Jump to content

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரே ஆளைப்பற்றித்தான் பேசுகின்றோமோ தெரியிவில்லை. ஆனால் 2005 இல் எனது மாமனார் யாழ்ப்பாணத்தில் காலமானபோது அது மிகவும் கடினமான காலகட்டம் என்பதால் புலிகளுக்கு அவரது இறப்பு பற்றி அவரது குடும்பத்தினர் அறிவிக்கவில்லை. சில நாட்களின் பின்னர் காக்கா அண்ணரே தேடிவந்து இவர்களைக்கடிந்து கொண்டதோடு தலைவர்வரை சென்று பேசி அவரது 31வது நாளில் வைத்தே நாட்டுப்பற்றாளர் அறிவித்து அதற்கான சான்றிதழையும் கொடுத்திருந்தார். எனவே அவர் 2005 கடைசிவரை நலமாக இருந்தார் என்பதுடன் இயக்கத்திலும் அவர் மதிப்போடு இருந்தார் என்பது தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 210
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பசீர் காக்கா அவர்கள்பற்றி விசாரித்ததிலிருந்து..................

முள்ளிவாய்காலிலிருந்து காம்ப் வந்து அங்கு இருந்தபோது அமைச்சர் முரளிதரன் நேரடியாக வந்தும் இவரை அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை?????????. அவரை அங்கிருந்து எடுக்க கனடாவிலுள்ள அவரது மகளாலும் ஏனையோராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சில மாதங்களின் பின் அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் எதுவும் தெரியவில்லை.

(மட்டக்களப்புக்கு இவர் பொறுப்பாக இருந்தபோதே இவரால் முரளிதரன் இயக்கத்தில் சேர்ந்துக்கொள்ளப்பட்டார்.)

Link to comment
Share on other sites

நாங்கள் ஒரே ஆளைப்பற்றித்தான் பேசுகின்றோமோ தெரியிவில்லை. ].

அப்படித்தான் இருக்க வேண்டும்.

பசீர் காக்கா அவர்கள்பற்றி விசாரித்ததிலிருந்து..................

முள்ளிவாய்காலிலிருந்து காம்ப் வந்து அங்கு இருந்தபோது அமைச்சர் முரளிதரன் நேரடியாக வந்தும் இவரை அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை?????????. அவரை அங்கிருந்து எடுக்க கனடாவிலுள்ள அவரது மகளாலும் ஏனையோராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சில மாதங்களின் பின் அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் எதுவும் தெரியவில்லை.

(மட்டக்களப்புக்கு இவர் பொறுப்பாக இருந்தபோதே இவரால் முரளிதரன் இயக்கத்தில் சேர்ந்துக்கொள்ளப்பட்டார்.)

பரமதேவாவின் மரணத்தின்(1984 ) பின்பே பஷீர் காக்கா மட்டக்களப்புக்கு பொறுப்பாளராக சுமார் ஒரு வருடம் இருந்தார்.

முரளிதரன் சேர்ந்தது 83 என நினைக்கிறேன்.

(உயிருடன் வாழும் போராளிகளைப் பற்றி பொதுவில் கதைப்பது, அவர்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாய் அமையலாம் என்பதால் .. இவரை பற்றிக் எழுதுவதை இத்துடன் நிறுத்துகிறேன். )

Link to comment
Share on other sites

விசுகு நான் இயக்கத்தின் அலுவலகத்திற்கு வந்து போனதாக உங்களிற்கு கிடைத்த தகவல் தவறு நான் எந்தக் காலத்திலும் இயக்க அலுவலகங்களிற்கு சென்றது கிடையாது. அதே நேரம் நான் எங்கு என்ன செய்கிறேன் என்பதும் அவர்களிற்கும் தெரியாது. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சாத்திரி

ஆனால் சம்பவம் உண்மை. பிள்ளை வெள்ளை என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு காரணம் அதனாலேயே அது தாங்களாக இருக்கலாம் என்ற முடிவுக்கு நான் வந்தேன். தவறுக்கு வருந்துகின்றேன்

அத்துடன் மறைந்துவாழும் அவரது நன்மை கருதி இதை இத்துடன் நிறுத்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி சபாரத்தினம்

எனக்கு பிடித்த ஒரு தலைவர். சிரித்தமுகம். உயரமான கம்பீரமான அழகான எல்லோரையும் கவரும் தோற்றம். குட்டிமணி தங்கத்துரையின் வழிமூலம் என்ற பல சாதகமான அம்சங்களைக்கொண்ட தலைவர். இவர் ஆயுதத்துடன் வந்ததால் கொலை செய்யப்பட்டார் என்றும் இல்லை நிராயுதபாணியாக வந்தும் கொலை செய்யப்பட்டார் என்றும் இன்றுவரை அதற்கு தெளிவு இல்லை. இவருடைய அழிப்பு எம்மையெல்லாம் கவலை கொள்ள வைத்தது. எனது தம்பி ரெலோவிலிருந்துதான் இங்கு வந்திருந்தான். அவனும் இதை மிக காட்டமாக எதிர்த்தான்.

அதேநேரம் இங்கு புலிகளுக்குள்ளும் இது பற்றிய கருத்து மோதல்கள் இருந்தன. சிலர் ஒதுங்கி பின்னர் மீண்டும் இணைந்தனர். ஆனாலும் புலிகள்தொடர்ந்து தமது பிரச்சாரங்களையும் உதவி கோரலையும் செய்தே வந்தனர். எனக்கும் எம்போன்ற பலருக்கும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டு விளக்கங்களும் ஆதாரங்களும் முன் வைக்கப்பட்டன.

இந்த நேரத்தில் தான் இந்த பிரச்சினையிலிருந்து தப்பிய ரெலோவைச்சேர்ந்த எனதுமைத்துணர் ஒருவர் ஊரிலிருந்து வந்து சேர்ந்தார்.

அவரைச்சந்தித்து பேச முயன்றேன். அவர் மதுவுக்கு அடிமையாகியிருந்தார். மிகவும் ஆத்திரத்துடனிருந்தார். அவர் என்னிடம் சொல்லிய ஒரு கருத்து என்னை மிகவும் சிந்திக்கத்தூண்டியது. அது

"புலிகள் ஒருத்தர் கூட இல்லாமல் அழிப்போம். இனி எமக்கு வேறு எந்த இலட்சியமுமில்லை." பல நாள் இழுபறிகளுக்குப்பின்

நான் ஒரு முடிவுக்கு வரவேண்டி ஏற்பட்டது.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது எதற்காக?

அதன் இலட்சியம் என்ன?

அதை யார் கொண்டு செல்லப்போகின்றனர்...?

எமது இலட்சியக்கனவை கொண்டு செல்ல தகுதியானவர்கள் யார்???

இதில் முக்கியமான ஒன்றை இங்கு சொல்லவேண்டும்

நாங்கள் எமது போராட்டத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வால் தடுமாறிநிற்க......

இன்னொரு கூட்டம் இதையே காரணமாக வைத்து புலிகளை வசைபாட ஆரம்பித்தனர். புலிகளை வசைபாடுவதை மட்டுமே செய்தனர். இன்றுவரை அதையே செய்கின்றனர். மேலே ஒரு திரியில் சோபா சக்தியின் உரையைப்பார்த்தேன். அதில் அவர் சொல்கின்றார் ரெலோ அழிப்புடன் எமது போராட்டம் முடிந்துவிட்டதாக. உண்மைதான் இவர்கள் அன்றுடன் எமது போராட்டத்துக்கு முடிவுரை எழுதிவிட்டார்கள். அதில் சோபா சக்தியிலிருந்து இங்கு வாந்தி யெடுக்கும் ARJUNம் அடக்கம். ஆனால் பெரும் பான்மை தமிழ் மக்கள் தமிழரது போராட்டம் தனது இலக்கை நோக்கி பயணிக்க என்ன செய்யவேண்டும்என்றே அன்று சிந்தித்தார்கள்.

Link to comment
Share on other sites

உங்கள் தொடரை ஆளமாக உள்வாங்குகின்றேன் அதேவேளையில் உங்களிடமிருந்து நேரடியான பதில் எனக்கு வேண்டும். விடுதலைப்புலிகள் விமர்சனத்திற்கு அப்பால்பட்டவர்களா???? இல்லை என்றால் எதுவரை அவர்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்????????? மழுப்பல் இல்லாமல் சொல்லுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் நேர விரயம், மாற்றுக் கருத்தாளர்களின் திசை திருப்பும் முயற்சிகள்.

ரென்சிஸ் விளையாடும்போது போட்டியாளர்கள் கட்டத்திற்குள் மட்டும்தான் பார்க்கவேண்டும். பார்வையாளரின் கூச்சல்களைத் தவிர்த்து ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி நிச்சயம். இப்படித்தான் விடுதலைப் போராட்டமும்.

விடுதலைப் போராட்டம் இப்பவும் இருக்கின்றதா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தொடரை ஆளமாக உள்வாங்குகின்றேன் அதேவேளையில் உங்களிடமிருந்து நேரடியான பதில் எனக்கு வேண்டும். விடுதலைப்புலிகள் விமர்சனத்திற்கு அப்பால்பட்டவர்களா???? இல்லை என்றால் எதுவரை அவர்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்????????? மழுப்பல் இல்லாமல் சொல்லுங்கள் .

எனது தனிப்பட்ட மழுப்பலற்ற பதில்

பொதுத்தொண்டுகளில் ஈடுபடும் எவரையும் விமர்சிக்கமுடியும். விமர்சிக்கவேண்டும். ஆனால் அந்த பொது திட்டத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் அல்லது அதனுடைய தேவையை உணர்ந்தவர்களது விமர்சனங்களே கவனத்திலெடுக்கப்படவேண்டும். அதற்கு அப்பால் பார்வையாளர்களாக இருப்போரின் விமர்சனத்தை கிருபன் சொன்னதுபோல் கவனத்திலெடுக்கத்தேவையில்லை. (அதனால் பொதுத்தொண்டாற்றுவோருக்கு இழப்புக்கள் வராதவரை).

அந்தவகையில் விடுதலைப்புலிகளும் பொதுத்தொண்டர்கள். விமர்சனமும் அதை ஏற்றதாக இருக்கவேண்டும். இல்லையென்றால் எவருக்கு என்ன பிரயோசனம்...............???

Link to comment
Share on other sites

சிறி சபாரத்தினம்

எனக்கு பிடித்த ஒரு தலைவர். சிரித்தமுகம். உயரமான கம்பீரமான அழகான எல்லோரையும் கவரும் தோற்றம். குட்டிமணி தங்கத்துரையின் வழிமூலம் என்ற பல சாதகமான அம்சங்களைக்கொண்ட தலைவர். இவர் ஆயுதத்துடன் வந்ததால் கொலை செய்யப்பட்டார் என்றும் இல்லை நிராயுதபாணியாக வந்தும் கொலை செய்யப்பட்டார் என்றும் இன்றுவரை அதற்கு தெளிவு இல்லை. இவருடைய அழிப்பு எம்மையெல்லாம் கவலை கொள்ள வைத்தது. எனது தம்பி ரெலோவிலிருந்துதான் இங்கு வந்திருந்தான். அவனும் இதை மிக காட்டமாக எதிர்த்தான்.

சிறீ சபாரட்ணத்தை முதல் சுட்டது டொச்சர் என்று அழைக்கப்பட்ட போராளி வடக்குபுன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர். பின்னர் தான் கீரோ வந்து கதை முடிந்தது. டொச்சர் இரண்டாம் கட்ட ஈழப்போரில் வசாவிளான் பகுதியில் வீரச்சாவடைந்தார். (மேஜர் டொச்சர்)

குட்டிமணியினால் குட்டிச்சுவரான குடும்பத்தில் எனது குடும்பம் முக்கியமானது.

Link to comment
Share on other sites

ஆரம்ப கட்டங்களில் டெலோவில் திறமையாக போரட கூடிய போராளிகள் பலர் இருந்ததாக கூற கேள்விபட்டிருக்கிறன் ஆனால் உண்மை பொய் nதியாது 1970 மற்றும் 80 களில் நடை பெற்ற போரட்டங்களை தெளிவாக அறிந்தவர்கள் தான் இதை பற்றி கூறனும்....

விசுகு அண்ணா தொடருங்கள்....பழைய வரலாறுகளை அறிய ஆவல்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோவினது சாவகச்சேரி காவல்நிலையத்தாக்குதல் பிரசித்தமானது. இதில் தலைமையேற்றுப் பங்கெடுத்தவர் தாஸ் ஆவார். அதேவேளை பொபி எனும் இன்னுமொரு இரண்டாம் நிலைத்தலைவரும் ரெலோவில் இருந்தார். அவர் யாழ் ஆனைப்பந்தியடி திருநாவுக்கரசு கார்க்கராச் உரிமையாளது மகன். யாழ் வைத்தியசாலையில் பொபி தாஸைப் போட்டுத்தள்ளியதுடன் ரெலோ எனும் விடுதலை இயக்கம் தனது முடிவுரையை எழுதத் தொடங்கியது. சிறந்த தலைமைத்துவப் பண்புகளை தன்னகத்தே கொண்டவர் சிறி சபாரத்தினம் என்பதை புலிகளும் ஏற்பர் ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட விடுதலை இயக்கம் இரண்டாம் நிலைத்தலைவர்களால் தறிகெட்டு ஓடியதை அவரால் தடுக்கமுடியவில்லை. இவ்வியக்கம் இப்போதும் தொடர்ந்திருந்தால் தமிழீழப்போராட்டத்தின் செல்திசை வேறுமாதிரி அமைந்திருக்கும். ரெலோ அழிப்பு நடவடிக்கையில் மிஞ்சிய ஒருவர் ஒபராய் தேவனது தம்பியார் சுபாஸ்மட்டுமே காரணம் கிட்டருடன் பலவிடையங்களில் ஒத்துழைத்ததால எனக் கேள்விப்பட்டேன். சிறி அண்ணரது இறுதிக் கணங்கள்பற்றி பல தகவல்கள் கோண்டாவில் அன்னுங்கை ஒழுங்கைப் பிரதேசத்தில் மறைந்திருந்தாகவும் இறுதிவேளை கப்பிப் புகையிலைச் செடிகளுக்குள் மறைவிடம்தேடியதாகவும். கிட்டர் சம்பவ இடத்தில் நின்றாரெனவும் .இறதிக்கணங்களில் "கிட்டு உன்னோட ஒருக்காக் கதைக்கவேணுமென" அவ்வேளையில் வெடி விழுந்ததாகவும் கூறுபவர் உண்டு.

Link to comment
Share on other sites

ரெலோவினது சாவகச்சேரி காவல்நிலையத்தாக்குதல் பிரசித்தமானது. இதில் தலைமையேற்றுப் பங்கெடுத்தவர் தாஸ் ஆவார். அதேவேளை பொபி எனும் இன்னுமொரு இரண்டாம் நிலைத்தலைவரும் ரெலோவில் இருந்தார். அவர் யாழ் ஆனைப்பந்தியடி திருநாவுக்கரசு கார்க்கராச் உரிமையாளது மகன். யாழ் வைத்தியசாலையில் பொபி தாஸைப் போட்டுத்தள்ளியதுடன் ரெலோ எனும் விடுதலை இயக்கம் தனது முடிவுரையை எழுதத் தொடங்கியது. சிறந்த தலைமைத்துவப் பண்புகளை தன்னகத்தே கொண்டவர் சிறி சபாரத்தினம் என்பதை புலிகளும் ஏற்பர் ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட விடுதலை இயக்கம் இரண்டாம் நிலைத்தலைவர்களால் தறிகெட்டு ஓடியதை அவரால் தடுக்கமுடியவில்லை. இவ்வியக்கம் இப்போதும் தொடர்ந்திருந்தால் தமிழீழப்போராட்டத்தின் செல்திசை வேறுமாதிரி அமைந்திருக்கும். ரெலோ அழிப்பு நடவடிக்கையில் மிஞ்சிய ஒருவர் ஒபராய் தேவனது தம்பியார் சுபாஸ்மட்டுமே காரணம் கிட்டருடன் பலவிடையங்களில் ஒத்துழைத்ததால எனக் கேள்விப்பட்டேன். சிறி அண்ணரது இறுதிக் கணங்கள்பற்றி பல தகவல்கள் கோண்டாவில் அன்னுங்கை ஒழுங்கைப் பிரதேசத்தில் மறைந்திருந்தாகவும் இறுதிவேளை கப்பிப் புகையிலைச் செடிகளுக்குள் மறைவிடம்தேடியதாகவும். கிட்டர் சம்பவ இடத்தில் நின்றாரெனவும் .இறதிக்கணங்களில் "கிட்டு உன்னோட ஒருக்காக் கதைக்கவேணுமென" அவ்வேளையில் வெடி விழுந்ததாகவும் கூறுபவர் உண்டு.

செத்த வீடு என்றால் அதில் பினமும் நான் தான் கலியான வீடு என்றால் அதில் மாப்பிள்ளையும் நான் தான் என்பது அமெரிக்காவுக்கு பொருந்தும் ஆனால் நமக்கு?

Link to comment
Share on other sites

ரெலோவினது சாவகச்சேரி காவல்நிலையத்தாக்குதல் பிரசித்தமானது. இதில் தலைமையேற்றுப் பங்கெடுத்தவர் தாஸ் ஆவார். அதேவேளை பொபி எனும் இன்னுமொரு இரண்டாம் நிலைத்தலைவரும் ரெலோவில் இருந்தார். அவர் யாழ் ஆனைப்பந்தியடி திருநாவுக்கரசு கார்க்கராச் உரிமையாளது மகன். யாழ் வைத்தியசாலையில் பொபி தாஸைப் போட்டுத்தள்ளியதுடன் ரெலோ எனும் விடுதலை இயக்கம் தனது முடிவுரையை எழுதத் தொடங்கியது. சிறந்த தலைமைத்துவப் பண்புகளை தன்னகத்தே கொண்டவர் சிறி சபாரத்தினம் என்பதை புலிகளும் ஏற்பர் ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட விடுதலை இயக்கம் இரண்டாம் நிலைத்தலைவர்களால் தறிகெட்டு ஓடியதை அவரால் தடுக்கமுடியவில்லை. இவ்வியக்கம் இப்போதும் தொடர்ந்திருந்தால் தமிழீழப்போராட்டத்தின் செல்திசை வேறுமாதிரி அமைந்திருக்கும். ரெலோ அழிப்பு நடவடிக்கையில் மிஞ்சிய ஒருவர் ஒபராய் தேவனது தம்பியார் சுபாஸ்மட்டுமே காரணம் கிட்டருடன் பலவிடையங்களில் ஒத்துழைத்ததால எனக் கேள்விப்பட்டேன். சிறி அண்ணரது இறுதிக் கணங்கள்பற்றி பல தகவல்கள் கோண்டாவில் அன்னுங்கை ஒழுங்கைப் பிரதேசத்தில் மறைந்திருந்தாகவும் இறுதிவேளை கப்பிப் புகையிலைச் செடிகளுக்குள் மறைவிடம்தேடியதாகவும். கிட்டர் சம்பவ இடத்தில் நின்றாரெனவும் .இறதிக்கணங்களில் "கிட்டு உன்னோட ஒருக்காக் கதைக்கவேணுமென" அவ்வேளையில் வெடி விழுந்ததாகவும் கூறுபவர் உண்டு.

ரெலோவுடன் எதற்காக புலிகள் மோதினர் எப்படி அது ஆரம்பித்தது என்று யாராவது விளக்கமாக சொல்ல முடியுமா...?

Link to comment
Share on other sites

ரெலோவுடன் எதற்காக புலிகள் மோதினர் எப்படி அது ஆரம்பித்தது என்று யாராவது விளக்கமாக சொல்ல முடியுமா...?

மோதல் வடமராச்சிப் பகுதியிலேயே ஆரம்பித்தது என நினைக்கிறேன்..! தொடக்கத்தில் ரெலோ உறுப்பினர்கள் புலிகள் உறுப்பினரைத் தேடித் திரிந்தார்கள். எப்படி ஆரம்பமானது என்று தெரியவில்லை. புலிகள் மறைந்து செயற்பட்டார்கள்.

பின்னர் புலிகளின் உறுப்பினர் லிங்கம் என்பவர் ரெலோ முகாமுக்கு பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அங்கு சென்ற இடத்தில் அவர் சுட்டுக்கொல்லப் பட்டார். அதன்பின்னர் பதுங்கியிருந்த புலிகள் ரெலோவை வேட்டையாடியதாக ஞாபகம்..! :unsure:

Link to comment
Share on other sites

ரெலோவுடன் எதற்காக புலிகள் மோதினர் எப்படி அது ஆரம்பித்தது என்று யாராவது விளக்கமாக சொல்ல முடியுமா...?

மேலதிக விபரங்களிற்கு

http://sathirir.blogspot.com/2009/02/blog-post_8037.html

Link to comment
Share on other sites

மேலதிக விபரங்களிற்கு

http://sathirir.blogspot.com/2009/02/blog-post_8037.html

நன்றி சாத்திரி அண்ணை...

Link to comment
Share on other sites

கதை கதையாம் பகுதியில் பதிவதால் வரலாறாக இல்லாமல் கதையாகவே எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் எழுதும் கதைகள் மிக இன்ரரஸ்டாக போகுது.அதுவும் சாத்திரியாரின் நடிகைகள் கதை சுப்பெர்.

லண்டனில் இருக்கும் குடிமி ரவி சொன்னதுதான் ஞாபகம் வருது.அதில இருக்கின்ற எல்லோருக்கும் அந்தளவுதான் இருக்கு அதுக்கு மேல எதிர்பார்க்ககூடாது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை கதையாம் பகுதியில் பதிவதால் வரலாறாக இல்லாமல் கதையாகவே எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் எழுதும் கதைகள் மிக இன்ரரஸ்டாக போகுது.அதுவும் சாத்திரியாரின் நடிகைகள் கதை சுப்பெர்.

லண்டனில் இருக்கும் குடிமி ரவி சொன்னதுதான் ஞாபகம் வருது.

அதில இருக்கின்ற எல்லோருக்கும் அந்தளவுதான் இருக்கு அதுக்கு மேல எதிர்பார்க்ககூடாது என்று.

திரு. arjun

இது கதையோ வரலாறோ எதுவகையில் தாங்கள் போட்டாலும்

இது அடுத்த தலைமுறை நடந்தவற்றை அறியவேண்டும் என்பதற்காகவே பதிகின்றேன். உங்களுக்கும் பல அனுபவங்கள் இருக்கும் முடிந்தால் அவற்றையும் இங்கு பதியுங்கள் அல்லது நான் எழுதுவதில் ஏதும் தப்பிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

அதைவிடுத்து தொடர்ந்து கவுட்டுக்கொட்டிக்கொண்டிருப்பதால் எதையும் சாதித்துவிடப்போவதில்லை. எதையும் ஆவணப்படுத்தவும் உதவப்போவதில்லை. :(:(:(

Link to comment
Share on other sites

கதை கதையாம் பகுதியில் பதிவதால் வரலாறாக இல்லாமல் கதையாகவே எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் எழுதும் கதைகள் மிக இன்ரரஸ்டாக போகுது.அதுவும் சாத்திரியாரின் நடிகைகள் கதை சுப்பெர்.

லண்டனில் இருக்கும் குடிமி ரவி சொன்னதுதான் ஞாபகம் வருது.அதில இருக்கின்ற எல்லோருக்கும் அந்தளவுதான் இருக்கு அதுக்கு மேல எதிர்பார்க்ககூடாது என்று.

அதிலை இருந்தவைக்கு அவ்வளவுதான் ஆனால் குடுமி ரவிக்கு ஒரு குடுமி மேலதிகமாய் உள்ளது அவ்வளவுதான். :lol: :lol:

Link to comment
Share on other sites

அர்ஜீன் அண்ணா நீங்களும் உங்கள் அணுபவங்கள தொடரா தரலாமே...?

Link to comment
Share on other sites

வரலாறு அடுத்த தலைமுறைக்கு போகவேண்டும் என்பது மிக உண்மை.

நீங்கள் உங்கள் சம்பந்தமான,நான் ஏன் புலியில் சேர்ந்தேன் என்று எழுதினால் மிக நன்றாக இருக்கும்,அதைவிட்டு போராட்டம் சம்பந்தமாக யாரோ சொன்னதைக்கேட்டு அதையே வரலாறு என எழுதக்கூடாது.

பிரான்ஸ்சில் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் சந்தோசமாக வாசிக்கலாம்.

சாத்திரியாரின் நடிகை கதை.சாலிக்கிராமத்தில் இருந்த நளினியின் வீட்டில் டெலோ இருந்தது உண்மை.அதற்கு இப்படி ஒரு கதையை கட்டக்கூடாது.நான் நளினியயை சந்திக்கும் போது சிறி சபாரத்தினத்தை தெரியுமா என இந்த கிகிசுவை மனதில் வைத்துத்தான் கேட்டேன்.வீட்டு புரோக்கரால் இலங்கை தமிழர்களுக்கென வீடு கொடுக்கப்பட்டதாகவும் இப்போ வாடகை பெறவே புறோக்கர் கஸ்டப்படுவதாகவும் யார் சிறி என கேட்டார்.

இயக்கத்தில் ஒருவரை பற்றி பிழையாக கதை பரவுதென்றால் அவர் ஒன்றில் ஓடிவிட்டார் அல்லது போடப்போகின்றார்கள் என்று அர்த்தம்.இவை எல்லாம் விளங்கக்கூடிய நிலையில் பலர் இல்லை.தலைமை சொல்லே மந்திரம்.இது அனைத்து இயக்கத்திற்கும் பொருந்தும்.பல உதாரணங்கள் எழுதலாம்.

புளொட்டின் சரித்திரமே அக்கு வேறு ஆணிவேறாக வேறு தளங்களில் எழுதப்பட்டுவிட்டது.இப்போதும் நேசன் என்பவர் என்.எல்.எப்.டீ இணையத்தில் எழுதுகின்றார்வாசித்தால் போராட்டத்திற்கு என்ன நடந்தது என பலருக்கு விளங்கும்.படங்கள் ,சாட்சிகளுடன் எழுதுகின்றார்.சரி பிழை பற்றி எம்முடன் கதைப்பார்.

நான் எனக்கு தெரிந்த உண்மையான புலிகள் பற்றிய சிறுவிடயங்களை எழுதினால் கூட நிர்வாகம் தூக்கிவிடும்.வன்னியசிங்கம் வீட்டில் கொள்ளையடித்து கொலைகள் செய்தவர்கள் யார்?விசுகுவின் முதலாம் பதிவு போல் ஒரு சம்பவம் தான் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தியொருக்கால் ஜேர்மனியிலை நளினியின்ரை......அதுதான் அவவின்ரை புறோக்கிறாம் நடத்துறம்...நடத்தப்போறம் எண்டுசொல்லிகாசு சேர்த்தவை....ஆனால் இண்டு வரைக்கும் நளினியையும் காணேல்லை அவவின்ரை புறோக்கிராமையும்காணேல்லை. குடுத்த காசையும் காணேல்லை அந்த காசிலை பெட்டிக்கடை நடத்துற ஆக்களைத்தான் காணக்கிடைக்குது. :lol:

Link to comment
Share on other sites

சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்ட இடம் கோன்டாவில் வடக்கில் போய்பார்த்தேன்.அந்தவிட்டுக்காரர்கள் இப்போ லண்டனில் இருக்கின்றார்கள்.சிறீயத்தேடிவந்து அவர்கள் வீட்டில் இல்லை என்று திரும்பும் நிலையில் அடுத்ததாக இருந்த சிறிய குடிசையப்பார்த்திருக்கின்றார்கள்.அதற்குள் சுடச் சுட சாப்பாடு தயாராக இருந்திருக்கு.சந்தேகத்தில் தோட்டங்க்கள் எல்லாம் தேடும்போது வீட்டிற்கு பின்னாலுள்ள புகையிலை தோட்டத்திற்குள் சிறி இருந்து பிடிபட்டு சுடப்பட்டார்.தோட்டத்திற்குள் இருந்த அப்படியே நகர்ந்து உரும்பிராய்க்கு போய் புளொட்டால் இந்தியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டர் bobby.

ஏன் சிறி அந்தவீட்டிற்கு போனார்.அந்தவீட்டுக்கார மகனும் டெலோவில் இருந்தார் அவர் கல்வியங்காட்டில் சுடப்பட்டு கோயிலொன்றுக்குள் போய் 2 நாளாக நினைவுதிரும்பாத நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையின் பின் ராகீமின் உதவியால் புலிகளிடம் இருந்து தப்பி இப்போ கனடாவில் உள்ளார்.கை முழுக்க ஒரே சூட்டுக்காயங்கள்.புலியைபற்றிக்கேட்டால் அந்தமாதிரி வார்த்தைகள் வரும்.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணையின் பதிவின் படி ரெலோதான் புலிகளை வம்புக்கிழுத்திருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது...அது மட்டுமன்றி சமாதானம் பேச வந்த புலி உறுப்பினரையும் சுட்டுகொன்று சகோதரர்களையே இந்தியா எட்டப்பர்களுடன் சேர்ந்து அளிக்கத்துணிந்திருக்குறார்கள்..இதற்கு மேல் பொறுமையாக புலிகள் இருந்திருக்க வேண்டும் என்று இந்த மாற்றுகருத்து சொல்பவர்கள் எதிர்பார்க்கிறார்களா..? நானும் என் வழியும் என்று இருக்கும் என் வழியில் குறுக்கிடுவது மட்டுமன்றி என்னைக்கொல்லவும் வரும்போது நான் எப்படிச் சும்மா இருக்க முடியும்....?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.