Jump to content

திருமணம் : சில அனுபவங்கள்


Recommended Posts

திருமணம் : சில அனுபவங்கள்

நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை.

-ரோட்னி டேஞ்சர்ஃபீல்டு

இரண்டு மனைவியருடனும் எனக்குத் துரதிருஷ்டம்தான். முதலாமவள் விலகிவிட்டாள். இரண்டாமவளோ கூடவே இருக்கிறாள்.

-பாட்ரிக் முர்ரே

மகிழ்ச்சியான மணவாழ்வை விரும்பும் கணவன், தன் வாயை மூடவும் காசோலைப் புத்தகத்தைத் திறந்துவைக்கவும் கற்கவேண்டும்.

-கிரௌச்சோ மார்க்ஸ்

தன் எதிரியுடன் உறங்கும் யுத்தம், திருமணம் மட்டுமே.

-யாரோ

திருமணத்துக்குப் பிறகு, கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. ஆனால், சேர்ந்தேவசிக்கிறார்கள்.

- ஹேமந்த் ஜோஷி

எப்படியானாலும் திருமணம் புரிந்து கொள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்வாய். அப்படியில்லாவிடில் தத்துவஞானி ஆகிவிடு வாய்.

- சாக்ரடீஸ்

என்னால் பதில் அளிக்கவே முடியாத ஒரு மாபெரும் கேள்வி. ""ஒரு பெண் விரும்புவது என்ன?''

-புரூட்

கடவுள், மனிதனிடம் நெருப்பை அளித்தார். மனிதன், தீயணைக்கும் கருவியைக் கண்டுபிடித்தான். அவர், காதலை அளித்தார். அவன், திருமணத்தைக் கண்டுபிடித்தான்.

-யாரோ

என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு.

-யாரோ

நான் தீவிரவாதத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

-சாம் கினிசன்

மின்னணு வங்கியைவிட மிக வேகமாகப் பணத்தைப் பரிமாற்ற ஒரு வழி உண்டு. அதன் பெயர், திருமணம்.

-ஜேம்ஸ் ஷோல்ட் மெக்காவ்ரன்

ஒரு வெற்றிகரமான திருமணத்தின் ரகசியம், அதிக நேரம் வீட்டில் இல்லாதிருப்பதே.

-காலின் சாப்மன்

Link to comment
Share on other sites

ஆண்கள் சந்தோசமாக இருப்பதைப்பொறுத்துக்கொள்ள முடியாத யாரோ திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.

--நான்தான்

Link to comment
Share on other sites

ஆண்கள் சந்தோசமாக இருப்பதைப்பொறுத்துக்கொள்ள முடியாத யாரோ திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.

--நான்தான்

அண்ணா நீங்கள் சொன்னது 1000த்தில ஒரு வார்த்தை

சொந்த அனுபவம் :cry: :cry: :cry: :cry:

வாழ்ந்த நம்ம டன்(யாழ்கள) மாதிரி வாழனும் :P :P :P

Link to comment
Share on other sites

:evil: :evil: சாறி வினீத் அண்ணா...இப்பிடி குறை சொல்லிக்கிட்டே இருப்பது எனக்கு பிடிப்பதில்லை..கல்யாணத்தையே குறை சொல்லுறீங்களே..கல்யாணம் என்ன தனி ஆளா? ஆணும், பெண்ணும் சேர்ந்து தானே..ரண்டு பேரும் யோசிச்சு செய்யணும்..இல்லையா..விட்டுட்ட

Link to comment
Share on other sites

நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை.

நான் என் மனைவியிடம் ஒரு ஒரு தடைவை தான் பேசி உள்ளேன் அதுவும் கடைசியும் முதலுமா என்னை திருமனம் செய்கிறயா எண்டு மட்டும் தான்

அதுக்கு பிறகு?????????????????????????????? :cry: :cry:

Link to comment
Share on other sites

:evil:  :evil: சாறி வினீத் அண்ணா...இப்பிடி குறை சொல்லிக்கிட்டே இருப்பது எனக்கு பிடிப்பதில்லை..கல்யாணத்தையே குறை சொல்லுறீங்களே..கல்யாணம் என்ன தனி ஆளா? ஆணும், பெண்ணும் சேர்ந்து தானே..ரண்டு பேரும் யோசிச்சு செய்யணும்..இல்லையா..விட்டுட்ட
Link to comment
Share on other sites

அண்ணா நீங்கள் சொன்னது 1000த்தில ஒரு வார்த்தை..சொந்த அனுபவம் :cry:  :cry:  :cry:  :cry:  

வாழ்ந்த நம்ம டன்(யாழ்கள) மாதிரி வாழனும் :P  :P  :P

ஜோவ்வ் வினித்,, நெஞ்சையே நக்கீட்டீங்கப்பா,,, :cry: அட உம்மட கருத்தைப்பார்க்கும் பொழுது அடிக்கடி நான் வாய்க்கை முனு முனுக்கிற பாட்டு திரும்பவும் ஞாபகத்துக்கு வருதப்பா... என்னபாட்டு எண்டு கேக்கல? அதுதானப்பா, மகளீர் மட்டும் படத்தில நாசர் பாடுற பாட்டு,, "கறவை மாடு மூனு காளை மாடு ஒன்னு" :wink: :wink: :P :P

Link to comment
Share on other sites

...குறை சொல்லி செய்யாத ஆக்களுக்கு பயத்தை உண்டு பண்ணக்கூடாது சொல்லிப்புட்டேன் :!:  :roll:  :P

இப்ப நாங்க சொன்னா மட்டும் கட்டாம இருந்து போயிடுவியள் ஆக்கும் கிழடு ஒண்டு அலம்புது எண்டு சொல்லிப்போட்டுத் தானே போவியள்

Link to comment
Share on other sites

ஆனால் திருமனம் ஆன்களுக்கு தான் சோதனை பெண்களுக்கு இல்லை

இது சத்யமா உண்மை இல்லை :!: எல்லாருக்கும் கஷ்டமானது சில வேளைகளில் அமைவதுண்டு..ஆனால் பாருங்கோ இங்க யாருமே பெண்கள் வந்து புலம்புறாங்களா?குறைவு.. எப்பவும் ஆண்கள் தானே..ஏன் அப்பிடி?????? :roll:

Link to comment
Share on other sites

இப்ப நாங்க சொன்னா மட்டும் கட்டாம இருந்து போயிடுவியள் ஆக்கும் கிழடு ஒண்டு அலம்புது எண்டு சொல்லிப்போட்டுத் தானே போவியள்

:lol: எல்லோருக்கும் நீங்கள் சொல்வது போல் இல்லாத பட்சத்தில்..எப்படி நம்புவது மு.அங்கிள்? நானும் எத்தனையோ பேரை கண்டிருக்கிறேன்..திருமண வாழ்க்கை நல்லதாக அமையாதவர்களை...அதே நேரம் நல்லதையும் கண்டிருக்கேன்..அப்போ..நமக்கும

Link to comment
Share on other sites

சாத்திரி : ஆண்களை விட பெண்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே ஏன் அப்படி??

முகத்தார்

Link to comment
Share on other sites

இது சத்யமா உண்மை இல்லை :!: எல்லாருக்கும் கஷ்டமானது சில வேளைகளில் அமைவதுண்டு..ஆனால் பாருங்கோ இங்க யாருமே பெண்கள் வந்து புலம்புறாங்களா?குறைவு.. எப்பவும் ஆண்கள் தானே..ஏன் அப்பிடி?????? :roll:

அது தான் சொன்னான் கஷ்டப்படுறவைதான் கவலை படுவினம்

நாங்கள் புலம்புறது கஷ்டத்தை தாங்க முடியாம தான் :P :P :P

எப்பவும் கஷ்ட படுத்துறவை வந்து புலம்பிவினமா?

Link to comment
Share on other sites

அது தான் சொன்னான் கஷ்டப்படுறவைதான் கவலை படுவினம்

நாங்கள் புலம்புறது கஷ்டத்தை தாங்க முடியாம தான் :P :P :P

எப்பவும் கஷ்ட படுத்துறவை வந்து புலம்பிவினமா?

:twisted: :twisted: :twisted: :evil: நீங்கள் திருந்த சான்சே இல்லை.. :evil: :evil: நான் போறேன்!!! அதுசரி ஒல்லாந்து தானெ இடம்? எங்க அண்ணிட பெயரை ஒருக்கால் சொல்லுங்கோ..ஒரு எட்டு போய் வாறன்..அப்புறம் பார்க்கலாம்... :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னம் களத்திலை கலாச்சாரக்காவலர்களாக இந்த ஆண்களெல்லாம் சத்தம் போட்டிங்கள். இப்ப திருமணமே உங்களுக்கு போட்ட சந்தோசப்பறிப்பெண்டு கண்ணீர் விடுகின்ற ஆண்களெல்லாம் ஏன் அறிந்தும் அதில் விழுகிறீர்கள் ?

இப்பிடி நடிச்சு நடிச்சே உங்கள் மனைவிகளை தங்கைகளை நாசம்பண்ணீட்டியள். இதுதான் நீங்கள் இன்னும் ஆழுகையாளர்களாகவும் பெண் இன்னும் ஆழப்படுபவளாகவும் இருக்க காரணம்.

உங்கள் மனைவிகளை தங்கைகளை அம்மாக்களை உங்களைப்போல் இப்படிப் புலம்ப அனுமதித்துப் பாருங்கள். அப்போ கன கதைகள் வெளிவரும். :arrow: :arrow: :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித்

பின்குறிப்பு: இப்படி தான் சின்னப்புவும் முகத்தரும் சொன்னவை நான் தான் கேக்கமா இப்படி போய்ட்டன்

சின்னப்புவும் முகத்தாரும் வினித்திலை பாசத்திலை சொல்லேல்ல. வயித்தெரிச்சலிலையெல்லோ சொன்னவை. ஏனெண்டா வினித்தின்ரை மகிழ்ச்சி தங்களுக்கு கிடைக்காம பாலைவனத்திலை காய வினித்மட்டும் சந்தோசமா இருக்கவோ எண்டெல்லோ அப்பிடிச் சொன்னவை. :lol:

Link to comment
Share on other sites

சின்னப்புவும் முகத்தாரும் வினித்திலை பாசத்திலை சொல்லேல்ல. வயித்தெரிச்சலிலையெல்லோ சொன்னவை. ஏனெண்டா வினித்தின்ரை மகிழ்ச்சி தங்களுக்கு கிடைக்காம பாலைவனத்திலை காய வினித்மட்டும் சந்தோசமா இருக்கவோ எண்டெல்லோ அப்பிடிச் சொன்னவை

அப்படி இருக்குமா? அப்பவும் நினைச்சனான் 40 வயசுக்கு

மேல வேர குனம் வாறதுஎண்டு

என்னால நம்ப முடிய இல்லை :oops: :oops:

சின்னப்புவும் முகத்தரும் நல்ல மனுசர் எண்டு தான் எல்லாரும் சொல்லினம்

யாழ்கள உறவுகள் மீது நல்ல அக்கறை உள்ள ஆக்கள் எண்டு தான் எல்லாரும் சொன்னாவை :P :P :P

Link to comment
Share on other sites

:? என்ன அஸ்வினி இது.. அங்கிளையும் அப்புவையும் மாட்டி விட்டுட்டீங்க?

எண்டாலும் வினீத் அண்ணாக்கு எங்க போச்சு புத்தி...யோசிக்க வேணாம்? இப்ப அவங்களை சாட்டுறௌ சுத்தப்பிழை :evil:

அதுசரி அண்ணி பற்றி சொல்லலையே வினீத் அண்ணா :wink:

Link to comment
Share on other sites

சின்னப்புவும்  முகத்தரும் நல்ல மனுசர் எண்டு தான் எல்லாரும் சொல்லினம்

யாழ்கள உறவுகள் மீது நல்ல அக்கறை உள்ள ஆக்கள் எண்டு தான் எல்லாரும் சொன்னாவை :P  :P  :P

தம்பி வினித் clap.gifclap.gifclap.gifclap.gif

Link to comment
Share on other sites

அதுசரி அண்ணி பற்றி சொல்லலையே வினீத் அண்ணா

அண்ணிய பற்றி என்ன சொல்ல அண்ணிய பார்த்த ஜஸ்வரியா பொறாமை படுவா(இப்படி சொன்ன தான் சாப்பாடு)

குனத்தில அவா ஒரு ஆழ் கடலில் கண்டு எடுத்த முத்து

பாசம் காட்டுறதில அவா ஒரு வைரம்

குடும்பத்தை கொண்டு நடத்துறதில அவா ஒரு தங்கம்

இப்படிதான் என மனைவி இருக்கனும் எண்டு ஆசை பட்டது எல்லாம் அது ஒரு கனா காலம் :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்து வைரம் தங்கமெல்லாத்தையும் காட்டி அண்ணியின் நிலை இப்ப அழகியின் நிலையோ வினித் ? :cry:

உங்கடை நிலையிப்ப ஓட்டோகிராப் நிலையோ வினித் ? :

நினைவுகள் நெஞ்சினில் சுடுகிறதே :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அண்ணிய பற்றி என்ன சொல்ல அண்ணிய பார்த்த ஜஸ்வரியா பொறாமை படுவா(இப்படி சொன்ன தான் சாப்பாடு)

குனத்தில அவா ஒரு ஆழ் கடலில் கண்டு எடுத்த முத்து

பாசம் காட்டுறதில அவா ஒரு வைரம்

குடும்பத்தை கொண்டு நடத்துறதில அவா ஒரு தங்கம்

இப்படிதான் என மனைவி இருக்கனும் எண்டு ஆசை பட்டது எல்லாம் அது ஒரு கனா காலம் :P  :P  :P  :P

என்ன அண்ணா நீங்கள் பேசாமல் ஒரு நகைக்கடை போடுங்களன். முத்து வைரம் தங்கள் எல்லாம் வைச்சு இருக்குறீங்கள் :evil: :evil: :evil: :evil: .

சா இந்த ஆண்கள் எப்பவும் இப்படித்தான் முத்து வைரம் என்று கலப்படம் இல்லாமல் பெண் இருக்கணும். தாங்கள் எப்பவும் பித்தளை மாதிரியே இருப்பாங்கள் திருந்த மாட்டாங்கள் :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணா நீங்கள் பேசாமல் ஒரு நகைக்கடை போடுங்களன். முத்து வைரம் தங்கள் எல்லாம் வைச்சு இருக்குறீங்கள் :evil: :evil: :evil: :evil: .

சா இந்த ஆண்கள் எப்பவும் இப்படித்தான் முத்து வைரம் என்று கலப்படம் இல்லாமல் பெண் இருக்கணும். தாங்கள் எப்பவும் பித்தளை மாதிரியே இருப்பாங்கள் திருந்த மாட்டாங்கள் :evil: :evil: :evil: :evil: :evil:

பாத்தீங்களா!!

பெண்களை உயர்வாகச் சொன்னால் ஆண்களை குறை கூறுவது. நீங்கள் அப்படி ஆண்களை எதிர்பார்த்தால் என்னவாம்!! :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

இரசிகை எழுதியது:

சா இந்த ஆண்கள் எப்பவும் இப்படித்தான் முத்து வைரம் என்று கலப்படம் இல்லாமல் பெண் இருக்கணும். தாங்கள் எப்பவும் பித்தளை மாதிரியே இருப்பாங்கள் திருந்த மாட்டாங்கள் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

யோவ் இரசிகை என்ன லொள்ளா சும்மா வெறும் பித்தளை என்று சொல்லி வயித்தெரிச்சலை கிளப்புறீர்.

வெறும் பித்தளையில்லை நெளிஞ்ச பித்தளை பாரும் :roll: :cry: :roll: :cry:

Link to comment
Share on other sites

பாத்தீங்களா!!

பெண்களை உயர்வாகச் சொன்னால் ஆண்களை குறை கூறுவது. நீங்கள் அப்படி ஆண்களை எதிர்பார்த்தால் என்னவாம்!! :oops: :oops: :oops:

உயர்வாகவும் சொல்ல வேண்டால் குறையாகவும் சொல்ல வேண்டாம் நீங்கள் நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்தாலே காணும். மனிசருக்கு தலைஇடி கொடுக்காமல் :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.