Jump to content

நீயுசிலாந்து செல்லும் இலங்கையணி


Recommended Posts

நீயுசிலாந்து செல்லும் இலங்கையணி

சென்ற மாதம் இந்தியாவுடன் நடந்த ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய இலங்கையணி உலக தர வரிசைபட்டியலில் 7வது இடத்தை அடைந்திருக்கிறது இந்த நிலைணில் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த வாரம் நீயுசிலாந்து பயணமாகிறது வரும் 31ம் திகதி போட்டி ஆரம்பமாகிறது இவ்வணியில் சனந் ஜெயசூரியா மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தியாவுடனான ஒருநாள் போட்டியில் இவர் சரியாக விளையாடதால் டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டிருந்தது தெரிந்ந விடயம் இதைப்பற்றி அவர் கூறும் கருத்து

s-1.jpg

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரசிகர்கள் பெருமைப்படும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இனிமையான நாடு நியூஸிலாந்து. அங்கு தான் 15 ஆண்டுகளுக்கு முன் எனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன். மறக்கமுடியாத அனுபவம் அது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முந்தைய ஒருநாள் தொடரில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அதே மாதிரியான முயற்சி இப்போதும் தொடரும் என நம்புகிறேன்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டேன். அணியிலிருந்து வெளியேறுவதை யாரும் விரும்பமாட்டார்கள். என்றாலும், அந்த இடைவெளி, எனது திறமையை மேம்படுத்திக் காட்ட உந்துதலாக அமைந்துள்ளது. அணிக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் ஜயசூரியா.

கடந்த ஆண்டு இலங்கையை கடல்கோள் தாக்கியபோது இலங்கை அணியினர் நியூஸிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். பேரழிவை அறிந்ததும், போட்டியை கைவிட்டு உடனடியாக நாடு திரும்பினர்.

நியூஸிலாந்து தொடர் முடிந்ததும் அவுஸ்திரேலியா செல்கிறது இலங்கை அணி. அங்கு, ஜனவரி 13 முதல் முத்தரப்பு தொடரில் பங்கேற்கிறது. தென் ஆபிரிக்கா அத்தொடரில் பங்கேற்கும் மற்றொரு நாடு.

thinakkural

Link to comment
Share on other sites

அட நாங்க இருக்கிற இடத்திற்கு வருகினம்...

சனத் என்னக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரார். :lol::D:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியில் மீண்டும் இணைந்துள்ளார் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

சகோதரம் :twisted: :twisted: :twisted: :twisted:

:twisted: :D:lol::lol::D:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்

:wink: :wink: :wink: :wink:

என்னத்தை அப்படி நினைக்கின்றீர்கள்?? :wink: :lol:

Link to comment
Share on other sites

நியுசிலாந்து Vs இலங்கை - 1வது போட்டி

நீயுசிலாந்து 7 விக்கட்டுகளால் வெற்றி

இலங்கை நீயுசிலாந்து அணிகளுக்கிடையிலான 1வது ஒருநாள் போட்டி இன்று Queentown Event centre நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றி பெற்ற நீயுசிலாந்து அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது இதன் பிரகாரம் துடுப்பெடுத்து ஆடிய இலங்கையணி மிகப் பரிதாபமாக 47.2 ஓவர்களில் சகலவிக்கட்டுகளை இழந்து 164ஓட்டங்களை மாத்திரமே பெற்றது அணி சார்பாக

TM Dilshan - 42 Runs

MS Atapattu- 35 Runs

இதுக்கு பதிலளித்தாடிய நீயுசிலாந்து அணி 37.2 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரமே இழந்து 166 ஓட்டத்தைப் பெற்றது நீயுசிலாந்து அணி சார்பில்

PG. Fulton - 70 Runs *

JM.How - 58 Runs

ஸ்கோர் விபரம்

இலங்கை -164 ஓட்டங்கள் (47.2ஓவர்)

நீயுசிலாந்து -166 ஓட்டங்கள் (37.2ஓவர்)

ஆட்ட நாயகன் - PG Fulton (70*)

57275.jpg

Peter Fulton and Jamie How put on solid performances as New Zealand raced to victory

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._31DEC2005.html

Link to comment
Share on other sites

நியுசிலாந்து Vs இலங்கை - 2வது போட்டி

நீயுசிலாந்து 5 விக்கட்டுகளால் வெற்றி

இலங்கை நீயுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று Jade Stadium Christchurch ல் நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றி பெற்ற நீயுசிலாந்து அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது இதன்படி துடுப்பெடுத்து ஆடிய இலங்கையணி நிர்ணைக்கப் பட்ட 50ஓவர்களில் 7விக்கட்டுகளை இழந்து 255ஓட்டங்களை பெற்றது அணி சார்பாக

WU.Tharanga - 103 Runs

MS Atapattu - 52 Runs

இதுக்கு பதிலளித்தாடிய நீயுசிலாந்து அணி 48 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 256 ஓட்டத்தைப் பெற்றது நீயுசிலாந்து அணி சார்பில்

NJ.Astle - 90 Runs*

L Vincent - 46 Runs

ஸ்கோர் விபரம்

இலங்கை -255/7 ஓட்டங்கள் (50 ஓவர்)

நீயுசிலாந்து -256/5 ஓட்டங்கள் (48ஓவர்)

ஆட்ட நாயகன் - NJ.Astle - 90 Runs*

57359.jpg

Astle guides New Zealand to victory

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._03JAN2006.html

4 ஆட்டங்களை கொண்ட இந்தத் தொடரில் நீயுசிலாந்து அணி 2 : 0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது .

Link to comment
Share on other sites

அடடா வருடம்பிறந்து முதல் போட்டியிலேயே இலங்கை வாங்கிகட்டிடிச்சா? குணவர்ட்டனே ஏனய்யா இறக்கினியள்,, ஜெயசூர்யாவுக்கு என்ன நடந்தது? ஜெயசூர்யாவை யாரோ நாவுறு பார்த்திட்டினம் போல... சரி சரி சிறிலங்கா வேண்டிக்கட்டுறதும் ஒரு விதத்தில நன்மைதான்,,, வாழ்த்துக்கள் நியுசிலாந்து,,,, 6-1 எண்ட கனக்கில இந்தியா அடிச்சமாதிரி 3-1 எண்ட கனக்கில அடிச்சு கலைச்சுவிடுங்க,,, :idea: :idea:

Link to comment
Share on other sites

அடடா வருடம்பிறந்து முதல் போட்டியிலேயே இலங்கை வாங்கிகட்டிடிச்சா? குணவர்ட்டனே ஏனய்யா இறக்கினியள்,, ஜெயசூர்யாவுக்கு என்ன நடந்தது? ஜெயசூர்யாவை யாரோ நாவுறு பார்த்திட்டினம் போல... சரி சரி சிறிலங்கா வேண்டிக்கட்டுறதும் ஒரு விதத்தில நன்மைதான்,,, வாழ்த்துக்கள் நியுசிலாந்து,,,, 6-1 எண்ட கனக்கில இந்தியா அடிச்சமாதிரி 3-1 எண்ட கனக்கில அடிச்சு கலைச்சுவிடுங்க,,, :idea: :idea:

அப்ப தேசிக்காய் வெட்டி போடுமேன் டன், ஜெயசூரியாவுக்கு. :P :P :P

Link to comment
Share on other sites

அட அதை வெட்டிப்போட்டு நாவுறு கழிக்கிறதுக்குத்தான் அவுஸ்ரேலியாவில ஆக்கள் இருக்கினம்,, ஜெயசூர்யா ரொம்ப நல்லவர்,, கிட்டத்தட்ட குடும்ப நண்பர் வேற,, அவையள் பார்த்திப்பினம்,,, கவலைப்படாதேங்கப்பா.... :wink: :P :P

Link to comment
Share on other sites

அட அதை வெட்டிப்போட்டு நாவுறு கழிக்கிறதுக்குத்தான் அவுஸ்ரேலியாவில ஆக்கள் இருக்கினம்,, ஜெயசூர்யா ரொம்ப நல்லவர்,, கிட்டத்தட்ட குடும்ப நண்பர் வேற,, அவையள் பார்த்திப்பினம்,,, கவலைப்படாதேங்கப்பா.... :wink: :P :P

தம்பி இப்ப தூ. ...பையன் வந்தால் உம்மடைபாடு இதுதான்banghead.gifbanghead.gifbanghead.gif

Link to comment
Share on other sites

அடச்சா,, ஜெயசூர்யாவை யாரோ நாவுறு பார்த்திட்டினம் எண்டு சொன்னது உண்மைதான் போல.. ஏனெண்டால், ஜெயர்சூர்யா நேற்று குளிக்க போகக்கை வழுக்கி விழுந்து தோளில நல்ல அடி,,, அதால விளையாட முடியல்லையாம்,,, அடுத்த 2 போட்டியிலும் விளையாடமாட்டார் எண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது,,, :roll: :roll:

சா,, ஜெயசூர்யா நியுசிலாந்து போட்டியில விளையாடப்போறார் எண்டு சொன்ன உடன சில சனம் இல்லாத பொல்லாத பொய்களைச்சொல்லி நாவுறு பார்த்துப்போட்டாங்களப்பா.... :evil: :evil: :evil:

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தியை தொகுத்து வழங்கியவர் டன்,,,, :lol:

Link to comment
Share on other sites

நியுசிலாந்து அணி இன்னொரு வெற்றியையும் 21 ஓட்டங்களினால் பெற்றது3வது போட்டி

நியுசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3வது ஒருநhள் போட்டி Westpac Stadium, Wellington ல் இன்று நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 224 ஒட்டங்களை பெற்றது இலங்கையணி சார்பான சமிந்தா வாஸ் 39 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார் நியுசிலாந்து அணி சார்பில்

PG Fulton -- 50

HJH Marshall - 50

இதுக்கு பதிலளித்தாடிய இலங்கையணி மிகவும் கடுமையாக போராடியும் 46.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

J Mubarak - 53

+KC Sangakkara -52

ஸ்கோர் விபரம்

நியுசிலாந்து - 224 ஓட்டங்கள் (50 ஓவர்)

இலங்கை ஓட்டங்கள் (46..4ஓவர்)

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._06JAN2006.html

57482.jpg

Hamish Marshall cuts during his half-century

4போட்டிகள் கொண்ட தொடரில் நியுசிலாந்து 3 : 0 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது இன்னும் ஒரு போட்டி பாக்கியிருக்கு வாங்கிக்கட்டுறத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல்! :?

நாம் இருவரும் சானியாவுக்கு எண்டு ஒரு பக்கத்தை திறந்து வைப்பமா? :wink: :?: :!:

Link to comment
Share on other sites

அய்ய்ய்ய்ய்ய்ய்,, ஜாலிலிலிலி... இலங்கை அணியின் தொடர் தோல்விக்கு வாழ்த்துக்கள்...... போற போக்கைப்பார்த்தால் இலங்கை அணி சிம்பாப்வே அணியின் உலக சாதனைகளை முறியடிக்கபோகுது போல....

எனி இலங்கை அணியை பலம் வாய்ந்த உலக அணியாக கணிப்பிடுவது ரொம்ப கஸ்ரம்,, காரணம் ஜெயசூர்யாவுக்கு வயசு போய்ட்டு, அவரின் தொடக்க அதிரடி விலாசல் தான் மற்றைய வீரர்களுக்கு உட்சாகத்தை அளித்து வந்தது, அதைவிட தற்போதைய இலங்கை அணி முரளி வாஸ் சங்கக்காரா, ஜெயவர்த்தனா ஆகியோரை மட்டுமே நம்பி ஆடுகிறது,, அட்டப்பத்து, தரங்கா, குணவர்ட்டனா, ஆர்னோல்ட் ஆட்டம் எனி எடுபடாது என்பதே எனது கருத்து,,,

உலகத்தின் மற்றைய அணிகளில் சகல துறை ஆட்டக்காரர்கள் உருவாகி வருகிறார்கள்,, ஆனால் இலங்கை அணியில்????? ஆரம்ப துடுப்பாட்டவீரர்களையே தெரிவு செய்ய முடியாமல் குத்து மதிப்பில் இறக்கி (இலங்கை புலனாய்வு துறையின் அறிவுறுத்தலின் அடிப்படையிலோ என்னமோ) அணியின் ஓட்ட எண்ணிக்கையை 200 ஓட்டங்களுக்குள் தாங்களே சுருட்டிக்கொள்கிறார்கள்,,

1996ம் ஆண்டு இருந்த அணியில் ஜெயசூர்யா, களுவித்தரானவின் தொடக்க அதிரடி விலாசல் மூலம் அணியின் எண்ணிக்கையை குவிக்க முற்படும், அந்த ரன் றெற்றை அடிப்படையாக வைத்து அடுத்து வரும் அட்டப்பட்டு, அரவிந்தா, அர்ஜூனா, உப்பிள்சந்தான, வாஸ் போன்றோர்கள் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை 250க்கு மேல் கொண்டு போய்விடுவார்கள்,, கடைசியா வரும் முரளி விக்கட்டுக்கு 1 மீற்றர் இடது பக்கம் தூரத்தில் நிண்டுகொண்டு பறந்து பறந்து பற்றை சுழற்றுவார், சுழற்றும் பொழுது ஓரிரு பந்துகள் குறுட்டுலக்கில் பட்டு 4,6 என்று எண்ணிக்க்கையை உயர்த்தி பல முறை ரெக்கோட் வைத்தும் இருக்கிறார்கள்,,

ஆனால் தற்பொழுது? 4த் டவுனா இறங்கும் ஜயவர்த்தனாவில் இருந்துதான் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்கிறது,, ஜயவர்த்தனாவுக்கு சரியான சோடி இல்லாத பொழுது அவர் நீண்ட நேரம் தாக்குபிடிக்கமாட்டார்,,,அடுத

Link to comment
Share on other sites

சுண்டல்! :?  

நாம் இருவரும் சானியாவுக்கு எண்டு ஒரு பக்கத்தை திறந்து வைப்பமா? :wink:  :?:  :!:

அதான் மனசுல எப்பவோ திறந்திட்டோம்ல......... :(:( :P :oops: :oops:

Link to comment
Share on other sites

இலங்கை அணியின் ஒரு நாள் போட்டி தந்திரமான முதல் 15 ஓவர்களில் ரன் குவிக்கும் செயற்பாட்டைச் செய்ய ஆரம்ப சோடி வலுவாக இருக்க வேண்டும். களுவும் ஜெயசூரியாவும் தான் அதை இலங்கை அணிக்கே வலுவான முறையில் அறிமுகப்படுத்தினர் என்றாலும் மிகை இல்லை...! ஆனால் இன்று ஜெயசூரியாவுக்கு இணையாக களு போல களமிறங்க ஆளில்லை..! களுவைக் கூட வற்புறுத்தலின் பேரில் தான் அணியில் இருந்து நீக்கியதாக எங்கோ வாசித்திருக்கிறோம்..அப்படியு

Link to comment
Share on other sites

நிர்வாக சீர்கேட்டை விட தலைக்கனம் எண்டுதான் சொல்லவேணும் பின்னை என்ன...........கொஞ்சநாள் இந்தியா போற இடமெல்லாம் தோத்திச்சு.........இப்ப அவங்கள் உசாராகியிட்டாங்கள் இலங்கை படுத்திட்டுது........இந்த லட்சணத்திலை 13ம் திகதி அவுஸ்ரேலியாவுக்கு போகினமாம் தென் ஆபிரிக்கா அவுஸ்ரேலியா வுடனான முத்தரப்பு போட்டியொண்டுக்கு அதோடை ரேட்டிங்கிலை கடைசியிடத்தை எப்பிடியும் பிடிச்சு விடுவினம்

Link to comment
Share on other sites

இலங்கையின் நியுசிலாந்து தொடரில் முதலாவது வெற்றி - 4வது போட்டி

20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இலங்கையணி

நியுசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 4வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று McLean Park, Napiery நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது நிர்ணைக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 273ஒட்டங்களை பெற்று ஒரு திடமான நிலையில் இருந்தது இலங்கையணி சார்பான சார்பில்

MS Atapattu - 69

+KC Sangakkara - 58

இதுக்கு பதிலளித்தாடிய நியுசிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடிய போதிலும் அவர்களால் 48.2 ஓவர்களில் 253ஒட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது அணியின் சார்பில் PG Fulton(112) மிக திறமையாக விளையாடிய போதிலும் அவர் ரண் ஆவுட் முறையில் அவுட் ஆனது நியுசிலாந்து அணியின் துர்அதிஷ்ட்டம் என்று கூடச் சொல்லாம்

PG Fulton run out (Dilshan) - 112

ஸ்கோர் விபரம்

இலங்கை - 273/6 ஓட்டங்கள் (50 ஓவர்)

நியுசிலாந்து - 253ஓட்டங்கள் (48.2 ஓவர்)

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._08JAN2006.html

57563.jpg

Marvan Atapattu congratulates Ruchira Perera on the wicket of Lou Vincent

4போட்டிகள் கொண்ட தொடரில் நியுசிலாந்து 3 : 1 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிடி ஒண்டு தெரியுமோ!

சனத் ஜயசூரியா ஏன் வழுக்கி விழுந்தவர் என்று. நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது "சாம்போ" தேவை எண்டு போய்த் தான் சறுக்கி விழுந்தவராம்.

என்ன கேள்வி எண்டால் அவரின் தலைமயிர் "சாம்போ" போடும் அளவுக்கோ கிடக்குது :wink: :)

Link to comment
Share on other sites

பகிடி ஒண்டு தெரியுமோ!

சனத் ஜயசூரியா ஏன் வழுக்கி விழுந்தவர் என்று. நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது "சாம்போ" தேவை எண்டு போய்த் தான் சறுக்கி விழுந்தவராம்.

என்ன கேள்வி எண்டால் அவரின் தலைமயிர் "சாம்போ" போடும் அளவுக்கோ கிடக்குது :wink: :)

ஜோவ்வ் தூயவா லொள்ளா? யார் சொன்ன சம்போ எடுக்க போகக்கை வழுக்கி விழுந்ததாக? சவர்ல குளிச்சுக்கொண்டு இருக்கும் பொழுது சோப் எடுக்க போனவராம்,,, அப்பக்கதானாம் மெகராத் வீசின பந்தில விக்கட்டை பறி கொடுத்தவர்,,,(அட விழுந்தவர் எண்டு சொல்லவந்தனானப்பா) :evil: :evil: :evil:

அதுசரி எங்க ஜெயசூர்யாவிண்ட நண்பர்கள், குடும்ப நண்பர்கள் இதைப்பற்றி ஒண்டும் சொல்லக்காணயில்லை? சிலவேளை இப்படி சொல்லீட்டு அவுஸ்ரேலியாவில இருக்கிற தண்ட குடும்ப நண்பர்களை காண அவுஸ்ரேலியாவுக்குக் போய்ட்டாரோ?? :? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்வ் தூயவா லொள்ளா? யார் சொன்ன சம்போ எடுக்க போகக்கை வழுக்கி விழுந்ததாக? சவர்ல குளிச்சுக்கொண்டு இருக்கும் பொழுது சோப் எடுக்க போனவராம்,,, அப்பக்கதானாம் மெகராத் வீசின பந்தில விக்கட்டை பறி கொடுத்தவர்,,,(அட விழுந்தவர் எண்டு சொல்லவந்தனானப்பா) :evil: :evil: :evil:

அதுசரி எங்க ஜெயசூர்யாவிண்ட நண்பர்கள், குடும்ப நண்பர்கள் இதைப்பற்றி ஒண்டும் சொல்லக்காணயில்லை? சிலவேளை இப்படி சொல்லீட்டு அவுஸ்ரேலியாவில இருக்கிற தண்ட குடும்ப நண்பர்களை காண அவுஸ்ரேலியாவுக்குக் போய்ட்டாரோ?? :? :roll:

மெக்ராத்துக்கு கிரிக்கட் மீது பாசம் இருக்கலாம். அதுக்காக சனத் குளிச்சுக் கொண்டு இருக்கின்ற இடத்திலேயே பந்து வீசிப்பழகுகின்றது? :wink: :)

இல்லையே. இப்ப நீயுசிலாந்தில் தானே இலங்கையணி நிக்கின்றது? :roll:

Link to comment
Share on other sites

மெக்ராத்துக்கு கிரிக்கட் மீது பாசம் இருக்கலாம். அதுக்காக சனத் குளிச்சுக் கொண்டு இருக்கின்ற இடத்திலேயே பந்து வீசிப்பழகுகின்றது? :wink: :)

இல்லையே. இப்ப நீயுசிலாந்தில் தானே இலங்கையணி நிக்கின்றது? :roll:

ஜோவ்வ் நான் சொல்ல வந்தது,,, சவுத் ஆபிரிக்காவுக்கு எதிரான 3வது ரெஸ்ற்றில மெகராத் வீசின பந்து நியுசிலாந்தில குளிச்சுக்கொண்டு இருந்த ஜெயசூர்யா சோப் எடுக்க போற நேரம் பார்த்து அவரை போய் தாக்கிட்டுதாம்,,, (அட அவுஸ்ரேலியாவும் நியுசிலாந்தும் பக்கத்த பக்கத்த தானே):? :roll:

அட இந்த அரும்பெரும் செய்தியை டன்னிண்ட புலனாய் சொல்லல,, நம்மட புளுகர் பொண்ணய்யாதான் சொன்னார்,,, :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்வ் நான் சொல்ல வந்தது,,, சவுத் ஆபிரிக்காவுக்கு எதிரான 3வது ரெஸ்ற்றில மெகராத் வீசின பந்து நியுசிலாந்தில குளிச்சுக்கொண்டு இருந்த ஜெயசூர்யா சோப் எடுக்க போற நேரம் பார்த்து அவரை போய் தாக்கிட்டுதாம்,,, (அட அவுஸ்ரேலியாவும் நியுசிலாந்தும் பக்கத்த பக்கத்த தானே):? :roll:

அட இந்த அரும்பெரும் செய்தியை டன்னிண்ட புலனாய் சொல்லல,, நம்மட புளுகர் பொண்ணய்யாதான் சொன்னார்,,, :idea:

பாத்திங்களா!!

முந்தி முரளி மீது அவுஸ்ரேலியாக்காரன் வெறுப்பில இருந்தவங்கள். இப்ப சனத் ஜயசூரியாவில் கண் வைச்சிருக்கின்றாங்கள்! :wink: :)

அது சரி. புலநாயை காக்கா தூக்கிக் கொண்டு போட்டுதோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.