Jump to content

படுகொலைகள்


Recommended Posts

இலங்கை தமிழ் காங்கிரசின் செந்தில்நாதன் சுட்டுப் படுகொலை

[]

வவுனியா அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மூத்த உறுப்பினரும் வர்த்தகருமான செந்தில்நாதன் இன்று புதன்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் இன்று முற்பகல் 11 மனியளவில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

வவுனியாவில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக அவர் போட்டியிடவிருந்தார்.

சம்பவ இடத்துக்கு சிறிலங்கா காவல்துறையினர் உடனே செல்லவில்லை. இருப்பினும் படுகொலை நடந்த இடத்தை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர்.

இதனிடையே ஓமந்தை சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் எஸ்கே.ரவீந்திரன் (வயது 36) என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து தாண்டிக்குளம் நிலையைத் தாண்டி ஏ-9 வீதியில் போக்குவரவுகள் முடக்கப்பட்டன.

http://www.eelampage.com/?cn=25784

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 126
  • Created
  • Last Reply

வடமராட்சியில் 6 இளைஞர்கள் படுகொலை

யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவத்தினரது ஆர்.பி.ஜி. ரொக்கட் தாக்குதலில் ஆறு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். வடமராட்சி நெல்லியடி சந்திக்கு 300 மீற்றர் அருகில் நவிண்டிலில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை முகாமுக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு ஓட்டோ வாகனங்களில் இருந்த ஆறு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் உள்ள ஈ.பி.டி.பி. முகாமுக்குள் இளைஞர்கள் கைக்குண்டு வீசியதால் அவர்களைப் படுகொலை செய்ததாக சிறிலங்கா பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

நன்றி: புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சியில் 7 இளைஞர்கள் படுகொலை!!!

(மேலதிக இணைப்பு)

யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவத்தினரது ஆர்.பி.ஜி. ரொக்கட் தாக்குதலில் ஏழு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். வடமராட்சி நெல்லியடிச் சந்திக்கு 300 மீற்றர் அருகில் நவிண்டிலில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை முகாமுக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு ஓட்டோ வாகனங்களில் இருந்த ஏழு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

படுகொலை செய்யப்பட்டவர்கள் உடல்கள் பல மணி நேரங்களாக சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படவில்லை. படுகொலை செய்யப்பட்டவர்களை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

அனைவரும் நெல்லியடி அருகாமையில் உள்ள இராஜ கிராமத்தினைச் சேர்ந்தவர்கள்.

படுகொலை செய்யப்பட்டோர் விவரம்:

மணியம் சுபாஸ் (வயது 19)

நவரத்தினராசா நாசன்னா (வயது 19)

தாமோதரம்பிள்ளை மஞ்சு (வயது 17)

பாலச்சந்திரன் கிரிசாந்தன் (வயது 18 )

நாகரட்ணம் நகுலேஸ்வரன் (வயது 18 )

ஒரு குழந்தையின் தந்தையான கோவில்மணி சின்னமணி (வயது 21)

ஒரு குழந்தையின் தந்தையான செல்வராசா சுமன் (வயது 22)

இச்சம்பவத்தை அடுத்து அந்தக் கிராமத்தில் மக்கள் கொதிப்படைந்து காணப்படுகின்றனர்.

சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் உள்ள ஈ.பி.டி.பி. முகாமுக்குள் இந்த இளைஞர்கள் கைக்குண்டு வீசியதால் அவர்களைப் படுகொலை செய்ததாக சிறிலங்கா பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்:புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகளைச் சுட்டுக் கொன்று விட்டு, முன்பு பக்கத்தில் கிரனைட் வைத்து புலி என்று பொய்க் குற்றச்சாட்டுக்களை சிங்கள பேரினவாதம் சொல்லி வந்தது. இப்போதும் கூட 7 இளைஞர்களையும் ஆட்டோக்களில் போய்க் கொண்டிருந்தபோதே சுட்டுக் கொன்று விட்டு கிரனைட் வீசியதாகக் கதை விடுகின்றது.

ஒரு கிரனைட்டை வீச 7 இளைஞர்கள் போனார்கள் என்று விடும் கதையை யாரும் நம்பப் போவதில்லை. தமிழர் மீதான படுகொலைகளை மூடி மறைக்கும் செயற்பாட்டில் சிங்களப் பேரினவாதம் செய்யும் முயற்சிகளும் வெற்றி பெறப்போவதில்லை.

அப்பாவி இளைஞர்கள் 7பேருக்கும் எம் கண்ணீர் அஞ்சலிகள்!!!

Link to comment
Share on other sites

தமிழீழம் கிடைக்குதோ இல்லையோ ஆனால் அதில்வாழ ஒரு தமிழனும்மிருக்க போவது என்பது தற்போது கேள்விக்குறியாகவேயுள்ளது இப்படியான சம்பவங்கள் 80 களில் நடந்தால் நாம் பலமில்லாதவர்கள் நிராயுதபாணிகள் கேட்க ஆளில்லாதவர்கள் ஆனால்லிப்போ புலிகள் உலகத்திலேயே மிகப்பலம் பொருந்திய விடுதலையியக்கம் அத்தோடு பொங்கியெளும்படை எள்ளாளண்படை இராவணண்படை அந்தப்படை இந்தப்படை என இருந்து என்ன பயன் எங்கள் சனம் ஒன்று என்றால் அவனில் பத்தாவது விழவேண்டாமா என்ன செய்யினம் உந்த பொங்கியெளும்படை யாராவது தண்ணி தெளிச்சு அணைச்சுப்போட்டினம் போல? முன்பொருக்கா பாலகுமார் வன்னியில் நடந்த நிகழ்வொண்றில் கூறியது பலருக்கு ஞாபகம்மிருக்கலாம் கிளிநோச்சிக்குள் வந்து யாராவது கிளிக்கமுடியுமா என்றார் ஆனால்நேற்று அவன் மாங்குளத்தில் போய்கிளிச்சு காட்டியிருக்கிறான் அந்தபேரூந்துமட்டும் மாட்டியிருந்தால் 50உயிர்கள் திரும்பவெருகதவடைப்பு கிளிநேச்சியில் பல்லாயிரம்மக்கள் கூடி கண்டணப்பேரணி புலிகள் கடும் கண்டணம் பொறுமையை சோதிப்பதாக சீற்ரமான அறிக்கை சம்பவ இடத்தை கண்காணிப்புக்குழு பார்வை விசாரணை மேற்கொள்வதாக கூறிநர் இதேதான் திரும்ப திரும்பநடக்கப்போகிறது இன்னும் 10வருடங்களில் இலங்கையில் தமிழினமே அழிந்துபோம் புத்தம் சரணம் கச்சாமி பாடமாக்கி வைத்துக்கௌ;ளுங்கோ கெதியில தேவைப்படும்.

நாளைக்கு வடமராட்சியில் 70வது சிறிலங்கா இராணுவமாவது விழவேணும் இல்லையேல் எனது கருத்து பலிக்க கனநாள்ளாகாது.

Link to comment
Share on other sites

கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் வயசு 18க்கும்23க்கும் உற்பட்டது, இதில இலங்கை அரசாங்கத்தினது அறிக்கையை பாருங்க, கைகுண்டு வீசிவிட்டு தப்பி போன புலிகள் மீது ஆர்பீஜி தாக்குதல் நடாத்தப்பட்டதாம்? என்ன டாங்கியில வந்தா தாக்குதல் நடத்தினவங்க அந்த அப்பாவி இளைஞர்கள்?

ஆட்டோவின் ஆகக்கூடிய வேகம் என்ன? ஒரு 60,70 கிலோமீட்டர் வேகம் வருமா? அதை இராணுவ வண்டியினால் துரத்திபிடிக்கமுடியாதோ? எதற்கு ஆர்பீஜி தாக்குதல் நடாத்தவேண்டு? சரி இது நடந்தது இராணுவ முகாம்களுக்கு அண்மையில்த்தானே? ஈபிடிபி முகாமுக்கு கைகுண்டு எறிந்தவர்களை ஆர்பிஜி அடித்து கொலை செய்துவிட்டதாக அறிக்கைவிடும் மோட்டு சிங்களவனை என்ன செய்யவேண்டும்?

புலிகளும் பொறுமை பொறுமை என்று இருக்கிறார்கள், எதற்காக என்று தெரியவில்லை, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அன்றாடம் கொலை செய்யப்படுகிறார்கள், அறிக்கை கண்டனம் எண்டு விடுவதோடு விட்டுவிடுகிறார்கள், மக்கள் படை, எல்லாளன் படை தேசவிரோதிகளை மட்டும்தான் யாழ் கூடா நாட்டில் தேடி திருகிறார்களா? இப்படிப்பட்ட சிங்கள காட்டேறிகளுக்கு பாடம் புகட்ட முடியாதா?

1983, யூன் 23 அன்று ஒரு நாளில் பல நூறு தமிழர்களை கொன்றழித்தார்கள், ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் அனு அனுவாக கறையாங்கள் மாதிரி உலகத்தின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அழித்துக்கொண்டு இருக்கிறார்கள், ஒரு சாவை என்னொரு சாவுதான் நிறுத்தும் என்று டயலக் விட்ட மக்கள் படைக்கு என்ன நடந்தது? நேற்று முந்தினம் மாங்குளத்தில் வைத்த கிளைமோர் வெடித்திருந்தால் அதற்கும் கண்டனம் தெரிவித்துவிட்டு பேசாமல் இருப்பார்கள் இவர்கள்,

உலகத்திற்கு பயந்து எமது மக்களை அழிய நாங்களே காரணமாக இருக்கிறோம் என்றதுதான் உண்மை போல தற்போதைய நடவடிக்கைகள் அமைகின்றது, தலையில்லா முண்டங்களும் துப்பாக்கி சூடுகளும் அன்றாட செய்திகளில் கேட்டு கேட்டு சாதரண விடயங்கள் ஆகிவிட்டது,

இப்பொழுது மோட்டு சிங்களவன் ஒரு கணக்கு போட்டிருப்பான், 20 ஆயிரம் புலிகளை அழிக்கிறதைவிட 20 லட்சம் அப்பாவி தமிழரை அழிக்கிறது சுலபம் என்று, அதை செயற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் போல் தெரிகிறது, :idea: :evil:

Link to comment
Share on other sites

Danklas நண்பரே..........

"புலிகளும் பொறுமை பொறுமை என்று இருக்கிறார்கள்இ எதற்காக என்று தெரியவில்லைஇ இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அன்றாடம் கொலை செய்யப்படுகிறார்கள்இ அறிக்கை கண்டனம் எண்டு விடுவதோடு விட்டுவிடுகிறார்கள்இ மக்கள் படைஇ எல்லாளன் படை தேசவிரோதிகளை மட்டும்தான் யாழ் கூடா நாட்டில் தேடி திருகிறார்களா? இப்படிப்பட்ட சிங்கள காட்டேறிகளுக்கு பாடம் புகட்ட முடியாதா? "

:P :P :P :P

சோமாலியாவை விட்டிட்டு இலங்கைக்குப் போய் பாடத்தை நீங்கள் புகட்டலாம் தானே... நீங்கள் போனால் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து கூடிய தமிழ் மக்கள் உங்களின் பின்னால் வருவார்கள். என்னையும் சேர்த்துத்தான்..

அதைவிட்டிட்டு சும்மா அவர்களை இவர்களை குறை சொல்லி என்ன பயன்?? :?:

சொல்ல எழுதச் சுகம், ஆனால் செயலில் காட்டுவது தான் கடினம். உங்களால் அது முடியும் என நினைக்கிறேன்....

வீறுநடை போட்டு எழுந்து வாருங்கள்!!!!

Link to comment
Share on other sites

ம்ம் நடக்கட்டும் .........

ஒரு சந்தேகம்- இந்தமாதிரியான செய்தி இணைப்புகளின்போது- ஜனநாயகம் - சமத்துவம் - இன்னும் ஏதேதோ - சொல்லி தொலைபாங்களே- அவங்க எல்லாம் ஏன் கருத்து எழுதுறல்ல? :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியாவை விட்டிட்டு இலங்கைக்குப் போய் பாடத்தை நீங்கள் புகட்டலாம் தானே... நீங்கள் போனால் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து கூடிய தமிழ் மக்கள் உங்களின் பின்னால் வருவார்கள். என்னையும் சேர்த்துத்தான்..

அதைவிட்டிட்டு சும்மா அவர்களை இவர்களை குறை சொல்லி என்ன பயன்?? :?:

சொல்ல எழுதச் சுகம், ஆனால் செயலில் காட்டுவது தான் கடினம். உங்களால் அது முடியும் என நினைக்கிறேன்....

வீறுநடை போட்டு எழுந்து வாருங்கள்!!!!

சும்மா அபத்தமாகக் கதைக்காதீர்கள். புலம்பெயர்ந்தவன் தான் தப்பி விட்டேன் தானே பிறகென்னத்திற்கு நாட்டுப் பற்று என்று, தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துவர்களுக்கு மத்தியில், ஒவ்வொரு தமிழனும் மரணமாகின்ற போது இரத்தம் கொதிப்பதை கேவலப்படுத்தாதீர்கள்!!

உப்படியான கதைகள் தான் தாயத்தின் மீது வைத்திருக்கம் பற்றறை அவமதி;க்கின்ற காரணிகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்பு குழுவுக்கு இளம்பரிதி கடிதம்

நெல்லியடிப் பகுதியில் ஓட்டோக்களில் சென்ற ஏழுபேர் கொல்லப்பட்ட சம்பவத் துக்கு கடும் கண்டனம் தெரிவித்து விடு தலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி இலங் கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

இத்தகைய சம்பவங்களால் வரும் விளவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என்று இளம்பரிதி அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

-உதயன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லியடியில் படையினரின் உந்துகணைத் தாக்குதல்: 7 இளைஞர்கள் பலி!வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க அருகில் யாழ் வீதியில் படையினரின் ஆர்.பி.ஜி உந்துகணைத் தாக்குதலுக்கு 7 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

மொடேன் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகில் உள்ள ஈபிடிபி துணை ஆயுதக்குழுவின் முகாமிற்குள் கைக்குண்டு வீசியதால் இவர்களைத் தாக்கியதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இரு முக்சக்கர வண்டியில் இந்த இளைஞர்கள் பயணம் செய்த வேளையே படையினரால் உந்துகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொல்லபட்டவர்கள் அனைவரும் கரவெட்டி இராஜகிரமத்தைச் சேர்ந்தவர்கள். 19 அகவையுடைய மணியம் சுபாஸ், 17 அகவையுடைய தமோதரம் சுபாஸ், 19 அகவையுடைய நவரத்தினராசா நாசன்னா, 18 அகவையுடைய நாகரட்னம் நகுலேஸ்வரன், 18 அகவையுடைய பாலச்சந்திரன் கரிசாந்தன், 21 அகவையுடைய கோயில்மணி சின்னமணி, 22 அகவையுடைய செல்வராசா சுமன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்களாவார்கள்.

இதேவேளை இன்று நெல்லியடி திருமகள் வீதியில் நடத்தபட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.

-பதிவு

Link to comment
Share on other sites

திருக்கோவில் விநாயகபுரம் முகத்துவாரத்தில் சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புண்ணியமூர்த்தி ரூபன் (19) என்ற விநாயகபுரம் பாலக் குடாவினை சேர்ந்தவரின் சடலம் என அது இனம் காணப்பட்டுள்ளது.

இவரை நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கும் 10.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இனம் தெரியாதவர்கள் இவரது பெயரினை கூறி அழைத்து சென்றுள்ளனர்.

நேற்று காலை தலையிலும், நெஞ்சிலும் சூட்டு காயங்களுடன் சடலமாக மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

மட்டு ஈழநாதம்

Link to comment
Share on other sites

º¢¨¸ «Äí¸¡¢ôÀ¡Ç÷ ÍðÎì ¦¸¡¨Ä.

¡úôÀ¡½õ «îº§ÅÄ¢ôÀ̾¢Â¢ø «¨¼Â¡Çõ ¦¾¡¢Â¡¾ ¬Ô¾¾¡¡¢¸Ç¡ø º¢¨¸ «Äí¸¡¢ôÒ ¿¢¨Ä ¯¡¢¨Á¡Ç÷ ÍðÎ즸¡øÄôÀðÎûÇ¡÷. þýÚ ¸¡¨Ä 7.30 Á½¢ÂǢŢø «îͧÅÄ¢ ¾õÀ¡¨ÄôÀ̾¢Â¢ø þîºõÀÅõ þ¼õ¦ÀüÚûÇÐ. ÌÈ¢ôÀ¢ð¼ ¿À÷ Á£Ð «ÅÃÐ ¸¨¼Â¢ø¨ÅòÐ ¯óÐǢ¢ø Åó¾ «¨¼Â¡Ç󦾡¢Â¡¾ ¬Ô¾¾¡¡¢¸û ÐôÀ¡ì¸¢ôÀ¢Ã§Â¡¸õ; §Áü¦¸¡ñ¼É÷ þ¾ý§À¡Ð «îͧÅÄ¢ ¾õÀ¡¨Ä¨Âî §º÷ó¾ ¸ó¨¾Â¡ º¢Å»¡Éõ (45) ±ýÀŧà ¯Â¢¡¢ÆóÐûÇ¡÷.

சங்கதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலை மாவட்டம் மூதூரில் தமிழ் மாணவன் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

மூதூர் தேவாலய வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதினேழு வயதான பாலகுமார் என்ற மாணவனே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் ஆவார். திருகோணமலை நகர பாடசாலையில் கல்வி கற்கும் இவர், வார விடுமுறைக்காக சொந்த இடமான மூதூருக்கு வந்திருந்த போதே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

pathivu

சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றைய தமிழ் மாணவன் மூதூர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

மூதூரில் கடந்த 36 மணிநேரத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது தமிழ் இளைஞன் படுகொலை சம்பவம் இதுவாகும்.

கடந்த வியாழக்கிழமை 22 வயதான சுரேந்திரன் என்ற சிகையலங்கரிப்பு நிலைய உரிமையாளர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட இளம் உறவுகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்" அது விரைவில் நிச்சயம் நடக்கத்தான் போகிறது.

எனது கண்ணீர் அஞ்சலிகளும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

யாழ். தீவகத்தில் சிறிலங்கா கடற்படைத் தாக்குதலில் 6 பொதுமக்கள் பலி

யாழ். தீவகம் மண்டைத் தீவு பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 6 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அல்லைப்பிட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பொதுமக்களைச் சுற்றி வளைத்த கடற்படையினர் கைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 6 பொதுமக்கள் இறந்ததாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த பொதுமக்களை யாழ். மருத்துவமனைக்கு நோயாளர் காவு வாகனங்களில் கொண்டு செல்ல யாழ். நீதிபதி உத்தரவிட்டதையடுத்து காயமடைந்த 3 பொதுமக்கள் யாழ். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கடற்படையினரது இந்த வெறியாட்டத்தில்

எஸ். மோகனாம்பிகை(வயது 46)

டி. செல்லத்துரை (வயது 61)

எஸ். சிவநேசன் (வயது 46)

ஆகியோர் படுகாயமடைந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலில் 4 பேர் மட்டுமே படுகொலை செய்யப்பட்டதாக சிறிலங்கா இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் மேலும் 4 பேர் படுகொலை செய்யப்படிருக்கக் கூடும் பொதுமக்கள் தெரிவிக்கின்றன.

புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டைதீவில் கடற்படை வெறியாட்டம் - குழந்தை உட்பட 8 பொதுமக்கள் பலி

யாழ தீவகம் மண்டை தீவுப் பகுதியில் இலங்கை கடற்படையினர் நடத்திய வெறியாட்டத் தில் குழந்தை உட்பட 8 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டியில் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பொதுமக்களைச் சுற்றி வளைத்த கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் கைக்குண்டுகளையும் வீசியுள்ளனர்.

இதனால் ஒரு குழந்தை உட்பட 8 பொதுமக்கள் அவ்விடத்திலேயே பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது.

மேலும் படுகாயமடைந்த மூவர் யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் இந்த வெறியாட்டத்தில் எஸ்.மோகனாம்பிமை (வயது 46), டி.செல்லத்துரை (வயது 61), எஸ்.சிவநேசன் (வயது 46) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர்.

கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களே தம்மால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சிறீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

தகவல்:சங்கதி

குழந்தையும் வந்து தாக்குதல் நடத்தியதாக கதை விடுகின்றதா கடற்படை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். தீவகத்தில் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 பொதுமக்கள் பலி

யாழ். தீவகம் மண்டைதீவு அல்லைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து தீவகத்துக்கு செல்லும் மார்க்கத்தில் மண்டைதீவுக்கு அடுத்துள்ள வேலணையின் அல்லைப்பிட்டி கிராமத்தில் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள மாடி வீடு ஒன்றில் இந்த கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது.

கறுப்புத்துணியால் முகத்தை மூடியபடி துப்பாக்கிகள் சகிதம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையினரும் துணை இராணுவக்குழுவினரும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

வீட்டின் அறைகள் ஒவ்வொன்றையும் தேடி அங்கு இருந்த ஒவ்வொருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். நான்கு மாதக்குழந்தையும் இந்த கொலை வெறியாட்டத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது.

வீடு முழுவதும் படையினரின் கொலை வெறியாட்டத்தில் இரத்த வெள்ளமானது.

சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் சிறிலங்கா கடற்படையின் பாரிய முகாம் உள்ளது.

அல்லைப்பிட்டிப் பிரதேசம் சிறிலங்கா கடற்படையின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதி என்பதுடன் அல்லைப்பிட்டியே தீவக மக்களை சோதனையிடும் கடற்படையின் நிலையமாகும்.

இரவு வேளைகளில் அப்பகுதியில் யாரும் நடமாட முடியாது. சம்பவத்தினையடுத்து அப்பகுதியில் உள்ள பங்குத்தந்தை அருட்திரு அமல்ராஜ் அடிகளார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். சிறிலங்கா நீதவானுக்கு தகவல் தெரிவித்தார். காயப்பட்டோரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை தெரிவிக்கப்பட்டது.

நீதவானின் கட்டளையை அடுத்து காயமடைந்தோரை யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. பங்குத் தந்தை தனது வாகனத்தில் காயமடைந்தோரை யாழ். மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கொல்லப்பட்டோர் விவரம்:

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏபிரகாம் றொபின்சன் (வயது 28 )

ஒரு பிள்ளையின் தந்தையான செல்லத்துரை அமுதாஸ் (வயது 28 )

பாலச்சாமி கேதீஸ்வரன் (வயது 25 )

பாலச்சாமி கேதீஸ்வரனின் மனைவி அனஸ்எஸ்த்தர் (வயது 25 )

பாலச்சாமி அனஸ்எஸ்த்தர் தம்பதிகளின் மகன் தனுஸ்காந் (வயது 04), மகள் யதுசா ( 04 மாதம்)

நான்கு பிள்ளைகளின் தந்தையான கணேஸ் நவரத்தினம் (வயது 50)

ஐந்து பிள்ளைகளின் தந்தையான யோசப் அந்தோனிமுத்து (வயது 64)

வர்த்தகர் சிவநேசன் (வயது 56 )

காயமடைந்தோர் விவரம்:

எஸ்.மோகனாம்பிகை (வயது 46 )

கொல்லப்பட்ட வர்த்தகர் சிவநேசனின் மனைவியான அம்பிகாபதி (வயது 38)

ரி.செல்லத்துரை (வயது 61)

அல்லைப்பிட்டியில் நடந்த இப்படுகொலை வெறியாட்டத்தையடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து அங்குள்ள பிலிப் நேரியார் தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளதுடன் தமது பொருட்களுடன் அல்லைப்பிட்டியை விட்டு வெளியேற முயன்றபோது படையினர் தடுத்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அல்லைப்பிட்டியில் வீடு ஒன்றினுள் சிறிலங்கா கடற்படையினர் நுழைந்து வயோதிபர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வேலணை மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்தில் சிறிலங்கா படையினரால் சுடப்பட்டு தந்தையும் மகளும் படுகாயமடைந்திருந்தனர்.

தகவல்:புதினம்

Link to comment
Share on other sites

¾£Å¸ò¾¢ø §ÁÖõ ¿¡ýÌ «ôÀ¡Å¢ Áì¸û À¨¼Â¢Éáø ÀΦ¸¡¨Ä

¡ú. Áñ¨¼¾£Å¢ø §¿üÈ¢Ã× ±ðÎ «ôÀ¡Å¢ô ¦À¡ÐÁì¸û ‚Äí¸¡ ¸¼üÀ¨¼Â¢Éáø ¦¸¡øÄôÀð¼ ¿¢¨Ä¢ø þýÚ §ÁÖõ ¿¡øÅ÷ ‚Äí¸¡ À¨¼¸Ç¡ø ÀΦ¸¡¨Ä ¦ºö ÂôÀðÎûǾ¡¸ ¾¸Åø¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ.

¾£Å¸õ ÒÇ¢Âí̼ø À̾¢Â¢ø ãÅÕõ, §ÅĨ½ô À̾¢Â¢ø ´ÕÅÕÁ¡¸ ¿¡øÅ÷ ÀΦ¸¡¨Ä ¦ºöÂôÀðÎûǾ¡¸ ±ÁìÌì ¸¢¨¼ì¸ô¦ÀüÈ ¦ºö¾¢¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ.

±É¢Ûõ þÐ ¦¾¡¼÷À¡É §Áľ¢¸ ¾¸Åø¸û ¸¢¨¼ì¸Å¢ø¨Ä.

þ§¾§Å¨Ç §¿üÈ¢Ã× À¨¼Â¢Éâý ¾¡ì̾Ģø Àθ¡ÂÁ¨¼ó¾ ¿¢¨Ä¢ø ¡ú. ÁÕòÐÅÁ¨É¢ø §º÷ì¸ôÀð¼ ãÅâø ´ÕÅ÷ ¯Â¢Ã¢ÆóÐûǾ¡¸ ÁÕòÐÅÁ¨É Åð¼¡Ãí¸û ¦¾Ã¢Å¢òÐûÇÉ.

சங்கதி

Link to comment
Share on other sites

இறந்தவர்கள் சண்முகலிங்கம் (வயது 62) அவரது மகன் காந்தறூபன் (வயது 29) மற்றும் மனைவி ஆகியோர் என தமிழ் நெற் கூறுகிறது.

Link to comment
Share on other sites

(3 ஆம் இணைப்பு) யாழ். தீவகத்தில் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 பொதுமக்கள் பலி

[ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2006, 01:29 ஈழம்] [ம.சேரமான்]

யாழ். தீவகம் மண்டைதீவு அல்லைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து தீவகத்துக்கு செல்லும் மார்க்கத்தில் மண்டைதீவுக்கு அடுத்துள்ள வேலணையின் அல்லைப்பிட்டி கிராமத்தில் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள மாடி வீடு ஒன்றில் இந்த கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது.

கறுப்புத்துணியால் முகத்தை மூடியபடி துப்பாக்கிகள் சகிதம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையினரும் துணை இராணுவக்குழுவினரும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

வீட்டின் அறைகள் ஒவ்வொன்றையும் தேடி அங்கு இருந்த ஒவ்வொருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். நான்கு மாதக்குழந்தையும் இந்த கொலை வெறியாட்டத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது.

வீடு முழுவதும் படையினரின் கொலை வெறியாட்டத்தில் இரத்த வெள்ளமானது.

சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் சிறிலங்கா கடற்படையின் பாரிய முகாம் உள்ளது.

அல்லைப்பிட்டிப் பிரதேசம் சிறிலங்கா கடற்படையின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதி என்பதுடன் அல்லைப்பிட்டியே தீவக மக்களை சோதனையிடும் கடற்படையின் நிலையமாகும்.

இரவு வேளைகளில் அப்பகுதியில் யாரும் நடமாட முடியாது. சம்பவத்தினையடுத்து அப்பகுதியில் உள்ள பங்குத்தந்தை அருட்திரு அமல்ராஜ் அடிகளார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். சிறிலங்கா நீதவானுக்கு தகவல் தெரிவித்தார். காயப்பட்டோரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை தெரிவிக்கப்பட்டது.

நீதவானின் கட்டளையை அடுத்து காயமடைந்தோரை யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. பங்குத் தந்தை தனது வாகனத்தில் காயமடைந்தோரை யாழ். மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கொல்லப்பட்டோர் விவரம்:

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏபிரகாம் றொபின்சன் (வயது 28)

ஒரு பிள்ளையின் தந்தையான செல்லத்துரை அமுதாஸ் (வயது 28)

பாலச்சாமி கேதீஸ்வரன் (வயது 25)

பாலச்சாமி கேதீஸ்வரனின் மனைவி அனஸ்எஸ்த்தர் (வயது 25)

பாலச்சாமி அனஸ்எஸ்த்தர் தம்பதிகளின் மகன் தனுஸ்காந் (வயது 04), மகள் யதுசா ( 04 மாதம்)

நான்கு பிள்ளைகளின் தந்தையான கணேஸ் நவரத்தினம் (வயது 50)

ஐந்து பிள்ளைகளின் தந்தையான யோசப் அந்தோனிமுத்து (வயது 64)

வர்த்தகர் சிவநேசன் (வயது 56)

காயமடைந்தோர் விவரம்:

எஸ்.மோகனாம்பிகை (வயது 46)

கொல்லப்பட்ட வர்த்தகர் சிவநேசனின் மனைவியான அம்பிகாபதி (வயது 38)

ரி.செல்லத்துரை (வயது 61)

அல்லைப்பிட்டியில் நடந்த இப்படுகொலை வெறியாட்டத்தையடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து அங்குள்ள பிலிப் நேரியார் தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளதுடன் தமது பொருட்களுடன் அல்லைப்பிட்டியை விட்டு வெளியேற முயன்றபோது படையினர் தடுத்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அல்லைப்பிட்டியில் வீடு ஒன்றினுள் சிறிலங்கா கடற்படையினர் நுழைந்து வயோதிபர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வேலணை மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்தில் சிறிலங்கா படையினரால் சுடப்பட்டு தந்தையும் மகளும் படுகாயமடைந்திருந்தனர்.

நன்றி: புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாக்குபட்ட சிங்களவனின் கடற்கலன், திருமலை வருமுன்னமே கண்டனம் தெரிவித்த கண்துடைப்பு குழு எங்கே? BBC எங்கே? கோபி அண்ணன் எங்கே? சிறார்க்காக வரிந்து கட்டி கொண்டு நின்ற UNICEF எங்கே?

Link to comment
Share on other sites

இவங்க செய்த குற்றம் தமிழனாய் பிறந்தது தானா :?:

குழந்தைகளைக் கூட விடுறாங்களில்ல

நாய்ச்சிங்களவன். :twisted:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.