Jump to content

இன்னொரு பிரிவு வேண்டாமடா....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு பிரிவு வேண்டாமடா....

கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை......

நீ உன்னையே எரிக்கும் உரிமையை

உனக்கு யார் தந்தது.........

நம் தமிழ் தலைவனா....

இருக்கவே இருக்காது.....

அவன் அக்கினிக் குஞ்சுவளர்த்து

எதிரியையல்லவா எரிக்கச் சொன்னவன்......

ஆறுகோடி தமிழினம் தமிழ் நாட்டில்

நீ தமிழுக்காக எரிந்து போ என்று

அரசியல் வாதியா சொன்னான்.....

ஆம் சொன்னாலும் சொல்லுவான்....

தான் வாழ

எவனையும் எரிக்கத் தயங்காதவன்....

உன் தமிழ் பற்றா

உன்னை நீயே எரிக்கத் தூண்டியது.....

பற்றுள்ளவன் எரிந்து போனால்

பற்றியெரியும் தமிழை

யார் காப்பாற்றுவது?

பற்றைக் காடெல்லாம் போட்டு

உன் தொப்புள் கொடியுறவை

பாழாய்ப் போனவன் எரிக்க

நீயோ பற்றவைககும் திராவகத்தை ஊற்றி

உன்னையே எரித்ததில் என்ன நியாயம்....

தன் எதிரியில் ஒருவன் இறந்ததாய்

எதிரியல்லா எக்காளமிடுகிறான்.....

எதிரியைச் சிரிக்கவைத்து

எங்களை அழவைக்க நீ ஏன் நினைத்தாய்....

உன் உடலில் பற்றியதை

ஆறுகோடி தமிழர் மனதில்

பற்ற வைத்திருந்தால்

எதிரியல்லா பஸ்பமாகியிருப்பான்....

ஏனடா,,...

உன் பெற்றேரின் மனதயும் கொன்று.....

எங்களின் மனதையும் கொன்று.....

உன்னையும் கொன்று......

எதிரிக்கு சிறிது ஆயுளை பரிசளித்தாய்...

தூக்குக் கயிற்றின் பயம்

எதிரியை துரத்த ஆரம்பிக்க

கயிற்றை அவன்

கழுத்தில் இறக்குவதை விடுத்து

நீ ஏன் கட்டையில் போனாய் என்றுதான்

இப்பவும் புரியவில்லை......

புலியாய் நின்றவளின்

புனிதம் கலைத்து

அவளுடலை காக்கை கூட பார்த்து

கொத்த அஞ்சும்

கொடூரம் புரிந்தவன்

உயிருடன் இருக்க......

மண்ணில் புதைந்த நம் மழலைகளின்

நினைவுகள் எங்கள்

மனதை விட்டகல மறுக்க......

இறுதி மூச்சுவரை போராடி

ஈழ மண்ணிலேயே த்ம்முயிரை

மணணோடு மண்ணாக்ககிய

எங்கள் மாவீரர் நினைவுகள்

எங்களைப் பற்றியிருக்க....

இன்னும் பதவி நாற்ற்காலிக்கு

போட்டி போடும்

தமிழ் பற்றாளரும்

பலர் இருக்க.......

நீ மட்டும் ஏனடா.....

எம் இனத்தின் நினைவுகளால்

மனதில் உன்னை எத்தனை தடவை

எரித்திருப்பாய் என்று

உன் உடல் எரிந்த பின்புதான்

எம்மால் புரியமுடிந்ததடா.....

கிருஸ்ணமூர்த்தியெனும்

பசசைத் தமிழனொருவன்

இறந்துவிட்டான் எனும் கவலையுடன்

உன் பட்டுடலும் எரிந்த சோகமெண்ணி

என் மனதால்...

உன் எரியும் ஆன்மாக்கு

பால் வாக்கிறேன்......

உன் எரியும் ஆன்மபலத்தை

எமக்கும் பிரித்துத் தா....

கடைசியோட்டத்தில் நிற்கிறோம்.....

எதிரியைக் கொழுத்திவிட்டு

எங்கள் கொடி பிடிக்கும் நேரம்

நெருங்கிக்கொண்டிருக்கிறது....

இளங்கவி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமே ஜெயம் என்னும்

புத்தகத் தத்துவத்தில்

வளர்ந்தவர்கள் இவர்கள்.

நித்திய வாழ்க்கையில்

சத்தியம் தோற்பதைக்

காணச்சகிக்காது

தன்னுயிரை மாய்க்கின்றார்!

எதிரிகளின் எண்ணிக்கையில்

இன்னுமொன்று குறைந்ததென

எக்காளமிடுவான்,

எங்கள் எதிரி.

இனியும் இது வேண்டாம்!

எங்கள் உறவுகளே!!!

நம் தமிழ் தலைவனா....

இருக்கவே இருக்காது.....

அவன் அக்கினிக் குஞ்சுவளர்த்து

எதிரியையல்லவா எரிக்கச் சொன்னவன்

கவிதை மனத்தில் சுமையாய் கனக்கின்றது இளங்கவி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமே ஜெயம் என்னும்

புத்தகத் தத்துவத்தில்

வளர்ந்தவர்கள் இவர்கள்.

நித்திய வாழ்க்கையில்

சத்தியம் தோற்பதைக்

காணச்சகிக்காது

தன்னுயிரை மாய்க்கின்றார்!

எதிரிகளின் எண்ணிக்கையில்

இன்னுமொன்று குறைந்ததென

எக்காளமிடுவான்,

எங்கள் எதிரி.

இனியும் இது வேண்டாம்!

எங்கள் உறவுகளே!!!

கவிதை மனத்தில் சுமையாய் கனக்கின்றது இளங்கவி!!!

Punkayooran

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

களத்தில் எங்கள் காவலர்கள் நில்லாது போனதால் நிகழ்ந்த / நிகழ்ந்துகொண்டிருக்ககும அழிவுகளைப் பார்த்தீர்களா? அதேபோல கிருஸ்ணமூர்த்தி போன்ற தம் இனத்தை நேசிப்பவர்கள் எங்கள் இனத்தில் இல்லாது போனால் எங்கள் இனம் என்னாவது என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட வரிகள் இது....

இனத்தின் பற்று மேலோங்கி முத்துக்குமார், முருகதாஸ் வரிசையில் இன்று கிருஸ்ணமூர்த்திபோல எங்கள் சீமானும் முடிவெடுத்திருந்தால் தமிழ்துரோகிக்கூட்ட காங்கிரஸ்காரர்கள் இன்று தமிழ்நாட்டில் ஆட்டம் காணுமளவுக்கு செய்திருக்கமுடடியுமா?

இனப்பற்றை எதரியிடம் காட்டி அவனை ஒழிக்கும் முயற்சியில் இறங்குங்கள் உறவுகளே என்பதுதான் எல்லோரது விருப்பமும்....

நன்றிகள்....

Link to comment
Share on other sites

Punkayooran

இனத்தின் பற்று மேலோங்கி முத்துக்குமார், முருகதாஸ் வரிசையில் இன்று கிருஸ்ணமூர்த்திபோல எங்கள் சீமானும் முடிவெடுத்திருந்தால் தமிழ்துரோகிக்கூட்ட காங்கிரஸ்காரர்கள் இன்று தமிழ்நாட்டில் ஆட்டம் காணுமளவுக்கு செய்திருக்கமுடடியுமா?

இனப்பற்றை எதரியிடம் காட்டி அவனை ஒழிக்கும் முயற்சியில் இறங்குங்கள் உறவுகளே என்பதுதான் எல்லோரது விருப்பமும்....

நன்றிகள்....

ஆம் வேண்டாம் இன்னொரு தீக்குளிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பற்றுள்ளவன் எரிந்து போனால்

பற்றியெரியும் தமிழை

யார் காப்பாற்றுவது?..........................

..உணரவைக்கும் நியாயமான் கேள்வி ........

.....உணர்ச்சி மிகு கவிதைக்கு நன்றி .

அடிகக்டி வாருங்கல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Punkayooran

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

களத்தில் எங்கள் காவலர்கள் நில்லாது போனதால் நிகழ்ந்த / நிகழ்ந்துகொண்டிருக்ககும அழிவுகளைப் பார்த்தீர்களா? அதேபோல கிருஸ்ணமூர்த்தி போன்ற தம் இனத்தை நேசிப்பவர்கள் எங்கள் இனத்தில் இல்லாது போனால் எங்கள் இனம் என்னாவது என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட வரிகள் இது....

இனத்தின் பற்று மேலோங்கி முத்துக்குமார், முருகதாஸ் வரிசையில் இன்று கிருஸ்ணமூர்த்திபோல எங்கள் சீமானும் முடிவெடுத்திருந்தால் தமிழ்துரோகிக்கூட்ட காங்கிரஸ்காரர்கள் இன்று தமிழ்நாட்டில் ஆட்டம் காணுமளவுக்கு செய்திருக்கமுடடியுமா?

இனப்பற்றை எதரியிடம் காட்டி அவனை ஒழிக்கும் முயற்சியில் இறங்குங்கள் உறவுகளே என்பதுதான் எல்லோரது விருப்பமும்....

நன்றிகள்....

நன்றிகள் இளங்கவி!!! இதுவே தான் எனது விருப்பமும்! கவிதை நன்றாக உள்ளது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் வேண்டாம் இன்னொரு தீக்குளிப்பு

Jil

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு....

எல்லோரின் விருப்பமும் இதுதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பற்றுள்ளவன் எரிந்து போனால்

பற்றியெரியும் தமிழை

யார் காப்பாற்றுவது?..........................

..உணரவைக்கும் நியாயமான் கேள்வி ........

.....உணர்ச்சி மிகு கவிதைக்கு நன்றி .

அடிகக்டி வாருங்கல் .

நிலாமதி அக்காவுக்கு.....

உஙகள் கருத்துக்கு மிக்க நன்றி....

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வர முயற்சிக்கிறேன் அக்கா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் இளங்கவி!!! இதுவே தான் எனது விருப்பமும்! கவிதை நன்றாக உள்ளது!!!

உங்களுக்கும் எனது நன்றிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பிரிவு வேண்டாமடா....

கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை......

உன் உடலில் பற்றியதை

ஆறுகோடி தமிழர் மனதில்

பற்ற வைத்திருந்தால்

எதிரியல்லா பஸ்பமாகியிருப்பான்....

ஏனடா,,...

உன் பெற்றேரின் மனதயும் கொன்று.....

எங்களின் மனதையும் கொன்று.....

உன்னையும் கொன்று......

எதிரிக்கு சிறிது ஆயுளை பரிசளித்தாய்...

எங்கள் ஒவ்வொருவரின் மனதிலிருந்தும் வெளிப்படும் உண்மையான வரிகள் இவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி, நெஞ்சை தொடும் கவிதை. அதற்குள் நீங்கள் புகுத்தியிருக்கும் நியாயமும் அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் ஒவ்வொருவரின் மனதிலிருந்தும் வெளிப்படும் உண்மையான வரிகள் இவை

valvaizagara

இப்படியான பலரின் மன நிலையோடுதான் நானும் இருப்பதால் என் வரிகளையும் உங்கள் வரிகளாய் ஏற்க முடிந்தது....

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பிரிவு வேண்டாமடா....

கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை......

எம் இனத்தின் நினைவுகளால்

மனதில் உன்னை எத்தனை தடவை

எரித்திருப்பாய் என்று

இளங்கவி.....

ஒவ்வொரு தமிழனின் இன்றையநிலை

எம்மை எரிப்பதா?

எதிரியை எரிப்பதா?

நிச்சயம் முடிவு இரண்டில் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி, நெஞ்சை தொடும் கவிதை. அதற்குள் நீங்கள் புகுத்தியிருக்கும் நியாயமும் அழகு.

KuLavi

மிக்க நன்றி உங்கள் கருதத்துக்கு....

உரிமையை இழந்த இனம் அதைப் திரும்பப்பெறும் போராட்டத்தில் எவ்வளவோ அழிவைச் சந்தித்திருக்கும் நிலையில் எங்களுக்கு ஆதரவாய் நிற்கவேண்டிய எங்கள் தொப்புள்கொடியுறவுகள் தங்களைத் தாங்களே அழிப்பதன் வலிதான் இந்த வரிகளாயின....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு தமிழனின் இன்றையநிலை

எம்மை எரிப்பதா?

எதிரியை எரிப்பதா?

நிச்சயம் முடிவு இரண்டில் ஒன்றுதான்.

விசுகு அண்ணாவுக்கு

கருத்துக்கு மிக்க நன்றிகள்....

நிச்சயம் இரண்டாவது தெரிவுதான் அவசியம்.....

Link to comment
Share on other sites

  • 1 year later...

[size=4]உன் உடலில் பற்றியதை[/size]

[size=4]ஆறுகோடி தமிழர் மனதில் [/size]

[size=4]பற்ற வைத்திருந்தால்[/size]

[size=4]எதிரியல்லா பஸ்பமாகியிருப்பான்....[/size]

இந்த வரிகள் என் மனதை பற்றவைப்பது போல ... ஆறுகோடி தமிழனின் மனதிலும் பற்றட்டும் ....

நட்புடன்

ஏழுமலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]உணர்ச்சி மிகு கவிதை[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.