Jump to content

இன்று விபூதிப்புதன்


Recommended Posts

இன்று விபூதிப்புதன் (சாம்பல் புதன்)

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று விபூதிப்புதன் (09.03.2011) அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று முதல் 40 நாட்கள் வரையான உயிர்ப்பு ஞாயிறு வரையான தினம் தவக்காலமாக கணிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

தவக்காலம்

கத்தோலிக்கர்களுக்கு தவக்காலம் மிகவும் முக்கியமான ஒரு காலம். விபூதிப் புதன் தொடங்கி கிறீஸ்துவின் உயிர்ப்பு பெருநாள் வரை இந்த தவக்காலம் அமைகிறது.

கத்தோலிக்கர்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துப் பார்த்து, அவ்வாழ்வில் உள்ள குறைகளை, தீமைகளை, பாவங்களை எல்லாம் எண்ணி, மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டும் ஒரு புனிதமான காலம். இவ்வாறாக வாழ்வை அலசி ஆராய்ந்து பார்க்க செபமும், தவமும் உதவி புரிகின்றன.

தவம்

இது எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. இந்து சமயத்தில் விரதம் இருப்பார்கள். இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருப்பார்கள். புத்தர்களும் 'போயாஷ' என்றழைக்கப்படும் பௌர்ணமி நாட்களில் உண்ணாநோன்பு இருந்து செபிப்பார்கள்.

உணவைக் குறைத்து உடலை வருத்தும்போதுதான் ஒருவன் தன்னிலை உணர்வு பெறுகிறான். அதுபோலவே இத்தவக்காலத்தில் கத்தோலிக்கர்கள் தான் வாழும் வாழ்க்கையை உணர்ந்து அறிந்திட உண்ணாநோன்பு இருக்கிறார்கள். மத சட்டங்களின்படி குழந்தைப்பருவம் தாண்டியவர்கள், முதுமை மற்றும் நோயினால் வருந்தாதவர்கள் வருடத்திற்;கு இரண்டு நாட்கள், அதாவது விபூதிப் புதன் மற்றும் பெரிய வெள்ளிக்கிழமை அன்று கட்டாயம் உண்ணாநோன்பு இருக்க வேண்டும். ஆனாலும் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இன்னும் சிலர் இத்தவக்காலத்தின் நாற்;பது நாட்களும் உண்ணாநோன்பு இருப்பார்கள்.

செபம்

கடவுளோடு மனிதனை இணைப்பது செபம். கடவுளை மட்டுமே நினைத்து, கடவுளே கதி என்ற நிலையில் நமது துன்பம், நோய், மனக்கவலைகள்; யாவற்றையும் அழுகையோடு கடவுள் முன் முறையிடுவது ஒருவகையான செபம்.

துன்பம் சூழ்ந்த நிலையில் எல்லா மனிதருக்கும் இயல்பாக எழக்கூடிய ஒரு நிலைதான் இவ்வகையான செபம். இன்பமோ, துன்பமோ, மகிழ்ச்சியோ அழுகையோ எல்லா மனநிலையிலும், எல்லா சூழ்நிலைகளிலும் கடவுளை நினைத்து தியானிப்பது வேறு வகையான செபம்.

செபம் செய்கிறபோது வாழ்வின் ஓட்டத்தில் அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, தனது வாழ்வை நினைத்து, அதையே கடவுள் முன் பலியாக, படையலாக படைத்து அருள்வரம் பெறுகிறோம். அந்த அருள்வரம் மனிதனை மனிதனாக வாழச்செய்யும். ஏன் மனிதரை தெய்வமாகவே மாற்றும். அதைதான் முக்திநிலை என்பர். மனித வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களை, பிரச்சனைகளை எதிர்கொள்ள அந்த அருள்வரம் உதவுகிறது. பிரச்சனை, துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழவும், நிறைவுதரும் வாழ்வை வாழவே எல்லா சமயத்தவரும் விரும்புகின்றனர். அத்தகைய வாழ்வை எதிர் நோக்கியே கடவுளை நினைக்கின்றனர். புனித தலங்களுக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

இந்த அருள்வரத்தை செபம் மற்றும் தவத்தின் மூலமாக மட்டுமல்ல, நிறைவும் நமக்கு கிடைக்கிறது. நாம் பகிர்வது பணமோ, உணவோ, வேறெதும் பொருளோ என்றாலும், உண்மையில் பகிரப்படுவது மகிழ்வும், நிறைவும்தான். 'பெறுவதில் அல்ல கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்வு உள்ளது' என்று இயேசு சொல்லியுள்ளார்.

மனித வாழ்வுக்கு தேவையான அருள்வரங்களை கடவுளிடமிருந்து நிறைவாக பெற செபம், தவம், கடவுள் தன்மையோடு விளங்கிய இயேசு கிறிஸ்து, மனிதராக அவதரித்து, மனிதர்களால் தவறாக தீர்ப்பிடப்பட்டு, கொடூரமான சிலுவைச்சாவின் மூலம்தான் இயேசு தீமையின் மீதும், பாவத்தின் மீதும் மரணத்தின் மீதும் வெற்றிக் கொண்டார். ஆகவே மூன்றாம்நாள் உயிர்பெற்று எழுந்தார்

அந்த பாடுகளைப்பற்றி தியானித்து செபம், தவம் மற்றும்

இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் செபத்தில் தியானிக்கும் இயேசுவின் பாடுகள், மரணம் இவற்றை அடையாளப்படுத்துவது சிலுவை. கத்தோலிக்கர்களுக்கு ஒரு முக்கியமான சின்னம். பாவ வாழ்வில் மீட்பின் சின்னம் அது. ஆகவே தான் எல்லா கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இச்சிலுவை முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

இந்தத் தவக்காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நாங்கள் நமது மண்ணிலே அன்றாடம் வாழ்க்கையை நடத்திச் செல்ல துயரப்படும் நம் உறவுகளை நினைத்து நாம் புண்ணியகாரியங்களில் ஈடுபடலாம். அவர்களின் வாழ்வு ஈடேற்றத்திற்காக விசேடமான வகையில் செபிக்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் இளவயதினர் தம்நிலை மறந்து மனம் போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலைகளில் அவர்களுக்கு தேவையான அறிவையும் ஆன்மபலத்தையும் இறைவணக்கத்தையும் நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை வழிநடத்திச் செல்ல நமது செப தவ முயற்சிகளின் மூலம் வேண்டி நிற்கலாம். இந்தத் தவக்காலத்தை நாம் சரியான முறையில் அனுஷ்டிக்க நமக்கு வல்லதேவன் பக்கபலமாக இருப்பார். அவர் வழிநடத்தலுடனும் துணையுடனும் தவக்காலத்தை எதிர்கொள்வோம்.

இந்த ஆண்டின் தவக்காலச் செய்தியாக திருத்தந்தை வெளியிட்ட செய்தி இணைக்கப்பட்டுள்ளது

மனிதன் தன்னலச் சோதனையை வெல்வதற்கு

நோன்பு அனுபவம் உதவுகின்றது

மனிதன் அன்பின் கூறுகளில் வளருவதற்குத் தடையாய் இருக்கும் தன்னலத்தை வெற்றி கொள்வதற்கு நோன்பு அனுபவம் வழியாக அவன் கற்றுக் கொள்ள முடியும் என்று பாப்பரசர் 16ம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகும் விப+திப் புதனோடு ஆரம்பமாகும் இந்த 2011ம் ஆண்டின் தபக்காலத்திற்கெனத் திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோக்கங்களைக் கொண்டிருக்கும் நோன்பானது, கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆழமான மத முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது என்றுரைக்கும் திருத்தந்தை, நமது உணவு மேசையில் வறியவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் தன்னலத்தை மேற்கொள்ளக் கற்றுக் கொள்கிறோம் என்றார்.

அத்துடன், சுயநலத்தைப் புறந்தள்ளி, நமக்கு நெருக்கமாக இருக்கும் கடவுளைக் கண்டு கொள்ளவும், பல சகோதர சகோதரிகளின் முகத்தில் கடவுளைக் காணவும் நோன்பு உதவுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மனமாற்றத்திற்கான நமது அர்ப்பணத்தின் வெளிப்பாடுகளாக பாரம்பரியமாக நாம் கடைபிடிக்கும் நோன்பு, ஈகை, செபம் ஆகியவற்றின் வழியாக கிறிஸ்துவின் அன்பை இன்னும் அதித்தீவிரமாக வாழ்வதற்கு இத்தபக்காலம் போதிக்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

நமது வாழ்வை நேர்மையுடன் ஆழமாகப் பரிசீலனை செய்து நமது பலவீனங்களை ஏற்று ஒப்புரவு அருட்சாதனத் திருவருளைப் பெற்று கிறிஸ்துவை நோக்கி ஒரு தீர்மானமானப் பயணத்தைத் தொடருவதற்கு இத்தபக்காலம் சாதகமான காலம் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

கடவுளுக்கு முதன்மைத்துவம் கொடுப்பதற்குத் தடையாய் இருக்கும் பண ஆசையால் இந்த நம் பயணத்தில் அடிக்கடி நாம் சோதிக்கப்படுகிறோம், இந்தப் பேராசை வன்முறைக்கும் சுரண்டலுக்கும் மரணத்திற்கும் இட்டுச் செல்லும், இதனாலே திருச்சபை இத்தபக்காலத்தில் தானதர்மத்தை ஊக்குவிக்கின்றது என்றார் அவர்.

பொருட்களை வணங்குதல், நம்மைப் பிறரிடமிருந்து பிரிப்பது மட்டுமல்லாமல், மனிதனைக் கடவுளிடமிருந்து திசை திருப்பி அவனை ஏமாற்றி மகிழ்ச்சியின்றி வைக்கின்றது என்று சொல்லி தானதர்மத்தின் சிறப்பை விளக்கியுள்ளார் திருத்தந்தை.

இத்தபக்காலத்தில் தினமும் இறைவார்த்தையைத் தியானித்து அதனை உள்வாங்குவதன் மூலம் செபம் எவ்வளவு நேர்த்தியானது என்றும் அதற்கு இணையாக வேறு எதுவும் இல்லை என்றும் கற்றுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

சாத்தான் பணியில் இருக்கிறான், அவன் ஒருபொழுதும் சோர்வடைவதில்லை, இக்காலத்திலும் இறைவனுக்கு நெருக்கமாகச் செல்ல விரும்பும் மக்களை அவன் சோதித்துக் கொண்டிருக்கிறான் என்ற திருத்தந்தை, இவ்வுலகில் ஆட்சி செய்யும் சக்திகளாகிய இருளின் தலைவர்களுக்கு எதிராகச் செயல்பட கிறிஸ்தவ விசுவாசம் துணைசெய்கின்றது என்றார்.

நம் மீட்பரோடு ஆள்-ஆள் உறவு கொள்வதன் மூலம், நோன்பு, தானதர்மம், செபம் ஆகியவை மூலம், கிறிஸ்துவின் உயிர்ப்பை நோக்கிய நமது மனமாற்றப் பயணம் நமது திருமுழுக்கு திருவருட்சாதனத்தை மீண்டும் கண்டுணரச் செய்கின்றது என்றும் திருத்தந்தை அதில் கூறியுள்ளார்.

“நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்” (கொலோ. 2: 12) என்பது திருத்தந்தையின் இவ்வாண்டு தவக்காலச் செய்தியின் கருப்பொருளாகும்.

நன்றி: http://www.karampon.com/

Link to comment
Share on other sites

முன்பு சாம்பல் புதன் என அழைத்ததாக ஞாபகம். விபூதி இந்து சமயத்துடன் சம்பந்தப்பட்டது. அதன் பெயரை ஏன் இதற்கு வைத்தார்கள்?

Link to comment
Share on other sites

முன்பு சாம்பல் புதன் என அழைத்ததாக ஞாபகம். விபூதி இந்து சமயத்துடன் சம்பந்தப்பட்டது. அதன் பெயரை ஏன் இதற்கு வைத்தார்கள்?

தப்பிலி அண்ணா விபூதி என்றால் சாம்பல் என்றும் அர்த்தம். மனிதன் இவ்வுலகில் எத்தகைய வாழ்க்கை வாழ்த்தாலும் விருப்பப்பட்டதெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் இறுதியில் மண்ணுக்கே உரிமையாகின்றான். முடிசூடும் மன்னனும் இறுதியில் பிடிசாம்பலாவான் என்பதை உணர்த்துவதாகவே விபூதிப்புதன் அமைகிறது.

இந்த நாளில் குருவானர் "மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார். சாம்பலை விபூதி என்றும் சொல்லுவதால் தான் இந்த பெயர் வந்திருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

நல்ல தத்துவகரமான விளக்கம் தமிழினி.

"மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே”

இப்பத்தான் வாழ்கையில் சில பல இலட்சியங்களை அடைய வேண்டுமென கனவு கண்டுகொண்டிருந்தேன். கனவில் கல்லைத் தூக்கிப் போடுறீங்கள். :(:lol:

Link to comment
Share on other sites

போதாக்குறைக்கு.... மத்தியானம் வேலை இடத்திலை பாதிக் கோழியும் சாப்பிட்ட பயம் இருந்தது.

பாதி கோழியா? ஏன் உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருப்பதர்காகவா? :unsure:

Link to comment
Share on other sites

நல்ல தத்துவகரமான விளக்கம் தமிழினி.

இப்பத்தான் வாழ்கையில் சில பல இலட்சியங்களை அடைய வேண்டுமென கனவு கண்டுகொண்டிருந்தேன். கனவில் கல்லைத் தூக்கிப் போடுறீங்கள். :(

உங்கள் இலட்சியங்கள் அனைத்தும் நனவாகவேண்டும் தப்பிலி அண்ணா. இந்த நாள் எமக்கு உணர்த்துவது நாம் எவ்வளவு உச்சிக்கு போனாலும் எம் முடிவை மறந்து தலை கால் தெரியாமல் வாழக்கூடாது என்பதையே.

நாம் எப்பவோ ஒரு நாள் மண்ணுக்குத்தான் சொந்தம் என்பதை மறக்காமல் எம் இலட்சியங்களை அடைந்து வாழவேண்டும். உங்கள் இலட்சியக் கனவுகளில் எந்தக்கல்லும் விழாமல் முன்னேற வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் பிரெஞ்சு ரேடியோவில் ஒரு கத்தோலிக்கர் வந்து சண்டை பிடித்தார். முஸ்லீம்களின் நோன்புப்பெருநாளுக்கு கொடுக்கும் நேரத்தை அல்லது முக்கியத்துவத்தை இன்று எந்த வானொலியும் தொலைக்காட்சியும் (கத்தோலிக்க நாடாக இருந்தும்) இந்த புனித புதனுக்கு கொடுக்கவில்லை என்று கடிந்து கொண்டார். ஆனாலும் அவரது வாதம் பெரிதாக எடுபடவில்லை.

நன்றி இணைப்புக்கும் விளக்கத்துக்கும் தமிழ் இனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்திட்டு..... சைவ சமயத்துடன் தொடர்புள்ள பதிவாக்கும் என்று வந்திட்டன்.

போதாக்குறைக்கு.... மத்தியானம் வேலை இடத்திலை பாதிக் கோழியும் சாப்பிட்ட பயம் இருந்தது.

நல்ல காலம் கிறிந்தவர்களின் விபூதிப் புதன் என்ற படியால்.... சாப்பிட்ட கோழியும் வடிவாய் செமிச்சிட்டுது.

இணைப்புக்கு நன்றி தமிழினி.

பாதிக் கோழியா?

என்ன வயிறா வண்ணாங்குளமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் முக்கியமான் நாள் பயனுள்ள் ,

தகவல் பதியும் தமிழினிக்கு நன்றி .

Link to comment
Share on other sites

உலகமெங்கும் பரந்து வாழும் பலகோடிக் கணக்கான மக்களுக்கு ஒரு நேர உணவோ அல்லது சுத்தமான குடிநீரோ இல்லாமல் அன்றாடம் அவதிப் படுகின்றனர். இன்றிலிருந்து 40 நாட்களுக்கு ஆடம்பர வாழ்கையில் ஈடுபடாமல் எம்மை ஒறுத்து அதில் சேமிக்கும் பணத்தை அந்த மக்களை பராமரிக்கும் நிறுவனக்களுக்குக் கொடுப்பதன் மூலம் ஓரளவு மனத்திருப்ப்தி அடையலாம் :) (எம்முறவுளை நினைத்தால் எம் அனைவராலும் முடியும்! )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

really sorry i delete my coments

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சகோதரி. :)

Link to comment
Share on other sites

கிறிஸ்தவர்கள் இந்த நாளிலிருந்து உபவாசம் செய்து எளிய உணவுகளை உற்கொண்டு ஆடம்பரமின்றி வாழ்ந்து சேமிக்கும் பணத்தை கஷ்டப்படுவோர்களுக்கு உதவி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதிருந்து மகளே இந்த காட்டிக்கொடுக்கும் வேலை :(

நான் அந்த நபரின் பெயரைக் குறிப்பிட்டேனா...????? :rolleyes::blink: என் எழுத்தால் அந்த நபரின் மனம் புண் பட்டு இருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. :(:(

பின் குறிப்பு..மற்றவர்கள் விடும் தவறுகளை தாரளமாக சுட்டிக் காட்டுங்கள்.அதை பிரதி பண்ணி கொண்டு வந்து வச்சுட்டு கேள்வி கேட்டால் எங்களால் விட்ட பிளைகளை திருத்திக் கொள்வது கடினம்.நான் குறிப்பிடுவது விட்ட தப்பை இடத்தை விட்டு நீக்க முடியாது என்பதே.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='தமிழ் சிறி'

நீங்க வேறை.... சில சனம் இரண்டு கோழியை சாப்பிட்டுப் போட்டு.... பசிக்குது என்று வயிறை தடவிக் கொண்டு திரியுங்கள். 685345_T.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சமையம் சார்ந்த பதிவு, இங்கே ஏன் இந்த கொலைவெறி? :unsure::rolleyes:

குட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க எனது அனைத்துப் பதிவுகளும் நீக்கப் படுகின்றது.

யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளவும். :)

Link to comment
Share on other sites

குட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க எனது அனைத்துப் பதிவுகளும் நீக்கப் படுகின்றது.

யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளவும். :)

மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லை அண்ண... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லை அண்ண... :)

குட்டி, மற்றைய மதத்தவர்களின் திரியில் நான் மூக்கை நுளைத்தது தவறு தான். :)

Link to comment
Share on other sites

குட்டி, மற்றைய மதத்தவர்களின் திரியில் நான் மூக்கை நுளைத்தது தவறு தான். :)

சிறி அண்ண மற்றைய மதங்கள் என்று ஏன் பிரித்து சொல்லுகிறீர்கள்? இது ஒரு கருத்துக் களம் அண்ண, யார் வேணும் என்றாலும் கருத்து எழுதலாம்... நான் பொதுவாகத் தான் குறிப்பிடு இருந்தேன்.

தயவு செய்து குறை நினைக்க வேண்டாம். :)

Link to comment
Share on other sites

  • 6 years later...

 

 

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கின்றோம் - 2
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ -2
தருணம் இதுவென இறைவன் அழைப்பாரோ

இறைவன் இயேசுவோ இறப்பைக் காடந்தவர் -2
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.