Jump to content

காலிரண்டையும் இழந்த பெண்போராளியின் சொந்தக்கதை


Recommended Posts

naval.png

காலிரண்டையும் இழந்த பெண்போராளியின் சொந்தக்கதை.

“காதல் களம் கணவன் கடைசிக்கனவு“ இதுவொரு குறுநாவலுக்கான தலைப்பு. இக்கதையானது ஒரு முன்னாள் பெண் போராளியின் வாழ்வு. அவள் போராளியானது முதல் 2009மே 17சரணடையும் வரை வாழ்வில் அனுபவித்த துயரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். தனது வாழ்வைப் பதிவுசெய்யும் உரிமையைத் தந்து தனது வாழ்வை என்னூடாகப் பதிய வைத்துள்ளாள்.

2006 செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த விமானக்குண்டு வீச்சில் காயமடைந்து இரு கால்களையும் இழந்து போய் முகத்திலும் காயங்களோடு வாழும் அன்பினியை அவளது குடும்பமே விலக்கி வைத்திருக்கிறது. அன்பினி தனித்து வாழ்கிறாள். அவளுக்கான நம்பிக்கை நிறைந்த வாழ்வை ஒளியேற்றி வைப்பதாகப் பலர் அவளது வாழ்வில் புகுந்தனர். ஒருவன் காதலனாக இன்னொருவன் கட்டாயக்கணவனாக இன்னும் சிலர் அவளது ஊனத்தைக் காரணம் காட்டி இரகசிய மனைவியாக்கவும் இம்சித்தார்கள்.

இத்தகைய எல்லா வகையான சுமைகளையும் தாங்கிக் கொண்டு செயற்கைக்காலின் நம்பிக்கையோடு ஆறாத மனக்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 25வயது நிரம்பிய இவளின் வாழ்வு போல் ஊரில் பல்லாயிரம் பெண் போராளிகளின் சாதாரண பெண்களின் வாழ்வு சிதைந்து கொண்டிருக்கிறது. தனது கதையினூடாகப் பலரது வாழ்வைப் புரிவிக்க முயன்றுள்ளாள்.

இக்கதையின் கதைசொல்லியாகவே நான் இருக்கிறேன். ஆனால் கதையோடு உலவும் அன்பினியின் வாழ்வு அவளது சொந்த வாழ்வு. அவளது காதல் முதல் களம் , கணவன் கடைசிக் கனவு வரையிலும் அவளது வாழ்வும் துயரமும் நிரம்பி வழிகிறது.

2009மே17 சரணடைந்தவள் 2011மே17இல் தனது வாழ்வை மையப்படுத்திய இக்கதையை வெளியில் கொண்டு வருமாறு வேண்டியிருக்கிறாள். அவளது ஆசைப்படி 2011மே17அன்று அன்பினியென்ற பெயரில் உலவும் இக்கதைக்குரியவளின் அனுபவங்களை வெளியிடவிருக்கிறேன். ஆனால் கடதாசியில் அச்சிட்டு நூல்வடிவமில்லாமல் இணைய நூலாக உங்கள் முன் கொண்டு வருகிறேன்.

நாங்கள் வெளியில் இருந்து இலக்கியம் படைத்த போராட்டம் களம் களமாடிய மனிதர்களின் குணங்கள் அட இப்படியுமா என வெறுப்புத் தருகின்றனவான பல சம்பவங்கள் அன்பினியோடு பிணைந்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து நாங்கள் இன்னும் கனவுகாணும் உலகத்தை முற்றாக வெறுக்கிறவளாக அன்பினியும் அன்பினி போன்ற ஆயிரமாயிரம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிற உண்மையை இவளோடும் இவள் போன்றவர்களோடும் பேசுகிற அவர்கள் பகிர்கிற விடயங்களிலிருந்து புரிய முடிகிறது.

தனது கதைக்குத் தானே முன்னுரையும் தந்து தனது கதையை உலகத்தமிழர்களிடம் சேர்ப்பிக்கும் உரிமையைத் தந்திருக்கும் இவள் மீது கனவுகளில் வாழும் மனிதர்களே கல்லெறியாதீர்கள். அவளது மனதில் ஆறாது எரியும் காயங்களுக்கு உதவ முடிந்தால் உங்கள் நேசக்கரத்தை நீட்டுங்கள்.

2011மே17 வரை காத்திருங்கள்…….

Link to comment
Share on other sites

தொடருங்கள் ..

வெளிநாடுகளிலிருந்து நாங்கள் இன்னும் கனவுகாணும் உலகத்தை முற்றாக வெறுக்கிறவளாக

அது சரி நாங்கள் காணும் கனவு என்ன?எங்கள் மீது நீங்கள்(அன்பினி அல்ல) வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

Link to comment
Share on other sites

தொடருங்கள் ..

அது சரி நாங்கள் காணும் கனவு என்ன?எங்கள் மீது நீங்கள்(அன்பினி அல்ல) வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

Jil நான் எந்தக் குற்றச்சாட்டையும் உங்கள் மீது வைக்கவில்லை. இன்னும் ஒரு மாதம் பொறுத்திருங்கள் அன்பினியின் கதையில் அவள் என்னத்தைச் சொல்லியிருக்கிறாள் என்பதன் பின்னர் குற்றங்களைக் கண்டுபிடிக்கலாம். :lol:

இக்கதையின் கதைசொல்லியாகவே நான் இருக்கிறேன். :blink: ஆனால் கதையோடு உலவும் அன்பினியின் வாழ்வு அவளது சொந்த வாழ்வு. அவளது காதல் முதல் களம் , கணவன் கடைசிக் கனவு வரையிலும் அவளது வாழ்வும் துயரமும் நிரம்பி வழிகிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய எல்லா வகையான சுமைகளையும் தாங்கிக் கொண்டு செயற்கைக்காலின் நம்பிக்கையோடு ஆறாத மனக்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 25வயது நிரம்பிய இவளின் வாழ்வு போல் ஊரில் பல்லாயிரம் பெண் போராளிகளின் சாதாரண பெண்களின் வாழ்வு சிதைந்து கொண்டிருக்கிறது. தனது கதையினூடாகப் பலரது வாழ்வைப் புரிவிக்க முயன்றுள்ளாள்.

முல்லைமண்! இதனால் அன்பினி அடையப் போவது என்ன? சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களை ஏன் மீண்டும் கிளருகின்றாள்? அனுதாபம் தேடவா? அல்லது இந்தச் செயலைச் செய்தவர்களைப் பழிவாங்கவா?

நதிமூலமும் ரிஷிமூலமும் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.ஏனெனில் அதைப் பார்த்தால் நதியையும் ரிஷியையும் மதிக்க மாட்டீர்கள்.யாரோ தறிகெட்ட சில பேர் அவளின் இயலாமையைப் துஷ்பிரயோகம் செய்ததற்காக முழு இனத்தையும் நோக்கி உங்கள் சுட்டி விரலை நீட்டும் காரியங்களைச் செய்யாதீர்கள்.எங்கள் வீட்டுக் குப்பைகளை வீதிக்குக் கொண்டு வருவது,எங்களை மேலும் பலவீனப் படுத்தும்.

Link to comment
Share on other sites

முல்லைமண்! இதனால் அன்பினி அடையப் போவது என்ன? சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களை ஏன் மீண்டும் கிளருகின்றாள்? அனுதாபம் தேடவா? அல்லது இந்தச் செயலைச் செய்தவர்களைப் பழிவாங்கவா?

நதிமூலமும் ரிஷிமூலமும் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.ஏனெனில் அதைப் பார்த்தால் நதியையும் ரிஷியையும் மதிக்க மாட்டீர்கள்.யாரோ தறிகெட்ட சில பேர் அவளின் இயலாமையைப் துஷ்பிரயோகம் செய்ததற்காக முழு இனத்தையும் நோக்கி உங்கள் சுட்டி விரலை நீட்டும் காரியங்களைச் செய்யாதீர்கள்.எங்கள் வீட்டுக் குப்பைகளை வீதிக்குக் கொண்டு வருவது,எங்களை மேலும் பலவீனப் படுத்தும்.

ஷாந்தியோ அன்பினியோ எல்லாரையும் குற்றம் சாட்டுவதாக தெரியவில்லை.

எங்கள் குப்பைகளை வெளியே கொண்டுவந்தால் மேலும் பல அன்பினிகள் தொல்லைப்படாமல் இருக்கமுடியும்.

Link to comment
Share on other sites

புங்கையுhரான் உங்கள் கருத்தோடு ஒத்துப் போக என் மனச்சாட்சி இடம் தர மறுக்கிறது...........

காரணம் நாங்கள் எத்தனையோ பேசப்பட வேண்டிய கலந்துரையாட வேண்டிய நிகழ்வுகளை

எல்லோர் முன்னிலையிலும் சமர்ப்பிக்காமல் ஒரு குறிப்பிட்ட நபர்களை உள்ளடக்கிய

வட்டத்திற்குள் சுற்ற விட்டதால் தான் இன்று இந்த துயர நிலை.................

அதனால் தயவு செய்து பேச விடுங்கள்

அந்த பெண் போராளியின் உடன் பிறப்புக்களும் அவள் யாருக்காக

ஆயுதம் ஏந்தினாளோ அந்த நன்றி கெட்ட இனமும் அவளையும் அவளைப்

போன்ற அத்தனை போராளிகளையும் ஒதுக்கி வைத்து வசை பாடும்

போது...................அவள் தன் சொந்த துயரை பகிர்ந்து கொள்வதில்

எங்கே தப்பு தெரிகிறது....................

ஒருவன் வெற்றியாளனாக இருக்கும் போது மட்டும்

அவனை புகழாதீர்கள்.............அவன் முடமான போதும்

அவனை புகழுங்கள்...............

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள். எழுதுங்கள் சாந்தி.

இன விடுதலைக்காக போராடி வாழ்க்கையை இழந்து நிற்பவர்களை யூத இனத்திற்கு ஒத்த இனம் எப்படி சீரும் சிறப்புமாக பராமரிக்கிறோம் என்பதை காண ஆவலாயுள்ளேன்.

இக்கதைக்கு எழப்போகும் எதிர்ப்புகளுக்காக, அட்வான்சாக இப்பொழுதே எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். :D

Link to comment
Share on other sites

கட்டாயம் எழுதுங்கள்.நல்லதோ கெட்டதோ நடந்தவை,நடப்பவை வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.

எங்கடை சூத்தைகளை மட்டும் மெல்ல அமத்திவிட நினைக்கும் மனப்பாங்கில் இருந்து முதலில் தமிழன் வெளிவரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரண வீட்டில் அழுதாத்தான் மனம் சாந்தியடையும்.

மனதில் உள்ளதை வெளிக் கொண்டு வந்தால் மனம் ஆறுதலடையலாம்.

Link to comment
Share on other sites

முல்லைமண்! இதனால் அன்பினி அடையப் போவது என்ன? சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களை ஏன் மீண்டும் கிளருகின்றாள்? அனுதாபம் தேடவா? அல்லது இந்தச் செயலைச் செய்தவர்களைப் பழிவாங்கவா?

புங்கையூரான்,

அன்பினி எதையும் அடையப்போவதில்லை. அவளை ஏற்கனவே நமது மானம் மிக்க சமூகம் கொன்றுவிட்டது. ஆனால் அன்பினி போன்ற ஆயிரமாயிரம் பேரின் இன்றைய இதுவரையான வாழ்வைச் மீண்டும் எங்கள் ஞாபகம் கூடிய புத்தியில் ஞாபகமாய் வைக்கும் முயற்சியே இது.

அனுதாபம்..... :blink: உங்கள் எனது அனுதாபம் அன்பினிக்காக அவள் போன்ற ஆயிரம் பேருக்கு என்ன நன்மையைக் கொடுக்கும் ?

இங்கு அன்பினியோ நானோ யாரையும் பழிவாங்கவும் முயலவில்லை பலியெடுக்கவும் முயலவில்லை. ஆயிரமாயிரம் பேரின் வாழ்வை அனைவரும் அறிய வேண்டுமென்பதனை விரும்புகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையுhரான் உங்கள் கருத்தோடு ஒத்துப் போக என் மனச்சாட்சி இடம் தர மறுக்கிறது...........

காரணம் நாங்கள் எத்தனையோ பேசப்பட வேண்டிய கலந்துரையாட வேண்டிய நிகழ்வுகளை

எல்லோர் முன்னிலையிலும் சமர்ப்பிக்காமல் ஒரு குறிப்பிட்ட நபர்களை உள்ளடக்கிய

வட்டத்திற்குள் சுற்ற விட்டதால் தான் இன்று இந்த துயர நிலை.................

அதனால் தயவு செய்து பேச விடுங்கள்

அந்த பெண் போராளியின் உடன் பிறப்புக்களும் அவள் யாருக்காக

ஆயுதம் ஏந்தினாளோ அந்த நன்றி கெட்ட இனமும் அவளையும் அவளைப்

போன்ற அத்தனை போராளிகளையும் ஒதுக்கி வைத்து வசை பாடும்

போது...................அவள் தன் சொந்த துயரை பகிர்ந்து கொள்வதில்

எங்கே தப்பு தெரிகிறது....................

ஒருவன் வெற்றியாளனாக இருக்கும் போது மட்டும்

அவனை புகழாதீர்கள்.............அவன் முடமான போதும்

அவனை புகழுங்கள்...............

தப்பு எங்கும் இல்லை தமிழ்மாறன்! ஏற்கனவே சொந்தக் குடும்பத்தால் கூட தூர வைக்கப்பட்டிருக்கும் அவள்,இந்தக் கருத்துக்கள் பகிரப் படும்போது மேலும் அன்னியப் படுத்தப்படுவாள்.அவள் துணிவு என்னை வியக்க வைக்கின்றது.அவள் முடமாகிப் போனதை, அவள் அடைந்த விழுப்ப்புண் ஆகவே நான் பார்க்கின்றேன். அவளே தன் கதையை வெளியிட அனுமதிக்கும் போது, எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்,

அன்பினி எதையும் அடையப்போவதில்லை. அவளை ஏற்கனவே நமது மானம் மிக்க சமூகம் கொன்றுவிட்டது. ஆனால் அன்பினி போன்ற ஆயிரமாயிரம் பேரின் இன்றைய இதுவரையான வாழ்வைச் மீண்டும் எங்கள் ஞாபகம் கூடிய புத்தியில் ஞாபகமாய் வைக்கும் முயற்சியே இது.

அனுதாபம்..... :blink: உங்கள் எனது அனுதாபம் அன்பினிக்காக அவள் போன்ற ஆயிரம் பேருக்கு என்ன நன்மையைக் கொடுக்கும் ?

இங்கு அன்பினியோ நானோ யாரையும் பழிவாங்கவும் முயலவில்லை பலியெடுக்கவும் முயலவில்லை. ஆயிரமாயிரம் பேரின் வாழ்வை அனைவரும் அறிய வேண்டுமென்பதனை விரும்புகிறோம்.

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இல்லை.ஒரு தந்தை தன் மகளில் கொண்ட கரிசனத்தால் தான் மேற்கண்ட கருத்தை எழுதினேன்.எங்கள் சமூகம்,நாங்கள் நினைப்பது போல், சில விடயங்களை பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைக்கு இன்னும் வளரவில்லை என்பதே ஆனது கருத்து!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இல்லை.ஒரு தந்தை தன் மகளில் கொண்ட கரிசனத்தால் தான் மேற்கண்ட கருத்தை எழுதினேன்.எங்கள் சமூகம்,நாங்கள் நினைப்பது போல், சில விடயங்களை பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைக்கு இன்னும் வளரவில்லை என்பதே ஆனது கருத்து!!!

வளர மறுக்கிறார்கிறார்கள் அது தான் உண்மை..நாளுக்கு நாள் எத்தனையோ விதமான கண்டு பிடிப்புக்கள் அது,இது என்று வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..ஆனால் எங்கள் சமுதாயம் மட்டும் ???ம்ம்ம்.......கூம். :(:(

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி, உங்கள் குறுநாவலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். பெருந்தோல்வியின் இருளுக்குள் புண்பட்டுக் கிடக்கிற ஒரு இனம் மீண்டும் நிமிர அவசியமான ஒளியைச் சேர்க்கும் பணியில் கலை இலக்கியங்களுக்கு முக்கியமான பங்குண்டு. எங்கள் இனம் மீண்டும் அரசியல் புதை மணலுக்குள் வழி தவறி விடக்கூடாது. நானும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன். உங்கள் குறு நாவலைத் தொடர்ந்து என் படப்புகளும் வரும்..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கருத்திட்ட Jil , புங்கையூரான் , கந்தப்பு , Eas ,தமிழ்மாறன் , தப்பிலி ,ரதி ,arjun, ஈழப்பிரியன் , யாயினி , poet அனைவருக்கும் நன்றிகள். இன்னும் 3நாட்களில் கதையினை நீங்கள் இக்களம் ஊடாக படிக்கலாம்.

ஒருவன் வெற்றியாளனாக இருக்கும் போது மட்டும்

அவனை புகழாதீர்கள்.............அவன் முடமான போதும்

அவனை புகழுங்கள்...............

சத்தியமான வரிகள் தமிழ்மாறன்.

இக்கதைக்கு எழப்போகும் எதிர்ப்புகளுக்காக, அட்வான்சாக இப்பொழுதே எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். :D

முற்கூட்டிய அனுதாபத்துக்கு நன்றிகள். :lol:

நிச்சயமாக இக்கதைக்கு எழப்போகும் விமர்சனங்கள் சொல்லடிகள் கல்லடிகள் அதிகமாகத்தானிருக்கும். ஆயினும் பேசப்பட வேண்டிய விடயங்களைப் பேசியாகவே வேண்டும். :blink:

எங்கள் இனம் மீண்டும் அரசியல் புதை மணலுக்குள் வழி தவறி விடக்கூடாது. நானும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன். உங்கள் குறு நாவலைத் தொடர்ந்து என் படப்புகளும் வரும்..

உங்கள் படைப்பினையும் கொண்டு வாருங்கள். படிக்கக்காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இல்லை.ஒரு தந்தை தன் மகளில் கொண்ட கரிசனத்தால் தான் மேற்கண்ட கருத்தை எழுதினேன்.எங்கள் சமூகம்,நாங்கள் நினைப்பது போல், சில விடயங்களை பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைக்கு இன்னும் வளரவில்லை என்பதே ஆனது கருத்து!!!

புங்கையூரான் இதை நீங்கள் எழுதிகாட்டியே சிலருக்கு புரியவைக்க வேண்டிய நிலை.................... இன்னும் அவர்கள் புரிந்தார்களா என்பதுதான் விடையற்ற வினா. சிலருக்கு புரிந்தாலும் புரியாது............. சிலருக்கு புரிந்ததும் புரியாது.

இவர்களுக்கு நடைமுறை சாத்தியங்களை பற்றி நாங்கள் எழுதினால்.............. எதார்த்தங்களை பற்றி அவர்கள் எழுதுவார். எதார்த்தங்களை நாங்கள் எழுதினால்............... நடைமுறை சாத்தியம் பற்றி இவர்கள் எழுதுவார் தவிர அந்த பெண்ணின் மீது உரிய அக்கறையிருப்பின் உங்களுடைய கேள்வியான "இதனால் அந்த பெண்ணுக்கு என்ன நன்மை?" என்ற வினாவிற்கு சிறு விளக்கத்தைகொடுக்க முயற்சித்திருப்பார்கள் அதை இதுவரையில் செய்யவில்லை.................... ஆனால் அந்த பெண்ணினுடைய நிலையை லைற்றடிச்சு ஊருக்குகாட்டினால் சில பெண்கள் பாதுகாக்கபடுவார்களாம்...............? எப்படி என்பது புரியாத புதிர்.

நீங்கள் எல்லோரும் கேள்விபட்ட விடயம்................. இன்னொரு பெண்ணின் கதை பாகிஸ்தானில் ஒரு கிராமம் அங்கே ஒருவன் ஒருத்தியுடன் உறவை வைக்கிறான் அந்த கிராம மரபின்படி அது தவறானது............. அகவே விடயம் பஞ்சாயத்திற்கு வருகிறது பஞ்சாய தலைவர் தீர்ப்பை வழங்குகிறார்................. அவனுக்கு ஒரு தங்கை பதினொருவயதில் இருக்கிறாள் அவளை பத்துபேர் சேர்ந்து வல்லுறவு கொள்வது. இந்த செய்தி அவளுடைய தயாரின் அர்பணிப்பால் வெளியூரை அடைகிறது பின்பு நாம் எல்லோரும் அறிந்ததுதான்................ சின்ன் பிபிசி உட்பட அனைத்து உலகதொலைகாட்சி செய்திகளிலும் செய்தி வருகிறது மனித உரிமை சங்கங்கள் மாதர் சங்கங்கள் எல்லாம் குடைபிடிக்க................ வழக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் செல்கிறது. தீர்ப்பு பத்தில் 7 பேர் ஆயுள்தண்டனை பெற்று சிறை செல்கிறார்கள். இப்போது 6 வருடங்கள் ஒடிவிட்டது அவளது தாயர் கொலைசெய்யபட்டுவிட்டார். சிறை சென்றவர்கள் மனுதாக்கல் செய்கிறார்கள் மனு திரும்பமும் நீதிமன்னறம் வந்து அவர்கள் விடுதலை பெற்று அந்த கிராமம் செல்கிறார்கள்..................... இப்போது அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஒட இடம் ஏதும் இல்லை........... இந்த செய்தி கூட ஏதாவது சிறு பத்திரிகையில் படித்தால்தான் உண்டு. உண்மை நிலை பாகிஸ்தானில் இதுவென்றால் இலங்கையில் என்ன நிலை என்பதை இங்கே யாருக்கு நானோ நீங்களோ எழுதவேண்டும்??????

அவன் அவன் பிழைப்பிற்கு ஒவ்வொரு மூலாம் பூசுகிறார்கள் கேள்வி கேட்டால் எனது கருத்தும் உங்கள் கருத்தும் உடனடியாக துக்க படுகிறது. அவர்கள் மக்கள் நலன் காக்கிறார்களாம் நாங்கள் கேள்வி கேட்டு அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணடிக்கிறோம் என்று சில மட்டுறுத்தினர்கள் நினைக்கிறார்கள். கடந்த 60வருடமாக தமிழனை கொன்றுகுவித்த சிங்களவனும் அதன் உச்ச கட்டமாக முள்ளிவாய்காலில் கூட்டமாக நாலுபக்கமும் செல்லடித்து விரட்டி சிறு நிலப்பரப்பிற்குள் தள்ளி அங்கே வைத்து ஒட்டுமொத்தமாக குண்டுபோட்டு அழித்து எஞ்சியவர்களை பிடித்துசென்று முள்வேலிக்குள் அடைத்து வைத்துகொண்டு.............................. தமிழர்களின் விடிவுக்காக தான் போராடுவதாகவே சொல்கிறாhன். அதைதான் இன்றுவரை திரும்ப திரும்ப சொல்கிறான். புலிவாந்தி எடுப்பவனும் இதைதான் சொல்கிறான் அல்லது இதை சொன்னால்தான் அவனுக்கு ஊதியம். மக்கள் நலன் காக்க போகிறார்களாம்............. அதுக்கு புலிகள் விட்ட தவறுகளை திரும்ப திரும்ப எழுதவேண்டுமாம்.

சரி புலிகள் போராடிய முறை தவறானது............... இப்போ புலியும் இல்லை எலியும் இல்லை போய் சரியான முறையில் போராட வேண்டியதுதானே?? அதுக்கு தட்டச்சு மட்டும் தெரிந்து பலனில்லை தலையிலே ஒரு மசிரெனிலும் வேண்டும். அது முக்கியமில்லை புலிகள் விட்ட தவறுகளை பரப்பிகொண்டிருக்க வேண்டும்........... அப்போதுதானாம் அனுபவம் வரும். அப்படியென்றால் ஏன் புலிகள் விட்ட தவறு என்று குறுகிய காலத்திற்குள் இவர்களது பாரிய பரந்த அறிவை சிறுமை படுத்துகிறார்கள் என்பதுதான் எனக்கு இன்றுவரை புரியாதது. பண்டாரவன்னியன்.................. எல்லாளன் சோளமன்னன் என்று இவர்களது அறிவுக்கு எட்டிய தூரம் வரை செல்லலாமே? புலிகள் போராடிய காலமும் உலகமும் இனி ஒருபோதும் வரபோவதில்லை அதுவே தெளிந்த உண்மை அப்போதைய உலகிற்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப சோழன் போராடினான்................... பின்பு புலிகள் போராடினார்கள் என்பதே உண்மை. அந்த அனுபவம் என்பது இனி யாருக்கும் தேவையற்றதே.................. தற்போதைய உலகும் போரின் வடிவமும் புலிகளின் காலம்போலும் போரின் வடிவம் போலும் ஒருபோதும் அமையாது என்பது திண்ணமான பின்பு............... ஏன் புலிவாந்தி எடுக்க வேண்டும்???

எடுக்க வேண்டாம் என்று நான் செல்லவில்லை............. எடுங்கள் அது உங்கள் ஊதியத்தோடு சம்மந்தபட்டது. எங்களுக்கு வாழ கிடைக்கவில்லை எமை காட்டிகொடுத்த நீங்களாவது பிழைச்சு போங்கள். ஆனால் இந்த மக்கள் நலன்காப்பு வேதாந்தம்தான் எமக்கு விளங்கவில்லை. இதைதான் நான் திரும்ப திரும்ப விளங்கடுத்த நினைக்கிறேன்.

இலங்கையின் இன்றைய நிலையில் ஒரு பெண்ணை இராணுவம் பிடித்துசென்று வல்லுறவு கொண்டு வீதியில் வீசினால் யாரால் என்ன செய்ய முடியும்???? இது இதுவரையில் நடக்கவே இல்லையா??? உயிராபத்து என்று இலங்கையை விட்டு ஒடிகொண்டிருக்கும் சிங்களவர்களின் எண்ணிக்கையே சில ஆயிரமாக இருக்கிறது................. இதில் இந்த கட்டுரை எந்த விதத்தில் அந்த பெண்ணுக்கு உதவும் என்பது எனக்கு புரியவில்லை. அவளுடைய வேதனைகளை மூடிமறைக்க வேண்டியதில்லை................ ஆனால் இதனால் அவளுக்கு நன்மை என்பது மட்டும் அப்பட்மான பொய். இந்த பெண்ணின் விடயத்தில் தாம் ஏதோ தவறு செய்துவிட்டதாக உணர்ந்து இராணுவமும் சமூக விசமிகளும் மற்றைய பெண்களை தமது ஆசைக்ககு அடிபணியாவிட்டால் அடித்து கொல்லவே திட்டம் தீட்டுவார்கள்................... மற்றைய பெண்களுக்கு இதனால் இலாபம் என்பது அபத்தம்.

சமூகத்தை சீராக கட்டியெழுப்ப வேண்டுமே தவிர................... சிந்தும் சீழ்களை அள்ளி சிதறடிப்பதால் சமூகம் சீர்படும் என்பது ஏதாவது தத்துவாந்த ரீதியாக சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால் தற்போதைய இலங்கையில் ஒரு துளி சாத்தியமுமில்லை!

Link to comment
Share on other sites

இங்கு சிலருக்கு தங்களைத்தவிர புலிகள் பற்றி எவ்வித அக்கறையோ அழிவுகள் பற்றிய சிந்தனையோ இல்லாத மாதிரியும் தாங்கள் தான் ஏகபோக பிரதிநிதிகள் போலவும் வாந்தியெடுப்பதே சுகமான தொழில். அதுகூட அவரவர் விருப்பம். இன்னொரு விடயம் இதுவொரு கருத்துக்களம் இதில் எல்லாருக்கும் கருத்தெழுதும் உரிமை உண்டென்பதைக்கூட மறந்து தங்கள் கீழ்த்தரமான வாந்திகளால் பாகிஸ்தான் பங்களாதேஸ் பெண் மண்ணென்று தங்கள் அகில உலக புலமையை வெளிக்கொண்டு வந்து சம்பந்தமில்லாத விடயத்தோடு சேர்த்து முடிச்சிடுகிறார்கள்.

ஆனால் " காதல் களம் கணவன் கடைசிக்கனவு" குறுநாவலானது யாருடனும் உடல் உறவு வைத்தது பற்றியோ அல்லது பாலியல்வல்லுறவு பற்றியே பேசவில்லை. ஒரு பெண் போராளியின் வாழ்வை பதிவு செய்திருக்கிறது. மற்றும் யூதர்களுக்கு நிகராக தமிழினத்தை உச்சத்தில் ஏற்றி வைத்து கனவு காண்பதைத்தவிர முன்னாள் போராளிகள் வாழ்வை எப்ப பலியெடுக்கிறது என்பது பற்றியே எழுதப்பட்டுள்ளது.

ஆயினும் இன்னும் கதையையே படிக்கவில்லை ஆனால் தங்கள் மேதாத்தனத்தை துப்புவதால் தமது புனிதம் காக்கப்படுவதாக எண்ணும் அதி புத்திசாலிக்கு சொல்வதற்கு எதுவுமில்லை.

பிற்குறிப்பு :- இக்கருத்தை உரியவர் மட்டும் புரிந்து கொள்வார். மற்றைய நண்பர்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பைப்பார்க்கும்போதே தெரிகிறது. பாதை மாறியதன் பயன் இது. எம் எல்லோருக்கும் இதில் பங்குண்டு. இனி இலட்சியமாவது கனவாவது........ கடைசி வரியை மட்டும் நீக்கிவிடுங்கள். எழுதுவதற்கு முன் ஏன் இத்தனை பீடிகை? உள் நோக்கம் நல்லது என்ற தெளிவிருந்தால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும்

புங்கையூரானின் கருத்தை மேற்கோள் காட்டி எனது நிலைபாட்டை மீண்டும் தெரிவிக்கிறேன்....................

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகருமென்கிறார்கள். அடித்துபார்கலாம் என்பதால். பாகிஸ்தானுக்கு பயணிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை நடைமுறைகளை சாடுபவர்க்கே உண்டு. இந்த கதையை ஊருக்கு லைற்றடித்து காட்டுவதால் அந்த பெண்ணுக்கு என்ன நன்மை என்பதை கொஞ்சம் விளங்கபடுத்தலாமே................?? அது விளங்கவில்லை என்பதுதானே எமது நிலைபாடே தவிர உங்களில் குறைகாண்பதல்ல.

பசியோடு இருப்பவனுக்கு மீனை பிடித்துகொடுப்பதிலும்விட அவனுக்கு அந்த மீனை பிடிக்க கற்றுகொடுக்கலாம் என்றுதான் நான் சொல்கிறேன். இதற்கு ஏன் புலிகளுக்கு ஏகபிரதிநிதியாக நான் மாறவேண்டும்?? புலிகள் தமிழர்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருதமிழனுக்கும் புலிக்கும் உறவுண்டு என்பதை நாம் எழுதினாலும் குற்றம் காண்கிறார்கள்............... புலி வேறு மக்கள் வேறு என்கிறார்கள். ஆக புலி இனிஇல்லை எம்மை ஏகபிரதிநியாக்கிவிட்டால் எமை நையபுடைவதில் கொஞ்ச காலம் கழிக்கலாம் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை.

அங்குள்ள சமூக கட்டமைப்பை நாம் சீரக கட்டவேண்டும்..................... காலில்லதவன் பிடித்து நடக்க நாம் ஓண்டுதடிகளை கொடுக்கலாம். ஆனால் அதை அடுத்தவன் புடுங்கும் நிலமைகளை முதலில் இல்லாது செய்ய வேண்டும். ஒரு உதவியை உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமே தவிர.

சும்மா மக்கள் பா பாடி ஆவதற்கு ஒன்றுமில்லை. திரும்பி திரும்பி பூஜ்ஜியத்திலேயே நிற்போம்.

உதவி என்று நாம் செய்வது அடுத்தவனுக்கு உபத்திரபமாக ஆகிவிட கூடாது............. ஆகவேதான் நாம் செய்வது என்ன பயனை கொடுக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்து செய்வோம் என்றே சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

புங்கையூரான் மற்றையவர்களது கருத்தை உள்வாங்கியுள்ளார். இங்கு ஒருவர் தனது முயலுக்கு 3கால் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அடம்பிடித்து நிற்பதற்கு பதில் எழுதுவதில் பயனில்லை. ஆக பதிலும் தேவையில்லை.

கேள்வியும் நானே பதிலும் நானேயான இப்படியே இருந்துவிடுங்கள் அறிஞர் பெருமகரே.......

ஒன்றைப்புரிய முடிகிறது இத்தகைய விசிலடிச்சான்களால் தான் தமிழன் இப்படித் தெருவில் இன்று நிற்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைப்புரிய முடிகிறது இத்தகைய விசிலடிச்சான்களால் தான் தமிழன் இப்படித் தெருவில் இன்று நிற்கிறான்.

பொறுப்புக்களிலிருந்து தப்பிக்க சொல்லும் சாதாரண பதில்.

இதை பொறுப்பாக வேலை செய்யும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. :(:(:(

Link to comment
Share on other sites

எந்த பொறுப்புகளில் இருந்தாலும் கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுக்காவிட்டால் சந்தர்ப்பம் கிடைக்காது.கொடுக்கப்படவும் வேண்டும்.

சுகன் பிறிதொரு திரியில் குறிப்பிட்டது போல் இது தமிழருக்கான போராட்டமே ஒழிய சில நபர்களுக்கான அடையாளப்படுத்தலல்ல.

Link to comment
Share on other sites

பொறுப்புக்களிலிருந்து தப்பிக்க சொல்லும் சாதாரண பதில்.

இதை பொறுப்பாக வேலை செய்யும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. :(:(:(

மன்னித்துக் கொள்ளுங்கள் விசுகு. நான் எழுதியதன் கருத்தை நீங்கள் தவறாக விளங்கியிருக்கிறீர்கள். விசிலடிச்சான்களாலேயே தமிழனுக்கு இந்த நிலையென்றே குறிப்பிட்டேன். தங்கள் கடமைகளைச் செய்கின்றவர்களை நோக்கியதல்ல எனது பதில்.

என்னால் இயன்றதை எனது சக்திக்கு அப்பாற்பட்டு எனது இனத்துக்கான கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன். (இதுகூட எங்களை லைற்றடிச்சு காட்டும் வேலையென்று அதிமேதாக்கருத்தும் வரும்)

ஏதோ தாங்களே தமிழினத் தூண்களாக எங்கும் மூக்கை நுளைத்து வெட்டிப்பேச்சு விமர்சனம் செய்வது போதாமல் எல்லோரும் விலைபோனோர் விபச்சாரம் செய்வோர் என தங்களது வக்கிரங்களை இந்தக்களத்தில் கொட்டும் கனவான்கள் சிலருக்கு மட்டும் உணர்வு மற்றவர்களுக்கெல்லாம்...???

தமிழனித்தின் விடுதலையென்பது எல்லோரையும் ஒதுக்கி தமக்கான சொத்தென எண்ணுகிறார்கள் இந்த அறிஞர்கள். அதைத் தம்மோடு வைக்கட்டுமே ஏன் எங்கும் புலிகளை இழுத்து தாம்தான் புலிகளின் ஏகபோகம் போன்ற எக்காளம் செய்வான்???

சுகன் பிறிதொரு திரியில் குறிப்பிட்டது போல் இது தமிழருக்கான போராட்டமே ஒழிய சில நபர்களுக்கான அடையாளப்படுத்தலல்ல.

arjun உங்களுக்கொரு பச்சை குத்தியுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.