Jump to content

சம்பிரதாயங்களும்,மூட நம்பிக்கையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்மக்களிடையே பல சம்பிரதாயங்கள்,பழக்கவழக்கங்கள்,நம்பிக்கைகள்,மூட நம்பிக்கைகள் ஊறிப் போய் கிடக்கிறது...சிலவற்றில் உண்மை இருந்தாலும் பல்வற்றில் உண்மை இல்லை என நினைக்கிறேன்.உதாரணமாக யாருடைய வீட்டுக்குப் போனாலும் சப்பாத்தை,செருப்பை வாசலில் கழட்டி வைத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும் காரணம் வீதியில் உள்ள அழுக்குகள் எல்லாம் வீட்டுக்குள் வந்து விடும் என்ட காரணத்தால் ஆகும் இது நல்லதொரு பழக்கமாகும் ஆனால் சில பேர் சொல்வார்கள் இரவு லைட் போட்டு விட்டால் ஒன்டுமே ஆத்திர அவசரத்திற்கு மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது என சொல்கிறார்கள் இதில் உண்மை இருக்கா எனக்குத் தெரியவில்லை? தெரிந்தவர்கள் சொல்லவும்.

நாங்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் எது நல்லது?...எது மூட நம்பிக்கை என கருதுகிறீர்கள் என எழுத முடியுமா?...மற்றவர்களும் அறிந்து கொண்டால் அவர்களுக்கும் பிரயோசனமாய் இருக்கும்.

நான் அண்மையில் எனது நண்பி ஒருவருக்கு பேனா பரிசளித்தேன்.பரிசளித்த கொஞ்ச நாட்களுக்குள் எங்களுக்குள் கருத்து வேற்றுமை வந்து நாங்கள் பிரிந்து போய் விட்டோம்.இரு நாட்களுக்கு முன் ஒரு அம்மா சொன்னார் நண்பர்களுக்கு ஒரு நாளும் பேனா,சென்ட்,கைக்குட்டை,குடை போன்றவற்றை பரிசளிக்க கூடாது என? எனக்கு இதில் நம்பிக்கை இல்லா விட்டாலும் என் நண்பி பிரிந்து போன படியால் இது உண்மையாய் இருக்குமோ என மனதிற்குள் ஒரு நெருடல்.இது பற்றிய தங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

நீங்கள் பேனா கொடுத்திராவிட்டாலும் கருத்துவேற்றுமையினால் அவர் பிருந்துதானிருப்பார். காகமிருக்கப் பனம்பழம் விழுந்த கதைமாதிரித்தான் ,

Link to comment
Share on other sites

எங்கட கடந்த கால சந்ததியினர் அந்தக் காலத்திற்கு ஏற்றது போல் ஏதாவது உருவாக்கி இருப்பார்கள். :rolleyes: உதாரணத்திற்கு இரவில் நகம் வெட்டக் கூடாது என்பார்கள், ஏன் எனக் கேட்டால் 'வீட்டிற்கு கூடாது' என்பதோடு சரி... நான் நினைக்கிறன் இரவில் நகம் வெட்டும் போது சிறு துண்டு நகங்கள் சிதறிப் போவதுண்டு அதனை இரவு வெளிச்சத்தில் தேடி எடுப்பது கொஞ்சம் சிரமம். (எனது நகத்தில் ஒரு சிறிய பகுதி உடைந்தது விட்டது என்று வைத்துக் கொள்வோம் அதனை வெட்டி விட்டால் அதிலிருந்து வரும் வலியைக் குறைக்க முடியும் என்று எனது மனம்/ மூளை அறிவுறுத்துகிறது, ஆனால் அதை சம்பிரதாயம் என்று நினைத்து அடுத்த நாள் காலை வரைக்கும் வைத்துருப்பது எனது மூடத்தனம்.) அது போல தான் மூளைக்கு சரி என படுவதை நாம் செயல்படுத்துவது ஒன்றும் பிழை இல்லை.

உங்கள் நண்பிக்கு நீங்கள் பரிசளித்த பேனாவில் இருந்தா கருத்து வேற்றுமை ஆரம்பித்தது? இருக்காது என்று நினைக்கிறன். ஒவ்வொரு பிரச்சனைக்குரிய அடிப்படைக் காரணத்தை அறிந்து கொள்ளவதால் மட்டுமே அப்பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

Link to comment
Share on other sites

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

என்ன கொடுக்கிறோம் என்பது பெரிதல்ல, ஏதாவது கொடுக்கவேணும் என்று நினைப்பதே பெரிது! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேனா கொடுத்ததால் எங்களுக்குள் பிரச்சனை இல்லை ஆனால் பழைய ஆட்கள் சொன்ன மாதிரி பேனா குடுக்கக் கூடாது கொடுத்தால் பிரிவார்கள் என்ட கூற்று உண்மையாகி விட்டதல்லவா :unsure:

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

எவ்வளவுக்கு வேண்டிக் கொடுக்கிறோம் என்பதை விட அன்பாய் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்

நான் சவுத்தோல் பக்கம் இருக்கேயில்லை உங்கட ஆட்கள் தான் அங்காலப் பக்கம் இருக்கினம் போல :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ள பிற்போக்குக் குணங்களால் முன்னேற்றமான சமூகமாக மாறமுடியாமல் உள்ள இனங்களில் தமிழர்களும் அடங்குவர். எனவே "அது அப்படித்தான்" என்று வாழப் பழகினால் கேள்விகள்/சந்தேகங்கள் பிறக்காது! <_<

கல்வியறிவு வளர்ந்து, வசதிகள் பெருகி, பல நாடுகள் என்று புலம்பெயர்ந்து, நடையுடை பாவனை, நாகரிகம் எல்லாம் கண்டாலும் ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள்.

ஒரு விடயத்தைச் செய்யாமல்விட்டால் ஒரு தீங்கும் வராது என்று புரியும்பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். உதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடாமல் இருந்த பலர் தற்போது வெள்ளிக் கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லையா? இப்படி கைவிடப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவுண்டு.

ஒன்றைச் செய்யவில்லை எனில் துன்பம் வந்து விடுமோ என்ற பயத்தில், அது அவசியமா இல்லையா என்று யோசிக்காமாலேயே பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை கைவிடாமல் இருக்கின்றோம். தேவையற்றது/பிழையானது என்று நினைத்தாலும் மற்றவர்கள் ஏதும் சொல்வார்களோ என்று சமூகத்திற்குப் பயந்து சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கின்றோம்.

எனவே, நாங்கள் செய்வது சரியானதா/தேவையானதா என்பதைச் சிந்தித்துச் செயற்பட்டால் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் காணாமல் போகும். தேவையானவை மட்டுமே தொடர்ந்தும் இருக்கும்.

இதற்குள் நண்பர்களுக்கு பேனா பரிசளிக்கக்கூடாது என்பதும் சிலருக்குப் பொருந்தலாம் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ள பிற்போக்குக் குணங்களால் முன்னேற்றமான சமூகமாக மாறமுடியாமல் உள்ள இனங்களில் தமிழர்களும் அடங்குவர். எனவே "அது அப்படித்தான்" என்று வாழப் பழகினால் கேள்விகள்/சந்தேகங்கள் பிறக்காது! <_<

ஒரு விடயத்தைச் செய்யாமல்விட்டால் ஒரு தீங்கும் வராது என்று புரியும்பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். உதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடாமல் இருந்த பலர் தற்போது வெள்ளிக் கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லையா? இப்படி கைவிடப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவுண்டு.

அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்ல முடியாது. அவை உருவாக்க பட்ட காலத்தில் அவை அர்த்தம் உள்ளதாகவே இருந்திருக்கும். இந்த காலத்திற்கு பொருந்தாததாக இருக்கலாம் ... அதற்காக அர்த்தமற்ற என்று சொல்ல முடியாதே.

சகுனங்களும் மூட நம்பிக்கைகளும் வேறு. அது எல்லா சமூகதினரிலும் இருக்கும் ஒன்று. இங்கு 13 ம் இலக்கம் இராசி அற்றது தீங்கு விளைவிக்கும் இலக்கம் என்று கருதுபவர்கள் இப்பவும் இருக்கிறார்கள். பல தொடர் மாடி கட்டடடங்களில் 13 மாடி இருந்தாலும் அதை ஸ்கிப் பண்ணி... 12 க்கு அடுத்ததாக 14 என்று பார்த்திருக்கிறேன். கனடாக்கு வந்த புதிதில், மொக்கங்கள் என்று நினைத்திருக்கிறேன். 13 ம் திகதி வெள்ளிகிழமை வந்தால் அதை ஒரு செய்தியாக இப்ப கூட சொல்லுர்கிரார்கள்.

வெள்ளிகிழமை மாமிசம் சாப்பிடாமல் மரக்கறி (சைவ) உணவு சாப்பிடும் (இது தமிழர்களுக்கு இல்லை - சைவர்களுக்கு மட்டும் - சமைய காரணம்), காரணம், சாப்பாட்டில் ஒரு balance இருக்க வேண்டும் என்ற காரணமாக இருக்கலாம். சைவ உணவின் போது ஒரு கறியுடன் சாப்பிட முடியாதெண்டு 4 கறி வைப்பினம். மாமிச நாள் என்றால், ஒரு கோழிக்கால் கறி, மீன் கறி என்று ஒற்றை கறியே இருக்கும். அதன் காரணமாகவே வெள்ளிகிழமை சைவம் எனக்கு பிடிக்கும். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்ல முடியாது. அவை உருவாக்க பட்ட காலத்தில் அவை அர்த்தம் உள்ளதாகவே இருந்திருக்கும். இந்த காலத்திற்கு பொருந்தாததாக இருக்கலாம் ... அதற்காக அர்த்தமற்ற என்று சொல்ல முடியாதே.

ஒரு காலத்தில் அர்த்தமுள்ளவையாக இருந்திருக்கலாம். அதற்காக தற்போதும் அவற்றை அப்படியே கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமா? எனவே தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத சடங்குகள், சம்பிரதாயங்கள் தற்போது அர்த்தமில்லாதவை என்றே கொள்ளப்படவேண்டும்.

வெள்ளி 13ந் தேதியை நம்பும் மேற்கத்தையர்கள் உள்ளனர். அதற்காக இது அர்த்தமுள்ள நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் அர்த்தமுள்ளவையாக இருந்திருக்கலாம். அதற்காக தற்போதும் அவற்றை அப்படியே கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமா? எனவே தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத சடங்குகள், சம்பிரதாயங்கள் தற்போது அர்த்தமில்லாதவை என்றே கொள்ளப்படவேண்டும்.

தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத என்பதற்காக அர்த்தம் இல்லாதவை என்று கூற முடியாதே. அதற்காக, அப்பிடி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நான் சொல்ல வர இல்லை.;)

வெள்ளி 13ந் தேதியை நம்பும் மேற்கத்தையர்கள் உள்ளனர். அதற்காக இது அர்த்தமுள்ள நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!

உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத என்பதற்காக அர்த்தம் இல்லாதவை என்று கூற முடியாதே. அதற்காக, அப்பிடி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நான் சொல்ல வர இல்லை.;)

அப்படியானால் சிலவற்றை அர்த்தம் தெரியாத சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் என்ற கூடைக்குள்ளும் சிலவற்றை அர்த்தம் தெரிந்த சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் என்ற கூடைக்குள்ளும் போட்டுக்கொள்ளலாம். :blink:

Link to comment
Share on other sites

முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என. காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம். ஆனால் தற்காலத்திலும் ஒரு விடயத்தை பகுத்தறியாமல் சகுனம் பார்ப்பது எதிர்மறையான எண்ணங்களைத் தூண்டி அழிவிற்கே வழிவகுக்கும்.

நான் ஒரு நாள் நேர்முகப்பரிட்ச்சைக்கு போகும் வழியில் எனக்கு தெரிந்த ஒருவரைச் சந்தித்தேன். எங்கு போகிறாய் என கேட்ட பொழுது விடயத்தை சொன்னேன். அதற்கு அவர் இன்றைக்கு 13 ம் திகதி செவ்வாய்க்கிழமை போதாததிற்கு ராகு காலமோ ஏதோ கேட்ட நேரமும் வேற எனச் சொன்னார்.

எனக்கு அந்த வேலை கிடைத்தது. அதைவிட அந்த வேலையில் கிடைத்த பணமும் சந்தோசமும் இற்றை வரை வேறு எந்த வேலையிலும் கிடைக்கவில்லை.

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

:lol:

நல்லாத்தான் லண்டனைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். Southkall இற்கு இந்தியப் பெண்களை சைட் அடிக்கவா போனீர்கள்? கவனம் சீக்கியர்கள் பொல்லாத கோபக்காரர் வெட்டிவிடுவார்கள். :lol:

Link to comment
Share on other sites

நல்லாத்தான் லண்டனைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். Southkall இற்கு இந்தியப் பெண்களை சைட் அடிக்கவா போனீர்கள்? கவனம் சீக்கியர்கள் பொல்லாத கோபக்காரர் வெட்டிவிடுவார்கள். :lol:

சேச்சே.. என்னதான் இருந்தாலும் அப்பிடிச் செய்வனா? :unsure: நான் எப்பவும் எங்கடை ஆக்களைத்தான்..! கொலியர்ஸ்வுட், டூட்டிங் பக்கம்.. :wub::lol:

Link to comment
Share on other sites

ரதி நீங்களுமா???? மூடநம்பிக்கைகளை இந்த காலத்திலும் நீங்கள் நம்புவது ஆச்சரியமாக உள்ளது. பேனாவிற்கும் உங்கள் நண்பி பிரிந்ததற்கும் என்ன சம்பந்தம்? :rolleyes: மூடநம்பிக்கைகள் சிலவற்றில் அர்த்தம் உள்ளது உண்மை அதற்காக அர்தமில்லாதவற்றை நான் நம்புவதில்லை :) உதாரணத்திற்கு ஏணியின் கீழ் போனால் சகுணம் சரியில்லை என்பார்கள்....ஆனால் உண்மையான காரணம் ஏணி தலை மேல் விழுவதற்காக சந்தர்பம் உள்ளமையே. அதே போன்று இரவில் நகம் வெட்டுதல்-ஊசி முட்டை எண்ணெய் போன்றவை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றை சொல்லலாம். இவற்றை செய்யவேண்டாம் என்னால் யார் கேட்பார்கள் அதனால் தான் கெட்ட சகுணம் என்று சொல்லி அவற்றை செய்யாமல் தடுத்திருப்பார்கள். நான் எந்தவித சகுணங்களையோ மூடநம்பிக்கைகளையோ அறவே நம்புவதில்லை. நடப்பது தான் நடக்கும் நாம் தலைகீழாக நின்றாலும் :lol::wub:

அதிலும் இந்த ராகு காலம் அட்டமி நவமி வியாழக்கிழமை போன்றவை நமக்கு ரொம்பவே அலர்ஜி

:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேச்சே.. என்னதான் இருந்தாலும் அப்பிடிச் செய்வனா? :unsure: நான் எப்பவும் எங்கடை ஆக்களைத்தான்..! கொலியர்ஸ்வுட், டூட்டிங் பக்கம்.. :wub::lol:

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்களுமா???? மூடநம்பிக்கைகளை இந்த காலத்திலும் நீங்கள் நம்புவது ஆச்சரியமாக உள்ளது. பேனாவிற்கும் உங்கள் நண்பி பிரிந்ததற்கும் என்ன சம்பந்தம்? :rolleyes: மூடநம்பிக்கைகள் சிலவற்றில் அர்த்தம் உள்ளது உண்மை அதற்காக அர்தமில்லாதவற்றை நான் நம்புவதில்லை :) உதாரணத்திற்கு ஏணியின் கீழ் போனால் சகுணம் சரியில்லை என்பார்கள்....ஆனால் உண்மையான காரணம் ஏணி தலை மேல் விழுவதற்காக சந்தர்பம் உள்ளமையே. அதே போன்று இரவில் நகம் வெட்டுதல்-ஊசி முட்டை எண்ணெய் போன்றவை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றை சொல்லலாம். இவற்றை செய்யவேண்டாம் என்னால் யார் கேட்பார்கள் அதனால் தான் கெட்ட சகுணம் என்று சொல்லி அவற்றை செய்யாமல் தடுத்திருப்பார்கள். நான் எந்தவித சகுணங்களையோ மூடநம்பிக்கைகளையோ அறவே நம்புவதில்லை. நடப்பது தான் நடக்கும் நாம் தலைகீழாக நின்றாலும் :lol::wub:

அதிலும் இந்த ராகு காலம் அட்டமி நவமி வியாழக்கிழமை போன்றவை நமக்கு ரொம்பவே அலர்ஜி

:D:lol:

நானும் பெரிதாக இந்த சம்பிர‌தாயங்கள் பார்ப்பதில்லை ஆனால் சில நேர‌ங்களில் பழைய பெரியவர்கள் சொன்ன மாதிரியே நட‌ந்து விடும்...என் நண்பி பிரிந்து போனதையிட்டுக் கவலையில்லை ஆனால் கைக்குட்டை பரிசளிக்கக் கூடாது என்ட‌ பெரியவர்களின் கருத்து உண்மை தானே தமிழினி...

அதை விட சில பேரை நான் கண்டிருக்கிறேன் இப்பவும் இர‌வில் சாப்பாடு வாங்கி வந்தால் கொஞ்ச‌த்தை அதில் குப்பைக்குள் போட்டு விட்டு தான் சாப்பிடுவார்கள்

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

ஆஹா போயும்,போயும் டூட்டிங்கிலா...

Link to comment
Share on other sites

நானும் பெரிதாக இந்த சம்பிர‌தாயங்கள் பார்ப்பதில்லை ஆனால் சில நேர‌ங்களில் பழைய பெரியவர்கள் சொன்ன மாதிரியே நட‌ந்து விடும்...என் நண்பி பிரிந்து போனதையிட்டுக் கவலையில்லை ஆனால் கைக்குட்டை பரிசளிக்கக் கூடாது என்ட‌ பெரியவர்களின் கருத்து உண்மை தானே தமிழினி...

அதை விட சில பேரை நான் கண்டிருக்கிறேன் இப்பவும் இர‌வில் சாப்பாடு வாங்கி வந்தால் கொஞ்ச‌த்தை அதில் குப்பைக்குள் போட்டு விட்டு தான் சாப்பிடுவார்கள்

இந்த கைக்குட்டை மற்ரர் எனக்கு விளங்கல ரதி. ஏன் கைக்குட்டை பரிசளிக்கக்கூடாது? யாராவது தாங்கள் பாவிச்சதை பரிசளித்துவிடுவினம் என்ன பயத்தில அப்படி சொன்னார்களோ தெரியல :lol: கைக்குட்டை பரிசளிக்கக்கூடாது என்பதில் உள்ள உண்மை என்ன என்று சொன்னால் தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். :)

ஆஆஆ நான் இன்று தான் கேள்விப்படுகின்றேன் சாப்பாட்டில் கொஞ்சத்தை குப்பையில் போட்டுவிட்டு சாப்பிடுவது பற்றி....ஏன் ரதி அதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்? எனக்கு இந்த மூடநம்பிக்கைகளுக்கான அறிவு ரொம்பவே மட்டம். :rolleyes:

Link to comment
Share on other sites

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

ஏப்ரல் மாதம் சந்திப்போம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா போயும்,போயும் டூட்டிங்கிலா...

அங்குதானே நல்ல தமிழ்க் குட்டிகள் இருக்குதென்று இசை சொன்னார்! நீங்கள் ரூட்டிங்கில் இல்லையென்பதில் இருந்து அது உறுதியாகின்றது :wub::lol:

ஏப்ரல் மாதம் சந்திப்போம்..! :D

வரும்போது இரகசியமாகவோ/பரகசியமாகவோ சொல்லிவிட்டு வாருங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் சில பழக்கங்கள் உண்டு

காகிதங்களை புத்தகங்களை காலால் மிதிக்கமாட்டேன்

எந்த சாமி படம் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்துவைக்காமல் போகமாட்டேன்

பால் குடிக்கும் தண்ணி சாப்பாடு போன்றவற்றை காலால் தொடமாட்டேன் (தட்டமாட்டேன்)

தலைவர் படம் இருக்கும் பக்கம் கால் வைத்து படுக்கமாட்டேன்

இரவில் நகம் வெட்டமாட்டேன்

பெரியோருக்கு முன் கால்மேல்கால்போட்டுக்கொண்டு இருக்கமாட்டேன்

செத்தவீட்டுக்கு போய்வந்தால் நேரே குளியறைக்குத்தான் போவேன். வீட்டில் எங்கும் போகமாட்டேன். எவரும் என்னைத்தொடக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் சில பழக்கங்கள் உண்டு

காகிதங்களை புத்தகங்களை காலால் மிதிக்கமாட்டேன்

காகிதங்கள் எனக்கு பிரச்சனை இல்லை. புத்தகங்களை தெரிந்து உளக்க மாட்டேன், தவறுதலாக உளக்கி விட்டால், எனது மனைவி போல் பதட்ட படாமல் எடுத்து வைத்து விட்டு போவேன். அப்பிடி உழக்கினால், சிலர் அதை தொட்டு கும்பிடுவதை பார்த்து இருக்கிறேன்

எந்த சாமி படம் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்துவைக்காமல் போகமாட்டேன்

என்ன பொருள் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்து வைப்பேன். சிலர் போல சாமி படத்தை (கலண்டர் மட்டை) எறிய கூடாதென வருடக்கணக்காக சேர்த்து வைக்க மாட்டேன்.

பால் குடிக்கும் தண்ணி சாப்பாடு போன்றவற்றை காலால் தொடமாட்டேன் (தட்டமாட்டேன்)

அசுத்தம் ஆகிவிடும் என்று நானும் சாப்பாடு தண்ணியை காலால் தொடுவது இல்லை

தலைவர் படம் இருக்கும் பக்கம் கால் வைத்து படுக்கமாட்டேன்

இரவில் நகம் வெட்டமாட்டேன்

வெளிச்சம் இருப்பதால் இரவு பகல் பார்ப்பதில்லை. எப்ப வசதியோ, அப்போ வெட்டுவேன்

பெரியோருக்கு முன் கால்மேல்கால்போட்டுக்கொண்டு இருக்கமாட்டேன்

பொதுவாகவே கால் மேல் கால் போட்டு இருப்பதில்லை. ஒரு காலை மடிச்சு இருக்கையில் வைக்கும் பழக்கம் இருக்கு.. ஆர் இருக்கினம் எண்டு பார்ப்பதில்லை. என் வசதிக்கு இருந்து கொள்வேன்

செத்தவீட்டுக்கு போய்வந்தால் நேரே குளியறைக்குத்தான் போவேன். வீட்டில் எங்கும் போகமாட்டேன். எவரும் என்னைத்தொடக்கூடாது.

இறந்தவர் தொற்ற கூடிய நோயினால் இறந்தவராயிநும், மரண வீட்டில் யாரையாவது கட்டி அணைத்திருந்தால் கட்டாயம் வீட்டுக்கு போன உடனே தோய்வேன். மற்ற படி, வீட்டில் யாரும் கவனிக்க இல்லை எண்டால் பேசாமல் இருந்திடுவேன். ஆனால் நான் இப்பிடி என்று தெரிந்ததால், வீட்டிற்கு வந்த உடனேயே குளியலறைக்கு போக உத்தரவு வழங்கப்படும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட சபேஸ் மாதிரித்தான் நானும் இவற்றை அணுகுகின்றேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் புத்தகங்கள்,பேப்பர்கள் கீழ் கிடந்தால் எடுத்து மேலே வைத்து விடுவேன் தவறுதலாக விளக்கி விட்டால் தொட்டுக் கும்பிட்டு விட்டு தான் எடுத்து வைப்பேன்.

கலண்டர்களை அதுவும் சாமிப்படக் கலண்டராய் இருந்தால் கூட அந்தந்த வருடம் முடிய எடுத்து எறிந்து விடுவேன்.

எங்கேயாவாது வெளியே போய் விட்டு வரும் போது கால்,கை,முகம் கழுவிப் போட்டு தான் மற்ற வேலை பார்ப்பேன்.

இங்கு புலம் பெயர்ந்து வந்த பிறகு செத்த வீட்டுக்குப் போனது குறைவு...ஒர்,இரண்டு செத்த வீட்டுக்குப் போய் இருக்கிறேன் ஆனால் வந்தவுடன் குளித்து விட்டுத் தான் மற்ற வேலை பார்ப்பேன்.

இரவிலும்,வெள்ளிக்கிழமையிலும் நகமும்,தலைமுடியும் வெட்டியதில்லை.

நான் பொதுவாகவே கால் மேல் கால் போட்டு இருப்பதில்லை.

இவை தான் நான் பொதுவாக கடைப்பிடிக்கும் பழக்கவழக்கம் ஆனால் சிலபேர் இந்தக் காலத்திலும் பூனை குறுக்கால போனால் திரும்பி வந்து விடுவார்கள்...கோயில்களில் பிள்ளைகள் இல்லாத பெண்ணோ அல்லது விதவைப் பெண்ணோ பூ,குங்குமம் போன்ற பிரசாதம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள்...இதே போன்ற சம்பிரதாயங்களை இன்னும் கடைப்பிடிப்பவர்கள் உள்ளனர்.

Link to comment
Share on other sites

எதிலும் நம்பிக்கை இல்லை.ஆனால் பல முறை எனக்கு அதிஸ்டமானதென்று அவ்வளவு கொம்பேட்டபிள் இல்லாத ஒரு டீ-ஷேர்ட்டுடன் தான் பற் (கிரிகெட்) பண்ணபோனேன்.மாத்திப்போட்ட நாளெல்லாம் எனோ பற்றிங் சரிவரவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.