Jump to content

யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை

Saturday, January 29, 2011, 6:59

யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.இவன் யாழ். மாவட்ட வடமராட்சி கிழக்குப் பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் என்பதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பருத்தித்துறை ஆனை விழுந்தான் சந்தியில் அவர்மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அந்த இடத்திலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று நண்பகலை அண்மித்த நேரம் வரை அவரது சடலம் ஸ்தலத்திலிருந்து அகற்றப்படாமல் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர் .

tamilthai.com

Link to comment
Share on other sites

... கிறிமினல் அத்தியடி குத்தியின் இன்னொரு நாடகம் .... இன்னொரு அற்புதன் .... இவை தொடரும் ... குத்தி அன்ட் கோ அங்கு தொடர்ந்து ஆயுதங்களுடன் நடமாடுவதற்கு ...

Link to comment
Share on other sites

... கிறிமினல் அத்தியடி குத்தியின் இன்னொரு நாடகம் .... இன்னொரு அற்புதன் .... இவை தொடரும் ... குத்தி அன்ட் கோ அங்கு தொடர்ந்து ஆயுதங்களுடன் நடமாடுவதற்கு ...

சதீஸ் என்பவர் டக்ளஸ் தேவானந்தாவை அண்மைகாலமாக விமர்சித்து வந்துள்ளார். பொற்பதியில் டக்ளஸ் குழுவால் கொல்லப்பட்ட பொதுமகன் குடும்பத்திடம் சதீஸ் என்பவர் சென்று கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் தனகும் தொடர்பு இலை எனவும் ஆனால் தான் யார் செய்தது என அறிந்து சொல்லுவேன் எனவும் கூறியுள்ளார்.

கூடவே மணல்காட்டில் டக்ளஸ் குழுவால் எடுத்து விற்கப்படும் மணல் பணத்தில் இரூந்து வடமரட்ட்சி கிழக்கிற்கு உதவிகள் செய்யபப்டவேண்டும் என்று கோரிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sathese.jpg

ஈழ நாதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
<_< இவர் குத்தியானிட்டை ஏன் முதலில போய்ச் சேந்தவர்?? மக்களுக்கு நண்மை செய்யவா?? இல்லைத்தானே?? வேட்டை நாயொன்று செத்தது என்று சும்மா போவீர்களா??
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.