவதை பெருமையாக சொல்லுகிறீர்களா? தமிழ் கலாச்சாரம் வெளிநாடுகளில் வந்து எந்தளவுக்கு சீரழியிது எண்டு பாருங்கோ? எங்களை மாதிரி ஊரிலை வழர்ந்திருந்;தா தொலைபேசி இருந்ததோ அப்படி இருந்தாலும் தொலைபேசயிலை கதைச்சு பொலிசை யாரும் வீட்டை கூப்புடுவியளோ? அங்கை எல்லாம் உந்த ஜம்பங்கள் பலிக்காது. கட்டுப்பாடா அடக்க ஒடுக்கமா இருந்து வழந்திருக்குங்கள்.

Link to comment
Share on other sites

உண்மையில் லண்டனிலுள்ள எல்லாத் தமிழருக்கும் மேலே குறிப்பிட்ட கொலைக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்குப் புரியவில்லை. உண்மையில் யாருடைய கொலையும் மிகவும் வேதனையான விடயம் தான். முன்பு இன்றும் இலங்கையிலும் இந்நிலை இருந்திருக்கிறது. ஆனால் அவற்றை மேலே குறிப்பிட்டது போல் விவாதிப்பதாக அறியவில்லை. இன்று அப்படியான பல இடங்களில் மாற்றம் நடைபெற்றும் லண்டனில் மட்டுமே அதிகளவில் காணப்பட்டது அங்குள்ள அரசியல் வாதிகளால்த் தானென நான் நினைக்கின்றேன். இன்று தொழில்நுட்பத்தில் முன்னேறிய லண்டனில் இப்படியான நிலையும் இருந்ததற்காக இங்குள்ள அரசியல் கட்சிகள் தான் வெட்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் லண்டனில் காணப்படும் அதிமிஞ்சிய பாகுபாடுகளே. நீங்கள் அங்குள்ள அரசியல்வாதிகளின் முகத்திரையை கிளித்திருக்கலாம். ஆனால் அதைவிடுத்து தயைங்கத்தால் தமிழரை கேவலப்படுத்த முயற்சித்திருப்பது தனக்குத்தானே துப்பியது போலாகிவிடுகின்றது.

Link to comment
Share on other sites

லண்டனில் தமிழர் ஒருவர் கொலை செய்யப்படும் போது தான் எமக்குத் தெரிகிறது,ஆனால் லண்டனில் நித்தமும் கொலை,கொள்ளை ,வன்புணர்வு என்பன நடந்தவண்னம் உள்ளன.இதனால் அனேகமாகப் பாதிக்கப் படுவது அண்மயில் குடியேறியோரும்,ஏழ்மையானவர்க

Link to comment
Share on other sites

ஓரு நாட்டின் காவல் துறை அலட்சியமாக இருக்கும் பட்சத்தில்

அந்த நாட்டில் வன்முறைகள் - கொலை -கொள்ளை -பாலியல் வல்லுறவு - இப்படி ......................

தொடர் குற்றங்கள் நடைபெறுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும்.

ஆரம்ப அலட்சியமே தொடர் குற்றங்கள் பெருகுவதற்கு வழி செய்கின்றன.

குற்றவாளிகள் முறையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் தவறுகள் பெருக வாய்ப்பு ஏற்படாது.

ஓர் நிகழ்வு:-

சுவிஸில் வதிவிட அனுமதி பெற்று வாழும்

எனக்கு தெரிந்த ஒரு யுகோஸ்லாவிய இளைஞனுக்கு போலீசார் ஒரு மடல் அனுப்பியிருந்தனர்.

அதில் மீண்டும் ஒரு முறை நீ ஏதாவது குற்றம் புரிந்தால்

உன் நாட்டுக்கு குடும்பத்தோடு அனுப்பப்படுவாய் என எழுதப்பட்டிருந்தது.

அவன் செய்த குற்றம் வேகமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் 3 முறை கார் ஓட்டி போலீசாரின் ராடாருக்கு மாட்டியது. ஒவ்வொரு முறையும் தண்டனை பணத்தை செலுத்தும் அவன்

தொடர்ந்தும் அதே தவறை 3வது முறையாக செய்திருக்கிறான்.

அவனுக்கு இப்போது கோட் வழங்கிய தண்டனை

தனது ஓய்வு கால நேரத்தில் 480 மணி நேரம்

மாநகர சபையுடன் சேர்ந்து பாதைகளை துப்பரவு செய்ய வேண்டும் என்பதே.

இதற்கு ஒரு ராப்பன்(சுவிஸ் நாணயம்) கூட ஊதியம் இல்லை.

அடுத்த முறை தவறு செய்தால்

நிச்சயம் ஊருக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான்.

குற்றவாளிக்குத்தான் தண்டனையே தவிர ஒரு இனம் பார்த்து அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்த 2 நாடும் நமக்கும் நம்மட தலைக்கும் சரி வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள் நீங்கள் முதலில் லண்டனிலும் அதன் புறநகரங்களிலும் நடைபெறுகின்ற எல்லாவற்றையும் அறிந்து தெளிந்து லண்டன் தமிழர்கள் பற்றி கருத்தாடுவது நல்லது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில ஒரு 200 பெடியள் தறுதலையாய் இருப்பாங்களே ? 40000 பேருக்கு மேல வாழுற நாட்டில 0.2% மான பெடியள் செய்யிறதை வச்சுக்கொண்டு எல்லாரையும் குறை சொல்லுறது நல்லதில்ல பாருங்கோ.

பெடியள் எண்டாலே குழப்படிதான். ஆனால் எல்லாரும் தறுதலைகள் இல்லைத்தானே.!

Link to comment
Share on other sites

லண்டனில ஒரு 200 பெடியள் தறுதலையாய் இருப்பாங்களே ? 40000 பேருக்கு மேல வாழுற நாட்டில 0.2% மான பெடியள் செய்யிறதை வச்சுக்கொண்டு எல்லாரையும் குறை சொல்லுறது நல்லதில்ல பாருங்கோ.

பெடியள் எண்டாலே குழப்படிதான். ஆனால் எல்லாரும் தறுதலைகள் இல்லைத்தானே.!

அந்த 0.2% பேர் செய்வது எத்தனைபேர் வாழ்க்கையை சீரழிக்குது என்றும் சிந்தித்தால்.. நாட்டில சிங்களவன்

எங்கட வாழ்வை அழிக்கிறான் என்று ஓடிவந்திட்டு..

தப்பி வந்த எங்களூக்குள்ளயே ஒருவரை ஒருவர் போட்டு தள்ளி .. பாதுகாப்பா நாங்கள் வாழுற நாட்டுக்காரண்ட நிம்மதியையும் கெடுத்து...

இனிமேல் சிறிலங்கன் ஒருவனை ....அவன் உண்மையா பாதிக்க பட்டு வந்தாலும்...அக்செப்ற் பண்ணலாமா எண்ட சந்தேகத்தை அந்த நாட்டு அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தி...

கொஞ்சம் யோசியுங்கள்!

ஹ்ம்ம்....தஞ்சம் தந்த நாட்டில் இப்படி நடப்பது எவ்வளவு பாரதூரமான விடயம் என்று உணர்வீர்கள்! 8)

Link to comment
Share on other sites

லண்டன் என்று சொல்வதை விட இங்கிலாந்தில் வாழும் எனச் சொல்வதே மேல் என நினைக்கிறேன்.

இங்கிலாந்து என்பதை லண்டன் என்றே சொல்லிப் பழக்கப்பட்டு விட்டோம்.

இதுவே சில குளறுபடிகளை உருவாக்குகிறது என நினைக்கிறேன்.

இங்கிலாந்தில் வாழும் தமிழர்களில் பல முக்கிய பரிமாணங்களை அங்கு வந்த போது என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

1.ஆரம்ப காலத்தில் கல்வி கற்க என்று வந்து குடியேறியவர்கள்.

2.இவர்களுக்கு வாழ்கைப்பட்டு (மணமுடித்து) வந்து குடியேறியவர்கள்.

3.இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்டு வெளியேறியவர்கள்.

4.மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு வேலைக்கு போனவர்கள் இலங்கை திரும்பாமலே இங்கிலாந்து வந்து தஞ்சம் கோரியவர்கள்.

5.ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு

இங்கிலாந்துக்குள் வந்தவர்கள்

6.ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் தாம் கல்வி கற்க

அல்லது தமது குழந்தைகளின் கல்வியின் நிமித்தம் இங்கிலாந்துக்குள் வந்தவர்கள்.

7. கல்வியின் நிமித்தம் தற்காலத்தில் வந்தவர்கள்.

8.அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் பெற்று நேரடியா வந்தவர்கள்.

9. ஐரோப்பிய நாடுகளில் குற்றங்கள் செய்து விட்டுத் தப்பி வந்தவர்கள்.

இவர்களில் ஆரம்பத்தில் கல்வி கற்க வந்தவர்கள்

இவர்களுக்குப் பின்னால் வந்த எவரையும் கணக்கிலே எடுப்பதில்லை.

இவர்கள் படித்தவர்கள் என்ற தொனியோடு டாம்பீகமாக வாழ்பவர்களாகவே என்னால் உணர முடிந்தது.

இவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே பாமரத் தமிழர்களோடு பழகுகிறார்கள்.

அதுவும் ஏதாவது சில விழாக்களில்தான்.

மற்றப்படி உள்ளுணர்வில் வித்தியாசமே இல்லை.

இனக்கலவரக் காலத்தில் அகதியாய் வந்தவர்களை விட

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள்

அங்கு வியாபாரங்களைத் தொடங்கி பெரிய வர்த்தகர்கள் ஆகியிருக்கிறார்கள்.

தவிரவும் அங்கு பிரபலமாக வாழ்வோரும் இவர்கள்தான்.

தாயகத்தில் அரசாங்க உத்தியோகத்தர் எப்படியோ

அந்த நிலையில் முதலில் இங்கிலாந்து வந்து கல்வி கற்றோரும் இருக்கிறார்கள்...........

இலங்கையின் வியாபார நிறுவனங்கள் போல

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள் லண்டனில் கோலோச்சுகிறார்கள்.

யாருடைய பெயரிலாவது திருட்டுத் தனமாக வேலை செய்து

அல்லது அரசாங்க இலவசக் கொடுப்பனவுகளோடு வாழ்ந்து அல்லது

ஏனைய இடங்களில் இருந்து குற்றவியல் பிரச்சனைகள் காரணமாக வந்த ஒரு சிலரே

அங்கும் பிரச்சனைகளுக்கு வித்தாகி நிற்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் அரசின் மந்தப் போக்கு என்பதை விட

அரசின் விட்டுக் கொடுப்புகள் கண்டு கொள்ளாதனம் என்பதே சரி.

ஜேர்மன் - சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ளது போன்ற போலீஸ் அடையாள அட்டைகளை பரீட்சிக்கும் முறை

அல்லது இருக்கும் வீட்டு முகவரி போன்றவற்றை அரச திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் எல்லாம் அங்கு கிடையாது.

எவர் எங்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும்

திறமையிருந்தால் செய்யலாம்.

14 வருடங்களுக்கு மேல் திருட்டுத் தனமாக இருந்ததாக

உறுதிப்படுத்த முடிந்தால் குடியுரிமை கூட பெறலாம்.

சட்டத்தில் உள்ள முக்கிய ஓட்டைகள்...........ஏராளம்.

லண்டனில் இருக்கும் பல வாகனங்களுக்கே

உண்மையான இலக்கத் தகடுகள் இல்லை.

பொய்யானவை.

அதைக் கூட கண்டு கொள்ளாத போலீஸ்.

பெற்றோல் நிலங்களில் வேலை செய்யும் தமிழர்களைக் கேட்டால்

விலாவாரியாக கதை சொல்வார்கள்.

பெற்றோல் அடித்து விட்டு ஓடும் கார் பற்றிய தகவல்களை போலீஸுக்குக் கொடுத்தால்

அந்த நம்பரிலே வாகனமே இல்லை என்பார்களாம்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..............

தமிழர்கள் மட்டுமல்ல.

ஏனைய இனத்தவரும் இங்கே இப்படித்தான்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள்.

இதுதான் ஒரு நாள் கெடுதலாகவும் மாறும் நிலைக்கு தள்ளும்.

நாம்தான் கவலைப்படுகிறோமே தவிர அங்கு இதைவிட பெரிய விடயங்கள் சந்தடியின்றியே நடக்கின்றன.

:arrow: (திருத்தத்துக்கு உதவிய மீராவுக்கு நன்றி.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.