Jump to content

ரொறன்ரோ தமிழியல் மாநாடு, எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்


Recommended Posts

வரும் யூலை மாதம் 13-14 திகதிகளில் ரொறன்ரோவில் தமிழியல் மாநாடு நடைபெறவிருக்கிறது. மேற்குநாடுகளில் அதிக தமிழர்கள் வாழும் நகரமான ரொறன்ரோவில் கனடாவின் இரு பெரும் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் தமிழியல் மாநாடு நடைபெறுவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகத் தெரியலாம். ஆனால் தமிழ் மொழிக்கோ, தமிழ் மொழி மாணவர்களுக்கோ இந்த தமிழியல் மாநாட்டால் குறிப்பிடத்தக்க பயன் ஏதும் இருக்குமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது.

தமிழியல் துறையின் அல்லது தமிழியல் மாநாடுகளின் முதன்மை நோக்கமாக தமிழ் மொழியைப் பேணுதலும், வளர்ப்பதும், கற்பித்தலுமே இருக்க முடியும். தமிழ்ச் சூழலின் இன்றைய தேவைகளையும், சிக்கல்களையும் கருத்தில் எடுப்பதும் தமிழியல் துறையை நடைமுறைக்குப் பயன்படும் துறையாக திசைவதில் முக்கியம் பெறுகிறது. ஆனால் இந்த முதன்மை இலக்குகளுக்கு ரொறன்ரோ தமிழியல் மாநாடு சற்றேனும் உதவுவதாக இல்லை.

தமிழியல் மாநாடு முழுவதும் அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடக்கும். அதில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளும், வெளியிடப்பட்டும் மாநாட்டு மலர்களும் ஆங்கிலத்திலேயே இருக்கும். அவர்களின் வலைத்தளத்தில் தற்போது தமிழில் ஒரு வசனம் கூட இல்லை. இங்கு தமிழ் வகுப்புகளுக்கு போகும் மாணவர்களை நோக்கி இவர்கள் எந்த செயற்திட்டத்தையும் முன்வைக்கவில்லை. இங்கு தமிழ் வகுப்புகளுக்கு வந்து அழைப்பு விடுக்கவும் இல்லை. தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் இசுகார்புரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் நிறுத்தப்பட்ட போது இவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுத்தாகவும் அறியமுடியவில்லை. எனவே இவர்களின் அக்கறை அல்லது ஈடுபாடுதான் என்ன என்று நீங்கள் எண்ணலாம்.

இவர்களின் அக்கறை பெரும்பாலும் ஒரு கல்விக்களம் சார் நடவடிக்கையாகவே இருக்கிறது. பல தேவைகளுக்காக தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை பல மேற்குநாட்டினர் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் பலர் இங்கு இருப்பதால் எம்மைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. எவ்வாறு காலனித்துவ காலத்தில் அவர்களுக்கு எம்மைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருந்ததோ, அது போலவே. எவ்வாறு இசுலாமியர்களை, சீனர்களை இவர்கள் புரிந்து கொள்ள விரும்புகிறார்களோ, அது போலவே. இந்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புக்களை நோக்கினாலே அதைப் புரிந்து கொள்ளலாம்.

Munk School of Global Affairs இக்கு தமிழ் மொழி மீது, தமிழ் மக்கள் மீது எப்படி அக்கறை வந்தது. மற்றயது Center For South Asian Studies – Asian Institute, இது காலனித்துவ இந்தியவியல், ஆசியவில் துறையின் இன்றைய உருவம், பொதுவாக Areas Studies கீழே வருகிறது. இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த மாநாடு ஓரளவு உதவுகிறது.

அடுத்தது இது முழுமையாக ஒரு நுண்புல, புலமைசார் நிகழ்வு. இவர்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகளுக்கும் இன்றைய தமிழ் மொழிக்கு எந்தத் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள். அல்லது தற்போது தமிழ்ச் சூழலில் தமிழர்கள் பேசவேண்டிய தலைப்புக்களையும் இவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. அவை சவால் மிக்கவை. பொதுவாக ஆய்வு மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் தமது ஆய்வுக் கட்டுரைகளை மாநாடுகளில் சமர்ப்பிக்க வேண்டிய பணித் தேவை இருக்கிறது. அதை நிறைவு செய்யக்கூடிய ஒரு களமாகவே இது இருக்கிறது.

ஆங்கிலத்தில் எழுதி வைத்து தமிழ் பாட்டுப் படிப்பவர்கள் போல, ஆங்கிலத்தில் துணை உரை பார்த்து தமிழ்த் திரைப்படம் பார்ப்பவர்கள் போல, தமிழ் லிட்ரிச்சர் பற்றி ஆங்கிலத்தில் விவாதிப்பர்கள் போல இந்த தமிழியல் மாநாடும் தமிழ் இலாமல், தமிழ் அக்கறைகள் இல்லாமல் நடக்கும். அதிலை எந்தவிதப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அதற்கு தமிழியல் என்று பெயர் வைக்காமல் இருந்திருக்கலாம். இந்த மொழிக்கா இத்தனை பேர் செத்தவை, முட்டாள்கள்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1655:2011-04-17-02-40-16&catid=298:2011-02-18-08-43-02&Itemid=392

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.