Jump to content

ஜப்பானில் அணுக்கசிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. லண்டனுக்குப் போற நேரமாப் பார்த்து பீதியைக் கிளப்புறாங்களே..! :(

அய்யோ நாம இருக்கிறோம்ல்ல.

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

ஜப்பானின் அணுக்கசிவு முற்றுப்பெறுவதற்கு இன்னும் நீண்ட காலம் செல்லும் என சர்வதேச அணு அமைப்பு நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு ரியாக்டரில் உள்ள மூலக்குழாய் (இதனுள்ளேயே அணு ஆலையின் மூலமான யுரேனியம், புளுத்தொனியம் உள்ளன) மூலம் அணுக்கசிவு ஆபத்தான அளவில் வெளியேறியுள்ளது. கடல் நீரை பாவித்து குளிர செய்த பாவித்த கடல் நீர் மூலம் அணுக்கசிவு மீண்டும் கடலில் அதிகளவு கலந்துள்ளது. இப்பொழுது சுத்தமான நீர் மூலம் குளிராக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

Radiation in seawater off nuclear plant spikes to 1,250 times normal

Levels of radioactive iodine in seawater just offshore of the embattled Fukushima Daiichi nuclear plant spiked to more than 1,250 times higher than normal, Japan's nuclear and industrial safety agency said Saturday.

Samples taken Friday morning from a monitoring station 330 meters off the coast were significantly higher than results from the previous morning, when the level was 104 times above normal.

The measurements also showed high levels of cesium and were taken outside the discharge canal for the plant's Nos. 1, 2, 3 and 4 reactors.

Readings from a short distance away, outside the Nos. 5 and 6 units' discharge canal, showed lower but still high radioactive iodine levels some 284 times above normal.

These high levels suggest there may have been some sort of leakage directly into the ocean -- unlikely to be because of atmosphere emissions or rain alone, said an official with the Tokyo Electric Power Co., which operates the nuclear plant.

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/26/japan.nuclear.disaster/index.html?hpt=T2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நீரில் கதிர் வீச்சு

ஜப்பானின் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகே கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் அணு சக்தி பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆரம்ப அளவை விட 250 மடங்கு அதிகமாக இப்பகுதி கடல் நீரில் கதிரியக்க அயோடினின் அளவு காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கரையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர்கள் தள்ளி கடல் நீரில் கதிரியக்கம் அளக்கப்பட்டிருந்தது.

கதிரியக்கம் கடலில் கலந்ததன் காரணமாக அப்பகுதி கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை என ஜப்பானிய அமைச்சரவையின் செயலர் யுகியோ எதானோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இப்பகுதி கடல்நீரில் காணப்பட்ட கதிரியக்க அயோடினின் அளவை விட தற்போது எட்டு மடங்கு அதிகமான அளவில் இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடல் நீரை யாரும் குடிக்கவோ அல்லது இப்பகுதியில் நீந்தவோ மீன்பிடிக்கவோ போவதில்லை என்பதால் கடலில் அதிக கதிரியக்கம் கலந்திருந்தாலும் மனிதர்களின் உடல் நலத்துக்கு அதனால் ஆபத்து ஒன்றும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

எங்கிருந்து வருகிறது கதிரியக்கம்?

ஆனால் கடலில் கலக்கும் இந்தக் கதிரியக்கம் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிய முடியாமல் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேதமடைந்த அணு உலைகளில் ஒன்றிலிருந்து கசியும் கதிரியக்கம் நிலத்தடி நீரில் கலந்து அதன் வழியாக கடலுக்குள் வருகிறது என்பதற்கான சாத்தியம் உண்டு.

ஏனென்றால் சாதாரணமாகக் காணப்படும் கதிரியக்கத்தை விட பத்தாயிரம் மடங்கு அதிகமான கதிரியக்கம் கொண்ட நீர் முதலாவது மற்றும் மூன்றாவது அணு உலைகள் அருகே காணப்பட்டுள்ளது.

இதேயளவு கதிரியக்கம் கொண்ட தண்ணீர் அணுவுலைகள் இரண்டாம் மற்றும் நான்காம் இலக்க அணு உலைகள் அருகிலும் காணப்பட்டுள்ளது.

இந்தத் நீர் அணு உலைகளில் இருந்து வருகிறதா அல்லது பயன்பாட்டுக்குப் பின்னர் சேமித்துவைக்கப்பட்டுள்ள அணு எரிபொருள் கழிவுத் தேக்கத்திலிருந்து வருகிறதா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

கதிரியக்க நீரை அகற்றுவதிலும், அணு உலைகளின் சூட்டைத் தணிப்பதற்காக கடல் நீர் அல்லாமல் வேறு இடத்திலிருந்து நீர் கொண்டு வந்து ஊற்றுவதிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110326_japansearadiation.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்டு தொடக்கம் உந்த சப்பையளாலை உலகத்துக்கே தலையிடி.

பொருளாதார ரீதியாக்கூட நசுக்கிடாமல் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் பெரிய தலையிடியள்.

இந்தா அடுத்த சப்பை சீனா அமசடக்காய் உலகம்முழுக்க காலவைச்சுக்கொண்டு வருது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்டு தொடக்கம் உந்த சப்பையளாலை உலகத்துக்கே தலையிடி.

-------

அண்ணை, எல்லா சப்பையளும் எண்டு சொல்லாதேங்கோ.......

தாய்லாந்து, பிலிப்பைன் சப்பையள் உங்களுக்கு தலையிடி தந்தவையோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்டு தொடக்கம் உந்த சப்பையளாலை உலகத்துக்கே தலையிடி.

பொருளாதார ரீதியாக்கூட நசுக்கிடாமல் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் பெரிய தலையிடியள்.

இந்தா அடுத்த சப்பை சீனா அமசடக்காய் உலகம்முழுக்க காலவைச்சுக்கொண்டு வருது :D

அதுதான் லிபியாவில உடைக்கிறாங்கள், மற்ற இடங்களிலும் தருணம் பார்த்து உடைப்பான்கள். அதுக்கிடையில கீழால நிலநடுக்கமும் வந்து உடைக்குது! :(

Link to comment
Share on other sites

- ரியாக்டர் 2ஆவதில் 10மில்லியன் அளவு கூடுதலாக கதிரியல் அளவு காணப்படுகின்றது.

- செர்நோபல் மாதிரி நிலமை வராது என கூறப்படுகின்றது

- அதேவேளை அணு ஆலையின் மூலக்குழாய் ஊடாக கசிவு ஏற்படுள்ளதாக நம்பப்படுகின்றது

Radiation in reactor's building tests 10 million times above normal

adiation levels in pooled water tested in the No. 2 nuclear reactor's turbine building at the Fukushima Daiichi power plant are 10 million times above normal, utility company and government officials said Sunday.

Hidehiko Nishiyama, an official with Japan's nuclear and industrial safety agency, said the surface water showed 1,000 millisieverts of radiation. By comparison, an individual in a developed country is naturally exposed to 3 millisieverts per year, though Japan's health ministry has set a 250 millisievert per year cumulative limit before workers must leave the plant.

The 10-million-times normal reading applies to radioactive iodine-134 found in the No. 2 building's pooled water, according to the nuclear safety agency. This isotope loses half its radioactive atoms every 53 minutes, compared to a half-life of every eight days for radioactive iodine-131 that has also been detected in recent days.

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/27/japan.nuclear.reactors/index.html?hpt=T1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011 09:59

ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக, அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சை தடுக்கும் முயற்சியில், 700 இன்ஜினியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

கதிர்வீச்சை தடுப்பதற்காக, ஏராளமான தண்ணீரை ஏற்றிக் கொண்டு, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றும் ஜப்பானுக்கு விரைந்துள்ளது.

ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்த, அணு உலைகளில் வெடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு, ஜப்பானின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவுகிறது.

அங்குள்ள உணவுப் பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை கூட பயன்படுத்த முடியாத நெருக்கடிக்கு ஜப்பான் மக்கள் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், புக்குஷிமா அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்துவதற்காக, கடல் நீரை அணு உலைகளில் பீய்ச்சி அடிக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கடல் நீரில் உள்ள உவர்ப்பு தன்மையே இதற்குக் காரணம். இதைத் தொடர்ந்து, ஏராளமான தண்ணீருடன் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று, ஜப்பானுக்கு விரைந்துள்ளது.

இந்த கப்பலில் உள்ள தண்ணீரை, அணு உலைகள் மீது பீய்ச்சி அடித்தால், ஓரளவுக்கு கதிர்வீச்சு கட்டுப்படுத்தப்படும் என, கூறப்படுகிறது. இதற்கிடையே, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள மேலும் ஒரு அணு உலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அந்த உலையில் எப்போது வேண்டுமானாலும் வெடிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவை தலைமை செயலர் யுகியோ எடனோ கூறுகையில், "அணு உலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், மிகவும் மோசமான நிலை எதுவும் ஏற்படவில்லை.

இருந்தாலும், இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கதிர்வீச்சை தடுக்கும் முயற்சியில், 700க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

புக்குஷிமாவில் மொத்தம் உள்ள ஆறு உலைகளில், இரண்டு உலைகள் பாதுகாப்பாக உள்ளன. மற்ற நான்கு அணு உலைகளின் நிலை சற்று மோசமாக உள்ளது' என்றார்.

tamilenn

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 28, மார்ச் 2011 (8:21 IST)

ஜப்பானில் அணுகதிர் வீச்சு அதிகரிப்பு

ஜப்பானில் புகுஷிமா அணு உலைக்கூடத்தில் உள்ள தண்ணீரில் அணுகதிர் வீச்சு ஒருகோடி மடங்கு அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பானில் கடந்த 11ந் தேதி பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இதன் காரணமாக 27 ஆயிரம் பேர் பலியானார்கள்.

பூகம்பம் சுனாமி காரணமாக புகுஷிமாவில் உள்ள 6 அணு உலைகளில் உள்ள குளிரூட்டும் இயந்திரங்களில் பாதிப்பு ஏற்பட்டு, அணு உலைகள் வெடித்தன. இதனால் அணுகதிரியக்கம் கசிய தொடங்கியது.

2வது அணு உலைகூடத்தில் ஜப்பானிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் அங்கு உள்ள தண்ணீரில் இயல்பு நிலையை விட கதிரியக்கத்தின் அளவு ஒரு கோடி மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

அணு உலைக்கூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு கிழூபிக் செ.மீ. தண்ணீரில் 209 கோடி பெக்குயெரல் (கதிர் வீச்சின் அளவு) கதிரியக்கம் இருப்பது தெரிய வந்ததாக அணு உலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் அனைவரையும் உலைக்கூடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.

புகுஷிமா நகரில் இருந்து 30 கி.மீ.தொலைவில் உள்ள பகுதியில் கூட கதிரியக்கத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

nakkheeran

புகுஷிமா அணு உலைக்கு அருகில் உள்ள கடலில் கதிரியக்கத்தின் அளவு இயல்பு நிலையை விட 1850 மடங்கு அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடல் வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

இதற்கிடையில் ஜப்பானின் அணுசக்தி பிரச்சினை பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி கமிஷன் எச்சரித்து உள்ளது.

பூகம்பம் மற்றும், சுனாமி, ஆகியவற்றுடன் அணுகதிர் வீச்சு பாதிப்பு காரணமாக ஜப்பானில் இருந்து உலக னநாடுகளுக்கு மீன் மற்றும் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது

Link to comment
Share on other sites

ஜப்பானிய தரைகளில் புளுற்றோனியம் அதிர்ச்சித் தகவல் !

ஜப்பான் புக்குசீமா டாச்சி அணுசக்தி மையத்தில் ஏற்பட்ட சேதத்தின் உண்மையான பக்கங்கள் இப்போதுதான் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இன்றய செய்திகளின்படி புக்குசீமா பகுதியில் உள்ள தரைப்பகுதியில் புளுற்றோனியம் படிவுகள் அவதானிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புளுற்றோனியப் படிவுகள் மக்கள் வாழிடங்களில் காணப்படுவது மிகவும் ஆபத்தானது, என்றாலும் இப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளதால் உடனடியாக பாதிப்புக்கள் ஏற்படாது என்றும் அத்தகவல் கூறுகிறது.

இது குறித்து நோர்வேயின் அணுக்கதிர்வீச்சு அளவுப் பிரிவின் தலைவர் தகவல் தரும்போது புக்குசீமா உலை 3ல் ஏற்பட்ட பெரு வெடிப்பும் தீப்பிளம்பமே ஆபத்தான புளுற்றோனியம் வெளியேற காரணமெனத் தெரிவித்தார். அதேவேளை புக்குசீமா உலை ஒன்று, இரண்டு ஆகியவற்றிலிருந்து வெளியேறும் அணுக்கதிர் வீச்சின் அளவும் நாளுக்கு நாள் உயர்வதாக அச்செய்தி கோடி காட்டுகிறது..

இது ஒரு புறமிருக்க ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதிலும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சீனா அனுப்பிய 60.000 போத்தல் குடி தண்ணீரை மூன்றரை இலட்சம் மக்கள் பகிர்ந்து குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வடபுல ஜப்பானின் குடி நீர் வளம் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளதால் குடிநீர் போத்தல்களை நம்பியே பாதிக்கப்பட்ட மக்கள் வாழ வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளின் பாரிய உதவிகள் ஜப்பானை சென்றடைந்ததாகக் கூறமுடியவில்லை. ஜப்பான் சுனாமிக்காக பாரிய நிதி சேகரிப்புக்கள் நடைபெறவில்லை. 2004 சுனாமி நிதி பற்றி உலக மக்கள் வேதனை அடைந்திருப்பதால் தொலைக்காட்சிகள் மௌனமாக இருக்கின்றன. முந்திய சுனாமி நிதியில் பாதிக்கப்பட்டவர்கள் பலன் அடைந்ததாக தகவல்கள் இல்லை. இப்படியாக ஒரு தடவை தொண்டு நிறுவனங்கள் விட்ட பாரிய தவறும் இப்போது ஜப்பானை வந்து தாக்கியுள்ளது.

http://www.alaikal.com/news/?p=62870

கனடா மேற்ரும் அமெரிக்கவிலும் கதிரியல் தாக்கம், ஆனால் மக்களுக்கு பாதிப்பில்லை

- Radiation from Japan reactor detected in B.C. seaweed, rainwater; no risk to humans

Read more: http://www.vancouversun.com/news/Radiation+from+Japan+reactor+detected+seaweed+rainwater+risk+humans/4516888/story.html#ixzz1Hw1hiY98

- Japan's nuclear contamination spreads to more U.S. states

http://www.cnn.com/2011/HEALTH/03/28/radiation.us/

Link to comment
Share on other sites

- ரியாக்டர் 2ஆவதில் 10மில்லியன் அளவு கூடுதலாக கதிரியல் அளவு காணப்படுகின்றது.

- செர்நோபல் மாதிரி நிலமை வராது என கூறப்படுகின்றது

- அதேவேளை அணு ஆலையின் மூலக்குழாய் ஊடாக கசிவு ஏற்படுள்ளதாக நம்பப்படுகின்றது

Radiation in reactor's building tests 10 million times above normal

அணுக்கதிர் வீச்சு அபாயம்: தவறான தகவலுக்கு ஜப்பான் கண்டனம்

புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள நீரில் இயல்பை விட ஒரு கோடி மடங்கு கதிர்வீச்சு கலந்திருப்பதாக தவறான தகவல் வெளியிட்டதற்காக அந்நிலையத்தை இயக்கி வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி ஜப்பான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் உள்ள 2 ம் உலையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள நீர் கொள்கலனில் வைக்கப்பட்டிருந்த நீரில் வழக்கத்தை விட ஒரு கோடி மடங்கு(10 மில்லியன்) கதிர்வீச்சு கலந்திருப்பதாக டெப்கோ நிறுவனம் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.

ஏற்கனவே காற்று வழியாக கதிர்வீச்சு பரவுவதால் நாடு முழுவதும் பீதியில் இருக்கிறது. இந்நிலையில் டெப்கோவின் இந்த அறிவிப்பு மக்களை மேலும் பீதியடையச் செய்தது.

இச்செய்தி வெளியான பின் கதிர்வீச்சின் அளவை மீண்டும் சோதித்த அந்நிறுவனம் முன்பு தெரிவித்த ஒரு கோடி மடங்கு என்பது தவறு என்றும், ஒரு லட்சம் மடங்கு தான் அதிகரித்துள்ளது என்றும் பின்னர் விளக்கம் அளித்தது.

இது போன்று மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் விதத்தில் தவறான தகவலை வெளியிட்டதற்காக டெப்கோவிற்கு நேற்று ஜப்பான் அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

டெப்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இரண்டாம் உலையில் கதிர்வீச்சின் அளவை பரிசோதித்த ஊழியர் மீண்டும் ஒரு முறை அதை சரி பார்க்க இயலாத அளவிற்கு கதிர்வீச்சின் வெளிப்பாடு இருந்தது. அதனால் முதல் முறை எடுத்த அளவு சரிதானா என்று பார்க்க இயலவில்லை" என்று சமாதானம் கூறியுள்ளது.

http://www.newsonews.com/view.php?22KOld0bcE80Qd4e2UMM202cBnB2ddeZBnV203eCAA2e4U08qacb3lOS42

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானிய கதிர் வீச்சு அண்டை நாடுகளுக்கும் பரவி வருவதாக ஆய்வில் தகவல் _

வீரகேசரி இணையம் 3/30/2011 3:10:33 PM Share

ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை கதிர்வீச்சு சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பரவியுள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து புகுஷிமா அணு உலையிலிருந்து கதிர்வீச்சு பரவ ஆரம்பித்தது.

இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜப்பானில் வெளியேறும் கதிர் வீச்சு ஜப்பானின் அண்டை நாடான தென்கொரியாவிலும் பரவியது.

தென்கொரியாவை தொடர்ந்து தற்போது சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அணு கதிர்வீச்சு பரவியுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த கதிர்வீச்சு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதேவேளை மேற்படி அணு உலைகளுக்கு அண்மித்ததாக உள்ள கடல் நீரில் கதிர்வீச்சு தாக்கம் அதிகரித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'40 கி.மீ. அப்பாலும் அதிக கதிரியக்கம்'

ஜப்பானில் பாதிப்புக்குள்ளாகி கதிரியக்கத்தை வெளியிட்டுவரும் ஃபுகுஷிமா தயீச்சி அணுமின் நிலையத்தைச் சுற்றி மனிதர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பை விரிவுபடுத்துவது பற்றி ஜப்பான் பரிசீலிக்க வேண்டுமென ஐ.நா.வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பான ஐ.ஏ.ஈ.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது.

தற்சமயம் ஜப்பானின் ஃபுகுஷிமா தயீச்சி அணுமின் நிலையத்தைச் சுற்றவர இருபது கிலோ மீட்டர் பரப்புக்குள் யாரும் வசிக்க வேண்டாம், செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் அந்த நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டருக்கு அப்பாலும்கூட கதிரியக்கத்தின் அளவு மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத அளவின் வரம்பைத் தாண்டி பல மடங்கு அதிகமாகவுள்ளது என ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐ.ஏ.ஈ.ஏ. தற்போது மேற்கொண்டுள்ள அளவீடுகள் காட்டுகின்றன.

மக்களை அப்புறப்படுத்தியாக வேண்டும் என்ற அளவில் இந்தக் கதிரியக்கம் அமைந்துள்ளது, ஆகவே ஜப்பானிய அதிகாரிகள் சூழ்நிலையை கவனமாக ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.ஏ.ஈ.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது.

"உடனடி மக்கள் வெளியேற்றம் இல்லை"

ஆனால் அணுமின் நிலையத்தைச் சுற்றி மக்கள் வரத் தடைவிதிக்கப்பட்டப் பகுதியை உடனடியாக விரிவுபடுத்த வாய்ப்பில்லை என்று ஜப்பான் அறிவித்துள்ளது.

ஆனாலும் கதிரியக்கத்தின் அளவு தொடர்ந்து அதிகமாகவே இருந்துகொண்டு போனால், தாங்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக ஜப்பானிய அமைச்சரவைச் செயலர் யுகியோ எதானோ கூறியுள்ளார்.

கடல் நீரில் கதிரியக்கம்

நிலத்தில் கதிரியக்கம் என்பது ஒருபுறமிருக்க இப்பகுதியில் உள்ள கடல் நீரில் கதிரியக்க அயோடினின் அளவு சட்டபூர்வ வரம்பை விட 4385 மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஆகவே இந்த அணு மின் நிலையத்திலிருந்து கதிரியக்கம் தொடர்ந்து சுற்றாடலுக்குள் கசிந்து வர வாய்ப்புள்ளது என ஜப்பானின் அணுசக்திப் பாதுகாப்பு அமைப்பான நிசா கூறுகிறது.

அப்பகுதிக் கடல் நீரில் ஒரு நாளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அளவை விட தற்போது பல மடங்கு அதிகமான கதிரியக்க அயோடினும் கதிரியக்க சீசியமும் காணப்படுவதாக அது கூறுகிறது.

சேதமடைந்த நிலையத்தில் இருந்து எவ்வாறு கதிதிரியக்க வஸ்துக்கள் கடலுக்குள் வருகின்றன என்பதை இதுவரை தெளிவுபட புரிந்துகொள்ள முடியவில்லை என ஜப்பான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110331_japanradiation.shtml

Link to comment
Share on other sites

உலகத்தின் மிகப்பெரிய சீமெந்து பம் ஜப்பானுக்கு

உலகத்தின் மிகப்பெரிய சீமெந்து கலவையை வீசும் சீமெந்துக் குழாய் அமெரிக்காவில் இருந்து ஜப்பான் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. உலகின் மிகப்பெரிய இராட்சத விமானம் மூலமாக இந்தக் குழாய்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இக்குழாய்களும், இயந்திரங்களும் ஜப்பானின் புக்குசீமா அணு உலைக் கசிவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பாத்திரம் வகிக்கும் என்று கருதப்படுகிறது. சீமெந்துக்கலவையான சாந்து தொன் கணக்கில் பீச்சி எறியப்பட்டு புக்குசீமா அணு உலையை சீமெந்தால் உறைய வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சீமெந்து கலவையை வெகு தொலைவில் இருந்து குழாய் மூலம் கொட்டி மூடுவதன் மூலம் அணுக்கதில் கசிவை கட்டுப்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள ஜெர்ரி அஸ்மோர் கொங்கிறீற் கொன்ராக்ற் நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 200 கன மீட்டர் சீமெந்துக் கலவையை இந்த இயந்திரம் பீய்ச்சியடிக்கும். ஏழு தொன் எடை கொண்டது. இந்தக் கருவிகளை ரஸ்ய தயாரிப்பான அன்ரனோவ் 225 விமானம் சுமந்து செல்கிறது. இப்படியொரு கருவி ஜப்பானுக்குக் கொண்டுவரப்படுவதால் தலை நகர் டோக்கியோவில் மக்களிடையே ஒருவித பதகளிப்பும் காணப்படுகிறது. ஜப்பான் இந்த முயற்சியில் வெற்றி கண்டால் தற்போதய அச்சத்தை போக்க அதுவே பேருதவியாக அமையும் என்கிறது வோசிங்டன் போஸ்ட் பத்திரிகை.

http://www.alaikal.com/news/?p=63395

Giant pumps rushed from US to Japan to cool reactors

wo of the world's largest cement boom pumps are being rushed to Japan to help cool reactors at the crippled Fukushima Daiichi nuclear plant, the company that makes the equipment said Friday.

Two giant trucks equipped with powerful pumps and flexible arms with a 70 meter reach will be used to shoot water from giant hoses to cool the nuclear reactors, or cement to seal off the site, said Kelly Blickle, a spokeswoman with the US subsidiary of the German company Putzmeister.

Similar pumps were used in Chernobyl following the April 1986 meltdown, Blickle told AFP.

http://www.channelnewsasia.com/stories/afp_asiapacific/view/1120217/1/.html

Link to comment
Share on other sites

ஃபுகுஷிமா நிலை மிகவும் ஆபத்தானது: அணு சக்தி முகமை

பூகம்பத்தாலும், அதனைத தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலையாலும் செயலிழந்த ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் கூறியுள்ளார்.

நய்ரோபியில் ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் யூகியோ அமனோ, ஆபத்தான இந்த நெருக்கடியை ஜப்பான் தனியாக சந்நதிக்கவில்லையென்றும், அதோடு உலக நாடுகள் அனைத்தும் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

அணு உலைகள் செயலிழந்ததால் நிகழ்ந்துவரும் அணுக் கதிர் வீச்சை கட்டுப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமைக்கு அனைத்து உதவிகளும் செய்ய ஐ.நா.தயாராக உள்ளது என்று பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளதாகவும் அமனோ தெரிவித்துள்ளார்.

மார்ச் 11ஆம் தேதி ஏற்பட்ட ரிக்டர் 9.0 புள்ளி பூகம்பத்தினாலும், அதனைத தொடர்ந்து ஏற்பட்ட 14 மீட்டர் உயர ஆழிப்பேரலைத் தாக்குதலிலும் ஃபுகுஷிமா மாகாணத்திலுள்ள டாய்ச்சி அணு மின் நிலையத்திலுள்ள 5 அணு மின் உலைகளும் செயலிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1104/02/1110402026_1.htm

"இந்த போராட்டத்தில் எமக்கே வெற்றி" - ஜப்பானிய அதிபர்

Link to comment
Share on other sites

ஜப்பான் அணுக்கசிவு கட்டுப்படுத்த முடியவில்லை

ஜப்பான் புக்குசீமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் உண்டான அணுக்கசிவை கட்டுப்படுத்த முடியவில்லை என்று இன்றைய ஞாயிறு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சீமெந்து கலவை சேர்ந்த சாந்தை இராட்சத இயந்திரத்தால் பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தும் நேற்றைய முயற்சிகளும் போதிய பலன் தந்ததாக இல்லை. வழமையாக காற்று மண்டலத்தில் பரவியிருக்கக் கூடிய அணுக்கதிர் வீச்சைவிட 4000 மடங்கு அதிகமான கதிர்வீச்சு பாதிப்பு இப்போது காணப்படுகிறது.

மேலும் அணு சக்தி நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சை எப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்ற கேள்விக்கும் உடன் பதில் தரமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. பசுபிக் சமுத்திரம் அணுக்கதிரால் பாதிப்படைவதும் ; தொடர்கிறது, இதனால் பல நாடுகள் பாதிக்கப்படப்போகின்றன. அப்பகுதியின் மீன்பிடித் தொழிலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் மீன்கள் இதர பகுதிகளுக்கு அணுக்கதிர் வீச்சுடன் நகர ஆரம்பிக்க ஜப்பான் உலக சமுதாயத்திற்கே சுமையாக மாற நேரிடும். இன்று காலை வெளியான செய்திகள் இந்த விவகாரத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர பல மாதங்கள் எடுக்கும் என்று தெரிவிக்கின்றன.

அக்காலத்தில் இலங்கையின் சிங்கள மன்னான தாதுசேனனை சீமெந்துச் சாந்தால் மூடி கொன்றான் அவனுடைய மகனான காசியப்பன். இவனே பின்னர் சிகிரியா மலைக் கோட்டையை அமைத்தவன். தகப்பனை சீமெந்தால் மூடிய காசியப்பன் செய்த கோட்பாட்டை பின்பற்றி சீமெந்தால் அணுசக்தி நிலையத்தை மூடப்புறப்பட்ட அமெரிக்க முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=63745

Radioactive water leaking into ocean in Japan

Link to comment
Share on other sites

இயற்கைப் பேரழிவு திரைப்படங்களுக்கு ஜப்பானில் தடை

சுனாமி, அணுக்கசிவு, நிலநடுக்கம் போன்ற துயரங்களால் நொந்து நூலாகிப்போன ஜப்பானிய மக்களிடையே இயற்கைப் பேரவலங்களை விளக்கும் திரைப்படங்களுக்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காண்பிக்கப்படும் Herdafter திரைப்படத்தில் மோசமான சுனாமிக்காட்சி இருப்பதால் அது திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. பற்றில் லொஸ்ஏஞ்சல் என்ற திரைப்படமும் தூக்கப்பட்டுள்ளது. அதுபோல ஜேம்ஸ்கமரோனின் Sanctum திரைப்படத்தில் கடுமையான புயல் படமாக்கப்பட்டுள்ளதால் அதுவும் ஜப்பானில் ஓட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை அழிவுகளை கிராபிக்ஸ் மூலம் காட்டிவந்த கொலிவூட்டின் காட்சிகளை மிஞ்சிய இயற்கை அழிவுகளை தற்போது நிதர்சனமாகவே சந்திக்கிறார்கள். ஆகவே இயற்கை அழிவுகளில் இருந்து மக்களை மீட்கும் நம்பிக்கைதரும் திரைப்படங்களே உலகிற்கு அவசியம் என்பதை ஜப்பானிய திரையரங்குகள் உணர்த்தியுள்ளன.

http://www.alaikal.com/news/?p=64068

Link to comment
Share on other sites

பல நாட்களாக பசுபிக் கடலில் கலந்துகொண்டிருந்த கதிர் தாக்கம் நிறுத்தப்படுள்ளது

எங்கிருந்து அந்த கசிவு தொடர்ந்தது? அதை எப்படி நிபட்டுவது என பல வழிகளால் பல நாட்களாக முயலப்பட்டது ஒருவிதமான இரசாயன திரவத்தை (sodium silicate ) உள்ளே நுழைத்து அதன் மூலம் இது நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Radioactive leak into ocean 'stopped'

A leak of highly radioactive water into the Pacific Ocean from Japan's crippled Fukushima Daiichi nuclear plant has been stopped, its operator reports. Tepco said it had injected chemical agents to solidify soil near a cracked pit, from where the contaminated water had been seeping out.

http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12981243

Link to comment
Share on other sites

சுனாமி இழுத்துப்போன பொருட்கள் வெளியே வர 18 மாதங்கள் ஆகும்

ஜப்பானில் கடந்த மார்ச் 11ம் திகதி இடம் பெற்ற சுனாமி கடலடிக்குள் இழுத்துப்போன பொருட்கள் பல மில்லியாட் டொலர்கள் பெறுமதியானவை. சுனாமி அலைகள் சுருட்டி இழுத்துப்போன பொருட்கள் தற்போது கடலின் அடியில் கிடக்கின்றன.

கடலடி நீரோட்டம் போகின்ற போக்குகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க ஹவாய் பல்கலைக்கழகத்தினர் இப்பொருட்களை கடலடி நீரோட்டம் ஜப்பானிய தீவுகளின் கரையில் கொண்டு வந்து தள்ள 18 மாதங்கள் எடுக்கும் என்றுள்ளனர். வடக்கு அத்திலாந்திக் நீரோட்டம் பாரம் குறைந்த பொருட்களை கரைக்கு இழுத்துவர ஒரு வருட காலம் ஆகும், படிப்படியாக 18 மாதங்களில் மற்றய பொருட்களும் வெளிவரும் என்று கணிப்பிட்டுள்ளனர். பாரவண்டிகள், கார்கள், கப்பல் உதிரிப்பாகங்கள் போன்றவை ஹவாய் தீவை வந்தடைய 18 மாதங்கள் ஆகும் என்றும் கணித்துள்ளனர். விலைமதிப்பற்ற பொருட்கள் பலரது கைகளுக்குக் கிடைக்கவும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது.

http://www.alaikal.com/news/?p=64379

Link to comment
Share on other sites

ஜப்பானில் கதிரியக்க கசிவு ஏற்பட்டுள்ள அணு உலை ஒன்றின் மீது நைட்ரஜன் வாயுவை செலுத்தும் பணி இப்போது நடைபெற்று வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

ஜப்பானின் புகுஷிமா நகரில் கடந்த மாதம் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதில் 30 ஆயிரம் பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணுஉலைகளிலிருந்து கதிரியக்கம் வெளிப்பட்டு வருகிறது.

அணு உலைகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஜப்பான் எடுத்து வருகிறது. இப்போது அணு உலைகளின் மீது நைட்ஜரன் வாயுவை செலுத்தி கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=11807

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணு உலைகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஜப்பான் எடுத்து வருகிறது. இப்போது அணு உலைகளின் மீது நைட்ஜரன் வாயுவை செலுத்தி கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அணுக்கதிரை கட்டுப்படுத்த.... நைட்ரஜன் வாயுவை செலுத்துவதை விட...

அணு உலை கட்ட முன், ஒரு வைரவர் கோவிலை கட்டி பூசை செய்திருந்தால்....

இப்படி எல்லாம்.... நடந்திருக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.