Jump to content

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது

1984 ஒரு காலைப்பொழுது. எவரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. அத்துடன் மோட்டார் சைக்கிள் சத்தமும். வெளியில் வந்து பார்த்தால் புதிதாக திருமணமான எனது மச்சாளும் அவரது கணவரும் வந்திருந்தனர். வரவேற்று உபசரித்து இன்று மத்தியானம் இங்குதான் சாப்பாடு என்று முடிவெடுத்தபின் நிற்கும் சேவலில் எதுவேண்டும் என்று கேட்டு மச்சாள் புருசன் பூவோடு நிற்கும் சிவப்பு சேவலைக்கைகாட்ட அதை முறித்து உரிக்கும்படி தம்பியிடம் கொடுத்துவிட்டு வந்த எனக்கு ஒரே மன உளைச்சல். மச்சாள் நமக்கு கிடைக்காது வேறு ஒருவரை கட்டிவிட்டாவே என்ற ஆதங்கம் உள்ளிருந்தாலும ஒரு வயது கூடியவர் என்பதால் நாம்தானே பார்க்காது விட்டோம் என்பது புரிந்தது. எனது மன உளைச்சலுக்கு காரணம் அவர்கள் வந்திருந்த சுசுக்கி 200 மோட்டச்சைக்கிள்தான். அது என்னை ஓட்டு ஓட்டு என்று சிவப்புக்கலரில் நின்று கண்ணடித்தபடியே இருந்தது. மத்தியானம் சாப்பாடு முடிய வீட்டுக்காரர் எல்லோரும் ஒன்று கூடி கதைத்தபடி வளவுக்குள் உலாவத்தொடங்க மச்சாள் புருசனிடம் திறப்பைத்தாருங்கள் என்று கேட்டு பெற்றுக்கொண்டு வெளியில் வந்தேன். அதை எப்படி வர்ணிப்பது. சொகுசு பவனி என்றா அல்லது பறந்தேன் என்றா?

ஊரை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தபோது அவர்கள் போவதற்கு தயாராக இருந்தனர். அவர்களை வழி அனுப்பிவிட்டு மீண்டும் ஒரு பிடிபிடித்துவிட்டு அடுத்தநாள் பாஸ்போட் அலுவலாக கொழும்பு செல்லணும் நேரத்துக்கு எழுப்பிவிடுங்கோ என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு நித்திரைக்கு சென்றுவிட்டேன். இன்று ஊரே உறையப்போகிறது என்பது தெரியாமல்....?

அன்று இரவு 11 மணியளவில் நான் ஊர்சுற்றிய அதே மோட்டார் சைக்கிளில் 2 பேர் எனது வீட்டிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஒரு வீட்டின் கதைவைத்தட்டுகின்றனர். அந்தவீட்டின் நடுவயதுள்ள பணக்கார இரு பிள்ளைகளுக்கு தாய் கதவைத்திறக்கின்றார். வீட்டுக்குள் நுளைந்த இருவரும் தம்மை இயக்கம் என அறிமுகப்படுத்துகின்றனர். நாங்கள் இனி இந்தநேரத்தில் யாழ்ப்பாணம்போகமுடியாது. அதனால் இன்றிரவு இங்கு தங்கமுடியுமா என்று கேட்கின்றனர். அந்த தாயும் சந்தோசமாக அதற்கென்ன இது உங்கள் வீடுபோல். தங்கிச்செல்லலாம். ஏதாவது சாப்பிட்டீர்களா என்று கேட்கின்றார். இல்லையக்கா பசிக்குது என்கின்றனர். உடனேயே புட்டு அவித்து மீன்கறியுடன் முட்டையும்பொரித்து பரிமாறுகிறார். சாப்பிட்டு ஏப்பம் விட்டவர்கள் பிள்ளைகள் தூங்கிவிட்டனர் என்பதையும்மோப்பமிட்டு அந்த தாயின்கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த தாலிக்கொடி தொடக்கம் வீட்டிலிருந்த அத்தனை நகைகளுடனும் வெளியேறிவிடுகின்றனர். விடியல் காலை பிள்ளைகளின் கூக்குரலுடன் விடிகிறது.

சில நாள் கழித்து ஊருக்கு வந்தபோது நண்பர்கள் தனியாக அழைத்து இவ்வளவையும் சொன்னார்கள். அத்துடன் என்னை இயக்கம் தேடியதாகவும் சொன்னார்கள். பெரும் சிக்கலில்மாட்டுப்பட்டது தெரிந்தது. ஆனாலும் பயமில்லை. காரணம் எனக்கு மோட்டார் சைக்கிள்காரர்கள் பற்றிய விபரங்கள்தெரியும். எனவே சாட்சி சொல்ல புறப்பட்டேன். அதற்கு முதலில் எனது பாடசாலை நண்பர் ஒருவர்தான்புலிகள் இயக்கத்துக்கு உளவு வேலைகள் பார்த்துவந்தார் அவரைச்சந்திக்கலாம் என்று சென்றேன். என்னைக்கண்டதும் அவரே ஓடி வந்து உன்னைத்தான் தேடிவரவேண்டும் என்றிருந்தேன் நீயே வந்துவிட்டாய்என்று என்னை ஏதோ நன்மை செய்தவன் போல் சொல்லத்தொடங்கினார். நான் இடைமறித்து என்னை விசாரிக்க வந்தார்களாமே என்றேன். முதலில் உன்னைத்தான் சந்தேகித்து என்னிடம் வந்தார்கள். ஆனால் உன்னைப்பற்றி நான் சொன்னதை வைத்துக்கொண்டு வேறு வழிகளில் விசாரணைணைத்தொடங்கி ஆளை வன்னியிலும் மோட்டார் சைக்கிளை மன்னாரிலும் வைத்து பிடித்துவிட்டார்கள் என்றார்.

இதில் நீ உன்னையறியாமல்செய்த நன்மை அன்று அந்த மோட்டார் சைக்கிளை அதேவீட்டுக்கு முன் கொண்டு போனது. கள்ளர்களது கெட்டகாலம் அவர்களுக்கு நீ அதை அவ்விடத்துக்கு கொண்டு போனது தெரிந்திருக்கவில்லை. உண்மையிலேயே எனக்கு புல்லரித்தது. எவ்வளவு துல்லியமான புலனாய்வு.

அன்றிலிருந்தே நான் புலிகளை ஆதரிக்க தொடங்கினேன்.

தொடரும்......

Link to comment
Share on other sites

  • Replies 210
  • Created
  • Last Reply

அருமை. தெழிவான நடை. மோட்டச்சைக்களை 0 ல் இருந்து தொடங்குகின்றீர்கள். என்ஜின் சூடாகத்தான் போகுது :D:D:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள். மச்சாள் புருஷனின் மோட்டார் சைக்கிள் எப்படி கைமாறியது என்பதை அறிய ஆவல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள். மச்சாள் புருஷனின் மோட்டார் சைக்கிள் எப்படி கைமாறியது என்பதை அறிய ஆவல்!

எனக்கும் அது கொஞ்சம் குளப்பமாய் உள்ளது...தொடர்ந்து விரிவாக எழுதுங்கள் விசுகு அண்ணா

Link to comment
Share on other sites

நன்றாக உள்ளது.. தொடருங்கள் விசுகு அண்ணா..! :D

Link to comment
Share on other sites

தொடருங்கள். மச்சாள் புருஷனின் மோட்டார் சைக்கிள் எப்படி கைமாறியது என்பதை அறிய ஆவல்!

மோட்டார் சைக்கிள் மட்டும் தானே கை நழுவிபோனது இதில் அறிய என்ன ஆவல் :lol:

Link to comment
Share on other sites

தொடருங்கள். மச்சாள் புருஷனின் மோட்டார் சைக்கிள் எப்படி கைமாறியது என்பதை அறிய ஆவல்!

கிருபன் இப்பிடியெல்லாம் கேக்கக்கூடாது முதல் கதையை எழுத விடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் விசுகு!

எளிமையான சம்பவங்களின் கோவை! அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என எதிர் பார்க்க வைக்கின்றது உங்கள் படைப்பு!

இந்த மோட்டார் சைக்கிள் தான் குழப்புகின்றது! அடுத்த தொடரில் விளக்குங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... தொடருங்கள் விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடரும்......

நீங்களும் நல்ல பார்பீங்களோ

Link to comment
Share on other sites

தொடருங்கள் விசுகு அண்ணா.

சாப்பிட்டு ஏப்பம் விட்டவர்கள் பிள்ளைகள் தூங்கிவிட்டனர் என்பதையும்மோப்பமிட்டு அந்த தாயின்கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த தாலிக்கொடி தொடக்கம் வீட்டிலிருந்த அத்தனை நகைகளுடனும் வெளியேறிவிடுகின்றனர். விடியல் காலை பிள்ளைகளின் கூக்குரலுடன் விடிகிறது.

கள்ள நாய்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சைக்கிள் மட்டும் தானே கை நழுவிபோனது இதில் அறிய என்ன ஆவல் :lol:

சாத்திரி உங்கள் புலனாய்வு மூளையைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு தொடருங்கோ.....

Link to comment
Share on other sites

சாத்திரி உங்கள் புலனாய்வு மூளையைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

இப்படி ரெம்ப புகழக்கூடாது :wub: விசுகு அடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள். மச்சாள் புருஷனின் மோட்டார் சைக்கிள் எப்படி கைமாறியது என்பதை அறிய ஆவல்!

நன்றி கருத்துக்கு உறவுகளே

இந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னர் வருவோம்

அதற்கு முன் எனக்கு ஒரு விடயம் தெரிந்தாகவேண்டும்

1. கொலை

2. பல கொள்ளைகள் (அவரிடம் விசாரித்ததில்)

3. நம்பிக்கைத்துரோகம்

3. மக்களிடையே மெதுவாக இயக்கங்கள் ஆதரவு பெற்றுவரும் வேளையில் அவர்களின் பெயரைப்பாவித்து கொலை கொள்ளையில் ஈடுபட்டது.

என்பனவுக்காக இவருக்கான தங்களது தீர்ப்பு என்ன.........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பிள்ளைகளுக்குத் தாயால் செய்யப் பட வேண்டிய, அவ்வளவு கடமைகளையும் செய்து அவர்களைக் கரையேற்றும் வரை, முழு உதவிகளையும் செய்ய வேண்டும்!

சுருக்கமாகச் சொல்லப் போனால், அந்தக் குழந்தைகளைத் தனது குழந்தைகள் போல வளர்த்தெடுக்க வேண்டும்!

மரண தண்டனையை நான் வலிறுத்த மாட்டேன்! அது ஒருவர் திருந்துவதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதில்லை!

மரணம் என்பது தண்டனையே அல்ல! அது குற்றவாளிக்கு ஒரு விடுதலையே என்பது எனது தனிப்பட்ட கருத்து!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துகள் விசுகு!

Link to comment
Share on other sites

அந்தப் பிள்ளைகளுக்குத் தாயால் செய்யப் பட வேண்டிய, அவ்வளவு கடமைகளையும் செய்து அவர்களைக் கரையேற்றும் வரை, முழு உதவிகளையும் செய்ய வேண்டும்!

சுருக்கமாகச் சொல்லப் போனால், அந்தக் குழந்தைகளைத் தனது குழந்தைகள் போல வளர்த்தெடுக்க வேண்டும்!

மரண தண்டனையை நான் வலிறுத்த மாட்டேன்! அது ஒருவர் திருந்துவதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதில்லை!

மரணம் என்பது தண்டனையே அல்ல! அது குற்றவாளிக்கு ஒரு விடுதலையே என்பது எனது தனிப்பட்ட கருத்து!!!

இது சரியான கருத்துத்தான். விரைவான் மரணதண்டனை என்பது உடனடி விடுதலை..! ஆனால் மரணத்துக்காகக் காத்திருப்பது கொடுஞ்சித்திரவதை. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இந்த நிலைமை உள்ளது.

மரணதண்டனை வேண்டாமென்றால் அந்தக் கொலை கொள்ளைக் காரர்களை என்ன செய்திருக்கலாம்?

விடுதலைப் போராட்டங்களைப் பொறுத்தவரையில் சிறைச்சாலைகளைக் கட்டி ஆயுள் தண்டனை விதிப்பதென்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒன்றாயிற்றே.. :unsure:

இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் உறவினர்களில் பலர் விடுதலைப் போராட்டத்துக்கு வாழ்நாள் எதிரிகளாக இருப்பதையும் கண்கொண்டு பார்க்கிறேன்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கருத்துக்கு உறவுகளே

இந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னர் வருவோம்

அதற்கு முன் எனக்கு ஒரு விடயம் தெரிந்தாகவேண்டும்

1. கொலை

2. பல கொள்ளைகள் (அவரிடம் விசாரித்ததில்)

3. நம்பிக்கைத்துரோகம்

3. மக்களிடையே மெதுவாக இயக்கங்கள் ஆதரவு பெற்றுவரும் வேளையில் அவர்களின் பெயரைப்பாவித்து கொலை கொள்ளையில் ஈடுபட்டது.

என்பனவுக்காக இவருக்கான தங்களது தீர்ப்பு என்ன.........???

செம்படை என்ற இயக்கத்தை நடாத்தியவர்கள் யாரென்று தெரியும்தானே

Link to comment
Share on other sites

பசியாறிய வீட்டிலேயே அதுவும் உணவு பரிமாறிய பெண்ணையே கொல்லும் அளவுக்கு இருப்பவர்களுக்கு மரண தண்டனை தான் சரி. இவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்து சிறையில் அடைப்பது வீண்.

தொடருங்கள் விசுகு. வாசிக்க ஆவலாயுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சரியான கருத்துத்தான். விரைவான் மரணதண்டனை என்பது உடனடி விடுதலை..!

ஆனால் மரணத்துக்காகக் காத்திருப்பது கொடுஞ்சித்திரவதை. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இந்த நிலைமை உள்ளது.

மரணதண்டனை வேண்டாமென்றால் அந்தக் கொலை கொள்ளைக் காரர்களை என்ன செய்திருக்கலாம்?

விடுதலைப் போராட்டங்களைப் பொறுத்தவரையில் சிறைச்சாலைகளைக் கட்டி ஆயுள் தண்டனை விதிப்பதென்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒன்றாயிற்றே.. :unsure:

இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் உறவினர்களில் பலர் விடுதலைப் போராட்டத்துக்கு வாழ்நாள் எதிரிகளாக இருப்பதையும் கண்கொண்டு பார்க்கிறேன்..! :rolleyes:

நன்றி இசை அருமையான முன்னோட்டம் தங்களுடையது.

எனது பதிவும் நீங்கள் குறிப்பிடும் இந்த 3 விடயங்கள் சார்ந்துதான் பயணிக்கவிருக்கிறது.

இயக்கத்தின் வலு

மக்களின் பாதுகாப்பு

தண்டனைமூலம் வரும் பின் விளைவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சைக்கிள் கை மாறியது எப்படி...?

எனது மைத்துணியை முடித்தவர் வெளிநாடு ஒன்றிலிருந்து 2 மாத லீவில் திருமணம் முடிக்கவென்றே வந்திருந்தார். வந்ததிலிருந்து பெண் பார்த்தது, திருமணம் நடந்தது, ஊர்சுத்தியது..............எல்லாமே ஒவ்வொரு வாகனத்தில். அவற்றில் ஒரு 90 யும் ஒருவானுமே அவர்களுடையவை.

அவருக்கு யாழ்ப்பாணத்தில் முக்கிய இடத்தில் பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் அவரது தாயாருடன் 3 தம்பிகளும் யாழில் படித்தபடி இருந்தனர். இவர்களுக்கு வன்னியில் பெருவாரியான விவசாயமும் இருந்தது. தாயார் இவற்றைக்கவனிக்க வன்னிக்கு அடிக்கடி போய் விடுவார். எனது மைச்சாளின் கணவனுக்கு ஒரு அண்ணனும் வெளிநாட்டிலிருந்ததால் பணவரவு தாராளமாக இருந்தது.

அவரது இன்னொரு அண்ணரின் மனைவியின் தங்கையின் கணவர் இங்கு அடிக்கடி வந்துபோவார். மிகவும் வெள்ளையான அழகாக ஆண் அவர். மிகவும் வசதியாக வாழ்ந்து வந்தார். அவர் கொண்டுவரும் வாகனத்தை இவர்களும் இவர்களுடைய வாகனத்தை அவரும் மாறிமாறி பாவிப்பார்கள். அன்று அவர் விடியக்காலையில் வந்ததும் எனது மைச்சாளின் கணவர் அவருடையதை எடுத்துக்கொண்டு வந்து விட்டார். அதைத்தான் நான் பாவித்தேன். அதையே இரவு களவுக்கும் அவர்கள் பாவித்தார்கள்.

அந்த நேரம் இது போன்ற நடவடிக்கைகளில்ஈடுபட்டவர்களுக்கு மின் கம்ப மரணதண்டனை விதிக்கப்பட்டுவந்தது. அப்படித்தான் இதுவும் முடிந்திருக்கும் என்று பைலை மூடிவிட்டு சிலமாதங்களில் நான் வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன்.

சில மாதங்களின் பின் எனது அண்ணரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. ஒருவரை (எனது மச்சாளுடைய கணவரின் தமையனை) உன்னிடம் அனுப்பிவிடுகின்றேன். உன்னிடம் வந்தால் அவரது தம்பிகளிடம் சேர்த்துவிடு என்றார். நானும் சரி என்று இருந்துவிட்டேன். அவரும் இங்கு வரும் வழியில் வேறு ஒரு ஐரோப்பியநாட்டில் மாறவேண்டியநிலையில் அங்கேயே அகதியாகப்பதிந்து கொண்டார். இடைக்கிடை இங்கு வந்துபோவார். என்னுடன் பேசும்போது இயக்க கதைகளைத்தவிர்ப்பார். மௌனமாக இருப்பார். ஆனால் மற்றவேளைகளில் எல்லாம் இயக்கத்தை போட்டுத்தாக்குவார். கொலைகாரர் என்பார். அழிக்கணும் என்பார். ஒரு முழுத்துரோகியை முதன்முதலில்நான் பார்த்தேன். இவர் எப்படி துரோகியாக மாறினார்...........???

நேரமிருக்கும்போது தொடர்கின்றேன்....................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.