Jump to content

நியாயத்தை கேளுங்கோவன்!?


Recommended Posts

நியாயத்தை கேளுங்கோவன்!?

கல்யாணம் ஆன நாளில் இருந்து இப்படிதான் என்ட மனிசன். எனக்காக எதையும் செய்வார், ஆனால் ஊருக்கு எங்கட மக்களுக்கு கொஞ்சம் பணம் அனுப்பலாம் என்றால் மட்டும், மனிசன் அசைய மாட்டுது.

சரி நானும் அதிகம் இவரிட்ட எதிர்பார்க்க கூடாது தானே? என்ன என்று கேக்கிறியள் போல?

நானும், என்ட மனிசனும் காதல் திருமணம் புரிந்தவர்கள். பல்கலைக்கழகத்துக்கு போன காலத்தில இவரை பார்த்து, பழகி, மனசு ஒத்து போனதால் திருமணம் செய்யலாம் என நினைத்து என்ட அப்பரிட்ட கேட்டா.. தாம் தீம் தான்.

யோசிக்காமலே "வேண்டாம் இவன்".

எனக்கு சரியான கோவம் பாருங்கோ. நான் சரி என்று இருப்பேனா? கேட்டனே "அவருக்கு நல்ல மனம்,நல்ல படிப்பு,நல்ல குடும்பம்..நல்லத எல்லம் சொல்லி பார்த்தேன்.

என்னை பெத்தவர் சும்மா வாயை பொத்திட்டு இருப்பாரோ, பதிலாக எனக்கு கிடைத்தது என்ன தெரியுமா?

"என்ன மொழி?"

"சிங்களம்"

"அது தான் சொல்லுறன், கதை இதோட முடியணும்"

எனக்கு பாருங்க அழுகையே வந்திட்டுது. பெத்த மனம் தாங்குமா?

"இதோ பாருடா ராஜாத்தி. நாங்கள் இவங்கள் சிங்களவங்களோட சண்டை சண்டை என செத்து கொண்டு இருக்கிறம். உன்ட மாமா, அண்ணாக்கள் எல்லாரையும் இவங்கள் தானே சாக்கடிச்சது. எங்கட குடும்ப்பதில இப்படி ஒரு திருமணம் தேவைதானா?"

"அப்பா நாங்கள் சிங்கள அரசாங்கத்தோட தான் சண்டை போடுகிறோம், மக்களோட இல்லையப்பா." ..இது நான்.

எனக்கு தெரிந்ததே பிடிவாதம் தானே, ஒரு மாதிரி சில நிபந்தனைகளுடன் பெற்றோர் சம்மதிக்க எங்கட திருமணம் இனிதே நடந்தது.

பாருங்கோ இவர் இருக்கார் தானே என்ட மனிசன்... இவள் என்னடா பெயரை சொல்லாமலே கதைக்கிறால் என்று நினைக்கிறிங்க போல??

என்ட அவரின்ட பெயர் "சுகந்தன்". என்னடா தமிழ் பெயர் என்று பார்க்கதிங்க, என்ட மாமியார் சின்னனில தமிழ் படிச்சவவாம். அதில மாமியாருக்கு தமிழ் மேல ஈடுபாடுதான். பிள்ளையளுக்கு தமிழ் பெயரும் வச்சிட்டா பாருங்கோ.

ம்ம்ம் பாருங்க சொல்லவந்ததை விட்டுட்டு வள வள என்டு பேசுறேன். ஆனா இவர் சொல்லுவார், உன்ட கதையை பார்த்து தானே காதலிக்க ஆரம்பித்தேன் அன்று.

அதை விடுங்கோ இப்படியெல்லாம் சொல்லுற மனிசன் இந்த பணம் அனுப்புற கதை வந்தா மட்டும் அடம்பிடிக்குது.

என்ன செய்ய? அதுக்காக "என் தலை எழுத்து அப்பவே என்ட அப்பர் தமிழ் மேல பற்றுள்ள ஒருத்தரை கட்டிக்கோ அப்பிடின்னார்" என்று சொல்ல மாட்டேன். இதுக்கெல்லம் போய் அப்படி சொன்னா என்ன மனிசர் நாங்கள்???

எமக்கு கிடைத்ததோட சந்தோச படணும். புதிதாக ஒன்றை பார்துவிட்டு அதுக்கு பினால போனா, அதற்கு பெயர் என்னை பொருத்தவரையில் வேற, நீங்கள் என்ன சொல்லுறியள்??

இப்ப என்ன தான் பிரச்சனை ? எதற்கு இந்த அலம்பல் என்கிறீர்களா?

பாருங்கோ சுனாமி வந்து எங்கட சனம் அல்லல்படுது. இஞ்சருங்கோ கொஞ்ச காசு அனுப்புவம் என்று காலையில கேட்டேன்.

மனிசம் சொல்லுது "இதோ பாரும்ம உனக்கு ஏதும் வேணும் என்றால் கேளு. உடனே வாங்கி தாறேன். இவங்களுக்கு எல்லம் அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் அனுப்புங்கோ"

நியாயத்தை கேளுங்க?! இவருக்கு விருப்பம் இல்லாம நான் எப்படி? கல்யாணம் ஆன நாளில இருந்து இவர் விருப்பத்தையும் அறிந்து தானே அனைத்தையும் செய்கிறேன்?

அதுக்காக என்ட மனிசனை கெட்டவன் ஆக்கி போடாதீங்கோ. "அப்பவே உன்ட அப்பர் சொன்னவர் தானே" அப்படியும் மனசுக்குள்ள நினைக்கிறியள் போல? முதல்ல கதையை கேளுங்கோவன்.

இவர் சமாதானம் இருக்க வேண்டும் என நினைக்கிற ஆள். சிங்கள அரசாங்கம் என்றாலும் தூரம். எங்கட அண்ணாக்கள் என்றாலும் தூரம். சண்டை எதற்கு, சண்டை போடுபவர்களில் எவரையும் நான் சார்ந்திருக்க போவதில்லை என சொல்லுவார்.

நான் எப்படி அப்படி இருக்க முடியும். மறுபடி கேட்டு காலையில வாக்குவாதம் முற்றியது தான் மிச்சம்.

"பாருங்கோ நல்ல விசயத்துக்கு தானே பணம் அனுப்பலாம் என்கிறேன்" இது நான்.

"அந்த பணம் சுனாமி மக்களுக்கு போய் சேரும் என்பதில் என்ன உறுதி" என்ட மனிசன் வர வர இந்த பணம் கொடுக்காமல் இருக்க கேள்வி கேட்பினமே அவையள போல எல்லோ பேசுது.

எனக்கு விசர் பிடிக்காத குறை தான். சரி சரி என்ன சொல்லவாறியள் என்று எனக்கு புரியிறது.

கதைக்கு வாங்கோ இப்ப..

"என்னங்க சொல்லுறியள், அங்க கஸ்டபடுறது என்ட சகோதரங்கள். அவையள சிங்கள இராணுவம் சீரழித்தது போதாது என்று இது வேறை. இந்த நேரத்தில இப்படி பேசுறியளே?"

"எப்ப பார்த்தாலும் இதே கதை தான். என்னுடைய விருப்பத்தை சொல்லிட்டேன். பணம் வேண்டிய அளவு உங்கட கையில இருக்கு. இதன் பின்னர் உங்கட இஸ்டம்" என கூறி வேலைக்கு போக கிளம்பினார்.

என்னால துக்கத்தை மனதுக்குள்ள அடைக்கவே முடியல.. "உங்கட கண்ணுக்கு முன்னால உங்கட உறவுகளை வெட்டி இருக்கிறார்களா ? உங்கட சகோதரிகளை இந்தியா ஆமிக்காரன் சூறையாடி இருக்கிறானா? அல்லது உங்கட தேவாலயத்தையே குண்டு வைத்து அளித்து இருக்கிறார்களா? இதெல்லாம் நடந்து இருந்தால் தான் உங்களுக்கு புரியும் என்னுடைய தவிப்பு. பாவம் அவர்கள்..." அதற்கு மேல் பேசாமல் அறைக்குள் ஓடி சென்று கட்டிலில் விழுந்தேன். இவரும் வேளைக்கு போய்ட்டார்.

நான் சாப்பிடாமல் கொள்ளாமல் தொலைக்காட்சி பெட்டி முன்னாலேயே தவம் கிடக்கிறேன். என்னாலே ஒரு சிறு உதவி கூட செய்ய முடியவில்லையே என குற்ற உணர்ச்சி மனசை போட்டு கொல்லுது.

இவரில எனக்கு சரியான கோவம் பாருங்கோ.ம்ம்ம்ம் கார் சத்தம் கேட்குது. நான் இவரிட்ட பேச போறதில்லை, வரட்டும்.

"அம்மா"

பாருங்கோ மனிசன் ஒன்றுமே நடக்காத போல கூப்பிடுது. பதில் சொல்லாம இருந்து பார்ப்பமா?? சரி இல்லை, போய் என்ன என்று தான் கேட்பமே.

"இந்த ரசீதை கொஞ்சம் மேசையில வைடம்மா".

ஆமா இப்ப இது தான் முக்கியமா? என நினைக்கும் போது தொலை பேசி மணி. இது வேற அடிக்கடி அலறிட்டு இருக்கும். வெளிநாட்டில சுறு சுறுப்பா இருக்கிறது தொலை பேசிதானே!

"வணக்கம், ஓ குமார் அண்ணாவோ? இவரோ? இப்ப தான் வந்தவர், குளிக்க போய்ட்டார்.கூப்பிடவோ? ஓ......ஓ....ஆ?? இல்லை இல்லை நான் நல்லாதான் இருக்கிறன்.சரி அண்ணா இவர் வந்த உடனே உங்களை தொடர்புகொள்ள சொல்கிறேன்.

அது என்ன தொலை பேசியில "ஓ...ஓ...ஆ??" என்று கேக்கிறிங்களா? மன்னியுங்கோ எனக்கு இப்ப நேரம் இல்லை பதில் சொல்ல. இவருக்கு டவல் எடுத்துகுடுக்கணும்.

என்ன என்ன படக்கென்று ஆள் சந்தோசமா இருக்கு என்று கேக்கிறியளா?

பின்ன என்னவாம். மனிசம் பணம் ஊருக்கு அனுப்பி போட்டெல்லோ வந்து இருக்கு.

"என்னங்க பணம் அனுப்பி இருக்கிங்க போல?"

"ஓம் அம்மா, நீங்கள் சொன்னதில நிறைய அர்த்தம் இருக்கு. தலையிடியும் காய்ச்சலும் அவன் அவனுக்கு வந்தா தானே வலி தெரியும். உங்கட மனசு எப்படி தவிக்கும் என நான் முதலே நினைச்சு பார்த்திருக்க வேணும். மன்னிச்சிரும்மா. அதோட எனக்கு விருப்பம் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக பணம் அனுப்பாமல் நீங்கள் இருக்கும் போது. உங்கட உணர்வுகளை மதிக்கிறது தானே கணவனா என்னுடைய கடமை கூட. இதை விட சும்மாவே சமையல் ஒரு மாதிரி, இந்த கோவத்தில எனக்கு சாப்பாடே இல்லமல் பண்ணினால்.."

"என்னங்க..." என்னவன் மார்பில் தலை சாய்க்க....... இங்க நீங்கள் இன்னும் போகவில்லையா? போய்ட்டு வாங்கோ. புருசன் பெஞ்சாதியை தனிய நிம்மதியா இருக்க விட மாட்டிங்களே...

முற்றும்.

அனைத்தும் கற்பனையே.

தூயா

Link to comment
Share on other sites

நல்ல சரளமாக எழுதுகிறீர்கள் தூயா. கதை நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

தூயா கதை அருமை...

ஆமாம் சிங்களம் படிப்பதன் காரணம் இப்ப தான் விளங்கியிருக்கு :lol: ... வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

"அந்த பணம் சுனாமி மக்களுக்கு போய் சேரும் என்பதில் என்ன உறுதி" என்ட மனிசன் வர வர இந்த பணம் கொடுக்காமல் இருக்க கேள்வி கேட்பினமே அவையள போல எல்லோ பேசுது.

உண்மையை சொல்லீட்டிங்கள் தூயா!

நடப்பு நிகழ்வுகளை நல்லா சொல்லுறீங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய் என்னங்க கதை எல்லாம் ஒரு மாதிரிப்போகுது (அது தான் சோடியா மாறீட்டு) நல்லகதை அழகா சொல்லியிருக்கிறியள். எனக்கெண்டா ஒன்று புரியல.. நீங்க அவர்களுக்கு உதவி செய்யணும் என்று நினைக்கிறது சரி..?? அதுக்கேன் மற்றவையின்ர சம்மதம் வேணும். அவைக்குப்பிடிக்கலை என்றா அவையை ஏன்க கஸ்டப்படுத்திறியள்..?? என்னமோ போங்க முடிவு சரியா வந்திச்சில்லா அது வரை கப்பி. :wink: :P

Link to comment
Share on other sites

ம்ம்ம் உங்கள் கதை நல்லா இருக்கு தூயா வாழ்த்துக்கள

பதிலுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ரசிகை.

þùÅÇ× «Æ¸¡ö ¸¨¾ ±ØÐÈ¢í¸ ! ±ý ¸Å¢¨¾ Òâ¨ÄÛ ¦º¡øÄ¢ðÊí¸§Ç .

¿ýÈ¡ö ±Ø¾ÅÕ¸¢ÈÐ ¯í¸ÙìÌ.Å¡úòÐì¸û.

அப்படி இல்லை. என்னுடைய எழுத்து அரிவரி தான். உங்களுடையதை அவ்வளவாக என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை, அதாவது அர்த்தத்தை. :lol: நன்றி செந்தில்.

நல்ல சரளமாக எழுதுகிறீர்கள் தூயா. கதை நன்றாக இருக்கிறது

மதண்ணா, இப்ப கொஞ்சம் எழுத்துபிழைகள் குறைவு தானே? கவனம் எடுத்து தான் தட்டச்சு செய்கிறேன், இருந்தாலும்... நன்றி மதண்ணா..

Link to comment
Share on other sites

தூயா கதை அருமை...  

ஆமாம் சிங்களம் படிப்பதன் காரணம் இப்ப தான் விளங்கியிருக்கு  ... வாழ்த்துக்கள

என்னை கிண்டல் பண்ணாம இருக்கவே மாட்டிங்களா? ;)

"அந்த பணம் சுனாமி மக்களுக்கு போய் சேரும் என்பதில் என்ன உறுதி" என்ட மனிசன் வர வர இந்த பணம் கொடுக்காமல் இருக்க கேள்வி கேட்பினமே அவையள போல எல்லோ பேசுது.  

உண்மையை சொல்லீட்டிங்கள் தூயா!  

நடப்பு நிகழ்வுகளை நல்லா சொல்லுறீங்கள்!

மிக்க நன்றி வர்ணன். மனதில் பாதித்தவிடயங்கள் தானே எழுத்திலும் வரும்.

தூய் என்னங்க கதை எல்லாம் ஒரு மாதிரிப்போகுது (அது தான் சோடியா மாறீட்டு) நல்லகதை அழகா சொல்லியிருக்கிறியள். எனக்கெண்டா ஒன்று புரியல.. நீங்க அவர்களுக்கு உதவி செய்யணும் என்று நினைக்கிறது சரி..?? அதுக்கேன் மற்றவையின்ர சம்மதம் வேணும். அவைக்குப்பிடிக்கலை என்றா அவையை ஏன்க கஸ்டப்படுத்திறியள்..?? என்னமோ போங்க முடிவு சரியா வந்திச்சில்லா அது வரை கப்பி.

அக்கி ;) என்ன என்ன தன்ட மனச போலவே மத்தவங்களையும் நினைக்கிற போல இருக்கு ;)

இதில என்ன குளப்பம். கணவனை கேட்டு தான் செய்ய வேண்டும் என்று எழுத்து இல்லை. ஆனால் கணவரின் சொல்லுக்கு மதிப்பு குடுத்தால், மனைவி விரும்புவது நடக்கிறதே , சண்டை சச்சரவு இல்லாமல்.

என் கதையில் வரும் கணவர், எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் நீ வேண்டும் எனில் செய்யலாம், எப்படி தானே சொல்கிறார்.

கதையில் வரும் மனைவி, பணம் குடுத்திருக்கலாம். ஆனால் தேவையில்லாத சண்டை தானே வரும்.

காதலிக்கும் போது இருக்கும் பொறுமை, கல்யாணத்திற்கு அப்புறம் இல்லாமல் போகலாமா?

மனைவியின் மனம் அறிந்த கணவன் ஆரம்பத்தில் வேண்டாம் எனினும், பின்னர் மனைவி தன்னுடைய விருப்பத்திற்கு மதிப்பு குடுப்பதை பார்த்து, தானே மனம் மாறுகிறார்.

யாராவது ஒருவர் முதலில் கேழே இறங்கி வந்தால் தானே பிரச்சனை தீர்வுக்கு வரும்.

அதனால் தான் அப்படி ஒரு அமைப்பு என் கதையில்.

கடைசில கதையை படிச்சனிங்க தானெ ;) சுபம் சுபம்

Link to comment
Share on other sites

தூயா, கதை நல்லா எழுதுறீங்க இப்பத்தான் படித்து முடித்தேன்... அருமையாக இருக்கு..தொடருங்கள்..வாழ்த்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கிண்டல் தானேவேணாங்கிறது.

இல்லைத்தூயா கதையின் நாயகி தன்னால் ஒரு சிறு உதவியையும் செய்ய முடியவில்லை என்று குற்ற உணர்ச்சி என்றீங்க.?? சரி கதையில தான்க.. அவாட்ட காசிருக்கு கொடுக்க மனசிருக்கு கொடுத்திட்டுப்போறது. இல்லை அவைல நீங்க தீர்மானங்களிற்காக தங்கி இருக்கிற மாதிரி எல்லா இருக்கு. உங்களால சுயமா தீர்மானம் பண்ண முடியுது அவர்களுக்கு கொடுக்கணும் என்று பிறகென்ன தயக்கம்..?? இப்படித்தான் ஆண்களுக்கு பெண்கள் இடம் கொடுக்கிறது. சே அவர் வேண்டாம் என்றிட்டாரே என்றிட்டு விட்டிட்டிருந்தா அவை வழமையாக்கீடுவினம். ஆனா உங்கட கதை நாயகன் திருந்தி வந்திருக்கார் அது பாராட்ட வேண்டிய விசயம் தான். இதுவே நம்ம தமிழ் ஆண்கள் என்றா ஐயோட மனிசி அமைதியாகீட்டு என்றிட்டு இதையே சாட்டாக வைச்சிவிடுவாங்க (இது நிஜவாழ்க்கையில) அவசியம் அவசரமாய் வரேக்க. சச்சரவுகள் பின்னாடி வருமே என்று பாத்திட்டிருக்க முடியுமா..?? அப்புறம் நீங்க அக்கியோட சண்டைக்குவாறதில்லை.. :wink: :P

Link to comment
Share on other sites

ம்ம தமிழ் ஆண்கள் என்றா ஐயோட மனிசி அமைதியாகீட்டு என்றிட்டு இதையே சாட்டாக வைச்சிவிடுவாங்க (இது நிஜவாழ்க்கையில) அவசியம் அவசரமாய் வரேக்க. சச்சரவுகள் பின்னாடி வருமே என்று பாத்திட்டிருக்க முடியுமா..?? அப்புறம் நீங்க அக்கியோட சண்டைக்குவாறதில்லை..  :wink: :P

தமிழினி எப்படி தமிழ் ஆண்கள் எல்லாரும் இப்படித்தான் என்றும், மற்றவர்கள் அப்படி இல்லை என்றும் சொல்லுவீர்கள்?இருவகையான ஆண்கள் எல்லாச் சமூகத்திலும் உண்டு,அது தான் எனது அனுபவம்.

Link to comment
Share on other sites

தூயா நல்ல கதை.புரிந்துணர்வுள்ள குடும்பம்.நிம்மதியா இருங்க :lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரங்களே :lol:

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. கற்பனைக்கதை என்று சொல்கிறீர்கள். ஏன் கணவரை சிங்களவராக படைத்திருக்கிறீர்கள்?.

Link to comment
Share on other sites

புரிந்துணர்வை காட்டுவதற்கு தான்..:lol: ஏன் நல்லாயில்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.