Jump to content

மெளனப் புரட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாத கால புதிருக்கு விடை கிடைத்துவிட்டது. அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட, தி.மு.க.வுக்கு கிடைத்த தோல்வி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கருணாநிதி நாட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்ததைவிட வீட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்த நேரம்தான் அதிகம்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கியதுமே, தி.மு.க. மீதான இமேஜ் சரியத் தொடங்கியது. இலவசங்களாலும், பணத்தாலும் மக்களின் மனதை மாற்றி விடலாம் என தி.மு.க. நினைத்தது. அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறார்கள் மக்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஈழத் தமிழர் பிரச்னை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காலம் அது. ஈழ ஆதரவாளர்களும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வேலை செய்தனர். அதையும் தாண்டி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றியை கரு ணாநிதி தனக்கு சாதகமாக நினைத்திருக்கக் கூடும். ஆனால், மத்தியில் ஆட்சி என்பது வேறு, மாநில ஆட்சி என்பது வேறு என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து வை த்துள்ளார்கள் என்பதைத்தான் சட்டமன்றத் தேர்தல் வெற்றி உணர்த்துகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்று முடிவானதுமே, தி.மு.க.வின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. அ.தி.மு.க.

வலுவான கூட்டணியை அமைத்திருந்தது அதற்கு ஒரு காரணம்.

ஜெயலலிதாவா, கருணாநிதியா என ஜம்ப் ஆகிக் கொண்டிருந்த ராமதாஸ் கருணாநிதியுடன் இணைய, தி.மு.க.வுக்கு வட மாவட்டங்களில் பலம் கிடைத்தது போல் ஒரு தோற்றம் உருவானது. ஆனால் அது தோற்றம் மட்டுமே என்பதை தேர்தல் பிரசாரத்தின் போது காண முடிந்தது.

‘‘முதல்முறையாக நாங்கள் இணைகிறோம், எங்கள் கனவு நனவாகி விட்டது’’ என்றெல்லாம் ராமதாஸும், திருமாவளவனும் கட்டியணைத்து போஸ் தந்தார்கள். ஆனால், தலைவர்களிடம் இருந்த நெருக்கம் தொண்டர்களிடம் இல் லாமல் போனது.

வட மாவட்டங்களில் வன்னியர்களால் தலித்துகள் தாக்கப்படும் சம்பவங்களும், தலித்துகள் வன்கொடுமைச் சட்டத்தில் பொய்ப்புகார் கொடுக்கிறார்கள் என வன்னியர்களும் புகார் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து தேர்தல் பணியாற்றவே இல்லை.

இளைஞர் காங்கிரஸ் நடைபயணம், காங்கிரஸ் தலைவர்களின் தி.மு.க.விற்கு எதிரான பேச்சு என காங்கிரஸ் தொண்டர்களிடையே தி.மு.க.விற்கு எதிரான மனநிலையே தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்புவரை இருந்தது. திடீரென காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி என அறிவிக்க, தொண்டர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினரும், தி.மு.க. போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ்காரர்களும் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தார்கள்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் வேறு நிறுத்தப்பட்டனர். நானா, நீயா என போட்டி போட்டு மாறி, மாறி தோற்கடிக்கும் வேலையை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியினர் சரியாகவே செய்தார்கள். பா.ம.க. - காங்கிரஸ் மோதல், விடுதலைச் சிறுத்தைகள் - காங்கிரஸ் மோதல் என கூட்டணிக்குள் குழப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

ஆனால் இது எதுவும் வெளியில் தெரியாதவாறு, அதன் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் சித்திரிக்கப்பட்டது. அனைவரும் மேடையில் ஒன்றாகப் பேசி, தங்கள் கைவசம் இருக்கும் மீடியாக்கள் மூலம் ஒற்றுமையை பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

அ.தி.மு.க.வில் நிலைமை நேர் எதிராக இருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மேடையில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை, ஜெயலலிதா பெயரை விஜயகாந்த் சொல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் நோக்கம், தலைவர்களைப் போலவே, தி.மு.க.வை வீழ்த்துவதாக இருந்தது. இந்த நோக்கத்தில் அவர்கள் ஒன்றுபட்டு தேர்தல் வேலை செய்தார்கள்.

இந்த எல்லா அரசியலையும் தாண்டி ஓட்டுப்போட்ட மக்களுக்கு மின்வெட்டுதான் தி.மு.க. அரசின் மீது தீராத கோபத்தை வரவழைத்தது. காலை ஆறுமணிக்கே தொலைந் துபோகும் மின்சாரத்தின் முன் கிரைண்டர், கலர் டி.வி. எல்லாம் எடுபடவில்லை. கடந்த ஆண்டுகளில் இந்த மின்தடையால் ஏராளமான சிறுதொழில்களும், விவசாயமும் கிட்டத்தட்ட அழிந்து போனது என்பதுதான் உண்மை.

அதிரடியாய் உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசியை சமாளிக்க முடியாமல் நடுத்தர, ஏழை மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், ‘‘மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது, எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் பொருட்களை வாங்குவார்கள் என்பதற்கு தி.நகரே சாட்சி’’ என்றெல்லாம் கருணாநிதி பேசி மக்களை வெறுப்பேற்றினார்.

கடந்த தேர்தல்களில் தங்களுக்கு வெற்றியைத் தந்ததாக தி.மு.க. நம்பிக் கொண்டிருக்கும் திருமங்கலம் ஃபார்முலாவும் இந்தமுறை கவிழ்த்து விட்டது.

தேர்தல் கமிஷனின் எல்லாக் கெடுபிடிகளையும் மீறி, கடைசி நாட்களில் தி.மு.க. பணப்பட்டுவாடா செய்தது.

‘‘ஸ்பெக்ட்ரம் பணத்தில் கொள்ளையடித்ததை உங்களுக்குத் தருவார்கள் வாங்கிக் கொள்ளுங்கள்’’ என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து கொண்டிருக்க, இந்தப் பணம் பெ ரும்பாலும் பொதுமக்களுக்கு போய்ச் சேரவேயில்லை என்பதுதான் உண்மை. கட்சி கொடுத்த பணத்தை கட்சிக்காரர்களே அமுக்கிக் கொண்டனர்.

கடந்த தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணமாக சொல்லப்பட்ட தேர்தல் அறிக்கை நலத்திட்டங்கள் முழுக்க மக்களை போய்ச் சேரவேயில்லை.

கலர் டி.வி., இலவச சிலிண்டர் எல்லாவற்றையும் கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கே தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பூஜ்யங்களை எண்ண முடியாத அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது மக்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஊழல் பணத் தில்தான் கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டது, கனிமொழி, தயாளு மீது வழக்கு, ராஜாத்தி அம்மாள் நீரா ராடியாவுடன் நடத்திய பேச்சு, பேரனுக்கு பதவி கொடுக்க தயாளு அம்மாள் 600 கோடி வாங்கினார் என கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் மக்களை எரிச்சலடையச் செய்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி மகன்களும், பேரன்களும் சினிமா, டி.வி., பத்திரிகை என எல்லாத் தொழில்களிலும் கால் பதிக்க, அவர்கள் அனுமதி இல்லாமல் ஒரு சினிமா கூட வெளிவர முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆட்சி மாறினால் உடனே அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் சினிமா துறையினர் கூட கருணாநிதி கு டும்பத்தின் ஆதிக்கம் குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர்.

இந்தக் குடும்ப ஆதிக்கம் தி.மு.க.வின் அமைச்சர்கள் மட்டத்திலும் பரவ ஆரம்பித்தது. மாவட்ட வாரியாக அமைச்சர்கள் தங்கள் வாரிசுகளைக் களமிறக்க கட்சிக்காக வேலை செய்த தொண்டர்கள் குமுற ஆரம்பித்தார்கள். அமைச்சர்கள் மீது தொடர்ந்து கூறப்பட்ட நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து கொலைக் குற்றப் புகார்களால் தி.மு.க.வின் இமேஜ் கடுமையாகச் சரிந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து மதிப்பு கற்பனை பண்ண முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது.

கருணாநிதியின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் ஆளாளுக்கு விளையாட ஆரம்பித்தார்கள். கருணாநிதியின் உதவியாளர் தனி ராஜ்ஜியமே நடத்த ஆரம்பித்தார். குடும்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிகார மையமாகச் செயல்பட்டது கட்சியினரிடையே கோபத்தையே ஏற்படுத்தியது.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் இரண்டு புதிய விஷயங்களை கவனிக்க வேண்டும். தி.மு.க. அரசுக்கே வாக்களித்த வரலாறுடைய அரசு ஊழியர்கள் இந் தமுறை பெருமளவில் அ.தி.மு.க.விற்கு வாக்களித்திருக்கிறார்கள். தி.மு.க.வின் உண்மையான கட்சித் தொண்டர்கள், ‘‘கட்சி வளர வேண்டுமானால் குடும்ப ஆதிக்கம் ஒழிய வேண்டும். அதற்கு இந்த முறை தி.மு.க. தோற்க வேண்டும். அதிலிருந்தாவது கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார்கள்.

கட்சியில் பல ஆண்டுகளாக வேலை செய்பவர்களை விட, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட, சீனியர் தி.மு.க.வினர் எரிச்சலடைந்தனர்.

தி.மு.க.வின் பலவீனங்கள் அ.தி.மு.க.வுக்கு பலமாகி விட்டது. அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் உழைப்பு இந்தத் தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம். வெற்றி பெறும் தொகுதிகளாக தேர்வு செய்தது, மக்களுக்கு நெருக்கமாக காட்டிக் கொண்டது, தி.மு.க.வின் பலவீனங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டது என பல காரணங்களை அடுக்கலாம். பெரிய ஊடக பலம் இல்லாததால் இந்த வேலைகள் வெளித்தெரியாமல் போயின.

இதைத்தவிர, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இலவச ஆடு, பசுமை வீடு போன்ற திட்டங்கள் கிராம மக்களை அதிகம் ஈர்த்துள்ளன என்பதும் உ ண்மை. விஜயகாந்துக்கு எதிராக தி.மு.க.வால் களமிறக்கப்பட்ட வடிவேலு, அ.தி.மு.க.வை தாக்கி ஒரு வார்த்தையும் பேசவில்லை.

எம்.ஜி.ஆர். பாடல்கள் வேறு பாடி ஓட் டுக்கேட்க, அதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்ததுதான் பெரும் நகைச்சுவை.

சீமான் போன்ற தமிழ்த்தேசியவாதிகள் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பெரிய அளவில் வேலை செய்ய, அதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமானது.

நாட்டை விட, வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் பலனை கருணாநிதி இப்போது உணர்ந்திருப்பார்.

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் ஜெயலலிதா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, ‘‘இது அ.தி.மு.க.வின் வெற்றி அல்ல. தி.மு.க.விற்கு எதிரான கோபம் மட்டுமே’’ என்பதைத்தான். மக்களின் மௌனப் புரட்சியே இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்குவதற்கு முன்பாக அறிவாலயத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். முடிவுகள் வரத்தொடங்கிய சிறிது நேரத்திற்கெ ல்லாம், ஒரு போலீஸார் கூட அங்கு இல்லை. கட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் மட்டும் இ ருந்தனர். பின்னர் ஆயிரம்விளக்கு உசேன் மட்டும் வந்து சேர்ந்தார். சளித் தொல்லை காரணமாக முதல்வர் யாரையும் பார்க்காமல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்தார். அங்கு பாதுகாப்புக்குப் போடப்பட்டிருந்த போலீஸாரும் சிறிது நேரத்தில் காணாமல் போயினர்.

வடிவேலு வீட்டுக்கு காவல்!

1967-ம் ஆண்டு அண்ணாதான் பிரசார பலமாக இருந்தார். அண்ணாவை முன்னிலைப்படுத்தியே தி.மு.க. பிரசாரம் செய்தது. மக்கள் அலைகடலென திரண்டு வந்து அவரது பேச்சை கேட்டார்கள்.

இந்தத் தேர்தலுக்கு அதே தி.மு.க., நடிகர் வடிவேலுவை நம்பியே களத்தில் இறங்கியது. விஜயகாந்தை திட்டுவது, எம்.ஜி.ஆர். பாட்டைப் பாடி தி.மு.க.வுக்கு ஓட்டுக் கேட்பது, தேர்தலுக்குப் பிறகு கருணாநிதியைச் சந்தித்து, தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அறிவிப்பது...என பிஸியாகவே இருந்தார் வடிவேலு.

தேர்தல் முடிவு வேறுவிதமாக அமைந்ததால், வடிவேலுவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டது. வடிவேலு வீட்டருகே அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களைச் சந்தித்தார். நடிகர் வடிவேலுவைப் பற்றி கருத்துக் கூறுவதை அவர் தவிர்த்துவிட்டார்.

சட்டசபையில் எதிர்க்க ட்சியாகும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்போம் என்று முடித்துக்கொண்டார்.

- குமுதம் ரிப்போட்டர்

Link to comment
Share on other sites

இந்த மௌன புரட்சியில் சீமானின் பங்கு

Significantly, film director and activist, Mr Seeman who runs a NAAM TAMILAR outfit met the AIADMK chief Miss J Jayalalitha before the polls and offered his support to defeat the DMK-Congress alliance. The DMK government had come down heavily on Mr Seeman and arrested him under NSA, in an apparent bid not to rub up the Congress the wrong way, even as Mr Karunanidhi himself never approved of the LTTE.

A powerful orator, Mr Seeman was drawing huge crowds from the day he addressed his first meeting on the Lankan Tamil plight just as the war began to escalate in Sri Lanka towards the end of 2008. In order not to have him challenge his hold on power, the DMK government had him arrested a few times and then under the NSA. As the election campaign drew to a close, the DMK chief gained an image as a friend of the Sri Lankan president, Mr Mahinda Rajapaksa.

After offering support to the AIADMK, Mr Seeman’s outfit got down to the job of exclusively targeting the Congress constituencies and campaigned widely in those constituencies. Elsewhere, the Lankan Tamil issue and Karunanidhi’s duplicity along with the “heartless” stand of the Congress was taken up by every Opposition party from the AIADMK to the BJP and even the BSP and independents

http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=369625&catid=36

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.