Jump to content

'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காணொளி தொடர்பான என்.டி.பி. கட்சி மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு


Recommended Posts

'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காணொளி தொடர்பான என்.டி.பி. கட்சி மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு

[ கனடியத் தமிழர் பேரவை ] - [ Jun 14, 2011 21:29:30 GMT ]

யூன் திங்கள் 14ஆம் நாள் புதன்கிழமையன்று கனடியப் பாராளுமன்றத்தில் என்.டி.பி. கட்சியும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து ஓர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர்.

கனடாவின் முன்னணித் தேசிய ஊடகங்கள் பல கலந்துகொண்ட இம் மாநாட்டில் என்.டி.பி. கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவை சார்பில் யோர்க் பிராந்தியக் கல்விச் சபை உறுப்பினரும் கனடியத் தமிழர் பேரவையின் உபதலைவருமான செல்வி வனிதா நாதன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்களும் பங்கேற்றனர்.

ஊடகவியலாளர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் 'கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் முழுமையான ஆதரவை இம் முயற்சிக்கு வழங்க வேண்டுமெனவும் சிறிலங்கா அரசு போர்க்குற்ற விசாரணைகளுக்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இன்று பிரித்தானியாவில் சன்ல் 4 தொலைக்காட்சியல் காண்பிக்கப்படவிருக்கும் ஆவணப்படம் தொடர்பாக அவர் கூறுகையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக பல விடயங்களை நாம் கடந்த காலங்களில் கேள்வியுற்றபோதும் இப்போது அவற்றை ஆதாரங்களோடு காணக்கூடியதாக இருக்கிறது. நீதியான விராசணை மற்றும் குற்றமிழைத்தோருக்கான சரியான தண்டனை வழங்கல் மூலமாக மட்டுமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு என்.டி.பி. கட்சி எப்போதுமே ஆதரவு வழங்கியதோடு கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் இச் செயற்பாட்டில் ஒன்றிணைய வேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறது. பாதிக்கப் பட்டோருக்கு நீதி வழங்கிடவும் கலாச்சார வேறுபாடுகளற்ற சமாதானத்தை நிலைநாட்டிடவும் போர்க் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் எப்போதுமே குரல் கொடுக்கும் கனடா இந்த விடயத்திலும் அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து செல்வி வனிதா நாதன் அவர்கள் தனது உரையில் இன்று சர்வதேசத்தின் கவனத்தையே ஈர்த்திருக்கும் சிறி லங்காவின் இந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கச் செனற் சபையும் பிரித்தானிய பாராளுமன்றமும் மிகுந்த கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேணும் கனடாவும் இவ்விடயம் குறித்து உரத்துக் குரல்கொடுக்க வேண்டுமென்றும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் வலியுறுத்துவது போல சிறி லங்கா சர்வதேசப் போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட முனைந்து செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

சிறி லங்காவில் நடைபெற்ற இப் போர்க்குற்றங்களை உலக அரங்கின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக மிகக் கடுமையாகவும் திறமையாகவும் உழைத்து வரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆராரச் செய்தி திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்களால் வாசிக்கப்பட்டது. இவர் தொடர்ந்து பேசுகையில் கனடியத் தமிழர் பேரவையின் வேண்டுகோளை ஏற்று பல கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்துத் தொடர்ந்து பாராளுமன்றத்திற் குரல் கொடுப்பதற்கு உறுதியளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கனடிய வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இம் மாநாட்டிற் கலந்து கொண்டனர். மாநாட்டில் வழங்கப்பட்ட தகவல்களை அவர்கள் கூர்ந்து அவதானித்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக ஊடகவியலாளர் கேள்விகளுக்கான மூவரின் பதில்களோடும் மாநாடு நிறைவு பெற்றது.

மூலம்: கனடியத் தமிழர் பேரவை

Link to comment
Share on other sites

அவசர அறிவித்தல்

கனடாவின் பிரபல தேசிய ஊடகங்கள், நேற்று முன்தினம் இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சியின் "இலங்கையின் கொலைக்களம்" என்ற விவரண சித்திரம் குறித்த தகவல்களை கனேடிய மக்களுக்கு, தொலைக்காட்சி மூலமாகவும், கனேடிய தேசிய ஊடங்கள் மூலமாகவும் வெளிக்கொணர முன் வந்துள்ளன.

இம் மைய ஊடகங்கள் , 2009 ஆண்டு மே மாத இறுதிகட்ட போரின் போது, தங்களின் நெருங்கிய உறவினர்களை இப்போர்ச்சூழலில் பறிகொடுத்த கனேடிய தமிழ் உறவினர்களை அவசரமாக நேர்காணல் செய்ய விரும்புகிறார்கள்.

இவ் மைய ஊடங்களில் பங்குபற்றி , இலங்கையின் கொலை களம் சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொணர விரும்பும் தமிழ் கனேடிய உறவுகள் உடனடியாக கனேடிய பேரவையை 416 -240 -0078 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.