Jump to content

காதல் களம் கணவன் கடைசிக்கனவு


Recommended Posts

நெடுக்ஸ், நீங்கள் என்னதான் தலைகீழாக நின்று கூறினாலும்.. நீங்கள் இயக்கத்தில் இணைந்து ஆயுதம் தூக்கி போராடவில்லை என்பதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள். அன்பினி போல் உங்கள் கால்கள் துண்டாடப்படவில்லை. அன்பினிபோல் நீங்கள் பல்வேறு விதமான இம்சைகளிற்கு உள்ளாகவில்லை. இந்தவகையில் நீங்கள் என்னதான் தலைகீழாக நின்று உங்கள் த.வி.பு விசுவாசத்தை காட்டினாலும் அன்பினியின் த.விபு பற்றிய நேரடியான அனுபவங்களோ, உணர்வுகளோ உங்களிற்கு இல்லை. இதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பாசையில் கூறினால் உங்கள் அப்பட்டமான சுயநலம் காரணமாக படிப்பாளி என்கின்ற வேடம் போட்டு புலமைப்பரிசிலில் மாணவர் வீசா மூலம் லண்டன் வந்தவர் நீங்கள். அப்படிப்பட்ட உங்களிற்கு மற்றவன் எந்தவகையில் வெளிநாட்டிற்கு ஓடினான் என்று கூறி விமர்சனம் செய்யவும், நையாண்டி செய்யவும் உங்கள் சிந்தனைப்படி உரிமை கிடையாது.

கதையில் மிகத்தெளிவாக வெளியில் இருந்து பார்க்கப்படும் பார்வைக்கும், இயக்கத்தினுள் உள்ளே இருந்து பார்க்கப்படும் பார்வைக்கும் வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது. இயக்கத்தில் உள்ளவர்கள் சாதாரண மனிதர்கள். அவர்களிற்கு சாதாரண மனிதர்களிற்கு உள்ள உணர்வலைகளே உள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. அதாவது...

நெடுக்ஸ், நீங்கள் இப்போதும் சுமார் பத்து வருடங்களிற்கு முன்னர் அன்பினி தனது பதினாறாவது வயது சொச்சத்தில் பக்கத்துவீட்டில் குடியிருந்தவர்களை வேலிக்கால் எட்டி, எட்டிப்பார்த்து இயக்கம் பற்றி பல்வேறு விதமான ஆசைக்கனவுகளை கட்டிக்கொண்ட நிலமையிலேயே இருக்கின்றீர்கள் என்று புரிகின்றது. அன்பினி போல் ஓர் அப்பாவியாக இருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply

இது கதையல்ல.உண்மை. இயக்கம் சம்பந்தப்பட்டதல்ல.மனிதர்களின் உளவியல் சம்பந்தப்பட்டது.ஒருவன் இயக்கத்தில் இருந்தாலும் எந்தபெரும் பதவியில் இருந்தாலும் பிச்சைகாரனாக இருந்தாலும் எந்த இனம் மதம் ஆக இருந்தாலும் சூழ்நிலையும் கட்டுப்பாடுகளும்(சட்டமும் ஒழுங்கும்) தான் எம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது.

இவர்கள் இப்படித்தான் எதுவும் செய்யா மாட்டார்கள் பூப்போட்டு கும்பிடவேண்டும் என்பதெல்லாம் தான் எதையும் இழக்காமல் மற்றவனை தள்ளிவிடுவதற்கான ஆலாபனைகள்.

விடுதலை என்றுவந்து பலர் செய்த பஞ்சமா பாதகங்கள் நேரில் கண்டவன் நான்.அதற்காக எல்லோரும் அப்படியானவர்களுமில்லை. அன்பினிக்கு நடந்த நல்லதும் கெட்டதும் இயக்கத்திற்குள்ளேயும் வெளியேயும் நடந்துள்ளது.உலகமே இப்படித்தான். நாங்கள் புனிதர்கள் என்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள போடும் வேசமே.

அமெரிக்காவில் உள்ள மருதங்கேணியும், பிரான்சில் உள்ள விசுகுவும், லண்டனில் உள்ள நெடுக்சும் வெவ்வேறு இயக்க பணிகளின் நிமித்தம் அந்தக்காலத்தில் வெளிநாடுகளிற்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் ஆயுதம் தூக்கி போராடினால் தமிழீழம் கிடைக்காது, போரில் தோற்றுவிடுவோம் என்று கருதியே தலைவர் அவர்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தார். எனவே, தயவுசெய்து இவர்களை குறைகூறாதீர்கள். இவர்கள் தலைவரின் செல்லப்பிள்ளைகள்.

Link to comment
Share on other sites

பங்கர் வெட்ட வரச் சொல்ல சைக்கிளை போட்டுவிட்டு ஓடிப் போய் வீட்டில் பிள்ளை பிடிக்கிறாங்கள் என்று சொன்னவர்களையும் நமக்குத் தெரியும். அதைச் சொல்லி கொழும்புக்கு ஓடி கனடாவில் அகதியானவர்களையும் நமக்குத் தெரியும். அதேபோல்.. அண்ண எங்க வரனும் என்று சொல்லி.. கொடும் செல்லடிக்கு மத்தியிலும் பங்கர் வெட்ட வந்தவர்களையும் எமக்குத் தெரியும்.

தாங்கள் த.வி.பு மத்தியில் புகழ்பெறுவதற்காக ஊரில் உள்ள பெடியன்கள், நண்பர்களிற்கு கதை சொல்லி அவர்களை கொத்தாக கொண்டு சென்று இயக்கத்தில் சேர்ப்பித்துவிட்டு பின்னர் தாங்கள் நைசாக கழன்று இயக்கத்தை விட்டு வெளியேறி வெளிநாடு வந்தவர்களையும் எமக்கு தெரியும். இவர்கள் பசப்புக்கதைகளை நம்பிப்போனவர்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு தற்போது சுவர்களில் படங்களாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் உள்ள மருதங்கேணியும், பிரான்சில் உள்ள விசுகுவும், லண்டனில் உள்ள நெடுக்சும்

வெவ்வேறு இயக்க பணிகளின் நிமித்தம் அந்தக்காலத்தில் வெளிநாடுகளிற்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் ஆயுதம் தூக்கி போராடினால் தமிழீழம் கிடைக்காது, போரில் தோற்றுவிடுவோம் என்று கருதியே தலைவர் அவர்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தார். எனவே, தயவுசெய்து இவர்களை குறைகூறாதீர்கள். இவர்கள் தலைவரின் செல்லப்பிள்ளைகள்.

சிங்களவனை நம்பாதேபோராட்டுக்கான காரணங்கள் அப்படியேதான் உண்டு

உனக்காக நீயே போராடவேண்டும் என்று தொடர்ந்து சொல்பவன் புலி நன்றி ஜயா

தெரியாமல் தான் கேட்கின்றேன்

உங்களுக்கு புலி என்றால் இவ்வளவு எரிச்சல்?

புலியை விட்டால் வேறு என்ன தெரியும் உங்களுக்கு?

ஒரு கதை எழுதக்கூட அவர்கள் தான் வேண்டுமா தங்களுக்கு?

அவர்களைத்தொடாதவரை எனக்கும் தங்களுக்கும் எந்த பகையுமில்லை. தொட்டால் நான் நிச்சயம் வருவேன். கேட்பேன். எங்கேயென்றாலும்.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளைசலவை செய்யபடுகின்றவனுக்கு அது மூளைசலவை என்று தெரிந்தால் அது என்ன மூளைசலவை.

அதுதான் முழுநேரமாக இங்கே முயற்சிக்றீர்களோ??????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் முழுநேரமாக இங்கே முயற்சிக்றீர்களோ??????????????

விடுங்கள் ஜயா

பாவங்கள்

எவரும் இவர்களுடன் இல்லை

அந்த காழ்ப்புணர்சியால் வரும் வசனங்கள் இவை.

10 பேரைக்கூட்டி ஒரு ஊர்வலம் போனார்களா என்று கேளுங்கள்?

நேற்று உலகம் முழுவதும் சனம் திரண்டார்களே

இவர்கள் எங்காவது போனார்களா என்று கேளுங்கள்.

புலிக்கு குடிக்கப்பழக்கி அவர்கள் ஊற்றிக்கொடுத்து குடித்தோம் என்பதிலேயே இவர்களது குணம் தெரிந்துவிடும்.

Link to comment
Share on other sites

தெரியாமல் தான் கேட்கின்றேன்

உங்களுக்கு புலி என்றால் இவ்வளவு எரிச்சல்?

புலியை விட்டால் வேறு என்ன தெரியும் உங்களுக்கு?

ஒரு கதை எழுதக்கூட அவர்கள் தான் வேண்டுமா தங்களுக்கு?

அவர்களைத்தொடாதவரை எனக்கும் தங்களுக்கும் எந்த பகையுமில்லை. தொட்டால் நான் நிச்சயம் வருவேன். கேட்பேன். எங்கேயென்றாலும்.........................................

இவ்வளவு த.வி.பு விசுவாசத்தை காட்டு நீங்கள்:

1. ஏன் த.வி.புவில் இணைந்து ஆயுதம் ஏந்தி போராடவில்லை? ஏன் தாயகத்தை விட்டு ஓடினீர்கள்?

2. உங்கள் பிள்ளைகளை ஏன் த.வி.புவில் ஆயுதம் ஏந்தி போராடுவதற்காக இணைக்கவில்லை?

3. அன்பினியை நீங்கள் உங்கள் மகளாக நினைத்து அவருக்கு கூறக்கூடிய ஆறுதல் வார்த்தை என்ன?

4. இதுவரை அன்பினியின் அவலங்கள் பற்றி ஏதும் கூறவில்லையே, ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல வருகறீர்கள் என்பதை மற்றவருக்கும் புரியும் தமிழில் எழுதினால் அதற்கு பதில்களை எழுதலாம்............

என்ன மாவீரர்கள்தான் இனி கருத்துகளத்தில் வந்து எழுதவேண்டும்??? என்று சொல்ல வருகின்றீர்களா?

அல்லது நீங்கள்தான் பெரிய மேதாவி அடுத்தவன் எல்லாம் முட்டாள் என்று அபிலாசைபட்டால் அப்படியே அதை ஏற்றுகொள்கிறேன்.

புலிகளையும் தமழர்களையும் பிரித்து வேறாக்கிவிட்டால் ஸ்ரீலங்க அரசை காப்பற்றிவிடலாம் என்று நப்பாசைகொள்கிறீர்களா???

புலிகள் மீது போர்குற்றங்களை மறைமுகமாக சாடுவதால்............. இங்கே உள்ளவர்களை மூளைசலவை செய்யலாம் என்று பேராயப்படுகிறீர்களா??

நான் ஆயுதும் தூக்கி போராடவில்லை.............. அதை செய்திருந்தாலும் அதை அதை பறையடிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. நான் கால்களை இழக்கவில்லை எனக்கு இரண்டு கால்களும் நலமாக உள்ளன. எனக்கு தற்போது எந்த கொலையச்சுறுத்தலும் சிங்கள காடைகளாலோ அதனோடு கூடிதிரியும் கோடாரிகாம்புகளினாலோ இல்லை.

நான் தமிழ்ஈழ விடுதலைபோரில் போரடி மரணிக்கவில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன்.

அதற்கும் நான் மேலே எழுதிய கருத்திற்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் எனது கருத்தை மேற்கோள்காட்டி எழுதினால் எனது தவறை புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். நான் நீங்கள் அர்ஜுன் அளவிற்கு அறிவாளி இல்லை நானும் எதாவது மூளைசலவைக்கு ஆளாகியிருக்கலாம் அதை சுட்டிகாட்டடினால் எனது தவறுகளை புரிய வாய்ப்பிருக்கும். அதைவிடுத்து காகம் மாதிரி கரைந்துகொண்டு போனால் வாசிக்கும்போது அடியும் முடியும் புரியமுடியாதுள்ளது.............. ஆனால் எதையோ எழுதியள்ளதாக மட்டும் தெரிகிறது. தயவு செய்து அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்................... அதைவிடுத்து சாதாரண பமாரமக்களாகிய எங்களுடைய அறிவை எடைபோடாது உங்கள் அறிவுக்கு எட்டிய கருத்துகளை எழுதிகொண்டிருந்தால் எம்மால் புரியமுடியவில்லை என்பதை தாழ்மையோடு எடுத்துரைக்கிறேன். ஆனால் சிறிய ஒரு அறிவுரையாக சொல்கிறேன் பெருத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்று உலகத்தை எப்படி நடத்துவது 2050ல் 9பில்லியனாக வரப்போகும் சனத்தொகைக்கு தேவையான உணவை எப்படி உற்பத்தி செய்வது போர்களை தவிர்ப்பது போன்ற கருத்தாடல்கள் நாடுதோறும் நடக்கின்றது அங்கே சென்றால்................. (எமக்கும்) உலகத்திற்கும் நல்ல புண்ணியமாக இருக்கலாம். அங்கே மூளைசலவை செய்யாபடாது தன்னலமற்ற கருத்துகளையே வரவேற்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணாவோ,மருதங்கேணி அண்ணாவோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை அன்பினி என்ற தனிமனுசியின் வாழ்க்கை என எண்ணாதீர்கள்?

போருக்குப்பின்னரான ஒட்டுமொத்த முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இது?

கதை சொன்ன விதத்தில் வேண்டும் என்றால் தவறுகள்,திணிப்புக்கள் இருந்திருக்கலாம். ஆனால் இப்படியான ஒரு விடையம் நடக்காதது போல எழுதுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. இது யாராலும் மறக்கவும்,மறைக்கவும் முடியாது எல்லாரும் ஆளாளுக்கு விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள் என்ற நினைப்பில் செயற்படுவது தான் இன்னும் எம்மால் ஒற்றுமையாக முடியாமல் உள்ளதற்கான காரணங்களில் முக்கியமான காரணமாக உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது தனிநபர் சொத்தல்ல ஆளாளுக்கு உரிமை கொண்டாட உங்களுக்கு இருக்கும் அதே உரிமை தான் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது.

அன்பினி போன்ற ஆயிரம் உறவுகளின் வாழ்க்கையைக் கூட‌ நீங்கள் புத்தியால்,அறிவுக்கண்ணால் பார்க்கிறீர்கள் நாங்கள் மனச்சாட்சியால்,உணர்வுகளால் அவற்றை தரிசிக்கிறோம். அறிவால் பேசி வெல்வதற்கு இது பட்டிமன்றத்தலைப்பு அல்ல,அவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை உங்கள் மனச்சாட்சியைத்தொட்டு யோசியுங்கள்.

உதவி செய்வது என்பது அவர்களை மற்றவர்களில் தங்கி இருக்க வைப்பதற்கு அல்ல மாறாக நடக்க முடியாதவனுக்கு தடியை குடுத்து சொந்தமாக நடைபழக்குவதற்கே. ஒரு நேர உணவுக்கு வழி இல்லாதவனிடம் போய் உரிமை பற்றி வகுப்பெடுக்க உங்களால் முடியுமாக இருக்கலாம் ஆனால் அப்படி ஒரு அருகதை எனக்கு,என்னை போன்றவர்களிடம் இல்லை.

இதற்கு மேல் அவரவர் தனிப்பட்ட விடையம்.

Link to comment
Share on other sites

மருதங்கேணி, மேலே அன்பினியால் எழுதப்பட்ட கதையை பூரணமாக வாசித்தீர்களா அல்லது இல்லையா? இன்னமும் வாசிக்கவில்லையானால் வாசித்துவிட்டு கருத்திடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாவோ,மருதங்கேணி அண்ணாவோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை அன்பினி என்ற தனிமனுசியின் வாழ்க்கை என எண்ணாதீர்கள்? போருக்குப்பின்னரான ஒட்டுமொத்த முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இது?

கதை சொன்ன விதத்தில் வேண்டும் என்றால் தவறுகள்,திணிப்புக்கள் இருந்திருக்கலாம்.

இந்தக்கதையின் 11 பக்கம்வரை வாசித்துவிட்டு நிறுத்திவிட்டேன். அதுவரை அந்த பெண் தனிப்பட்ட ஒரு சாதாரண அதேநேரம் புலிகளால் ஏமாற்றப்பட்ட பெண்ணாகவே சித்தரிக்கப்படுகின்றாள்.

இதுவரைதமிழர்களுக்கு நடந்த கொடுமையை உணர்ந்து போராளியானதாக ஏதாவது உண்டா ஜீவா?

Link to comment
Share on other sites

இந்தக்கதையின் 11 பக்கம்வரை வாசித்துவிட்டு நிறுத்திவிட்டேன். அதுவரை அந்த பெண் தனிப்பட்ட ஒரு சாதாரண அதேநேரம் புலிகளால் ஏமாற்றப்பட்ட பெண்ணாகவே சித்தரிக்கப்படுகின்றாள். இதுவரைதமிழர்களுக்கு நடந்த கொடுமையை உணர்ந்து போராளியானதாக ஏதாவது உண்டா ஜீவா?

நீங்களும் மருதங்கேணி போல் கதையை முழுமையாக வாசிக்கவில்லை. நெடுக்ஸ் நீங்களாவது முழுமையாக வாசித்தீர்களா அல்லது நீங்களும் பதினொரு பக்கங்கள் வாசித்துவிட்டு அல்லது மேலோட்டமாக வாசித்துவிட்டு கருத்து இடுகின்றீர்களா?

விசுகு, உங்களால் இதே வினாவை மாண்டுபோன முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளிடம் கேட்க முடியுமா? அதாவது அவர்கள் தமிழர்களிற்கு நடந்த கொடுமையை உணர்ந்துதான் போராளிகள் ஆகினார்களா என்று?

தமிழருக்கு நடந்த கொடுமையை உணர்ந்த (?) உங்களாலேயே ஆயுதம் ஏந்தி போராடமுடியவில்லை. இதற்குள் எப்படி அன்பினி தமிழருக்கு நடந்த கொடுமையை உணர்ந்து இயக்கத்தில் இணையவில்லை என்று குறைப்பட்டுக் கொள்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கதையின் 11 பக்கம்வரை வாசித்துவிட்டு நிறுத்திவிட்டேன். அதுவரை அந்த பெண் தனிப்பட்ட ஒரு சாதாரண அதேநேரம் புலிகளால் ஏமாற்றப்பட்ட பெண்ணாகவே சித்தரிக்கப்படுகின்றாள்.

விசுகு அண்ணா தயவுசெய்து குறை நினைக்காதீர்கள்.

ஒவ்வொருத்தருடைய பார்வை ஒவ்வொருமாதிரி என்னுடைய கோணத்தில்,என்னுடைய கிரகிப்பில் இருப்பது போல மற்றவர்களுடைய பார்வையும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. இவை இப்படியே பேசாது போனால் இடைவெளி இன்னும் அதிகமாகுமே தவிர குறையப்போவதில்லை.

புலி என்ற முகத்திரையை கிழித்து அதே போல புலி எதிர்ப்பு,மாற்றுக்கருத்து என்பதை விடுத்து மனிதர்களை பாருங்கள். இக்கதையை கூட முழுமையாக படிக்க,ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஏதோ ஒன்று( உதாரணமாக புலி விசுவாசம் தடுக்கின்றது என்றால் இது ஆரோக்கியமான நிலை தானா என்பதையும் யோசியுங்கள். முதலில் நாம் எம்மை நாமே சுயவிமர்சனம் செய்யவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. மற்றவனுடைய கருத்தை செவிமடுக்கும் நிலையில் இல்லாத நாங்கள் எப்படி பிரச்சனைகளுக்குரிய தீர்வை தேடப்போகிறோம்?

இதுவரைதமிழர்களுக்கு நடந்த கொடுமையை உணர்ந்து போராளியானதாக ஏதாவது உண்டா ஜீவா?

இல்லை விசுகு அண்ணா. என் அறிவுக்கு தெரிந்து நாங்கள் இடம்பெயர்ந்தது கூட இல்லை. இந்தியன் ஆமி வந்த போது ஒரு தடவை வரணிக்கு இடம்பெயர்ந்து போனதாக அம்மா சொன்னா. எனக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தங்களுக்கு ஒன்று சொல்லவேண்டும் ஜீவா

இது வெளிவந்ததும் அதை பிரின்ற் எடுத்தேன்.

அதை புத்தகமாக்குவதுடன் அதை எனது நண்பர்களுக்கும் கொடுக்கும் எண்ணம் எனக்கு.

வாசிக்கலாம் என்று தொடங்கியபோது இது வேறு எதற்காகவோ எழுதியது போலிருந்தது எனக்கு...............???

அதனால் நிறுத்திவிட்டேன்.

ஒரு பிரதி கையிலுண்டு.

முழுமையாக வாசிக்கவில்லை இன்னும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, உங்களால் இதே வினாவை மாண்டுபோன முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளிடம் கேட்க முடியுமா? அதாவது அவர்கள் தமிழர்களிற்கு நடந்த கொடுமையை உணர்ந்துதான் போராளிகள் ஆகினார்களா என்று?

இந்த முப்பதாயிரம் போராளிகளும்

பொழுது போக்குக்காகவோ

பக்கத்தில் வகுப்பு நடந்ததால் .

அல்லது

மோட்டார் சைக்கிள் ஓடலாம்

உடுப்பு போடலாம்

ஆயுதம் எடுத்து சுடலாம்

காதலிக்கலாம்

அப்பா அம்மாவுக்கு கட்டுப்படாமல் திரியலாம்.............................................................

என்று இயக்கத்துக்கு வந்தார்களா கலைஞன் மற்றும் ஜீவா?

இதில் நமக்குள் சிக்கல்.

இதற்கான பதிலிலேயே எல்லாம் தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் படி இந்தப் 17 வயதுப் பெண் தானாக விரும்பி சுதந்திரமாக இருக்க விரும்பித் தான் இயக்கத்தில் சேர்ந்தார் அதாவது தான் நினைத்ததை செய்வதற்கு[மூளைச்சலவை செய்யப்பட்டு அல்ல] ஆனால் இயக்கம் என்டால் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும்..இயக்கத்திற்குப் போன பிறகு இயக்கத்தை குற்றம் சொல்லுவது தப்பு...அவருக்கு பிடிக்கா விட்டால் முதலிலே விலகி இருக்க வேண்டும் ஆனால் அவர் விலகவில்லை காரணம் அவருக்கு இயக்கத்தில் தொடர்ந்து இருக்க பிடித்து இருந்தது.

இன்று ஜீவா எழுதிய முதலாவது பதிவில் சொன்ன மாதிரி கதையை எழுதியவர் கதையை கூட்டி எழுதி இருக்கலாம் ஆனால் இப்படியான சம்பவங்கள் அங்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது.அதை இல்லை என உங்களால் மறுக்க முடியுமா?....பாதிக்கப்பட்ட அந்த பெண்ணோடு சேர்த்து இன்னும் எத்தனையோ முன்னால் போராளிகள் கஸ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்...எமக்காக போராடிய அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க உதவலாமே...நாங்கள் எப்படியாவது அவர்களை பாதுகாப்போம் என்ட நம்பிக்கையில் தானே தலைவர் விட்டு விட்டுப் போனவர்.அவருக்காகவாவது அந்தப் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும்,மக்களுக்கும் உதவுங்கள்.

விசுகு அண்ணா இந்த 30000 போராளிகளில் 10000 க்கும் குறைந்தவர்கள் தான் விரும்பி எமக்காக,எமக்கு நாடு வேண்டும் என்ட காரணத்தால் போராடப் போனவர்கள் மற்றவர்கள் பல் வேறு காரணங்களுக்காக இணைந்தவர்கள்

Link to comment
Share on other sites

ரதி, அவருக்கு இயக்கத்தில் இணைவதற்கான விருப்பம் மூளைச்சலவை செய்யப்பட்ட பின்னர்தானே வந்தது? அவர் இயக்கத்தைவிட்டு விலக முனைந்தார், ஆனால் பயம் காரணமாக (மூளைச்சலவை) அது முடியவில்லை. கதையை முழுமையாக பொறுமையாக படியுங்கள். இயக்கத்தில் இணைந்து கால்கள் துண்டாடப்பட்ட பின்னர் வீட்டிலும் வரவேற்பு இல்லாத நிலையில் அவர் எப்படி இயக்கத்தை விட்டு விலக முடிடியும்? இயக்கத்தில் இணைந்தால்தானே அதற்குள் உள்ள இம்சைகள் விளங்கும். அது புரியாமல்தானே அன்பினி தன்னையும் இணைத்துக்கொண்டார்?

இயக்கத்தில் இருந்து பல்லாயிரம் பேர் விலகினார்கள். இதற்கு என்ன கூறப்போகின்றீர்கள்? விலகியவர்கள் அனைவரும் தமிழருக்கு நடக்கும் கொடூரங்களை உணர்ந்து அறியாமலா விலகினார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

எம்மால் முடிந்த அளவுக்கும்மேலாக நாம் அவர்களுக்கு செய்து கொண்டுதான் இருக்கின்றோம். அதேநேரம் அவர்களுக்கான நிரந்தர அமைதியான வாழ்வுக்கான எமது பங்களிப்பு நேரம் அதிகமானது.

நன்றி தங்களது பணிவான எழுத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாவோ,மருதங்கேணி அண்ணாவோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை அன்பினி என்ற தனிமனுசியின் வாழ்க்கை என எண்ணாதீர்கள்?

போருக்குப்பின்னரான ஒட்டுமொத்த முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இது?

கதை சொன்ன விதத்தில் வேண்டும் என்றால் தவறுகள்,திணிப்புக்கள் இருந்திருக்கலாம். ஆனால் இப்படியான ஒரு விடையம் நடக்காதது போல எழுதுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. இது யாராலும் மறக்கவும்,மறைக்கவும் முடியாது எல்லாரும் ஆளாளுக்கு விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள் என்ற நினைப்பில் செயற்படுவது தான் இன்னும் எம்மால் ஒற்றுமையாக முடியாமல் உள்ளதற்கான காரணங்களில் முக்கியமான காரணமாக உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது தனிநபர் சொத்தல்ல ஆளாளுக்கு உரிமை கொண்டாட உங்களுக்கு இருக்கும் அதே உரிமை தான் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது.

அன்பினி போன்ற ஆயிரம் உறவுகளின் வாழ்க்கையைக் கூட‌ நீங்கள் புத்தியால்,அறிவுக்கண்ணால் பார்க்கிறீர்கள் நாங்கள் மனச்சாட்சியால்,உணர்வுகளால் அவற்றை தரிசிக்கிறோம். அறிவால் பேசி வெல்வதற்கு இது பட்டிமன்றத்தலைப்பு அல்ல,அவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை உங்கள் மனச்சாட்சியைத்தொட்டு யோசியுங்கள்.

உதவி செய்வது என்பது அவர்களை மற்றவர்களில் தங்கி இருக்க வைப்பதற்கு அல்ல மாறாக நடக்க முடியாதவனுக்கு தடியை குடுத்து சொந்தமாக நடைபழக்குவதற்கே. ஒரு நேர உணவுக்கு வழி இல்லாதவனிடம் போய் உரிமை பற்றி வகுப்பெடுக்க உங்களால் முடியுமாக இருக்கலாம் ஆனால் அப்படி ஒரு அருகதை எனக்கு,என்னை போன்றவர்களிடம் இல்லை.

இதற்கு மேல் அவரவர் தனிப்பட்ட விடையம்.

என்னுடைய கருத்துக்களின் நோக்கம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அவர்களின் பின்புலக் புனைகதைகளுக்கு அப்பால் உதவிகள் போய் சேர்வதோடு அவர்கள் நிரந்தரமாக மீட்சிப்படுத்தப்பட்டு சுபீட்சமான வாழ்வை வாழ வேண்டும் என்பதுதான். ஆளாளுக்கு எனி காலிழந்தற்கு கையிழந்தற்கு ஒரு கதை சொல்லி ஒட்டு மொத்த போராட்டத்தையும் அதற்காக விலை கொடுத்த போராளிகளையும் மக்களையும் கேவலப்படுத்தி அதில் வரும் வருமானத்தில் வாழ நினைப்பதிலும்.. தன் மானத்தோடு இனமானத்தோடு வாழ விளைதலே மேல்.

போராட்டத்தையும் இதர போராட்ட கால சம்பவங்களையும் தங்களுக்கு ஏற்ற மாதிரி விபரித்து அதனை போராட்டத்தையும் அதன் இட்டு நிகழ்ந்த தியாகங்களையும் கொச்சைப்படுத்த அந்த தியாகங்களில் பங்கெடுத்த மக்கள் என்ற வகையில் நாமும் பொறுத்துக் கொள்ள முடியாது. எம்மைப் பொறுத்தவரை நாமும் போராட்ட காலத்தை கழித்துத்தான் இருக்கிறோம். நாம் சந்திக்காததை இன்னொருவர் சந்தித்ததாகச் சொல்லும் போது அதை உடனடியாக நம்ப வேண்டிய அவசியம் கிடையாது.

என்னைப் பொறுத்தவரை இந்தப் பெண்ணின் மீது இரக்கத்திற்குப் பதில்.. எத்தனையோ உயிர் தியாகிகள் உயிர் கொடுத்து வளர்த்த அத்தனையையும் தனது சுயதேவைக்காக... சுய இழப்புக்காக இவர் கொச்சைப்படுத்த நினைப்பது இவர் மீது வெறுப்பையும் இவருக்கு உதவி செய்ய வேண்டுமா என்ற எண்ணத்தையுமே ஏற்படுத்துகிறது.

இரண்டு கால்களையும் இழந்து இரஞ்சிக் கொண்டிருக்கும்.. ஒருவர் மீது இரக்கமும்.. அன்பும்.. பரிவும் ஏற்படுவது வழமை. அதைக் கூட இந்தக் கதை எழுதிய பாணி இல்லாமல் செய்கிறது. இது பட்டிமன்றக் கருத்தல்ல.. எம் மன உணர்வில் உந்தப்பட்ட கருத்து..!

தயவுசெய்து... இப்படியான போராட்டத்தையும் போராட்ட கால தியாகிகளையும்.. அவர்களின் அர்ப்பணிப்புக்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக உண்மையை விளம்புகிறோம்.. உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்ற போர்வையில்.. கதை எழுதுவதை நிறுத்திவிட்டு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக் கொடுங்கோ. அதுவே அவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்ய அதிகம் தூண்டும். இந்தக் கதையை மட்டுமல்ல.. இதற்கு முன்னர் எழுதப்பட்ட சில கதைகளாலும் கூடத்தான் நேசக்கரத்தினூடான எனது பங்களிப்பை குறைத்துக் கொண்டேன். அது நேசக்கரத்தின் மீதான கடுப்பில் அல்ல. அது மக்களை உதவி கேட்டு அணுகும் முறையில் கையாளும் தவறினால் ஆகும்..!

நீங்கள் (சம்பந்தப்படவர்கள்) இதனை திருத்தாவிட்டால்.. பாதிக்கப்படப் போவது.. அன்பினி போன்றவர்களே. கதை எழுதுபவர்களோ.. எழுதியதாகச் சொல்பவர்களோ கிடையாது.

Link to comment
Share on other sites

பலரதுபின்னோட்டங்கள் என்ன சொல்லுகின்றன.இவர்கள் தாங்களோ தங்களது பிள்ளைகளகளோ பாதிகப்படாதவரை இப்படியே துதிபாடிக்கொண்டுதான் இருப்பார்கள்.கடைசி 10 ஆண்டுகளில் போராளில் பற்றாக்குறை வந்து பலவந்தமாக சிறுவர்களை பிடிக்கதொடங்கியது அனைவருக்கும் தெரிந்த உண்மை.இதில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பதயாராக இருந்தார்கள்.கடைசிக்காலங்களில் நான் அறிய புலம்பெயர்ந்த எவரும் போய் போராட்டத்தில் இணையவில்லை.

அங்கு என்ன நடக்கின்றது என்னவென்று இவர்களுக்கு வெட்ட வெளிச்சம்.மற்றது வெளிவேசம் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அமைப்பானது சமூகத்தில் பலவிதப்பட்ட பல இயல்புகளைக் கொண்ட அல்லது வித்தியாசமான எதிரெதிரான சிந்தனைகளைக்கொண்ட சகல மக்களையும் இணைத்துக் கொள்வதில் தான் அதன் வளர்ச்சி தங்கியுள்ளது .

சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் தன்மை மட்டும் அதன் வளர்ச்சிக்குஉதவாது.

மற்றவர்களின் மனம் புண்படாமல் அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி

அவர்களின் உதவியுடன் ஒரு அமைப்புச் செயல்படுமானால் அந்த அமைப்பிற்கு என்றுமே வளர்ச்சியே.

அதனால் பயனடையும் மக்களுக்கும் மகிழ்ச்சியே .

தனிப்பட்ட ஒருவர் மீதான அல்லது ஒரு அமைப்பின் மீதான விமர்சனத்திற்காக ஒரு இனத்தின்

விடுதலைக்காகப் போராடியவர்களைக் கொச்சைப் படுத்துவது ஒரு அமைப்பிற்கும் அதன் வளர்ச்சிக்கும்

அதன் எதிர்காலத்திற்கும் உகந்ததல்ல.

ஒரு அமைப்பின் விடாமுயற்சியைக் கண்டு வியந்து அதன் அமைப்பில் என்னையும் இணைத்துக்கொண்டு

(அங்கத்தவராக) ஒரு சில தடவைகள் நிதி உதவியும் செய்தேன்.

ஆனால் அவர்கள் நிதி சேகரிப்பதற்காக கையாளும் நடைமுறைகளைக் கண்டுவியந்து ஒதுங்கும்படியாகிவிட்டது.

அதேபோல இங்கு பாதிக்கப்பட்ட பெண்ணை நினைத்து மனம் வருந்தினாலும் அவரின் நிலையை

வெளிக்கொண்டு வந்தவர் மற்றவர்களின் மனதைப் புண்படும் வகையில் சில தனிப்பட்ட கருத்துக்களையும்

உட்புகுத்தியிருக்கின்ராரோ எனத் தோன்றுகின்றது.

அந்தப்பெண்ணின் நிலை யாருக்கும் மீண்டும் வரக்கூடாது

அதற்காக தமிழினம் ஒன்றுபட வேண்டும். குறுகிய சிந்தனைகளைக் கைவிட்டு நீண்டகால

சிந்தனைகளுக்கு இடமளித்து வரலாறுகளை மீட்டு இனி வரும் காலங்களில்

இப்படியான அவலங்களைத் தவிர்க்கலாம்.

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரதுபின்னோட்டங்கள் என்ன சொல்லுகின்றன.இவர்கள் தாங்களோ தங்களது பிள்ளைகளகளோ பாதிகப்படாதவரை இப்படியே துதிபாடிக்கொண்டுதான் இருப்பார்கள்.கடைசி 10 ஆண்டுகளில் போராளில் பற்றாக்குறை வந்து பலவந்தமாக சிறுவர்களை பிடிக்கதொடங்கியது அனைவருக்கும் தெரிந்த உண்மை.இதில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பதயாராக இருந்தார்கள்.கடைசிக்காலங்களில் நான் அறிய புலம்பெயர்ந்த எவரும் போய் போராட்டத்தில் இணையவில்லை.

அங்கு என்ன நடக்கின்றது என்னவென்று இவர்களுக்கு வெட்ட வெளிச்சம்.மற்றது வெளிவேசம் மட்டுமே.

போராட்டத்தை இனங்காட்டி கனடாவில் பல தசாப்தங்களாக பதுங்கி வாழ்க்கை வாழும் நீங்கள் இவற்றை எழுத என்ன தகுதி இருக்கிறது. உண்மைகளை அறியாமல் சகட்டு மேனிக்கு விடுதலைப் புலிகள் மீது சேறு வாரி வீசுவதற்கு என்றே நீங்கள் அதிகம் யாழுக்கு வருகிறீர்கள். இதனை ஒரு கருமமாகச் செய்யும் நீங்கள்.. முதலில் உங்கள் மனச்சாட்சியை தட்டிக் கேளுங்கள்.. எனக்கு இதனை எழுத என்ன தெரியும்.. என்ன தகுதி இருக்கிறது என்று..! வெங்காயத்தனமாக இருக்காதீர்கள்..! வெங்காயத்தை உரிக்க உரிக்க எதுவும் இல்லாதது போல்.. உங்கள் அரசியல் சார்ந்த எழுத்துக்களிலும் எதுவும் அர்த்தமுள்ளதாக உண்மையை சாட்சியங்களோடு பகிர்வதாக காண முடியவில்லை.

1987 - 90 களில் உங்கள் புளொட் உட்பட அமைப்புக்கள் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து சொந்த மக்களை சித்திரவதை செய்ய.. பிள்ளை பிடிச்சது போல விடுதலைப் புலிகள் பிள்ளை பிடிக்கவில்லை. அவர்கள் மக்களிடம் போராட்ட போர்க்கள நிலவரத்தைச் சொல்லி வீட்டுக்கொருவர் போராட வர வேண்டும் என்ற அழைப்பை பகிரங்கமாகத்தான் முன் வைத்தனர்.

இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்சில்.. ஆண்கள் போர்க்களத்துக்கு வரவில்லை என்றால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்துத்தான் நேசப்படைகளுக்கு ஆள் திரட்டினார். அதைக் கூட விடுதலைப் புலிகள் தேசத்திற்காக செய்யவில்லை. போராட்ட காலத்தில் சில சம்பவங்கள்.. மக்களின் அதி உச்ச விருப்புக்கு இணங்க நடக்க முடியாதவை. நெருக்கடியான சூழல்களில் அரசுகள்.. நிர்வாகங்கள் மக்களோடு கொஞ்சம் கண்டிப்பாக நடக்க வேண்டியது அவசியமாகிறது. அவை தவிர்க்கப் பட முடியாதவை. ஆனால் விடுதலைப் புலிகள் அதனைக் கூட இயன்ற வரை தவிர்க்க முற்பட்டவர்கள் என்பதை நாங்கள் 1986 இல் இருந்து 1998 வரை பல்வேறு காலக்கட்டங்களில் அவதானித்திருக்கிறோம். கூட இருந்து அனுபவித்திருக்கிறோம்..! எங்கள் எழுத்துக்கள் மூளைச் சலவைகளின் விளைவல்ல. உண்மைகளை.. ஆராய்ந்து அறிதலின் விளைவு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். காரணம்.. உங்கள் மூளை எங்கனும்.. புலி எதிர்ப்பு என்ற ஒரு பாசி நோயாகப் படர்ந்து கிடக்கிறது. அதை அகற்றாமல் உங்களுக்கு உண்மைகள்.. கண்ணுக்குத் தெரியப் போவதுமில்லை. தெரிந்தாலும் நீங்கள் அதனை உணர்ந்தாலும்.. உணர்ந்ததாகக் காட்டிக் கொள்ளப் போவதும் இல்லை.

அந்த வகையில் உங்கள் போன்ற அர்த்தமற்றவர்களின் இருப்பே இந்த உலகிற்கு பாரமானதும் கூட...! அதன் விளைவுகளே இந்த அன்பினிகளின் பெருக்கம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, அவருக்கு இயக்கத்தில் இணைவதற்கான விருப்பம் மூளைச்சலவை செய்யப்பட்ட பின்னர்தானே வந்தது? அவர் இயக்கத்தைவிட்டு விலக முனைந்தார், ஆனால் பயம் காரணமாக (மூளைச்சலவை) அது முடியவில்லை. கதையை முழுமையாக பொறுமையாக படியுங்கள். இயக்கத்தில் இணைந்து கால்கள் துண்டாடப்பட்ட பின்னர் வீட்டிலும் வரவேற்பு இல்லாத நிலையில் அவர் எப்படி இயக்கத்தை விட்டு விலக முடிடியும்? இயக்கத்தில் இணைந்தால்தானே அதற்குள் உள்ள இம்சைகள் விளங்கும். அது புரியாமல்தானே அன்பினி தன்னையும் இணைத்துக்கொண்டார்?

இயக்கத்தில் இருந்து பல்லாயிரம் பேர் விலகினார்கள். இதற்கு என்ன கூறப்போகின்றீர்கள்? விலகியவர்கள் அனைவரும் தமிழருக்கு நடக்கும் கொடூரங்களை உணர்ந்து அறியாமலா விலகினார்கள்?

கலைஞன் கதையை ஒரு தரம் முழுமையாக வாசித்தேன்...எதை அடிப்படையாக வைத்து அன்பினி இயக்கத்திற்குப் போவதற்கான விருப்பம் மூளைச் சலவை செய்யப்பட்டு என சொல்கிறீர்களோ தெரியவில்லை?...அன்பினியின் வீட்டுக்குப் பக்கத்தில் இயக்கம் வருகிறது.அவர்களது செயற்பாடுகளைப் பார்த்து அதாவது அந்த இயக்கப் போராளிப் பெண்கள் தலைமுடியை குட்டையாக வெட்டி இருப்பார்கள் ஆனால் இவர‌து வீட்டில் இர‌ட்டை பின்னல் போட‌ வேண்டும்,மோட்டார் சைக்கிள் ஓடும் பெண் போராளிகளைப் பார்த்து அதைத் தவிர‌ வீட்டுக்கு வரும் தளபதி மேல் அந்த வயதில் வரும் காதல்...அந்த தளபதி அன்பினியின் பெற்றோடு கதைத்து சில சலுகைகளை பெற்றுக் கொடுக்கிறார் மேலும் அத் தளபதி அன்பினியை காதலித்ததாக தெரியவில்லை...இதை தான் மூளைச்சலவை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ தெரியவில்லை.

பத்திரிகை,வானொலி பார்த்து,கேட்டு இயக்கத்திற்கு போன அன்பினி இயக்கத்திற்கு போனவர்கள் வீர‌ மர‌ணம் அடைவார்கள்,காயம் அடைவார்கள்,ஊனப்படுவார்கள் என்பதும் தெரிந்திருக்கவே வேண்டும்...இயக்கத்திற்கு போன உட‌னையே பயிற்சி கொடுக்காமல் ஒருவரையும் வைத்திருக்க மாட்டார்கள் அவர்கள் அர‌சியல் துறை போராளியாக இருந்தால் சரி புலனாய்வு போராளியாக இருந்தாலும் சரி அதில் அவர் விதி விலக்கு அல்ல...பிடிக்காமல் சிலர் பயிற்சியில் இருந்து வெளியேறி இருப்பது போல இவரும் வெளியேறி இருக்கலாம்...இவர் அப்படி வெளியேறவில்லை ஏதோ ஒரு கார‌ணத்திற்காக இயக்கத்தில் இருந்து போட்டு அதை கார‌ணம் காட்டி இயக்கத்தை குறை கூறுவது தப்பு.

தற்போது அந்தப் பெண் பாதிக்கப்பட்டு உள்ளார் அதில் மறு கருத்து இல்லை அவரைப் போல சிலர் பாதிக்கப்பட்டு உள்ளார் அதிலும் மறு கருத்து இல்லை...2 லட்சம் ரூபா அவருக்கு புலம் பெயர் நாட்டில் இருந்து அனுப்பி உள்ளார்கள்.இங்குள்ளவர்கள் உதவி செய்யாமலும் இல்லை ஆனால் அங்குள்ளவர்கள் சிலரும் ஏமாற்றுக்கார‌ராக உள்ளனர்...மருதங்கேணி எழுதின மாதிரி சாந்தி அக்கா தன்னை முன்னிலை படுத்தவே இந்தக் கதையை எழுதியுள்ளார் என்பதே என் கருத்து

Link to comment
Share on other sites

ரதி உங்களுக்கு மூளைச்சலவை என்றால் என்ன என்று தெரியவில்லை போல. கீழ்வரும் பத்தியில் இதன் ஓர் வடிவம் பற்றி கூறப்பட்டு உள்ளது. மூளைச்சலவை என்பது பலவித கோணங்களில் பல்வேறு பரிமாணங்களை கொண்டது. நீங்கள் ஓர் சமூகவியலாளராக இருப்பின் இதை மேலும் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக அமையும்:

44647537.png

Link to comment
Share on other sites

பத்திரிகை,வானொலி பார்த்து,கேட்டு இயக்கத்திற்கு போன அன்பினி இயக்கத்திற்கு போனவர்கள் வீர‌ மர‌ணம் அடைவார்கள்,காயம் அடைவார்கள்,ஊனப்படுவார்கள் என்பதும் தெரிந்திருக்கவே வேண்டும்...இயக்கத்திற்கு போன உட‌னையே பயிற்சி கொடுக்காமல் ஒருவரையும் வைத்திருக்க மாட்டார்கள் அவர்கள் அர‌சியல் துறை போராளியாக இருந்தால் சரி புலனாய்வு போராளியாக இருந்தாலும் சரி அதில் அவர் விதி விலக்கு அல்ல...பிடிக்காமல் சிலர் பயிற்சியில் இருந்து வெளியேறி இருப்பது போல இவரும் வெளியேறி இருக்கலாம்...இவர் அப்படி வெளியேறவில்லை ஏதோ ஒரு கார‌ணத்திற்காக இயக்கத்தில் இருந்து போட்டு அதை கார‌ணம் காட்டி இயக்கத்தை குறை கூறுவது தப்பு.

தற்போது அந்தப் பெண் பாதிக்கப்பட்டு உள்ளார் அதில் மறு கருத்து இல்லை அவரைப் போல சிலர் பாதிக்கப்பட்டு உள்ளார் அதிலும் மறு கருத்து இல்லை...2 லட்சம் ரூபா அவருக்கு புலம் பெயர் நாட்டில் இருந்து அனுப்பி உள்ளார்கள்.இங்குள்ளவர்கள் உதவி செய்யாமலும் இல்லை ஆனால் அங்குள்ளவர்கள் சிலரும் ஏமாற்றுக்கார‌ராக உள்ளனர்...மருதங்கேணி எழுதின மாதிரி சாந்தி அக்கா தன்னை முன்னிலை படுத்தவே இந்தக் கதையை எழுதியுள்ளார் என்பதே என் கருத்து

நல்லாய்த்தான் உள்ளது. இயக்கத்தில் சேர்ந்தால் ஏதோ யாரோ உங்களுக்கு (தமிழருக்கு?) அடிமைபோல் ஏவல் வேலை செய்யவேண்டும் எனும் கணக்கில் எழுதி இருக்கின்றீர்கள். நல்லகாலம் இப்படியோர் பதிவை சாந்தி அவர்கள் இங்கு இட்டது. நம்மவர்களின் உண்மை முகங்களை எதிர்கால அப்பாவித்தமிழருக்கு (போராளிகள்?) காண்பிப்பதற்கு இவை நிச்சயம் உதவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.