Jump to content

நேசக்கரத்தை முடக்க தொடர்ந்தும் சதி


Recommended Posts

நேசக்கரத்தை முடக்க தொடர்ந்தும் சதி

நேசக்கரமும் வேண்டாம் மக்கள் பணியும் வேண்டாமென்று ஒதுங்கிப்போகும் முடிவை 06.01.2011 அன்று அறிவித்துவிட்டு ஒதுங்கிய எங்களை மீண்டும் வெள்ள அனர்த்தமும் நேசக்கரம் பயனாளர்களின் வேண்டுகைகளும் எல்லாச் சவால்களையும் அரசியல் தலையீடுகளையும் உதைத்துக் கொண்டு எழ வேண்டுமென்ற சக்தியைத் தந்தது. இனி எந்தக் கொம்பனுடனும் நேரில் நின்று போராடுவதென்று முடிவெடுக்க வைத்தது. அதன்படி மீளவும் எழுந்தோம்.

எந்த அரசியல்வாதியின் தலையீடு எம்மை நிறுத்தியதோ எந்த அரசியல்வாதியின் குடும்பத்தின் அச்சுறுத்தல் எங்களை பின்தள்ள எண்ணியதோ அத்தடைகளாக நின்ற தலைகளின் அறியாமைகளையும் மன்னித்து மெளனமாக மீண்டும் எங்களது பணியை ஆரம்பித்தோம். ஆனால் புதியகாளானாக வன்னிமைந்தன் என்ற நாமம் பூண்ட தனபாலசிங்கம் தயாளன் அவர்களாலும் அவர் பின்னர் சில விசமிகளின் தலையீட்டிலும் நேசக்கரம் புதிய சவால்களை எதிர் நோக்க வேண்டிய அபாயத்தில் வந்து நிற்கிறது.

தனபாலசிங்கம் தயாளன் என்ற வன்னிமைந்தன் யார் என்பதனை முதலில் தெரிவிக்க வேண்டும்.

நெதர்லாந்து நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்து போயிருக்கிறார். காசு உழைக்கப்போன மைந்தன் தனக்குப் பொழுது போக இணைத்தளங்கள் சிலவற்றை உருவாக்கி தமிழ் மொழியை எப்படிக் கொல்வதென்பதை அழகிய தமிழ்மொழியை அபத்தம் பண்ணிக் கொண்டிருந்தார். கொலைத்தமிழில் கவிதைகளும் எழுதினார் பாடல் எழுதி பாணர் தேனிசை செல்லப்பாவிடம் பாலவர் வன்னி மைந்தன் என்ற பெறுதற்கு அரிய பட்டமொன்றையும் பெற்றார்.

யாழ் கருத்துக்களத்தில் கருத்தாளனாக வந்து தனது தமிழ்மொழிக் கொலைக்கான விமர்சனங்களையும் வாங்கியதில் கடுப்பாகி யாழ் இணையத்தை அதன் அங்கத்துவர்களையெல்லாம் மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்கள் செய்து தனது காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்த்தவர். ஊடகம் அல்லது ஊடகம்பற்றிய அடிப்படை விதிகளையோ அறிவினையோ பெற்றிருக்காதவர் பணமிருந்தால் தானும் ஊடகன் ஆகலாம் என்று புறப்பட்ட அதிரடிக்கலகம்.

4வருடங்கள் முன்னர் யாழ் இணையத்தில் சில நண்பர்களின் துணையோடு ஆரம்பிக்கப்பட்ட நேசக்கரத்தின் செயற்பாடுகள் யாழ் இணையத்தில் வளர்ச்சியடைந்தமையைப் பொறுக்க முடியாமல் நேசக்கரத்தின் பெயரில் பல மோசடிகளில் ஈடுபட்டது மட்டுமன்றி நேசக்கரம் உதவிய பள்ளிச் சிறுவர்களின் படங்களைப் போட்டு ஒரு பாடசாலை அதிபரின் பெயரால் பணம் சேர்த்தவர் பாவலர் கலைக்கோவலர் வன்னிமைந்தன்.

நாம் உதவிய பாடசாலையினதும் மாணவர்களது படங்களும் செய்தியும் கீழ் உள்ள இணைப்பில் பாருங்கள்.

http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/index.php?option=com_content&view=article&id=13%3A-11&catid=4%3A-2010&Itemid=8&lang=ta

http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/index.php?option=com_content&view=article&id=13%3A-11&catid=4%3A-2010&Itemid=8&lang=ta

http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/index.php?option=com_content&view=article&id=14%3A2010-01-23-11-51-12&catid=4%3A-2010&Itemid=8&lang=ta

இச்செயற்பாட்டை அவதானித்த நேசக்கரம் உறவுகள் நேசக்கரம் நிர்வாகத்திடம் முறையிட்டதனைத் தொடர்ந்து வீரம் விளைந்த வன்னியைத் தனது பெயரில் ஒட்டிய மானமும் வீரமும் நிறைந்த வன்னி மைந்தனுக்கு குறிப்பிட்ட மாணவர்களின் படங்கள் நாம் உதவி வழங்கிய விபரங்கள் செய்திகளையும் வழங்கினோம். உதவிகள் கிடைக்காத மாணவர்களின் விபரங்களையும் அனுப்பினோம். உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட வன்னிமைந்தன் குறித்த பாடசாலையின் அதிபர் நாகப்பர் கண்ணதாசனே தன்னிடம் உதவி கோரியுள்ளதாகவும் நாம் உதவியது தனக்குத் தெரியாதெனவும் தான் 300€ பணம் அப்பாடசாலை அதிபருக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறி அதிபர் கொள்வனவு செய்து விநியோகித்த பொருட்களுக்கு தனக்கு பற்றுச்சீட்டுகள் தந்திருப்பதாகவும் பற்றுச்சீட்டுகளையும் தந்திருந்தார்.

அப்பற்றுச்சீட்டுகள் நாம் வழங்கிய பொருட்களுக்கான பற்றுச்சீட்டுகள் என்பதனை நாம் தெரிவித்ததுதும் தன்னால் மக்களிடம் சேர்க்கப்பட்ட நிதி பிழையான வழியில் போயிருப்பதை எம்மை வெளியிட வேண்டாமென வேண்டிக் கொண்டார் பாவலர் கலைக்கோவலர் வன்னிமைந்தன். (குறித்த பாடசாலை அதிபர் நாகப்பர் கண்ணதாசன் பற்றிய பல முரண்களும் உதவிகள் துஸ்பிரயோகம் தொடர்பான விபரங்களை இங்கு தவிர்க்கிறேன். இன்னொரு தருணத்தில் கண்ணதாசன் அதிபர் பற்றி எழுதலாம்.)தனது இணையம் மீதும் தன்மீதும் நம்பிக்கையற்றுப் போய்விடும் என்று கூறி எம்மிடம் மன்னிப்புக் கோரியிருந்தார். பின்னர் தொடர்பு கொண்டு தான் நேசக்கரத்துடன் இணைந்து உதவவிரும்புவதாகக் கோரியிருந்தார். பணம் சேகரிக்க எமது இலச்சினையினையும் கோரியிருந்தார்.

நேசக்கரம் நிதி சேகரிக்கும் அமைப்பு அல்ல உதவிகளை நேரடியாகச் செய்ய விரும்பும் உறவுகளை உறவுகளுடன் இணைக்கும் பணியையே செய்கிறது என்பதனையும் தெரிவித்து நேரடியாக அனுப்ப வசதியற்ற அல்லது உறவினர்கள் அல்லாதவர்களது உதவிகளையே நேசக்கரம் வங்கியூடாக அனுப்புகிறோம் என்பதனைத் தெளிவுபடுத்தினோம்.

எம்மிடம் இருந்த பல உதவிகோரிய குடும்பங்களின் விபரங்கள் சிலவற்றையும் வழங்கினோம். இவ்விபரங்களில் நவம் அறிவுக்கூடத்தில் வாழ்ந்த ஊனமுற்ற போராளிகள் சிலரும் அடங்கியிருந்தனர். ஏற்கனவே இருந்த பணம் சேகரிப்பு நடைமுறையிலிருந்து விலகி நேசக்கரத்தின் கணக்கறிக்கைகள் வெளிப்படையாக இணையத்தில் பதிவிட்டுவருவதையும் தெரிவித்தோம். மற்றும் உதவிய உறவுகளுக்கு நேரடியான உதவிபெற்றவர்களின் விபரங்களையும் கொடுப்பதனையும் தெளிவுபடுத்தி எமது நிறுவனத்தின் பெயரால் நிதிசேகரிப்பதற்கான அனுமதியினையும் மறுத்திருந்தோம்.

எமது இலச்சினையினை விளம்பரப்படுத்தி பணம் சேகரிக்க நாம் மறுத்ததில் நேசக்கரம் மீது கோபித்துக் கொண்டார் வன்னிமைந்தன். இதனைத் தொடர்ந்து தனிப்பட்ட சாந்தி சிறி ஆகியோர் மீது அவதூற்றுப் பிரச்சாரங்களை ஆரம்பித்து கடந்த வருடம் தனது இணையத்தில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார். சாந்தி , சிறி ஆகியோரின் சொந்தத் தேவைகளுக்கே நேசக்கரம் நிதி சுருட்டப்படுவதாகவும் எழுதியிருந்தார்.

இவ்விடத்தில் இன்னொருவரையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலானய்வுப்பிரிவில் இருந்து பின்னர் 2005ம் ஆண்டு சமாதானகாலத்தில் இயக்கத்தைவிட்டு விலகி இந்தியா தாய்லாந்து உட்பட பலநாடுகளிலும் இருந்து இறுதியில் இத்தாலியில் வந்து குடியேறிய ஒரு முன்னாள் புலானய்வுப்போராளி 2000ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் அதிக வெளித்தொடர்புகள் வாயிலாக இணையப்பாவனையின் அதிகரிப்பில் தனது பதவியின் பலத்தால் வெளிநாட்டில் இயங்கிய வானொலிகள் தொலைக்காட்சிகள் மற்றும் மறுகருத்தாளர்களை பாலியல் ரீதியான அவதூறுகளைப்பரப்பி வந்தார்.

மறுத்துப் பேசினால் அல்லது உண்மையைப் பேசினால் அவர்களை இந்த நபர் பெண்களாயின் பல ஆண்களுடன் தொடர்புபடுத்தல் ஆண்களாயின் பல பெண்களுடன் தொடர்புபடுத்தல் என தனது கட்டுப்பாட்டில் இயங்கிய இணையங்களில் பலரை துரோகியாக்கி அவர்களுக்கு தகாத உறவு வைத்திருந்தோர் என முத்திரை குற்றியவர். அந்த மூத்த புலனாய்வுப்போராளி ஆரம்பித்து வைத்த பொய்யான எதற்கெடுத்தாலும் சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டு அனைத்துலகப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் வரையும் தொற்றியது. இத்தகையதொரு பழிசுமத்தும் வேலையை அகரம் எழுதி ஆரம்பித்து வைத்தவரின் வழியில் இன்றுவரை பாலியல் குற்றச்சுமத்தல் மேற்படி நபரால் இயக்கப்பட்டவர்களால் செய்யப்பட்டு வருகிறது.

இச்செயல்பற்றி புலிகள் அமைப்பிற்கு பலதரப்பிலிருந்தும் பலரால் தெரிவித்தும் இத்தகைய பழிசுமத்தல் பல ஆதரவாளர்களை இழக்க நேரிடும் என்பதனையும் பலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அந்நேரம் குறித்த நபர் அவரது வன்னிக்குள்ளிருந்த அரசியல் ஞானத்தை வைத்து இப்படித்தான் புலனாய்வு செய்ய வேணுமென தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி தனது வேலைகளை செய்து வந்தார். இதனால் புலனாய்வுப்பிரிவினருக்காக இயங்கிய பலர் மெளனமாகினர் பலர் ஒதுங்கிக் கொண்டனர். அப்படி ஒதுங்கியவர்களுக்கும் மேற்படி நபர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியே தள்ளிவைத்ததார். பல போராளிகள் தளபதிகளுடன் தொடர்பில் இருந்த பெண்களை அவர்களது காதலிகள் என இணையங்களிலும் எழுத ஆரம்பித்தார். தனது மனைவியையும் மகளையும் தவிர மற்றைய பெண்கள் யாவரும் பலருக்கு காதலிகள் என்று கற்பிதம் செய்திருந்தார். மே2009இன் முடிவுகளின் பின்னர் பல பெயர்களில் வந்த புலனாய்வுப்பிரிவென்ற அறிக்கைகளின் நாயகன் இவரே. இவரும் இவரது குழுவும் மிரட்டல் மின்னஞ்சல்கள் அவதூற்றுக் குற்றச்சாட்டுகளை அஞ்சல் செய்யத் தொடங்கிவிடுவார்கள். தனியொருவர் அமைத்த குழுவும் அதன் குற்றங்களும் புலிகள் என்ற மாபெரும் கட்டமைப்பின் மீது கரும்புள்ளியானது. இந்த நபர் கடந்த வருடம் இன்ரபோல் தேடும் வரிசையில் போக அந்த அண்ணன் காட்டிய வழியில் பல தம்பிகள் வன்னிமைந்தனாகவும் மேத்தாக்களாகவும் உருவாக வழிவகுத்துச் சென்றுள்ளது.

நேசக்கரத்தை கையகப்படுத்த புலனாய்வுப்பிரிவினர் அனைத்துலகச் செயலகம் என்று பல மிரட்டல்கள் எச்சரிக்கைகள் எம்மீது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நமது உதவிகள் நேரடியாக உதவி தேவைப்படுவோரைச் சென்றடைவதன் நம்பத்தினைப் புரிந்திருந்தமையால் இவர்களது அவதூறு குற்றச்சாட்டுக்கள் எடுபடவில்லை. நேசக்கரம் படிப்படியான தனது முயற்சியில் முன்னேறிக் கொண்டிருந்தது.

எமது நேர்மையான கணக்கறிக்கை வெளிப்படைத்தன்மை எமது உண்மையான செயற்பாடுகளைத் தனது வக்கிரம் பிடித்த குணங்களால் தோற்கடிக்க முடியாது போக, எனது தொலைபேசிக்கு வந்த தொடர் தொல்லைகள் மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. வரிசையில் பரிசிலிருந்து சில முக்கிய புலிப்பிரமுகர்கள் என்ற பெயரில் இருந்தவர்கள் எம்மை ஈபிடிபியின் கூலிகள் மகிந்தவின் உளவாளிகள் என்றெல்லாம் குற்றம்சாட்டினர்.

மற்றும் வானொலிகளில் பணியாற்றிய காலங்களில் என்னுடன் பணியாற்றிய அறிவிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களுடன் தகாத உறவுகள் வைத்திருப்பதாக எழுதப்போவதாகவும் பலவகையான தொல்லைகளை இந்த வன்னிமைந்தனும் இன்னும் பலரும் மேற்கொண்டிருந்தனர். மற்றும் எனது புகைப்படங்களில் வேறு முகங்களை ஒட்டி வெளியிடப்போவதாகவும் தொடர்ந்த தொல்லைகளிலிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

கடந்தவருடம் இத்தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க யேர்மனிய குற்றத்தடுப்புப் பொலிசாரின் உதவியை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்மீது பாலியல் வக்கிரம் மிகுந்த பேச்சுக்கள் கொலைமிரட்டல்கள் மின்னஞ்சல்கள் யாவும் Rheinlandpfalz Trier குற்றத்தடுப்புப் பொலிசாருக்கு வழங்கி என்மீதும் எனது குடும்பம் மீதும் தொடர்ந்த தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளிட வேண்டிய நிலமை வந்தது.

வன்னிமைந்தன் தனது இணையத்தில் கடந்தவருடம் யாழ்இணையம் மற்றும் சாந்தியென்கிற என்மீதும் நேசக்கரம் அமைப்பின் மீதும் பல குற்றச்சாட்டுக்களை வைத்திருந்தார்.

பின்னர் சிலகாலங்களில் தானாகவே தொடர்பு கொண்டு தான் நேசக்கரம் செய்கின்ற பணிகளை சரியாக அறிந்து கொள்ளாமல் எழுதியதாகவும் கூறினார். புலிகளின் உத்தியூகபூர்வ பேச்சாளர் போல பேச ஆரம்பித்தவர், நாம் உதவும் போராளி குடும்பங்களின் விபரங்களை வெளியிட வேண்டுமெனவும் நாங்கள் உதவிகொடுக்கும் போராளிகளின் படங்கள் விபரங்களை வெளியிடாவிடில் நேசக்கரம் என்ற அமைப்பின் ஊடாக உதவப்படுகிற நிதி தனிப்பட்ட சாந்தி சிறி ஆகியோருக்கு பயன்படுவதாக எழுதப்போவதாக மிரட்டினார்.

அதற்கு நாம் வழங்கிய பதில், நாம் உதவிகோருவோரின் அனுமதியுடன் அவர்களது குரல்களைத்தான் பதிவுசெய்வோம். அவர்களது துயரங்களை அறியத்தருவோம். அவர்களுக்கான உதவிகளைச் செய்வோருக்கு அவர்களது முழு விபரங்களையும் கொடுப்போம். உதவி செய்யாமல் வெறுமனே ஊடகவிளம்பரம் செய்ய எவருடைய படங்களையும் கொடுக்கமாட்டொமெனக் கூறியிருந்தோம்.

எங்களது போராளிகளும் மக்களும் எம்மிடம் உதவியையே கேட்கிறார்களே தவிர எம்மிடம் பிச்சை கேட்கவில்லையென்பதனையும் தெளிவுபடுத்தினோம். மற்றும் நாம் செய்கின்ற உதவிகள் அதன் செய்திகளை இணையத்தில் வெளியிடுவோம் உதவிகள் செய்கின்ற உறவுகளுக்கு மின்னஞ்சல் வசதியுள்ளவர்களுக்கு அஞ்சலிடுவோம் அல்லது கடிதத்தில் அனுப்புவோம். உதவி செய்யாத ஒருவருக்கு எவ்வித விபரங்களையும் தரமாட்டோம் என்பதனை உறுதியாகவும் இறுதியாகவும் தெரிவித்தோம். ஆனால் பயனில்லை. தொடர்ந்தும் மின்னஞ்சல் தொலைபேசித் தொல்லைகள் முடியவேயில்லை. நாம் நேசக்கரத்தை மூடிவிட்டுப் போக வேண்டுமென்பதே இவரது கனவாயிருந்தது.

நேசக்கரம் உதவிகள் பற்றி குற்றம் வைக்கிறவர்கள் சட்டப்படி எம்மை அணுகுங்கள். இதுவொரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு. ஒரு உதவி அமைப்பிற்கான சகல விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு இயங்குகிறது. வரித்திணைக்களம் வரிச்சலுகையை வழங்கியுள்ளது. எமது வங்கியூடாக போகும் ஒவ்வொரு சதத்துக்கும் கணக்குக்காட்ட வேண்டும். அதனையெல்லாம் சட்டத்திற்கு அமைய சரியாகவே செய்கிறோம். நாம் தவறுவிட்டால் எம்மைத் தண்டிக்க சட்டமும் நேசக்கரம் உறவுகளும் இருக்கிறீர்கள். இதில் ஏன் புலிகளின் பெயரையும் தாயகத்தின் பெயரையும் சொல்லி இடைத்தரகர்கள் வருகிறார்கள் ?

உதவுகிற பல உறவுகள் தமக்கு அங்கிருந்து வருகின்ற படங்களை அவர்களது கடிதங்களை பார்க்கும் தைரியமில்லையென தமக்கு ஆதாரம் வேண்டாம் நேசக்கரத்தின் உண்மையான செயற்பாட்டை நம்புகிறோம் எங்கள் உதவிகளை அவர்களிடம் சேருங்கள் எனவும் கூறி எமது மின்னஞ்சல்களையே தவிர்த்திருக்கின்றனர். இந்த உதவும் உறவுகளில் ஒரு சிலர் தவிர மற்றும் எவரையும் எனக்கு முகமோ குரலோ தெரியாதவர்கள். ஆனால் எதுவித உதவிகளையும் செய்யாமல் என்னை தொடர்ந்து தொல்லைப்படுத்தும் வன்னிமைந்தன் மற்றையவர்களுடன் எத்தனைதரம் தான் மல்லுக்கு நிற்பது ?

அண்மைய காலங்களில் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர் றெஜி , நெடியவன் , லண்டன் தனம் , கமல் ,யேர்மன் பரணி போன்றோரின் எச்சரிக்கை கோரிக்கையென்றெல்லாம் தொடர்ந்து தொல்லைகளாக இருக்கிறது. மேற்படி பெயர்களுக்கு உரியவர்களின் ஆட்களென பலர் தொலைபேசி மின்னஞ்சல் ஸ்கைப் வழியாக தொடர்ந்த எமது செயற்பாட்டை இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேற்கூறப்பட்ட பிரமுகர்களே உங்களிடம் கேட்கிறோம். நாங்கள் உங்களுடன் எந்தவித முரண்பாடுகளுக்கும் வரவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான வேலைகளைச் செய்கிறோம். ஏன் எங்களுடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்கிறீர்கள் ? நேசக்கரம் செய்கின்ற உதவிகள் சிறு அணில் உதவிதான். ஆனால் அதனைப் பெறுகின்ற குடும்பங்கள் குழந்தைகள் பெறுகின்ற பலன் பெரிது. இதனை ஏன் தடுக்க முனைகிறீர்கள் ? நீங்களும் நாங்களும் நட்புரிமையுடன் பழகியிருக்கிறோம். ஆனால் ஏன் இந்த முரண்பாடு ?

30வருட ஆயுதப்போராட்டம் முடிந்து இன்று தெருவில் நிற்கிற மக்களைக் கைதூக்கிவிடுவதே இப்போதைய தேவை. அழிந்து போன எமது கல்விச்சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவோம். அங்கிருந்து எமக்காக விடியலை முகம்கொள்ள வைப்போம். ஏன் சில்லறைத்தனமானவர்களை வைத்து எம்மை எதிரிகள் ஆக்குகிறீர்கள் ?

இப்போது வன்னிமைந்தன் என்ற தனபாலசிங்கம் தயாளன் ஒரு மின்னஞ்சலைப் பரப்பிவருகிறார். நேசக்கரம் பற்றி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து நமது கணக்கறிக்கை செய்திகள் தரவுகள் யாவும் பொய்யொன்று புலம்புகிறார்.

இன்று ஸ்கைபில் தொடர்பெடுத்து எதூவெல்லாம் பேசியிருக்கிறார். தான் பரப்பும் மின்னஞ்சல் தான் எழுதவில்லையெனவும் அதனை நெடியவன் எழுதுவதாகவும் நெடியவனைப் புதிதாகக் கூட்டாக்கி பல குற்றச்சாட்டுகளை தனது குரலிலே வைத்திருக்கிறார். மற்றும் விடயங்களை புரிந்து கொள்ளாமல் பேசியவர் தானாகவே தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். அதனை இங்கு இணைக்கிறோம். இதற்கான பதில்களை உறவுகளே உங்களிடம் எதிர்பார்க்கிறோம். உதவிகளை வழங்கும் நீங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

எங்கள் குடும்பம் குழந்தைகள் வேலை நேசக்கரம் என இயந்திரமாக சில மணித்தியால நித்திரையுடன் சிரமப்படுகிற எங்களின் நிலமையிலும் எங்களால் இயன்ற உதவிகளை கொண்டு செல்ல முனையும் எங்களை தடையிடும் இவர்களை மக்களே கேள்வி கேளுங்கள் ? நேசக்கரம் நிர்வாக மற்றும் தாயகத்து உறவுகளுடனான தொடர்புக்கான தொலைபேசிச்செலவு எல்லாம் எமது வாழ்வுக்காக உழைக்கும் உழைப்பிலிருந்துதான் செலவளிக்கிறோம். உதவிகளாக கிடைக்கிற ஒவ்வொரு துளியையும் உறவுகளே உங்கள் சாட்சியாக எமது மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குற்றமா ? அப்படி உதவும் நாங்கள் சதிகாரர்களா ? சொல்லுங்கள்.

இன்று ஸ்கைபில் வன்னிமைந்தன் என்பவர் கதைத்த குரலின் பதிவு இது.

இணைப்பில் அழுத்தி குரலை கேளுங்கள்.

பிற்குறிப்பு:-

எம்மை முடக்கிய தொடர்ந்து தொல்லை தருகின்ற அரசியல்வாதிகள் மற்றும் பலரது தலையீடுகளை இனி வெளியில் சொல்லும் நேரம் எமக்கு வந்துவிட்டது. தொடரும் தொல்லைகளை மக்கள் முன்னிறுத்த வேண்டிய நிலமையில் உண்மைகளை வெளியில் எழுதவுள்ளோம். எமது மெளனம் பலருக்கு வாய்ப்பாக உள்ளது. இனி அதனை அனுமதிக்கமாட்டோம். திறந்த மனசோடு பேசத்தைரியமில்லாமல் சில அரசியல்வாதிகள் வன்னிமைந்தன் போன்றவர்களை வைத்து எம்மீது சேறடிக்கிறார்கள். அவர்களுக்கான பதிலையும் சொல்லவே போகிறோம்.

உண்மைகள் தொடரும்…….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு எதிரியால் தொல்லையில்லை என்பது மீண்டும் ...........புரிகிறது

போராட்டமே தமிழனுக்கு வாழ்க்கையாச்சு. இது என்ன சாபமா...?

Link to comment
Share on other sites

விசுகு,

நீங்களும் நீண்டகால நேசக்கரத்தின் உறவு. எவ்வளவோ உதவியிருக்கிறீர்கள். அவை எப்படி போய்ச்சோ்ந்தது பாதிக்கப்பட்டவர்களையென்பதை நீங்கள் அறிவீர்கள். இதுபோல இங்கு உதவும் பலரும் அறிவார்கள் ஆனால் இந்தச் சாபத்தை கொண்டு வருவோரை எப்படி எதிர்கொள்ள ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் இதில் தாங்கள் குறிப்பிட்டுள்ள சிலரை எனக்குத்தெரியும். பார்க்கலாம். என்னால் முடிந்த அழுத்தத்தை நான் கொடுப்பேன்.

Link to comment
Share on other sites

எதிர் பாராமல் அமைந்த அலைச்சலும் செலவாலும் என்னாலை உடனடியாக நேசக்கரத்துக்கு பணத்தை குடுக்க முடியவில்லை...( காசு கையிலை இருந்தாலும் இன்னும் எவ்வளவு முடியும் என்பது தெரியாததால் இந்த நிலை...) இருவாரங்களிலை போட்டு விடுகிறன்...

Link to comment
Share on other sites

... நான் நினைக்கிறேன் சாந்தி, நீங்கள் தேவையில்லாமல் அலட்டிக் கொள்வதாக??? ... இப்படி இடையூறுகள் வரும் என்பதனை எதிர்பார்க்க வேண்டும் ... எறிவார்கள், கண்டு கொள்ள வேண்வாம், உந்த குப்பைகளுக்கு பதில் சொல்ல வெளிக்கிட, அவர்களின் வலையில் வீழ்கிறீர்கள்! ... அதனை தவிர்த்தல் நன்று!!

வன்னி மைந்தன்: ... அண்மையில் இவரது இணையங்களும், திருவிளையாடல்களும் பற்றி ஓர் நண்பர் குறிப்பிட்டார். ... விபரங்கள் பின்பு ....

Link to comment
Share on other sites

தேசியம் என யார் காட்டுக் கத்தல் கத்துகின்றார்களோ அவர்கள் தான் அடுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தனை மேடைக்கு வரும்படி அன்பாக அழைக்கின்றோம்.

Link to comment
Share on other sites

'பிச்சைப் பெட்டிக்குள் பேய் பூந்த மாதிரி' என்பது இதைத்தான்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்கு தமிழனே தடையா? சிங்கள அரசு கூட இப்படிக் கஷ்டம் தராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'பிச்சைப் பெட்டிக்குள் பேய் பூந்த மாதிரி' என்பது இதைத்தான்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்கு தமிழனே தடையா? சிங்கள அரசு கூட இப்படிக் கஷ்டம் தராது.

சரியாகச் சொன்னீர்கள் தப்பிலி.

வாய் நிறைய தமிழ் தேசியம் பேசிய, "வன்னி மைந்தனா" என்னும் போது......

எந்தப், "புத்துக்குள்ளை எந்தப் பாம்பு இருக்கும்" என்று, எண்ணத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

அண்மைய காலங்களில் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர் றெஜி , நெடியவன் , லண்டன் தனம் , கமல் ,யேர்மன் பரணி போன்றோரின் எச்சரிக்கை கோரிக்கையென்றெல்லாம் தொடர்ந்து தொல்லைகளாக இருக்கிறது. மேற்படி பெயர்களுக்கு உரியவர்களின் ஆட்களென பலர் தொலைபேசி மின்னஞ்சல் ஸ்கைப் வழியாக தொடர்ந்த எமது செயற்பாட்டை இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

:D :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது எம்மிடையேதான் எட்டப்பர்களும் , காக்கை வன்னியன்களும் நிறைந்திருக்கின்றனர்! இவர்கள் வைக்கற் போரில் மாட்டின் பசிக்கு தின்ன விடாமல் இடைஞ்சலாய் இருப்பவர்கள்!

நீங்கள் என்னைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு சேவை செய்கின்றீர்கள்! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி!

Link to comment
Share on other sites

சாந்தி,

உங்கள் சேவை மீது எந்த சந்தேகமும் இல்லை...தொடர்ந்து இணைந்து இருப்போம்

இத்தகைய கேவலமான கயவர்களை தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

வன்னியிலிருந்து வல்வெட்டித்துறைக்கு அகதியாக வந்திருக்கும் உறவுகளுக்கான உதவியை வல்வை நலன்புரிச்சங்கத்தை அணுகினால் பெற்றுக் கொள்ளலாம் அப்படியிருக்கும்போது வல்வை ரோமன் கத்தோலிக்க பாடசாலை அதிபர் கண்ணதாசன் எனக்குத் தெரிய பல புலம் பெயர்ந்த உறவுகளிடம் தொடர்பை ஏற்படுத்தி உதவி கேட்டு வருகிறார். வன்னி மைந்தன் பற்றிய உங்கள் குற்றச்சாட்டை இந்த அதிபர் கண்ணதாசனைத் தவிர்த்து வேறுவிடயங்களில் வைத்தால் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும் என்பது எனது கருத்து.

இக்கருத்தை பார்த்தவுடன் உடனடியாக என்மீது கோபம் கொள்ளவேண்டாம். இங்கு எழுதப்படும் பல விடயங்களுக்குக் கருத்து எழுதி மனஸ்தாபப்படுவதைக்காட்டிலும் தவிர்த்துவிட்டால் நல்லது என்று ஒதுங்கி இருக்கின்றேன். இப்போதும் இதற்கு நான் கருத்தெழுத வந்த காரணம் வல்வெட்டித்துறையில் இயங்கும் ஒரு பாடசாலை மாணவர்களுக்கான உதவியில் இருந்தே இக்குற்றச்சாட்டு தொடர்ந்து இருப்பதனால்.

நன்றி வாதத்திற்கு வரவில்லை.

Link to comment
Share on other sites

சகாரா இதில் கோபப்பட எதுவுமில்லை. கண்ணதாசன் அதிபர் பற்றி இங்கு குறைசொல்லவில்லை.

வல்வை ஒன்றியத்தின் ஊடாக அவர் உதவிகோரி கிடைக்கவில்லையென்று கடிதம் எழுதித்தான் அந்தப்பிள்ளைகளுக்கான உதவியை வழங்கினோம். பின்னர் எமது பணியாளர்கள் அதிபரின் இடத்திற்கு சென்று நிலமைகளை நேரடியாக பார்வையிட்டு தந்த தரவுகளின் அடிப்படையில் அப்பாடசாலைகளுக்கான உதவிகளை தவிர்த்திருந்தோம். மற்றும் இவ்வுதவி கடந்த வருடம் தைமாதம் மாசிமாதங்களில் செய்திருந்தோம்.

கண்ணதாசன் அதிபர் இப்போதும் உதவிகேட்டு எல்லாருக்கும் எழுதும் கடிதங்கள் நேசக்கரத்துக்கும் வந்து கொண்டுதானிருக்கிறது. அதை நீங்கள் கண்ணதாசனிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். தற்போது கண்ணதாசன் மேற்படி பாடசாலையில் இல்லை. இன்னொரு பாடசாலையின் அதிபராக மாற்றம் பெற்று போயிருக்கிறார். இப்போதைய பாடசாலைக்கான உதவிகள் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் ரங்கா ஊடாக பெற்றிருந்த படங்கள் செய்திகளும் அனுப்பியிருந்தார்.

இங்கு கண்ணதாசன் பற்றி எதையும் எழுத வேண்டி வந்தது வன்னிமைந்தன் மின்னஞ்சலில் பரப்பும் குற்றச்சாட்டில் கண்ணதாசனின் பெயரும் இருப்பதாலேயே. கண்ணதாசன் பற்றி இதில் விவாதித்து கருத்தை திசைதிருப்பவில்லை. அதற்கும் ஒரு தேவை வருகிற போது அதையும் எழுதலாம்.

நீங்கள் நம்பிக்கைக்கு உரியதாக எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லை.

குறித்தபாடசாலை மாணவர்கள் உதவிகள் பற்றிய விபரங்கள் ஏன் தொடர்ந்து உதவி நிறுத்தப்பட்டது போன்ற விபரங்கள் இதில் எழுத நேரமில்லை. தேவையானால் தொலைபேசியில் விளக்கலாம். நேரம் கிடைக்கிற போது தொடர்பு கொள்கிறேன்.

மற்றும் வல்வெட்டித்துறை வன்னி முல்லைத்தீவென்றெல்லாம் பேதம் பார்த்து உதவிகளை நாம் யாருக்கும் வழங்கவில்லை. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முன்னாள் பெண் போரளிகள் சிலர் தற்போது உதவிகள் கேட்டு செய்து கொண்டிருக்கிறோம். இவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்காக தங்களை இழந்தார்கள் என்பதற்காகவும் செய்கிறோம்.

சகாரா இது கருத்துக்களம் தானே. கருத்தாடுவோம். இதில் நாம் மனஸ்தாபப்பட எதுவுமில்லை.

Link to comment
Share on other sites

எதிர் பாராமல் அமைந்த அலைச்சலும் செலவாலும் என்னாலை உடனடியாக நேசக்கரத்துக்கு பணத்தை குடுக்க முடியவில்லை...( காசு கையிலை இருந்தாலும் இன்னும் எவ்வளவு முடியும் என்பது தெரியாததால் இந்த நிலை...) இருவாரங்களிலை போட்டு விடுகிறன்...

கருத்துக்களில் எவ்வளவோ தடவைகள் முரண்பட்டிருக்கிறோம். ஆனால் நேசக்கரம் செய்கிற உதவிகள் சரியாக செல்கிறதென்பதைப் புரிந்து கொண்டு உதவியை வழங்கும் உங்களுக்கு நன்றிகள். கருத்தால் முரண்பட்டால் கோவித்துக்கொண்டு ஒதுங்குகிற நிலமையிலிருந்து விலகாதிருப்பதற்கு நன்றிகள் தயா.

Link to comment
Share on other sites

... நான் நினைக்கிறேன் சாந்தி, நீங்கள் தேவையில்லாமல் அலட்டிக் கொள்வதாக??? ... இப்படி இடையூறுகள் வரும் என்பதனை எதிர்பார்க்க வேண்டும் ... எறிவார்கள், கண்டு கொள்ள வேண்வாம், உந்த குப்பைகளுக்கு பதில் சொல்ல வெளிக்கிட, அவர்களின் வலையில் வீழ்கிறீர்கள்! ... அதனை தவிர்த்தல் நன்று!!

வன்னி மைந்தன்: ... அண்மையில் இவரது இணையங்களும், திருவிளையாடல்களும் பற்றி ஓர் நண்பர் குறிப்பிட்டார். ... விபரங்கள் பின்பு ....

நெல்லையன்,

அலட்டிக்கொள்ள வேண்டாமேயென்றுதான் 2வருடங்கள் மெளனம் காத்தேன். ஆனால் புதியபுதிய அவதாரங்களாக வீடுவரை குடும்ப அங்கத்தவர்களையும் உழைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு போகின்றோம் என்பதற்காக சிலுவை சுமக்க வைக்கிறார்களே ? அதுதான் பேசாமல் இருக்க முடியவில்லை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா இதில் கோபப்பட எதுவுமில்லை. கண்ணதாசன் அதிபர் பற்றி இங்கு குறைசொல்லவில்லை.

வல்வை ஒன்றியத்தின் ஊடாக அவர் உதவிகோரி கிடைக்கவில்லையென்று கடிதம் எழுதித்தான் அந்தப்பிள்ளைகளுக்கான உதவியை வழங்கினோம். பின்னர் எமது பணியாளர்கள் அதிபரின் இடத்திற்கு சென்று நிலமைகளை நேரடியாக பார்வையிட்டு தந்த தரவுகளின் அடிப்படையில் அப்பாடசாலைகளுக்கான உதவிகளை தவிர்த்திருந்தோம். மற்றும் இவ்வுதவி கடந்த வருடம் தைமாதம் மாசிமாதங்களில் செய்திருந்தோம்.

கண்ணதாசன் அதிபர் இப்போதும் உதவிகேட்டு எல்லாருக்கும் எழுதும் கடிதங்கள் நேசக்கரத்துக்கும் வந்து கொண்டுதானிருக்கிறது. அதை நீங்கள் கண்ணதாசனிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். தற்போது கண்ணதாசன் மேற்படி பாடசாலையில் இல்லை. இன்னொரு பாடசாலையின் அதிபராக மாற்றம் பெற்று போயிருக்கிறார். இப்போதைய பாடசாலைக்கான உதவிகள் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் ரங்கா ஊடாக பெற்றிருந்த படங்கள் செய்திகளும் அனுப்பியிருந்தார்.

இங்கு கண்ணதாசன் பற்றி எதையும் எழுத வேண்டி வந்தது வன்னிமைந்தன் மின்னஞ்சலில் பரப்பும் குற்றச்சாட்டில் கண்ணதாசனின் பெயரும் இருப்பதாலேயே. கண்ணதாசன் பற்றி இதில் விவாதித்து கருத்தை திசைதிருப்பவில்லை. அதற்கும் ஒரு தேவை வருகிற போது அதையும் எழுதலாம்.

நீங்கள் நம்பிக்கைக்கு உரியதாக எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லை.

குறித்தபாடசாலை மாணவர்கள் உதவிகள் பற்றிய விபரங்கள் ஏன் தொடர்ந்து உதவி நிறுத்தப்பட்டது போன்ற விபரங்கள் இதில் எழுத நேரமில்லை. தேவையானால் தொலைபேசியில் விளக்கலாம். நேரம் கிடைக்கிற போது தொடர்பு கொள்கிறேன்.

மற்றும் வல்வெட்டித்துறை வன்னி முல்லைத்தீவென்றெல்லாம் பேதம் பார்த்து உதவிகளை நாம் யாருக்கும் வழங்கவில்லை. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முன்னாள் பெண் போரளிகள் சிலர் தற்போது உதவிகள் கேட்டு செய்து கொண்டிருக்கிறோம். இவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்காக தங்களை இழந்தார்கள் என்பதற்காகவும் செய்கிறோம்.

சகாரா இது கருத்துக்களம் தானே. கருத்தாடுவோம். இதில் நாம் மனஸ்தாபப்பட எதுவுமில்லை.

சாந்தி நீங்கள் தவறாகவே புரிந்து கொள்கிறீர்கள். வல்வெட்டித்துறையில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டிய கடமை வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கத்திற்கு இருக்கிறது. இந்த நலன்புரிச்சங்கம் மட்டுப்படுத்தப்பட்டது தனது ஊருக்கு அப்பால் பரந்துபட்டுச் செயலாற்ற முடியாதது. தனது ஊருக்குள் தஞ்சமென்று வந்தவர்களை தாங்கவேண்டிய பொறுப்பைத் தார்மீகமாகக் கொண்டது. ஊருக்குள் அகதியாக வந்தவர்கள் ஊரவர்களாக மட்டுமில்லை தமிழீழத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ளார்கள். அவர்களை அரவணைக்கவேண்டிய தேவை நலன்புரிச்சங்கத்திற்கு இருக்கிறது. இதை பிரதேச வாதமாகக் கருதமுடியாது. நீங்கள் புலம்பெயர்ந்த ஒரு அமைப்பு நீங்கள் மட்டுப்படுத்தப்படாதவர்கள் பரவலாக செய்யக்கூடியவர்கள். ஒரு ஊரின்நலன்புரிச்சங்கத்தையும் நேசக்கர அமைப்பையும் ஒப்பீட்டில் வைத்து உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

அடுத்து அதிபர் கண்ணதாசனைப் பற்றி நான் உங்கள் கருத்தைத் திசைதிருப்பவில்லை. வன்னி மைந்தன் தொடர்பான குற்றச்சாட்டில் வல்வை ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் அதிபரான கண்ணதாசன் இடம்பெற்றிருந்தார். நான் வல்வெட்டித்துறையைச் சார்ந்தவள் ஆதலாலேயே அதிபர் கண்ணதாசன் சரியான முறையில் ஊருக்குள் இருக்கும் அகதிக்களுக்கான உதவியை நலன்புரிச்சங்கத்தை அணுகிப் பெற்றிருக்கவேண்டும். இதில் எங்கேயோ முரண்பாடு தென்படுகிறது. எனக்கு அதிபர் கண்ணதாசனின் அணுகுமுறையில் ஏதோ தவறுள்ளது போல் இருக்கிறது. இத்தகைய தவறுதல்தான் நீங்கள் வன்னியையும் குற்றஞ்சாட்ட ஏதுவாகியிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவ்வளவுதான் மேற்படி வேறு குற்றச்சாட்டுகள் கொஞ்சம் கூடுதலான நம்பிக்கையைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

தெளிவான பதிலுக்கு நன்றிகள் சகாரா. வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கத்தின் உதவிகள் பற்றி வல்வெட்டித்துறையில் இருந்து உதவிகோருவோருக்கு பலதரம் சொல்லியிருக்கிறேன். அதையும் மீறி நாங்களும் உதவ வேண்டியிருக்கிறது. உங்கள் ஊர் சங்கம் ஒரு எல்லைக்கு உட்பட்டு செயற்படுகிறது என்பது இன்று உங்கள் கருத்தில் இருந்து தான் அறிந்து கொண்டுள்ளேன்.

கண்ணதாசனின் அணுகுமுறை செயற்பாடுகள் திருப்தியின்மையால் தான் நாம் உதவிகளை நிறுத்தினோம். அவர் பற்றிய தவறான விநியோகங்கள் தொடர்பில் கடந்தவருடம்எமது பணியாளர்கள் நேரில் சென்று கதைத்திருந்தார்கள். அவரது விடயங்கள் பற்றி இங்கு எழுதி அவரது ஆயுதக்குழுவின் செல்வாக்கால் நம்மால் மீண்டும் தொல்லைப்பட முடியாதுள்ளது. ஊரவர்கள் இவ்விடயத்தில் கவனம் எடுத்து நடவடிக்கை எடுத்தல் சிறந்தது. கண்ணதாசன் நெல்லியடியைச் சேர்ந்தவர் என்றே எம்மிடம் அறிமுகமானார். அவர் தொடர்பாக நாம் நிதானமாகவே கையாண்டோம்.

இங்கு வன்னியின் மறுபக்கத்தை புரிந்து கொள்ளாமல் நீங்கள் அதீத நம்பிக்கையில் அவரைப் புரிந்துள்ளீர்களோ என எண்ணத் தோன்றுகிறது. வன்னிமைந்தனின் தொடர் மெயில் ஸ்கைப் தொல்லையுரையாடல்கள் காலக்கிரமத்தில் அனுப்புகிறேன். பாருங்கள். தொடர்ந்த அவரது தொல்லைகள் தாங்க முடியாத கட்டத்தில் தான் எழுத நேர்ந்தது.

Link to comment
Share on other sites

இன்று ஸ்கைபில் வன்னிமைந்தன் என்பவர் கதைத்த குரலின் பதிவு இது.

இணைப்பில் அழுத்தி குரலை கேளுங்கள்.

தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதையும் அவ்வாறு பதியப்பட்ட உரையாடல்களை ஆதாரமாக பாவிப்பதையும் கண்காணிக்கும் கடுமையான சட்டவிதிகள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ளன!

அல்லலுறும் நமது மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட எவரும் தேவையற்ற சட்ட சிக்கல்களில் சிக்கி கொள்ளாது தமது பணியை மென்மேலும் சிறப்புற செய்வது இன்றைய மிகப்பெரிய தேவையாகும்!

இது பற்றி திருமதி சாந்தி அவர்கள் கவனம் எடுப்பாராக!

German Laws on Recording Telephone Conversations (from Wikipedia - it is found in other references too)

Germany is a two party consent state. Telephone recording without two or more parties consents is a criminal act according to Sec. 201 to German Criminal Code [1] -

violation of the confidentiality of the spoken word. Telephone tapping by authorities has to be approved by a judge. For the discussing about the lawful interception in Germany please see here de:Telefonüberwachung(German language).

http://en.wikipedia.org/wiki/Telephone_recording_laws

Link to comment
Share on other sites

தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதையும் அவ்வாறு பதியப்பட்ட உரையாடல்களை ஆதாரமாக பாவிப்பதையும் கண்காணிக்கும் கடுமையான சட்டவிதிகள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ளன!

அல்லலுறும் நமது மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட எவரும் தேவையற்ற சட்ட சிக்கல்களில் சிக்கி கொள்ளாது தமது பணியை மென்மேலும் சிறப்புற செய்வது இன்றைய மிகப்பெரிய தேவையாகும்!

இது பற்றி திருமதி சாந்தி அவர்கள் கவனம் எடுப்பாராக!

German Laws on Recording Telephone Conversations (from Wikipedia - it is found in other references too)

Germany is a two party consent state. Telephone recording without two or more parties consents is a criminal act according to Sec. 201 to German Criminal Code [1] -

violation of the confidentiality of the spoken word. Telephone tapping by authorities has to be approved by a judge. For the discussing about the lawful interception in Germany please see here de:Telefonüberwachung(German language).

http://en.wikipedia.org/wiki/Telephone_recording_laws

இரண்டு பேருக்கு இடையில் நடக்கும் உரையாடல்களை மூன்றாவது நபர் ஒட்டுக்கேட்டு பதிவுசெய்வது தான் தண்டனைக்கு உரிய குற்றம்.

எமது உரையாடலை நாம் எந்த ஒருவிதத்திலும் பதிவு செய்யலாம். இது குற்றமில்லை.

எனவே சாந்தி அவர்கள் தனது உரையாடல்களை, தனக்கு வரும் தொல்லைபேசி அழைப்புக்களை பதிவு செய்வது எந்த விதத்திலும் குற்றமாகாது.

திருட்டுக் கும்பலுக்கு இத்தகைய பதிவுகள் நடுக்கத்தை ஏற்படுத்தும். நேர்மையாக நடப்பவர்கள் பயப்படத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் அமைப்பு தாயக மக்களின் தேவைகளில் சிறிய அளவையேனும் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு.

இதை வன்னி மைந்தன் உட்பட்ட அனைத்து கள உறவுகளும் அறிவார்கள்.

நேசக்கர அமைப்பிற்காக உதவிகள் பெறுதல்.. உரியவரிடம் கொண்டு போய்ச் சேர்த்தல் தொடர்பான விடயங்களை சாத்திரி மற்றும் சாந்தி இருவரும் தன்னார்வ அடிப்படையில் யாழ் கள உறவுகள் என்ற வகையில் அதன் ஆரம்ப காலம் தொட்டு செய்து வருகின்றனர்.

தயவுசெய்து.. சாந்தி அல்லது சாத்திரியோடு உங்களுக்குள்ள தனிப்பட்ட பிரச்சனைகளை நேசக்கரத்தின் பிரச்சனையாக உருவகிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகட்டும் எவராகட்டும் எல்லோரும் மக்களின் பணிக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் பொதுப்பணியை செய்யும் போது அவர்களுக்கு இடையூறாக இருப்பது நல்லதல்ல. பொதுப் பணியாளர்கள் பற்றிய தனிப்பட்ட விடயங்களை தனிப்பட்ட வகையில் பேசியோ அல்லது சட்ட நடவடிக்கை மூலமோ தீர்த்துக் கொள்ளுங்கள். நேசக்கரம் சார்ந்து பணியாளர்களை.. பங்காளிகளை.. மக்களை தண்டிக்கவோ.. குற்றம்சாட்டவோ சரியான காரணம் இருப்பின் அவற்றை தெளிவாக எவரும் இங்கு முன் வைக்கலாம்.

காரணம் நேசக்கரத்தின் தோற்றுவாய்கள் யாழ் களத்தில் இருந்து தான் எழுந்தன. அதற்கான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் இங்கு அளிப்பார்கள்.

அப்படி எவராவது நேசக்கரம் தொடர்பாக ஐயுறவு.. ஐயம்.. கொண்டிருந்தால்.. தயவுசெய்து.. பணியாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதை விடுத்து நேரடியாக யாழ் களத்தில் உங்கள் கருத்துக்களை ஆதாரங்களை முன் வையுங்கோ. நேசக்கரத்துக்கு யாழ் கள நிர்வாகம் பொறுப்பல்ல. ஆனால் யாழில் உள்ள உறவுகள் அதன் தோற்றுவாயாக செயற்பாட்டாளர்களாக பங்காளிகளாக இன்றும் இருக்கின்றனர். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்.

சாந்தி அல்லது சாத்திரியை தண்டிக்க நேசக்கரத்தை அதன் நாமத்தை பாவிப்பதை நிறுத்திக் கொள்வது தேச மக்களின் நலனுக்கு உதவும். உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நேசக்கரத்தை கருவியாக பாவிப்பதை நிறுத்திக் கொள்வதும் மக்களுக்கு உதவி நிற்பதற்கு சமன் என்று நினைக்கிறோம்.

Link to comment
Share on other sites

என்ன செய்வது எம்மிடையேதான் எட்டப்பர்களும் , காக்கை வன்னியன்களும் நிறைந்திருக்கின்றனர்! இவர்கள் வைக்கற் போரில் மாட்டின் பசிக்கு தின்ன விடாமல் இடைஞ்சலாய் இருப்பவர்கள்!

நீங்கள் என்னைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு சேவை செய்கின்றீர்கள்! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி!

உங்கள் நம்பிக்கையே மீளவும் இயங்க வைக்கிறது சுவி.

சாந்தி,

உங்கள் சேவை மீது எந்த சந்தேகமும் இல்லை...தொடர்ந்து இணைந்து இருப்போம்

உங்கள் தொடர்ந்த ஆதரவோடு நிமிர்கிறோம் நிழலி. பெற்றோர் மாவீரர்களாகிய பிள்ளைகள் இருவரை பொறுப்பேற்று உதவுவது மட்டுமில்லாமல் மேலும் 3பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான உதவிக்கு வழி தந்து உங்கள் நண்பர் உறவினரையும் இணைத்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

நேசக்கரம் அமைப்பு தாயக மக்களின் தேவைகளில் சிறிய அளவையேனும் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு.

இதை வன்னி மைந்தன் உட்பட்ட அனைத்து கள உறவுகளும் அறிவார்கள்.

நேசக்கர அமைப்பிற்காக உதவிகள் பெறுதல்.. உரியவரிடம் கொண்டு போய்ச் சேர்த்தல் தொடர்பான விடயங்களை சாத்திரி மற்றும் சாந்தி இருவரும் தன்னார்வ அடிப்படையில் யாழ் கள உறவுகள் என்ற வகையில் அதன் ஆரம்ப காலம் தொட்டு செய்து வருகின்றனர்.

தயவுசெய்து.. சாந்தி அல்லது சாத்திரியோடு உங்களுக்குள்ள தனிப்பட்ட பிரச்சனைகளை நேசக்கரத்தின் பிரச்சனையாக உருவகிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகட்டும் எவராகட்டும் எல்லோரும் மக்களின் பணிக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் பொதுப்பணியை செய்யும் போது அவர்களுக்கு இடையூறாக இருப்பது நல்லதல்ல. பொதுப் பணியாளர்கள் பற்றிய தனிப்பட்ட விடயங்களை தனிப்பட்ட வகையில் பேசியோ அல்லது சட்ட நடவடிக்கை மூலமோ தீர்த்துக் கொள்ளுங்கள். நேசக்கரம் சார்ந்து பணியாளர்களை.. பங்காளிகளை.. மக்களை தண்டிக்கவோ.. குற்றம்சாட்டவோ சரியான காரணம் இருப்பின் அவற்றை தெளிவாக எவரும் இங்கு முன் வைக்கலாம்.

காரணம் நேசக்கரத்தின் தோற்றுவாய்கள் யாழ் களத்தில் இருந்து தான் எழுந்தன. அதற்கான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் இங்கு அளிப்பார்கள்.

அப்படி எவராவது நேசக்கரம் தொடர்பாக ஐயுறவு.. ஐயம்.. கொண்டிருந்தால்.. தயவுசெய்து.. பணியாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதை விடுத்து நேரடியாக யாழ் களத்தில் உங்கள் கருத்துக்களை ஆதாரங்களை முன் வையுங்கோ. நேசக்கரத்துக்கு யாழ் கள நிர்வாகம் பொறுப்பல்ல. ஆனால் யாழில் உள்ள உறவுகள் அதன் தோற்றுவாயாக செயற்பாட்டாளர்களாக பங்காளிகளாக இன்றும் இருக்கின்றனர். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்.

சாந்தி அல்லது சாத்திரியை தண்டிக்க நேசக்கரத்தை அதன் நாமத்தை பாவிப்பதை நிறுத்திக் கொள்வது தேச மக்களின் நலனுக்கு உதவும். உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நேசக்கரத்தை கருவியாக பாவிப்பதை நிறுத்திக் கொள்வதும் மக்களுக்கு உதவி நிற்பதற்கு சமன் என்று நினைக்கிறோம்.

நெடுக்ஸ்,

உங்கள் உதவியும் நேசக்கரத்தின் தோற்றுவாயிலிருந்து இன்றுவரை இருக்கிறது. இங்கு அங்கத்தவர்களாக இருக்கிற பலரது உதவிகளே பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைகிறது. உதவுவோர் யாவருக்கும் அதுதொடர்பான விபரங்களை இந்த இணையத்திலேயும் நேசக்கரம் இணையத்திலும் வெளியிடுகிறோம்.

தனிப்பட்ட எம்மீது ஏதும் பிரச்சனைகள் இருப்பின் அதனையும் பொதுமேடையில் கேள்வி கேட்கும் உரிமையும் உறவுகளாகிய உங்களுக்க இருக்கிறது. ஆனால் நான் தான் காவலன் சேவகன் என்ற அடிப்படையில் தேவையற்ற குற்றச்சாட்டுகளையும் மோசமான கட்டுக்கதைகளையும் புனையும் தனபாலசிங்கம் தயாளன்(வன்னிமைந்தன்) தனது வக்கிரபுத்தியை தொடர்ந்து பல வகையில் வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். இது எமது செயற்பாட்டுக்கு இடைஞ்சலாகவே இருக்கிறது. ஒருவருடத்துக்கு மேலாக இவரது தொல்லைகள் தொடர்கின்றமையாலே பொதுமேடைக்கு கொண்டுவர நேர்ந்தது.

பல முகம் தெரியாத நண்பர்கள் நேசக்கரத்தின் ஊடாக உதவுவோர் இத்தகைய சலசலப்புகளுக்கு பதில் எழுதாமல் வேலையைச் செய்யும்படி உரிமையோடு கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களது மெளனம் சிலருக்கு வாய்ப்பாகி அமைந்துவிட்டது. அதனாலேயே எழுத நேர்ந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.