Jump to content

இஸ்லாத்தின் பெயரால் கொடூரம்


Recommended Posts

சொந்த மகளை இஸ்லாமிய முறைப்படி வாழவில்லை என்று கூறி தந்தையே கொலை செய்துள்ளார்.

அதுவும் இத்தாலியில்..... இதற்கும் தலிபான்களா பொறுப்பு.

மத வெறியை ஊட்டும் இஸ்லாமிய மதப் போதகர்களும் அடிப்படைவாதிகளுமே இவ்வாறான தீவிரவாதம் மக்களுக்குள் உருவாகக் காரணம்.

இதற்கு தாலிபான்கள் பொறுப்பா எனக் கேட்கின்றீர்கள். இதற்கு அவர்கள் அல்ல, ஆனால் இந்த மகளை கொன்ற தந்தையின் அடிப்படைவாத, காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளை நிறுவனப் படுத்தி அதற்கு அரச அதிகாரத்தினையும் பெற்றுக் கொடுக்க முனையும் அமைப்புகளில் முன்னணியில் இருப்பது தாலிபான்கள். எல்லா முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் இதனையே செய்ய முனைகின்றன

இதே போன்ற ஒரு கேள்வியினை இந்த திரியின் ஆரம்பத்தில் பின் வருமாறு கேட்டு இருந்தீர்கள்

ஏன் எங்கள் தேசத்திலும் தகாத உறவு வைத்திருந்த ஆண்கள் பெண்களை நாங்கள் போஸ்ரில் கட்டி மண்டையில் போடவில்லையா..??!

அது தவறு. ஆனால் அப்படியான தண்டனைகளை புலிகள் கொடுப்பதை என்றோ நிறுத்தி இருந்தார்கள். இராணுவத்துடன் சேர்ந்தியங்கி உளவு சொல்லிக் கொடுத்து கொண்டு பாலியல் தொழிலும் செய்த ஒரு சிலருக்கு மட்டுமே பிற்காலத்தில் மரண தண்டனை கொடுத்து இருந்தார்கள், அதன் காரணம் அவர்களின் தொழிலல்ல,அவர்கள் செய்த காட்டி கொடுக்கும் செயல்தான். புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ சட்டமைப்பிலும் அவர்களுக்கான தண்டனையாக மரண தண்டனையோ அல்லது காட்டு மிராண்டித்தனமான தண்டனைகளோ கொடுக்க சொல்லி இருக்கவில்லை. ஆனால் தாலிபான்கள் இவற்றை "குர்ஆனில் இதே சட்டம் தான் இருக்கு" என்று கூறி அதை தம் சட்டத்திலும் வைத்து இருக்கின்றார்கள்.

ஒரு தனி நபர் இவ்வாறான தண்டனைகளில் ஈடுபடும் போது, அதை தண்டிக்க சட்டமும் நீதியும் இருக்கும். ஆனால் அதே சட்டமும் நீதியும் கூட அத்தகைய தண்டனையை வழங்கும் போது, அந்த சட்டமே தவறாகவும் அதை அமுல் படுத்துவர்களும் தவறானவர்கள் ஆவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு தாலிபான்கள் பொறுப்பா எனக் கேட்கின்றீர்கள். இதற்கு அவர்கள் அல்ல, ஆனால் இந்த மகளை கொன்ற தந்தையின் அடிப்படைவாத, காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளை நிறுவனப் படுத்தி அதற்கு அரச அதிகாரத்தினையும் பெற்றுக் கொடுக்க முனையும் அமைப்புகளில் முன்னணியில் இருப்பது தாலிபான்கள். எல்லா முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் இதனையே செய்ய முனைகின்றன

இதே போன்ற ஒரு கேள்வியினை இந்த திரியின் ஆரம்பத்தில் பின் வருமாறு கேட்டு இருந்தீர்கள்.

அது தவறு. ஆனால் அப்படியான தண்டனைகளை புலிகள் கொடுப்பதை என்றோ நிறுத்தி இருந்தார்கள். இராணுவத்துடன் சேர்ந்தியங்கி உளவு சொல்லிக் கொடுத்து கொண்டு பாலியல் தொழிலும் செய்த ஒரு சிலருக்கு மட்டுமே பிற்காலத்தில் மரண தண்டனை கொடுத்து இருந்தார்கள், அதன் காரணம் அவர்களின் தொழிலல்ல,அவர்கள் செய்த காட்டி கொடுக்கும் செயல்தான். புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ சட்டமைப்பிலும் அவர்களுக்கான தண்டனையாக மரண தண்டனையோ அல்லது காட்டு மிராண்டித்தனமான தண்டனைகளோ கொடுக்க சொல்லி இருக்கவில்லை. ஆனால் தாலிபான்கள் இவற்றை "குர்ஆனில் இதே சட்டம் தான் இருக்கு" என்று கூறி அதை தம் சட்டத்திலும் வைத்து இருக்கின்றார்கள்.

ஒரு தனி நபர் இவ்வாறான தண்டனைகளில் ஈடுபடும் போது, அதை தண்டிக்க சட்டமும் நீதியும் இருக்கும். ஆனால் அதே சட்டமும் நீதியும் கூட அத்தகைய தண்டனையை வழங்கும் போது, அந்த சட்டமே தவறாகவும் அதை அமுல் படுத்துவர்களும் தவறானவர்கள் ஆவர்

தலிபான்கள் இத்தாலிக்கு வந்து வகுப்பெடுத்து இஸ்லாத்தை கடைப்பிடிக்க கட்டாயப்படுத்தி இருக்க முடியாது. ஆக இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது அந்த மதத்துக்குள் திணிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்துதான் சவுதி ஆளும் வர்க்கமும் சட்டங்களை ஆக்கி இருக்குது. ஈரானும் ஆக்கி இருக்குது. தலிபான்களும் ஆக்கி இருக்கிறார்கள்.

அண்மையில் ஐரோப்பிய மாநாடு ஒன்றில் பேசிய பிரித்தானிய பிரதமர் கம்ரூன் கூட வெளிப்படையாக இஸ்லாமியர்கள் பல்லினத்துவ சமூகத்தின் தோல்விக்கு காரணம் என்பது போல பேசி இருந்தார். தலிபான்கள் இந்த விடயத்தில் தனித்து நோக்கப்படுவதிலும்.. இஸ்லாமிய மதம் நவீன உலகிற்கு ஏற்ப சீர்திருந்தங்களுக்கு உட்பட வேண்டும் அடிப்படைவாதத்தை அது கைவிட வேண்டும் என்ற முழக்கமே இங்கு சரியானதாக இருக்க முடியும். அப்படிச் செய்தால் அன்றி இஸ்லாமியர்கள் மத்தியில் உலகெங்கும் பரவிக் கிடக்கும் அடிப்படைவாததிற்கு முடிவு கட்டுவது சிரமமானதாகவே இருக்கும். அது தலிபான்களைப் போல பல குழுக்களையும் உலகம் பூராவும் தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Link to comment
Share on other sites

இந்த செய்திகள் ஊடாக நீங்கள் சொல்ல வருவது என்ன???

மற்றைய மதங்களில் தவறுகள் இருக்கின்றன............ ஆக இந்து மத்திலும் இருக்கலாம்?

இஸ்லாமை சேர்ந்தவன் காட்டுமிராண்டியாக இருக்கிறான் ஆக நாங்களும் அப்படியே இருக்கலாம்???

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன் அடுத்தவனை கொல்கிறான் ஆக நாங்களும் கொல்லலாம்???

ஆக மனிதனாக மட்டும் மாறவே மாட்டோம் என்பதை பகிரங்கமாகவே எழுதி உங்களை நீங்களே இந்தளவிற்கு கேவலபடுத்துகிறீர்கள்?????

எந்தளவிற்கு மதம் பிடித்துள்ளது என்பதை இனியாவது புரிய முடிந்தால் புரிய முயற்சி செய்யுங்கள்.

சொல்லுகின்ற விடயத்தில் மாத்திரம் அல்ல, அதை விளங்கிக் கொள்வதிலும் விஷயம் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டேன். :D

இங்கு ஒவ்வொரு மதத்திலும் (இந்து சமயம் உட்பட)தென்பட்ட எதிர்மறையான சம்பவங்களை மேலே நான் இணைத்ததிற்குக் காரணம் டலிபான் கல் எறிந்து கொல்கின்றார்களே என்று கூச்சலிட மற்றைய மதங்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டவே.

இந்து மதத்தில் தாழ்ந்த ஜாதி என்று சொல்லி மக்களை சந்ததி சந்ததியாகச் சித்திரவதை செய்வதைவிட டலிபானின் கல் எறிந்து கொல்லும் முறை அப்படி ஒன்றும் கேவலமானது அல்ல என்பதே என்னுடைய கருத்து.

சிலுவைப் போர்களில் கிறீஸ்தவர்கள், பெண்கள் குழந்தைகள் என்றுபாராமல் ஆயிரக்கணக்கில் கிறீஸ்தவர் அல்லாதவர்களைக் கொன்று குவித்தார்கள். முழங்கால் அளவிற்கு கிறீஸ்தவர் அல்லாதவர்களின் இரத்தம் ஓடியதாம்.

கொசவோவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொலைசெய்யப்பட்டனர். கொலைகாரர்கள் சொன்ன காரணம் தாங்கள் கிறீஸ்தவர்கள்; அவர்கள் முஸ்லீம்கள் என்பதே.

துருக்கியப் படைகள் ஆர்மீனியாவில் ஆயிரக்கணக்கில் கிறீஸ்தவர்களைப் படுகொலைசெய்தது.

இன்றைய பாப்பரசர் நாஸி படையில் விமான எதிர்ப்பு துப்பாக்கி இயக்குனர். இவர்க்கு முன் இருந்த பாப்பரசர் போலந்து இராணுவ வீரர். இன்று இவர்கள் புனித தந்தைகள். தலை சுற்றுகின்றது.

இவற்றைப் பார்க்கும் போது நீங்கள் சொல்வது போல் இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மிகவும் கொடூரமானவை.

உங்களை ஞானஸ்தானம் செய்யும் நோக்கம் எனக்கில்லை. நீங்கள் ஞானஸ்தானம் செய்யவே கூடாது. ஏனென்றால் உங்களின் நோக்கம் மனிதனை மனிதனாக வாழவைக்க வேண்டும் என்பதே. இந்த உயரிய நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் எந்த மதத்தையும் சார்ந்திருக்கக் கூடாது. தப்பித் தவறி ஞானஸ்தானம் பெற்றிருந்தால் உங்கள் சேவைக்காகக் காத்திருக்கம் மக்கள் நன்மை கருதி குளியல் அறைக்குச் சென்று குளித்து உங்கள் ஞானஸ்தானத்திற்கே ஞானஸ்தானம் கொடுத்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுகின்ற விடயத்தில் மாத்திரம் அல்ல, அதை விளங்கிக் கொள்வதிலும் விஷயம் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டேன். :D

இங்கு ஒவ்வொரு மதத்திலும் (இந்து சமயம் உட்பட)தென்பட்ட எதிர்மறையான சம்பவங்களை மேலே நான் இணைத்ததிற்குக் காரணம் டலிபான் கல் எறிந்து கொல்கின்றார்களே என்று கூச்சலிட மற்றைய மதங்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டவே.

இந்து மதத்தில் தாழ்ந்த ஜாதி என்று சொல்லி மக்களை சந்ததி சந்ததியாகச் சித்திரவதை செய்வதைவிட டலிபானின் கல் எறிந்து கொல்லும் முறை அப்படி ஒன்றும் கேவலமானது அல்ல என்பதே என்னுடைய கருத்து.

சிலுவைப் போர்களில் கிறீஸ்தவர்கள், பெண்கள் குழந்தைகள் என்றுபாராமல் ஆயிரக்கணக்கில் கிறீஸ்தவர் அல்லாதவர்களைக் கொன்று குவித்தார்கள். முழங்கால் அளவிற்கு கிறீஸ்தவர் அல்லாதவர்களின் இரத்தம் ஓடியதாம்.

கொசவோவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொலைசெய்யப்பட்டனர். கொலைகாரர்கள் சொன்ன காரணம் தாங்கள் கிறீஸ்தவர்கள்; அவர்கள் முஸ்லீம்கள் என்பதே.

துருக்கியப் படைகள் ஆர்மீனியாவில் ஆயிரக்கணக்கில் கிறீஸ்தவர்களைப் படுகொலைசெய்தது.

இன்றைய பாப்பரசர் நாஸி படையில் விமான எதிர்ப்பு துப்பாக்கி இயக்குனர். இவர்க்கு முன் இருந்த பாப்பரசர் போலந்து இராணுவ வீரர். இன்று இவர்கள் புனித தந்தைகள். தலை சுற்றுகின்றது.

இவற்றைப் பார்க்கும் போது நீங்கள் சொல்வது போல் இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மிகவும் கொடூரமானவை.

உங்களை ஞானஸ்தானம் செய்யும் நோக்கம் எனக்கில்லை. நீங்கள் ஞானஸ்தானம் செய்யவே கூடாது. ஏனென்றால் உங்களின் நோக்கம் மனிதனை மனிதனாக வாழவைக்க வேண்டும் என்பதே. இந்த உயரிய நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் எந்த மதத்தையும் சார்ந்திருக்கக் கூடாது. தப்பித் தவறி ஞானஸ்தானம் பெற்றிருந்தால் உங்கள் சேவைக்காகக் காத்திருக்கம் மக்கள் நன்மை கருதி குளியல் அறைக்குச் சென்று குளித்து உங்கள் ஞானஸ்தானத்திற்கே ஞானஸ்தானம் கொடுத்து விடுங்கள்.

அவசரமான வாசிப்பு உங்களின் கருத்தை தவறாக புரியவும் ஒரு தவறான கருத்தை பதியவும் சாத்தியமாயிற்று!

மன்னித்துகொள்ளவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு தாலிபான்கள் பொறுப்பா எனக் கேட்கின்றீர்கள். இதற்கு அவர்கள் அல்ல, ஆனால் இந்த மகளை கொன்ற தந்தையின் அடிப்படைவாத, காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளை நிறுவனப் படுத்தி அதற்கு அரச அதிகாரத்தினையும் பெற்றுக் கொடுக்க முனையும் அமைப்புகளில் முன்னணியில் இருப்பது தாலிபான்கள். எல்லா முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் இதனையே செய்ய முனைகின்றன

இதே போன்ற ஒரு கேள்வியினை இந்த திரியின் ஆரம்பத்தில் பின் வருமாறு கேட்டு இருந்தீர்கள்

அது தவறு. ஆனால் அப்படியான தண்டனைகளை புலிகள் கொடுப்பதை என்றோ நிறுத்தி இருந்தார்கள். இராணுவத்துடன் சேர்ந்தியங்கி உளவு சொல்லிக் கொடுத்து கொண்டு பாலியல் தொழிலும் செய்த ஒரு சிலருக்கு மட்டுமே பிற்காலத்தில் மரண தண்டனை கொடுத்து இருந்தார்கள், அதன் காரணம் அவர்களின் தொழிலல்ல,அவர்கள் செய்த காட்டி கொடுக்கும் செயல்தான். புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ சட்டமைப்பிலும் அவர்களுக்கான தண்டனையாக மரண தண்டனையோ அல்லது காட்டு மிராண்டித்தனமான தண்டனைகளோ கொடுக்க சொல்லி இருக்கவில்லை. ஆனால் தாலிபான்கள் இவற்றை "குர்ஆனில் இதே சட்டம் தான் இருக்கு" என்று கூறி அதை தம் சட்டத்திலும் வைத்து இருக்கின்றார்கள்.

ஒரு தனி நபர் இவ்வாறான தண்டனைகளில் ஈடுபடும் போது, அதை தண்டிக்க சட்டமும் நீதியும் இருக்கும். ஆனால் அதே சட்டமும் நீதியும் கூட அத்தகைய தண்டனையை வழங்கும் போது, அந்த சட்டமே தவறாகவும் அதை அமுல் படுத்துவர்களும் தவறானவர்கள் ஆவர்

தலிபான்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக போர்நடந்துகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டவர்கள். அவர்கள் முற்று முழுதாக இஸ்லாம் அடிப்படைவாதத்தையே தமது அறிவாக கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு உரிய வெளியுலக அறிவு என்பது மிகவும் குறைவானது. அது அவர்களுக்கு சாத்தியம் அற்றதாகவுமே இருக்கின்றது. அதிலும் தலிபானின் மேல்மட்டம் ஒரு கடும்போக்கை கையாண்டாலும் காட்டுமிராண்டி தனத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் என்று நான் நம்பவில்லை. போர் நடைபெறுவதால் தலைமைக்கும் வெளியிட போராளிகளுக்குமான தொடர்பு ஒரு வரையறைக்குள்ளானதாகவே இருக்கும். இதில் மதபெரியவர்கள் என்ற மதிப்பை ஒரு அயோக்கியனுக்கு கொடுக்கபோக அவனுடைய அயோக்கியதனங்களுடன் ஒரு பிரதேச பொறுப்பாளருடைய மட்டுபட்ட அறிவு என்பன ஒன்று சேரவே இவ்வாறான கொடுமைகள் அரங்கேறுகின்றன என்றே நான் நினைகிறேன.;

அதற்காக தலிபான்களுடைய கொள்கைகளுக்கு நான் வக்காளத்து வங்குவதாக இல்லை.......... சூழ்நிலைகள் பல தவறுகளுக்கு வழிசமைப்பதை எமக்கு இன்னொருவன் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

பெண்கள் குர்தாவுக்குள் மூடிகிடக்க வேண்டும் என்பதை குர்றான் எங்கேனும் சொல்லவில்லை............ ஆணாதிக்கம்தான் பெண்கள் மேல் அப்படியொரு சுமையை சுமத்துகின்றது.

இத்தாலியில் நடந்த சம்பவம் கூட ஒரு வகையில் ஆணாதிக்கத்தின் வெளிபாடுதான் தன்னை தனது மகள் எவ்வாறு மீற முடியும் என்றொரு ஆணாதிக்க சிந்தனை ஒரு தந்தையை கொலைகாரனாக ஆக்கியுள்ளது.

ஆனால் இத்தனை கொடுமைகளையும் பாதுகாப்பாக பாதுகாத்து உலகம் எவ்வளவு முன்னேறினாலும் அப்படியே அரங்கேற்ற............ மதங்கள்தான் முன்னிற்கின்றன. கடவுள் பயத்தை மக்களுக்குள் புகுத்திவிட்டு பின்பு தமது கொடுராமான அக்கிரமங்களை அந்த மக்கள் மேல் திணிப்பது இதுவே எல்லா மதங்களின் அடிப்படை தத்துவங்களும்.

குர்தாவை கிழித்து எறிந்து இந்த பூமியில் வாழ பிறந்த பெண்களை அதற்குள் இருந்து விடுதலை செய்ய தலிபான்கள் மட்டுமல்ல அனைத்து முஸ்லீம் சமூகமும் முன்வரவேண்டும். அதற்கு பெண்களும் அறியாமையில் இருந்து சற்று முன்னேற வேண்டும்.

அறியாமையில் இருந்துகொண்டு குர்தாவை கைவிடுவதென்பது அதெனிலும் விட பெண்களுக்கு கேடு விளைவிக்கும். கிட்டதட்ட இப்போது மேற்குல பெண்களை ஆணாதிக்கம் தனது ஆசையை றிறைவேற்ற ஒரு முக்கோண துண்டு துணியையும் ஒரு நூலையும் கோத்து அதை ஒரு ஆடை என்று போட்டு கடற்கரைகளில் நடமாடவிட்டுள்ளது. இங்கே பெண்களின் மதிப்பு என்பது தராதரம் கெட்டு நுறா? நுற்றிஐம்பதா? என்ற நிலையில்தான் இருக்கின்றது. குடும்ப வாழ்க்கை சீரழிந்து பிள்ளைகள் வீடுகளின்றி திரிகின்றன......... பதினொரு பன்னிரெண்டு வயதுகளில் கருதரிப்பும் கருகலைப்பும் சாதாரணமாக நடைபெறுகின்றன. இந்த பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை என்பது எத்தனை மன உளைச்சல்களுக்கு உள்ளேயானது என்பதை எல்லோராலும் புரிய முடியும்.

Link to comment
Share on other sites

அவசரமான வாசிப்பு உங்களின் கருத்தை தவறாக புரியவும் ஒரு தவறான கருத்தை பதியவும் சாத்தியமாயிற்று!

மன்னித்துகொள்ளவும்!

நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமேயில்லை மருது.

வலிக்கும் படி எழுதிய நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

குறிப்பாக கிறீஸ்தவத்தை குறை கூறி எழுதியிருக்கிறேன். இன்று வாசிக்கும் போது மனம் வருந்தியது.

எழுதிய எதுவும் கற்பனையல்ல. வரலாற்றில் நடந்தேறிய சம்பவங்களே.

இருப்பினும் என் எழுத்துக்கள் இயேசுவை களங்கப் படுத்துவதாக அமைவது வருத்தத்தைத் தருகிறது.

அவர் மீண்டும் ஒரு முறை இவ்வுல‌கிற்கு வருவாராயின் அவரைக் காணத் தவமிருப்பவர்களில் நானும் ஒருவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.