Jump to content

அவளின் பிரச்சினை (சிறுகதை)


Recommended Posts

குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது.

அவளின் பிரச்சினை (சிறுகதை)

-ஆனதி-

தேவாநந்தியை இப்போதெல்லாம் மனதின் வெறுமை மட்டுமே கோலோச்சுகிறது. ஏன்தான் தான் இன்னமும் வாழ்கிறேனோ என்று தன்னில்தானே பச்சாதாபப் பட்டுக்கொள்கிறாள். பதினெட்டு வயதுமுதல் முப்பத்தாறு வயதுவரை போராளியாக வாழ்ந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பும் பிறர் மீதான பாசமும் நேசமும் துடிதுடிப்பும் இப்போதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன.

அவளுக்கென கொடுக்கப்படும் கடமைகளை தேவாநந்தி உற்சாகத்தோடு செய்துமுடிப்பாள். அதனால் அவளுக்கு கடமைகளும் அதிகம் இருந்தன. அதனால் அவளின் மேலாளர்களிடம் அவளுக்கு நல்லபெயர் இருந்தது.

அவளின் இருபத்தியெட்டாவது வயதிலேயே அவளின் பெற்றவர்கள் அவளை வற்புறுத்திக் கேட்டார்கள்தான்,

“தேவாம்மா, நாங்களே உன்ர பொறுப்பாளரிட்ட வந்து கதைக்கிறம். முதல்ல நீ கலியாணத்துக்கு ஓமெண்டு சொல்லு”

“என்ன? கலியாணமா, எனக்கா?” என்று வாய் பிளந்தவள் திறந்த வாயை புறங்கையால் பொத்திக்கொண்டு அரக்கப்பரக்க விழித்தாள்.

“என்னம்மா உனக்கென்ன இன்னும் பதினெட்டு வயசுதான் எண்ட நினைப்பா? நீ இருபத்தெட்டு ஆச்சிது.” என்று அக்கறையோடு சொன்னார் தந்தை.

“ஐயோ அப்பா, இந்த வயசிலயே கலியாணமா? என்னப்பற்றி என்னப்பா நினைப்பினம்?”

“என்னம்மா நினைக்கிறது? நீ தாராளமாய் வேலை செய்திருக்கிறாய். கலியாணம் செய்த பிறகும் தொடர்ந்து நீ வேலை செய்ய அனுமதிக்கிற பெடியனாய் பாத்து கட்டினால் சரிதானேம்மா”

“ஐயோப்பா இப்ப என்னால ஏலாது. எத்தின சீனியஸ் அக்காமார் இருக்கிறாங்க. நீங்க எனக்குப்போய்... வேண்டாமப்பா.”

“வேண்டாமெண்டெல்லாம் சொல்லக்கூடாதம்மா. அதது காலா காலத்துக்கு நடக்கணும்.”

“சரி நான் வேணவே வேணாம் எண்டு சொல்லேல்ல. இப்ப வேணாம்.”

“அப்ப?”

“கொஞ்சநாள் போகட்டுமப்பா. இன்னும் நான் செய்யவேண்டிய சேவை எவ்வளவு இருக்கு.”

என்று அவள் அப்போது மறுத்தது இப்போது எவ்வளவு தப்பாகிப் போய்விட்டது.

அன்றிருந்த நிலை அப்படித்தான் அவளை பேச வைத்தது. அப்போது போராட்டத்தில் அவளைவிட மூத்தவர்களாய் இருந்தவர்களுக்கே அரிதாகத்தான் திருமணங்கள் நடந்தன. முப்பது வயதுக்குள் திருமணம் செய்பவர்கள் பொதுவாக விமர்சனத்துக்கு ஆளாகுவதுண்டு. பெற்றோரே முன்னின்று பேசி செய்து வைத்தாலும்கூட அது அவர்களது பேர்களையும் மாசுபடுத்திவிடலாம். சிறிய சொல்லும் தேவாநந்தியை இலகுவாகக் காயப்படுத்திவிடும். அதன் காரணங்களாகத்தான் அவள் மறுத்தாள். அதுமட்டுமல்ல அவளுக்கே கல்யாண வாழ்க்கை பற்றிய எந்த எண்ணமும் அப்போது இருக்கவுமில்லை. இந்த வயதில்தானே ஓடியாடி வேலைகளையும் தாராளமாகச் செய்யமுடியும்.

தேவாநந்தி பல இல்லங்களுக்கான வேலைகளைச் செய்யவேண்டி இருந்தது. ஆதரவற்றவர்களுக்கான சேவையில் தன்னை ஈடுபடுத்தியதால் அவர்களுக்காகவே வாழப்பிறந்தவளாக தன்னை எண்ணிக்கொண்டாள். ஆண்டுக்கணக்காய் போராளியாக இருந்ததனால் போராட்டத்திலும் சமூக நலனிலும் ஏற்பட்ட ஈடுபாடு ஓய்வொழிச்சலின்றி அவளை கடமையாற்ற வைத்தது. உண்மையான உள்ளன்போடு வாழ்ந்த அவளுக்கு சக போராளிகளின் ஈடிணையற்ற தியாகங்களின் பொருட்டு விடுதலை கிடைக்கும் என்று அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. அதனால்தானே தன்னை மறந்து தன் எதிர்காலத்தை மறந்து கடமையாற்றினாள்.

அவளது துடினத்தால் ஈர்க்கப்பட்ட, அவளது பண்புகளால் கவரப்பட்ட சிலர் அவளை மணம்முடிக்க விரும்பிய போதும் தேவாநந்தி மறுத்துவிட்டாள்.

இப்போது போய்விட்ட பேருந்துகளுக்கெல்லாம் கைகாட்டியவளாக தனியே நிற்கிறாள்.

முடிந்துவிட்டதாய் சொல்லப்படுகிற போர், தேவாநந்தியின் அப்பாவையும் சகோதரர்கள் சிலரையும் கூட்டிக்கொண்டு போய்விட்டது. அவளும் தங்கையும் அம்மாவும் மட்டுமே நட்டாற்றில் விடப்பட்ட தோணியாய் தத்தளித்துக்கொண்டு கிடக்கிறார்கள். அவளும் தங்கையும்தான் உழைக்கவேண்டும்.

அம்மா முன்னரைப்போல இல்லை. நிறையவே மாறிவிட்டார் அல்லது இழப்புகள் அவரை மாற்றிவிட்டன. முன்பெல்லாம் தேவாநந்தி வீட்டுக்கு வரும்போது தலை தடவி உணவளித்த பாங்கு, அப்பாவின் மறைவோடு காணாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் அம்மாவின் தொண தொணப்பும் முணுமுணுப்பும் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன.

அவள் எங்கு புறப்பட்டாலும் புலனாய்வு அதிகாரியைப்போல விசாரிக்கும் அம்மாவை அவளுக்கும் பிடிக்குதில்லை. வெளியே போய் வந்த களைப்புக்கு தேநீர் தரமுன்னர் அவள் விளக்கவுரை நிகழ்த்த வேண்டி இருக்கிறது. வாய்ச் சொல்லை அளந்து பேசி செயலால் வளர்ந்த அவளுக்கு இந்த விசாரணைகளும் விளக்கவுரைகளும் எரிச்சலை மூட்டாமல் என்ன செய்யும்?

தங்கைக்கும் அவளுக்கும்கூட அடிக்கடி கருத்து மோதல் ஏற்படும். தேவாநந்தியின் சமூகப் பார்வைக்கும் அவளது தங்கையின் பார்வைக்கும் இடையிலான ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் கருத்து மோதல்கள் இருவர் மனதையும் உடைத்துப் போட்டுவிடும். என்னதான் இருந்தாலும் அத்தனை காலங்களும் அம்மாவுக்கு அருகிலேயே இருந்து அவரை பார்த்துக்கொண்டவள் தங்கைதானே என்ற பற்று தங்கையை மதிக்கவும் நேசிக்கவும் வைக்கிறது. தேவாநந்தி ஒருவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்காக என்னைத் தருகிறேன் என்று குடும்பத்தைவிட்டு ஓடிப்போனவள்தானே.

இப்போது ஊராரின் விசாரிப்புகளும் உறவுகளின் பாராமுகமும் அவளை கொல்லாமல் கொல்கின்றன. நாளைக்கே அவளுக்கென்று ஒரு வரன் அமைந்தால் உடனே கழுத்தை நீட்டிவிடுவாள்தான். ஆனால் எதுவுமே அமைந்து வருவதாய் இல்லையே. கைக்கெட்டுவதுகூட வாய்க்கெட்டாமல் போய்விடுகிறது. கேட்டுவரும் அத்தனை வரன்களும் சீதனப் பிரச்சினையால் தட்டிவிடும். பவுண் பவுணாய் அள்ளிக்கொடுப்பதற்கு அவர்களிடம் எதுவுமே இல்லையே. அதற்கு மேலாக அவள் போராளியாக இருந்தாள் என்ற காரணத்தால் தட்டிக்கழிக்கப்படும். லட்சக்கணக்கில் வீட்டில் கொட்டிக் கிடந்தாலாவது போராளியாய் இருந்தாள் என்ற காரணம் மறக்கப்பட்டுவிட வாய்ப்புண்டு.

சில வேளைகளில் அவளே நினைப்பாள், தான் இந்த வயதுக்குப்பிறகு ஒரு திருமணம் செய்து என்ன வாழ்ந்துவிடப் போகிறேன் என்று. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தாயாகும் தகுதியையும் தான் இழந்துவிடப் போகிறவள் தானே. அவளுடைய ஆழ்மன எண்ணங்கள் அப்படியெல்லாம் இருந்தாலும் இப்படியா, இந்தத் தனிமையிலா? என்று நினைக்கும்போது எதிர்காலம் சூனியமாகி பயமுறுத்தும்.

அவள் கல்யாணம் கட்டத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இந்த வாழ்க்கை இனிமேல் வெறும் நரகம்தான்.

அவளின் பெரியப்பா வந்து அம்மாவிடம் ஏதோ குசுகுசுத்தது புரிந்து, தேவாநந்தி வெளியே வந்து நின்றுவிட்டாள். அம்மா என்ன பதில் சொல்லியிருந்தாரோ தெரியாது. பெரியப்பா வெளித் திண்ணையில் குந்திக் கொண்டிருந்த அவளிடம் வந்து செருமினார்.

அவர் தேவாநந்தியின் திருமணம் பற்றித்தான் உள்ளே தாயாரிடம் பேசினார் என்பதை யாரும் சொல்லாமலேயே அவள் புரிந்துகொண்டாள்.

“தேவா, உனக்கொரு கலியாணம் கேட்டிருக்கு. நீ ஓமெண்டால்....” என்று தயங்கி நிறுத்தினார்.

“கிளிநொச்சி மாமாட மகன். மூத்தவன் சின்ராசுதான்.” என்று பட்டென்று சொன்னார் பெரியப்பா.

“என்ன?” என்று அருண்டுபோன தேவாநந்தியின் நா உலர்ந்துவிட்டது.

அந்த குடிகார மொட்டையனையா? மூன்று பிள்ளைகளோடு நிற்கும் அவனை இவள் கட்டணுமா? என்று அவளுக்குள் பொங்கிய கோபம் பெரியப்பாவை மனம் நோக ஏதும் ஏசிவிடவில்லை.

“எனக்கு கலியாணமெல்லாம் வேணாம் பெரியப்பா.” என்று மெதுவாக முணுமுணுத்த தேவாநந்தி தன் கண்களில் தெரியும் ஆற்றாமையை பெரியப்பாவுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ள எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.

- ஆனதி-

நன்றி -http://mullai.org/tamil-ilakiyam/49-kathai/1074-sirukathai.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது.

அந்த குடிகார மொட்டையனையா? மூன்று பிள்ளைகளோடு நிற்கும் அவனை இவள் கட்டணுமா? என்று அவளுக்குள் பொங்கிய கோபம் பெரியப்பாவை மனம் நோக ஏதும் ஏசிவிடவில்லை.

“எனக்கு கலியாணமெல்லாம் வேணாம் பெரியப்பா.” என்று மெதுவாக முணுமுணுத்த தேவாநந்தி தன் கண்களில் தெரியும் ஆற்றாமையை பெரியப்பாவுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ள எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.

- ஆனதி-

நன்றி -http://mullai.org/tamil-ilakiyam/49-kathai/1074-sirukathai.html

இது எமது சமூகத்தில் உள்ள பாரிய பிரச்சனை ஒன்று. இதற்கு எதிராக பெண்களே போராடவேண்டும்.............

இது ஒன்றும் இப்போது புதிதாய் நடக்கும் பிரச்சனை இல்லை தொன்றுதொட்டே நடக்கின்ற ஒரு பெண்களுக்கெதிரான செயலாகும். வெளிநாட்டு மாப்பிளை என்ற பெயரில் 40வயது ஆணுக்கு 20வயது பெண்களை மணமுடித்து வைத்திருக்கிறது எமது சமூதாயம். 20வருடங்கள் கழித்து அவருக்கு 60வயது தன்னுடைய வேலைகளை பார்பப்தற்கே அந்தவயதில் சிலருக்கு ஒரு உதவி தேவயாய் இருக்கும்போது அந்த பெண்ணுடைய எதிர்பார்பபுகளை அவரால் எப்படி நிவர்த்தி செய்ய முடியும்? திருமணம் என்பது இருமனம் இணைவது என்பதை புறந்தள்ளிவிட்டு யாராவது ஒரு ஆணின் கையில் இவளை பிடித்துகொடுத்துவிட்டால் தமது கடமை முடிந்ததாக சில பெற்றோர்களே எண்ணுவது கொடூரமானது.

பேசி திருமணம் செய்யும் முறைமை இனிமேற்பட்டகாலத்திற்கு தகுமா என்பதை பெண்கள் சார்ந்த அமைப்புகள் சரியான ஒரு விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும். காரணம் இப்போது கடந்தகால 25வயது வாழ்வையும் ஒரு ஆண் ஒரு ஊரிலேயே வாழ்வது என்பது மிக குறைந்தவீதம்தான்............... ஆக ஒருவரை பற்றிய உண்மையான வாழ்வை எத்தனைபேரால் புரியமுடியும் அறியமுடியும் என்பது கேள்வியாக இருக்கும்போது. இந்த திருமணம் நிலைக்குமா இல்லiயா என்ற கேள்வியோடுதான் ஒரு திருமணத்தையும் செய்யமுடியும். இது பற்றிய தெளிவான ஒரு முடிவிற்கு பெண்கள் வரவேண்டும்.

பிறிதொரு தலபை;பில் பெண்களுக்கு (மது)குடிக்கும் உரிமையை கொடுக்க முடியாது என்று ஒரு ஆண் எழுதியிருந்தார். பெண்களுக்கு உரிமைகளை கொடுப்பதற்கு ஆண்கள் யார் என்ற கேள்விகள் பெண்களுக்குள் எழவேண்டும். (மது விடயம் தவறானதாக இருக்கலாம்) ஆனால் எந்தவிடயத்திலும் ஆண்களிடம் உரிமையை பெறுவது என்பது ஒரு போலிதனம் ஆண்களிடம் அப்படி எந்த பலமும் இல்லை என்பதே உண்மையானது. ஆண்களுக்க வன்மையும் பெண்களுக்கு மென்மையும் சிறப்பானது அவையிரண்டும் சேர்ந்தாலே ஒரு தாக்கத்தை உண்டுபண்ணமுடியும். ஆதாவது இல்தியரனியலில் மைனசும் பிளசும் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணுவதுபோல். அதற்காக பெண்களின் எண்ணங்களும் வாழ்வும் பென்மையாக இருக்க வேண்டியதில்லை வாழ்க்கை மென்மையானால்??? முன்னேற்றம் என்பது இல்லாது போய்விடும். இன்றைய உலகில் பல பில்லியன் டாலர்கள் பற்றிய முடிவுகளை எடுக்க கூடியவர்களாவே பெண்கள் இருக்கிறார்கள். அதையெல்லாம் தேடவேண்டிய வில்லங்கம் ஈழதமிழராகிய எமக்கு இல்லை தாய்நாட்டுவிடுதலை என்று வந்தபோது உயிருக்காக இலட்சாதி இலட்சம் ஆண்கள் (நான் உட்பட) ஒடியபோது எத்தனை பெண்கள் தமது உயிரை துட்சமாக எண்ணி எதிரியை தேடி குண்டுடன் போனார்கள்????

இப்போது இந்த ஓடிய ஆண்கள்தான் பெண்களுக்கு உரிமைய கொடுப்பது பற்றி பட்டிமன்றம் செய்வது பரிகசிக்க வேண்டிய ஒரு விடயம். ஆனால் அதை பகலிலேயே செய்கிறார்களே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் கதைகள் வாசிக்க நன்றாக இருக்கின்றன!

ஆனால் இந்தத் தேவானந்தியின் கதை ஒன்றும் எமக்குப் புதிதல்லவே!

ஏழில் செவ்வாய், அட்டமத்துச்சனி, பத்தில வியாழன் என்று புரையோடிப் போன நம்பிக்கைகளால் எத்தனையோ இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தேவையில்லாமல் இழந்திருக்கின்றனர்!

போராளியாகியது தேவானந்தினியின் தெரிவு. அவரது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்! அதில் எவரும் தலையிடவில்லை!

எதற்காக போராட்டத்தையும் இந்தக் கதைகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கின்றீர்கள் என்று கூறுவீர்களா?

வாழ்க்கையில் வேறு தேவைகள் அல்லது சேவைகள் குறுக்கிடும் போது, திருமணம் செய்யாமல் விடுவதோ அல்லது திருமணத்தைத் தள்ளிப் போடுவதோ ஒன்றும் புதிதல்லவே!

உதாரணத்திற்குத் தங்கம்மா அப்பாக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்களேன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் கதைகள் வாசிக்க நன்றாக இருக்கின்றன!

ஆனால் இந்தத் தேவானந்தியின் கதை ஒன்றும் எமக்குப் புதிதல்லவே!

ஏழில் செவ்வாய், அட்டமத்துச்சனி, பத்தில வியாழன் என்று புரையோடிப் போன நம்பிக்கைகளால் எத்தனையோ இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தேவையில்லாமல் இழந்திருக்கின்றனர்!

போராளியாகியது தேவானந்தினியின் தெரிவு. அவரது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்! அதில் எவரும் தலையிடவில்லை!

எதற்காக போராட்டத்தையும் இந்தக் கதைகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கின்றீர்கள் என்று கூறுவீர்களா?

வாழ்க்கையில் வேறு தேவைகள் அல்லது சேவைகள் குறுக்கிடும் போது, திருமணம் செய்யாமல் விடுவதோ அல்லது திருமணத்தைத் தள்ளிப் போடுவதோ ஒன்றும் புதிதல்லவே!

உதாரணத்திற்குத் தங்கம்மா அப்பாக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்களேன்!!!

புலிகள் போராடியிருக்காது போனால் இப்போது எமது சமூகம் இங்கே இருக்கும் என்ற கற்பனை காரணமாக இருக்கலாம்......

உலகம் உருண்டையாக இருந்ததால்தான் என்னால் அவளுடன் கூடிவாழ முடியவில்லை விவாகரத்து பெற்றேன் தட்டையாக இருந்திருந்தால் அவளுடன் கூடிவாழ்ந்திருக்கலாம் என்று ஒருவன் சொல்ல முடியுமா??? என்றால் யாழ்களத்தில் கருத்தெழுதும் சிலர் உண்டு என்றுதான் சொல்லவில்லை எழுதி வைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

சாந்தி உங்கள் கதைகள் வாசிக்க நன்றாக இருக்கின்றன!

ஆனால் இந்தத் தேவானந்தியின் கதை ஒன்றும் எமக்குப் புதிதல்லவே!

ஏழில் செவ்வாய், அட்டமத்துச்சனி, பத்தில வியாழன் என்று புரையோடிப் போன நம்பிக்கைகளால் எத்தனையோ இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தேவையில்லாமல் இழந்திருக்கின்றனர்!

போராளியாகியது தேவானந்தினியின் தெரிவு. அவரது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்! அதில் எவரும் தலையிடவில்லை!

எதற்காக போராட்டத்தையும் இந்தக் கதைகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கின்றீர்கள் என்று கூறுவீர்களா?

வாழ்க்கையில் வேறு தேவைகள் அல்லது சேவைகள் குறுக்கிடும் போது, திருமணம் செய்யாமல் விடுவதோ அல்லது திருமணத்தைத் தள்ளிப் போடுவதோ ஒன்றும் புதிதல்லவே!

உதாரணத்திற்குத் தங்கம்மா அப்பாக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்களேன்!!!

புங்கையூரான்,

இது நான் எழுதிய கதையில்லை. ஆனதியென்ற ஒரு முன்னாள் பெண்போராளி எழுதியது. கதையை எழுதியவரையும் இணைத்தவரையும் இனங்காண முடியாத தடுமாற்றத்திலிருந்து வெளிவாருங்கள்.

தேவானந்தியின் கதை புதிதல்ல புதிதென்று ஆனதியும் எழுதவில்லை நானும் எழுதவில்லை. அவளது கதையை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

ஏழில் எட்டில் பத்தில் தோசங்கள் பற்றிய கருத்தாடலுக்கு வரவில்லை இதில். அதனை இன்னொரு திரியில் ஆரம்பியுங்கள் கருத்தாடுவோம்.

Link to comment
Share on other sites

போராளியாகியது தேவானந்தினியின் தெரிவு. அவரது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்! அதில் எவரும் தலையிடவில்லை!

போராளியானது தேவானந்தியின் தெரிவு அவளது வாழ்வை வாழ்வதும் அவளது முடிவாக வேண்டுமென்கிற நீங்கள் ....அதற்குள் ஏன் தலையை நீட்ட வேண்டும் ?

தேவானந்தியின் வாழ்வு அவள் தீர்மானம் ஆனால் அவள் தனது வாழ்வை தாயகவிடுதலைக்காக 16வருடங்கள் இழந்து இன்று வாழ்வுமின்றி மரணமுமின்றி சாகின்ற வதையை அவள் சொல்வது அபத்தமா ?

தேவானந்தி போராளியான போது சிந்திக்காதவற்றை இப்போ சிந்தித்து தன்னைத் தான் நோக முடியும். தனது வலிகள் தீர அவளால் இப்படிச் சில பதிவுகளைத்தான் எழுத முடியும்.

சைனா கெய்ரெற்ஸி போராளியாகி பின்னர் பாதிப்படைந்து மனநலம் பாதித்து டென்மார்க் வந்த அவதிப்பட்ட நேரம் அவளது மனநல மருத்துவர் அவளை எழுதச்சொன்னார். சைனா கெய்ரெற்ஸி தனது வாழ்வை எழுதிய ஒவ்வொரு வரிகளையும் அவளது கண்ணீர் ஈரமாக்கியது.

சைனா கெய்ரெற்ஸியை ஒருதரம் வாசியுங்கள். இது ஆலோசனையில்லை சிலவேளை ஏதாவது புரிந்து கொள்ளலாம்.

சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவில் 1976ல் துற்சி இனக்குழுவில் பிறந்தவர். அரச எதிர்ப்புக் கெரில்லாப் படையான NRAயில் தனது ஒன்பதாவது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனா கெய்ரெற்ஸி கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டு, போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர். அவர் தனது குழந்தைப் போராளி வாழ்க்கையின் அவலங்களைத் தன்வரலாறு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை யாராவது படித்துப் பாருங்கள். சைனா கெய்ரெற்ஸியும் ஒரு பெண் போராளி.

ஓம் தமிழ்ச்சமூகம் மீதான அதீதஅன்பும் அக்கறையும் கொண்டவர் நீங்கள் அல்லவா.

உதாரணத்திற்குத் தங்கம்மா அப்பாக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்களேன்!!!

தங்கம்மா அப்பாக்குட்டியும் தேவானந்தியும் ஒரே தராசில் நிறுக்க முடியாதவர்கள். மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி ஆன்மீகவாதி அதீத கடவுள் நம்பிக்கையானவர். தேவானந்தி போராளி. தனது இனத்துக்காக 16வருடங்கள் வாழ்ந்து இன்று தனது வாழ்வைத் தொலைத்த துயரில் வாழும் ஒரு பெண் போராளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம்மா அப்பாக்குட்டியும் தேவானந்தியும் ஒரே தராசில் நிறுக்க முடியாதவர்கள். மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி ஆன்மீகவாதி அதீத கடவுள் நம்பிக்கையானவர். தேவானந்தி போராளி. தனது இனத்துக்காக 16வருடங்கள் வாழ்ந்து இன்று தனது வாழ்வைத் தொலைத்த துயரில் வாழும் ஒரு பெண் போராளி.

தங்கம்மா கறுப்பானவர் தேவனந்தி வெள்ளையானவர் என்று எழுதியிருந்தால் எல்லோருக்கும் இலகுவாக விளங்கியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்,

இது நான் எழுதிய கதையில்லை. ஆனதியென்ற ஒரு முன்னாள் பெண்போராளி எழுதியது. கதையை எழுதியவரையும் இணைத்தவரையும் இனங்காண முடியாத தடுமாற்றத்திலிருந்து வெளிவாருங்கள்.

தேவானந்தியின் கதை புதிதல்ல புதிதென்று ஆனதியும் எழுதவில்லை நானும் எழுதவில்லை. அவளது கதையை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

ஏழில் எட்டில் பத்தில் தோசங்கள் பற்றிய கருத்தாடலுக்கு வரவில்லை இதில். அதனை இன்னொரு திரியில் ஆரம்பியுங்கள் கருத்தாடுவோம்.

போராளியானது தேவானந்தியின் தெரிவு அவளது வாழ்வை வாழ்வதும் அவளது முடிவாக வேண்டுமென்கிற நீங்கள் ....அதற்குள் ஏன் தலையை நீட்ட வேண்டும் ?

சாந்தி,

எனக்கு நீங்கள் கூறுவது புரிகின்றது!

அதாவது ஆனதி என்ற போராளி, தேவானந்தி என்கிற போராளியாகத் தன்னை உருவகப் படுத்தி எழுதியிருக்கின்றார்.

இந்தக் கதையை களத்தில் எப்போது இணைத்தீர்களோ , உங்களை அறியாமலே அதற்குக் கருத்தெழுதும் உரிமையையும் எனக்குத் தந்து விட்டீர்கள்!

பிரச்சனை கருத்துப் பற்றியதேயன்றி, கருத்தெழுதும் உரிமை பற்றியதல்ல என்பது எனது கருத்தாகும்!

சைனா கெய்ரெற்ஸியை ஒருதரம் வாசியுங்கள். இது ஆலோசனையில்லை சிலவேளை ஏதாவது புரிந்து கொள்ளலாம்.

சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவில் 1976ல் துற்சி இனக்குழுவில் பிறந்தவர். அரச எதிர்ப்புக் கெரில்லாப் படையான NRAயில் தனது ஒன்பதாவது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனா கெய்ரெற்ஸி கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டு, போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர். அவர் தனது குழந்தைப் போராளி வாழ்க்கையின் அவலங்களைத் தன்வரலாறு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை யாராவது படித்துப் பாருங்கள். சைனா கெய்ரெற்ஸியும் ஒரு பெண் போராளி.

ஒன்பது வயதில் பலவந்தமாக இணைக்கப் பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப் பட்டு,போர்க்களங்களில் பலவந்தமாக முந்தள்ளப்ப் பட்ட சைனா கெய்ரெற்ஸியின் வரலாறும்,தேவானந்தியின் வரலாறும் எங்கே சந்திக்கின்றன என்பதை எனக்குத் தெளிவு படுத்துங்கள்!

அதாவது உங்கள் கருத்துப் படி தேவானந்தி பலவந்தமாகத் தனது குடும்பத்தில் இருந்து பிடுங்கப் பட்டு, பலவந்தமாகக் கைகளில் துப்பாக்கியும் குண்டுகளும் திணிக்கப் பட்டுப் போர்க்களத்திற்கு அனுப்பப் பட்டாள் என்று சொல்கின்றீர்கள்.

தேவானந்தியே எழுதியிருக்கும், பின் வரும் வசனத்தையும் வாசித்துப் பாருங்கள். அதன் பிறகு, உங்கள் கருத்தைக் கூறுங்கள். புத்தகத்தை நூலகத்தில் தேடுகின்றேன்!!!

பதினெட்டு வயதுமுதல் முப்பத்தாறு வயதுவரை போராளியாக வாழ்ந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பும் பிறர் மீதான பாசமும் நேசமும் துடிதுடிப்பும் இப்போதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு தார மணம் என்பது எமது சமூகத்தில் உண்டு தானே. கடவுள் முருகனே கட்டி இருக்கிறார். இப்படி கதை எழுதும் கதாசிரியர்கள்.. முற்போக்குவாதிகள்.. மொட்டை.. குடிகாரனுக்கு.. (டக்கிளஸ்) தேவானந்தியை கலியாணம் செய்து வைக்கிறதை இட்டு கரிசணை காட்டுபவர்கள்.. சமூகத்திற்கு கட்டளை இடுவதிலும்.. தங்கள் சொந்தக் கணவன்மாரை.. மனைவி மாரை.. இப்படியான போராளி அபலைப் பெண்களுக்கு/ஆண்களுக்கு கட்டி வைத்து அவர்களோடும் தங்கள் வாழ்வை பகிர்ந்து கொள்ள முன் வரலாமே. முன் மாதிரியாக இருக்கலாமே. தேவானந்திகளும் அன்பினிகளும்.. வாழ ஒரு வழி பிறந்ததும் ஆகும்.... எத்தனையோ பேர் வெளிநாட்டு வாழ்க்கை காண தாய் மண்ணில் நின்று மூளைச் சலவைக்கு அடி பணிந்து.. கட்டாயப்படுத்தல்கள் மத்தியில்.. போராடிய அவர்களுக்கும் ஒரு வெளிநாட்டு வாழ்வு கிடைக்குமே..! :unsure::o

தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்றுமாம்..! :):D

Link to comment
Share on other sites

குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது.

....

நன்றி -http://mullai.org/tamil-ilakiyam/49-kathai/1074-sirukathai.html

'முன்னாள்' போராளி என்ற சொல்லை தயவு செய்து தவிர்க்கப் பாருங்கள்... அந்த வார்த்தைப் பிரயோகம் ஒரு போராளியை கொச்சைப் படுத்துவதாக ஒரு போராளியே கூறி இருந்த இணைப்பை தங்கள் முன்னைய பதிவிலும் இணைத்திருந்தேன், இங்கேயும் உங்கள் கவனத்திற்கு இணைகிறேன்.

ஒரு முன்னாள் போராளி என்ற வகையில உங்களின் இன்றைய மனநிலை?

முன்னாள் போராளி - இப்படிச் சொல்வது தவறு. போராளி என்றால் முன்னாள் பின்னாள் என்றெல்லாம் கிடையாது. போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. அது வெவ்வேறு விடிவங்களை எடுக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் அது வேறான தொழில்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆகவே போராட்டத்துடன் என்றைக்கும் இணைந்திருக்கும் ஒரு போராளியை முன்னாள் போராளி பின்னாள் போராளி என்று சொல்ல முடியாது.

போராளி ஒரு அரச உத்தியோகத்தரைப்போல ஓய்வு பெறவும் முடியாது. ஓய்வாளராக அவரைக் கருதவும் முடியாது - இது அவர்களைக் கொச்சைப் படுத்தும் வார்த்தை அல்லது போராளி என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாதவர்களின் கதை எண்டுதான் அர்த்தம்.

Link to comment
Share on other sites

சாந்தி,

எனக்கு நீங்கள் கூறுவது புரிகின்றது!

அதாவது ஆனதி என்ற போராளி, தேவானந்தி என்கிற போராளியாகத் தன்னை உருவகப் படுத்தி எழுதியிருக்கின்றார்.

இந்தக் கதையை களத்தில் எப்போது இணைத்தீர்களோ , உங்களை அறியாமலே அதற்குக் கருத்தெழுதும் உரிமையையும் எனக்குத் தந்து விட்டீர்கள்!

பிரச்சனை கருத்துப் பற்றியதேயன்றி, கருத்தெழுதும் உரிமை பற்றியதல்ல என்பது எனது கருத்தாகும்!

உங்களுக்கான உரிமை மட்டுமல்ல கருத்தெழுதும் கருத்தாளர்கள் யாவரினதும் உரிமையை உங்களிடமிருந்த பறித்து என்னத்தை செய்யப்போகிறேன். களத்தில் ஒரு விடயத்தை இணைக்கின்றதன் நோக்கமே கருத்தாடல் செய்யவே. ஆக அறிந்தே களத்தில் கதையை இணைத்தேன்.

நீங்கள் எழுதியிருந்தீர்கள் தனிப்பட தேவானந்தியின் வாழ்வு அவளது முடிவுபற்றியெல்லாம் நீங்கள் எடுத்த முடிவை எழுதியிருந்தீர்கள். அதற்குத்தான் கேட்டேன் பதில் கேள்வியே தவிர உங்கள் உரிமை மறுப்பல்ல அது.

Link to comment
Share on other sites

ஒன்பது வயதில் பலவந்தமாக இணைக்கப் பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப் பட்டு,போர்க்களங்களில் பலவந்தமாக முந்தள்ளப்ப் பட்ட சைனா கெய்ரெற்ஸியின் வரலாறும்,தேவானந்தியின் வரலாறும் எங்கே சந்திக்கின்றன என்பதை எனக்குத் தெளிவு படுத்துங்கள்!

அதாவது உங்கள் கருத்துப் படி தேவானந்தி பலவந்தமாகத் தனது குடும்பத்தில் இருந்து பிடுங்கப் பட்டு, பலவந்தமாகக் கைகளில் துப்பாக்கியும் குண்டுகளும் திணிக்கப் பட்டுப் போர்க்களத்திற்கு அனுப்பப் பட்டாள் என்று சொல்கின்றீர்கள்.

Punkayooran,

நீங்களே எழுதியிருந்தீர்கள் இப்படி :-

போராளியாகியது தேவானந்தினியின் தெரிவு. அவரது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்! அதில் எவரும் தலையிடவில்லை!

எதற்காக போராட்டத்தையும் இந்தக் கதைகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கின்றீர்கள் என்று கூறுவீர்களா?

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை படியுங்கள் என்றதன் பொருள் சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் ஒரே தளத்தில் நிற்பவர்கள் என்பதனை நிறுவவல்ல. சைனா கெய்ரெற்ஸி எப்படி போராளியானாள் என்பதல்ல பிரச்சனை சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் போராளிகள். ஆனால் இருவரும் போராளிகளான வடிவம் மட்டுமே மாற்றம் ஆனால் இருவரும் பெண்போராளிகள்.

உங்கள் கருத்துப்படி எமது முன்னைநாள் போராளிகள் எவரும் கடந்த காலத்தை சொல்வது ஏற்க முடியாதது. அதாவது தமிழர்களின் போராட்டகளத்தில் நடந்த அனுபவித்த எதையும் வெளியில் சொல்வது குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய உங்கள் எண்ணத்திற்கே எனது பதில் எழுதப்பட்டதே தவிர வேறெந்த எண்ணமுமில்லை.

Link to comment
Share on other sites

'முன்னாள்' போராளி என்ற சொல்லை தயவு செய்து தவிர்க்கப் பாருங்கள்... அந்த வார்த்தைப் பிரயோகம் ஒரு போராளியை கொச்சைப் படுத்துவதாக ஒரு போராளியே கூறி இருந்த இணைப்பை தங்கள் முன்னைய பதிவிலும் இணைத்திருந்தேன், இங்கேயும் உங்கள் கவனத்திற்கு இணைகிறேன்.

மன்னிக்கவும் குட்டி. முன்னாள் போராளிகள் என்று அழைப்பதில் எதுவித கருத்துப்பிழைகளும் இருப்பதாய் தெரியவில்லை. நீங்கள் ஒட்டிய செவ்வியை ஒரு இணையம் வெளியிட்டிருந்தது. ஒரு போராளி தனது நிலைப்பாட்டில் நின்று அதைச் சொன்னதாகவே எடுத்துக் கொள்வோம். ஆனால் அந்தச் சொல்லையே எல்லாரும் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் எங்கும் இல்லை. ஆக முன்னாள் போராளியென்ற சொல்லை தொடர்ந்து சொல்வதில் எவ்வித அசெளகரியங்களும் இல்லை.

நீங்கள் கொச்சைப்படுத்துதல் என்று புரிந்து கொண்டிருப்பதற்காக எதையும் என்னால் செய்ய முடியாது.

பூச்சியம் என்ற பாவனையில் இருந்த 0ஐ சுளியமாக்கி தமிழில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாய் புழகாங்கிதமடைந்த எங்கள் ஊடகங்களின் ஞாபகம் தான் வருகிறது உங்களது முன்னாள் போராளி போராளி என்பதற்கான விளக்கம்.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Punkayooran,

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை படியுங்கள் என்றதன் பொருள் சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் ஒரே தளத்தில் நிற்பவர்கள் என்பதனை நிறுவவல்ல. சைனா கெய்ரெற்ஸி எப்படி போராளியானாள் என்பதல்ல பிரச்சனை சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் போராளிகள். ஆனால் இருவரும் போராளிகளான வடிவம் மட்டுமே மாற்றம் ஆனால் இருவரும் பெண்போராளிகள்.

தங்கம்மா அப்பாக்குட்டியும் தேவானந்தியும் ஒரே தராசில் நிறுக்க முடியாதவர்கள். மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி ஆன்மீகவாதி அதீத கடவுள் நம்பிக்கையானவர். தேவானந்தி போராளி. தனது இனத்துக்காக 16வருடங்கள் வாழ்ந்து இன்று தனது வாழ்வைத் தொலைத்த துயரில் வாழும் ஒரு பெண் போராளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா நீங்கள் தானே புலிகள் இருக்கும் போதே வன்னியில் போய் இருந்து கொண்டு அங்குள்ளவர்களுக்கு உதவினீர்கள்...தலைவர் இருக்கும் போதே அவரோடு கதைத்து அல்லது சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்களுடன் கதைத்து அந்தப் போராளிப் பெண்களும் உரிய காலத்தில் தமக்கு விருப்பமானவர்களை திருமணம் செய்ய எதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Punkayooran,

நீங்களே எழுதியிருந்தீர்கள் இப்படி :-

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை படியுங்கள் என்றதன் பொருள் சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் ஒரே தளத்தில் நிற்பவர்கள் என்பதனை நிறுவவல்ல. சைனா கெய்ரெற்ஸி எப்படி போராளியானாள் என்பதல்ல பிரச்சனை சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் போராளிகள். ஆனால் இருவரும் போராளிகளான வடிவம் மட்டுமே மாற்றம் ஆனால் இருவரும் பெண்போராளிகள்.

உங்கள் கருத்துப்படி எமது முன்னைநாள் போராளிகள் எவரும் கடந்த காலத்தை சொல்வது ஏற்க முடியாதது. அதாவது தமிழர்களின் போராட்டகளத்தில் நடந்த அனுபவித்த எதையும் வெளியில் சொல்வது குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய உங்கள் எண்ணத்திற்கே எனது பதில் எழுதப்பட்டதே தவிர வேறெந்த எண்ணமுமில்லை.

சாந்தி,

காயம்பட்ட, வாழ்வை இழந்து போன போராளிகளுக்கு நீங்கள் உதவும் பணி மிகவும் வரவேற்கத் தக்கதுடன் காலத்தின் தேவையும் கூட!

அவர்கள் தங்கள் கதைகளை, அனுபவங்களை எழுதுவதும் தவறல்ல!

ஆனால் அவர்கள் எழுதும் விதத்தில் மட்டும் எனக்கு உடன் பாடில்லை.அதையே எழுதினேன்!

உதாரணமாகத் திருமண பந்தமொன்றினுள் போய் விட்ட இருவர், அந்த உறவு அவர்கள் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் அமையாத போது, அந்தத் திருமணம் என்ற ஒப்பந்தத்தையே விமரிசிக்கக் கூடாது!

இங்கு தான் சைனா கெய்ரெற்ஸி, தேவானந்தியில் இருந்து வேறுபடுகின்றார்! சைனா கெய்ரெற்ஸி பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் இன்னும் உள்ளன! தன்னை ஒரு கிறிஸ்தவராக அடையாளப் படுத்தும் இவரது நூல்கள் இன்னும் அமெரிக்காவில் வெளிவரவில்லை.மந்தையில் இருந்து தப்பியோடிய ஆட்டுக்குட்டியாகத் தன்னை உருவகப் படுத்தும் இவர், தான் திரும்ப மந்தைக்குத் திரும்பி விட்டதாகக் கூறுகின்றார், இவரது கதைக்கும்,தேவானந்தியின் பின்னணிக்கும் எந்த வித ஒற்றுமைகளையும் நான் காணவில்லை! தவிர சைனா கெய்ரெற்ஸி ஒரு குழந்தைப் போராளி! தேவானந்தி ஒரு குழந்தைப் போராளியல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரிடையாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கும், அதை அவரிடமிருந்து செய்தியாகப் பெற்றுக்கொள்ளும் இன்னுமொருவருக்கும் அடிப்படைத் தகவலை புரிந்துகொள்வதில் வித்தியாசம் இருக்கும். எனவே நேரிடையாக தகவலைப் பெற்றவர், தான் புரிந்த அளவுக்கு மற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காமல் தன்னால் இயன்றவரை செய்தியை/கதையை மற்றவர்களுக்குச் சொல்லும்போது, அதன் மீது வைக்கும் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதில்களை பொறுமையாக வழங்கவேண்டும். பதில் வைக்க நேரம் இல்லையாயின் பதில் எழுதாமல் விடுவது, உணர்ச்சிமயமான கருத்துக்களை வைப்பதை விடப் பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்திற்குத் தங்கம்மா அப்பாக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்களேன்!!!

தங்கம்மா அப்பாக்குட்டியைக் காதலித்தவர் வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால் தான் தங்கம்மா அப்பாக்குட்டி திருமணம் செய்யவில்லை. பிற்காலத்தில் காதலித்தவர் தங்கம்மா அப்பாக்குட்டியை யாராவது ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்கும் படி கேட்க, இவர் மறுத்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம்மா அப்பாக்குட்டியைக் காதலித்தவர் வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால் தான் தங்கம்மா அப்பாக்குட்டி திருமணம் செய்யவில்லை. பிற்காலத்தில் காதலித்தவர் தங்கம்மா அப்பாக்குட்டியை யாராவது ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்கும் படி கேட்க, இவர் மறுத்துவிட்டார்.

தகவலிற்கு நன்றிகள் கந்தப்பு!!!

Link to comment
Share on other sites

தாய்நாட்டுவிடுதலை என்று வந்தபோது உயிருக்காக இலட்சாதி இலட்சம் ஆண்கள் (நான் உட்பட) ஒடியபோது எத்தனை பெண்கள் தமது உயிரை துட்சமாக எண்ணி எதிரியை தேடி குண்டுடன் போனார்கள்????

இப்போது இந்த ஓடிய ஆண்கள்தான் பெண்களுக்கு உரிமைய கொடுப்பது பற்றி பட்டிமன்றம் செய்வது பரிகசிக்க வேண்டிய ஒரு விடயம். ஆனால் அதை பகலிலேயே செய்கிறார்களே???

சரியான கூற்று மருதங்கேணி.

பகலிலேயே ஒரு கூச்சமும் இல்லாமல் கணனியின் முன் இருந்து கொண்டு புனை பெயரில் ஒளிந்துகொண்டு பதிவுகள் செய்கிறேன். வெட்கம் தான்.

சாந்தி அக்கா நீங்கள் தானே புலிகள் இருக்கும் போதே வன்னியில் போய் இருந்து கொண்டு அங்குள்ளவர்களுக்கு உதவினீர்கள்...தலைவர் இருக்கும் போதே அவரோடு கதைத்து அல்லது சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்களுடன் கதைத்து அந்தப் போராளிப் பெண்களும் உரிய காலத்தில் தமக்கு விருப்பமானவர்களை திருமணம் செய்ய எதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாமே.

அந்த காலகட்டத்தில் இந்த துணிகரமான பெண்கள் தமது வாழ்கையை தனியாக பிரித்து பார்த்திருக்க மாட்டார்கள். தமது உடல் பொருள் எல்லாவற்றையும் போராட்டத்துடனேயே இணைத்திருந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமாகாத புலம் பெயர் தமிழர்கள் இப்படியான போராளிப் பெண்களைத் திருமணம் செய்ய முன்வரவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.