Jump to content

சம்பிரதாயங்களும்,மூட நம்பிக்கையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்மக்களிடையே பல சம்பிரதாயங்கள்,பழக்கவழக்கங்கள்,நம்பிக்கைகள்,மூட நம்பிக்கைகள் ஊறிப் போய் கிடக்கிறது...சிலவற்றில் உண்மை இருந்தாலும் பல்வற்றில் உண்மை இல்லை என நினைக்கிறேன்.உதாரணமாக யாருடைய வீட்டுக்குப் போனாலும் சப்பாத்தை,செருப்பை வாசலில் கழட்டி வைத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும் காரணம் வீதியில் உள்ள அழுக்குகள் எல்லாம் வீட்டுக்குள் வந்து விடும் என்ட காரணத்தால் ஆகும் இது நல்லதொரு பழக்கமாகும் ஆனால் சில பேர் சொல்வார்கள் இரவு லைட் போட்டு விட்டால் ஒன்டுமே ஆத்திர அவசரத்திற்கு மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது என சொல்கிறார்கள் இதில் உண்மை இருக்கா எனக்குத் தெரியவில்லை? தெரிந்தவர்கள் சொல்லவும்.

நாங்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் எது நல்லது?...எது மூட நம்பிக்கை என கருதுகிறீர்கள் என எழுத முடியுமா?...மற்றவர்களும் அறிந்து கொண்டால் அவர்களுக்கும் பிரயோசனமாய் இருக்கும்.

நான் அண்மையில் எனது நண்பி ஒருவருக்கு பேனா பரிசளித்தேன்.பரிசளித்த கொஞ்ச நாட்களுக்குள் எங்களுக்குள் கருத்து வேற்றுமை வந்து நாங்கள் பிரிந்து போய் விட்டோம்.இரு நாட்களுக்கு முன் ஒரு அம்மா சொன்னார் நண்பர்களுக்கு ஒரு நாளும் பேனா,சென்ட்,கைக்குட்டை,குடை போன்றவற்றை பரிசளிக்க கூடாது என? எனக்கு இதில் நம்பிக்கை இல்லா விட்டாலும் என் நண்பி பிரிந்து போன படியால் இது உண்மையாய் இருக்குமோ என மனதிற்குள் ஒரு நெருடல்.இது பற்றிய தங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

நீங்கள் பேனா கொடுத்திராவிட்டாலும் கருத்துவேற்றுமையினால் அவர் பிருந்துதானிருப்பார். காகமிருக்கப் பனம்பழம் விழுந்த கதைமாதிரித்தான் ,

Link to comment
Share on other sites

எங்கட கடந்த கால சந்ததியினர் அந்தக் காலத்திற்கு ஏற்றது போல் ஏதாவது உருவாக்கி இருப்பார்கள். :rolleyes: உதாரணத்திற்கு இரவில் நகம் வெட்டக் கூடாது என்பார்கள், ஏன் எனக் கேட்டால் 'வீட்டிற்கு கூடாது' என்பதோடு சரி... நான் நினைக்கிறன் இரவில் நகம் வெட்டும் போது சிறு துண்டு நகங்கள் சிதறிப் போவதுண்டு அதனை இரவு வெளிச்சத்தில் தேடி எடுப்பது கொஞ்சம் சிரமம். (எனது நகத்தில் ஒரு சிறிய பகுதி உடைந்தது விட்டது என்று வைத்துக் கொள்வோம் அதனை வெட்டி விட்டால் அதிலிருந்து வரும் வலியைக் குறைக்க முடியும் என்று எனது மனம்/ மூளை அறிவுறுத்துகிறது, ஆனால் அதை சம்பிரதாயம் என்று நினைத்து அடுத்த நாள் காலை வரைக்கும் வைத்துருப்பது எனது மூடத்தனம்.) அது போல தான் மூளைக்கு சரி என படுவதை நாம் செயல்படுத்துவது ஒன்றும் பிழை இல்லை.

உங்கள் நண்பிக்கு நீங்கள் பரிசளித்த பேனாவில் இருந்தா கருத்து வேற்றுமை ஆரம்பித்தது? இருக்காது என்று நினைக்கிறன். ஒவ்வொரு பிரச்சனைக்குரிய அடிப்படைக் காரணத்தை அறிந்து கொள்ளவதால் மட்டுமே அப்பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

Link to comment
Share on other sites

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

என்ன கொடுக்கிறோம் என்பது பெரிதல்ல, ஏதாவது கொடுக்கவேணும் என்று நினைப்பதே பெரிது! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேனா கொடுத்ததால் எங்களுக்குள் பிரச்சனை இல்லை ஆனால் பழைய ஆட்கள் சொன்ன மாதிரி பேனா குடுக்கக் கூடாது கொடுத்தால் பிரிவார்கள் என்ட கூற்று உண்மையாகி விட்டதல்லவா :unsure:

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

எவ்வளவுக்கு வேண்டிக் கொடுக்கிறோம் என்பதை விட அன்பாய் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்

நான் சவுத்தோல் பக்கம் இருக்கேயில்லை உங்கட ஆட்கள் தான் அங்காலப் பக்கம் இருக்கினம் போல :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ள பிற்போக்குக் குணங்களால் முன்னேற்றமான சமூகமாக மாறமுடியாமல் உள்ள இனங்களில் தமிழர்களும் அடங்குவர். எனவே "அது அப்படித்தான்" என்று வாழப் பழகினால் கேள்விகள்/சந்தேகங்கள் பிறக்காது! <_<

கல்வியறிவு வளர்ந்து, வசதிகள் பெருகி, பல நாடுகள் என்று புலம்பெயர்ந்து, நடையுடை பாவனை, நாகரிகம் எல்லாம் கண்டாலும் ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள்.

ஒரு விடயத்தைச் செய்யாமல்விட்டால் ஒரு தீங்கும் வராது என்று புரியும்பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். உதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடாமல் இருந்த பலர் தற்போது வெள்ளிக் கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லையா? இப்படி கைவிடப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவுண்டு.

ஒன்றைச் செய்யவில்லை எனில் துன்பம் வந்து விடுமோ என்ற பயத்தில், அது அவசியமா இல்லையா என்று யோசிக்காமாலேயே பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை கைவிடாமல் இருக்கின்றோம். தேவையற்றது/பிழையானது என்று நினைத்தாலும் மற்றவர்கள் ஏதும் சொல்வார்களோ என்று சமூகத்திற்குப் பயந்து சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கின்றோம்.

எனவே, நாங்கள் செய்வது சரியானதா/தேவையானதா என்பதைச் சிந்தித்துச் செயற்பட்டால் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் காணாமல் போகும். தேவையானவை மட்டுமே தொடர்ந்தும் இருக்கும்.

இதற்குள் நண்பர்களுக்கு பேனா பரிசளிக்கக்கூடாது என்பதும் சிலருக்குப் பொருந்தலாம் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ள பிற்போக்குக் குணங்களால் முன்னேற்றமான சமூகமாக மாறமுடியாமல் உள்ள இனங்களில் தமிழர்களும் அடங்குவர். எனவே "அது அப்படித்தான்" என்று வாழப் பழகினால் கேள்விகள்/சந்தேகங்கள் பிறக்காது! <_<

ஒரு விடயத்தைச் செய்யாமல்விட்டால் ஒரு தீங்கும் வராது என்று புரியும்பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். உதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடாமல் இருந்த பலர் தற்போது வெள்ளிக் கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லையா? இப்படி கைவிடப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவுண்டு.

அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்ல முடியாது. அவை உருவாக்க பட்ட காலத்தில் அவை அர்த்தம் உள்ளதாகவே இருந்திருக்கும். இந்த காலத்திற்கு பொருந்தாததாக இருக்கலாம் ... அதற்காக அர்த்தமற்ற என்று சொல்ல முடியாதே.

சகுனங்களும் மூட நம்பிக்கைகளும் வேறு. அது எல்லா சமூகதினரிலும் இருக்கும் ஒன்று. இங்கு 13 ம் இலக்கம் இராசி அற்றது தீங்கு விளைவிக்கும் இலக்கம் என்று கருதுபவர்கள் இப்பவும் இருக்கிறார்கள். பல தொடர் மாடி கட்டடடங்களில் 13 மாடி இருந்தாலும் அதை ஸ்கிப் பண்ணி... 12 க்கு அடுத்ததாக 14 என்று பார்த்திருக்கிறேன். கனடாக்கு வந்த புதிதில், மொக்கங்கள் என்று நினைத்திருக்கிறேன். 13 ம் திகதி வெள்ளிகிழமை வந்தால் அதை ஒரு செய்தியாக இப்ப கூட சொல்லுர்கிரார்கள்.

வெள்ளிகிழமை மாமிசம் சாப்பிடாமல் மரக்கறி (சைவ) உணவு சாப்பிடும் (இது தமிழர்களுக்கு இல்லை - சைவர்களுக்கு மட்டும் - சமைய காரணம்), காரணம், சாப்பாட்டில் ஒரு balance இருக்க வேண்டும் என்ற காரணமாக இருக்கலாம். சைவ உணவின் போது ஒரு கறியுடன் சாப்பிட முடியாதெண்டு 4 கறி வைப்பினம். மாமிச நாள் என்றால், ஒரு கோழிக்கால் கறி, மீன் கறி என்று ஒற்றை கறியே இருக்கும். அதன் காரணமாகவே வெள்ளிகிழமை சைவம் எனக்கு பிடிக்கும். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்ல முடியாது. அவை உருவாக்க பட்ட காலத்தில் அவை அர்த்தம் உள்ளதாகவே இருந்திருக்கும். இந்த காலத்திற்கு பொருந்தாததாக இருக்கலாம் ... அதற்காக அர்த்தமற்ற என்று சொல்ல முடியாதே.

ஒரு காலத்தில் அர்த்தமுள்ளவையாக இருந்திருக்கலாம். அதற்காக தற்போதும் அவற்றை அப்படியே கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமா? எனவே தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத சடங்குகள், சம்பிரதாயங்கள் தற்போது அர்த்தமில்லாதவை என்றே கொள்ளப்படவேண்டும்.

வெள்ளி 13ந் தேதியை நம்பும் மேற்கத்தையர்கள் உள்ளனர். அதற்காக இது அர்த்தமுள்ள நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் அர்த்தமுள்ளவையாக இருந்திருக்கலாம். அதற்காக தற்போதும் அவற்றை அப்படியே கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமா? எனவே தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத சடங்குகள், சம்பிரதாயங்கள் தற்போது அர்த்தமில்லாதவை என்றே கொள்ளப்படவேண்டும்.

தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத என்பதற்காக அர்த்தம் இல்லாதவை என்று கூற முடியாதே. அதற்காக, அப்பிடி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நான் சொல்ல வர இல்லை.;)

வெள்ளி 13ந் தேதியை நம்பும் மேற்கத்தையர்கள் உள்ளனர். அதற்காக இது அர்த்தமுள்ள நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!

உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத என்பதற்காக அர்த்தம் இல்லாதவை என்று கூற முடியாதே. அதற்காக, அப்பிடி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நான் சொல்ல வர இல்லை.;)

அப்படியானால் சிலவற்றை அர்த்தம் தெரியாத சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் என்ற கூடைக்குள்ளும் சிலவற்றை அர்த்தம் தெரிந்த சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் என்ற கூடைக்குள்ளும் போட்டுக்கொள்ளலாம். :blink:

Link to comment
Share on other sites

முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என. காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம். ஆனால் தற்காலத்திலும் ஒரு விடயத்தை பகுத்தறியாமல் சகுனம் பார்ப்பது எதிர்மறையான எண்ணங்களைத் தூண்டி அழிவிற்கே வழிவகுக்கும்.

நான் ஒரு நாள் நேர்முகப்பரிட்ச்சைக்கு போகும் வழியில் எனக்கு தெரிந்த ஒருவரைச் சந்தித்தேன். எங்கு போகிறாய் என கேட்ட பொழுது விடயத்தை சொன்னேன். அதற்கு அவர் இன்றைக்கு 13 ம் திகதி செவ்வாய்க்கிழமை போதாததிற்கு ராகு காலமோ ஏதோ கேட்ட நேரமும் வேற எனச் சொன்னார்.

எனக்கு அந்த வேலை கிடைத்தது. அதைவிட அந்த வேலையில் கிடைத்த பணமும் சந்தோசமும் இற்றை வரை வேறு எந்த வேலையிலும் கிடைக்கவில்லை.

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

:lol:

நல்லாத்தான் லண்டனைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். Southkall இற்கு இந்தியப் பெண்களை சைட் அடிக்கவா போனீர்கள்? கவனம் சீக்கியர்கள் பொல்லாத கோபக்காரர் வெட்டிவிடுவார்கள். :lol:

Link to comment
Share on other sites

நல்லாத்தான் லண்டனைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். Southkall இற்கு இந்தியப் பெண்களை சைட் அடிக்கவா போனீர்கள்? கவனம் சீக்கியர்கள் பொல்லாத கோபக்காரர் வெட்டிவிடுவார்கள். :lol:

சேச்சே.. என்னதான் இருந்தாலும் அப்பிடிச் செய்வனா? :unsure: நான் எப்பவும் எங்கடை ஆக்களைத்தான்..! கொலியர்ஸ்வுட், டூட்டிங் பக்கம்.. :wub::lol:

Link to comment
Share on other sites

ரதி நீங்களுமா???? மூடநம்பிக்கைகளை இந்த காலத்திலும் நீங்கள் நம்புவது ஆச்சரியமாக உள்ளது. பேனாவிற்கும் உங்கள் நண்பி பிரிந்ததற்கும் என்ன சம்பந்தம்? :rolleyes: மூடநம்பிக்கைகள் சிலவற்றில் அர்த்தம் உள்ளது உண்மை அதற்காக அர்தமில்லாதவற்றை நான் நம்புவதில்லை :) உதாரணத்திற்கு ஏணியின் கீழ் போனால் சகுணம் சரியில்லை என்பார்கள்....ஆனால் உண்மையான காரணம் ஏணி தலை மேல் விழுவதற்காக சந்தர்பம் உள்ளமையே. அதே போன்று இரவில் நகம் வெட்டுதல்-ஊசி முட்டை எண்ணெய் போன்றவை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றை சொல்லலாம். இவற்றை செய்யவேண்டாம் என்னால் யார் கேட்பார்கள் அதனால் தான் கெட்ட சகுணம் என்று சொல்லி அவற்றை செய்யாமல் தடுத்திருப்பார்கள். நான் எந்தவித சகுணங்களையோ மூடநம்பிக்கைகளையோ அறவே நம்புவதில்லை. நடப்பது தான் நடக்கும் நாம் தலைகீழாக நின்றாலும் :lol::wub:

அதிலும் இந்த ராகு காலம் அட்டமி நவமி வியாழக்கிழமை போன்றவை நமக்கு ரொம்பவே அலர்ஜி

:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேச்சே.. என்னதான் இருந்தாலும் அப்பிடிச் செய்வனா? :unsure: நான் எப்பவும் எங்கடை ஆக்களைத்தான்..! கொலியர்ஸ்வுட், டூட்டிங் பக்கம்.. :wub::lol:

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்களுமா???? மூடநம்பிக்கைகளை இந்த காலத்திலும் நீங்கள் நம்புவது ஆச்சரியமாக உள்ளது. பேனாவிற்கும் உங்கள் நண்பி பிரிந்ததற்கும் என்ன சம்பந்தம்? :rolleyes: மூடநம்பிக்கைகள் சிலவற்றில் அர்த்தம் உள்ளது உண்மை அதற்காக அர்தமில்லாதவற்றை நான் நம்புவதில்லை :) உதாரணத்திற்கு ஏணியின் கீழ் போனால் சகுணம் சரியில்லை என்பார்கள்....ஆனால் உண்மையான காரணம் ஏணி தலை மேல் விழுவதற்காக சந்தர்பம் உள்ளமையே. அதே போன்று இரவில் நகம் வெட்டுதல்-ஊசி முட்டை எண்ணெய் போன்றவை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றை சொல்லலாம். இவற்றை செய்யவேண்டாம் என்னால் யார் கேட்பார்கள் அதனால் தான் கெட்ட சகுணம் என்று சொல்லி அவற்றை செய்யாமல் தடுத்திருப்பார்கள். நான் எந்தவித சகுணங்களையோ மூடநம்பிக்கைகளையோ அறவே நம்புவதில்லை. நடப்பது தான் நடக்கும் நாம் தலைகீழாக நின்றாலும் :lol::wub:

அதிலும் இந்த ராகு காலம் அட்டமி நவமி வியாழக்கிழமை போன்றவை நமக்கு ரொம்பவே அலர்ஜி

:D:lol:

நானும் பெரிதாக இந்த சம்பிர‌தாயங்கள் பார்ப்பதில்லை ஆனால் சில நேர‌ங்களில் பழைய பெரியவர்கள் சொன்ன மாதிரியே நட‌ந்து விடும்...என் நண்பி பிரிந்து போனதையிட்டுக் கவலையில்லை ஆனால் கைக்குட்டை பரிசளிக்கக் கூடாது என்ட‌ பெரியவர்களின் கருத்து உண்மை தானே தமிழினி...

அதை விட சில பேரை நான் கண்டிருக்கிறேன் இப்பவும் இர‌வில் சாப்பாடு வாங்கி வந்தால் கொஞ்ச‌த்தை அதில் குப்பைக்குள் போட்டு விட்டு தான் சாப்பிடுவார்கள்

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

ஆஹா போயும்,போயும் டூட்டிங்கிலா...

Link to comment
Share on other sites

நானும் பெரிதாக இந்த சம்பிர‌தாயங்கள் பார்ப்பதில்லை ஆனால் சில நேர‌ங்களில் பழைய பெரியவர்கள் சொன்ன மாதிரியே நட‌ந்து விடும்...என் நண்பி பிரிந்து போனதையிட்டுக் கவலையில்லை ஆனால் கைக்குட்டை பரிசளிக்கக் கூடாது என்ட‌ பெரியவர்களின் கருத்து உண்மை தானே தமிழினி...

அதை விட சில பேரை நான் கண்டிருக்கிறேன் இப்பவும் இர‌வில் சாப்பாடு வாங்கி வந்தால் கொஞ்ச‌த்தை அதில் குப்பைக்குள் போட்டு விட்டு தான் சாப்பிடுவார்கள்

இந்த கைக்குட்டை மற்ரர் எனக்கு விளங்கல ரதி. ஏன் கைக்குட்டை பரிசளிக்கக்கூடாது? யாராவது தாங்கள் பாவிச்சதை பரிசளித்துவிடுவினம் என்ன பயத்தில அப்படி சொன்னார்களோ தெரியல :lol: கைக்குட்டை பரிசளிக்கக்கூடாது என்பதில் உள்ள உண்மை என்ன என்று சொன்னால் தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். :)

ஆஆஆ நான் இன்று தான் கேள்விப்படுகின்றேன் சாப்பாட்டில் கொஞ்சத்தை குப்பையில் போட்டுவிட்டு சாப்பிடுவது பற்றி....ஏன் ரதி அதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்? எனக்கு இந்த மூடநம்பிக்கைகளுக்கான அறிவு ரொம்பவே மட்டம். :rolleyes:

Link to comment
Share on other sites

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

ஏப்ரல் மாதம் சந்திப்போம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா போயும்,போயும் டூட்டிங்கிலா...

அங்குதானே நல்ல தமிழ்க் குட்டிகள் இருக்குதென்று இசை சொன்னார்! நீங்கள் ரூட்டிங்கில் இல்லையென்பதில் இருந்து அது உறுதியாகின்றது :wub::lol:

ஏப்ரல் மாதம் சந்திப்போம்..! :D

வரும்போது இரகசியமாகவோ/பரகசியமாகவோ சொல்லிவிட்டு வாருங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் சில பழக்கங்கள் உண்டு

காகிதங்களை புத்தகங்களை காலால் மிதிக்கமாட்டேன்

எந்த சாமி படம் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்துவைக்காமல் போகமாட்டேன்

பால் குடிக்கும் தண்ணி சாப்பாடு போன்றவற்றை காலால் தொடமாட்டேன் (தட்டமாட்டேன்)

தலைவர் படம் இருக்கும் பக்கம் கால் வைத்து படுக்கமாட்டேன்

இரவில் நகம் வெட்டமாட்டேன்

பெரியோருக்கு முன் கால்மேல்கால்போட்டுக்கொண்டு இருக்கமாட்டேன்

செத்தவீட்டுக்கு போய்வந்தால் நேரே குளியறைக்குத்தான் போவேன். வீட்டில் எங்கும் போகமாட்டேன். எவரும் என்னைத்தொடக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் சில பழக்கங்கள் உண்டு

காகிதங்களை புத்தகங்களை காலால் மிதிக்கமாட்டேன்

காகிதங்கள் எனக்கு பிரச்சனை இல்லை. புத்தகங்களை தெரிந்து உளக்க மாட்டேன், தவறுதலாக உளக்கி விட்டால், எனது மனைவி போல் பதட்ட படாமல் எடுத்து வைத்து விட்டு போவேன். அப்பிடி உழக்கினால், சிலர் அதை தொட்டு கும்பிடுவதை பார்த்து இருக்கிறேன்

எந்த சாமி படம் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்துவைக்காமல் போகமாட்டேன்

என்ன பொருள் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்து வைப்பேன். சிலர் போல சாமி படத்தை (கலண்டர் மட்டை) எறிய கூடாதென வருடக்கணக்காக சேர்த்து வைக்க மாட்டேன்.

பால் குடிக்கும் தண்ணி சாப்பாடு போன்றவற்றை காலால் தொடமாட்டேன் (தட்டமாட்டேன்)

அசுத்தம் ஆகிவிடும் என்று நானும் சாப்பாடு தண்ணியை காலால் தொடுவது இல்லை

தலைவர் படம் இருக்கும் பக்கம் கால் வைத்து படுக்கமாட்டேன்

இரவில் நகம் வெட்டமாட்டேன்

வெளிச்சம் இருப்பதால் இரவு பகல் பார்ப்பதில்லை. எப்ப வசதியோ, அப்போ வெட்டுவேன்

பெரியோருக்கு முன் கால்மேல்கால்போட்டுக்கொண்டு இருக்கமாட்டேன்

பொதுவாகவே கால் மேல் கால் போட்டு இருப்பதில்லை. ஒரு காலை மடிச்சு இருக்கையில் வைக்கும் பழக்கம் இருக்கு.. ஆர் இருக்கினம் எண்டு பார்ப்பதில்லை. என் வசதிக்கு இருந்து கொள்வேன்

செத்தவீட்டுக்கு போய்வந்தால் நேரே குளியறைக்குத்தான் போவேன். வீட்டில் எங்கும் போகமாட்டேன். எவரும் என்னைத்தொடக்கூடாது.

இறந்தவர் தொற்ற கூடிய நோயினால் இறந்தவராயிநும், மரண வீட்டில் யாரையாவது கட்டி அணைத்திருந்தால் கட்டாயம் வீட்டுக்கு போன உடனே தோய்வேன். மற்ற படி, வீட்டில் யாரும் கவனிக்க இல்லை எண்டால் பேசாமல் இருந்திடுவேன். ஆனால் நான் இப்பிடி என்று தெரிந்ததால், வீட்டிற்கு வந்த உடனேயே குளியலறைக்கு போக உத்தரவு வழங்கப்படும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட சபேஸ் மாதிரித்தான் நானும் இவற்றை அணுகுகின்றேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் புத்தகங்கள்,பேப்பர்கள் கீழ் கிடந்தால் எடுத்து மேலே வைத்து விடுவேன் தவறுதலாக விளக்கி விட்டால் தொட்டுக் கும்பிட்டு விட்டு தான் எடுத்து வைப்பேன்.

கலண்டர்களை அதுவும் சாமிப்படக் கலண்டராய் இருந்தால் கூட அந்தந்த வருடம் முடிய எடுத்து எறிந்து விடுவேன்.

எங்கேயாவாது வெளியே போய் விட்டு வரும் போது கால்,கை,முகம் கழுவிப் போட்டு தான் மற்ற வேலை பார்ப்பேன்.

இங்கு புலம் பெயர்ந்து வந்த பிறகு செத்த வீட்டுக்குப் போனது குறைவு...ஒர்,இரண்டு செத்த வீட்டுக்குப் போய் இருக்கிறேன் ஆனால் வந்தவுடன் குளித்து விட்டுத் தான் மற்ற வேலை பார்ப்பேன்.

இரவிலும்,வெள்ளிக்கிழமையிலும் நகமும்,தலைமுடியும் வெட்டியதில்லை.

நான் பொதுவாகவே கால் மேல் கால் போட்டு இருப்பதில்லை.

இவை தான் நான் பொதுவாக கடைப்பிடிக்கும் பழக்கவழக்கம் ஆனால் சிலபேர் இந்தக் காலத்திலும் பூனை குறுக்கால போனால் திரும்பி வந்து விடுவார்கள்...கோயில்களில் பிள்ளைகள் இல்லாத பெண்ணோ அல்லது விதவைப் பெண்ணோ பூ,குங்குமம் போன்ற பிரசாதம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள்...இதே போன்ற சம்பிரதாயங்களை இன்னும் கடைப்பிடிப்பவர்கள் உள்ளனர்.

Link to comment
Share on other sites

எதிலும் நம்பிக்கை இல்லை.ஆனால் பல முறை எனக்கு அதிஸ்டமானதென்று அவ்வளவு கொம்பேட்டபிள் இல்லாத ஒரு டீ-ஷேர்ட்டுடன் தான் பற் (கிரிகெட்) பண்ணபோனேன்.மாத்திப்போட்ட நாளெல்லாம் எனோ பற்றிங் சரிவரவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.