Jump to content

வேருறங்கும் இடத்தினிலே – அம்மா விதி அமைதி கொள்ளட்டும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

paravathi-amma.jpg

பாரில் சிறந்த மகன் பாரறிந்த மன்னவனை

பார்வதியப் பாரில் தந்தாய் - பெரும்

காரில் திளைத்து – கண்ணின்

வேரில் கரித்து இன்று

கோலம் கலைத்துக் கொண்டாய் - தாயே

மனக்கோயில் புகுந்து கொண்டாய்.

பாயிற் கிடந்தபோதும்

பகைவர் உனைத் தொழுதர்- பெரும்

நோயிற் கிடந்தபோதும்

ஊர் உறவு அன்பு செய்தர். – எல்லா

வாயிற் பிறந்தமொழி “அம்மா” என்பதுதான்

கோயிற் சிறப்பதுவே கொள்கைமகன் பெற்றவளே.

தாயிற் பெருஞ்சிறப்பு மானச்சிறையிருப்பு

ஊரின் திருமடியில் உன்னுறக்கம்

ஒன்று காணும் - மானத்திருமகனின்

மனதிற்கு அதுபோதும்.

ஆரிராரோ பாடிவிட ஆருமில்லை… உண்மையில்லை

அவணியே பாடுமம்மா ஆத்மார்த்தத் தாலாட்டு

ஆழக்கடல் நாயகனின் அன்னையே என் அன்னையே

அமைதியாய் தூங்கம்மா - இது

ஆனந்தத் தூக்கமம்மா.

வேருறங்கும் இடத்தினிலே – அம்மா

விதி அமைதி கொள்ளட்டும். – நீ

உறங்கும் போதினிலே

அன்னாய்! உன்னை அது தாலாட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

paravathi-amma.jpg

பாரில் சிறந்த மகன் பாரறிந்த மன்னவனை

பார்வதியப் பாரில் தந்தாய் - பெரும்

காரில் திளைத்து – கண்ணின்

வேரில் கரித்து இன்று

கோலம் கலைத்துக் கொண்டாய் - தாயே

மனக்கோயில் புகுந்து கொண்டாய்.

பாயிற் கிடந்தபோதும்

பகைவர் உனைத் தொழுதர்- பெரும்

நோயிற் கிடந்தபோதும்

ஊர் உறவு அன்பு செய்தர். – எல்லா

வாயிற் பிறந்தமொழி “அம்மா” என்பதுதான்

கோயிற் சிறப்பதுவே கொள்கைமகன் பெற்றவளே.

தாயிற் பெருஞ்சிறப்பு மானச்சிறையிருப்பு

ஊரின் திருமடியில் உன்னுறக்கம்

ஒன்று காணும் - மானத்திருமகனின்

மனதிற்கு அதுபோதும்.

ஆரிராரோ பாடிவிட ஆருமில்லை… உண்மையில்லை

அவணியே பாடுமம்மா ஆத்மார்த்தத் தாலாட்டு

ஆழக்கடல் நாயகனின் அன்னையே என் அன்னையே

அமைதியாய் தூங்கம்மா - இது

ஆனந்தத் தூக்கமம்மா.

வேருறங்கும் இடத்தினிலே – அம்மா

விதி அமைதி கொள்ளட்டும். – நீ

உறங்கும் போதினிலே

அன்னாய்! உன்னை அது தாலாட்டும்.

:( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசத்தின் வீரத்தலைமகனை பெற்ற தாய்க்கு!!!

வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வாயிற் பிறந்தமொழி “அம்மா” என்பதுதான்

கோயிற் சிறப்பதுவே கொள்கைமகன் பெற்றவளே.

Link to comment
Share on other sites

பாரில் சிறந்த மகன் பாரறிந்த மன்னவனை

பார்வதியப் பாரில் தந்தாய் - பெரும்

காரில் திளைத்து – கண்ணின்

வேரில் கரித்து இன்று

கோலம் கலைத்துக் கொண்டாய் - தாயே

மனக்கோயில் புகுந்து கொண்டாய்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

paravathi-amma.jpg

வேருறங்கும் இடத்தினிலே – அம்மா

விதி அமைதி கொள்ளட்டும். – நீ

உறங்கும் போதினிலே

அன்னாய்! உன்னை அது தாலாட்டும்.

எப்படி உறங்கும் அவருடன் சேர்த்து அவர் இனமும் கண்ட கனவுகள் இன்னும் பலிக்காதவரை..என்றாலும் பாடுகிறோம்..வேருறங்கும் இடத்தினிலே – அம்மா

விதி அமைதி கொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி உறங்கும் அவருடன் சேர்த்து அவர் இனமும் கண்ட கனவுகள் இன்னும் பலிக்காதவரை..என்றாலும் பாடுகிறோம்..வேருறங்கும் இடத்தினிலே – அம்மா

விதி அமைதி கொள்ளட்டும்.

ஊருறங்குமா?

உறவுறங்குமா?

தேருலாவி நின்ற நிலம்.

காரிருள் சூழ்ந்த மனம்

பேருறங்கலாம்.

பெற்ற பெருமை உறங்காது -தாயே

கற்ற தொரு காத்திரத்தில் கலம் இறங்கும்.

காலம் அதை காவும்-அதுவரை

நீ உறங்கு தாயே.

உம்மோடான எம் நினைவுகள் உறங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

paravathi-amma.jpg

தாயிற் பெருஞ்சிறப்பு மானச்சிறையிருப்பு

ஊரின் திருமடியில் உன்னுறக்கம்

ஒன்று காணும் - மானத்திருமகனின்

மனதிற்கு அதுபோதும்.

வேருறங்கும் இடத்தினிலே – அம்மா

விதி அமைதி கொள்ளட்டும். – நீ

உறங்கும் போதினிலே

அன்னாய்! உன்னை அது தாலாட்டும்.

:( :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

paravathi-amma.jpg

ஆரிராரோ பாடிவிட ஆருமில்லை… உண்மையில்லை

அவணியே பாடுமம்மா ஆத்மார்த்தத் தாலாட்டு

ஆழக்கடல் நாயகனின் அன்னையே என் அன்னையே

அமைதியாய் தூங்கம்மா - இது

ஆனந்தத் தூக்கமம்மா.

எம் அம்மாவுக்கு

கவிதையால் ஒரு மாலை தொடுத்தீர்

நன்றி கவிஞரே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.