Jump to content

இன்று விபூதிப்புதன்


Recommended Posts

இன்று விபூதிப்புதன் (சாம்பல் புதன்)

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று விபூதிப்புதன் (09.03.2011) அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று முதல் 40 நாட்கள் வரையான உயிர்ப்பு ஞாயிறு வரையான தினம் தவக்காலமாக கணிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

தவக்காலம்

கத்தோலிக்கர்களுக்கு தவக்காலம் மிகவும் முக்கியமான ஒரு காலம். விபூதிப் புதன் தொடங்கி கிறீஸ்துவின் உயிர்ப்பு பெருநாள் வரை இந்த தவக்காலம் அமைகிறது.

கத்தோலிக்கர்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துப் பார்த்து, அவ்வாழ்வில் உள்ள குறைகளை, தீமைகளை, பாவங்களை எல்லாம் எண்ணி, மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டும் ஒரு புனிதமான காலம். இவ்வாறாக வாழ்வை அலசி ஆராய்ந்து பார்க்க செபமும், தவமும் உதவி புரிகின்றன.

தவம்

இது எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. இந்து சமயத்தில் விரதம் இருப்பார்கள். இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருப்பார்கள். புத்தர்களும் 'போயாஷ' என்றழைக்கப்படும் பௌர்ணமி நாட்களில் உண்ணாநோன்பு இருந்து செபிப்பார்கள்.

உணவைக் குறைத்து உடலை வருத்தும்போதுதான் ஒருவன் தன்னிலை உணர்வு பெறுகிறான். அதுபோலவே இத்தவக்காலத்தில் கத்தோலிக்கர்கள் தான் வாழும் வாழ்க்கையை உணர்ந்து அறிந்திட உண்ணாநோன்பு இருக்கிறார்கள். மத சட்டங்களின்படி குழந்தைப்பருவம் தாண்டியவர்கள், முதுமை மற்றும் நோயினால் வருந்தாதவர்கள் வருடத்திற்;கு இரண்டு நாட்கள், அதாவது விபூதிப் புதன் மற்றும் பெரிய வெள்ளிக்கிழமை அன்று கட்டாயம் உண்ணாநோன்பு இருக்க வேண்டும். ஆனாலும் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இன்னும் சிலர் இத்தவக்காலத்தின் நாற்;பது நாட்களும் உண்ணாநோன்பு இருப்பார்கள்.

செபம்

கடவுளோடு மனிதனை இணைப்பது செபம். கடவுளை மட்டுமே நினைத்து, கடவுளே கதி என்ற நிலையில் நமது துன்பம், நோய், மனக்கவலைகள்; யாவற்றையும் அழுகையோடு கடவுள் முன் முறையிடுவது ஒருவகையான செபம்.

துன்பம் சூழ்ந்த நிலையில் எல்லா மனிதருக்கும் இயல்பாக எழக்கூடிய ஒரு நிலைதான் இவ்வகையான செபம். இன்பமோ, துன்பமோ, மகிழ்ச்சியோ அழுகையோ எல்லா மனநிலையிலும், எல்லா சூழ்நிலைகளிலும் கடவுளை நினைத்து தியானிப்பது வேறு வகையான செபம்.

செபம் செய்கிறபோது வாழ்வின் ஓட்டத்தில் அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, தனது வாழ்வை நினைத்து, அதையே கடவுள் முன் பலியாக, படையலாக படைத்து அருள்வரம் பெறுகிறோம். அந்த அருள்வரம் மனிதனை மனிதனாக வாழச்செய்யும். ஏன் மனிதரை தெய்வமாகவே மாற்றும். அதைதான் முக்திநிலை என்பர். மனித வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களை, பிரச்சனைகளை எதிர்கொள்ள அந்த அருள்வரம் உதவுகிறது. பிரச்சனை, துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழவும், நிறைவுதரும் வாழ்வை வாழவே எல்லா சமயத்தவரும் விரும்புகின்றனர். அத்தகைய வாழ்வை எதிர் நோக்கியே கடவுளை நினைக்கின்றனர். புனித தலங்களுக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

இந்த அருள்வரத்தை செபம் மற்றும் தவத்தின் மூலமாக மட்டுமல்ல, நிறைவும் நமக்கு கிடைக்கிறது. நாம் பகிர்வது பணமோ, உணவோ, வேறெதும் பொருளோ என்றாலும், உண்மையில் பகிரப்படுவது மகிழ்வும், நிறைவும்தான். 'பெறுவதில் அல்ல கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்வு உள்ளது' என்று இயேசு சொல்லியுள்ளார்.

மனித வாழ்வுக்கு தேவையான அருள்வரங்களை கடவுளிடமிருந்து நிறைவாக பெற செபம், தவம், கடவுள் தன்மையோடு விளங்கிய இயேசு கிறிஸ்து, மனிதராக அவதரித்து, மனிதர்களால் தவறாக தீர்ப்பிடப்பட்டு, கொடூரமான சிலுவைச்சாவின் மூலம்தான் இயேசு தீமையின் மீதும், பாவத்தின் மீதும் மரணத்தின் மீதும் வெற்றிக் கொண்டார். ஆகவே மூன்றாம்நாள் உயிர்பெற்று எழுந்தார்

அந்த பாடுகளைப்பற்றி தியானித்து செபம், தவம் மற்றும்

இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் செபத்தில் தியானிக்கும் இயேசுவின் பாடுகள், மரணம் இவற்றை அடையாளப்படுத்துவது சிலுவை. கத்தோலிக்கர்களுக்கு ஒரு முக்கியமான சின்னம். பாவ வாழ்வில் மீட்பின் சின்னம் அது. ஆகவே தான் எல்லா கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இச்சிலுவை முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

இந்தத் தவக்காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நாங்கள் நமது மண்ணிலே அன்றாடம் வாழ்க்கையை நடத்திச் செல்ல துயரப்படும் நம் உறவுகளை நினைத்து நாம் புண்ணியகாரியங்களில் ஈடுபடலாம். அவர்களின் வாழ்வு ஈடேற்றத்திற்காக விசேடமான வகையில் செபிக்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் இளவயதினர் தம்நிலை மறந்து மனம் போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலைகளில் அவர்களுக்கு தேவையான அறிவையும் ஆன்மபலத்தையும் இறைவணக்கத்தையும் நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை வழிநடத்திச் செல்ல நமது செப தவ முயற்சிகளின் மூலம் வேண்டி நிற்கலாம். இந்தத் தவக்காலத்தை நாம் சரியான முறையில் அனுஷ்டிக்க நமக்கு வல்லதேவன் பக்கபலமாக இருப்பார். அவர் வழிநடத்தலுடனும் துணையுடனும் தவக்காலத்தை எதிர்கொள்வோம்.

இந்த ஆண்டின் தவக்காலச் செய்தியாக திருத்தந்தை வெளியிட்ட செய்தி இணைக்கப்பட்டுள்ளது

மனிதன் தன்னலச் சோதனையை வெல்வதற்கு

நோன்பு அனுபவம் உதவுகின்றது

மனிதன் அன்பின் கூறுகளில் வளருவதற்குத் தடையாய் இருக்கும் தன்னலத்தை வெற்றி கொள்வதற்கு நோன்பு அனுபவம் வழியாக அவன் கற்றுக் கொள்ள முடியும் என்று பாப்பரசர் 16ம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகும் விப+திப் புதனோடு ஆரம்பமாகும் இந்த 2011ம் ஆண்டின் தபக்காலத்திற்கெனத் திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோக்கங்களைக் கொண்டிருக்கும் நோன்பானது, கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆழமான மத முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது என்றுரைக்கும் திருத்தந்தை, நமது உணவு மேசையில் வறியவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் தன்னலத்தை மேற்கொள்ளக் கற்றுக் கொள்கிறோம் என்றார்.

அத்துடன், சுயநலத்தைப் புறந்தள்ளி, நமக்கு நெருக்கமாக இருக்கும் கடவுளைக் கண்டு கொள்ளவும், பல சகோதர சகோதரிகளின் முகத்தில் கடவுளைக் காணவும் நோன்பு உதவுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மனமாற்றத்திற்கான நமது அர்ப்பணத்தின் வெளிப்பாடுகளாக பாரம்பரியமாக நாம் கடைபிடிக்கும் நோன்பு, ஈகை, செபம் ஆகியவற்றின் வழியாக கிறிஸ்துவின் அன்பை இன்னும் அதித்தீவிரமாக வாழ்வதற்கு இத்தபக்காலம் போதிக்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

நமது வாழ்வை நேர்மையுடன் ஆழமாகப் பரிசீலனை செய்து நமது பலவீனங்களை ஏற்று ஒப்புரவு அருட்சாதனத் திருவருளைப் பெற்று கிறிஸ்துவை நோக்கி ஒரு தீர்மானமானப் பயணத்தைத் தொடருவதற்கு இத்தபக்காலம் சாதகமான காலம் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

கடவுளுக்கு முதன்மைத்துவம் கொடுப்பதற்குத் தடையாய் இருக்கும் பண ஆசையால் இந்த நம் பயணத்தில் அடிக்கடி நாம் சோதிக்கப்படுகிறோம், இந்தப் பேராசை வன்முறைக்கும் சுரண்டலுக்கும் மரணத்திற்கும் இட்டுச் செல்லும், இதனாலே திருச்சபை இத்தபக்காலத்தில் தானதர்மத்தை ஊக்குவிக்கின்றது என்றார் அவர்.

பொருட்களை வணங்குதல், நம்மைப் பிறரிடமிருந்து பிரிப்பது மட்டுமல்லாமல், மனிதனைக் கடவுளிடமிருந்து திசை திருப்பி அவனை ஏமாற்றி மகிழ்ச்சியின்றி வைக்கின்றது என்று சொல்லி தானதர்மத்தின் சிறப்பை விளக்கியுள்ளார் திருத்தந்தை.

இத்தபக்காலத்தில் தினமும் இறைவார்த்தையைத் தியானித்து அதனை உள்வாங்குவதன் மூலம் செபம் எவ்வளவு நேர்த்தியானது என்றும் அதற்கு இணையாக வேறு எதுவும் இல்லை என்றும் கற்றுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

சாத்தான் பணியில் இருக்கிறான், அவன் ஒருபொழுதும் சோர்வடைவதில்லை, இக்காலத்திலும் இறைவனுக்கு நெருக்கமாகச் செல்ல விரும்பும் மக்களை அவன் சோதித்துக் கொண்டிருக்கிறான் என்ற திருத்தந்தை, இவ்வுலகில் ஆட்சி செய்யும் சக்திகளாகிய இருளின் தலைவர்களுக்கு எதிராகச் செயல்பட கிறிஸ்தவ விசுவாசம் துணைசெய்கின்றது என்றார்.

நம் மீட்பரோடு ஆள்-ஆள் உறவு கொள்வதன் மூலம், நோன்பு, தானதர்மம், செபம் ஆகியவை மூலம், கிறிஸ்துவின் உயிர்ப்பை நோக்கிய நமது மனமாற்றப் பயணம் நமது திருமுழுக்கு திருவருட்சாதனத்தை மீண்டும் கண்டுணரச் செய்கின்றது என்றும் திருத்தந்தை அதில் கூறியுள்ளார்.

“நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்” (கொலோ. 2: 12) என்பது திருத்தந்தையின் இவ்வாண்டு தவக்காலச் செய்தியின் கருப்பொருளாகும்.

நன்றி: http://www.karampon.com/

Link to comment
Share on other sites

முன்பு சாம்பல் புதன் என அழைத்ததாக ஞாபகம். விபூதி இந்து சமயத்துடன் சம்பந்தப்பட்டது. அதன் பெயரை ஏன் இதற்கு வைத்தார்கள்?

Link to comment
Share on other sites

முன்பு சாம்பல் புதன் என அழைத்ததாக ஞாபகம். விபூதி இந்து சமயத்துடன் சம்பந்தப்பட்டது. அதன் பெயரை ஏன் இதற்கு வைத்தார்கள்?

தப்பிலி அண்ணா விபூதி என்றால் சாம்பல் என்றும் அர்த்தம். மனிதன் இவ்வுலகில் எத்தகைய வாழ்க்கை வாழ்த்தாலும் விருப்பப்பட்டதெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் இறுதியில் மண்ணுக்கே உரிமையாகின்றான். முடிசூடும் மன்னனும் இறுதியில் பிடிசாம்பலாவான் என்பதை உணர்த்துவதாகவே விபூதிப்புதன் அமைகிறது.

இந்த நாளில் குருவானர் "மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார். சாம்பலை விபூதி என்றும் சொல்லுவதால் தான் இந்த பெயர் வந்திருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

நல்ல தத்துவகரமான விளக்கம் தமிழினி.

"மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே”

இப்பத்தான் வாழ்கையில் சில பல இலட்சியங்களை அடைய வேண்டுமென கனவு கண்டுகொண்டிருந்தேன். கனவில் கல்லைத் தூக்கிப் போடுறீங்கள். :(:lol:

Link to comment
Share on other sites

போதாக்குறைக்கு.... மத்தியானம் வேலை இடத்திலை பாதிக் கோழியும் சாப்பிட்ட பயம் இருந்தது.

பாதி கோழியா? ஏன் உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருப்பதர்காகவா? :unsure:

Link to comment
Share on other sites

நல்ல தத்துவகரமான விளக்கம் தமிழினி.

இப்பத்தான் வாழ்கையில் சில பல இலட்சியங்களை அடைய வேண்டுமென கனவு கண்டுகொண்டிருந்தேன். கனவில் கல்லைத் தூக்கிப் போடுறீங்கள். :(

உங்கள் இலட்சியங்கள் அனைத்தும் நனவாகவேண்டும் தப்பிலி அண்ணா. இந்த நாள் எமக்கு உணர்த்துவது நாம் எவ்வளவு உச்சிக்கு போனாலும் எம் முடிவை மறந்து தலை கால் தெரியாமல் வாழக்கூடாது என்பதையே.

நாம் எப்பவோ ஒரு நாள் மண்ணுக்குத்தான் சொந்தம் என்பதை மறக்காமல் எம் இலட்சியங்களை அடைந்து வாழவேண்டும். உங்கள் இலட்சியக் கனவுகளில் எந்தக்கல்லும் விழாமல் முன்னேற வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் பிரெஞ்சு ரேடியோவில் ஒரு கத்தோலிக்கர் வந்து சண்டை பிடித்தார். முஸ்லீம்களின் நோன்புப்பெருநாளுக்கு கொடுக்கும் நேரத்தை அல்லது முக்கியத்துவத்தை இன்று எந்த வானொலியும் தொலைக்காட்சியும் (கத்தோலிக்க நாடாக இருந்தும்) இந்த புனித புதனுக்கு கொடுக்கவில்லை என்று கடிந்து கொண்டார். ஆனாலும் அவரது வாதம் பெரிதாக எடுபடவில்லை.

நன்றி இணைப்புக்கும் விளக்கத்துக்கும் தமிழ் இனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்திட்டு..... சைவ சமயத்துடன் தொடர்புள்ள பதிவாக்கும் என்று வந்திட்டன்.

போதாக்குறைக்கு.... மத்தியானம் வேலை இடத்திலை பாதிக் கோழியும் சாப்பிட்ட பயம் இருந்தது.

நல்ல காலம் கிறிந்தவர்களின் விபூதிப் புதன் என்ற படியால்.... சாப்பிட்ட கோழியும் வடிவாய் செமிச்சிட்டுது.

இணைப்புக்கு நன்றி தமிழினி.

பாதிக் கோழியா?

என்ன வயிறா வண்ணாங்குளமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் முக்கியமான் நாள் பயனுள்ள் ,

தகவல் பதியும் தமிழினிக்கு நன்றி .

Link to comment
Share on other sites

உலகமெங்கும் பரந்து வாழும் பலகோடிக் கணக்கான மக்களுக்கு ஒரு நேர உணவோ அல்லது சுத்தமான குடிநீரோ இல்லாமல் அன்றாடம் அவதிப் படுகின்றனர். இன்றிலிருந்து 40 நாட்களுக்கு ஆடம்பர வாழ்கையில் ஈடுபடாமல் எம்மை ஒறுத்து அதில் சேமிக்கும் பணத்தை அந்த மக்களை பராமரிக்கும் நிறுவனக்களுக்குக் கொடுப்பதன் மூலம் ஓரளவு மனத்திருப்ப்தி அடையலாம் :) (எம்முறவுளை நினைத்தால் எம் அனைவராலும் முடியும்! )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

really sorry i delete my coments

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சகோதரி. :)

Link to comment
Share on other sites

கிறிஸ்தவர்கள் இந்த நாளிலிருந்து உபவாசம் செய்து எளிய உணவுகளை உற்கொண்டு ஆடம்பரமின்றி வாழ்ந்து சேமிக்கும் பணத்தை கஷ்டப்படுவோர்களுக்கு உதவி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதிருந்து மகளே இந்த காட்டிக்கொடுக்கும் வேலை :(

நான் அந்த நபரின் பெயரைக் குறிப்பிட்டேனா...????? :rolleyes::blink: என் எழுத்தால் அந்த நபரின் மனம் புண் பட்டு இருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. :(:(

பின் குறிப்பு..மற்றவர்கள் விடும் தவறுகளை தாரளமாக சுட்டிக் காட்டுங்கள்.அதை பிரதி பண்ணி கொண்டு வந்து வச்சுட்டு கேள்வி கேட்டால் எங்களால் விட்ட பிளைகளை திருத்திக் கொள்வது கடினம்.நான் குறிப்பிடுவது விட்ட தப்பை இடத்தை விட்டு நீக்க முடியாது என்பதே.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='தமிழ் சிறி'

நீங்க வேறை.... சில சனம் இரண்டு கோழியை சாப்பிட்டுப் போட்டு.... பசிக்குது என்று வயிறை தடவிக் கொண்டு திரியுங்கள். 685345_T.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சமையம் சார்ந்த பதிவு, இங்கே ஏன் இந்த கொலைவெறி? :unsure::rolleyes:

குட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க எனது அனைத்துப் பதிவுகளும் நீக்கப் படுகின்றது.

யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளவும். :)

Link to comment
Share on other sites

குட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க எனது அனைத்துப் பதிவுகளும் நீக்கப் படுகின்றது.

யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளவும். :)

மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லை அண்ண... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லை அண்ண... :)

குட்டி, மற்றைய மதத்தவர்களின் திரியில் நான் மூக்கை நுளைத்தது தவறு தான். :)

Link to comment
Share on other sites

குட்டி, மற்றைய மதத்தவர்களின் திரியில் நான் மூக்கை நுளைத்தது தவறு தான். :)

சிறி அண்ண மற்றைய மதங்கள் என்று ஏன் பிரித்து சொல்லுகிறீர்கள்? இது ஒரு கருத்துக் களம் அண்ண, யார் வேணும் என்றாலும் கருத்து எழுதலாம்... நான் பொதுவாகத் தான் குறிப்பிடு இருந்தேன்.

தயவு செய்து குறை நினைக்க வேண்டாம். :)

Link to comment
Share on other sites

  • 6 years later...

 

 

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கின்றோம் - 2
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ -2
தருணம் இதுவென இறைவன் அழைப்பாரோ

இறைவன் இயேசுவோ இறப்பைக் காடந்தவர் -2
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.