Jump to content

மூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை


Recommended Posts

மூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை

நெல்லை சு. முத்து

அவன் மூளை, அவள் மூளை என்று சொன்னால் அடிக்க வராதீர்கள். இன்று வரை அறிவியலில் சாதனையாளர்கள் என்று மேடம் கியுரி, சகுந்தலா தேவி, வலென்டியானா தெரஸ்கோவா, கல்பனா சாவ்லா என்று ஒரு நூறு பேரைப் பட்டியல் இட்டுக் காட்டலாம். உலக ஜனத்தொகையில் இது கடலில் கரைத்த பெருங்காயம்.

கல்வித் துறையில், கணிதத் துறையில் இயற்பியலில், பொறியியலில் பணி ஓய்வுபெறும் வரை ஆண்கள் அளவுக்கு எண்ணிக்கையில் பெண்கள் அதிகம் பிரபலம் அடையவில்லை. அது ஏன் என்கிற சூறாவளி அமெரிக்காவை இன்று மையம் கொண்டு உள்ளது.

இளமையில் மதிப்பெண்களும் பரிசுகளும் கொட்டிக் குவிக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட பராயத்திற்கு பிறகு கல்வித் துறையிலோ, ஆராய்ச்சித் துறையிலோ பரிமளிப்பது இல்லையே! இதற்கு என்ன காரணம்? அறிவித்தார் ஹார்வார்டு பல்கலைக்கழக தலைவர் லாரன்ஸ் சம்மர்ஸ், உயிரியல் ரீதியில் பெண் மூளை வேற்றுமைகளை விளக்க முற்பட்டார். அதனால், கூட்டத்தில் ஒரு பேராசிரியைக்கு வந்தது ஆத்திரம். நான்சி ஹாப்கின்ஸ் என்கிற பெண்மணி மாசச்சூசெட்ஸ் தொழில்நுட்பப் பயிலகத்தின் உயிரியல் நிபுணர். அமைதியாக வெளிநடப்பு செய்தார்.

ஒரே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உண்டு என்று அறிவிக்கிறார் ரிச்சர்ட் ஹேலர். இவருடன் இர்வின் நகரில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் நியு மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் சகாக்களும் இணைந்து கொண்டனர். மூளையில் சாம்பல் நிறப் பகுதிக்கும் வெள்ளைப் பகுதிக்கும் இடையே வேற்றுமைகளை காந்த ஒத்ததிர்வு முறையில் பதிவு செய்தனர். சாம்பல் மூளை தான் தகவல்களை அலசி ஆராய்கிறது. வெள்ளை மூளையோ அந்தத் தகவல்களை அடுத்தடுத்த நரம்பு முண்டுகள் வழி கடத்துகிறது . இந்த இரண்டு நிற மூளையின் கன பரிமாண விகிதம் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபடுகிறதாம். அதனால், அவர்களின் அறிவுத் திறனும் வேறுபடுவது அறியப்பட்டது.

மூளையிலும் அதன் கட்டமைப்பு, வேதியம் மற்றும் செயல்பாடு சார்ந்தும் ஆண் - பெண் வேறுபாடு தென்படுகிறதாம்.

1966 ஆம் ஆண்டு சயின்டிஃபிக் அமெரிக்கன் இதழில் சேய்மர் லெவின் எழுதிய கட்டுரை பிரபலம். `மூளையில் பாலியல் வேற்றுமைகள்' (Sex - Differences in Brain) என்பது தலைப்பு. ஒரு வகையில் பெண்களின் மொழித்திறன், நினைவாற்றல், உணர்ச்சி வசப்படுதல், கண்பார்வை, கேள்வி ஞானம், நடந்து செல்லும் பயண முறை என்று பல்வேறு செயல்பாடுகளிலும் மாற்றங்கள் கண்டுபிடிக்கும் முயற்சி அது.

பொதுவாக, புரிதல் திறனுக்கு காரணமான மூளையின் முன்நெற்றிப் புறணி (Frontal Cortex) ஆண்களைவிடப் பெண்களுக்குச் சற்றுப் பருத்து காணப்படுகிறதாம். இதனால், கிரகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு அதிகம் தான். அவ்வாறே, அவயவப் புறணி (Limbic Cortex) வேறு பருமன் தானாம். அதனால் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களும் பெண்களே.

சுற்றுச்சூழல், இடம் அறிந்து நடந்துகொள்ளும் விதத்தில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் கொஞ்சம் சமர்த்தர்கள் தானாம். காரணம் இவ்வகை நடவடிக்கைக்கு அடித்தளமான பக்கவாட்டுச் சென்னிப் புறணி (Parietal Cortex) ஆடவர்க்குச் சற்றுப் பெரியது.

மூளை அளவும் ஆண் - பெண் திறன் வித்தியாசங்களுக்குக் காரணம்.

இது எல்லாம் ஆணியவாதிகளின் கண்டுபிடிப்புகள் என்று உதாசீனப்படுத்தவும் இயலவில்லை. ஆண் - பெண் மூளையினை செல்மட்ட அளவிலும் ஆராய்ந்தவர் சாந்த்ரா விட்டல்சன் என்னும் பெண்மணி. மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் தன் சக மருத்துவர்களுடன் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் முக்கியம். பெண்களின் பிடரிப் புறணி (Temporal Cortex) நரம்பு அணுக்கள் அடர்த்தியாக இருக்கிறதாம். உண்மையில் மொழியும், புரிதலும் இந்தப் பகுதியில் தான் நிகழ்கின்றன. அதனால், பின்மண்டை சப்பிப் போனால் பேச்சுக் குன்றும்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சைமன் பாரோன் கோஹன் மற்றும் அவரது மாணவி ஸ்வெத்லேனா லுட்ச்மயா ஆய்வும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு வயது பெண் குழந்தைகளையும் அதே வயது ஆண் குழந்தைகளையும் ஆராய்ந்தார். பெண் பிள்ளைகள் அதிக நேரம் தம் அம்மா முகத்தைப் பார்ப்பதிலேயே பொழுதைப் போக்கினவாம். அதனால் தான் வளர்ந்த பிறகும் அன்னை, அண்ணி, சித்தி, மனைவி, கொழுந்தியாள், சக்களத்தி என்று சின்னத்திரைத் தொடர்களில் மூழ்குகின்றனரோ, என்னவோ? அதில் வரும் மூர்க்கக் குணம் கொண்ட மகளிரிடம் திட்டு வாங்கும் பாத்திரங்கள் கண்டு மூக்கைச் சிந்தாமல் அவர்களால் இருக்க முடியாது.

ஆய்வு அறைக்குள் மொத்தக் குழந்தைகளுக்கும் சின்னத்திரைப் படம் போட்டுக் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலும் சிறுமி முகத்தையோ, மாணவியையோ பார்த்த பெண் குழந்தைகள், பெரும்பாலும் கார் முதலான கனரக விரைவு வாகனங்களையே உற்று நோக்கிய குழந்தைகள் பலரும் சுட்டிப்பயல்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இனி மன அழுத்த நேரத்தில் ஆண்களும் பெண்களும் நடந்துகொள்ளும் விதம் வேறுமாதிரி ஆனது. பெண்டிர் தலைவிரி கோலமாய் அழுவார்கள். ஆண்கள் கல் நெஞ்சக்காரர்கள். துக்கத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

உள்ளுக்குள் அடக்கிப் புழுங்கிக் கலங்குவார்கள். காரணம், அவரவர் மூளையின் அடிமண்டையில் இருக்கும் அமிக்தாலா சுரப்பிதான். ஜெர்மனியில் மக்தேபர்க் நகரில் ஒட்டோ வான் கியுரிக்கி பல்கலைக்கழகத்தில் கத்தரீனா பிரான் தன் சகாக்களுடன் கண்டுபிடித்த உண்மை இது. ஆண்களின் அமிக்தாலா பாதாம் பருப்புக் கனத்திலும், பெண்களுக்கு கடலைப்பருப்பு அளவிலும் இருக்கிறதாம்.

அன்றியும், பேறுகாலம், பெண்களுக்கு இன்னொரு மனச்சோர்வு முனை. அதிலும் பலமுறை கர்ப்பம் தரித்தும் கருக்கலைப்பு செய்து கொள்பவர்கள் இறந்த குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள். பெற்ற பிள்ளையை ஊரறிய வளர்க்க இயலாமல் தத்தளிப்பவர்கள் பலரும் ஒரு காலகட்டத்தில் மனநோய்க்கு உள்ளாகின்றனராம். வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடுகளில் வயதுக் கோளாறினால் தவறான வழியில் கருத்தரித்தவர்கள் மனத்தளர்வினால் நொந்து நூலாகி வாழ்கின்றனர். மாரிலாந்து மாகாணத்தில் பால்டிமோர் நகரில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியை வீணா தாஸ் கருத்து இது.

அவ்வாறே, பாகிஸ்தானில் அத்தகைய மனத்தளர்வு நோயுற்ற தாய்மார் ஈன்று எடுத்த குழந்தைகள் பிறந்து ஆறு மாதங்கள் வரை உடல் மெலிந்து காணப்படுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்காக உள்ளதாம். பணக்கார நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்வகையில் திருமணத்திற்கு முன்னமேயே தாய்மை அடைபவர்கள் எண்ணிக்கை வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டு மடங்காக உள்ளதாம். இத்தகைய துயரச் சம்பவத்திற்கு ஆளானோர் ஏறத்தாழ 20 - 30 சத வீதம்பேர்.

தினமணி

Thinakural

Link to comment
Share on other sites

இது தொடர்பில் களத்திலும் பல பக்கங்களுக்கு முன்னர் ஒரு கருத்துப் பரிமாற்றம் நடந்தது..!

தகவலுக்கு நன்றி வானம்பாடி..! :P

Link to comment
Share on other sites

ம்ம் நல்ல ஆய்வுதான் பல விடயங்களை தொட்டு சென்றிருக்கின்றார்கள். மனித மூழையில் இவ்வளவு இருக்கிறதா?? அறியத்தந்த தினமணிக்கும் ஆக்கத்தை இணைத்த வானம்பாடிக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

ஓ அதுதான் அஸ்வினி 2005, நர்மிதா இருவிழி மீரா, போன்ற பெண்கள் பெய****** வரும் சில ஆ***** பல செய்திகளை அலசி ஆராய்கிறார்களோ?? :shock: :shock:

அது இருக்கட்டும் வானம்பாடி ரெடியா இருங்க,,, அட கள பெண்கள் உறுப்பினர்களின் கோவ ரக்கட் உங்களை நோக்கி வரப்போகுது,, ஏனய்யா இப்படியான செய்திகளை இங்க போட்டு எங்களை அவமானப்படுத்திறீங்க எண்டு,,,, (அட அவங்க நினைப்பதிலும் நியாயம் இருக்குத்தானுங்களே) :(:(:( :wink: :P

Link to comment
Share on other sites

ஓ அதுதான் அஸ்வினி 2005, நர்மிதா இருவிழி மீரா,  போன்ற பெண்கள் பெய****** வரும் சில ஆ***** பல செய்திகளை அலசி ஆராய்கிறார்களோ?? :shock:  :shock:  

அது இருக்கட்டும் வானம்பாடி ரெடியா இருங்க,,, அட கள பெண்கள் உறுப்பினர்களின் கோவ ரக்கட் உங்களை நோக்கி வரப்போகுது,, ஏனய்யா இப்படியான செய்திகளை இங்க போட்டு எங்களை அவமானப்படுத்திறீங்க எண்டு,,,, (அட அவங்க நினைப்பதிலும் நியாயம் இருக்குத்தானுங்களே)  :(  :(  :(  :wink:  :P

இந்த நிமிடத்திலிருந்து வானம்பாடி தலமறைவு.... எனி ஏவுகிற ராக்கெட்டுகளை ஏவுங்கள்..... உசிர் பொழச்சா மீண்டும் வந்து சந்திக்கிறேன்...... :(:(:(

Link to comment
Share on other sites

இந்த நிமிடத்திலிருந்து வானம்பாடி தலமறைவு.... எனி ஏவுகிற ராக்கெட்டுகளை ஏவுங்கள்..... உசிர் பொழச்சா மீண்டும் வந்து சந்திக்கிறேன்......

வாணம்பாடிக்கு நல்ல புரியுது ஆயிரம் ஆன்களை சமாளிக்கலாம் ஆனால் ஒரு பெண்ணை சாமளிப்பது ம்ம்

சொல்லவே வேண்டாம் :P :P :P :P :P

Link to comment
Share on other sites

ஓ அதுதான் அஸ்வினி 2005, நர்மிதா இருவிழி மீரா,  போன்ற பெண்கள் பெய****** வரும் சில ஆ***** பல செய்திகளை அலசி ஆராய்கிறார்களோ?? :shock:  :shock:  

தம்பி உம்மடை வருஷ பலனும் அவ்வளவு நல்லதில்லைபோல கிடக்கு எதுக்கும் எங்களுக்கு ஒரு பக்கத்தை திறக்க வைச்சிடாதையப்பு........

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி வானம்பாடி.

அதுசரி ஆண் மூளையும் பெண்மூளையும் நிச்சயமாக வித்தியாசமாதான் இருக்கும் இருக்கணும். :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.