Jump to content

கர வருட பலன்கள் ! 2011


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர வருட பலன்கள் ! 2011

ஜோதிட ரத்னா' கே.பி.வித்யதரன்

மேஷம்: தைரியசாலிகளே! உங்களின் தனாதிபதியான சுக்கிரன், லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால்... புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9.5.11 முதல் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்தமர்வதால் கவலை, உடல் உபாதை வரக்கூடும். 16.5.11 முதல், இந்த வருடம் முடியும் வரை ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். 20.12.2011 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால்... புது வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் அமையும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். ஆனால்... வைகாசி, தை மாதங்களில் லாபகரமாக அமையும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்கள் நிம்மதி தரும்.

இந்தப் புத்தாண்டு, உங்கள் பலம், பலவீனத்தை உணர வைப்பதுடன், ஓரளவு நன்மையையும் தரும்.

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை வணங்குங்கள்.

ரிஷபம்: கடின உழைப்பாளிகளே! இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதனான சுக்கிரன், 10-ம் வீட்டில் பலமாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குருபகவான் 8.5.11 வரை 11-ம் வீட்டில் நிற்பதால், பணம் வரும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். ஆனால், 9.5.11-ம் தேதி முதல் 12-ம் வீட்டுக்குள் நுழைவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வருடம் பிறக்கும்போது ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், வருங்காலம் பற்றிய பயம், களைப்பு வந்து செல்லும். 16.5.11 முதல் கேது ராசிக்குள் நுழைவதால்... ஏமாற்றம், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால்... கணவருடன் வாக்குவாதம் வரக்கூடும். ஆனி, ஆவணி மாதங்களில் மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு வேலை அமையும். 21.12.11 முதல் சனி பகவான் 6-ம் வீட்டுக்குள் நுழைவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் வரவு உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை துவள வைத்தாலும், இறுதியில் வெற்றியைத் தரும்.

பரிகாரம்: அம்மன் ஆலயத்துக்கு சென்று குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

மிதுனம்: நடுநிலையாளர்களே! உங்கள் ராசிநாதனான புதன், நீசபங்க ராஜயோகம் அடைந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். புது வீடு, மனை வாங்குவீர்கள். 10-ல் நின்று கொண்டு பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கும் குருபகவான், 9.5.11 முதல் 11-ம் வீட்டுக்குள் நுழைவதால்... எதிர்பாராத பணவரவு உண்டு. 15.5.11 வரை ராசிக்குள் கேது நிற்பதால் கவலை, வீண் விரயம் வந்து செல்லும். வருடம் பிறக்கும்போது ராகு 7-ல் நிற்பதால், கணவருடன் சச்சரவு வந்து விலகும். 16.5.11 முதல் கேது ராசியை விட்டு விலகுவதால், உடல்நலக் கோளாறு நீங்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். 20.12.11 வரை 4-ல் சனி பகவான் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 21.12.11 முதல் 5-ல் சனி நுழைவதால், பிள்ளைகள் கோபப்படுவார்கள். 24.7.11 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால்... வீண் டென்ஷன் ஏற்படலாம். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.

இந்தப் புத்தாண்டு சில சறுக்கல்களை தந்தாலும், குருவின் அனுக்கிரகத்தால் வாழ்க்கைத் தரம் உயரும்.

பரிகாரம்: அருகிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குரு பகவானையும் குலதெய்வத்தையும் வணங்குங்கள்.

கடகம்: கடமை தவறாதவர்களே! உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அனுபவ அறிவாலும், கனிவான பேச்சாலும் காரியம் சாதிப்பீர்கள். குரு 8.5.11 வரை 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். ஆனால், 9.5.11 முதல் குரு 10-ம் வீட்டுக்குள் நுழைவதால்... வீண் விமர்சனம் வரக்கூடும். வருடம் பிறக்கும்போது கேதுபகவான் 12-ம் வீட்டில் நிற்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால், அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 16.5.11 முதல் கேது லாப வீட்டுக்குள் வருவதால் பணம் வரும். 16.5.11 முதல் ராகு 5-ம் வீட்டுக்குள் வருவதால், பிள்ளைகள் சில சமயங்களில் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். 20.12.11 வரை சனி பகவான் 3-ம் வீட்டில் பலமாக இருப்பதால், முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில்... அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்தப் புத்தாண்டு... வெகுளியாக இருந்த உங்களை சில நேரங்களில் சந்தர்ப்பவாதியாக மாற்றும்.

பரிகாரம்: பிரதோஷ தினத்தன்று வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்

சிம்மம்: சிந்தனைவாதிகளே! சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். அதேசமயம், உங்கள் யோகாதிபதிகளான செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... வீண் விரயம், டென்ஷன் வந்து நீங்கும். கேது 11-ம் வீட்டில் நிற்பதால், பழைய பிரச்னைகள் தீரும். 15.5.11 வரை 5-ல் நிற்கும் ராகுவால் பிள்ளைகளுடன் மனவருத்தம் வரும். 9.5.11 முதல் குரு 9-ல் நுழைவதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். 16.5.11 முதல் 4-ல் ராகு நுழைவதால் கடினமாக உழைக்க வேண்டி வரும். சொத்து விஷயத்தில் அவசரம் வேண்டாம். 20.12.11 வரை ஏழரைச்சனி தொடர்வதால், உடல் உபாதை வந்து விலகும். 21.12.11 முதல் 3-ம் வீட்டுக்குள் சனி நுழைவதால், நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் வெளியாகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுப்பீர்கள். உத்யோகத்தில், பதவி உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு மருத்துவச் செலவுகளை தந்தாலும், மகத்தான காரியங்களையும் செய்ய வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

கன்னி: கலகலப்பாக பேசுபவர்களே! உங்கள் ராசிநாதனும், குருபகவானும் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 9.5.11 முதல் குரு 8-ல் மறைவதால், மன இறுக்கம் வந்து நீங்கும். ஆனால், குரு உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால், திடீர் பணவரவு உண்டு. வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால், உறவினர்களுடன் உரசல் வரும். 15.5.11 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால், மருத்துவச் செலவுகள் வந்து போகும். கேது 10-ல் நிற்பதால், காரிய தாமதம் ஏற்படலாம். 16.5.11 முதல் ராகு 3-ல் நுழைவதால், புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். கேது 9-ம் வீட்டில் நுழைவதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். 20.12.11 வரை ஜென்மச் சனி தொடர்வதால் உடல் உபாதை வந்து நீங்கும். 21.12.11 முதல் சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும்.

இந்தப் புத்தாண்டு, செலவுகளில் உங்களை சிக்க வைத்தாலும், அனுபவ அறிவால் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குங்கள்.

துலாம்: நியாயவாதிகளே! உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுவடைந்திருக்கும் போதும், 3-ம் வீட்டில் ராகு நிற்கும்போதும் இந்த கர வருடம் பிறப்பதால், நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். உங்கள் லாப ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 8.5.11 வரை குரு 6-ல் நிற்பதால் வீண் சந்தேகம், செலவுகள் வந்து போகும். ஆனால், குரு பகவான் 9.5.11 முதல் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். 15.5.11 வரை ராகு 3-ல் நிற்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கேது 9-ல் நிற்பதால் தந்தைக்கு உடல் நலக் கோளாறு வந்து போகும். 16.5.11 முதல் ராகு 2-ல் நுழைவதால், கோ£பமான பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். கேது 8-ல் நுழைவதால், திடீர் பயணங்கள் ஏற்படலாம். 20.12.11 வரை 12-ல் விரயச்சனி தொடர்வதால், மறைமுக அவமானம் வந்து போகும். 21.12.11 முதல் ஜென்மச்சனியாக வருவதால், உணவில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் சம்பள உயர்வும், பதவி உயர்வும் உண்டு.

நாலா விதத்திலும் சிரமத்திலிருக்கும் உங்களுக்கு வசதியைத் தருவதாக இந்த ஆண்டு அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

விருச்சிகம்: விகடகவிகளே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான், குருவுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். சுக ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், வீடு கட்டும் பணி முழுமையடையும். 8.5.11 வரை குரு 5-ம் வீட்டில் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனால், 9.5.11 முதல் குரு 6-ம் வீட்டில் நுழைவதால்... சலசலப்பு, பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். கேது 8-ல் நிற்பதால் வீண் அலைச்சல், ஏற்படக்கூடும். 16.5.11 முதல் ராகு ராசிக்குள் வருவதால், உடல் உபாதை வந்து போகும். கேது 7-ல் நுழைவதால், கணவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 20.12.11 வரை லாப வீட்டில் சனிபகவான் தொடர்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. 21.12.11 முதல் ஏழரைச்சனி தொடங்குவதால், மறைமுக எதிர்ப்பு வரக்கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு.

இந்தப் புத்தாண்டு நீங்கள் சுய உழைப்பால் முன்னேற்றுவதற்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள்.

தனுசு: கூடிவாழும் குணமுடையவர்களே! சனி பகவான் சாதகமான இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். 3-ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் இந்த கர ஆண்டு பிறப்பதால், பணவரவு அதிகரிக்கும். 8.5.11 வரை குரு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வீண் கவலைகள் வரக்கூடும். 9.5.11 முதல் குரு 5-ம் வீட்டில் நுழைவதால்... புது நிலம், வீடு வாங்குவீர்கள். 15.5.11 வரை ராசிக்குள் ராகு நிற்பதால், உடல் நலக் கோளாறு வந்து போகும். கேது 7-ல் நிற்பதால், கணவருடன் ஈகோ பிரச்னை வந்து விலகும். 16.5.11 முதல் 12-ல் ராகு நுழைவதால் ஆரோக்கியம் கூடும். சொத்து, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. 20.12.11 வரை 10-ல் சனிபகவான் நிற்பதால், உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஐப்பசி மாத மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, வெற்றியை தருவதாக அமையும்.

பரிகாரம்: சஷ்டி திதி நடைபெறும் நாளில் ஸ்ரீ முருகப் பெருமான் ஆலயம் சென்று வணங்குங்கள்.

மகரம்: மனவலிமை மிக்கவர்களே! யோகாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். 8.5.11 வரை குரு 3-ல் நிற்பதால், இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆனால் 9.5.11 முதல் குரு 4-ல் நுழைவதால் காரிய தாமதம் ஏற்படக்கூடும். 15.5.11 வரை ராசிக்கு 12-ல் ராகு நிற்பதால், கோபம், அலைச்சல் வரக்கூடும். 16.5.11 முதல் ராகு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால், கௌரவம் பலமடங்கு உயரும். கேது 5-ல் நுழைவதால், பிள்ளைகளால் செலவுகள் வரும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 8-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்து சிக்கல்கள் ஏற்படக்கூடும். தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். 21.12.11 முதல் உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சமடைந்து 10-ம் வீட்டுக்குள் பலமாக நுழைவதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் கிட்டும்.

இந்த கர ஆண்டு சுமைகளை அதிகம் சுமக்க வைத்தாலும், அவ்வப்போது தன் மானத்துடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்.

பரிகாரம்: ஷீரடி சத்ய சாய்பாபாவை வணங்குங்கள்.

கும்பம்: சுயநலமில்லாதவர்களே! உங்கள் ராசிக்குள் யோகாதிபதி சுக்கிரன் நிற்கும்போதும், புதன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்குபோதும் இந்த ஆண்டு பிறப்பதால், பணவரவு திருப்தி தரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு க¬ளைகட்டும். ஆனால், 9.5.11 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால்... வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் ராசியைச் சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். 15.5.11 வரை லாப வீட்டில் ராகு நிற்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 16.5.11 முதல் 10-ல் ராகு நுழைவதால், வேலைச் சுமை சோர்வு தரும். காரிய தாமதம் ஏற்படும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 7-ம் வீட்டிலேயே தொடர்வதால், கணவருக்கு அலைச்சல் ஏற்படக்கூடும். சொத்துப் பிரச்னை வந்து போகும். 21.12.11 முதல் ராசிநாதன் சனிபகவான் 9-ல் நுழைவதால். எதிலும் வெற்றி கிட்டும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில், சித்திரை மாதத்தில் இடமாற்றம் உண்டு.

இந்தப் புத்தாண்டின் முற்பகுதியில் தடுமாற்றங்களை தந்தாலும், இறுதி பகுதி சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள்.

மீனம்: சிந்தனைச் சிற்பிகளே! உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குருபகவான் 8.5.11 வரை ஜென்ம குருவாக இருப்பதால்... உடல் உபாதை, வீண் அலைச்சல் வந்து போகும். 9.5.11 முதல் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டில் குரு நுழைவதால், பணவரவு அதிகரிக்கும். 15.5.11 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால், மனக்குழப்பம் வரக்கூடும். 16.5.11 முதல் 9-ல் ராகு நுழைவதால், எதிர்பாராத பணவரவு உண்டு. 20.12.11 வரை 7-ல் சனி பகவான் நிற்பதால் கணவருடன் வாக்குவாதம் வந்து போகும். 21.12.11 முதல் 8-ல் நுழைந்து அஷ்டமத்துச் சனியாக வருவதால் விமர்சனங்கள் வரும். மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரை செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில், முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு ஓரு பக்கம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், மறுபக்கம் மனநிறைவைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ நடராஜப் பெருமானை திங்கட்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.

விகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரைப் புத்தாண்டுப் பிறப்பும் : பலன்களும்

தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்பையொட்டி புத்தாண்டு தொடர்பான விளக்கங்களும், புத்தாண்டு காரியங்கள் மற்றும் பலாபலன்கள் தொடர்பாக இந்து மத குரு ஒருவரின் நேரடிக் காணொளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கறுப்பி! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கர வருட பலன்கள் ! 2011

ஜோதிட ரத்னா' கே.பி.வித்யதரன்

மேஷம்: தைரியசாலிகளே! உங்களின் தனாதிபதியான சுக்கிரன், லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால்... புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9.5.11 முதல் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்தமர்வதால் கவலை, உடல் உபாதை வரக்கூடும். 16.5.11 முதல், இந்த வருடம் முடியும் வரை ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். 20.12.2011 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால்... புது வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் அமையும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். ஆனால்... வைகாசி, தை மாதங்களில் லாபகரமாக அமையும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்கள் நிம்மதி தரும்.

இந்தப் புத்தாண்டு, உங்கள் பலம், பலவீனத்தை உணர வைப்பதுடன், ஓரளவு நன்மையையும் தரும்.

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை வணங்குங்கள்.

ரிஷபம்: கடின உழைப்பாளிகளே! இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதனான சுக்கிரன், 10-ம் வீட்டில் பலமாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குருபகவான் 8.5.11 வரை 11-ம் வீட்டில் நிற்பதால், பணம் வரும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். ஆனால், 9.5.11-ம் தேதி முதல் 12-ம் வீட்டுக்குள் நுழைவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வருடம் பிறக்கும்போது ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், வருங்காலம் பற்றிய பயம், களைப்பு வந்து செல்லும். 16.5.11 முதல் கேது ராசிக்குள் நுழைவதால்... ஏமாற்றம், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால்... கணவருடன் வாக்குவாதம் வரக்கூடும். ஆனி, ஆவணி மாதங்களில் மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு வேலை அமையும். 21.12.11 முதல் சனி பகவான் 6-ம் வீட்டுக்குள் நுழைவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் வரவு உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை துவள வைத்தாலும், இறுதியில் வெற்றியைத் தரும்.

பரிகாரம்: அம்மன் ஆலயத்துக்கு சென்று குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

மிதுனம்: நடுநிலையாளர்களே! உங்கள் ராசிநாதனான புதன், நீசபங்க ராஜயோகம் அடைந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். புது வீடு, மனை வாங்குவீர்கள். 10-ல் நின்று கொண்டு பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கும் குருபகவான், 9.5.11 முதல் 11-ம் வீட்டுக்குள் நுழைவதால்... எதிர்பாராத பணவரவு உண்டு. 15.5.11 வரை ராசிக்குள் கேது நிற்பதால் கவலை, வீண் விரயம் வந்து செல்லும். வருடம் பிறக்கும்போது ராகு 7-ல் நிற்பதால், கணவருடன் சச்சரவு வந்து விலகும். 16.5.11 முதல் கேது ராசியை விட்டு விலகுவதால், உடல்நலக் கோளாறு நீங்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். 20.12.11 வரை 4-ல் சனி பகவான் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 21.12.11 முதல் 5-ல் சனி நுழைவதால், பிள்ளைகள் கோபப்படுவார்கள். 24.7.11 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால்... வீண் டென்ஷன் ஏற்படலாம். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.

இந்தப் புத்தாண்டு சில சறுக்கல்களை தந்தாலும், குருவின் அனுக்கிரகத்தால் வாழ்க்கைத் தரம் உயரும்.

பரிகாரம்: அருகிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குரு பகவானையும் குலதெய்வத்தையும் வணங்குங்கள்.

கடகம்: கடமை தவறாதவர்களே! உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அனுபவ அறிவாலும், கனிவான பேச்சாலும் காரியம் சாதிப்பீர்கள். குரு 8.5.11 வரை 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். ஆனால், 9.5.11 முதல் குரு 10-ம் வீட்டுக்குள் நுழைவதால்... வீண் விமர்சனம் வரக்கூடும். வருடம் பிறக்கும்போது கேதுபகவான் 12-ம் வீட்டில் நிற்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால், அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 16.5.11 முதல் கேது லாப வீட்டுக்குள் வருவதால் பணம் வரும். 16.5.11 முதல் ராகு 5-ம் வீட்டுக்குள் வருவதால், பிள்ளைகள் சில சமயங்களில் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். 20.12.11 வரை சனி பகவான் 3-ம் வீட்டில் பலமாக இருப்பதால், முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில்... அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்தப் புத்தாண்டு... வெகுளியாக இருந்த உங்களை சில நேரங்களில் சந்தர்ப்பவாதியாக மாற்றும்.

பரிகாரம்: பிரதோஷ தினத்தன்று வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்

சிம்மம்: சிந்தனைவாதிகளே! சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். அதேசமயம், உங்கள் யோகாதிபதிகளான செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... வீண் விரயம், டென்ஷன் வந்து நீங்கும். கேது 11-ம் வீட்டில் நிற்பதால், பழைய பிரச்னைகள் தீரும். 15.5.11 வரை 5-ல் நிற்கும் ராகுவால் பிள்ளைகளுடன் மனவருத்தம் வரும். 9.5.11 முதல் குரு 9-ல் நுழைவதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். 16.5.11 முதல் 4-ல் ராகு நுழைவதால் கடினமாக உழைக்க வேண்டி வரும். சொத்து விஷயத்தில் அவசரம் வேண்டாம். 20.12.11 வரை ஏழரைச்சனி தொடர்வதால், உடல் உபாதை வந்து விலகும். 21.12.11 முதல் 3-ம் வீட்டுக்குள் சனி நுழைவதால், நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் வெளியாகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுப்பீர்கள். உத்யோகத்தில், பதவி உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு மருத்துவச் செலவுகளை தந்தாலும், மகத்தான காரியங்களையும் செய்ய வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

கன்னி: கலகலப்பாக பேசுபவர்களே! உங்கள் ராசிநாதனும், குருபகவானும் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 9.5.11 முதல் குரு 8-ல் மறைவதால், மன இறுக்கம் வந்து நீங்கும். ஆனால், குரு உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால், திடீர் பணவரவு உண்டு. வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால், உறவினர்களுடன் உரசல் வரும். 15.5.11 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால், மருத்துவச் செலவுகள் வந்து போகும். கேது 10-ல் நிற்பதால், காரிய தாமதம் ஏற்படலாம். 16.5.11 முதல் ராகு 3-ல் நுழைவதால், புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். கேது 9-ம் வீட்டில் நுழைவதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். 20.12.11 வரை ஜென்மச் சனி தொடர்வதால் உடல் உபாதை வந்து நீங்கும். 21.12.11 முதல் சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும்.

இந்தப் புத்தாண்டு, செலவுகளில் உங்களை சிக்க வைத்தாலும், அனுபவ அறிவால் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குங்கள்.

துலாம்: நியாயவாதிகளே! உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுவடைந்திருக்கும் போதும், 3-ம் வீட்டில் ராகு நிற்கும்போதும் இந்த கர வருடம் பிறப்பதால், நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். உங்கள் லாப ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 8.5.11 வரை குரு 6-ல் நிற்பதால் வீண் சந்தேகம், செலவுகள் வந்து போகும். ஆனால், குரு பகவான் 9.5.11 முதல் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். 15.5.11 வரை ராகு 3-ல் நிற்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கேது 9-ல் நிற்பதால் தந்தைக்கு உடல் நலக் கோளாறு வந்து போகும். 16.5.11 முதல் ராகு 2-ல் நுழைவதால், கோ£பமான பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். கேது 8-ல் நுழைவதால், திடீர் பயணங்கள் ஏற்படலாம். 20.12.11 வரை 12-ல் விரயச்சனி தொடர்வதால், மறைமுக அவமானம் வந்து போகும். 21.12.11 முதல் ஜென்மச்சனியாக வருவதால், உணவில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் சம்பள உயர்வும், பதவி உயர்வும் உண்டு.

நாலா விதத்திலும் சிரமத்திலிருக்கும் உங்களுக்கு வசதியைத் தருவதாக இந்த ஆண்டு அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

விருச்சிகம்: விகடகவிகளே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான், குருவுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். சுக ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், வீடு கட்டும் பணி முழுமையடையும். 8.5.11 வரை குரு 5-ம் வீட்டில் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனால், 9.5.11 முதல் குரு 6-ம் வீட்டில் நுழைவதால்... சலசலப்பு, பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். கேது 8-ல் நிற்பதால் வீண் அலைச்சல், ஏற்படக்கூடும். 16.5.11 முதல் ராகு ராசிக்குள் வருவதால், உடல் உபாதை வந்து போகும். கேது 7-ல் நுழைவதால், கணவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 20.12.11 வரை லாப வீட்டில் சனிபகவான் தொடர்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. 21.12.11 முதல் ஏழரைச்சனி தொடங்குவதால், மறைமுக எதிர்ப்பு வரக்கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு.

இந்தப் புத்தாண்டு நீங்கள் சுய உழைப்பால் முன்னேற்றுவதற்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள்.

தனுசு: கூடிவாழும் குணமுடையவர்களே! சனி பகவான் சாதகமான இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். 3-ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் இந்த கர ஆண்டு பிறப்பதால், பணவரவு அதிகரிக்கும். 8.5.11 வரை குரு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வீண் கவலைகள் வரக்கூடும். 9.5.11 முதல் குரு 5-ம் வீட்டில் நுழைவதால்... புது நிலம், வீடு வாங்குவீர்கள். 15.5.11 வரை ராசிக்குள் ராகு நிற்பதால், உடல் நலக் கோளாறு வந்து போகும். கேது 7-ல் நிற்பதால், கணவருடன் ஈகோ பிரச்னை வந்து விலகும். 16.5.11 முதல் 12-ல் ராகு நுழைவதால் ஆரோக்கியம் கூடும். சொத்து, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. 20.12.11 வரை 10-ல் சனிபகவான் நிற்பதால், உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஐப்பசி மாத மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, வெற்றியை தருவதாக அமையும்.

பரிகாரம்: சஷ்டி திதி நடைபெறும் நாளில் ஸ்ரீ முருகப் பெருமான் ஆலயம் சென்று வணங்குங்கள்.

மகரம்: மனவலிமை மிக்கவர்களே! யோகாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். 8.5.11 வரை குரு 3-ல் நிற்பதால், இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆனால் 9.5.11 முதல் குரு 4-ல் நுழைவதால் காரிய தாமதம் ஏற்படக்கூடும். 15.5.11 வரை ராசிக்கு 12-ல் ராகு நிற்பதால், கோபம், அலைச்சல் வரக்கூடும். 16.5.11 முதல் ராகு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால், கௌரவம் பலமடங்கு உயரும். கேது 5-ல் நுழைவதால், பிள்ளைகளால் செலவுகள் வரும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 8-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்து சிக்கல்கள் ஏற்படக்கூடும். தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். 21.12.11 முதல் உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சமடைந்து 10-ம் வீட்டுக்குள் பலமாக நுழைவதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் கிட்டும்.

இந்த கர ஆண்டு சுமைகளை அதிகம் சுமக்க வைத்தாலும், அவ்வப்போது தன் மானத்துடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்.

பரிகாரம்: ஷீரடி சத்ய சாய்பாபாவை வணங்குங்கள்.

கும்பம்: சுயநலமில்லாதவர்களே! உங்கள் ராசிக்குள் யோகாதிபதி சுக்கிரன் நிற்கும்போதும், புதன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்குபோதும் இந்த ஆண்டு பிறப்பதால், பணவரவு திருப்தி தரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு க¬ளைகட்டும். ஆனால், 9.5.11 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால்... வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் ராசியைச் சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். 15.5.11 வரை லாப வீட்டில் ராகு நிற்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 16.5.11 முதல் 10-ல் ராகு நுழைவதால், வேலைச் சுமை சோர்வு தரும். காரிய தாமதம் ஏற்படும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 7-ம் வீட்டிலேயே தொடர்வதால், கணவருக்கு அலைச்சல் ஏற்படக்கூடும். சொத்துப் பிரச்னை வந்து போகும். 21.12.11 முதல் ராசிநாதன் சனிபகவான் 9-ல் நுழைவதால். எதிலும் வெற்றி கிட்டும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில், சித்திரை மாதத்தில் இடமாற்றம் உண்டு.

இந்தப் புத்தாண்டின் முற்பகுதியில் தடுமாற்றங்களை தந்தாலும், இறுதி பகுதி சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள்.

மீனம்: சிந்தனைச் சிற்பிகளே! உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குருபகவான் 8.5.11 வரை ஜென்ம குருவாக இருப்பதால்... உடல் உபாதை, வீண் அலைச்சல் வந்து போகும். 9.5.11 முதல் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டில் குரு நுழைவதால், பணவரவு அதிகரிக்கும். 15.5.11 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால், மனக்குழப்பம் வரக்கூடும். 16.5.11 முதல் 9-ல் ராகு நுழைவதால், எதிர்பாராத பணவரவு உண்டு. 20.12.11 வரை 7-ல் சனி பகவான் நிற்பதால் கணவருடன் வாக்குவாதம் வந்து போகும். 21.12.11 முதல் 8-ல் நுழைந்து அஷ்டமத்துச் சனியாக வருவதால் விமர்சனங்கள் வரும். மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரை செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில், முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு ஓரு பக்கம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், மறுபக்கம் மனநிறைவைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ நடராஜப் பெருமானை திங்கட்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.

விகடன்

???????????????????????????????

"Shame, shame, puppy, shame

முதலில் இந்தாளை கடவுள் என்று யார் சொன்னது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

???????????????????????????????

"Shame, shame, puppy, shame

முதலில் இந்தாளை கடவுள் என்று யார் சொன்னது....

கறுப்பி சொன்னது...(சொன்னவ).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி சொன்னது...(சொன்னவ).

நோ நோ நோ

சொன்னவர் :D :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.