Jump to content

புனித வாரத்திற்கு தயாராவோம்....


Recommended Posts

புனித வாரத்திற்கு நாம் தயாராவோம்

tnpl.jpgtnpm.jpg

புனித புதனுடன் ஆரம்பமான தவக் காலத்தின் இறுதிக்கட்டத்தை நாம் நெருங்கியுள்ளோம். திருப்பாடுகளின் புனித வாரம் இவ்வார குருத்தோலை ஞாயிறுடன் 17.04.2011 ஆரம்பமாகிறது.

பெரிய வியாழன், புனித வெள்ளி, புனித சனி என அவ்வாரத்தின் திருநாட்களையடுத்து கிறீஸ்துவின் உயிர்ப்புப் பெரு விழாவைக் கொண்டாடுவதற்கும் நாம் வரும் குருத்தோலை ஞாயிறு தினத்திலிருந்தே ஆயத்தமாகி வருகிறோம்.

இறை சித்தத்தை ஏற்று இயேசு நம் பாவங்களுக்காக பாடுகள் பல பல பட்டு சிலுவைச் சாவை ஏற்று உயிர்விடப் போவதையடுத்து, ஜெருசலேம் நகருக்கு அரச பவனியாக வந்த நாள் இன்று.

நமது மீட்பர் இயேசு மனுக்குலத்தின் மீட்பினை நிறைவாக்க, குருத்தோலை தாங்கியவராய் ஜெருசலேமுக்கு வருகின்றார். நமக்காகப் பாடுகள் பட்டு, கல்வாரி மலையிலே களப் பலியாகி, உயிர்த்த மீட்பின் நிறைவின் தொடக்க நாளாக குருத்தோலை ஞாயிறு (17.04.2011) நினைவு கூரப்படுகின்றது.

இறைமகன் யேசுவின் திருப்பாடுகளை நம் மனக்கண் முன் நிறுத்தி, நமது பாவங்களுக்காக வருந்தவும், மனந்திருந்தி வாழவும் மீட்பைப் பெறவும் அழைப்பதுதான் இன்று ஆரம்பமாகும் புனித வாரம் எமக்குப் போதிக்கின்றது புனித வாரத்தில் பெரிய வியாழக்கிழமையில் வரும் இறுதி இராப்போசன வழிபாடுகளில் பாதம் கழுவும் சடங்கு அன்புக்கும் சமத்துவத்துக்கும் தாழ்ச்சிக்குமான புதிய பாடத்தை எமக்குக் கற்பிக்கின்றது.

இவ்வுலகில் அனைவரும் சமம். உயர்வு, தாழ்வு என்று ஒன்றில்லை. இறைமகன் முன்னிலையில் அனைவரும் சகோதரர்கள். எவரும் எஜமானரோ எவரும் அடிமைகளோ அல்ல. அத்தகைய ஆணவம் எமது இதயங்களில் இருக்குமானால் அந்த எண்ணங்களை நாம் இந்நாளில் நீக்கிவிட இறைவன் நம்மை அழைக்கின்றார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாம் பாடுபட முன்னர் தம் சீடர்களுக்கு இராப்போசனமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் தம்மைக்காட்டிக் கொடுக்கப் போகும் யூதாசும் இருந்ததை அவர் அறிவார். எனினும் யூதாஸை அவர் எதிரியாகப் பார்க்கவில்லை. அந்த இராப்போசன பந்தியில் ஏனையவர்களுக்குச் சமமாக யூதாஸையும் அவர் கௌரவிக்கின்றார். யூதாஸை அவர் ஒதுக்கவில்லை.

இந்நிகழ்ச்சி ஊடாக இறைவன் நம் எதிரிகளையும் நமக்கு வேண்டாதவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர்களையும் மதிக்க வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றார்.

இறைமகன் தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகும் யூதாஸை ஏற்றுக் கொண்டு அவரையும் மன்னித்து அவருடனான உறவையும் தக்க வைத்துக்கொள்ள முற்படுவது மன்னிக்கும் மனப்பாங்கை நம்மில் வளர்க்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது நமது வாழ்வில் செபம் மிக முக்கியமானதாகிறது. குறிப்பாக இத்தவக்காலத்தில் ஒரு போதுமில்லாதவாறு நாம் செப தபங்களிலும் பல்வேறு ஒறுத்தல் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் அதன் பிரதிபலன் என்ன? எமது செயலும் செபமும் ஒன்றோடொன்று முரண்டுகின்றபோது அதற்கான பெறுமதி என்ன?

நமது செபங்களில் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும் மன்னித்தருளும் என மன்றாடுகிறோம். இத்தகைய செபங்களை நாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் தானா கடைப்பிடிக்கின்றோமோ? அன்றேல் நம் நாளாந்த வாழ்வில் இவற்றைக் கடைப்பிடித்து வாழ்கின்றோமா?

இத்தவக்காலத்தில் நாம் எம்மையே திருப்பிப் பார்த்து திருத்திக் கொண்டு அதன்பின் இயேசுவோடு ஒன்றிப்பதுவே நல்ல கத்தோலிக்கனுக்குரிய அடையாளமாகும்..

இந்தத் தவக்காலம் நம் வாழ்வை மாற்றியமைக்கட்டும். நம்மில் உள்ள துர்க்குணங்களை களைந்து இறைமகன் காட்டிய வழியில் நம் வாழ்க்கைப் பயணத்தை தொடர நம்மை இறைவன் வழி நடத்துவார் என்ற நம்பிக்கையில் செபிப்போம். இறைவன் தனது அருட்கொடைகளை நமக்கு வழங்கி நம் வாழ்வில் புதிய அத்தியாயங்களை தோற்றுவிப்பார்.

நன்றி: http://salasalappu.com/?p=27746

Link to comment
Share on other sites

நமது செபங்களில் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும் மன்னித்தருளும் என மன்றாடுகிறோம். இத்தகைய செபங்களை நாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் தானா கடைப்பிடிக்கின்றோமோ? அன்றேல் நம் நாளாந்த வாழ்வில் இவற்றைக் கடைப்பிடித்து வாழ்கின்றோமா?

நன்றி: http://salasalappu.com/?p=27746

:(:huh:

Link to comment
Share on other sites

  • 11 months later...

புனித வாரத்திற்கு நாம் தயாராவோம்

tnpl.jpgtnpm.jpg

புனித புதனுடன் ஆரம்பமான தவக் காலத்தின் இறுதிக்கட்டத்தை நாம் நெருங்கியுள்ளோம்.

...

நன்றி: http://salasalappu.com/?p=27746

விபூதிப் புதன்/ சாம்பல் புதன் என்று அல்லவா கூறுவார்கள்?

Link to comment
Share on other sites

புனித புதன் என்று அழைப்பது குறைவுதான். விபூதிப் புதன் அல்லது திருநீற்றுப்புதன் என்று தான் நானும் அறிந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் என்டால் சாம்பல் அடிப்பாங்கள்,முட்டை அடிப்பாங்கள் இங்கு ஒருதரும் அடிப்பதில்லையோ :unsure:

Link to comment
Share on other sites

ஊரில் என்டால் சாம்பல் அடிப்பாங்கள்,முட்டை அடிப்பாங்கள் இங்கு ஒருதரும் அடிப்பதில்லையோ :unsure:

யாருக்கு? :mellow: எதுக்கு ரதி? :blink: விபூதிப் புதனுக்கு அப்படி யாரும் செய்ததாக ஊரில் நான் கேள்விப்படவில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு? :mellow: எதுக்கு ரதி? :blink: விபூதிப் புதனுக்கு அப்படி யாரும் செய்ததாக ஊரில் நான் கேள்விப்படவில்லை. :rolleyes:

நாங்கள் கிழக்கு மாகணத்தில் இருக்கும் போது விபூதிப் புதனன்று பெடியங்கள்,பெட்டையளை கலைச்சு,கலைச்சு சாம்பலடிப்பாங்கள் பிறகு வெள்ளியன்று முட்டை அடிக்கிறவங்கள்[சாம்பலடியையும் பார்க்க முட்டையடி தான் கூட விழுகிறது பெட்டையளுக்கு]...லண்டனில் கூட முட்டையடிக்கிறதை சில இடங்களில் கண்ட ஞாபகம் ஆனால் ஏன் அடிக்கிறவர்கள் என்பதை மறந்து போய் விட்டேன் ஆனால் கத்தோலிக்க மதத்தில் அப்படி ஒரு வழக்கம் இருக்கிறதாம்...யாராவது இது பற்றி தெரிந்த கிரிஸ்தவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி அதிகம் தெரியாதபடியால் பார்வையாளனாக மட்டும் நின்று கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

நாங்கள் கிழக்கு மாகணத்தில் இருக்கும் போது விபூதிப் புதனன்று பெடியங்கள்,பெட்டையளை கலைச்சு,கலைச்சு சாம்பலடிப்பாங்கள் பிறகு வெள்ளியன்று முட்டை அடிக்கிறவங்கள்[சாம்பலடியையும் பார்க்க முட்டையடி தான் கூட விழுகிறது பெட்டையளுக்கு]...லண்டனில் கூட முட்டையடிக்கிறதை சில இடங்களில் கண்ட ஞாபகம் ஆனால் ஏன் அடிக்கிறவர்கள் என்பதை மறந்து போய் விட்டேன் ஆனால் கத்தோலிக்க மதத்தில் அப்படி ஒரு வழக்கம் இருக்கிறதாம்...யாராவது இது பற்றி தெரிந்த கிரிஸ்தவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது

ஊரில் விபூதிப் புதனுக்கு இப்படி செய்பவர்கள் என்று நான் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை!

ஆனால் ஊரில் (ஏப்பிரல் பூல்) முட்டாள்கள் தினத்தன்று இப்படி நடக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். லண்டனில் ஹாலோவின் நாள் என்று வீட்டு ஜன்னல்கள், வாகனங்களுக்கும் அவிக்காத முட்டை/ அவித்த முட்டை என்று எறிவார்கள். ஆனால் அது சட்டப்படி குற்றமாகும்!

Link to comment
Share on other sites

நாங்கள் கிழக்கு மாகணத்தில் இருக்கும் போது விபூதிப் புதனன்று பெடியங்கள்,பெட்டையளை கலைச்சு,கலைச்சு சாம்பலடிப்பாங்கள் பிறகு வெள்ளியன்று முட்டை அடிக்கிறவங்கள்[சாம்பலடியையும் பார்க்க முட்டையடி தான் கூட விழுகிறது பெட்டையளுக்கு]...லண்டனில் கூட முட்டையடிக்கிறதை சில இடங்களில் கண்ட ஞாபகம் ஆனால் ஏன் அடிக்கிறவர்கள் என்பதை மறந்து போய் விட்டேன் ஆனால் கத்தோலிக்க மதத்தில் அப்படி ஒரு வழக்கம் இருக்கிறதாம்...யாராவது இது பற்றி தெரிந்த கிரிஸ்தவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது

ரதி நீங்கள் கிழக்கு மாகாணத்தில் எங்கே இருந்தீர்கள். அங்கு இப்படியெல்லாம் செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்கள் கிழக்கு மாகாணத்தில் எங்கே இருந்தீர்கள். அங்கு இப்படியெல்லாம் செய்வதில்லை.

மட்டக்களப்பில்

Link to comment
Share on other sites

கத்தோலிக்கர்கள் 'சாம்பல்' என்று அழைப்பதாக ஞாபகம்.

விபூதி, திருநீறு என்பது சைவசமயம் சார்ந்தது. விபூதிப் புதன் / திருநீற்றுப் புதன் என்று அழைப்பது பிழை.

ஆறுமுகநாவலர் ஐயாவை மேடைக்கு அழைக்கிறேன்.

Link to comment
Share on other sites

மட்டக்களப்பில்

மட்டக்களப்பு (நகரம்) என்றால் என்றால் புளியந்தீவா / கோட்டைமுனையா? அல்லது வடக்கே ஏறாவூர், செங்கலடி....... தெற்கே குருக்கள்மடம், களுவாஞ்சிக்குடி.... தப்பினால் எழுவாங்கரை படுவாங்கரை ஆகிய பிரதேசங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு (நகரம்) என்றால் என்றால் புளியந்தீவா / கோட்டைமுனையா? அல்லது வடக்கே ஏறாவூர், செங்கலடி....... தெற்கே குருக்கள்மடம், களுவாஞ்சிக்குடி.... தப்பினால் எழுவாங்கரை படுவாங்கரை ஆகிய பிரதேசங்களா?

டவுணில் தான் முக்கியமாக சென் மைக்கல் மாணவர்கள் தான் கூடுதலாக சிசிலியா பெண்கள் பாட‌சாலை மாணவிகள் மீது அடிப்பார்கள்

Link to comment
Share on other sites

டவுணில் தான் முக்கியமாக சென் மைக்கல் மாணவர்கள் தான் கூடுதலாக சிசிலியா பெண்கள் பாட‌சாலை மாணவிகள் மீது அடிப்பார்கள்

அந்தப் பகுதியில் நான் படித்ததில்லை. சென் மைக்கல் பொடியனுகளுக்கு, சிசிலியா கொன்வென்ட் பொட்டைகளுடன் ஒரே 'காண்டு' என்று தெரியும்.

வேறு இடங்களில் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை.

'ஏப்ரல் பூல்' தினத்தில் மாத்திரம், திரத்தித் திரத்தி அடிப்போம்.

Link to comment
Share on other sites

நாளை பெரிய வியாழன் இறுதி இராப்போசன நாள்

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் கிறீஸ்தவர்களினால் நாளை பெரிய வியாழன் எனப்படும் புனித வாரத்தின் யேசுக்கிறிஸ்துவின் இறுதி இராப்போசன நிகழ்வு அனுஸ்டிக்கப்படுகின்றது.

நற்கருணை அன்பின் வெளிப்பாடு; அருள் வாழ்வின் ஒற்றுமையின் சின்னம்; வாழ்வின் மையம், ஆன்மீக உறவு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

உலகின் மீது அன்பு கொண்ட இறைவன் தன் ஒரே மகனை உலகின் மீட்புக்காக உலகிற்கு அனுப்பினார். அன்பே உருவான இயேசு தம் வாழ்வாலும் வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினார். இவ்வுலக மனிதர்கள் நாம் செய்யும் பாவங்களுக்காக யேசு இறைவனின் சித்தத்தை ஏற்று தன்னையே பலிக்கடாவாக்கினார்.

இயேசு ஒருவரே சொன்னதை செய்தவரும் செய்ததை சொன்னவராகவும் திகழ்கின்றார்.

உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு கூட இருப்பேன் என்று சொன்னவர், இறுதியில் அன்பின் சின்னமாக தமது இருப்பின் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இது பெரிய வியாழன் அன்று நடைபெற்ற புனிதமான நிகழ்ச்சியாகும்.

மனிதம் மலர வேண்டும் மானுடம் வாழ வேண்டும் என்பதே இறை மகன் இயேசுவின் இலட்சியக் கனவு. கூடி வாழவும் பகிர்ந்து கொள்ளவும் பணித்தார். யேசுகிறிஸ்துவின் பிரசன்னமே நற்கருணை பிரசன்னம். உலக இறுதி வரை வாழ்வோம்.

அனைவரும் மீட்புபெற நற்கருணையை உண்டாக்கினார். அநீதியும் அடக்குமுறையும் அதிகார அத்துமீறல்களும் ஒடுக்குவதும் ஓதுக்குவதும் அறவே இல்லாத ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கவே இயேசு தன்னை அர்ப்பணித்தார்.

இயேசு தன்னுடைய மூன்றாண்டு காலப் பணிவாழ்வில் தன்னோடு இணைத்துக் கொண்ட பன்னிரு நண்பர்களோடு கடைசி இராப்போசனத்தை உட்கொண்டார். வாக்களித்தபடியே தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று இயேசு அறிந்திருந்தார். இராப்போசனம் நடைபெறலாயிற்று.

இயேசுவைக் காட்டிக் கொடுக்குமாறு சீமோனின் மகனான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கவே பசாசு தூண்டியிருந்தது.

நண்பர் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் ஆயிரம். நாம் இயேசுவை மறுதலித்தாலும் அவரை விட்டுப் பிரிந்தாலும் அவர் நம்மை வெறுப்பதில்லை. மாறாக அவர் நம்மை என்றும் தம் குழந்தைகளாகவே வாழ்விக்கின்றார். வழிநடத்துகின்றார். இறைமகனுக்கு ஏற்ற வாழ்வு நம்மிடம் இருக்கிறதா…? நாம் வாழும் சமூகத்தில் மற்றவர்களை நம்மிடம் பழகுபவர்களை எத்தனை இடர்ப்படுத்தியிருக்கின்றோம்..? நிந்தனை செய்திருக்கின்றோம்…….? மறுதலித்திருக்கின்றோம்…..? இவற்றை எல்லாம் நாம் விட்டுவிட வல்ல தேவன் நமக்கு மன்னிப்பு அளித்து நமக்கு புதுவாழ்வு தந்திடுவார்.

இன்றைய இராப்போசன நிகழ்விலே யேசு தம் சீடரின் பாதங்களை கழுவிக் கொள்கின்றார். தன்னையே தாழ்த்தி தன் சீடர்களுக்கு பணிவிடை செய்கின்றார் மனுமகன்.

நம்மவர்களில் எத்தனை பேர் இந்தத் தாழ்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் வாழ்கின்றோம். நவநாகரீகமான உலகிலே நம்மை நமது ஆளுமையை பணத்தை செல்வாக்கை காட்டி உலகில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் விட்டு விடக்கூடிய மனவலிமையையும் தேவையுள்ளோருக்கு பணி;விடை செய்யக்கூடிய மனத்தாழ்ச்சியையும் இறைமகன் யேசுவிடம் வேண்டி நிற்போம்.

இன்றைய காலகட்டத்தில் குருத்துவத்திற்கான அழைப்பு நிலைகள் அருகி வரும் நிலையையே நாம் காணக்கூடியதாக உள்ளது. லௌகீக வாழ்வை மறுத்து இறைவனுக்கு சேவை செய்யக்கூடிய குருக்கள் கன்னியாஸ்திரிகளுக்கான அழைப்பின் தேவை உலகிலே பெருகி வருகின்ற நிலையில் இந்தத் தேர்வுகளுக்கு ஏற்ற பணியாளர்கள் உலகில் அழைக்கப்பட வேண்டி நிற்போம்.

அத்துடன் இந்த இறைபணியில் இதுவரை சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஆயர்கள்;, அருட்தந்தையர், அருட்சகோதரிகள் தத்தம் பணியினை செவ்வனே ஈடுபடக்கூடிய உடல் உள வலிமையை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று வேண்டிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

இன்றைய பெரியவியாழன் நாளில் இறைமகன் எமக்கு உணர்த்தி கடப்பாடுகளை நாம் செவ்வனே உணர்ந்தவர்களாக நமது கடமைகளை முன்னிறுத்தி நம் முன்னுள்ள தேவைகளுக்காக அவரிடம் இரந்து மன்றாடுவோம்.

நன்றி: tamiluk.net

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

பெரிய வெள்ளி – சிலுவைத் தியாகம் – உன்னதத்தின் ஆறுதல்!

jesus4-300x300.jpg

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம். (எசாயா 53:5)

உலகம் முழுவதும் யேசுவின் மரணத்தை பல கோணங்களில் நினைவு கூர்வதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இன்று தேவன் உன்னைப்பார்த்து கேட்கும் கேள்வி நீ எப்படி எனது மரணத்தை நினைவு கூருகிறாய்? இதற்கான பதிலை நீயறிய இந்த எசாயாவின் புத்தகம் 53ம் அதிகாரம் முழுவதையும் மிக அமைதியாகவும், தியானத்தோடும் வாசித்து தியானிப்பாய் ஆகில் இந்த சிலுவையின் தியாகத்தை உன்னால் அறிய முடியும். அதின் மறைவில் மறைந்திருக்கும் தியாகத்தின் அன்பை உன்னால் மறக்கவோ, மறைக்கவோ முடியாது. 2010 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் இப்படியான ஒரு நாளைக் கண்டிராவிட்டால் மனுக்குலத்தின் கதி இன்று எப்படியிருக்கும் என்று நீயே சிந்தித்துப்பார்.

யேசு சிலுவையில் மரித்தார் என்பதல்ல பெரிய வெள்ளி. தேவன் தாம் படைத்த மக்கள் தன்னைமறந்து, தன்னுடைய வழிகளை விட்டு அவனவன் தன்தன் வழியிலே போய், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தேவமகிமையைக்காண முடியாமல் இருந்த பாவம் என்ற அந்த தடைச்சுவரை சிலுவை மரணத்தின் முPலம் தகர்த்து மனுக்குலத்திற்கு விடுதலையைத் தந்தநாள். பிரிவும் உறவும் மீண்டும் சந்தித்த நாள். இத்தனையும் நடந்து முடிய ஓர் தியாகம் நடக்க வேண்டியிருந்தது. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்.

வசனம் 10. ஒரு விசேசித்த பலி ஒன்றை செலுத்த வேண்டியிருந்தது. காரணம் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்று வேதம் மிகத்தெழிவாக கூறுகிறது. பிரிவும் உறவும் சந்தித்த இடத்திலே, பிரிந்திருந்த உறவை மீண்டும் சீர்படுத்த இரத்தம் சிந்தப்படவேண்டியதாக இருந்தது. அந்த இரத்தத்தினால் நமக்கு நித்திய ஜீவன் அருளப்பட்டது. யேசு தமது ஆத்துமா, சரீரத்தை உலக மக்களின் விடுதலைக்காக வருத்தப்படுத்த வேண்டியிருந்தது. காரணம் வசனம் 11 இவ்வாறு கூறுகிறது. அவர் தமது ஆத்தும வருத்தத்தின்பலனைக் கண்டு திருப்தியாவார்.

அவர் எவ்வாறன தனது ஆத்தும வருத்தத்தின் பலனை உன்னிடத்தில் காணவிரும்புகிறார்? அவர் கொடியசவுக்கினால் அடிக்கப்பட்டு, முள்முடி தரிக்கப்பட்டு, ஆணிகளால் கடாவப்பட்டு இரத்தம் தோய்ந்த கண்களுடன் சிலுவையில் தொங்கியவராக ஏதோவொன்றைக் காணவிரும்புகிறார். வெளிப்படுத்தல் 7:9,14 இவ்வாறு கூறுகிறது. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்@ இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். இந்த கூட்டத்தில் நீயும் ஒருவனாக இருக்கிறியா? அல்லது இந்தத்தியாகத்தை உணராதவனாக, அறியாதவனாக நீ இருக்கிறியா? சற்று சிந்தித்துப்பார். மேலே வாசித்த 9,14 ம் வசனங்களில் சொல்லப்பட்டவனாக, அதாவது யேசுக்கிறீஸ்த்துவின் இரத்தத்தால் பாவங்கள், சாபங்களிலிருந்து கழுவிப் பரிசுத்தமாக்கப்பட்டு தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக நீ நிற்பதைக் யேசு காணும்போது தனது ஆத்துமவருத்தத்தின் பலனைக் உன்னில் கண்டு; அவர் திருப்தியாவார். மாறாக அங்கு உன்னைக் காணவிட்டால் துக்கத்தோடு உன்னைப்பார்ப்பார். காரணம் நித்தியம் நித்தியமாக தேவனுடன் வாழும் வாழ்கையை உதாசீனம் செய்துவிட்டு, நித்திய நரக வாழ்க்கையை நீ அனுபவிக்கப் போகிறாய் என்று.

பிரியமான சகோதர சகோதரிகளே, கடவுள் மனிதர்களைப் படைத்தது, தம்மை நாம் அறிந்து நேசித்து சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவுமே என்று நாம் சிறுபிள்ளைகளாக இருந்த போது பாடசாலைகளில் சொல்லித்தந்ததை உங்களுக்கு இன்று நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்று தேவன் தம்மையும், தமது தன்மையையும் அறிந்து கொள்ளும் படியான ஓர் வேளையை உங்கள் முன் வைக்கிறார். அந்த வேளையை நீ உனதாக்கிக்கொள்ள விரும்பினால், உனக்கு அறிமுகமான கிறீஸ்த்தவர்களுடன் தொடர்புகொண்டு ஆலயத்திற்குப் போய் உன்னை ஒப்புக்கொடுத்து, தேவனை ஆராதிக்கிறபிள்ளையாகமாறு. அப்போது கர்த்தர் உன்னை பரிசுத்தப்படுத்தி புதுவாழ்வு தருவார்.

அன்பின் பரலோக பிதாவே, இன்று இந்த நல்ல தீர்மானத்தை எடுத்த அத்தனை பேருக்காகவும் உமக்கு நன்றி அப்பா. அவர்கள் எடுத்த தீர்மானத்தில் நிலைத்திருந்து, எசாயா 53:5இல் உள்ளபடி உம்முடைய தழும்புகளால் குணமாகிறோம் என்பதற்கிணங்க பாவம் என்கிற மரணத்தில் இருந்து நித்தியஜீவன் என்கிற புதுவாழ்வைப் பெற்று உம்மிலே நிலைத்திருந்து வாழ உதவி செய்யும் பிதாவே,

ஆமென்.

நன்றி: alaikal.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

oster-eier%2Bgross.png

இங்கு பெரிய வெள்ளிக்கு, முட்டைகளை.... தோட்டத்தில் ஒளித்து வைப்பார்கள். பிள்ளைகள் தேடி எடுப்பார்கள்.

இதற்கென்று கடைகளில்... கலர்,கலரா முட்டை விற்பார்கள்.

Link to comment
Share on other sites

முயலுக்கும், வண்ண முட்டைகளுக்கும் ஈஸ்டருக்கும் என்ன சம்மந்தம்?

இது கிறீஸ்தவர்களுக்கு, மிகப் புனிதமானதும், முக்கியமானதுமான ஒரு பெருநாள். கிறீஸ்துவின் உயிர்ப்பைக் குறிக்கும் ஒரு பெருநாள்.

அப்படியானால் , இந்த முயலும், வண்ண முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும், லில்லி மலர்களும் எங்கிருந்து வந்தன? இதற்கும் ஈஸ்டர் பெருநாளுக்கும் என்ன சம்பந்தம்?

இவையெல்லாம் மறுபிறப்பின் சின்னங்கள்!

வெள்ளைப்பனி படர்ந்த பூமியாக, இலைகளையெல்லாம் பறிகொடுத்து விட்டு மொட்டை மரங்களாக, பச்சை என்பதே அடியோடு பறந்துவிட்ட நிலையில் , மெல்ல மெல்லத் துளிர்த்து, பச்சைகளை இழுத்து வருவதுதான் வசந்தம்.

இந்த ஈஸ்டர் பெருநாள் வருவதும் பூமி தன்னைப் புதுப்பிக்க ஆரம்பிக்கும் வசந்த காலத்தில்தான்! இங்கே அஞ்ஞானியிசம் அல்லது அஞ்ஞஞானித் தத்துவம் என்பதுஆபிரகாமிய சமயங்களாக, ஈஸ்டர் என்றதும், அஞ்ஞானியிசம் (Paganism) பற்றி சில வரிகள் சொல்லியாக வேண்டும்.

இது கிறீஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய சமயங்களைச் சாராமல் , தொன்ம ஐரோப்பிய நம்பிக்;கைகளைக் குறிக்கின்றது. அஞ்ஞானியர் எனப்படுபவர் அத்தகைய நம்பிக்கை உடையோர். கிறீஸ்தவம் ஐரோப்பாவில் பரவ முன்னர் அஞ்ஞானிகள் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள்.

இந்த அஞ்ஞானிகளின் பெண் தெய்வத்தின் (Pagan Goddess) பெயர்தான் Eostre. இந்தத் தெய்வத்தைச் சுற்றித்தான் புதிய பிறப்பும், சூரிய வெப்பம் அதிகரிக்கும் காலமும் சுழன்று வந்தது. எனவே இந்த ஈஸ்டர் என்ற பெயரின் அடி இதுவாக இருக்கலாம்.

ஏராளமான குட்டிகளைப் போட்டு வேகமாகப் பல்கிப் பெருகுவது முயலின் சுபாவம். சினைப்படுதலும், பல்கிப் பெருகுதலையும்-அதாவது நிறைந்த வளச்சியைக் குறிப்பதுதான் முயல்.

இனி முட்டைக்கு வருவோம். எகிப்தியர்கள், பாரசீகத்தவர்கள் (இன்றைய ஈரானியர்கள்), இந்துக்கள், தமது வாழ்வு ஒரு பெரிய முட்டையிலிருந்துதான் திடமாக நம்பினார்கள். எனவே ஒரு புதிய வாழ்வு மலர்வதைக் குறிப்பதுதான் முட்டை.

12ம் நூற்றாண்டின் ஆங்கிலேய மன்னரான முதலாவது எட்வேர்ட், தனது குறிப்பேடு ஒன்றில் 450 முட்டைகளை ஈஸ்டர் பரிசுகளுக்காக நிறமூட்ட, 18பென்ஸ் செலவழித்ததாக ஒரு குறிப்பை எழுதி வைத்த சான்றுகள் இருக்கின்றன. கிறீஸ்தவர்களாக பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழந்திருந்த வட ஆபிரிக்க இனமொன்று, வண்ண முட்டைகளை ஈஸ்டர் பெருநாளில் கைமாறிக் கொண்ட குறிப்புகள் இருக்கவே செய்கின்றன.

முன்னைய காலத்தில், நீண்ட மாரி காலம் என்றால், உணவுத் தட்டுப்பாடான காலமாகவே இருந்தது. இந்த நிலையில் ஈஸ்டர் முட்டை ஒன்று கிடைப்பது என்பது அப்பொழுதெல்லாம் பெரிய விடயமாகவே இருந்து வந்திருக்கின்றது. ஈஸ்டர் பெருநாளுக்கு முன்பு வரும் தபசு காலத்தில் கிறீஸ்தவர்கள் மாமிசம் உண்ணுவதிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்கள். நீண்ட இடைவெளியின் பின்னர் முட்டையோ அல்லது மாமிசமோ உண்பதற்கு கிடைக்கும் முதல் வாய்ப்பு ஈஸ்டர் பெருநாள்தான்.

நன்றி:tamil6.ch

ஜேர்மனியில் ஒருவர் 10,000 முட்டைகளை கொண்டு ஒரு அப்பிள் மரத்தை அலங்கரித்திருக்கின்றார்.

http://www.telegraph...G39oR3XnvfMpJFu

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சைபாருங்கோ...இந்த அநியாயத்தை...தமிழினி அக்கா ஒருமாதிரி மெளத்தைத் திறந்திட்டாங்கள்... அழகான திரி...நன்றி அக்கா இணைப்பிற்கு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.