Jump to content

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. அவரது இறு‌தி அ‌ஞ்ச‌லி இ‌ன்று (‌தி‌ங்க‌ட்‌கிழமை) நடைபெறு‌கிறது.

அனுராதா ரமண‌னு‌க்கு கட‌ந்த 10 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு இருதய‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌பிர‌ச்‌சினை‌க்காக இருதய அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

அறுவை ‌சி‌கி‌ச்சையை‌த் தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அ‌வ்வ‌ப்போது உட‌ல் பரிசோதனை செய்து கொ‌ள்வது வழக்கம். அதுபோல கடந்த 5-ந் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அனுராதா ரமண‌ன் மரு‌த்துவமனை‌க்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்‌திரு‌‌ப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு (பிளட் டயலிசிஸ்) செய்யப்பட்டது.

இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. தொட‌ர்‌ந்து அவ‌ர் மரு‌‌த்துவமனை‌யி‌ல் த‌ங்‌கி ‌சி‌‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தா‌‌ர். எ‌னினு‌ம் ‌சி‌கி‌ச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4.30 மணிக்கு அனுராதா ரமணனு‌க்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொதும‌க்க‌ள் அ‌ஞ்ச‌லி‌க்காக அவரது வீடான திருவான்மியூர் வால்மீகி நகர், ராஜ கோபாலன் முதல் தெருவில் வைக்கப்பட்டுள்ளது.

அனுராதா ரமணனு‌க்கு சுதா, சுபா என 2 மகள்கள் உ‌ள்ளன‌ர். இருவரு‌க்கு‌ம் ‌திருமணமா‌கி அமெ‌ரி‌க்கா‌வி‌ல் வ‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். பேரன், பேத்திகளு‌ம் உள்ளனர். அனுராதா ரமண‌னி‌ன் மறைவு கு‌றி‌த்த தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் மக‌ள், த‌ங்களது குடு‌ம்ப‌த்துட‌ன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனுராதா ரமண‌னி‌ன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு பெசன்ட்நகர் சென்று அங்கு உள்ள மின்சார சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

எழு‌த்தாள‌ர் வ‌ரிசை‌யி‌ல், பெ‌ண் எழு‌த்தாளராக ‌மிகவு‌ம் ‌பிரபலமானவரு‌ம், நாவ‌ல்க‌ள் எழு‌துவ‌தி‌ல் புக‌ழ்பெ‌ற்றவருமான எழுத்தாளர் அனுராதா ரமணன் நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், குறுநாவல்களையு‌ம், சிறுகதைகளையு‌ம் எழுதி உள்ளார். இவர் எழுதிய சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டன. அதுபோல பாசம், புன்னகை, அர்ச்சனை பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்பட படைப்புகள் டி.வி. நாடகங்களாக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கழக‌ம் சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றவ‌ர் அனுராதா ரமண‌ன்.

தகவல்.வெப்துனியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

அனுராதா ரமணன் அவர்கள் இறந்தது இன்றல்ல; போன வருடம் மே மாதம் 16 ஆம் திகதி அன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊப்ஸ்.... நிலாமதியக்கா காலாவதியான செய்தியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் யாழில் இவருக்கு அஞ்சலி செய்த ஞாபகம் இருக்குது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதியைக் கவனிக்க இல்லைப் போலும் விடுங்கோ..16.05.2010ல் அனுராதா ரமணன் காலமாகி விட்டார்.ரதி நீங்கள் சிரிச்ச படியால் நானும் சிரிக்கிறன் யாழில் மட்டுமார் நாங்கள் சிரிக்கிறதுக்கு திட்டினால் இரண்டு பேருக்கும் பாதி,பாதி சரியோ.. :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பச்சையும் யாரோ குத்தி இருக்காங்கள் என்ன கொடுமைடா? இது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கும் ஒரு பச்சை. (ரதியும் , யாயினியும் பாதி பாதி). :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பச்சையும் யாரோ குத்தி இருக்காங்கள் என்ன கொடுமைடா? இது :lol:

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

Link to comment
Share on other sites

நல்ல வேளை சிவப்பு குத்தும் முறை இல்லை இப்ப...அல்லாட்டி, சரியான தகவல் தந்ததுக்காக எனக்கு சிவப்பு குத்தி இருப்பார்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

முருகா,முருகா இதை எங்க போய் சொல்கிறது ...பக்கதில் சுவரும் இல்லை முட்டிக் கொள்வதற்கு.ஏன் கூ.சா அண்ணா ஊக்குவிப்பு புள்ளி போட்டனீங்கள்...அனுராதா ரமணனின் ஓராண்டு திவசத்தை நினைவுபடுத்தியதற்கா...? :)

ஒரு புள்ளி தந்துட்டு பாதி ஆக்கி விட்ட சுவி அண்ணாவுக்கு மிக்க நன்றிகள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

முடியல கு.சா அண்ணா உங்களை மாதிரி இன்னும் எத்தனை பேர் யாழில் இருக்காங்களோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

பச்சை குத்தி ஊக்குவிக்கும் குமாரசாமியார் என்னைச் சிரிக்கப் பண்ணியதால் ஒரு பச்சை :wub:

Link to comment
Share on other sites

பச்சை குத்தி ஊக்குவிக்கும் குமாரசாமியார் என்னைச் சிரிக்கப் பண்ணியதால் ஒரு பச்சை :wub:

பச்சை குத்தி சிரிக்கப் பண்ணிய குமாரசாமியாருக்கு பச்சை குத்தி என்னை சிரிக்க வைத்ததால், கிருபனுக்கு ஒரு பச்சை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி ஒரு திரியை நான் இது வரைக்கும் பார்க்கல...தொடரட்டும் உங்கள் பணி :D

Link to comment
Share on other sites

மன்னிக்க வேண்டுகிறேன்.

தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதற்காக நிலாமதியிற்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைய்யா இறப்பு செய்தியை சிரிப்பு செய்தி ஆக்கிய பெருமைக்கு உரியவர்கள் என்றால் நாங்களே தான்...நல்லவேளை கு.சா அண்ணா விருது கொடுக்காமல் பச்சை புள்ளியைப் போட்டு ஊக்குவித்து இருக்கிறார்.. :lol:gold.gif:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணா எப்ப இருந்து கூசாவாக மாறினீங்கள்?

என்னுடைய சந்தேகத்தின்படி கிருமி, வெட்டுக்கிளி, வினாகிரி, விட்டில்ப்பூச்சி, பல்லிக்குட்டி என்று யாராவது பச்சை குத்தியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் இப்பிடி எதிர்பார்க்க முடியாத குட்டிச்சாத்தான் {கு.சா} :lol: குத்திவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. :D

Link to comment
Share on other sites

அனுராதா ரமணன் அவர்கள் இறந்தது இன்றல்ல; போன வருடம் மே மாதம் 16 ஆம் திகதி அன்று

நிழலி, உமக்கு வேற வேலையில்லையோ??? ... பேசாமல் இந்தப்பக்கம் வராது விட்டிருந்தால் ... நாம் ஓர் ஒப்பாரியே பாடி முடித்திருப்போம்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, உமக்கு வேற வேலையில்லையோ??? ... பேசாமல் இந்தப்பக்கம் வராது விட்டிருந்தால் ... நாம் ஓர் ஒப்பாரியே பாடி முடித்திருப்போம்! :lol:

மற்றவர்களுக்கு ஒப்பாரி பாடுவதில் அப்படி என்ன திருப்தியைக் காணப் போறீங்கள்......??? :wub::(

யாருக்கும் ஒப்பாரி பாடும் குழுவில் நான் எப்போதும் இருக்கப் போவது இல்லை...

இந்தத்திரியில் எனது கடசி பதிவு.நன்றி.

நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Link to comment
Share on other sites

மற்றவர்களுக்கு ஒப்பாரி பாடுவதில் அப்படி என்ன திருப்தியைக் காணப் போறீங்கள்......??? :wub::(

யாருக்கும் ஒப்பாரி பாடும் குழுவில் நான் எப்போதும் இருக்கப் போவது இல்லை...

இந்தத்திரியில் எனது கடசி பதிவு.நன்றி.

நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

இதில சீரியஸ் ஆக சீறிப் பாய்வதற்கு என்ன இருக்கு....

செத்த வீட்டில் ஒப்பாரி வைச்ச பிறகு, "அடியே ராசு, சுப்பர்ட மகள் சுமதி ஓடிப் போயிட்டாள் தெரியுமா" என்று ஆரம்பித்து உள்ள நாட்டு பகிடி விடுவதை காணவில்லையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில சீரியஸ் ஆக சீறிப் பாய்வதற்கு என்ன இருக்கு....

செத்த வீட்டில் ஒப்பாரி வைச்ச பிறகு, "அடியே ராசு, சுப்பர்ட மகள் சுமதி ஓடிப் போயிட்டாள் தெரியுமா" என்று ஆரம்பித்து உள்ள நாட்டு பகிடி விடுவதை காணவில்லையா

நான் சீறிப் பாய இல்லை நிழலி அண்ணா.. :)

எழுதிறதுக்கு வேறு ஒன்றும் இல்லையா அதற்காகவே அப்படி எழுதினேன்..நீங்களே அனுமதிக்கும் போது ..இனி நான் ஒன்றுமே சொல்ல இல்லை.. :)

நெல்லையன் மன்னித்துக் கொள்ளுங்கள். :)

Link to comment
Share on other sites

கு.சா அண்ணா எப்ப இருந்து கூசாவாக மாறினீங்கள்?

என்னுடைய சந்தேகத்தின்படி கிருமி, வெட்டுக்கிளி, வினாகிரி, விட்டில்ப்பூச்சி, பல்லிக்குட்டி என்று யாராவது பச்சை குத்தியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் இப்பிடி எதிர்பார்க்க முடியாத குட்டிச்சாத்தான் {கு.சா} :lol: குத்திவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. :D

இதுக்கு வேற 4 பச்சையா? முடியல.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.