Jump to content

ஹாலிவுட்டின் குயின் என்று வர்ணிக்கப்படும் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் அடைந்தார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பில் மட்டுமல்லாது, எட்டு முறை தி‌ருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட்டின் குயின் என்று வர்ணிக்கப்படும் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

அமெரிக்க-பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ் லென் டெய்லருக்கும், சாராவுக்கும் 1932ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி மகளாக பிறந்தவர் எலிசபெத் டெய்லர். 1942ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய எலிசபெத், "நேஷனல் வெல்வெட்", "கிளியோபேட்ரா", "பட்டர்பீல்ட் 8" உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 வயதில் அவர் நடித்த நேஷனல் வெல்வெட் என்ற படம் அவருக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தது. கிளியோபாட்ரா படம் எலிசபெத்தை புகழேணியின் உச்சியில் அமர வைத்தது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் வரிசையில் எலிசபெத்துக்கு தனி இடம் உண்டு. 2 முறை ஆஸ்கர் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

ஹாலிவுட்டின் குயினாக திகழ்ந்த எலிசபெத் எட்டுமுறை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். 1950ம் ஆண்டு தன்னுடைய 18வயதில் நிக்கி ஹில்டன் என்பவரை முதல் திருமணம் செய்தார் எலிசபெத். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு 1952ல் மைக்கேல் வைல்டிங் என்பவரை 2வது திருமணம் செய்தார். அவருடன் சிலகாலம் வாழ்ந்த எலிசபத், 1957ல் மைக்கேல் டாட் என்பவரை 3வது திருமணம் செய்தார். இந்த திருமணம் ஓர் ஆண்டு கூட நீடிக்கவில்லை, அவரை விவாகரத்து செய்துவிட்டு 1959ம் ஆண்டு எடி பிஷர் என்பவரை 4வது திருமணம் செய்தார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு, 1964ல் ரிச்செர்டு ப்ரூட்டன் என்பவரை 5வது திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, சில காலம் தனிமையில் வாழ்ந்த எலிசபத், மீண்டும் ப்ரூட்டனை 6வது திருமணம் செய்தார். ஆனால் இதுவும் நிலைக்கவில்லை,மீண்டும் அவரை விவாகரத்து செய்துவிட்டு, 1976ல் ஜான் வார்னர் என்பவரை 7வது திருமணம் செய்தார். இவரையும் விவாகரத்து செய்துவிட்டு 1991ல் லாரி போர்ட்நெஸ்கி என்பவரை 8வது திருமணம் செய்தார். ஐந்து ஆண்டுகாலம் இவருடன் வாழ்ந்த எலிசபெத் கடைசியில் இவரையும் 1996ல் விவாகரத்து செய்தார்.

தொடர்ந்து பல வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த எலிசபெத்துக்கு, கடந்த 2004ம் ஆண்டு இதயக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2009ல் அவருக்கு அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில் சில தினங்களாக அவரது இதயம் பலவீனமாகத் தொடங்கியது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(23.03.11)மரணம் அடைந்தார். எட்டு திருமணம் செய்த எலிசபத்திற்கு 2ஆண், 2பெண் உட்பட நான்கு குழந்தைகளும், 10பேரக்குழந்தைகளும், 4கொள்ளுபேர குழந்தைகளும் உள்ளனர்.

எலிசபத்தின் மரணத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

படித்ததில் பகிர்ந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

elizabeth-taylor-la-peregrina_4659cf21415909b90f12c494c625eb22.jpg

எலிசபெத் டெய்லர் யார் என்று தெரியாமல் தவிக்கும் யாழ்கள குட்டி,குஞ்சு குருமன்களுக்காக இப்படம் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நடித்த 'கிளியோப்பட்ரா' படம் என்னை மிகவும் கவர்ந்தது. பழைய 'ரீகல்' தியேட்டரின் மூட்டைப்பூச்சிகளுக்கு இரத்ததானம் செய்து பார்த்த படம். ஆங்கிலம் வடிவாக விளங்காத காலத்தில் கூட, அவரது அருமையான நடிப்பால் என்னைக் கவர்ந்த ஒரு நடிகை.

Link to comment
Share on other sites

இந்த ஆச்சியைத் தெரியும், ஆனால் ஏன் அவரை ஹாலிவுட்டின் குயின் என்று அழைத்தார்கள் என்று தான் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆச்சியைத் தெரியும், ஆனால் ஏன் அவரை ஹாலிவுட்டின் குயின் என்று அழைத்தார்கள் என்று தான் தெரியவில்லை.

தமிழ்படங்களில் நடித்தவர்களை நாம் புரட்சிச்தலைவி. புன்னகை அரசி என்று சொல்வதைப் போல்....

வெள்ளைக்காரன் எலிசபெத் டெய்லரை, ஹாலிவுட்டின் குயின் என்று சொன்னானோ....அல்லது நம்மடை ஆக்கள் தான் அவவுக்கு குயின் பட்டம் கொடுத்து கௌரவிச்சார்களோ... தெரியவில்லை. :lol:

குட்டி, இதுக்கெல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது. :D

Link to comment
Share on other sites

தமிழ்படங்களில் நடித்தவர்களை நாம் புரட்சிச்தலைவி. புன்னகை அரசி என்று சொல்வதைப் போல்....

வெள்ளைக்காரன் எலிசபெத் டெய்லரை, ஹாலிவுட்டின் குயின் என்று சொன்னானோ....அல்லது நம்மடை ஆக்கள் தான் அவவுக்கு குயின் பட்டம் கொடுத்து கௌரவிச்சார்களோ... தெரியவில்லை. :lol:

குட்டி, இதுக்கெல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது. :D

:D

ஒரு குயின் உயிரோட இருக்கும் போது எப்பிடி இன்னொரு ஆளை குயின் என்று வர்ணிக்கலாம்?

சரி சரி இதோட நிப்பாட்டுறன், உங்கட கடுப்பு விளங்குது ^_^

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.