Jump to content

நித்திரை முழித்திருப்பதற்கு என்னென்ன செய்யலாம்?


Recommended Posts

வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?

Link to comment
Share on other sites

பகலில் இயலுமாயின் நித்திரை அல்லது (nap)குட்டித்தூக்கம் போடுங்கள்.இரவில் கோப்பி அல்லது கவீன்(caffene) உள்ள பானம் ஓரிரு தடவை குடியுங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?

குளுக்கோஸ் கலந்த [lucozade] பானங்கள் பருகுவதால் விழித்திருந்து படிக்கும் போது கொஞ்சமேனும் உடலுக்கு தென்பைக் கொடுக்கும், redbull பானம் உடலுக்குத் தென்பைக் கொடுத்தாலும் இதயத்திற்கு கெடுதலை விளைவிக்கும் என்று எங்கோ வாசித்த ஞாபகம் அதனால் முடிந்தளவு தவிர்கவும். அதிகாலை 2 -4 மணிவரை கண்ணைக் கட்டும். அந்த நேரத்துக்கு நல்ல சூடான தேநீரோ/ கோபியோ பருகினால் நித்திரையை கொஞ்சம் குறைக்கலாம். [பாலோ, கோர்லிக்சோ குடிச்சீங்க என்று வையுங்கோ, நல்ல குறட்டை விட்டு தூங்க வேண்டியது தான்.]

வாசித்து விளங்க வேண்டிய பகுதிகளை அதிகாலையில் செய்யலாம். அதே நேரம் தூக்கம் கண்ணைக் கட்டும் போது வாசிப்பதை விட கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்க்கலாம். 2 மணித்தியாலத்திற்கு 15 நிமிடங்கள் என்றாலும் கண்ணுகக்கு ஓய்வு கொடுப்பது நல்லதென நினைக்கிறேன்.

ஒரே பாடத்தை தொடர்ந்து படிப்பதால் bore அடித்துவிட வாய்ப்பிருக்கும், அதனால் ஒவ்வொரு நாளும் என்ன பாடம் படிக்க வேண்டும் என்று முதலே ஒரு அட்டவணை போட்டீர்கள் என்றால் அதன் படி செய்வதற்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்பது எனது கருத்து.

இரவு முழுதும் விழித்திருப்பதால், நீங்கள் கட்டாயம் பகல் வேளைகளில் நித்திரை கொன்று தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் உடல் களைத்து சோர்ந்தது விடும்.

எதையும் ஆரம்பிக்கும் முன்பு நல்லா ப்ளான் பண்ணோணும்! ப்ளான் பண்ணாமல் பண்ணப்படாது. ஓகே?? ^_^:D

ஒழுங்கா படித்து பரீட்சையில் சித்திபெற வாழ்த்துக்கள்!! :)

Link to comment
Share on other sites

இரவு முழுவதும் தூங்காமல் இருந்து படிப்பது உங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. அது உங்களையும் உங்கள் மூளையையும் சோர்வடையவைத்துவிடும். குறைந்தது 4 மணித்தியாளங்களாவது உறங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து படித்தால் இலகுவாக மனதில் பதியும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனுள் பாதங்களை வைத்துக்கொண்டு சிலர் படிப்பதாக கேள்விப்பட்டுள்ளேன் ( நான் செய்து பார்தது இல்லை :D )

மற்றும் படி வழமையாக நாம் அருந்தும் சூடான பானங்கள் உங்களை விழிப்புடன் வைத்திருக்கும் :)

நீங்கள் பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழச்சி...!

Link to comment
Share on other sites

1. ஒரு காண்டா மணியை வாங்கி அறையில் மாட்டிவிட்டபின் அதன் முனையை கழுத்தில் கட்டி விடுங்கள், நித்தா வந்து தூங்கி விழும் போது மணி இழுக்கபட்டு 'டாங்' என்று எழும் சத்தத்தில் அடுத்த ஒரு கிழமைக்கு நித்தா வராது (கழுத்தில் கழுத்தில் கயிறு கனக்க இழுபட்டால் பிறகு எழும்ப தேவை வராது என்பது முக்கிய விடயம்)

2. காலில எலிப் பொறியை மாட்டி வைத்தால் பொறியில் கால் அல்லது விரல் மாட்டி விடும் என்ற பயத்தில் நித்திரை வராது

3. அரை மணித்தியாலத்துக்கு ஒரு முறை "நாக்க முத்து" போன்ற பாடல்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி அல்லது தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் குத்துப் பாட்டு கேளுங்கள்..நித்தா தேவி உங்கள் வீட்டுப் பக்கமே தலை வைத்து படுக்காது

4. உடன் பிறப்புகளுக்கு கருணாநிதி எழுதும் கடிதங்களை இணையத்தில் ஒரு மணிக்கு ஒரு முறை வாசித்தால் வரும் கோபத்தில் நித்திரை கொள்ளாமல் பல்லை நறுமிக் கொண்டு இருக்கலாம் (பல்லு போனால் என்னைக் கோபிக்க கூடாது)

இன்னும் ஐடியா தேவை என்றால் கூச்ச நாச்ச படாமல் கேளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு முழுவதும் தூங்காமல் இருந்து படிப்பது உங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. அது உங்களையும் உங்கள் மூளையையும் சோர்வடையவைத்துவிடும். குறைந்தது 4 மணித்தியாளங்களாவது உறங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து படித்தால் இலகுவாக மனதில் பதியும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனுள் பாதங்களை வைத்துக்கொண்டு சிலர் படிப்பதாக கேள்விப்பட்டுள்ளேன் ( நான் செய்து பார்தது இல்லை :D )மற்றும் படி வழமையாக நாம் அருந்தும் சூடான பானங்கள் உங்களை விழிப்புடன் வைத்திருக்கும் :)

நீங்கள் பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழச்சி...!

நானும் இப்படித்தான்எழுத நினைத்தேன். நல்லதொரு விடயத்துக்காக கேட்கும்போது ஆரம்பித்திலேயே அபசகுனமாக எழுதக்கூடாது என்று விட்டுவிட்டேன். உண்மை இதுதான். எனக்கு இப்படி இரவில் நித்திரை முழித்து படிப்பதில் உடன்பாடில்லை. அது இரண்டையும் இழப்பதற்கு வழிவகுக்கும்(இரவையும் பகலையும்).

நானும் ஒரு நண்பனும்சேர்ந்து படித்தோம். நான் தூக்கம் வரும்போது படுத்துவிடுவேன். அவன் ஒரு வாளியில் தண்ணிவைத்து முகம்கழுவியபடியும் இன்னொரு வாழித்தண்ணிக்குள் கால்களை வைத்தபடியும் படித்தான். முடிவு உயர்தரத்தில் நான் பாஸ். அவன்4 பாடமும் 0. :(

தற்போதும் மக்களை 11 மணிக்கு பின்னர் நித்திரை முழித்து படிப்பதற்கு அனுமதியில்லை. அவசரம் என்றால் காலையில் நேரத்துக்கு எழுந்து படிக்கலாம்இது எனது வீட்டு சட்டம்

Link to comment
Share on other sites

எப்போதும் நமது சிந்தனை புதிதாக, புத்துணர்வாக உள்ள கணத்திலே பரிட்சைக்காக படிக்க வேண்டும்.

மூளை விடயங்களை உள்வாங்கி தானியங்கியாய் தனக்குள் சேமித்துக்கொள்ளும்.

உங்களை நீங்களே அறிந்து செயற்படுங்கள் தமிழச்சி. வெற்றி நிச்சயம்.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலில் நித்திரை செய்யனும் அல்லது குறைந்தது ஒரு 3 மணித்தியாலங்களாவது நித்திரை கொண்டுவிட்டு படிப்பது நல்லது. நித்திரை கொள்ளாது விட்டால் படித்தவை பல ஞாபகத்துக்கு வரவும் கஸ்டப்படும்.. பகல் எல்லாம் ஒரே அசதியாகவும் இருக்கும். பரீட்சையை சரிவர செய்ய முடியாமல் போகலாம். எனினும் இது அவரவரின் பழக்கங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?

பகலில் வீட்டில் இருந்து படிப்பது கடினம் என்றால், நூல் நிலையத்துக்கு சென்று படிக்கலாமே... அங்கை தானே மூலைக்கு மூலை இருக்கிறது. கூடுதலான நூல் நிலையங்களில் quite room இருக்கும். அதை பதிவு செய்து அங்கு இருந்து படிக்கலாம்.

இரவு முழித்து இருந்து தான் படிக்க வேண்டும் என்றால், என்ன பாடம் படிக்கிறிங்கள் எண்டிறதை பொறுத்து. எல்லா பாடமும் அப்பிடி படிக்க முடியாது...கணிதம்,software போன்ற பயிற்ச்சி செய்ய வேண்டிய பாடங்கள் என்றால் இரவில் முழித்து பயிற்ச்சி செய்யலாம். விளங்கி படிக்க வேண்டிய பாடங்களுக்கு கண் முழிச்சு இருந்தால் மட்டும் போதாது... மனமும் முழிச்சு இருக்க வேணும். மனம் முழிச்சு இருந்தால் தான் படிக்கிறது படியும் இல்லையெண்டால் விசுகு அண்ணா சொன்னது போல கடமைக்கு படிக்கிற மாதிரி தான் முடியும். காலுக்கு தண்ணி வைச்சு படிக்கிறது, கழுத்தில காண்டா மணி கட்டி படிக்கிறதெல்லாம் கண்ணை மட்டும் தான் முழிச்சிருக்க வைக்கும்... மனதை அப்பிடி வைத்திருக்க முடியாது.

இல்லாவிடில் இரவில் வெளிய போய் டிம் ஹோர்ட்டன்ஸ் (ஸ்டார் buck / செகண்ட் கப் கூடுதலான அமைதியாக இருக்கும் - wifi வசதியும் இருக்கும்) போன்ற இடங்களில் இருந்து படிக்கலாம் (அதுக்கு உங்கட city அவ்வளவு பாதுகாப்பு இல்லை). அப்பிடி போய் படிக்கும் போது வெளியால பராக்கு பார்த்து கொண்டு படிக்ககலாம் (நான் அப்பிடி போன நேரத்தில படிக்கிறதை விட பராக்கு பார்த்த நேரம் தான் அதிகம் :rolleyes:).

நாங்கள் படிக்கும் போது தம் அடிக்கிறதுக்கு காரணம் சொல்லுறது முழிச்சு இருக்கலாம் எண்டு :wub: பி.கு. 1 - 2 தம் அடிச்ச விழிப்பா இருக்கலாம்...கூட அடிச்சால் mind சோர்ந்து விடும்.

பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்கள் கூறிய உறவுகள் அனைவருக்கும் முதலில் எனது நன்றிகள்.

எனக்கு தேர்வுகள் நடப்பதற்கு இன்னும் சில கிழமைகள் இருக்கிறது. தேர்வுகளுக்கு முந்தைய நாட்கள் நான் விழித்திருப்பதில்லை. நன்றாகத் தூங்கி, சோர்வின்றியே தேர்வெழுதச் செல்வது வழமை. தேர்வு நாட்களைப் பற்றிய கவலை இல்லை.

இத்தேர்வுகள் எழுதுவதற்கு நான் திடீரெனத்தான் முவெடுத்தேன். இத்தேர்வுகளுக்குப் படிப்பதற்காக வேலையிலிருந்து லீவெடுத்து அந்த லீவு நாட்களுக்குள் இரவில் படிப்பதற்குத்தான் வழிகளைத் தேடுகிறேன். வேலையிலும் அதிக நாட்கள் லீவு இப்போது எடுக்க முடியாது. என்னோடு வேலை செய்பவர் ஏற்கனவே லீவிற்குப் பதிந்து விட்டதனால் அதிக நாட்கள் லீவு தரமாட்டார்கள். அதனால் குறுகிய காலமே படிப்பதற்கு உள்ளது. இதுவரை காலமும் எனக்கு இரவில் படிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. நிதானமாகப் பகலிலேயே படிக்கக்கூடியதாக இருந்தது. வழமையாக நான் தேர்வுகளுக்குப் பல நாட்களுக்கு முன்பே படித்து முடித்துவிடுவேன். ஆதிகமாக லைப்ரறிக்குச் சென்றுதான் படிப்பது. ஆனால், இப்போது இந்தக் குளிரில் வெளியில் போய்ப் படிப்பதைவிட வீட்டிற்குள்ளிருந்து படிக்க விரும்புகிறேன். வீட்டிலிருந்து படித்தால் இடையிடையே ஓய்வெடுத்து, நிதானமாகப் படிக்க முடியும். அதனால் அதிகமாக மூளையில் ஏறச் சந்தர்ப்பம் உண்டு. அதோடு, இப்போது நான் தினமும் காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி இரவு பத்து மணிக்குத்தான் வீட்டிற்கு வருவேன். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் வெளிவேலைகள் ஏதும் இல்லாதிருந்தால் வீட்டிலிருப்பது. அதனால் இந்த லீவிற்குள் படித்து முடிக்க வேண்டியுள்ளதாலேயே இத்தனை ஆர்ப்பாட்டம்.

எங்கள் வீட்டில் பகலிலும் வீட்டில் ஆட்கள் இருப்பார்கள். அதோடு ரீவி பார்ப்பது, பாட்டுக் கேட்பது என மூட் மாறும் சந்தர்ப்பம் உள்ளது. இரவில் என்றால் மிகவும் நிசப்தமாக இருக்கும். மற்றவர்கள் நித்திரை என்ற காரணத்தினாலேயே இவற்றைப் பாவிக்கமுடியாது. அதோடு, பகலில் நேரம் விரைவாகச் சென்றுவிடும். எதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருப்போம். இவற்றையெல்லாம் யோசித்தே இரவில் படிப்பதாக முடிவெடுத்தேன்.

குட்டி, தப்பிலி, உங்களின் கருத்துக்கள் எனக்கு உதவியாக இருக்கிறது. ஏற்கனவே ரெட்புல் வாங்கி வைத்து விட்டேன். வேறு ஏதாவது வழிகள் உள்ளதா என அறியவே இங்கு பதிந்தேன். தமிழினியின் பாதங்களை நீரில் வைத்தபடிப் படிப்பதைப் பற்றியும் அறிந்திருக்கிறேன். நான் முயற்சி செய்து பார்த்தால் அது உதவுகிறதா எனக் கூறுகிறேன்.

சபேஸ், ரிம் கோட்டன்சுக்கு உண்மையிலேயே படிக்கும் நோக்கத்துடனா போகிறனீர்கள்??? உண்மையைக் கூறுங்கள்…..

நிழலி, உங்களை நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன். வாழ்வதற்கு வழிகேட்டால் முடிப்பதற்கா வழி சொல்கிறீர்கள்??? தேர்வுகள் முடியட்டும்….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுக்கு இன்ன நேரம், இன்ன செய்ய வேண்டும் என்று உடம்புக்குள் ஒரு மணிக்கூடு உள்ளது.

இரவு பதினொரு மணிக்கு மேல்... உடம்பிற்கு நித்திரை தேவை.

நீங்கள் வில்லங்கமாக முழித்திருந்து படித்தாலும்.... மனது அதனை கிரகித்துக் கொள்ள சிரமப்படும்.

பகலில் வீட்டில் சிறிய பிள்ளைகளால் இடைஞ்சல் ஏற்பட்டால்.... அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று படியுங்கள்.

நீங்கள் பரீட்சையில் வெற்றியடைய முற்கூட்டிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் தமிழிச்சி எனக்கு எப்படி நித்திரை முழிச்சு படிக்கிறது என்டு தெரியாது(தெரிந்திருந்தால் எங்கேயோ அல்லவா இருந்திருப்பேன் :lol: )...சிறப்பாக எழுதி பரிச்சை சித்தி அடைய வாழ்த்துகள்...பரிச்சை எழுதிய பிறகு நேரம் கிடைக்கும் போது யாழில் வந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. ஒரு காண்டா மணியை வாங்கி அறையில் மாட்டிவிட்டபின் அதன் முனையை கழுத்தில் கட்டி விடுங்கள், நித்தா வந்து தூங்கி விழும் போது மணி இழுக்கபட்டு 'டாங்' என்று எழும் சத்தத்தில் அடுத்த ஒரு கிழமைக்கு நித்தா வராது (கழுத்தில் கழுத்தில் கயிறு கனக்க இழுபட்டால் பிறகு எழும்ப தேவை வராது என்பது முக்கிய விடயம்)

2. காலில எலிப் பொறியை மாட்டி வைத்தால் பொறியில் கால் அல்லது விரல் மாட்டி விடும் என்ற பயத்தில் நித்திரை வராது

3. அரை மணித்தியாலத்துக்கு ஒரு முறை "நாக்க முத்து" போன்ற பாடல்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி அல்லது தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் குத்துப் பாட்டு கேளுங்கள்..நித்தா தேவி உங்கள் வீட்டுப் பக்கமே தலை வைத்து படுக்காது

4. உடன் பிறப்புகளுக்கு கருணாநிதி எழுதும் கடிதங்களை இணையத்தில் ஒரு மணிக்கு ஒரு முறை வாசித்தால் வரும் கோபத்தில் நித்திரை கொள்ளாமல் பல்லை நறுமிக் கொண்டு இருக்கலாம் (பல்லு போனால் என்னைக் கோபிக்க கூடாது)

இன்னும் ஐடியா தேவை என்றால் கூச்ச நாச்ச படாமல் கேளுங்கள்

எல்லாம் மாறி மாறி தான் புரியுமா அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-- பகலில் பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு படியுங்கள்.

-- முக்கியமான தரவுகளை வக்மண்ணில் பதிந்துவிட்டு அதை வேலைசெய்யும் போதும் தன்பாட்டுக்கு கேட்டுக் கொண்டே வேலைகளை செய்யலாம்.

-- நீங்கள் சித்தியடைய வாழ்த்துகள். பரிட்சையில்.

Link to comment
Share on other sites

வேறுவிடயங்களில் மனதைபோகவிடாமலும் மனதை ஒருவழிப்படுத்தவும்,நித்திரை வராமலுமிருக்க இப்போது மாத்திரைகள் உள்ளன.யுனிவெசிடி மாணவர்கள் பலர் இப்போ பாவிக்கின்றார்கள்.மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் தேவை.

பெயரே என்னவோ "கொன்ஸ்சன்ரேற்றா" என்ற ஞாபகம்.

Link to comment
Share on other sites

இந்தியர்கள்(குஜராத்திகள்) பாக்கு மாதிரி ஒன்றை அடிக்கடி போட்டுக்கொள்வார்கள். நித்திரையே வராதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மாறி மாறி தான் புரியுமா அண்ணா!

நீங்க வேற தீபா...

நான் இந்தாள நம்பி ஒரு ஜீவன் வீட்டில தனிய இருக்கே என்று அழுதுகொண்டிருக்கின்றேன் :lol::D:D

Link to comment
Share on other sites

நீங்க வேற தீபா...

நான் இந்தாள நம்பி ஒரு ஜீவன் வீட்டில தனிய இருக்கே என்று அழுதுகொண்டிருக்கின்றேன் :lol::D:D

:Dsmiley-signs115.gif

Link to comment
Share on other sites

வேறுவிடயங்களில் மனதைபோகவிடாமலும் மனதை ஒருவழிப்படுத்தவும்,நித்திரை வராமலுமிருக்க இப்போது மாத்திரைகள் உள்ளன.யுனிவெசிடி மாணவர்கள் பலர் இப்போ பாவிக்கின்றார்கள்.மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் தேவை.

பெயரே என்னவோ "கொன்ஸ்சன்ரேற்றா" என்ற ஞாபகம்.

தமிழச்சி, தயவு செய்து இரவு விழித்திருந்து படிப்பதற்கு மாத்திரைகளை உபயோகிக்காதீர்கள். பரீட்சை முடிந்த பின்பும் உங்களுக்கு இரவுத் தூக்கம் இல்லாமல் அவதிப் படுவீர்கள்.

எனக்குத் தெரிந்து இந்தியாவில் ஒரு மாணவன் மருந்துக் கடையில் தூக்கத்தை போக்குவதற்கு மாத்திரைகள் வாங்கி போட்டு படித்தவன், பரீட்சை முடிந்த பின்பு அவனால் இரவில் தூக்கத்தை பழக்கிக் கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டு தூக்கம் வரவழைக்க தூக்க மாத்திரை எடுத்தான். பரீட்சை முடிவுகள் மிகவும் நல்ல மாதிரி தான் வந்தது. ஆனால் பரீட்சை முடிவுகள் வரமுன்பு துரதிஷ்ரவசமாக அவன் உயிர் பிரிந்து விட்டது. மருத்துவர்கள் அவன் பாவித்த மாத்திரைகளே காரணம் என்று கூறினார்கள்.

முடிந்த அளவு உங்களால் நேரத்தை மிச்சம் பிடித்து படிக்கக் கூடியதை படித்து பரீட்சை எழுதுங்கள். நிச்சயம் சித்தியடைவீர்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி உங்கள் முயற்சிக்கேற்ற பயன் கிடைக்கக் வாழ்த்துக்கள். கட்டாயம் நான்கு மணி நேர நித்திரை தேவை .

மீதி உங்கள்வச்திபடியும், நேரதுக் கேற்ற மாதிரியும் படித்து வெற்றியடைய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இது நான் எங்கேயோ படித்தது உங்களுக்கும் பயன் உடையதாக இருக்கும் என்று நினைக்கிறன்..

1. Day’s Schedule: உணவு, படிப்பு, எழுத்து, தூக்கம் அனைத்துக்குமான நேரத்தை பிரித்து வைத்துக்கொண்டு அதை ஃபாலோ செய்வதுதான் இந்த தினசரி அட்டவணை. இத்தனை நாட்கள் படித்ததில் அறிந்தோ... அறியாமலோ ஒரு அஜாக்கிரதை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால், கவுன்ட் டவுன் துவங்கிவிட்ட கடைசி கட்டத்தில், ஒவ்வொரு மணித்துளியையும் இப்படி திட்டமிடலுக்குள் கொண்டுவந்து விடுவது, நேரத்தின் இழுபறியால் ஏற்படும் பதற்றத்தை முளையிலேயே கிள்ளியெறியும்.

2. Time Management: நேர நிர்வாகம் என்பது திட்டமிடுதலை தொடர்ந்ததுதான். எது முக்கியம், எது அவசரம் என்ற அலசலுடன் கூடிய இந்த நேர நிர்வாகம்... அமைதியையும், நிதானத்தையும் தரும்.

3. Material Collection: முந்தைய வருடங்களின் வினாத்தாள்களை சேகரித்து ஆராய்ந்து, அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பது, நிச்சயம் ஏமாற்றாது.

5. Model Paper: வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவனின் விடைத்தாள், அல்லது ஆசிரியரின் கோப்பிலிருக்கும் முன்னாள் 'டாப்பரி’ன் விடைத்தாள் போன்றவற்றை பார்வையிட்டு, தன்னைத் திருத்திக் கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதும் நல்லதொரு வழிமுறை.

6. Self Test: வீட்டிலேயே சில வினாத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுதிப் பார்க்கும் சுயபரிசோதனை, சிறப்பானதொரு பயிற்சி. அந்த வினாத்தாள்கள் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளானதாக இருப்பது நல்லது.

7. Presentation: உயிரை உருக்கி படித்தவற்றை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரம், கேள்விகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான மதிப்பெண்கள் என்ற வரையறைகளுக்குள் தேர்வுத்தாளில் நிரூபிக்கும் தருணம் இது. தேர்வுக்கான 180 நிமிடங்களில் 170 நிமிடங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்தந்த பகுதியை இத்தனை நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். முதலாவது... போதுமான இடம் விடுவது, அடிக்கோடிடுவது, விடைத்தாள் பக்கங்களை மாற்றி, இறுக்கமாக இணைத்துவிடாமல் சரியாகச் செய்வது... போன்றவை (Physical Presentation). இரண்டாவது... விடைத்தாள் திருத்துபவர் எதிர்பார்ப்பதை கேள்விக்கேற்றவாறு சரியாக அனுமானித்து, அதை விடைத்தாளில் தெளிவாக வெளிப்படுத்துவது (Mental Presentation)

8. Paper Analysis: தன்னுடைய விடைத்தாளை தானே அலசி ஆராய்ந்து பகுத்தறியும் மாணவனுக்கு தனது நிறை, குறைகள் தெளிவாகத் தெரிந்துவிடும். தன்னால் எந்த கேள்விகளுக்கு மதிப்பெண் அள்ள முடிகிறது, வழக்கமாக தான் சொதப்பும் பகுதி எது என்ற இந்த பகுப்பாய்வு, பறிபோகும் மதிப்பெண்களை மீட்க உதவும். உதாரணத்துக்கு, ஒரு சிலர் பெரிய வினாக்களுக்கு பர்ஃபெக்ட்டாக விடையளிப்பார்கள். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்களில் தடுமாறுவார்கள். ஆக, தாங்கள் கவனம் செலுத்த வேண்டியது ஒரு மதிப்பெண் வினாக்களில்தான் என்ற உண்மை அவர்களுக்கு புரிபட இந்த 'பேப்பர் அனாலிஸிஸ்’ உதவும்.

9. SWOT: Strength (பலம்), Weakness (பலவீனம்), Opportunities (வாய்ப்புகள்), Threat(அச்சுறுத்தல்) இந்த நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இது, தன்னை உணர்வதற்கான நான்கு படிகளைக் குறிக்கிறது. படம் வரைவது, ஈக்குவேஷன் சால்வ் செய்வது என்று தன் பலத்தைப் பொறுத்து கேள்விகளைத் தேர்வு செய்வது, தன்னுடைய பலவீனங்கள் எந்த வகையிலும் விடைத் தாளில் வெளிப்படாதபடி பார்த்துக்கொள்வது, டியூஷன், ஆசிரியர், நண்பர், கைடு என்று தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள், தனது குறைகள் போன்ற அச்சுறுத்தல்களைத் அறிந்து தவிர்ப்பது.

10. Food And Relaxation: தேர்வு சமீபமாகப் பார்த்து, உடலைத் தேற்றுகிறேன் என்று எசகுபிசகாக சாப்பிட்டு முதலுக்கு மோசம் செய்யக்கூடாது. அசைவம், ஆயிலி அயிட்டங்கள், செரிமானத்துக்குத் தொந்தரவானவை போன்றவற்றை பரீட்சை நாட்களில் தவிர்த்துவிட வேண்டும். தினமும் இரவு போதிய உறக்கம் அவசியம். ஆனால், பகலில் தொடர் படிப்பின் இடையே தூக்கமோ, ஓய்வோ தேவை இல்லை. காலாற நடப்பது, சப்ஜெக்ட்டை மாற்றிப் படிப்பது போன்றவை இறுக்கத்தைத் தவிர்க்கும்.

sorry அக்கா.நீங்கள் கேட்டது நித்திரை முழிக்க..

இது பரீட்சைக்கு எப்பிடி படிப்பது என்பது..

உங்களுக்கு தேவைபடாமலும் இருக்கலாம்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?

முதலில் நீங்கள் அமைதியாகுங்கள்.

வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் வளர்ந்து ஆளாகியபின் இதே பிரச்சனை வராமல் பார்த்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9. SWOT: Strength (பலம்), Weakness (பலவீனம்), Opportunities (வாய்ப்புகள்), Threat(அச்சுறுத்தல்) இந்த நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இது, தன்னை உணர்வதற்கான நான்கு படிகளைக் குறிக்கிறது. படம் வரைவது, ஈக்குவேஷன் சால்வ் செய்வது என்று தன் பலத்தைப் பொறுத்து கேள்விகளைத் தேர்வு செய்வது, தன்னுடைய பலவீனங்கள் எந்த வகையிலும் விடைத் தாளில் வெளிப்படாதபடி பார்த்துக்கொள்வது, டியூஷன், ஆசிரியர், நண்பர், கைடு என்று தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள், தனது குறைகள் போன்ற அச்சுறுத்தல்களைத் அறிந்து தவிர்ப்பது.

இதில் முதல் இரண்டு காரணிகளும் எமக்குள். பின்னைய இரண்டும் எமக்கு வெளியில் எம்மை தீர்மானிப்பவை. எனி இவற்றை அளவிட உள்ள முறைகளும் எல்லோ தெரிஞ்சிருக்கனும். நம்மட பலம் பலவீனம் விளங்கிட்டா இப்படி தலைப்பை திறந்தே இருக்கமாட்டமே... இல்லையா.. தமிழிச்சி. :D:)

Link to comment
Share on other sites

ஊரில் என்றால் குதிரை ஒடி பாஸ் பண்ணிப்போடலாம் ....உந்த வெளிநாட்டுக்காரன்களோட பெரிய பிரச்சனை.... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.