Jump to content

சின்னக் குயில் சித்ரா மகள் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

post-5124-0-32305700-1302780555_thumb.gi

பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் ‌விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயதாகிறது.

இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர்.

துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார். சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார்.

இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து சித்ரா கதறி அழுதார்

நன்றி மாலை மலர் .

Link to comment
Share on other sites

அடப்பாவமே. சித்ரா தன குழந்தைக்காக பாடுவதை கூட குறைத்திருந்தார்.

ஆண்டவன் தான் அவருக்கும் அந்த குடும்பத்துக்கும் ஆறுதல் அளிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

சிலவேளைகளில் சில ஏன் களுக்கு விடையில்லை.15 வருடங்களுக்கு பின்பு பிறந்த பிள்ளை, சித்திராவிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது இனிமையான குரல்வளத்தாலும்

பணிவான பழக்கவழக்கத்தாலும் எம்மை கவர்ந்த இந்தக்குயிலுக்கு இத்தனை சோகமா?

ஆண்டவரே

அவருடன் இரும்

Link to comment
Share on other sites

எனக்கு மிக மிக பிடித்த பாடகி சகோதரி சித்திரா அவர்கள். சிரிக்கும் போது தெரியும் அவரின் குழந்தை முகத்தை பார்க்கும் எவருக்கும் அவர் மேல் அன்பு வரும். 15 வருடம் காத்திருந்து கிடைத்த குழந்தையை இழப்பது என்பது எத்தனை துயரமான விடயம்

எல்லாரையும் தன் பாடலால் மகிழ்விக்கும் ஒருவருக்கு ஏற்பட்ட இந்த துயரத்தினை கேட்கும் போது உலக இயக்க நியதி மேலேயே வெறுப்பு வருகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் சொல்வது கடவுளுக்கு கண் இல்லை என்று...சித்ரா அம்மாவின் மகளது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்...அத்தோடு அவருக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளை இழந்த பாடகி சித்திராவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :(

:o:( :( :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்து வருடங்களின் பின் பெற்ற குழந்தை!!!

இழப்பு வார்த்தைகளுக்குள் அடங்காது.

சித்திராவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

Link to comment
Share on other sites

ஏன் என் மனம் மட்டும் இப்படிச் சிந்திக்கிறது? சித்ரா தன் குழந்தையை எண்ணிக் கதறியழுததைச் செய்தியாகப் படிக்கின்ற போது மனதின் ஒரு மூலையில் துயரம் எழத் தான் செய்கிறது. ஆனால் என் மனம் மட்டும் தான் பெற்றெடுத்த கல்வியிற் சிறந்த மகனைப் பறிகொடுத்து விட்டுக் கதறியழும் திருகோணமலை வைத்தியரையும் இந்த இடத்தில் எதற்காக இணைத்துப் பார்க்கிறது.

சித்ரா மலையாளத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக நான் வெறுக்கவில்லை. ஆனால் ஒரு மலையாளியின் அதிகார வெறி (நாராயணன்) எத்தனை தமிழ் குழந்தைகளை அநியாயமாகப் பலியெடுத்திருக்கிறது என்பதை ஏன் என் மனம் இப்போது நினைக்கிறது.

ஒரு இசைக் கலைஞராகவே எமக்கு அறிமுகமான சித்ராவைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. ஆனால் என்மண்ணில் பிறந்து என் மண்ணிற்காகவே வாழ்ந்த பாடகி, நடிகை, ஒலிபரப்பாளர் செய்தியாளர் எனப் பல பரிமாணங்களையும் தொட்ட சகோதரி சிங்களக் காமுகர்களால் சித்திரவதை செய்யப்பட்டபோது கதறியழுதார் என்ற செய்தியை இப்போது என் மனம் ஏன் நினைக்கிறது.

இந்த உலகில் பிறந்து தவறு செய்யாமல் வாழ்கின்ற எவருக்கும் துன்பம் வரக் கூடாது. அவர்கள் எவருமே புத்திர சோகத்தாலோ வேறு எந்தவொரு காரணத்தாலோ கதறி அழக் கூடாது.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் இதையெல்லாம் தடுத்து நிறுத்தியிருக்கக்கூடும். ஆனால் நாங்கள் தான் அந்த அளவிற்கு அதிஸ்டம் செய்திருக்கவில்லையே!

Link to comment
Share on other sites

சித்ரா மலையாளத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக நான் வெறுக்கவில்லை. ஆனால் ஒரு மலையாளியின் அதிகார வெறி (நாராயணன்) எத்தனை தமிழ் குழந்தைகளை அநியாயமாகப் பலியெடுத்திருக்கிறது என்பதை ஏன் என் மனம் இப்போது நினைக்கிறது.

டக்கிலஸ் எனும் யாழ் மண்ணை சேர்ந்தவரால் எத்தனை குழந்தைகள் பலியாடப் பட்டன?

கருணா எனும் மட்டுவை சேர்ந்தவரால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்?

நாராயணன் அதிகார வெறி பிடித்தவர் என்று பார்க்கும் போது, அவர் பிறந்த மண் பற்றி அலசுகின்றோம்

நான் சொன்ன இருவர் மண் பற்றி நினைக்கும் போது யாரை நோவது ?

ஆயிரத்தெட்டு சாதி, பிரேத வாசம் பேசும் எமக்கு மற்றவர் நோக்கி விரல் நீட்ட அருகதை இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரின் கவனக்குறைவு.. பாதுகாப்பற்ற நீச்சல் தடாகம்.. இதுவே இக்குழந்தையின் இழப்பிற்கு காரணம். இதில் கடவுளை.. விதியை குற்றம் சொல்லும் மனிதர்களை எங்கே சேர்ப்பது..??! :o:unsure:

அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டுகிறோம். குடும்பத்தாருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு சில மேட்டுக்குடி நாராயணங்கள் செய்யும் மேட்டுக்குடி அரசியல் விசுவாசச் செயற்பாடுகளுக்காக பலியிடப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு சித்திரா கண்ணீர் விட்டாரோ இல்லையோ.. அவர்களிடம் இல்லாத இயல்பான மனிதாபிமானம் எங்களிடம் உண்டு. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் பெற்றெடுத்த கல்வியிற் சிறந்த மகனைப் பறிகொடுத்து விட்டுக் கதறியழும் திருகோணமலை வைத்தியரையும் இந்த இடத்தில் எதற்காக இணைத்துப் பார்க்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள்...

டாக்குத்தர் பிரபலம் இல்லையே அதுதான் ஆக்கும் நாங்கள் அவரை கண்டு கொள்ளவில்ல போலும்

டயானா இறந்தவுடன் கண்ணீர் வடித்த மேட்டுக்குடி.,நடுத்தரவர்க்க தமிழர்கள் கனபேரை எனக்கு தெரியும்

Link to comment
Share on other sites

பெற்றோரின் கவனக்குறைவு.. பாதுகாப்பற்ற நீச்சல் தடாகம்.. இதுவே இக்குழந்தையின் இழப்பிற்கு காரணம். இதில் கடவுளை.. விதியை குற்றம் சொல்லும் மனிதர்களை எங்கே சேர்ப்பது..??! :o:unsure:

அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டுகிறோம். குடும்பத்தாருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு சில மேட்டுக்குடி நாராயணங்கள் செய்யும் மேட்டுக்குடி அரசியல் விசுவாசச் செயற்பாடுகளுக்காக பலியிடப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு சித்திரா கண்ணீர் விட்டாரோ இல்லையோ.. அவர்களிடம் இல்லாத இயல்பான மனிதாபிமானம் எங்களிடம் உண்டு. :(

எப்படி மேம்போக்காக சொல்கிறீர்கள். சித்ரா ஈழத்துக்கும் பாடித்தந்துள்ளார்.

மேலும் சித்ரா தன குரலால் எத்தனையோ பேர்களது கவலை, துயரை மறக்க உதவி செய்திருப்பார். அது போக பெற்ற பிள்ளையை இழப்பது எவ்வளவு சோகமானது. அவர் எங்களுக்கு ஒரு கொடுமையும் செய்யவில்லையே. அவரது துயரில் இரங்குவது மனிதாபமானமேயன்றி வேறொன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. அவரது துயரில் இரங்குவது மனிதாபமானமேயன்றி வேறொன்றும் இல்லை.

நாங்கள் துலைத்தது அவ்வளவு அதிகமையா

என்ன நெய்வது எந்த சாவீட்டுக்கு போனாலும் நாம் துலைத்தவைதானே முதலில் நெஞ்சுக்குள் வருகின்றன.

Link to comment
Share on other sites

நாங்கள் துலைத்தது அவ்வளவு அதிகமையா

என்ன நெய்வது எந்த சாவீட்டுக்கு போனாலும் நாம் துலைத்தவைதானே முதலில் நெஞ்சுக்குள் வருகின்றன.

உண்மை தான். இதில் மாற்றுக்கருத்தில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்கள் காத்திருந்து பிறந்த குழந்தை எட்டு வயதில் பறிபோவது மிகவும் கொடுமையான நிலை. சித்திரா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

நினைத்துப் பார்க்க முடியாத இழப்பு பெற்றோருக்கு.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

பிள்ளைச் செல்வத்தை இழந்து தவிப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காலம் அவர்களின் துயரை நீக்கட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
    • நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
    • 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.