Jump to content

காலிரண்டையும் இழந்த பெண்போராளியின் சொந்தக்கதை


Recommended Posts

naval.png

காலிரண்டையும் இழந்த பெண்போராளியின் சொந்தக்கதை.

“காதல் களம் கணவன் கடைசிக்கனவு“ இதுவொரு குறுநாவலுக்கான தலைப்பு. இக்கதையானது ஒரு முன்னாள் பெண் போராளியின் வாழ்வு. அவள் போராளியானது முதல் 2009மே 17சரணடையும் வரை வாழ்வில் அனுபவித்த துயரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். தனது வாழ்வைப் பதிவுசெய்யும் உரிமையைத் தந்து தனது வாழ்வை என்னூடாகப் பதிய வைத்துள்ளாள்.

2006 செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த விமானக்குண்டு வீச்சில் காயமடைந்து இரு கால்களையும் இழந்து போய் முகத்திலும் காயங்களோடு வாழும் அன்பினியை அவளது குடும்பமே விலக்கி வைத்திருக்கிறது. அன்பினி தனித்து வாழ்கிறாள். அவளுக்கான நம்பிக்கை நிறைந்த வாழ்வை ஒளியேற்றி வைப்பதாகப் பலர் அவளது வாழ்வில் புகுந்தனர். ஒருவன் காதலனாக இன்னொருவன் கட்டாயக்கணவனாக இன்னும் சிலர் அவளது ஊனத்தைக் காரணம் காட்டி இரகசிய மனைவியாக்கவும் இம்சித்தார்கள்.

இத்தகைய எல்லா வகையான சுமைகளையும் தாங்கிக் கொண்டு செயற்கைக்காலின் நம்பிக்கையோடு ஆறாத மனக்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 25வயது நிரம்பிய இவளின் வாழ்வு போல் ஊரில் பல்லாயிரம் பெண் போராளிகளின் சாதாரண பெண்களின் வாழ்வு சிதைந்து கொண்டிருக்கிறது. தனது கதையினூடாகப் பலரது வாழ்வைப் புரிவிக்க முயன்றுள்ளாள்.

இக்கதையின் கதைசொல்லியாகவே நான் இருக்கிறேன். ஆனால் கதையோடு உலவும் அன்பினியின் வாழ்வு அவளது சொந்த வாழ்வு. அவளது காதல் முதல் களம் , கணவன் கடைசிக் கனவு வரையிலும் அவளது வாழ்வும் துயரமும் நிரம்பி வழிகிறது.

2009மே17 சரணடைந்தவள் 2011மே17இல் தனது வாழ்வை மையப்படுத்திய இக்கதையை வெளியில் கொண்டு வருமாறு வேண்டியிருக்கிறாள். அவளது ஆசைப்படி 2011மே17அன்று அன்பினியென்ற பெயரில் உலவும் இக்கதைக்குரியவளின் அனுபவங்களை வெளியிடவிருக்கிறேன். ஆனால் கடதாசியில் அச்சிட்டு நூல்வடிவமில்லாமல் இணைய நூலாக உங்கள் முன் கொண்டு வருகிறேன்.

நாங்கள் வெளியில் இருந்து இலக்கியம் படைத்த போராட்டம் களம் களமாடிய மனிதர்களின் குணங்கள் அட இப்படியுமா என வெறுப்புத் தருகின்றனவான பல சம்பவங்கள் அன்பினியோடு பிணைந்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து நாங்கள் இன்னும் கனவுகாணும் உலகத்தை முற்றாக வெறுக்கிறவளாக அன்பினியும் அன்பினி போன்ற ஆயிரமாயிரம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிற உண்மையை இவளோடும் இவள் போன்றவர்களோடும் பேசுகிற அவர்கள் பகிர்கிற விடயங்களிலிருந்து புரிய முடிகிறது.

தனது கதைக்குத் தானே முன்னுரையும் தந்து தனது கதையை உலகத்தமிழர்களிடம் சேர்ப்பிக்கும் உரிமையைத் தந்திருக்கும் இவள் மீது கனவுகளில் வாழும் மனிதர்களே கல்லெறியாதீர்கள். அவளது மனதில் ஆறாது எரியும் காயங்களுக்கு உதவ முடிந்தால் உங்கள் நேசக்கரத்தை நீட்டுங்கள்.

2011மே17 வரை காத்திருங்கள்…….

Link to comment
Share on other sites

தொடருங்கள் ..

வெளிநாடுகளிலிருந்து நாங்கள் இன்னும் கனவுகாணும் உலகத்தை முற்றாக வெறுக்கிறவளாக

அது சரி நாங்கள் காணும் கனவு என்ன?எங்கள் மீது நீங்கள்(அன்பினி அல்ல) வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

Link to comment
Share on other sites

தொடருங்கள் ..

அது சரி நாங்கள் காணும் கனவு என்ன?எங்கள் மீது நீங்கள்(அன்பினி அல்ல) வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

Jil நான் எந்தக் குற்றச்சாட்டையும் உங்கள் மீது வைக்கவில்லை. இன்னும் ஒரு மாதம் பொறுத்திருங்கள் அன்பினியின் கதையில் அவள் என்னத்தைச் சொல்லியிருக்கிறாள் என்பதன் பின்னர் குற்றங்களைக் கண்டுபிடிக்கலாம். :lol:

இக்கதையின் கதைசொல்லியாகவே நான் இருக்கிறேன். :blink: ஆனால் கதையோடு உலவும் அன்பினியின் வாழ்வு அவளது சொந்த வாழ்வு. அவளது காதல் முதல் களம் , கணவன் கடைசிக் கனவு வரையிலும் அவளது வாழ்வும் துயரமும் நிரம்பி வழிகிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய எல்லா வகையான சுமைகளையும் தாங்கிக் கொண்டு செயற்கைக்காலின் நம்பிக்கையோடு ஆறாத மனக்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 25வயது நிரம்பிய இவளின் வாழ்வு போல் ஊரில் பல்லாயிரம் பெண் போராளிகளின் சாதாரண பெண்களின் வாழ்வு சிதைந்து கொண்டிருக்கிறது. தனது கதையினூடாகப் பலரது வாழ்வைப் புரிவிக்க முயன்றுள்ளாள்.

முல்லைமண்! இதனால் அன்பினி அடையப் போவது என்ன? சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களை ஏன் மீண்டும் கிளருகின்றாள்? அனுதாபம் தேடவா? அல்லது இந்தச் செயலைச் செய்தவர்களைப் பழிவாங்கவா?

நதிமூலமும் ரிஷிமூலமும் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.ஏனெனில் அதைப் பார்த்தால் நதியையும் ரிஷியையும் மதிக்க மாட்டீர்கள்.யாரோ தறிகெட்ட சில பேர் அவளின் இயலாமையைப் துஷ்பிரயோகம் செய்ததற்காக முழு இனத்தையும் நோக்கி உங்கள் சுட்டி விரலை நீட்டும் காரியங்களைச் செய்யாதீர்கள்.எங்கள் வீட்டுக் குப்பைகளை வீதிக்குக் கொண்டு வருவது,எங்களை மேலும் பலவீனப் படுத்தும்.

Link to comment
Share on other sites

முல்லைமண்! இதனால் அன்பினி அடையப் போவது என்ன? சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களை ஏன் மீண்டும் கிளருகின்றாள்? அனுதாபம் தேடவா? அல்லது இந்தச் செயலைச் செய்தவர்களைப் பழிவாங்கவா?

நதிமூலமும் ரிஷிமூலமும் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.ஏனெனில் அதைப் பார்த்தால் நதியையும் ரிஷியையும் மதிக்க மாட்டீர்கள்.யாரோ தறிகெட்ட சில பேர் அவளின் இயலாமையைப் துஷ்பிரயோகம் செய்ததற்காக முழு இனத்தையும் நோக்கி உங்கள் சுட்டி விரலை நீட்டும் காரியங்களைச் செய்யாதீர்கள்.எங்கள் வீட்டுக் குப்பைகளை வீதிக்குக் கொண்டு வருவது,எங்களை மேலும் பலவீனப் படுத்தும்.

ஷாந்தியோ அன்பினியோ எல்லாரையும் குற்றம் சாட்டுவதாக தெரியவில்லை.

எங்கள் குப்பைகளை வெளியே கொண்டுவந்தால் மேலும் பல அன்பினிகள் தொல்லைப்படாமல் இருக்கமுடியும்.

Link to comment
Share on other sites

புங்கையுhரான் உங்கள் கருத்தோடு ஒத்துப் போக என் மனச்சாட்சி இடம் தர மறுக்கிறது...........

காரணம் நாங்கள் எத்தனையோ பேசப்பட வேண்டிய கலந்துரையாட வேண்டிய நிகழ்வுகளை

எல்லோர் முன்னிலையிலும் சமர்ப்பிக்காமல் ஒரு குறிப்பிட்ட நபர்களை உள்ளடக்கிய

வட்டத்திற்குள் சுற்ற விட்டதால் தான் இன்று இந்த துயர நிலை.................

அதனால் தயவு செய்து பேச விடுங்கள்

அந்த பெண் போராளியின் உடன் பிறப்புக்களும் அவள் யாருக்காக

ஆயுதம் ஏந்தினாளோ அந்த நன்றி கெட்ட இனமும் அவளையும் அவளைப்

போன்ற அத்தனை போராளிகளையும் ஒதுக்கி வைத்து வசை பாடும்

போது...................அவள் தன் சொந்த துயரை பகிர்ந்து கொள்வதில்

எங்கே தப்பு தெரிகிறது....................

ஒருவன் வெற்றியாளனாக இருக்கும் போது மட்டும்

அவனை புகழாதீர்கள்.............அவன் முடமான போதும்

அவனை புகழுங்கள்...............

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள். எழுதுங்கள் சாந்தி.

இன விடுதலைக்காக போராடி வாழ்க்கையை இழந்து நிற்பவர்களை யூத இனத்திற்கு ஒத்த இனம் எப்படி சீரும் சிறப்புமாக பராமரிக்கிறோம் என்பதை காண ஆவலாயுள்ளேன்.

இக்கதைக்கு எழப்போகும் எதிர்ப்புகளுக்காக, அட்வான்சாக இப்பொழுதே எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். :D

Link to comment
Share on other sites

கட்டாயம் எழுதுங்கள்.நல்லதோ கெட்டதோ நடந்தவை,நடப்பவை வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.

எங்கடை சூத்தைகளை மட்டும் மெல்ல அமத்திவிட நினைக்கும் மனப்பாங்கில் இருந்து முதலில் தமிழன் வெளிவரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரண வீட்டில் அழுதாத்தான் மனம் சாந்தியடையும்.

மனதில் உள்ளதை வெளிக் கொண்டு வந்தால் மனம் ஆறுதலடையலாம்.

Link to comment
Share on other sites

முல்லைமண்! இதனால் அன்பினி அடையப் போவது என்ன? சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களை ஏன் மீண்டும் கிளருகின்றாள்? அனுதாபம் தேடவா? அல்லது இந்தச் செயலைச் செய்தவர்களைப் பழிவாங்கவா?

புங்கையூரான்,

அன்பினி எதையும் அடையப்போவதில்லை. அவளை ஏற்கனவே நமது மானம் மிக்க சமூகம் கொன்றுவிட்டது. ஆனால் அன்பினி போன்ற ஆயிரமாயிரம் பேரின் இன்றைய இதுவரையான வாழ்வைச் மீண்டும் எங்கள் ஞாபகம் கூடிய புத்தியில் ஞாபகமாய் வைக்கும் முயற்சியே இது.

அனுதாபம்..... :blink: உங்கள் எனது அனுதாபம் அன்பினிக்காக அவள் போன்ற ஆயிரம் பேருக்கு என்ன நன்மையைக் கொடுக்கும் ?

இங்கு அன்பினியோ நானோ யாரையும் பழிவாங்கவும் முயலவில்லை பலியெடுக்கவும் முயலவில்லை. ஆயிரமாயிரம் பேரின் வாழ்வை அனைவரும் அறிய வேண்டுமென்பதனை விரும்புகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையுhரான் உங்கள் கருத்தோடு ஒத்துப் போக என் மனச்சாட்சி இடம் தர மறுக்கிறது...........

காரணம் நாங்கள் எத்தனையோ பேசப்பட வேண்டிய கலந்துரையாட வேண்டிய நிகழ்வுகளை

எல்லோர் முன்னிலையிலும் சமர்ப்பிக்காமல் ஒரு குறிப்பிட்ட நபர்களை உள்ளடக்கிய

வட்டத்திற்குள் சுற்ற விட்டதால் தான் இன்று இந்த துயர நிலை.................

அதனால் தயவு செய்து பேச விடுங்கள்

அந்த பெண் போராளியின் உடன் பிறப்புக்களும் அவள் யாருக்காக

ஆயுதம் ஏந்தினாளோ அந்த நன்றி கெட்ட இனமும் அவளையும் அவளைப்

போன்ற அத்தனை போராளிகளையும் ஒதுக்கி வைத்து வசை பாடும்

போது...................அவள் தன் சொந்த துயரை பகிர்ந்து கொள்வதில்

எங்கே தப்பு தெரிகிறது....................

ஒருவன் வெற்றியாளனாக இருக்கும் போது மட்டும்

அவனை புகழாதீர்கள்.............அவன் முடமான போதும்

அவனை புகழுங்கள்...............

தப்பு எங்கும் இல்லை தமிழ்மாறன்! ஏற்கனவே சொந்தக் குடும்பத்தால் கூட தூர வைக்கப்பட்டிருக்கும் அவள்,இந்தக் கருத்துக்கள் பகிரப் படும்போது மேலும் அன்னியப் படுத்தப்படுவாள்.அவள் துணிவு என்னை வியக்க வைக்கின்றது.அவள் முடமாகிப் போனதை, அவள் அடைந்த விழுப்ப்புண் ஆகவே நான் பார்க்கின்றேன். அவளே தன் கதையை வெளியிட அனுமதிக்கும் போது, எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்,

அன்பினி எதையும் அடையப்போவதில்லை. அவளை ஏற்கனவே நமது மானம் மிக்க சமூகம் கொன்றுவிட்டது. ஆனால் அன்பினி போன்ற ஆயிரமாயிரம் பேரின் இன்றைய இதுவரையான வாழ்வைச் மீண்டும் எங்கள் ஞாபகம் கூடிய புத்தியில் ஞாபகமாய் வைக்கும் முயற்சியே இது.

அனுதாபம்..... :blink: உங்கள் எனது அனுதாபம் அன்பினிக்காக அவள் போன்ற ஆயிரம் பேருக்கு என்ன நன்மையைக் கொடுக்கும் ?

இங்கு அன்பினியோ நானோ யாரையும் பழிவாங்கவும் முயலவில்லை பலியெடுக்கவும் முயலவில்லை. ஆயிரமாயிரம் பேரின் வாழ்வை அனைவரும் அறிய வேண்டுமென்பதனை விரும்புகிறோம்.

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இல்லை.ஒரு தந்தை தன் மகளில் கொண்ட கரிசனத்தால் தான் மேற்கண்ட கருத்தை எழுதினேன்.எங்கள் சமூகம்,நாங்கள் நினைப்பது போல், சில விடயங்களை பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைக்கு இன்னும் வளரவில்லை என்பதே ஆனது கருத்து!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இல்லை.ஒரு தந்தை தன் மகளில் கொண்ட கரிசனத்தால் தான் மேற்கண்ட கருத்தை எழுதினேன்.எங்கள் சமூகம்,நாங்கள் நினைப்பது போல், சில விடயங்களை பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைக்கு இன்னும் வளரவில்லை என்பதே ஆனது கருத்து!!!

வளர மறுக்கிறார்கிறார்கள் அது தான் உண்மை..நாளுக்கு நாள் எத்தனையோ விதமான கண்டு பிடிப்புக்கள் அது,இது என்று வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..ஆனால் எங்கள் சமுதாயம் மட்டும் ???ம்ம்ம்.......கூம். :(:(

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி, உங்கள் குறுநாவலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். பெருந்தோல்வியின் இருளுக்குள் புண்பட்டுக் கிடக்கிற ஒரு இனம் மீண்டும் நிமிர அவசியமான ஒளியைச் சேர்க்கும் பணியில் கலை இலக்கியங்களுக்கு முக்கியமான பங்குண்டு. எங்கள் இனம் மீண்டும் அரசியல் புதை மணலுக்குள் வழி தவறி விடக்கூடாது. நானும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன். உங்கள் குறு நாவலைத் தொடர்ந்து என் படப்புகளும் வரும்..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கருத்திட்ட Jil , புங்கையூரான் , கந்தப்பு , Eas ,தமிழ்மாறன் , தப்பிலி ,ரதி ,arjun, ஈழப்பிரியன் , யாயினி , poet அனைவருக்கும் நன்றிகள். இன்னும் 3நாட்களில் கதையினை நீங்கள் இக்களம் ஊடாக படிக்கலாம்.

ஒருவன் வெற்றியாளனாக இருக்கும் போது மட்டும்

அவனை புகழாதீர்கள்.............அவன் முடமான போதும்

அவனை புகழுங்கள்...............

சத்தியமான வரிகள் தமிழ்மாறன்.

இக்கதைக்கு எழப்போகும் எதிர்ப்புகளுக்காக, அட்வான்சாக இப்பொழுதே எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். :D

முற்கூட்டிய அனுதாபத்துக்கு நன்றிகள். :lol:

நிச்சயமாக இக்கதைக்கு எழப்போகும் விமர்சனங்கள் சொல்லடிகள் கல்லடிகள் அதிகமாகத்தானிருக்கும். ஆயினும் பேசப்பட வேண்டிய விடயங்களைப் பேசியாகவே வேண்டும். :blink:

எங்கள் இனம் மீண்டும் அரசியல் புதை மணலுக்குள் வழி தவறி விடக்கூடாது. நானும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன். உங்கள் குறு நாவலைத் தொடர்ந்து என் படப்புகளும் வரும்..

உங்கள் படைப்பினையும் கொண்டு வாருங்கள். படிக்கக்காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இல்லை.ஒரு தந்தை தன் மகளில் கொண்ட கரிசனத்தால் தான் மேற்கண்ட கருத்தை எழுதினேன்.எங்கள் சமூகம்,நாங்கள் நினைப்பது போல், சில விடயங்களை பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைக்கு இன்னும் வளரவில்லை என்பதே ஆனது கருத்து!!!

புங்கையூரான் இதை நீங்கள் எழுதிகாட்டியே சிலருக்கு புரியவைக்க வேண்டிய நிலை.................... இன்னும் அவர்கள் புரிந்தார்களா என்பதுதான் விடையற்ற வினா. சிலருக்கு புரிந்தாலும் புரியாது............. சிலருக்கு புரிந்ததும் புரியாது.

இவர்களுக்கு நடைமுறை சாத்தியங்களை பற்றி நாங்கள் எழுதினால்.............. எதார்த்தங்களை பற்றி அவர்கள் எழுதுவார். எதார்த்தங்களை நாங்கள் எழுதினால்............... நடைமுறை சாத்தியம் பற்றி இவர்கள் எழுதுவார் தவிர அந்த பெண்ணின் மீது உரிய அக்கறையிருப்பின் உங்களுடைய கேள்வியான "இதனால் அந்த பெண்ணுக்கு என்ன நன்மை?" என்ற வினாவிற்கு சிறு விளக்கத்தைகொடுக்க முயற்சித்திருப்பார்கள் அதை இதுவரையில் செய்யவில்லை.................... ஆனால் அந்த பெண்ணினுடைய நிலையை லைற்றடிச்சு ஊருக்குகாட்டினால் சில பெண்கள் பாதுகாக்கபடுவார்களாம்...............? எப்படி என்பது புரியாத புதிர்.

நீங்கள் எல்லோரும் கேள்விபட்ட விடயம்................. இன்னொரு பெண்ணின் கதை பாகிஸ்தானில் ஒரு கிராமம் அங்கே ஒருவன் ஒருத்தியுடன் உறவை வைக்கிறான் அந்த கிராம மரபின்படி அது தவறானது............. அகவே விடயம் பஞ்சாயத்திற்கு வருகிறது பஞ்சாய தலைவர் தீர்ப்பை வழங்குகிறார்................. அவனுக்கு ஒரு தங்கை பதினொருவயதில் இருக்கிறாள் அவளை பத்துபேர் சேர்ந்து வல்லுறவு கொள்வது. இந்த செய்தி அவளுடைய தயாரின் அர்பணிப்பால் வெளியூரை அடைகிறது பின்பு நாம் எல்லோரும் அறிந்ததுதான்................ சின்ன் பிபிசி உட்பட அனைத்து உலகதொலைகாட்சி செய்திகளிலும் செய்தி வருகிறது மனித உரிமை சங்கங்கள் மாதர் சங்கங்கள் எல்லாம் குடைபிடிக்க................ வழக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் செல்கிறது. தீர்ப்பு பத்தில் 7 பேர் ஆயுள்தண்டனை பெற்று சிறை செல்கிறார்கள். இப்போது 6 வருடங்கள் ஒடிவிட்டது அவளது தாயர் கொலைசெய்யபட்டுவிட்டார். சிறை சென்றவர்கள் மனுதாக்கல் செய்கிறார்கள் மனு திரும்பமும் நீதிமன்னறம் வந்து அவர்கள் விடுதலை பெற்று அந்த கிராமம் செல்கிறார்கள்..................... இப்போது அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஒட இடம் ஏதும் இல்லை........... இந்த செய்தி கூட ஏதாவது சிறு பத்திரிகையில் படித்தால்தான் உண்டு. உண்மை நிலை பாகிஸ்தானில் இதுவென்றால் இலங்கையில் என்ன நிலை என்பதை இங்கே யாருக்கு நானோ நீங்களோ எழுதவேண்டும்??????

அவன் அவன் பிழைப்பிற்கு ஒவ்வொரு மூலாம் பூசுகிறார்கள் கேள்வி கேட்டால் எனது கருத்தும் உங்கள் கருத்தும் உடனடியாக துக்க படுகிறது. அவர்கள் மக்கள் நலன் காக்கிறார்களாம் நாங்கள் கேள்வி கேட்டு அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணடிக்கிறோம் என்று சில மட்டுறுத்தினர்கள் நினைக்கிறார்கள். கடந்த 60வருடமாக தமிழனை கொன்றுகுவித்த சிங்களவனும் அதன் உச்ச கட்டமாக முள்ளிவாய்காலில் கூட்டமாக நாலுபக்கமும் செல்லடித்து விரட்டி சிறு நிலப்பரப்பிற்குள் தள்ளி அங்கே வைத்து ஒட்டுமொத்தமாக குண்டுபோட்டு அழித்து எஞ்சியவர்களை பிடித்துசென்று முள்வேலிக்குள் அடைத்து வைத்துகொண்டு.............................. தமிழர்களின் விடிவுக்காக தான் போராடுவதாகவே சொல்கிறாhன். அதைதான் இன்றுவரை திரும்ப திரும்ப சொல்கிறான். புலிவாந்தி எடுப்பவனும் இதைதான் சொல்கிறான் அல்லது இதை சொன்னால்தான் அவனுக்கு ஊதியம். மக்கள் நலன் காக்க போகிறார்களாம்............. அதுக்கு புலிகள் விட்ட தவறுகளை திரும்ப திரும்ப எழுதவேண்டுமாம்.

சரி புலிகள் போராடிய முறை தவறானது............... இப்போ புலியும் இல்லை எலியும் இல்லை போய் சரியான முறையில் போராட வேண்டியதுதானே?? அதுக்கு தட்டச்சு மட்டும் தெரிந்து பலனில்லை தலையிலே ஒரு மசிரெனிலும் வேண்டும். அது முக்கியமில்லை புலிகள் விட்ட தவறுகளை பரப்பிகொண்டிருக்க வேண்டும்........... அப்போதுதானாம் அனுபவம் வரும். அப்படியென்றால் ஏன் புலிகள் விட்ட தவறு என்று குறுகிய காலத்திற்குள் இவர்களது பாரிய பரந்த அறிவை சிறுமை படுத்துகிறார்கள் என்பதுதான் எனக்கு இன்றுவரை புரியாதது. பண்டாரவன்னியன்.................. எல்லாளன் சோளமன்னன் என்று இவர்களது அறிவுக்கு எட்டிய தூரம் வரை செல்லலாமே? புலிகள் போராடிய காலமும் உலகமும் இனி ஒருபோதும் வரபோவதில்லை அதுவே தெளிந்த உண்மை அப்போதைய உலகிற்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப சோழன் போராடினான்................... பின்பு புலிகள் போராடினார்கள் என்பதே உண்மை. அந்த அனுபவம் என்பது இனி யாருக்கும் தேவையற்றதே.................. தற்போதைய உலகும் போரின் வடிவமும் புலிகளின் காலம்போலும் போரின் வடிவம் போலும் ஒருபோதும் அமையாது என்பது திண்ணமான பின்பு............... ஏன் புலிவாந்தி எடுக்க வேண்டும்???

எடுக்க வேண்டாம் என்று நான் செல்லவில்லை............. எடுங்கள் அது உங்கள் ஊதியத்தோடு சம்மந்தபட்டது. எங்களுக்கு வாழ கிடைக்கவில்லை எமை காட்டிகொடுத்த நீங்களாவது பிழைச்சு போங்கள். ஆனால் இந்த மக்கள் நலன்காப்பு வேதாந்தம்தான் எமக்கு விளங்கவில்லை. இதைதான் நான் திரும்ப திரும்ப விளங்கடுத்த நினைக்கிறேன்.

இலங்கையின் இன்றைய நிலையில் ஒரு பெண்ணை இராணுவம் பிடித்துசென்று வல்லுறவு கொண்டு வீதியில் வீசினால் யாரால் என்ன செய்ய முடியும்???? இது இதுவரையில் நடக்கவே இல்லையா??? உயிராபத்து என்று இலங்கையை விட்டு ஒடிகொண்டிருக்கும் சிங்களவர்களின் எண்ணிக்கையே சில ஆயிரமாக இருக்கிறது................. இதில் இந்த கட்டுரை எந்த விதத்தில் அந்த பெண்ணுக்கு உதவும் என்பது எனக்கு புரியவில்லை. அவளுடைய வேதனைகளை மூடிமறைக்க வேண்டியதில்லை................ ஆனால் இதனால் அவளுக்கு நன்மை என்பது மட்டும் அப்பட்மான பொய். இந்த பெண்ணின் விடயத்தில் தாம் ஏதோ தவறு செய்துவிட்டதாக உணர்ந்து இராணுவமும் சமூக விசமிகளும் மற்றைய பெண்களை தமது ஆசைக்ககு அடிபணியாவிட்டால் அடித்து கொல்லவே திட்டம் தீட்டுவார்கள்................... மற்றைய பெண்களுக்கு இதனால் இலாபம் என்பது அபத்தம்.

சமூகத்தை சீராக கட்டியெழுப்ப வேண்டுமே தவிர................... சிந்தும் சீழ்களை அள்ளி சிதறடிப்பதால் சமூகம் சீர்படும் என்பது ஏதாவது தத்துவாந்த ரீதியாக சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால் தற்போதைய இலங்கையில் ஒரு துளி சாத்தியமுமில்லை!

Link to comment
Share on other sites

இங்கு சிலருக்கு தங்களைத்தவிர புலிகள் பற்றி எவ்வித அக்கறையோ அழிவுகள் பற்றிய சிந்தனையோ இல்லாத மாதிரியும் தாங்கள் தான் ஏகபோக பிரதிநிதிகள் போலவும் வாந்தியெடுப்பதே சுகமான தொழில். அதுகூட அவரவர் விருப்பம். இன்னொரு விடயம் இதுவொரு கருத்துக்களம் இதில் எல்லாருக்கும் கருத்தெழுதும் உரிமை உண்டென்பதைக்கூட மறந்து தங்கள் கீழ்த்தரமான வாந்திகளால் பாகிஸ்தான் பங்களாதேஸ் பெண் மண்ணென்று தங்கள் அகில உலக புலமையை வெளிக்கொண்டு வந்து சம்பந்தமில்லாத விடயத்தோடு சேர்த்து முடிச்சிடுகிறார்கள்.

ஆனால் " காதல் களம் கணவன் கடைசிக்கனவு" குறுநாவலானது யாருடனும் உடல் உறவு வைத்தது பற்றியோ அல்லது பாலியல்வல்லுறவு பற்றியே பேசவில்லை. ஒரு பெண் போராளியின் வாழ்வை பதிவு செய்திருக்கிறது. மற்றும் யூதர்களுக்கு நிகராக தமிழினத்தை உச்சத்தில் ஏற்றி வைத்து கனவு காண்பதைத்தவிர முன்னாள் போராளிகள் வாழ்வை எப்ப பலியெடுக்கிறது என்பது பற்றியே எழுதப்பட்டுள்ளது.

ஆயினும் இன்னும் கதையையே படிக்கவில்லை ஆனால் தங்கள் மேதாத்தனத்தை துப்புவதால் தமது புனிதம் காக்கப்படுவதாக எண்ணும் அதி புத்திசாலிக்கு சொல்வதற்கு எதுவுமில்லை.

பிற்குறிப்பு :- இக்கருத்தை உரியவர் மட்டும் புரிந்து கொள்வார். மற்றைய நண்பர்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பைப்பார்க்கும்போதே தெரிகிறது. பாதை மாறியதன் பயன் இது. எம் எல்லோருக்கும் இதில் பங்குண்டு. இனி இலட்சியமாவது கனவாவது........ கடைசி வரியை மட்டும் நீக்கிவிடுங்கள். எழுதுவதற்கு முன் ஏன் இத்தனை பீடிகை? உள் நோக்கம் நல்லது என்ற தெளிவிருந்தால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும்

புங்கையூரானின் கருத்தை மேற்கோள் காட்டி எனது நிலைபாட்டை மீண்டும் தெரிவிக்கிறேன்....................

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகருமென்கிறார்கள். அடித்துபார்கலாம் என்பதால். பாகிஸ்தானுக்கு பயணிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை நடைமுறைகளை சாடுபவர்க்கே உண்டு. இந்த கதையை ஊருக்கு லைற்றடித்து காட்டுவதால் அந்த பெண்ணுக்கு என்ன நன்மை என்பதை கொஞ்சம் விளங்கபடுத்தலாமே................?? அது விளங்கவில்லை என்பதுதானே எமது நிலைபாடே தவிர உங்களில் குறைகாண்பதல்ல.

பசியோடு இருப்பவனுக்கு மீனை பிடித்துகொடுப்பதிலும்விட அவனுக்கு அந்த மீனை பிடிக்க கற்றுகொடுக்கலாம் என்றுதான் நான் சொல்கிறேன். இதற்கு ஏன் புலிகளுக்கு ஏகபிரதிநிதியாக நான் மாறவேண்டும்?? புலிகள் தமிழர்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருதமிழனுக்கும் புலிக்கும் உறவுண்டு என்பதை நாம் எழுதினாலும் குற்றம் காண்கிறார்கள்............... புலி வேறு மக்கள் வேறு என்கிறார்கள். ஆக புலி இனிஇல்லை எம்மை ஏகபிரதிநியாக்கிவிட்டால் எமை நையபுடைவதில் கொஞ்ச காலம் கழிக்கலாம் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை.

அங்குள்ள சமூக கட்டமைப்பை நாம் சீரக கட்டவேண்டும்..................... காலில்லதவன் பிடித்து நடக்க நாம் ஓண்டுதடிகளை கொடுக்கலாம். ஆனால் அதை அடுத்தவன் புடுங்கும் நிலமைகளை முதலில் இல்லாது செய்ய வேண்டும். ஒரு உதவியை உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமே தவிர.

சும்மா மக்கள் பா பாடி ஆவதற்கு ஒன்றுமில்லை. திரும்பி திரும்பி பூஜ்ஜியத்திலேயே நிற்போம்.

உதவி என்று நாம் செய்வது அடுத்தவனுக்கு உபத்திரபமாக ஆகிவிட கூடாது............. ஆகவேதான் நாம் செய்வது என்ன பயனை கொடுக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்து செய்வோம் என்றே சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

புங்கையூரான் மற்றையவர்களது கருத்தை உள்வாங்கியுள்ளார். இங்கு ஒருவர் தனது முயலுக்கு 3கால் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அடம்பிடித்து நிற்பதற்கு பதில் எழுதுவதில் பயனில்லை. ஆக பதிலும் தேவையில்லை.

கேள்வியும் நானே பதிலும் நானேயான இப்படியே இருந்துவிடுங்கள் அறிஞர் பெருமகரே.......

ஒன்றைப்புரிய முடிகிறது இத்தகைய விசிலடிச்சான்களால் தான் தமிழன் இப்படித் தெருவில் இன்று நிற்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைப்புரிய முடிகிறது இத்தகைய விசிலடிச்சான்களால் தான் தமிழன் இப்படித் தெருவில் இன்று நிற்கிறான்.

பொறுப்புக்களிலிருந்து தப்பிக்க சொல்லும் சாதாரண பதில்.

இதை பொறுப்பாக வேலை செய்யும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. :(:(:(

Link to comment
Share on other sites

எந்த பொறுப்புகளில் இருந்தாலும் கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுக்காவிட்டால் சந்தர்ப்பம் கிடைக்காது.கொடுக்கப்படவும் வேண்டும்.

சுகன் பிறிதொரு திரியில் குறிப்பிட்டது போல் இது தமிழருக்கான போராட்டமே ஒழிய சில நபர்களுக்கான அடையாளப்படுத்தலல்ல.

Link to comment
Share on other sites

பொறுப்புக்களிலிருந்து தப்பிக்க சொல்லும் சாதாரண பதில்.

இதை பொறுப்பாக வேலை செய்யும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. :(:(:(

மன்னித்துக் கொள்ளுங்கள் விசுகு. நான் எழுதியதன் கருத்தை நீங்கள் தவறாக விளங்கியிருக்கிறீர்கள். விசிலடிச்சான்களாலேயே தமிழனுக்கு இந்த நிலையென்றே குறிப்பிட்டேன். தங்கள் கடமைகளைச் செய்கின்றவர்களை நோக்கியதல்ல எனது பதில்.

என்னால் இயன்றதை எனது சக்திக்கு அப்பாற்பட்டு எனது இனத்துக்கான கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன். (இதுகூட எங்களை லைற்றடிச்சு காட்டும் வேலையென்று அதிமேதாக்கருத்தும் வரும்)

ஏதோ தாங்களே தமிழினத் தூண்களாக எங்கும் மூக்கை நுளைத்து வெட்டிப்பேச்சு விமர்சனம் செய்வது போதாமல் எல்லோரும் விலைபோனோர் விபச்சாரம் செய்வோர் என தங்களது வக்கிரங்களை இந்தக்களத்தில் கொட்டும் கனவான்கள் சிலருக்கு மட்டும் உணர்வு மற்றவர்களுக்கெல்லாம்...???

தமிழனித்தின் விடுதலையென்பது எல்லோரையும் ஒதுக்கி தமக்கான சொத்தென எண்ணுகிறார்கள் இந்த அறிஞர்கள். அதைத் தம்மோடு வைக்கட்டுமே ஏன் எங்கும் புலிகளை இழுத்து தாம்தான் புலிகளின் ஏகபோகம் போன்ற எக்காளம் செய்வான்???

சுகன் பிறிதொரு திரியில் குறிப்பிட்டது போல் இது தமிழருக்கான போராட்டமே ஒழிய சில நபர்களுக்கான அடையாளப்படுத்தலல்ல.

arjun உங்களுக்கொரு பச்சை குத்தியுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.