Jump to content

கருணாநிதி மகன் ஸ்ராலின் மோசடி வெற்றி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

சென்னை: சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமியை விட 2855 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நேற்று நடந்தது. இத்தொகுதி, வி.ஐ.பி., தொகுதி என்பதால், ஓட்டு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே பரபரப்பு நிலவியது. ஓட்டு எண்ணிக்கையில், முதல் சுற்றில் ஸ்டாலின் 145 ஓட்டுகள் முன்னணியில் இருந்தார். 2வது சுற்றில் 351 ஓட்டுகள், 3வது சுற்றில் 255 ஓட்டுகள், 4வது சுற்றில் 555 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். 5வது சுற்றில் சைதை துரைசாமி 273 ஓட்டுகள் அதிகம் பெற்றார். அதன் பிறகு, சைதை துரைசாமி முன்னணி பெறத் துவங்கினார். இதன் பிறகு, 6 மற்றும் 7வது சுற்றிலும் துரைசாமியே முன்னிலையில் இருந்தார். 8வது சுற்றில் துரைசாமி 66 ஓட்டுகள் பின் தங்கினார். 9வது சுற்று எண்ணப்பட்ட போது இரண்டு மிஷின்கள் வேலை செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து, 10 வது சுற்று தொடர்ந்தது. 15 வது சுற்று வரை ஏதும் பிரச்னை இல்லை. 16வது சுற்றில் ஒரு மிஷன் வேலை செய்யவில்லை. 17 மற்றும் 18 வது சுற்று எண்ணி முடிக்கப்பட்டது. அதன் பிறகு, 19வது சுற்று எண்ணுவதற்கு முன், முதலில் வேலை செய்யாமல் இருந்த மூன்று மிஷின்களையும் எடுத்து வந்து எண்ணுவதற்கு ஏற்பாடு நடந்தது.

இந்த மூன்று பெட்டிகளில் உள்ள எண் மாறியிருப்பதாகவும், பெட்டி மாற்றப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர். இதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், 19வது சுற்று எண்ணப்படவில்லை. அப்போது, அங்கு வந்த மத்திய தேர்தல் பார்வையாளருக்கும் அடி விழுந்தது. ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க அங்கு வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் மற்றும் கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் உள்ளே புகுந்து, மையத்திலிருந்த இருகட்சியினரையும் அடித்து விரட்டினர். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு வந்தனர். வேட்பாளர் சைதை துரைசாமியிடம் பிரச்னை குறித்து கேட்டனர். அப்போது அவர், மூன்று ஓட்டு பெட்டிகள் மாறியுள்ளதாக கூறினார். ஓட்டு எண்ணும் மையத்திற்கு தி.மு.க., வேட்பாளர் ஸ்டாலின் வரவில்லை. தி.மு.க.,வினர் கூட்டமாக ஓட்டு எண்ணும் மையத்திற்கு வெளியில் நின்று கூச்சல் குழப்பம் செய்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீஸ் இணை கமிஷனர் சாரங்கன், துணை கமிஷனர்கள் பன்னீர்செல்வம், லட்சுமி, மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன் பிறகு, பதட்டம் சற்று ஓய்ந்தது.

ஓட்டு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க.,வினர் கூறும் போது,""மூன்று பெட்டிகளை மாற்றி விட்டனர். சீரியல் எண்கள் மாறியுள்ளன. நாங்கள் கேட்டதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மத்திய தேர்தல் பார்வையாளரை நாங்கள் அடிக்கவில்லை. ஓட்டு எண்ணிக்கை முழுமையாகவும், நியாயமாகவும் நடைபெறாததால், இத்தொகுதிக்கு மறு ஓட்டுப்பதிவு நடத்தப்பட வேண்டும்,'' என்றனர். ஓட்டு எண்ணும் மையத்தில் மாலை 6 மணிக்கு துவங்கிய இப்பிரச்னை 7 மணிக்கு முடிந்தது. அதன் பிறகு, 8 மணி வரை போலீசார் இருதரப்பினரிடமும், இரவு 8 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொளத்தூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை விவரம்

சுற்று தி.மு.க., அ.தி.மு.க.,

1 3898 3753

2 3657 3306

3 3662 3407

4 3503 2948

5 3074 3347

6 3440 4569

7 3009 3106

8 3031 2965

9 3111 3311 (இந்த சுற்று எண்ணும் போது இரண்டு மிஷின்கள் வேலை செய்யவில்லை)

10 3856 3446

11 3467 2721

12 3867 4287

13 3903 4218

14 4543 3816

15 3180 3560

16 3674 3054 (இந்த ரவுண்ட் எண்ணும் போது ஒரு மிஷின் வேலை செய்யவில்லை)

17 4004 3856

18 4139 3687

19 சுற்று எண்ணிக்கை துவங்கப்பட்ட போது பிரச்னை ஏற்பட்டது. இந்த சுற்றில், ஐந்து பெட்டிகள் எண்ண வேண்டியுள்ளது. முதலில் மூன்று பெட்டிகள் உட்பட, மொத்தம் எட்டு பெட்டிகள் எண்ணப்படாமல் உள்ளன.

ஸ்டாலின் வெற்றி: தமிழகம் முழுவதிலிருந்தும் அனைவரின் கவனமும் கொளத்தூர் பக்கம் திரும்பியது. இரவு வரை பரபரப்பு நீடித்தது. இறுதியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் ஸ்டாலின் 2855 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. இதை கேட்டு தி.மு.க., வினர் நிம்மதி அடைந்தனர்.

தினமலர்.கொம் ( http://www.dinamalar.com/News_Detail.asp?Id=240612 )

Link to comment
Share on other sites

மீண்டும் இங்கு தேர்தல் நடக்க வேண்டும், பணநாயகம் ஜனநாயகத்தை வெல்லக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான்.... கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வைகோவிற்க்கும் தோல்வி ஏற்பட வைத்தார்கள்.

சரி போகுது..... ஸ்டாலின் சின்னப் பொடியன் தானே....., சட்ட சபைக்கு போக விடுங்கப்பா....

தகப்பன் கருணாநிதி வென்றாலும், முதலைமச்சர் ஜெயலலிதா உள்ள சட்ட சபைக்கு போகும் பழக்கம் இதுவரை இருந்ததில்லையே....

இப்ப... எதிர்க்கட்சித் தலைவர் சான்ஸும் இல்லாமல், பின் வாங்கிலை குந்தியிருந்து... என்னத்தை செய்யப் போறார்.

Link to comment
Share on other sites

சரி போகுது..... ஸ்டாலின் சின்னப் பொடியன் தானே

58 வயதெல்லாம் சின்னப் பெடியன்ர வயதா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

58 வயதெல்லாம் சின்னப் பெடியன்ர வயதா? :o

அவர் இப்பவும்... தி.மு.க. வின் இளைஞர் அணியின் தலைவர் தானே.....

கருணாநிதி தள்ளுற வண்டியில், தானைத் தலவராக இருக்கும் போது.... ஸ்டாலின் இளைஞராக இருப்பதில் என்ன குற்றம். :unsure:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.