Jump to content

காதலித்துப் பாரேன்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலித்துப் பாரேன்......

கவிதை - இளங்கவி

நேற்றைய காதலர் தினத்தில் காதலில் திழைத்திருந்தோருக்கும், காதலி / காதலனுக்காய் கலைத்திருப்போருக்கும், காதலித்துக் களைத்திருப்போருக்கும் மற்றும் காதலித்து வாழ்க்கை வெறுத்திருப்போருக்ககும் இது சமர்ப்பணம்..... :):):)

காதலிக்க கலைத்திருப்போர்......

அவனோ.....

கனவு காண்பான்

திரிஷா பக்கத்தில்

தினுசாய் கிடப்பதாய்.....

தமண்ணா கைபிடித்து

அவளுக்கு துணையாய் நடப்பதாய்....

படிப்பின்றி சுற்றுவான்

பெட்டை வளைச்சலுக்காய்

பள்ளி செல்வான்......

ஏண்டா இப்படியென்றால்

இதுதான் இளவயசு என்பான்.....

அவளுக்கு......

சிம்பு வேணுமென்பாள்...

மீசை வைத்த பெடியன் பார்த்தால்

முறைத்திடுவாள்...

தோடுபோட்ட பெடியன் பார்த்தால்

சிரித்திடுவாள்....

பேஸ்புக் புரொபைலில்

பொய்யெல்லாம் போட்டுவாள்....

மியூசிக்கில் A.R என்பாள்

ஓப்பிண் ரு மெனி திங்க்ஸ் என்பாள்

படம்பார்க்க கிளிக் செய்தால்

புடம்போட்ட தங்கமாய்

தமண்ணா படம் ஜொலிக்கும்

அல்லது அசினின் படம் கிடக்கும்.......

சிலவேளை சில ஜோடிகளாஈ

பேஸ்புக் கனக்ட் பண்ணும்

சிலதுகள் யூனியிலே

தாமாகவே ஒட்டிக் கொள்ளும்

உலகக் காதலர் போல்

ஒட்டியொட்டி நடந்து செல்லும்....

காதலர் தினத்தில் திழைத்திருந்தோருக்கு.....

அவனோ...

....

பாங்க் பலன்ஸ் கீழிறங்கும்

ஆனாலும் பந்தா காட்டுவான்.....

பால் நிலவு சிலமாதம் பின்னர்

பத்திரகாளியாவாள் என்பது தெரியாமல்

இவள் என் முற்றத்து நிலவென்று

முழுவதுமாய் பொய் சொல்வான்.....

இவன் காதலி பக்கதில் ந்ன்றால்

கேட்கமுன்னே உதவிடுவான்.....

பவுண் விலை உயர்தாலும்

இவன் பந்தா குறையாது.....

பவுண் உனக்கு அழகில்லை

பிளாட்டினத்தில் வாங்கு என்று

காசை விளாசியடிப்பான்......

அவளோ...

.

பலபேர்கள் உசார் பார்ட்டி

சிலதுகளோ கொத்துரொட்டி....

அவன் வர்ணனைக்கு மாட்டியது

கற்பிழந்து கடைசியில்

வாழ்க்கையிலே காஞ்ச ரொட்டி.........

மாட்டாதது கடலிலே

படகோட்டும் திறமையான படகோட்டி....

காதலித்துக் களைத்திருப்போர்......

காதலித்துப் பார்

கிரெடிற் காட் ஃபுல்லாகும்....

மோபையில் போன்

பில் செற்றிலின்றி கட்டாகும்....

மெசெடிஸ் கார் கூட

MOT எடுக்காமல்

நடுத்தெருவில் ஸ்ரக் ஆகும்......

இந்தியாவுக்கு கொலிடே போனால்

கல்யாண் ஜுவவெலெஸ்

உன் காசில் காலியாககும்

குமரன் சில்க்கூட

சில்க்கின்றி போணியாககும்.......

உன்னைப் பார்க்கும் போதெல்லாம்

அவள் அழகாய்ச் சிரிப்பாள்

உனக்கோ சிரிப்பென்றால்

சோட்ரேம் மெமறியாகும்.....

முன்பு நீ மெல்ல நடந்தவன் தான்

இன்று கல்லில் கூட

100 மையில் வேகத்தில் நடப்பாய்.....

அந்தளவு மனதில் ஒன்று நின்றுகொண்டு

உன்னை ஓட்டோ ஓட்டென்று ஓட்டினிற்கும்.....

என்னவென்று தெரியாது

வைத்தியனிடம் போனால்

அளவுக்கு மிஞ்ச்சி ஸ்ரெஸ் என்பார்

அதனால் உனக்குததேவை

றெஸ்ற் என்பார்.....

பனித்துளியாய் தெரிந்தவள்

பாவி பெத்த சிறுக்கியாவாள்...

அவளுக்கோ அவன்

பஞ்சப் பரதேசியாவான்.....

மின்மினியாய் தெரிந்தவளோ

கொளுத்தும் வெய்யிலாவாள்.....

கொடுமை செய்யும் அரக்கியுமாவாள்...

அவளுக்கோ அவன் நிலை

தன் வாழ்வை கெடுக்க வந்த

வைத்தியம் செய்யாப் பைத்தியமாவான்......

தன் வாழ்க்கையிலே வந்த்

செல்லாக் காசாவான்......

அவள் கொஞ்சலில் உன் சம்பளத்தை

குறைவில்லாமமல் கொடுதுவிட்டு

குறைக் கான் பியருக்கு

கெஞ்சுவாய் உன் நண்பனிடம்....

நடுத்தெரிவில் நடப்பாய்

கடைத் தெருவில் நடப்பது போல்....

சாலையோரம் நடப்பாய்

சவக்காலையில் நடப்பது போல்....

மொத்தத்தில் உன்

மெமரி கட் ஆகும்.....

மூச்சுவிடுவது புளொக்காகும்......

பல கான்பியர் அடித்துவிட்டு

படுக்கையிலே கிடந்ததனால்

உச்சா தானாய் போய்

பெட் கூட வெற் ஆகும்......

காதலித்து வாழ்க்கை வெறுத்திருப்பொருக்கு....

திகதி மறந்து பொகும்

திண்டசோறு நெஞ்செரிக்கும்

வேலைக்குப் போகாமல்

வீட்டிலேபடுக்கச்சொல்லும் ....

அழுவாய் அதன்பின் சிரிப்பாய்....

இப்படியே சில காலம் சுற்றிவிட்டு

தாடியைச் சோடியாக்கி

சுற்றித் திரிவாய்......

புதிய காதலரைப் பார்த்தவுடன்

உன் புதுச் சோடியைச் சொறிவாய்.....

உன் சொறியின் மொழிபார்த்து

நீ தொலைத்த காசைக் கணக்கிடலாம்.....

உலகத்து அரசியல் பேசுவாய்....

அண்ட சராசரத்தையும்

அசிங்கமாய் பேசுவாய்.....

இடுப்பில் நிண்ட சாறம்

அவிழ்ந்து விழுந்தாலும்

அது உனக்கு தெரியாது

காரணம் உன்னையே உனக்குப்பிடிக்காது.....

காதலர் தினமென்றால் கடுப்பாவாய்......

எவன் வைத்தான் இதையென்று

திட்டித் தீர்ப்பாய்......

ஊரென்றால் கள்ளடிப்பாய்...

தவறணையில் நட்பு சேர்ப்பாய்.....

குசா அண்ணையுடன்

கும்மாளம் போட்டுடுவாய்.......

வெளிநாட்டில் இருந்துவிட்டால்

வீதிக்கு வீதி சென்று

பப்புகளில் சென்று

பல பைன்ற் பியரடிப்பாய்.....

இப்படியே கொஞ்சக்காலம் சென்று

வாழ்க்கையத் தொலைத்த பின்னர்

கொம்பானியன் வேணுமென்று

கலியாணம் கட்டிடுவாய்.......

பிறகென்ன ஐம்பதிலும் ஆசைவரும் பாட்டை

'எம் பி திறி' யில் போட்டுவிட்டு

பழைய பந்தா கொஞ்சம் காட்டி

லோக்கல் பங்க்சனெல்லாம்

அட்டென்ட் செய்வாய்............

இளங்கவி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.