Jump to content

தீபம் தொலைக்காட்சி ?


Recommended Posts

தீபம் தொலைக்காட்சி அய் நா குழு அறிக்கையை தருசலாம் அறிக்கை என்கிறது.சிறீலங்கா அரசின் புலச் செயற்பாட்டுகளை தற்போது கேள்வி நேரம் போன்ற நிகழ்ச்சிகளினூடாக தீபம் மேற்கொள்கிறதா? யாழ் டில்கா கொடேல் விளம்பரமும் தற்போது போகிறது. விபரம் தெரிந்தால் அறியத் தரவும்.சந்தாவை நிற்பாட்டுவது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தீபம் தொலைக்காட்சி அய் நா குழு அறிக்கையை தருசலாம் அறிக்கை என்கிறது.சிறீலங்கா அரசின் புலச் செயற்பாட்டுகளை தற்போது கேள்வி நேரம் போன்ற நிகழ்ச்சிகளினூடாக தீபம் மேற்கொள்கிறதா? யாழ் டில்கா கொடேல் விளம்பரமும் தற்போது போகிறது. விபரம் தெரிந்தால் அறியத் தரவும்.சந்தாவை நிற்பாட்டுவது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

நான் உந்த ராயேஸ்வரி எல்லாம் வந்து தமிழருடைய பிரச்சனையை பற்றி தீபத்தில வந்து விவாதிக்க தொடங்கியவுடன் சந்தா காட்டும் முடிய அப்படியே மூடி விட்டேன்.

தீபம் இப்பதான் கேள்வி நேரம் பகுதியில் பேச்சு சுதந்திரம் காட்டு கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய கருத்தையும் கேட்டு எது சரி,எது பிழை என பகுத்து அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு மக்கள் முட்டாளா என்ன?

Link to comment
Share on other sites

எல்லோருடைய கருத்தையும் கேட்டு எது சரி,எது பிழை என பகுத்து அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு மக்கள் முட்டாளா என்ன?

அப்படியல்ல.. எமது பணத்தில் எதிரிகள்/துரோகிகள் வயிறுவளர்க்க விடக்கூடாது.. அவ்வளவுதான்..! :unsure:

Link to comment
Share on other sites

அப்படியல்ல.. எமது பணத்தில் எதிரிகள்/துரோகிகள் வயிறுவளர்க்க விடக்கூடாது.. அவ்வளவுதான்..! :unsure:

இசை, உங்களுக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

எல்லோருடைய கருத்தையும் கேட்டு எது சரி,எது பிழை என பகுத்து அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு மக்கள் முட்டாளா என்ன?

ரதி நீங்கள் போன கிழமை நிகழ்ச்சி பார்த்தீர்களோ தெரியாது,

கொன்ச்டையின் என்பவர் வந்து சொல்கிறார், அங்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையாம், அதற்க்கு மறுப்புத் தெரிவித்து கருத்துச் சொல்லப்போனவரை அனஸ் நிப்பாட்டுகிரார்.இது மாற்றுக் கருத்தா அல்லது பிரச்சாரத் தந்திரமா? டில்கோ கோட்டல் யார் தயவில் நடக்கிறது? அதன் விளம்பரம் ஏன் தீபத்தில் போகிறது?சிறிலங்காவில் இருக்கும் ஊடகங்களுக்குத் தான் ஐ நா அறிக்கையை தருசமான் அறிக்கை என்று சொல்ல நிர்ப்பந்தம் ஆனால் லண்டனில் இருக்கும் தீபத்திற்க்கு என்ன நிர்ப்பந்தம்.சனல் நாலு முதல் பிபிசி வரை அதனை நிபுணர்கள் குழு அறிக்கை என்றே அழைக்கின்றனர். மாற்றுக் கருத்து விவாதாம் நடு நிலையாளர் ஒருவரால் நெறிப்படுத்தப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் என்னிடம் ஒரு தமிழ் தொலைக்காட்சியும் இல்லை...நான் பார்ப்பதுமில்லை...பொதுவாக என் கருத்தை தான் எழுதினேன்

Link to comment
Share on other sites

ரதி தீபம் பார்க்காமல் பொதுவில் கருத்துக்கூறியதாக உண்மையை எழுதியதற்க்கு நன்றி. நான் தீபத்தின் அண்மைய போக்கைப் பற்றியே இங்கு கேள்வி எழுப்பினேன்.

எனது காசில் சிறிலஙா அரசின் பிரச்சாரம் செய்யப்படுவதை நான் விரும்பவில்லை.சந்தாவை நிறுத்த முன்னர் கேட்டுத் தெரிந்து கொள்ளவே இங்கே எழுதினேன்.தீபம் நிர்வாகத்திடம் இது பற்றிக் கேட்டு மின்னன்ச்சல் அனுப்பியும் பதில் இல்லை.என்னைப் போல் பலரும் நினைப்பதால் சந்தாவை நிறுத்த உள்ளேன். நன்றி.

Link to comment
Share on other sites

... இன்று மாலை, போன இடத்தில் தமிழர்களுக்குஓர் தொலைக்காட்சியாம் ... தீபம் ... பார்க்க நேர்ந்தது!!! ... ஆச்சரியம் அதில் தற்போதைய தேசியத்தலைவராம் கேபியின் செயலாளர் நாயகம் யாழ்கள பாண்டரும், தன்னை பத்திரிகையாளன்/பொதுத்தொண்டன்/இன்று அரசியல்வாதியாக்கி/சொல்லப்போனால் பப்ளிசிட்டிக்காக அம்மணமாக உரிந்து விட்டு எவ்வீதியிலும் கொன்ஸன்ரைன் ... என்று இரண்டு மனிதத்தை தொலைத்ததுகள் ... ...

... என்ன ,

* நாம் புலத்தே இருந்து சிங்களவனுக்கு ஆய்க்கினை கொடுக்கிறோமாம்!!!!???????

* அகிம்சை, ஆயுதம் என்று களைத்துப் போய் விட்டோமாம்!!!!??????

* புலத்தில் நாம் என்ன செய்தாலும் அவன் அழிப்பானாம்!!!!????

* மொத்தத்தில் நாம் ஒன்றுமே செய்ய இயலாதாம்!!!!????

* ...

... இவைகளுக்கு மருந்து ... இந்த மனிதத்தை தொலைத்ததுகள் சொல்கிறார்கள் ... அவனது கால்களில் விழட்டுமாம்(இந்த வாய்க்கியம் முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு இந்த பாண்டர்களின் வாய்களிலிருந்து தொடர்ர்ச்சியாக இன்று வரை வருகிறது ...)!!! அவனேடு இணைத்து தருவதை வேண்டாட்டாம்!!! .... இப்படிப்பல பல பொன்மொழிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள் ... அந்த தமிழர்களுக்கோர் தொலைக்காட்சியும் சந்தோசமாக விட்டுக் கொண்டிருந்தார்கள் ... என்ன கூட்டிக் கழித்துப் பார்த்தால் ... புலம்பெயர் மக்களே, சிறிலங்காவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள், இனவழிப்புகள், யுத்த நிறுத்த மீறல்களுக்கு எதிரான குரல்களை நிறுத்துங்கள், நிறுத்தாவிடில் அவன் அழிப்பானாம்!!!!!!!! ........ இத்தொலைக்காட்சி பற்றி பிறிதொரு திரியில் பார்ப்பாம்!!

... பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பொறுமையின் உச்சிக்கு போய்விட ... தொலைபேசியை தமிழர்களுக்கோர் தொலைக்காட்சிக்கு எடுத்தால் ... விடுகிறார்கள் தூக்குகிறாங்களில்லை ... என்ன, நான் ஒரு நாலு கேள்விக்கு பதில் முள்ளிவாய்க்காலுடன் தேடிக் கொண்டிருக்கிறேன் ... அதனை பாண்டரிடம் நேரடியாக கேட்டு பதிலைப் பெறத்தான்!!!!!!! ... இன்று சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஆனால் என்றோ ஒரு நாள் ...!!!!!! ....

பணம்!!!!!!! ... எத்தனை எத்தனையோ தொழில்களை செய்வதன் மூலமும் சம்பாதிக்கலாம்!!!!!! விபச்சாரம் மூலமும் சம்பாதிக்கலாம்!!!!!!! ஆனால் விபச்சாரம் ஓர் தொழிலா????????

நாரதர், .... இதனை வேறோர் திரியில் எழுத வேண்டுமென்று ... நல்லது நீங்கள் தொடங்கி விட்டீர்கள்!! ... இன்று எம் புலம்பெயர் தமிழ்த்தேசியவாதிகளுக்கு முடக்குவாதம் வந்து சுருண்டு போய்க்கிடக்க ... இந்தத்தீபம் போன்றவற்றை ... சிறிலங்காவின் புலனாய்வுத்துறையுடன் சேர்ந்தியங்கும் எம் இன கோடரிக்காப்புகளையும், கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களையும் வைத்து ஆட்டுவிக்கிறது!!!

உண்மை நிலை பற்றி கனக்க அறிய ராக்கட் சயன்ஸ் தேவையில்லை! ... தெரிகிறது பிடிச் சோற்று தடவியுள்ளார்கள் பூசனிக்காயை சுற்றி .... இங்கு யாழிலேயே அர்ச்சனை தொடங்கலாம் ... தொடங்குவதை சரியாக முடிபை நோக்கி கொண்டு செல்லல் வேண்டும்!!!

Link to comment
Share on other sites

புலம் பெயர் நாடுகளில் இயங்கும் அத்தனை ஒலி ஒளி ஊடகங்களும் பயங்கர நினைக்க முடியாத

சுய நலத்தில் தான் இயங்குகின்றன!!!! உண்மையில் துன்பப்படும் தமிழ் மக்களிற்காக தான் ஊடகங்கள் என்றால்

எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரே தொணியில் ஒரு ஊடகம் தான் இயங்கும்................நிலமை அப்படி இல்லையே

ஆளுக்கு ஒரு ஊடகம் பிரிந்து போகிறவர்கள் எல்லோருமே புதிது புதிதாக ஊடகங்களை திறக்கிறார்கள்

இந்த சுயநல வாதிகளிற்கு பின்னால் புத்தி இல்லா புண்ணாக்கு தமிழர்கள்...............

உண்மையில் ஒவ்வொரு புலத் தமிழனும் ஆழமாக சிந்திக்க வேண்டியது..............

தமிழர்கள் தங்கள் பங்களிப்பை வழங்காது போனால் இவ்வளவு ஊடகங்கள் உருவாகியிருக்காது

ஒவ்வொரு நாடுகளிலும் ஊடகங்களிற்காக அந்தந்த நாடுகளிற்கு கட்டிக் கொண்டிருக்கும் பணத்தை

தாயகத்திற்கு அனுப்பினால் துன்பப்படும் அந்த மக்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசும்........

புலத்தில் தமிழ் மக்கள் கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் ஊடகங்கள் வயிறு வளர்க்கின்றன

மக்கள் சரியான வழியில் சிந்தித்து சரியான முடிவு எடுக்கும் வரை நிலமை இப்படித் தான்

போக போகிறது............

இடையன் உழைத்து மடையன் கையில் கொடுக்கும் கதைதான் எங்கள் கதை................

நாங்கள் கண் விழிக்கும் வரை எங்கள் பணத்தில் இந்த ஊடகங்கள் சொகுசாக வாழும்.........

நாங்கள் திருந்தி விட்டால் இந்த ஊடகங்கள் மண் கவ்வி விடும் அது உறுதி................

மக்கள் சக்கி தான் மா பெரும் சக்கி அதனால் பிழை மக்களாகிய எங்களில் தான்

எனவே நாங்கள் விழித்திருப்போம் சரியான வழியை தேர்ந்தெடுப்போம்

அது மட்டுமல்லாமல் வெறும் பேச்சில் மட்டும் காலத்தை வீணடிக்காமல் செயலிலும் இறங்க வேண்டும்

உண்மையில் தாயக மக்களுக்கு நாங்கள் தான் விடிவை பெற்றுக் கொடுக்க வேண்டும்!!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தத் தொலைக்காட்சியை.. ஓசியில் வரும் போது மட்டும் பார்த்திருக்கிறேன்.

தீபம் மதில் மேல் பூனை..!

இவர்களை மக்கள் நிராகரித்து தண்டனை வழங்குவதன் மூலமே திருத்த முடியா விட்டாலும்.. தவறுகளை உணரச் செய்ய முடியும்..!

தீபத்தின் அண்மைய போக்குக் குறித்த இன்னொரு பதிவு யாழில் இருந்து...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84415

Link to comment
Share on other sites

இணையத்தில் தமிழ் செய்திகள் பார்பதோடு சரி.

லண்டனில் 2009 ல் நடத்த இளையோர்களால் போராட்டம் முன்னெடுத்த போது 24மணிநேரங்கள் கழித்துதான் அங்கு வந்திருந்தார்கள். அங்க்கிருந்தவர்கள் டென்சன் ஆகி 'தீபம்... நீ தமிழனா???' என்று (இந்த நிகழ்ச்சியை நடத்துபவரிடம்) கோசம் போட்டார்கள். அது வெறும் கோசம் மாதிரித் தெரிய இல்லை, மக்களின் கோபம், தமிழ் தொலைகாட்சி தமிழர் போராட்டத்திற்கு வந்து ஆதரவு தராமல், தமிழ் சினிமா படங்களை அந்த நேரத்தில் போட்டிருந்ததன் வெளிப்பாடாகவே இருந்தது. அதன் பின்பு தான் சில நிகழ்சிகளை ஒளிபரப்பாது போராட்ட நிகழ்வை இலவசமாக ஒளிபரப்பியதாக அறிந்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84415

இந்த இணைப்பை நானும் அன்று பார்த்தேன், வலப்பக்கம் இருக்கும் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவது பற்றி மற்றவர்களுக்கு முன்னறிவித்தல் கொடுக்கப்படலாமல் இரகசியமாக வைத்திருந்ததாக பேசப்பட்டது.

கட்டணம் செலுத்தி இந்தத் தொலைகாட்ச்சியை வைத்திருப்பவர்கள் காரணத்தை சொல்லி தொடர்ப்பை நிறுத்துவது அவர்களுக்கும் ஒரு பாடமாக அமையகூடும்.

Link to comment
Share on other sites

குட்டி எங்கட சனத்திற்கு அவ்வளவு அறிவு இருக்குமெண்டால் நாங்கள் இப்படி

பரதேசிகளாய் அலைவோமா!!!!!

முள்ளிவாய்க்கால் கடும் சமர் நடந்து கொண்டிருக்கும் போது.....சிலுக்கின் திரைப்படம்

போட்ட உணர்வுள்ள தமிழரின் ஊடகம் இந்த தீபம் ஊடகம் தான்...............

தமிழ் மக்கள் கண் விழிக்கும் மட்டும் இவர்கள் காட்டில் மழை தான்!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தீபம்" என்னைப்பொறுத்தவரையில் என்றோ தொலைந்த ஒரு தொலைக்காட்சி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்ரி ரீரீஎன் நிறுத்தப்படும் வரை அதன் சந்தாதாரராக இருந்தேன்.இப்பொழது எந்தத் தொலைக் காட்சியும் சந்தா கொடுத்துப் பாரப்;பதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறேன். ஓசியில் போடும் போது தீபம் பார்த்திருக்கிறேன்.தீபத்திற்கும் சண் கலைஞர் தொலைக்காட்சிக்கும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.தீபம் ஆரம்பத்திலிருந்தே தாயகத்தில் என்ன துக்க நிகழ்ச்சி நடந்தாலும் அதனைப் புறக்கணித்து அந்த நேரங்களில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்சிகளைப் போடுவதும் மாவீரர் நாளிலும் இலவச ஒளிபரப்புச் செய்யாமலும் இருப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை.மக்களைப் போராட்ட உணர்வுகளிலிருந்து திசை திருப்பி ஒரு போதை நிலையில் வைத்திருப்பதற்கு தீபம் தொலைக்காட்சியும் ஒரு காரணம்.அண்மையில் கே.பியை ச் சந்திக்கச் சென்றவர்களில் தீபம் தொலைக் காட்சியின் படப்பிடிப்பாளரும் ஒருவர் என கேள்விப்பட்டேன்.தீபத்தின் சந்தாராரகள் சிலரிடம் ஏன் தீபம் பார்க்கிறீர்கள் என்று கேட்டதிற்கு மற்றைய தொலைக்காட்சிகளில் (ரீரீஎன் ஜீரிவி )எந்த நேரமும் செத்தவீடுதான் போகும் என்று சொல்கிறார்கள்.ஜீரிவி பரவாயில்லை.ஆனால் எல்லா ஊடகங்களிலும் சந்தேகம் இருப்பதால் இணையத்தளங்களில் செய்திகளைப்பார்ப்பேன்.ஜீரிவியில் இரவு 9 மணிக்குப் போகும் செய்தி வீச்சு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்ரி ரீரீஎன் நிறுத்தப்படும் வரை அதன் சந்தாதாரராக இருந்தேன்.இப்பொழது எந்தத் தொலைக் காட்சியும் சந்தா கொடுத்துப் பாரப்;பதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறேன். ஓசியில் போடும் போது தீபம் பார்த்திருக்கிறேன்.தீபத்திற்கும் சண் கலைஞர் தொலைக்காட்சிக்கும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.தீபம் ஆரம்பத்திலிருந்தே தாயகத்தில் என்ன துக்க நிகழ்ச்சி நடந்தாலும் அதனைப் புறக்கணித்து அந்த நேரங்களில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்சிகளைப் போடுவதும் மாவீரர் நாளிலும் இலவச ஒளிபரப்புச் செய்யாமலும் இருப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை.மக்களைப் போராட்ட உணர்வுகளிலிருந்து திசை திருப்பி ஒரு போதை நிலையில் வைத்திருப்பதற்கு தீபம் தொலைக்காட்சியும் ஒரு காரணம்.அண்மையில் கே.பியை ச் சந்திக்கச் சென்றவர்களில் தீபம் தொலைக் காட்சியின் படப்பிடிப்பாளரும் ஒருவர் என கேள்விப்பட்டேன்.தீபத்தின் சந்தாராரகள் சிலரிடம் ஏன் தீபம் பார்க்கிறீர்கள் என்று கேட்டதிற்கு மற்றைய தொலைக்காட்சிகளில் (ரீரீஎன் ஜீரிவி )எந்த நேரமும் செத்தவீடுதான் போகும் என்று சொல்கிறார்கள்.ஜீரிவி பரவாயில்லை.ஆனால் எல்லா ஊடகங்களிலும் சந்தேகம் இருப்பதால் இணையத்தளங்களில் செய்திகளைப்பார்ப்பேன்.ஜீரிவியில் இரவு 9 மணிக்குப் போகும் செய்தி வீச்சு பார்க்கலாம்.

புலவரவர்களது அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. அதிலும் தேசியம் பேசும் சிலரே "எந்த நேரமும் செத்தவீடுதான் போகும் என்று சொல்லியிருக்கிறார்கள்" ரீரீஎன் இருக்கும்வரை நானும் ஒரு சந்தாதாரராக இருந்தேன். தற்போது எந்த ஒரு காணொளிக்கும் பங்களிப்பதில்லை. ஊடகங்கள் தான்சார்ந்த இனத்தினது துயரங்களைப் பேச வேண்டும். இல்லையேல் அவற்றை தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.அப்போதுதான் அவர்கள் உணரும் நிலைவரும். இல்லையேல் இவர்கள் விலாங்குமீனைப் போல் தங்களை வளரத்துக் கொள்வார்கள். தமிழினத்தை விற்றுவிடுவார்கள். மானமுள்ள தமிழர்கள் தமிழினத்திற்குத் துரோகமிழைப்போருக்குக் களமமைத்துக் கொடுக்கும் ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும்.

இந்த அரசியலாளர்களைத் தெரியுமா? இவர்களது சேவை என்ன?

dsc00923k.jpgdsc00920o.jpg

dsc00930p.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.