Jump to content

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. அவரது இறு‌தி அ‌ஞ்ச‌லி இ‌ன்று (‌தி‌ங்க‌ட்‌கிழமை) நடைபெறு‌கிறது.

அனுராதா ரமண‌னு‌க்கு கட‌ந்த 10 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு இருதய‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌பிர‌ச்‌சினை‌க்காக இருதய அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

அறுவை ‌சி‌கி‌ச்சையை‌த் தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அ‌வ்வ‌ப்போது உட‌ல் பரிசோதனை செய்து கொ‌ள்வது வழக்கம். அதுபோல கடந்த 5-ந் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அனுராதா ரமண‌ன் மரு‌த்துவமனை‌க்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்‌திரு‌‌ப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு (பிளட் டயலிசிஸ்) செய்யப்பட்டது.

இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. தொட‌ர்‌ந்து அவ‌ர் மரு‌‌த்துவமனை‌யி‌ல் த‌ங்‌கி ‌சி‌‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தா‌‌ர். எ‌னினு‌ம் ‌சி‌கி‌ச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4.30 மணிக்கு அனுராதா ரமணனு‌க்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொதும‌க்க‌ள் அ‌ஞ்ச‌லி‌க்காக அவரது வீடான திருவான்மியூர் வால்மீகி நகர், ராஜ கோபாலன் முதல் தெருவில் வைக்கப்பட்டுள்ளது.

அனுராதா ரமணனு‌க்கு சுதா, சுபா என 2 மகள்கள் உ‌ள்ளன‌ர். இருவரு‌க்கு‌ம் ‌திருமணமா‌கி அமெ‌ரி‌க்கா‌வி‌ல் வ‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். பேரன், பேத்திகளு‌ம் உள்ளனர். அனுராதா ரமண‌னி‌ன் மறைவு கு‌றி‌த்த தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் மக‌ள், த‌ங்களது குடு‌ம்ப‌த்துட‌ன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனுராதா ரமண‌னி‌ன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு பெசன்ட்நகர் சென்று அங்கு உள்ள மின்சார சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

எழு‌த்தாள‌ர் வ‌ரிசை‌யி‌ல், பெ‌ண் எழு‌த்தாளராக ‌மிகவு‌ம் ‌பிரபலமானவரு‌ம், நாவ‌ல்க‌ள் எழு‌துவ‌தி‌ல் புக‌ழ்பெ‌ற்றவருமான எழுத்தாளர் அனுராதா ரமணன் நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், குறுநாவல்களையு‌ம், சிறுகதைகளையு‌ம் எழுதி உள்ளார். இவர் எழுதிய சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டன. அதுபோல பாசம், புன்னகை, அர்ச்சனை பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்பட படைப்புகள் டி.வி. நாடகங்களாக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கழக‌ம் சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றவ‌ர் அனுராதா ரமண‌ன்.

தகவல்.வெப்துனியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

அனுராதா ரமணன் அவர்கள் இறந்தது இன்றல்ல; போன வருடம் மே மாதம் 16 ஆம் திகதி அன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊப்ஸ்.... நிலாமதியக்கா காலாவதியான செய்தியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் யாழில் இவருக்கு அஞ்சலி செய்த ஞாபகம் இருக்குது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதியைக் கவனிக்க இல்லைப் போலும் விடுங்கோ..16.05.2010ல் அனுராதா ரமணன் காலமாகி விட்டார்.ரதி நீங்கள் சிரிச்ச படியால் நானும் சிரிக்கிறன் யாழில் மட்டுமார் நாங்கள் சிரிக்கிறதுக்கு திட்டினால் இரண்டு பேருக்கும் பாதி,பாதி சரியோ.. :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பச்சையும் யாரோ குத்தி இருக்காங்கள் என்ன கொடுமைடா? இது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கும் ஒரு பச்சை. (ரதியும் , யாயினியும் பாதி பாதி). :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பச்சையும் யாரோ குத்தி இருக்காங்கள் என்ன கொடுமைடா? இது :lol:

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

Link to comment
Share on other sites

நல்ல வேளை சிவப்பு குத்தும் முறை இல்லை இப்ப...அல்லாட்டி, சரியான தகவல் தந்ததுக்காக எனக்கு சிவப்பு குத்தி இருப்பார்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

முருகா,முருகா இதை எங்க போய் சொல்கிறது ...பக்கதில் சுவரும் இல்லை முட்டிக் கொள்வதற்கு.ஏன் கூ.சா அண்ணா ஊக்குவிப்பு புள்ளி போட்டனீங்கள்...அனுராதா ரமணனின் ஓராண்டு திவசத்தை நினைவுபடுத்தியதற்கா...? :)

ஒரு புள்ளி தந்துட்டு பாதி ஆக்கி விட்ட சுவி அண்ணாவுக்கு மிக்க நன்றிகள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

முடியல கு.சா அண்ணா உங்களை மாதிரி இன்னும் எத்தனை பேர் யாழில் இருக்காங்களோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

பச்சை குத்தி ஊக்குவிக்கும் குமாரசாமியார் என்னைச் சிரிக்கப் பண்ணியதால் ஒரு பச்சை :wub:

Link to comment
Share on other sites

பச்சை குத்தி ஊக்குவிக்கும் குமாரசாமியார் என்னைச் சிரிக்கப் பண்ணியதால் ஒரு பச்சை :wub:

பச்சை குத்தி சிரிக்கப் பண்ணிய குமாரசாமியாருக்கு பச்சை குத்தி என்னை சிரிக்க வைத்ததால், கிருபனுக்கு ஒரு பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி ஒரு திரியை நான் இது வரைக்கும் பார்க்கல...தொடரட்டும் உங்கள் பணி :D

Link to comment
Share on other sites

மன்னிக்க வேண்டுகிறேன்.

தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதற்காக நிலாமதியிற்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைய்யா இறப்பு செய்தியை சிரிப்பு செய்தி ஆக்கிய பெருமைக்கு உரியவர்கள் என்றால் நாங்களே தான்...நல்லவேளை கு.சா அண்ணா விருது கொடுக்காமல் பச்சை புள்ளியைப் போட்டு ஊக்குவித்து இருக்கிறார்.. :lol:gold.gif:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணா எப்ப இருந்து கூசாவாக மாறினீங்கள்?

என்னுடைய சந்தேகத்தின்படி கிருமி, வெட்டுக்கிளி, வினாகிரி, விட்டில்ப்பூச்சி, பல்லிக்குட்டி என்று யாராவது பச்சை குத்தியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் இப்பிடி எதிர்பார்க்க முடியாத குட்டிச்சாத்தான் {கு.சா} :lol: குத்திவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. :D

Link to comment
Share on other sites

அனுராதா ரமணன் அவர்கள் இறந்தது இன்றல்ல; போன வருடம் மே மாதம் 16 ஆம் திகதி அன்று

நிழலி, உமக்கு வேற வேலையில்லையோ??? ... பேசாமல் இந்தப்பக்கம் வராது விட்டிருந்தால் ... நாம் ஓர் ஒப்பாரியே பாடி முடித்திருப்போம்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, உமக்கு வேற வேலையில்லையோ??? ... பேசாமல் இந்தப்பக்கம் வராது விட்டிருந்தால் ... நாம் ஓர் ஒப்பாரியே பாடி முடித்திருப்போம்! :lol:

மற்றவர்களுக்கு ஒப்பாரி பாடுவதில் அப்படி என்ன திருப்தியைக் காணப் போறீங்கள்......??? :wub::(

யாருக்கும் ஒப்பாரி பாடும் குழுவில் நான் எப்போதும் இருக்கப் போவது இல்லை...

இந்தத்திரியில் எனது கடசி பதிவு.நன்றி.

நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Link to comment
Share on other sites

மற்றவர்களுக்கு ஒப்பாரி பாடுவதில் அப்படி என்ன திருப்தியைக் காணப் போறீங்கள்......??? :wub::(

யாருக்கும் ஒப்பாரி பாடும் குழுவில் நான் எப்போதும் இருக்கப் போவது இல்லை...

இந்தத்திரியில் எனது கடசி பதிவு.நன்றி.

நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

இதில சீரியஸ் ஆக சீறிப் பாய்வதற்கு என்ன இருக்கு....

செத்த வீட்டில் ஒப்பாரி வைச்ச பிறகு, "அடியே ராசு, சுப்பர்ட மகள் சுமதி ஓடிப் போயிட்டாள் தெரியுமா" என்று ஆரம்பித்து உள்ள நாட்டு பகிடி விடுவதை காணவில்லையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில சீரியஸ் ஆக சீறிப் பாய்வதற்கு என்ன இருக்கு....

செத்த வீட்டில் ஒப்பாரி வைச்ச பிறகு, "அடியே ராசு, சுப்பர்ட மகள் சுமதி ஓடிப் போயிட்டாள் தெரியுமா" என்று ஆரம்பித்து உள்ள நாட்டு பகிடி விடுவதை காணவில்லையா

நான் சீறிப் பாய இல்லை நிழலி அண்ணா.. :)

எழுதிறதுக்கு வேறு ஒன்றும் இல்லையா அதற்காகவே அப்படி எழுதினேன்..நீங்களே அனுமதிக்கும் போது ..இனி நான் ஒன்றுமே சொல்ல இல்லை.. :)

நெல்லையன் மன்னித்துக் கொள்ளுங்கள். :)

Link to comment
Share on other sites

கு.சா அண்ணா எப்ப இருந்து கூசாவாக மாறினீங்கள்?

என்னுடைய சந்தேகத்தின்படி கிருமி, வெட்டுக்கிளி, வினாகிரி, விட்டில்ப்பூச்சி, பல்லிக்குட்டி என்று யாராவது பச்சை குத்தியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் இப்பிடி எதிர்பார்க்க முடியாத குட்டிச்சாத்தான் {கு.சா} :lol: குத்திவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. :D

இதுக்கு வேற 4 பச்சையா? முடியல.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.