Jump to content

சிங்கம் + சுப்பாதேவி = மகாவம்சம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

fakemahavamsa.png

முன்னொரு காலத்தில் வட இந்தியாவில் ஒரு அபூர்வ சம்பவம் (விஞ்ஞான ரீதியில் விளக்க முடியாத பெரும் சம்பவம்) நிகழ்ந்தது. அதில் சுப்பாதேவி என்ற ஒரு மனிதப் பெண்ணை ஆண் சிங்கம் ஒன்று கற்பழிக்க.. அவளுக்கு இரண்டு மனிதக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்று ஆண் மற்றது பெண். அவற்றில் ஒன்று தான் சிங்கபாகு. அவன் தன் சிங்கத் தந்தையைக் கொன்று விட்டு பின் தன் சொந்த சகோதரியையே மணம் முடித்தும் கொண்டான். அவர்களின் பிள்ளையே விஜயன். அதாவது சிங்கத்தின் இரண்டாம் தலைமுறை குழந்தையான விஜயன் ஒரு கொடியவன். அவனின் கொடுஞ்செயல் கண்டு அவனையும் அவனின் கொடுமைக்கார கூட்டாளிகளையும் கடலில் விட்டனர். அவர்கள் போக்கிடமின்றி அலைந்து காற்றின் திசையில் வந்து சேர்ந்த இடம் தற்போதைய சிறீலங்கா. முந்தைய தம்பபரணி.

அதன் பின்னர் விஜயன்.. குவேனி என்ற பெண்ணை தம்பபரணியில் மணந்தான். அவனின் கூட்டாளிகளும் அங்குள்ள பெண்களை மணந்தனர். இறுதியில் வங்காளி.. குஜராத்தி.. தமிழ்.. கன்னடம் எல்லாம் கலந்து பேசும் ஒரு மொழியை உருவாக்கி அதற்கு சிங்களம் என்று பெயர் வைத்து பேசவும் வெளிக்கிட்டனர். இதுதான் ரத்தினச் சுருக்கமான மகாவம்சத்தின் ஆரம்ப பாகம் சொல்லும் சிங்கள இனத்தின் கதை.

"At the beginning of the chronicle (see History of Sri Lanka) the King of Vanga is married to the daughter of the King of Kalinga. Their daughter, Suppadevi, was not only 'very fair and very amorous', but was also prophesied to consummate a 'union with the King of beasts'[3] - in the Mahavamsa, a lion. When this duly happened, she gave birth to two children - Sinhabahu and Sinhasivali. 'Sinhabahu' means 'lion-armed' and the young prince himself is described as having 'hands and feet...formed like a lion's'. [3] The family lived together in the lion's cave, blocked in by a large rock the lion had placed to prevent their exit. Eventually, however, Suppadevi and her two children flee the cave. Later Sinhabahu kills his father with an arrow. Then, marrying his sister, he establishes a kingdom based on a city called Singhapur. Sinhasivali bears him a series of twins; their eldest child is named Vijaya, and his younger twin brother Sumitta.

Vijaya is described as indulging in 'evil conduct, and his followers were...(like himself), and many intolerable deeds of violence were done by them'. So antisocial were his activities that the people of the kingdom eventually demanded that the (now aging) King Sinhabahu have him executed.[3] Instead Sinhabhu had half their heads shaved (a sign of disgrace) and exiled Vijaya with his followers, their wives and children, from the kingdom - traditionally said to number a total of 700 souls. After resting in several places they are found to be hostile, and the wayward prince and his associates eventually 'landed in Lanka, in the region called 'Tambapanni.[3]

Vijaya married Kuveni (local Yaksha princess) like his army marrying off local women. Later this given rise to modern Sinhala race who speak a language phonetically much similar to modern Bengali. Vijaya landed on Sri Lanka near Mahathitha (Manthota or Mannar), and named the island "Thambaparni" ('copper-colored palms). These are attested in Ptolemy's map of the ancient world. Mahavamsa also claims, Lord Buddha visiting Sri Lanka three times. Firstly, to stop a war between a Naga (Vedda) king and his son-in-law who were fighting over a ruby chair. It is said that on his last visit, he left his foot mark on Sripada (Adam's Peak). Tamirabharani was the old name for second longest river in Sri Lanka (known as Malwatu Oya in Sinhala & Aruvi Aru in Tamil). This river was main supply route connecting the capital, Anuradhapura to Mahathitha (Mannar). The waterway was used by Greek and Chinese ships traveling the southern Silk Route. Mahathitha was an ancient port linking Sri Lanka to Bengal and Persian Gulf." http://en.wikipedia.org/wiki/Vijaya_of_Sri_Lanka

நாம் இன்று அறிவியல் வளர்ந்துவிட்ட ஒரு இலத்திரனியல் கணணியுக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சிங்கம் புணர ஒரு மனிதப் பெண் கருவுற்றாள் அதன் வழி ஒரு மனிதப் பரம்பரையே தோன்றி அது இலங்கையை ஆளத் தகுதி பெற்றுள்ள வீரப்பரம்பரை என்று ஒரு கூட்டம் சொல்வதை இன்னும் அப்படியே வரலாறு என்று நம்பிக் கொண்டு.. அதற்கு பாதுகாப்பும் பொருளாதார ஆயுத உதவியும் செய்து கொண்டு ஒரு உலகம் இருக்க வேடிக்கையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் சிங்களவர்கள் ஆகிய சிறீலங்காவின் இன்றைய பெரும்பான்மையினர் வட இந்திய வழி வந்தவர்கள். அங்கிருந்து கடலில் தத்தளிக்கவிட்ட இடத்தில் தவறுதலாக வந்து சிவ வழிபாடு கண்ட நீண்ட வரலாற்றியல் தொன்மைகள் கொண்ட இலங்கைத் தீவில் அடைக்கலம் புகுந்து கொண்டனர். அதன் பின் அந்த நிலத்தை அடாவடித்தனங்கள் மூலம் அபகரித்தும் கொண்டனர்.

மகாவம்சமே விஜயனின் தோற்றம்.. அவனின் கொடுமைத்தனங்களை வெளிப்படையாக சொல்லும் நிலையில்.. அவன் வழி வந்த சிங்கள இனம் பற்றிய உலகின் பார்வை இன்னும் வரலாற்று புனை கதைக்குள் புதைந்து கிடக்க விளைகிறதே அன்றி அந்த வரலாற்றின் உண்மைத் தன்மையை அறிவியல் கொண்டு அணுக நினைக்கவில்லை.

உண்மையில் விஜயன் சிங்கத்தில் இருந்து வந்திருந்தால் அவனுடைய பரம்பரை அலகில்.. (சிங்கத்திற்கு 23 சோடி நிறமூர்த்தங்கள் இல்லை என்பது வேறு கதை. சிங்கம் மனித முட்டையை கருக்கட்டச் செய்ய முடியாது என்பதும் அறிவியல் உண்மை. அப்பவே யாரோ குளோனிங் செய்திருக்கினம்.. என்று வைச்சுக் கொள்வோம்) கிட்டத்தட்ட 50% சிங்கத்தினுடையதாக இருக்க வேண்டும். அவன் வழி வந்த சிங்களவர்களிடமும் அது இன்றும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.

சிறீலங்காவில் வாழும் சிங்களவர்களிடமும்.. வட இந்தியாவில் விஜயன் பிறந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் ( இப்போது இந்தியாவில் சிங்கங்கள் வாழ்வதற்கான தடயமே இல்லை) சிங்கங்கள் வாழ்ந்திருந்தால் அவற்றின் மரபணுக்களையும் அவற்றின் சுவடுகளில் இருந்து பெற்று டி என் ஏ மாதிரி ஒப்பீடு மூலம் உண்மையில் சிங்களவர்கள் சிங்கத்தில் இருந்துதான் வந்தனரா என்பதை அறிவியல் ரீதியில் நிரூபிக்க முடியும்.

அதுமட்டுமன்றி சிங்களவர்களின் இழைமணி மற்றும் வை(Y) நிறமூர்த்தங்களினை வட இந்திய.. மற்றும் தென்னிந்திய வாழ் மக்களின் நிறமூர்த்தங்களோடு டி என் ஏ பகுப்பாய்வு மூலம் ஒப்பிட்டு நோக்கின்.. சிங்களவர்கள் வட இந்தியர்களில் இருந்து தோன்றி இருந்தால் அவர்களின் நிறமூர்த்தம் கூடிய அளவு வட இந்தியர்களோடு கூடிய அளவு ஒத்துப் போக வேண்டும். அப்படி ஒத்துப் போனால்.. சிங்களவர்கள்.. வட இந்திய வர்க்கங்கள் என்பது நிரூபணமாகும். ஒருவேளை அவர்களின் நிறமூர்த்தப் பகுப்பாய்வு தென்னிந்தியர்களோடு அதிகம் ஒத்துப் போனால் சிங்களவர்கள் இலங்கைத் தீவை அடைந்த போது அங்கு தென்னிந்தியர்கள் வாழ்ந்ததும்.. விஜயன் குழுவினர் அவர்களை திருமணம் செய்து கொண்டதும் வெளிப்படும்.

இதன் மூலம் மகாவம்சத்தின் பொய்த் தன்மையும் சிங்கள இனம் பற்றிய வரலாற்றியல் பொய்களும் வெளிப்படுவதோடு அவை முற்றுமுழுதான பொய்யே என்றும் மெய்ப்பிக்கப்படும். சிங்கள இனம் என்ற ஒரு இனம் மகாவம்சப் படி இருக்க வாய்ப்பில்லை என்பதும் அறிவியல் உலகில் நிரூபணம் ஆகும்.

மகிந்த ராஜபக்ச போன்ற கோமாளிகள்.. கற்பனை இதிகாசத்தை ஒரு இனத்துக்கான வரலாற்றுச் சான்றாகக் காட்டிக் கொண்டு அதில் 3 ம் 4 ம் 5ம் 6ம் பாகங்கள் என்று சிங்களவர்கள் இலங்கைத் தீவில் செய்த மனித உரிமை மீறல்களை வரலாறாக பதிவிட முனைகின்றனர்.

எவ்வாறு விஜயன் என்ற ஒரு குற்றவாளி ஒரு இதிகாசத்தின் கதாநாயகன் ஆனானோ.. அதேபோல் மகிந்த ராஜபக்ச என்ற ஒரு போர்க்குற்றவாளியை இதிகாச மகாவம்ச வழியில் கதாநாயகனாகக் காட்ட சிங்கள "அறிவியலாளர்கள்.. மூத்தோர்" முனைந்து கொண்டிருக்கின்றனர். இதனை இலங்கைத் தீவின் பூர்வீக மக்களான தமிழ் மக்கள் (இலங்கையின் பாறை அமைப்பு தமிழகப் பாறை அமைப்பை ஒத்ததாக புவிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் தமிழர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல அதனோடு இணைந்திருந்த இலங்கையிலும் மிக நீண்ட காலமாக வாழ்ந்திருக்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. இதுவும் அறிவியல் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட முடியும்.) தடுக்க நவீன உலகிற்கு ஏற்ற முறையில் அறிவியல் கொண்டு உருப்படியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து ஒரு கற்பனை இதிகாசப் பின்னணியில் ஒரு இனத்துக்கான வரலாற்றை எழுதி வைத்துக் கொண்டு அதன் வழி குற்றவாளிகள், மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தங்களை தீரர்களாக உலகிற்கு இனங்காட்டவும் பிற மனிதர்களையும் இனங்களையும் வேட்டையாடவும் ஆதிக்கவும் செய்யவும் அனுமதிக்கக் கூடாது.

அது இந்தப் பூமிப்பந்தில் தவறான ஒரு வரலாற்றை எழுதி விடவே உதவும். அதுவும் இத்தனை நவீனத்துவம் வாய்ந்த அறிவியல் தழைத்தோங்கியுள்ள நிலையிலும் இயற்ற முடியுது அல்லது தொடர முடியுது என்றால் அதுவே அந்த இனத்தின் முழு வெற்றியாகவும் அமையும். அதற்கு நாளை அறிவியல் சாயமும் பூசி.. மெய்யென காட்டவும் அந்தச் சிங்கள இனம் முனையும்.

இதையிட்டு இலங்கைத் தீவில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்கள் என்ன பதில் நடவடிக்கை எடுக்கப் போகின்றனர்.. அறிவியல் சார்ந்து அதனை எடுப்பார்களா என்பதை தமிழ் அறிஞர்கள் தான் அந்த மக்கள் சார்பில் தீர்மானிக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச செய்வது வெறும் மகாவம்ச இதிகாச நீட்சி அல்ல. உண்மையில் அவர் மகாவம்சத்துக்கு நவீன உலகின் போக்கில் உயிர் கொடுக்க முனையும்.. இலங்கைத் தீவில் சிங்கள இன வரலாற்றை நவீனப்படுத்தும் ஒரு நடவடிக்கையே செய்கிறார். இதனை இட்டு தமிழ் மக்கள் வாழாதிருக்க முடியாது. மாறாக தமிழ் மக்கள் மகாவம்ச போலிகளை அறிவியல் கொண்டு இனங்காட்டிய படி தமக்கான வரலாற்றை பூர்வீக உண்மைகளை அறிவியலின் உதவியோடு ஆதாரப்படுத்தி இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர்வீகம் பற்றிய உண்மைகளை உலகுக்குச் சொல்லுதலிலும் தமிழர்களின் விடுதலையின் கனதி தங்கியுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முறையில் ஆராய்ந்து, எழுதப் பட்ட கட்டுரை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவார்சியமான கதைகளைப் புனைந்து கால ஓட்டத்தில் அவற்றிற்குக் கிடைத்த வரவேற்பின் நிமித்தம் இந்த மகாவம்சம் பிறந்திருக்குமோ?..... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான 'உண்மையான' ஒரு ஆய்வுக்கட்டுரை. பாராட்டுக்கள்.

அதென்ன 'சிங்க(ள)க்குட்டி பொட்டோட வருகுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான 'உண்மையான' ஒரு ஆய்வுக்கட்டுரை. பாராட்டுக்கள்.

அதென்ன 'சிங்க(ள)க்குட்டி பொட்டோட வருகுது?

சின்னக் குழந்தைகளுக்கு ஆண் - பெண் வேறுபாடில்லாம சிங்கள ஆக்களும் திரிஷ்டிப் பொட்டு வைக்கிறவை என்று நினைக்கிறன். அது பெரிசா வளர்ந்தாத்தான் பொட்டை கண்டு ஆக்களை அடிக்கும் கொல்லும். :(:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான 'உண்மையான' ஒரு ஆய்வுக்கட்டுரை. பாராட்டுக்கள்.

அதென்ன 'சிங்க(ள)க்குட்டி பொட்டோட வருகுது?

நானும்..... அந்தப் பொட்டை கவனிக்கவில்லை. புங்கையூரான் சொன்னாப் பிறகு தான் கவனித்தேன். மனதுக்கு, ஒரு மாதிரி இருந்தது. :blink:

சின்னக் குழந்தைகளுக்கு ஆண் - பெண் வேறுபாடில்லாம சிங்கள ஆக்களும் திரிஷ்டிப் பொட்டு வைக்கிறவை என்று நினைக்கிறன். அது பெரிசா வளர்ந்தாத்தான் பொட்டை கண்டு ஆக்களை அடிக்கும் கொல்லும். :(:o

நெடுக்ஸ், அந்தப் பொட்டுக்கு என்னவோ... மாதிரி, நியாயம் சொல்லி விட்டார்.

அந்த, நியாயம் சரியாகப் படவில்லை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்..... அந்தப் பொட்டை கவனிக்கவில்லை. புங்கையூரான் சொன்னாப் பிறகு தான் கவனித்தேன். மனதுக்கு, ஒரு மாதிரி இருந்தது. :blink:

நெடுக்ஸ், அந்தப் பொட்டுக்கு என்னவோ... மாதிரி, நியாயம் சொல்லி விட்டார்.

அந்த, நியாயம் சரியாகப் படவில்லை. :(

படம் தொடர்பான சங்கடத்தை தவிர்க்கும் பொருட்டு இணைய வழி பெறப்பட்ட குறித்த படத்தில் திருத்தம் செய்திருக்கிறேன். நன்றி உறவுகளே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் தொடர்பான சங்கடத்தை தவிர்க்கும் பொருட்டு இணைய வழி பெறப்பட்ட குறித்த படத்தில் திருத்தம் செய்திருக்கிறேன். நன்றி உறவுகளே. :)

நன்றி நெடுக்ஸ். :)

Link to comment
Share on other sites

நன்றாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள் நெடுக்ஸ்!

படம் தொடர்பான சங்கடத்தை தவிர்க்கும் பொருட்டு இணைய வழி பெறப்பட்ட குறித்த படத்தில் திருத்தம் செய்திருக்கிறேன். நன்றி உறவுகளே. :)

சில சிங்களத் தளங்களில் தமிழரை ஏளனப் படுத்துவதற்கு போட்டு வைத்த படங்களை மிருகங்களோடு சேர்த்து போட்டிருப்பார்கள். உறவுகளின் கருத்தை கருத்தில் கொண்டு படத்தை மாற்றியமைத்தமைக்கு நன்றிகள்!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் தொடர்பான சங்கடத்தை தவிர்க்கும் பொருட்டு இணைய வழி பெறப்பட்ட குறித்த படத்தில் திருத்தம் செய்திருக்கிறேன். நன்றி உறவுகளே. :)

நன்றிகள் பல நெடுக்ஸ்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.