Jump to content

பட்டிமன்றம் தொடர்வோமா???


Recommended Posts

யாழ்கள உறவுகளே!!!

முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா??

நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம்

இதற்கு நீதிபதியாக யாரை தெரிவிக்கலாம் எனவும் கூறவும். பங்கு பற்ற விரும்புவோர் உங்கள் பெயர்களை இங்கு பதியவும். உங்களுக்கு விருப்பமான தலைப்பையும் சொல்லவும் இல்லாதவிடத்து தலைப்பை நான் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 1.5k
  • Created
  • Last Reply

அண்மைக்காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது கீழுள்ள தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வந்தன. இதை யாராவது வந்து தெரிவு செய்யலாம்..இல்லையெனில் எந்த தலைப்பை கூட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் அதை வைத்து..தெரிவு செய்யுங்கள்..

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

* வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தங்கள் துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர் பார்ப்பது..சரியா? தவறா?

இந்தத்தலைப்புக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் விவாதிக்கப்படுவதை கண்டு தான்..இந்த பட்டிமன்றத்துக்கு தலைப்பாக போட நினைத்தேன். அதை விட்டு தவறான கோணத்தில் பார்ப்பதற்காகவோ..இல்லை தவறான கருத்துக்களை சேர்ப்பதற்காகவோ நான் இவற்றை போடவில்லை..என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

Link to comment
Share on other sites

ஒரு வித்தியாசமாக சின்னப்புவை நீதிபதியாக நியமிக்கலாம்.

நான் வளி மொழிகிறேன்... அதோடு சாத்திரியையும் போடவும்.... முகத்தார் இவர்களின் கண்காணிப்பாளர்... சரியா...??? :P :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஜாலியாக இருக்கும் சின்னப்பு மப்பிலையும் சரியான தீர்ப்புத்தான் சொல்லுவார்

முதலாவது தலைப்பை தேர்வு செய்கின்றேன்.

Link to comment
Share on other sites

அண்மைக்காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது கீழுள்ள தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வந்தன. இதை யாராவது வந்து தெரிவு செய்யலாம்..இல்லையெனில் எந்த தலைப்பை கூட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் அதை வைத்து..தெரிவு செய்யுங்கள்..

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

* வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தங்கள் துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர் பார்ப்பது..சரியா? தவறா?

இந்தத்தலைப்புக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் விவாதிக்கப்படுவதை கண்டு தான்..இந்த பட்டிமன்றத்துக்கு தலைப்பாக போட நினைத்தேன். அதை விட்டு தவறான கோணத்தில் பார்ப்பதற்காகவோ..இல்லை தவறான கருத்துக்களை சேர்ப்பதற்காகவோ நான் இவற்றை போடவில்லை..என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

நல்ல, ஆக்கபூர்வமான விவாதத்தை தொடரக்கூடிய தலைப்புகள் பிரியசகி.

இரண்டாவது தலைப்பை இன்னும் தெளிவாக வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.

* (புலம் வாழ்) தமிழ் இளைஞர்கள் தமது வருங்கால வாழ்க்கைத்துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர்பார்ப்பது சரியா? தவறா?

* (புலம் வாழ்) தமிழ் இளைஞர்கள் தமது வருங்கால வாழ்க்கைத்துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறார்களா? எதிர்பார்க்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் வாறன் என்னையும் சேத்துக்கொள்ளுங்கோ...

விபரம்

பெயர் சோபனா

பட்டி மன்றத்தில் இணைய ஏதாவது தகைமை வேனுமா?? அப்பிடி என்றா நான் வரல...

Link to comment
Share on other sites

அண்மைக்காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது கீழுள்ள தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வந்தன. இதை யாராவது வந்து தெரிவு செய்யலாம்..இல்லையெனில் எந்த தலைப்பை கூட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் அதை வைத்து..தெரிவு செய்யுங்கள்..

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

* வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தங்கள் துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர் பார்ப்பது..சரியா? தவறா?

இந்தத்தலைப்புக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் விவாதிக்கப்படுவதை கண்டு தான்..இந்த பட்டிமன்றத்துக்கு தலைப்பாக போட நினைத்தேன். அதை விட்டு தவறான கோணத்தில் பார்ப்பதற்காகவோ..இல்லை தவறான கருத்துக்களை சேர்ப்பதற்காகவோ நான் இவற்றை போடவில்லை..என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

அக்கா நல்ல தலைப்புகள் உங்கள் அனைவரது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். :lol::D:D:D

என்னால் முடிந்தளவு நானும் பங்கு கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ட பேரையும் பதியுங்கப்பா.....

பட்டி மன்றங்களில் சிலவேளைகளில் எனது தனிப்பட்ட கருத்துக்கு முரணான கருத்துக்காக வாதிட வேண்டி இருக்கும். அது எனக்கு கொஞ்சம் கஸ்டம். இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

நான் பிரியின் இந்த தலைப்பை தெரிவு செய்கிறேன்.

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

Link to comment
Share on other sites

ரசிகை. நல்ல முயற்சி..

எனக்கு ப்ரியின் இந்த தலைப்பு தான் பிடித்திருக்கு. ஆகவே என்னையும் உங்கள் பதிவில் சேர்த்துக்கொள்ளுங்கள். எதாவது தகைமைகள் பார்ப்பதென்றால் சோபானா போல் நானும் ஸ்கேப்

புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

Link to comment
Share on other sites

ஆஹா நல்ல தலைப்புகள் தான் ...சரி துவங்குங்க .... நானும் வந்து முயற்சி செய்யுறன் இப்படியான பட்டிமன்ற தலைப்பின் கீழ் விவாதித்ததும் இல்லை வாதடியதும் இல்லை இருந்தாலும் முயற்சி செய்து எனது கருத்துக்களையும் எழுதுகிறேன் ...தொடருங்கள் ரசி அக்கா... :P

Link to comment
Share on other sites

புலம்பெயர் இளையோர் தலைப்பையே எடுக்கலாமென நினைக்கின்றேன்.. அப்படி அதை தெரிவு செய்வதாயின் நன்மை என்ற அணி சார்பாக நானும் பங்கு கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

ஒரு வித்தியாசமாக சின்னப்புவை நீதிபதியாக நியமிக்கலாம்.

:mrgreen: ஓய் ளொள்ளா

நமக்கு வெளியில நிண்டு சாணி அடிக்கிறது எண்டா ஓகே இப்ப நானும் மச்சானும் தனிய அடிக்கவேண்டியது இல்லை நம்மட லக்கிலுக்கும் நமக்கு கை தருவார்

:P :P :P :P :P :P :P :P :P :P

ஓய் நான் சொல்லுற ஆளைத்தலைவராப்போடுங்கோ அது ஒரு பெண்ணாக இருக்கட்டும் தமிழினியை நான் முன்மொழியிறன்

:P :P :P :P :P :P

:P :P :P :P

Link to comment
Share on other sites

நல்ல விடயம். வாழ்த்துக்கள்.

ப்ரியசகியின் தலைப்புகள் காலத்தோடு ஒட்டி விவாதிக்கப்பட வேண்டியவையே.

முதலாவது தலைப்பில் விவாதித்தால், தமிழினியை அல்லது இளைஞனை நடுவராக போடலாம்.

ஆனால்.. :P இரண்டாவது தலைப்பில் விவாதித்தால், இளைஞனை போட்டுடாதீங்கப்பா.. ஆள் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு சொல்லிடுவாரு.. :P :D

Link to comment
Share on other sites

நானும் வாறன் என்னையும் சேத்துக்கொள்ளுங்கோ...

விபரம்

பெயர் சோபனா  

பட்டி மன்றத்தில் இணைய ஏதாவது தகைமை வேனுமா?? அப்பிடி என்றா நான் வரல...

ஜயோ நீங்க மாறி வந்திட்டிங்க...இது சமையல் பகுதி இல்ல....பட்டிமண்றம்பா... :oops: :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் நான் சொல்லுற ஆளைத்தலைவராப்போடுங்கோ அது ஒரு பெண்ணாக  இருக்கட்டும் தமிழினியை நான் முன்மொழியிறன்  

:P  :P  :P  :P  :P  :P  

:P  :P  :P  :P

பெண்ணியம் பற்றி விவாதிப்பது என்றால் தமிழினியக்காவை நடுநிலையாகப் போடுவதை எதிர்கின்றேன். பிறகு தீர்ப்பு எப்படி வரும் என்பதை இப்போதே சொல்லி விடலாம்.

மற்றய விடயங்கள் ஒகே :wink: :D

Link to comment
Share on other sites

நல்ல விடயம். வாழ்த்துக்கள்.

ப்ரியசகியின் தலைப்புகள் காலத்தோடு ஒட்டி விவாதிக்கப்பட வேண்டியவையே.

முதலாவது தலைப்பில் விவாதித்தால், தமிழினியை அல்லது இளைஞனை நடுவராக போடலாம்.

ஆனால்..  :P  இரண்டாவது தலைப்பில் விவாதித்தால், இளைஞனை போட்டுடாதீங்கப்பா.. ஆள் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு சொல்லிடுவாரு..  :P  :D

நடுவர்களாக்கி விவாதிகளை ஓரம் கட்டாதீங்கோ..! நீங்கள் தான் சரியான ஆள்.. எங்க ஓடுறீங்கள்..! மற்றது நடுவருக்கு மிகவும் அனுபவமும் நிதானமும் விவதாப் பொருள் தொடர்பில் அகலப்பார்வையும் வாதிகளுடன் நட்புறவும் அவசியம்..! உணர்ச்சி வசப்படக் கூடியவர்களுக்கும் நடுவர் தகமைக்கும் வெகுதூரம்..! இவற்றை கருத்தி நடுவர்களைத் தீர்மானிப்பதே சிறந்தது.. சோழியான் அண்ணா..! :wink: :P :lol:

நடுவர்களுக்கு பயிற்சிக்கு என்றால் உங்கள் பிரேரணை ஓக்கே...! :wink: :P

Link to comment
Share on other sites

நல்ல விடயம் சும்மா களத்திலை அலட்டல் இல்லாமல் எதாவது பிரயோசனமாக கருத்தாடுவது நல்லம் அந்த வகையில் சமூகத்துக்கு உதவும் எதாவது கருத்துக்களை வைத்து தொடங்குங்கோ ............. இதில் அணிகளாக பிரிக்கத்தேவையில்லை விவாதிப்பவர்கள் யார் எண்டாலும் வந்து தமது தரப்பு கருத்துக்களை தெரிவிச்சால் நல்லம் என நினைக்கிறன் அப்படியே நடுவருக்கு ஒருவரைப் போடாமல் ஒரு குழு மாதிரி போட்டால் அவர்கள் தங்களுக்குள் அலசி ஆராந்து முடிவைத் தெரிவிக்கலாம் இதனால் பிறகு தலைவராக இருந்தவருக்கு பிரச்சனை வராது........(நான் எல்லாம் அழகி போட்டிகளில் நடுவராக பங்குபற்றிய அனுபவத்தை வைச்சுச் சொல்லுறன் கேளுங்கோ....அங்கு 6 7 பேர்தான் நடுவராக இருக்கிறது.)

Link to comment
Share on other sites

நானும் பங்குபற்ற வருகிறேன், முன்புபோல் அல்லாமல் இதையாவது விரைவாகத் தொடங்குங்கப்பா.

இப்போதைக்கு "* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" என்ற தலைப்பில தொடங்க விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

நல்ல விடயம் சும்மா களத்திலை அலட்டல் இல்லாமல் எதாவது பிரயோசனமாக கருத்தாடுவது நல்லம் அந்த வகையில் சமூகத்துக்கு உதவும் எதாவது கருத்துக்களை வைத்து தொடங்குங்கோ ............. இதில் அணிகளாக பிரிக்கத்தேவையில்லை விவாதிப்பவர்கள் யார் எண்டாலும் வந்து தமது தரப்பு கருத்துக்களை தெரிவிச்சால் நல்லம் என நினைக்கிறன் அப்படியே நடுவருக்கு ஒருவரைப் போடாமல் ஒரு குழு மாதிரி போட்டால் அவர்கள் தங்களுக்குள் அலசி ஆராந்து முடிவைத் தெரிவிக்கலாம் இதனால் பிறகு தலைவராக இருந்தவருக்கு பிரச்சனை வராது........(நான் எல்லாம் அழகி போட்டிகளில் நடுவராக பங்குபற்றிய அனுபவத்தை வைச்சுச் சொல்லுறன் கேளுங்கோ....அங்கு 6 7 பேர்தான் நடுவராக இருக்கிறது.)

முகத்தார் உங்கள் ஆலோசனை கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்..! தனித்தலைமை சர்வாதிகாரம் என்ற நிலைக்கு கொண்டு போகவும் வாய்ப்பிருக்கு..குறிப்பா விவாதங்களில்..இது நடப்பது சாதாரணம்..! அணி பிரிக்காட்டி...அடிபாடு வராது.. அடிபாடு வராட்டி ஆக்கபூர்வமா ஒன்றும் வராது.. சோ...அணி பிரிக்கலாம்.. இல்லாட்டி எல்லாரும் ஓர் பக்கமே கருத்து வைக்க நிப்பினம்..! ஏற்கனவே இங்க எதிர்கருத்து நிலைபாடுகள் எடுத்து வாங்கிக்கட்டின அனுபவத்தில சொல்லுறம்..! நடுவர் விடயத்தில் முகத்தார் கூறியது போல.. கூட்டு நடுவர் வைக்கலாம்...(பிறகு நடுவர்களுக்க பிரச்சனை வராட்டிச் சரி..! ). ஆனால் ஒன்று நடுவர்கள் அங்கினை இங்கினை தங்களுக்க டிஸ்கஸ் பண்ணிட்டு தீர்ப்புச் சொல்லக் கூடாது..! விவாதத்தில் வந்ததை வைச்சு சொல்லனும்..! வைச்சுத்தான் பாருங்களேன்..புது அனுபவமா வேற இருக்கும்..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணி பிரிக்கப்பட்டால் எமக்கு விருப்பமற்ற கருத்துக்களுக்காக விவாதிக்க வேண்டி வரும். எனவே விரும்பிய அணிக்குள் எவராவது இணைந்து கொள்ளலாம். ஆனால் முதலில் தொடங்கியதன் சார்பாகவே செல்லவேண்டும். பிறகு ஆதரவு கூடுது என்று மற்றப்பக்கம் சாயக் கூடாது. :wink: :D

Link to comment
Share on other sites

ஆரம்பத்திலேயே விரும்பின அணில அமர்த்திட்டாப் போச்சு..! அதுக்காக எல்லாரும் ஓர் அணில நிக்கிறதில்லை. சமனா அண்டஸ்ராண்டிங்கோட நில்லுங்கோ..! :wink: :D

கூட்டு நடுவரில...ஆண்களும் பெண்களும் சமனா அங்கம் வகிக்கலாம்..!

சோழியான் அண்ணா..சண்முகி அக்கா.. முகத்தார்..தமிழினி இவர்களை அமர்த்தலாம்..! உங்கள் யோசனைகள் எப்படி..??! விவாதிக்கவும் ஆக்கள் வேணும்.. அதையும் கருத்தில் வைச்சு பிரேரிங்கோ..! :P :idea:

Link to comment
Share on other sites

நடுவர்களாக்கி விவாதிகளை ஓரம் கட்டாதீங்கோ..! நீங்கள் தான் சரியான ஆள்.. எங்க ஓடுறீங்கள்..! மற்றது நடுவருக்கு மிகவும் அனுபவமும் நிதானமும் விவதாப் பொருள் தொடர்பில் அகலப்பார்வையும் வாதிகளுடன் நட்புறவும் அவசியம்..! உணர்ச்சி வசப்படக் கூடியவர்களுக்கும் நடுவர் தகமைக்கும் வெகுதூரம்..! இவற்றை கருத்தி நடுவர்களைத் தீர்மானிப்பதே சிறந்தது.. சோழியான் அண்ணா..! :wink: :P :lol:

நடுவர்களுக்கு பயிற்சிக்கு என்றால் உங்கள் பிரேரணை ஓக்கே...! :wink: :P

இளைஞர்களுக்கேற்ற தலைப்பு வரப்போவது போல தெரிகிறது.. ஆகவே.. நானும் களத்தில குதிக்க கொடுக்குக் கட்டிப்போட்டன்.. :P :lol: இந்தமுறை மோதலோ மோதல் கருத்து மோதல்தான். :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.