Jump to content

'கரு'விலே உயிர் கொடுத்த தம்பி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'கரு'விலே உயிர் கொடுத்த தம்பி!

-பா.பிரவீன்குமார்

தாலசீமியா என்பது கொடுமையான ஒரு பரம்பரை நோய்! இது ரத்தத்தில் ஆக்சிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபினை செயலிழக்கச் செய்யும். அதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் பாதிக்கப்பட்டுஇ தீவிரமான ரத்த சோகையை ஏற்படுத்தும்! இந்த நோய் தாக்கியவர்களுக்குஇ மாதாமாதம் ரத்த மாற்று சிகிச்சை மேற்கொண்டே ஆகவேண்டும். இதை கவனிக்காமல் விட்டால்இ ரத்த சோகை முற்றிஇ உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 10 சதவிகிதம் குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவை!

இந்த விநோத நோயால் கோவையைச் சேர்ந்த தாமிரபரணி என்ற குழந்தை பாதிக்கப்பட்டாள். அவளுக்கு எட்டு வயதில் இந்தச் சோகம் சூழ்ந்தது.

;பெற்றோரின் தீவிர மருத்துவப் போராட்டத்துக்குப் பிறகுஇ தற்போது அந்தக் குழந்தை நன்கு உடல்நலம் பெற்றுத் தேறவே... மருத்துவ உலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது!

இந்தத் தகவல் நமக்கும் கிடைக்கவேஇ தாமிரபரணியின் தந்தை செந்தில்குமாரிடம் பேசினோம்.

'என் மகளுக்கு ஒன்றரை வயதில் இருந்தே உடல்நிலை பாதிக்கப்பட்டது. தலை முடி கொட்டியது. நடக்க முடியாதுஇ விளையாட முடியாது என்ற அவளது நிலையைப் பார்த்துப் பார்த்துக் கலங்கிவிட்டோம். எப்படியும் அவளை குணமாக்கியே தீரவேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் தொடர்ந்து இருந்தது. சிகிச்சையை மட்டும் விடவே இல்லை. ஒருவருஷமோ இரண்டு வருஷமோ அல்ல... மொத்தம் ஆறரை ஆண்டுகளாக மாதம்தோறும் ரத்தம் மாற்றும் சிகிச்சை செய்து வந்தோம். இந்தக் கட்டத்தில் நாங்கள் டாக்டர் ரேவதி ராஜிடம் சிகிச்சைக்காகக் குழந்தையை அழைத்துச் சென்றோம். அப்போது அவர் கூறிய ஒரு நவீன மருத்துவத் தொழில்நுட்பம்தான்இ இன்று என் குழந்தையின் நோயை முழுமையாகப் போக்கிஇ அவளுக்கு மறு ஜென்மம் கொடுத்து உள்ளது!'' என்று முன்னோட்டம் கொடுத்தவர்இ ஆவலைத் தூண்டும் அந்த மருத்துவ முறை பற்றி சொன்னார்.

''டாக்டர் ரேவதி ராஜி எங்களுக்கு 'ஸ்டெம்செல்’ மருத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். 'நீங்கள்இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அந்தக் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் 'ஸ்டெம்செல்’லைக் கொண்டு நாம் தாமிரபரணியைக் காப்பாற்ற முயற்சி எடுக்கலாம். ஆனால்இ இதில் 25 சதவிகிதம் மட்டுமே வெற்றிவாய்ப்பு உள்ளது’ என்று சொன்னார்.

தாமிரபரணி படும் அவஸ்தைகளைக் காண சகிக்காமல்இ இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். எங்களுக்கு அவள் குணமானால் போதும்இ எதையும் செய்யத் தயாராகவே இருந்தோம். என் மனைவி கர்ப்பம் ஆனார். ஆனால்இ அந்த சிசுவுக்கும் இந்த கொடிய நோயின் பாதிப்பு இருந்து விதி எங்கள் வாழ்க்கையில் விளையாடியது. எங்கள் துன்பத்தை ரெண்டு மடங்கு ஆக்கியது இந்த சம்பவம். இதனால் மிகுந்த துயரத்துக்கு ஆளானபோதுஇ அந்தக் கருவைக் கலைத்துவிடும்படி டாக்டர் கூறினார். மிகுந்த மனவேதனையுடன் கருவைக் கலைத்தோம்.

அடுத்து மீண்டும் ஒரு முறை என் மனைவி கர்ப்பமானார். இந்த முறை கருவில் உதித்த குழந்தைக்கு நல்லவேளையாக எந்த நோய் பாதிப்புமே இல்லை. கடவுளின் கருணை தொடங்கிவிட்டதாகவே நினைத்தோம். நல்லபடியாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு புகழேந்தி என்று பெயர் வைத்தோம். அவனுடைய தொப்புள் கொடி மற்றும் எலும்பு மஜ்ஜையில் இருந்து 'ஸ்டெம்செல்’ எடுத்து தாமிரபரணிக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவளின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு படிப்படியாக அதிகரித்துஇ தற்போது பூரண குணமடைந்துவிட்டாள்! இதனால் புகழேந்திக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அக்காவுக்கு தம்பி புகழேந்தியால் மறுவாழ்வு கிடைத்துள்ளது!'' என்றார் சந்தோஷம் கண்களில் மின்ன.

''ஸ்டெம்செல் என்றால் என்ன? அதனால் என்ன பயன்?'' என்று அடுத்தடுத்த கேள்விகள் நம் மண்டையைக் குடைய... சென்னையில் ஸ்டெம்செல் சேமிப்பு சேவை வழங்கும் 'லைஃப்செல்’ நிறுவன தலைமை அறிவியல் அதிகாரி அஜீத்குமாரிடம் இதுபற்றி விசாரித்தோம்.

''ஸ்டெம்செல் கண்டுபிடிப்பு 1960-களில் இருந்தே தொடங்கிவிட்டது. இது மருத்துவத் துறையில்இ மனிதன் எதிர்நோக்கும் எல்லா நோய்களுக்கும் தீர்வளிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டெம்செல்கள் என்பது உடலின் மாஸ்டர் செல்கள்! என்ன மாதிரியான செல்லாக அது பிற்பாடு மாறப்போகிறது என்று தெரியாதஇ 'பிளாங்’கான செல்கள் அவை. இந்த செல்கள் மனித உடலின் எல்லா வகையான திசுக்களையும் மறுபடியும் உருவாக்கக்கூடிய திறன் கொண்டவை. மேலும் இவை மிக விரைவாகத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் தன்மையும் கொண்டவை.

இந்த ஸ்டெம்செல்கள் நமது உடலின் எலும்பு மஜ்ஜைஇ கருத் திசுக்கள்இ தொப்புள்கொடி ரத்தம் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படும். மருத்துவக் கழிவு என்று ஒதுக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தத்தில் இருந்தும்கூட அதிக அளவில் ஸ்டெம்செல்கள் கிடைக்கின்றன. தற்போது புதிதாக'மேசன்ஸிமெல் ஸ்டெம்செல்’ என்ற புதிய வகையும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தற்போது ஆராய்ச்சி அளவில் உள்ளது. இதன் மூலம் நரம்புமண்டலம்இ இதயம்இ எலும்புஇ உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தலாம்.

ஆனால்இ யார் வேண்டுமானாலும் யாருக்கும் ஸ்டெம்செல் அளிக்க முடியாது. மிகவும் நெருங்கிய உறவுகளில் வாய்ப்பு அதிகம். ஸ்டெம்செல் மருத்துவம் முழு அளவில் கைகொடுக்க ஒரு சிறந்த வழி உள்ளது. அதாவதுஇ அவரவர் ஸ்டெம்செல்களை சேமித்துவைத்துக் கொண்டால்இ நிச்சயம் எதிர்காலத்தில் அது முழு அளவில் பயன்படும்!'' என்று சொல்லி நிறுத்தியவர்இ தொடர்ந்தார்.

''தற்போது இந்த ஸ்டெம்செல் ஆராய்ச்சியில்இ மாதவிடாய் ரத்தத்தில்கூட அதிக அளவு வளம்மிக்க ஸ்டெம்செல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொப்புள்கொடி ரத்தத்தைப் போல் அல்லாமல்இ ரத்தம் சாராத மைய நரம்பு மண்டலத்தை சிதைக்கும் நோயான பார்கின்சன்ஸ்இ முதுகுத் தண்டுவட காயங்கள்இ லுக்கேமியா போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும்இ இது முதுமை அடைவதைத் தடுக்கும் சிகிச்சை போன்ற அழகுக் கலை சிகிச்சைக்கும் பயன்படும் என்று கண்டறிந்துள்ளனர். ஆனால்இ சமீபத்திய ஆய்வுகள்இ ஸ்டெம்செல்களை யார் சேமித்து வைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் பயன்படுவதோடு இல்லாமல்இ பரம்பரை ரீதியான தொடர்பு உள்ளவர்களுக்கும் அதை பயன்படுத்தலாம் என்பதை புரியவைத்துள்ளது. பல்லில் இருந்துகூட ஸ்டெம்செல் எடுப்பதும் ஆராய்ச்சியில் உள்ளது. எதிர்காலத்தில் எல்லா நோய்க்குமே ஒரே தீர்வாக இந்த ஸ்டெம்செல் துறை வளரும்!' என்றார்இ உறுதியாக!

தற்போது இந்தத் தொழில்நுட்பத்தில் மற்றொரு விஷயமும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு மகாவீர் ஜெயின் மருத்துவமனையும்இ டெல்லி மேகதாந்த மெடிசிட்டி மருத்துவமனை டாக்டர்களும் 'சர்க்கரை நோய் மற்றும் குடிப்பழக்கத்தால் பாழாகும் கல்லீரலை ஸ்டெம்செல் மூலம் குணப்படுத்த முடியும்’ என்று கண்டுபிடித்து உள்ளனர். வரும் ஏப்ரல் மாதம்இ முதல்கட்டமாக 200 நோயாளிகளுக்கு இதைப் பரிசோதித்துப் பார்க்கத் திட்டமிட்டு இருக்கிறார்களாம்! ''இது வெற்றி பெற்றால்இ 2014-15-ம் ஆண்டு முதல் ஸ்டெம்செல் சிகிச்சைகள் பரவலாக நடக்கும்!'' என்று டெல்லி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர் சதிஷ்டோட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுப்புது தொழில்நுட்பம் வளரட்டும்... நலம் பெருகட்டும்!

நன்றி-விகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் தகவலுக்கு நன்றி ...ஆனால் அதை ஏன் கணணி சம்மந்தப்பட்ட பகுதியில் இணைத்துள்ளீர்கள் எனப் புரியவில்லை :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்காமல் இணைத்து விட்டேன் அதை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.